Jump to content

தமிழர்கள் நிறைந்த இந்திய கடலலைச் சறுக்கல் அணி - இலங்கையில் கடலலைச் சறுக்கல் போட்டி


Recommended Posts

சென்னையிலுள்ள கோவளம் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி தலைமையிலான இந்திய சர்ஃபிங் (கடலலைச் சறுக்கல்) அணியினர், இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் பங்கேற்றனர்.

மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவர் தலைமையில் இந்திய அணி இதில் பங்கேற்றது.

World Surf League Qualifying Series (QSL3000) என அழைக்கப்படும் சர்ஃபிங் போட்டி, இலங்கையின் அறுகம்பே எனும் இடத்தில் நடந்து வருகிறது.

கடந்த 25ஆம் தேதி ஆரம்பித்த இந்தப் போட்டித் தொடர், 29ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது.25 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றார்கள்.

தெற்காசியாவில் இருந்து இலங்கை, இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கு பற்றுகின்றன.

இந்தியாவிலிருந்து 06 பேரைக் கொண்ட அணி, இந்த உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில் கலந்து கொண்டது.

 

சர்ஃபிங் போட்டியில் கலந்து கொண்டவர்கள்

மூர்த்தி, அஜீஸ் அலி, சஞ்ஜே கெப்ரூ, மணிகண்டன், விக்னேஷ் மற்றும் பேர்சி ஆகியோர் இந்திய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர். இவர்கள் அனைவரும் கோவளம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் தேசிய ரீதியாக சர்ஃபிங் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மூர்த்தி, அறுகம்பேயில் நடைபெறும் உலகளவிலான சர்ஃபிங் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்குத் தலைமை தாங்கினார்

https://www.bbc.com/tamil/sport-49862554

 

யார் இந்த மூர்த்தி?

சென்னை அருகே அமைந்துள்ள கோவளம் எனும் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. 1982ஆம் ஆண்டு பிறந்தவர். அறுகம்பேயில் நடைபெற்று வரும் உலக சர்ஃபிங் போட்டியில் தனது அணியினருடன் கலந்துகொள்ளும் இவரை சந்தித்துப் பேசியது பிபிசி தமிழ்.

தனது 20 வயது கடந்த நிலையிலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தவர் மூர்த்தி. கடல் சார்ந்த தொழில் தான் இவரின் வாழ்வாதாரமாக இருந்தது. மூர்த்தியின் பெற்றோருக்கிடையில் ஏற்பட்ட பிரிவு காரணமாக, சிறு வயதிலிருந்தே தனது பாட்டியுடன்தான் இவர் வாழ்ந்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக, ஆறாம் வகுப்புடன் படிப்பையும் நிறுத்த வேண்டியதாயிற்று.

மூர்த்தி

இனி மூர்த்தியே பேசுகிறார்.

"சிறு வயதிலிருந்தே கடலில் விளையாடுவது எனக்குப் பிடிக்கும். அந்த வகையில் சர்ஃபிங் விளையாட்டிலும் எனக்கு ஈடுபாடு இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஜன்னல் பலகைகளைக் கொண்டு, கடலில் சர்ஃபிங் பழகி வந்தேன்.

2001ஆம் ஆண்டில் ஒரு நாள் நிறைய மீன்களைப் பிடித்த களைப்பில் கடற்கரையில் உட்கார்ந்திருந்தேன். அப்போது 'சர்ஃபிங் சுவாமி' என்று அழைக்கப்படும் ஜாக் ஹெப்னர் (Jack Hebner) எனும் அமெரிக்கரை சர்ஃபிங் படகுடன் சந்திக்கக் கிடைத்தது. அவருடன் பேசி அவர் வைத்திருந்த சர்ஃபிங் படகை சிறிது நேரம் தருமாறு கேட்டேன்; தந்தார். அதற்கு முன்னர் நான் சர்ஃபிங் படகைத் தொட்டதில்லை. 10 நிமிடங்கள் வரையில் அந்த படகைக் கொண்டு சர்ஃபிங் விளையாடினேன். அந்த நிகழ்வுதான் என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது; என் மனதுக்குள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது

2003ஆம் ஆண்டில் சொந்தமாக எனது பணம் 1500 ரூபாய் கொடுத்து, ஒரு சர்ஃபிங் படகு வாங்கி, பழகினேன். ஊரிலுள்ள பலர் என்னைக் கிறுக்கன் என்று கேலி செய்தனர். ஆனால் அவற்றையெல்லாம் நான் கண்டு கொள்ளவேயில்லை. எனது இலக்கை நோக்கி நான் பயணித்தேன்.

