Jump to content

நேர்கொண்ட பார்வை: புத்தம் புதுமைப் பெண்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நேர்கொண்ட பார்வை: புத்தம் புதுமைப் பெண்

nerkonda-paarvai-1200.jpeg

சுதந்திரமென்பது

புணர்தலல்ல;

புணர மறுத்தல்.

‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத்தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்’ என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள்தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: ‘குலத்து மாதர்க்குக் கற்பு இயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும் அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்’. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட பார்வையில் பார்க்க வேண்டும் என்றும் சொல்வதாகக் கொள்ளலாம்.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று என்கிற இரண்டு அருமையான சொந்தக் கதைகளுக்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் ஒரு மறுஆக்கப்படம் இது.

Courtroom Drama எனப்படும் நீதிமன்ற உணர்ச்சிகரம் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல.  கலைஞரின் எழுத்திலான ‘பராசக்தி’யில் தொடங்குகிறது அது. அதன் நாயகன் சிவாஜி அதன் பிறகு அப்படியான நிறைய படங்களில் நடித்திருக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகரனும் இத்திசையிலான பல‌ படங்களை இயக்கி இருக்கிறார். 1980களில் கலைஞர் மீண்டும் ‘பாசப் பறவைகள்’ எழுதினார். சமீபத்தில் வந்த ‘மனிதன்’ வரை பல உதாரணங்கள் சொல்லலாம். ‘நேர்கொண்ட பார்வை’யும் நெடிய பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்கிறது. இதன் இரண்டாம் பகுதி முழுக்கவே நீதிமன்றக் காட்சிகள்தாம்.

‘நேர்கொண்ட பார்வை’ பேசும் விஷயம் முக்கியமானதும், அவசியமானதும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அதைத் தெளிவாகச் சொல்லவில்லை என்றே கருதுகிறேன். subtle-ஆகச் சொல்கிறேன் பேர்வழி என்று குழப்பி வைத்திருப்பது ஒரு பக்கம். இன்னொருபுறம் திரைக்கதையின் தேவையற்ற சிடுக்குகள் வழியாகப் பல பக்கவிளைவுக் கருத்துக்களையும் திணித்து விடுகிறது. அதனால்தான் வலியுறுத்த வந்த கருத்துக்கு நியாயம் செய்யவியலாமல் தடுமாறுகிறது. அந்தப் போதாமைகள் இப்படத்தை ஓர் ஆரம்ப முயற்சி என்ற அளவில் மட்டும் வரவேற்க வைக்கின்றன.

ஒரு பெண் கலவி வேண்டாம் என்று சொன்னால் மீறி அவளைத் தொடக்கூடாது என்பதுதான் படம் சொல்லும் ஒற்றை வரி (No Means ‘NO’). அது சினேகிதி, காதலி, மனைவி, பாலியல் தொழிலாளி என யாராக இருந்தாலும் சரி. அதேபோல், ஒரு பெண்ணின் பூர்வீகம், ஆடை, ஒப்பனை, வேலைக்குப் போவது, வேலையின் இயல்பு, தனியே அறையெடுத்துத் தங்கியிருப்பது, பணத்தேவை இருப்பது, குடிப்பது, இரவில் ஊர் சுற்றுவது, பொதுவிடங்களில் நடனமாடுவது, ஆண் நண்பர்களுடன் பழகுவது, அவர்களுடன் சிரித்தும் தொட்டும் பேசுவது, பாலியல் நகைச்சுவைகள் பகிர்வது, ஒருவருடன் (அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டோருடன்) உடலுறவில் இருப்பது என எந்த விஷயமும் அந்தப் பெண்ணைப் பாலியல்ரீதியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆண்களும், அப்பெண் பாலியல் ஒழுக்கமற்றவள் என சமூகமும் நினைத்துக் கொள்ள‌ப் போதுமான சான்றுகள் அல்ல‌ என்று சொல்கிறது. அந்த‌ப் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகளை “அப்படியான பெண்களுக்கு இப்படித்தான் நடக்கும்” என்று கடக்கக்கூடாது, அவர்களும் இங்கே பாதுகாப்புடன் வாழச் செய்வதே ஒரு முன்னேறிய, நாகரிக‌ சமூகத்துக்கு அடையாளம் என்பதையும் வலியுறுத்துகிறது.

கதை என்பதைவிட தொடர்நிகழ்வுகளின் தொகுப்பு என்றுதான் இப்படத்தைக் காண முடிகிறது. ஒன்றாக அறையெடுத்துத் தங்கியிருக்கும் மூன்று பெண்கள் ஓர் இரவில் புதிதாய் அறிமுகமான ஆண்களுடன் ஒரு ரெஸார்ட்டில் உணவு கொள்ளவும், மது அருந்தவும் என நட்பு பாராட்டும் சூழலில், திடீரென எதிர்பாராத விதமாக‌ அந்த ஆண்களால் பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்தப்படும்போது அவர்களைத் தாக்கிவிட்டு அந்த மூன்று பெண்களும் தப்பித்து வருவதிலிருந்து படம் தொடங்குகிறது.

படத்தில் சிலபல‌ நெருடல்கள் இருக்கின்றன. படத்தில் மிகக் கருப்பு வெள்ளையாகக் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார்கள். உதாரணமாக இதில் வரும் ஆண்கள் அரசியல் செல்வாக்கு கொண்ட, பணக்கார இளைஞர்கள். செய்த தவறை மறைக்க சம்பந்தப்பட்ட‌ பெண்ணைக் காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் (Molestation) செய்யும் வில்லன்கள் இவர்கள். அவர்களின் வழக்குரைஞர் அப்பெண்களை நீதிமன்றத்திலேயே ஆபாசமாக இழித்துப் பேசுபவர். போலீஸ்காரர்களோ (அதுவும் பெண் காவலர்கள்) கண்மூடித்தனமாய் அவர்களுக்கு ஆதரவாய் நடக்கிறார்கள். ரெஸார்ட்காரர்களுக்கும் வேறு வழியில்லை. இவையெல்லாம் மசாலா சினிமாத்தனமாக இருக்கிறது. அந்தப் பெண்களின்மீது நம் இரக்கத்தைச் சுரண்ட இச்சூழல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

என் தரப்பு இந்த மாதிரி மிகைகள் இல்லாமலே பார்வையாளன் அப்பெண்கள் மீது ஆதரவு கொள்ளும்படி படத்தை எடுப்பதே சரியானதும் தெளிவானதும். தற்போதைய வடிவில் பார்வையாளர்கள் பெண்களுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுப்பது பாலியல் மறுப்பு என்ற விஷயத்துக்காகவா அல்லது மேற்சொன்ன வில்லத்தனங்களுக்காகவா எனக் குழப்பம் வருகிறது. அந்தக் குற்றம் இழைத்த பையன்கள் பின்புலங்களற்று இருந்தாலும், அதன் பிற்பாடு பழிவாங்கல் / மிரட்டல் என வேறெந்தக் குற்றத்தில் ஈடுபடாமல் இருந்தாலும் கூட அவர்கள் அந்த இரவில் கட்டாயப்படுத்தியது என்ற குற்றத்திற்காகவே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று வைத்திருந்தால் புரிதல் தெள்ளியதாய் இருந்திருக்கும். ஆனால் படம் பல விஷயங்களைக் கோர்த்துக் கொள்கிறது. குற்றத்தை அதிகப்படுத்தினால் மட்டுமே அதைக் குற்றமென நம்ப வைக்க முடியும் என்கிற அமெச்சூர் எத்தனம். அது படத்தின் குரலைப் பலவீனப்படுத்துகிறது. அதுபோக, கலையான‌ புரிதல்களையே மக்களிடம் ஏற்படுத்துகிறது.

அடுத்தது அஜீத் அவ்வப்போது பெண்களுக்கான விதிகள் என்ற பெயரில் இன்றைய இந்திய வெகுமக்கள் மனநிலை / பொதுப்புத்தி பற்றிப் பகடியாகச் சொல்லும்போது அது பார்வையாளர்களால் நகைச்சுவையாகவே உள்வாங்கப்படுகிறதா அல்லது உண்மை என்றே கொள்ளப்படுகிறதா எனப் புரியவில்லை. எனக்கே ஆங்காங்கே குழப்பம் வந்தது என்பதே நிஜம். வசனங்களின் குறைபாடு என்பது தாண்டி அஜீத்தின் உடற்மொழி அல்லது வசன உச்சரிப்புப் போதாமை என்றும் இதைப் பார்க்கலாம்.

என் வரையில் முதல் முறை நிகழும் குற்றத்தை விட இரண்டாம் முறை காரில் மீரா கிருஷ்ணனை (ஷ்ரத்தா) கடத்திச் செய்வதே வன்முறை மற்றும் பாதிப்பின் அடிப்படையில் பெருங்குற்றம். ஆனால் படம் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. நீதிமன்ற விவாதத்தில் ஒற்றை வசனத்தில் கடக்கிறது. முந்தைய குற்றத்தைத்தான் பிரதானப்படுத்திப் பேசுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணும் அதையேதான் பேசுகிறார். பார்வையாளனுக்கு அது ஒரு மாதிரி துருத்திக் கொண்டு விடுபடலாக எஞ்சுகிறது.

இதில் கோடிட்டு காட்டப்பட்டிருக்கும் இன்னொரு விஷயம் – ஆண்கள் தம் வீட்டுப் பெண்கள் அவர்கள் ஒழுக்கமின்மை எனக் கருதும் எதையும் (உதா:குடி) செய்ய மாட்டார்கள் என்று அப்பாவித்தனமாக நம்புவதும், அப்படி இல்லை எனத் தெரிய வரும்போது அதை வெளியே வரவிடாமல் தடுக்க முனைவதும். தமது வீட்டுப் பெண்களுக்கும், மற்ற பெண்களுக்கும் வெவ்வேறு அளவுகோல் வைத்திருக்கிறார்கள். தாம் மற்ற பெண்களுக்கு நிகழ்த்தும் ஒரு குற்றம் அதே சூழலில் வாழும் தம் வீட்டுப் பெண்களுக்கு வர அதிகம் நேரமாகாது என்ற அடிப்படை தர்க்கம் கூட அவர்களுக்கு உறைப்பதில்லை அல்லது வராது என முரட்டுத்தனமாய் நம்பி வாழ்கிறார்கள்.

எனக்குப் படத்தில் பிடித்த ஒரு விஷயம். பாதிக்கப்பட்ட‌ மீரா கிருஷ்ணன், வர்ஜினா என்றும் எப்போது தன் கன்னித்தன்மையை இழந்தாள் என்றும், எத்தனை பேருடன் அவருக்கு உறவு இருந்தது என்றும் வக்கீலான அஜீத் கோர்ட்டில் கேட்குமிடம்தான். அதில் அவர் தெளிவாக ஒன்றை உணர்த்தி விடுகிறார்: ஒரு பெண் அதற்கு முன் பலருடன் உறவு கொண்டிருந்தாலும் அதையே காரணம் காட்டி ஓர் ஆண் அவளை உறவுக்கு அழைக்கவியலாது. அவ்வளவு ஏன், அதே ஆணே முன்பு அவளுடன் உறவு கொண்டிருந்தாலும் இப்போது அவள் முடியாது என்று சொன்னால் முடியாதுதான். பழையதைச் சுட்டிக்காட்டி வா என அதட்ட முடியாது. திருமண உறவில் கணவன் மனைவிக்குள் கூட இதையே பொருத்துகிறது படம். இன்று ஒரு சராசரி இந்திய மனைவிக்கு அந்தச் சுதந்திரம் இருக்கிறதா என்ன? புணர விரும்பும் கணவனைத் தடுத்தாட்கொள்ளும் உரிமை அவளுக்கு இருக்கிறதா? என் வரையில் நேர்கொண்ட பார்வை பார்வையாளருக்குத் தரும் முக்கியச் செய்தியும் சிந்தனையும் இதுதான்.

படம் பார்த்த சிலர் (அதில் பெண்களும் அடக்கம்) அதிக அறிமுகமற்ற‌ ஆண்களுடன் இரவில் வெளியே செல்வதும், சேர்ந்து குடிப்பதும், அப்போது அரைகுறை ஆடைகள் அணிந்திருப்பதும், ஆபாச நகைச்சுவைகள் கதைத்துச் சிரிப்பதும் நடந்த பிறகு ஆண் கையைப் பிடித்துத்தான் இழுப்பான் என்பதுகூடத் தெரியாத அளவு குழந்தைகளா? எனக் கேட்கிறார்கள். அப்படி மட்டையடியாய்ச் சொல்லிவிட‌ முடியாது. இதில் சில நுட்பமான விஷயங்கள் இருக்கின்றன.

1) மேற்சொன்ன நான்குமே நட்பின்பாற்பட்ட, நம்பிக்கையின்பாற்பட்ட விஷயங்களாக இருக்க வாய்ப்புண்டு. அதனாலேயே அந்தப் பெண்கள் கலவிக்கு அழைத்தால் இசைந்துவிடுவார்கள் எனறு ஒருவர் தீர்மானிக்க முடியாது, கூடாது.

2) ஆனால், அதே சமயம் கலவியில் ஆர்வங்கொண்ட பெண்களும், பணத்திற்காகப் பழகும் பெண்களும் இதே முறைகளில்தான் தம் விருப்பத்தைத் தெரிவிப்பார்கள். அவர்களை ஓர் ஆண் அணுகுவதில் எந்தத் தவறும் இல்லை. முதல் வகைக்கும், இரண்டாம் வகைக்கும் வித்தியாசம் தெரியாதுதான் என்றாலும் தன் விருப்பத்தை ஆண் வெளிப்படுத்துவதே குற்றம் என்றாகிவிடாது. (சமீப ஆண்டுகளில் இப்படியான சில விருப்ப வெளிப்பாடுகளை மீடூ குற்றங்களாகச் சித்தரித்தார்கள்.)

3) ஆனால், அப்படி அணுகும்போது பெண் மறுத்தால் விட்டுவிட வேண்டும். அவளுக்கு அதைத் தன்னுடன் கொள்வதில் விருப்பமில்லை என்று புரிந்துகொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அவனிடம் போனாயே, இரவில் அரைகுறையாய் அலைகிறாயே, நான் வாங்கிக் கொடுத்ததைக் குடித்தாயே, இளித்திளித்துப் பேசினாயே என்றெல்லாம் கேட்டு வற்புறுத்தக்கூடாது. அது ஆபாசம். வல்லுறவின் முதற்படி. கட்டிப்பிடித்தால், கண்ட இடத்தைப் பிசைந்தால், உதட்டில் முத்தமிட்டால் எப்பேர்பட்ட பெண்ணும் ஒப்புக்கொள்வாள் என்பதெல்லாம் ஆதிகால மூட நம்பிக்கை.

4) ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை ஆண்களுக்கு இது புரியாத அளவில்தான் மனப்பான்மை இருக்கிறது. அதனால் பொதுவாகப் பெண்கள் ஜாக்கிரதையாக இருப்பதில் தவறில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. நான் வீட்டைத் திறந்து போட்டுப் போனாலும் எவனும் திருடக்கூடாது என்று சொல்வது நியாயமே என்றாலும் நடைமுறையில் திருடர்கள் நிறைந்த ஊரில் வீட்டைப் பூட்டிச் செல்வதே தர்க்கப்படி அறிவார்ந்த செயல்.

அஜீத் போதுமான அளவு நடித்திருக்கிறார். ஷ்ரத்தாவும், அபிராமியும் சிறப்பு. இதில் நீதிபதியாக நடித்தவர் நடிப்பும் முக்கியமானது (டி.ராமச்சந்திரன் என்றறிகிறேன்). ஜெயப்ரகாஷ் வழமைபோல். ரங்கராஜ் பாண்டே தடுமாற்றமாகத்தான் தெரிகிறார்.

இந்திப் பதிப்பான ‘றிவீஸீளீ’ பார்த்தவர்கள் எல்லோரும் இப்படத்தை ஒருபடி குறைத்தே பேசுகிறார்கள். இப்படத்தில் அஜீத் மனநல பிரச்சனைக்குச் சிகிச்சை எடுப்பவராகக் காட்டப்படுவதும், பூங்கா சண்டைக் காட்சியும், முன்கதையாகக் காட்டப்படும் வித்யா பாலனும் அவசியமே இல்லை. கதையை அது எந்த வகையிலும் ஓர் அங்குலம் கூட நகர்த்துவதில்லை. ஆனாலும் ரசிகர்களின் நாயக வழிபாட்டுக்குத் தீனி போடும் வகையில் அவற்றைச் சேர்த்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

சமகாலப் பெண்களின் பிரச்சனையைப் பேசி இருக்கும், தனக்கு வாய்ப்பு குறைவான ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கு நிச்சயம் அஜீத் ந‌ம் மரியாதைக்குரியவர்.

கலை மற்றும் தர்க்க இடைவெளிகள் தாண்டி தன் பேசுபொருளுக்காக, அதைக் கோடிக்கணக்கான இளைஞர்களால் பின்பற்றப்படும் முன்னணி நடிகர் ஒருவரை வைத்துச் சொல்லி இருப்பதற்காக முக்கியமான படைப்பாகிறது. வாழ்த்துக்கள்!

 

https://uyirmmai.com/article/நேர்கொண்ட-பார்வைபுத்தம்/

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
Quote

இந்திப் பதிப்பான ‘றிவீஸீளீ’ பார்த்தவர்கள்

நல்ல ஒரு படம் பார்த்த உணர்வு ஏற்பட்டது.  கிந்தி படம் பிங்(pink) என நினைக்கிறேன். பாண்டேயின் நடிப்பில் குறை காண முடியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.