அன்பளிப்பாகக் கிடைத்த படகு

இஸ்ரேலைச் சேர்ந்த சர்ஃபிங் விளையாட்டு வீரரும், இசைக்கலைஞருமான யோத்தம் என்பவரை 2008ஆம் ஆண்டு சந்திக்கக் கிடைத்தது. எனது வாழ்க்கையில் பெரும் மாற்றம் அதனால் ஏற்பட்டது. சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சர்ஃபிங் படகு ஒன்றை எனக்கு அவர் அன்பளிப்பாகத் தந்தார்.

சர்ஃபிங் படகுடன் மூர்த்தி

பிறகு 2009ஆம் ஆண்டு மீண்டும் என்னை அவர் சந்தித்தார். அப்போது எனது நண்பர்கள் 10 பேர் என்னிடம் சர்.ஃபிங் பழகிக் கொண்டிருந்தனர். இத்தனை விரைவாக இவ்வளவு பேர் சர்ஃபிங் பழகியமை குறித்து அவர் மகிழ்ச்சியடைந்தார். இன்னும் பலருக்கு சர்ஃபிங் கற்றுக் கொடுப்பேன் என்று அவரிடம் கூறினேன். அதனைப் பார்க்க அவர் ஆவலுடன் இருப்பதாகக் கூறினார். பின்னர் என்னைப் பற்றிய குறும்படம் ஒன்றினை அவர் எடுத்தார். எனக்காக உலக நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி நிதி சேகரித்தார். அவர் மூலம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு க்ளப் மூலம் 30 சர்ஃபிங் படகுகள் எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது.

நிறைவேறிய கனவு

சர்ஃபிங் கற்றுக் கொடுக்கும் பள்ளி ஒன்றை உருவாக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. என்னைப் பற்றிய குறும்படத்தை பார்த்த இந்தியாவின் டி.டி. குரூப் நிறுவனத் தலைவர் அருண்வாசு எனக்கு உதவ முன்வந்தார். அவரின் உதவியுடன் 2012ஆம் ஆண்டு 'கோவ்லாங் பாயிண்ட் சர்ஃபிங் பள்ளி' (Covelong point Surfing School) ஒன்றை ஆரம்பித்தோம்.

பரிசு பெரும் மூர்த்தி

எமது பள்ளியின் பெயரில் 2013 முதல் 2019 வரை சர்வதேச ரீதியாக ஏழு சர்ஃபிங் போட்டிகளை நாங்கள் நடத்தியிருக்கிறோம்" என்று மூர்த்தி தெரிவித்தார்.

தன்னுடைய கிராமத்தவர்களுக்கு சர்ஃபிங் கற்றுக் கொடுக்க, தனது பள்ளியில் பணம் பெற்றுக் கொள்வதில்லை என்கிறார் மூர்த்தி. அந்த வகையில் தனது கிராமத்தைச் சேர்ந்த சுமார் 300 பேருக்கு இதுவரையில் சர்ஃபிங் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பாலி, தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச சர்ஃபிங் போட்டிகளில் மூர்த்தி பங்கேற்றுள்ளார். 2013, 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் தேசிய ரீதியாக சர்ஃபிங் போட்டிகளில் தான் முதலிடங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

2007ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட மூர்த்திக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கும் சர்ஃபிங் கற்றுக் கொடுத்திருக்கிறார் மூர்த்தி.

மீனவக் குடும்பத்தில் பிறந்ததில் இருந்து உப்புக்காற்றைச் சுவாசித்து, கடலலைகளுடன் விளையாடி வந்துள்ள மூர்த்தி, இப்போது தனது அணிக்குத் தலைமையேற்று உலகளவில் சர்ஃபிங் போட்டிகளில் சாகசம் நிகழ்த்தி வருகின்றார்.

 

இரண்டாம் சுற்று வரை மட்டும் முன்னேறிய இந்திய அணி

மூர்த்தி

எவ்வாறாயினும், அறுகம்பேயில் நடைபெற்றுவரும் ஆண்களுக்கான உலக சர்ஃபிங் தரப்படுத்தல் போட்டியில், இந்திய அணியினரால் இரண்டாம் சுற்று வரை மட்டுமே முன்னேற முடிந்தது.

மேற்படி போட்டித் தொடர் நான்கு சுற்றுகளாக ஆரம்பத்தில் நடைபெறும். அவற்றில் தேர்வானவர்கள் கால் இறுதிப் போட்டிக்குச் செல்வர். அதன் பின்னர் அரை இறுதிப் போட்டியும், பின்னர் இறுதிப் போட்டியும் இடம்பெறும்.

இந்த நிலையில், உலகளவில் சாம்பியன்களும் அவர்களுக்குச் சமனான திறமையுடையவர்களும் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில், இந்திய அணியினருக்குக் கலந்து கொள்ள சர்ந்தப்பம் கிடைத்தமை தொடர்பில், தாம் மகிழ்ச்சியடைவதாக, இந்திய சர்ஃபிங் அணியின் தலைவர் மூர்த்தி பிபிசி தமிழிடம் கூறினார்.

இந்தப் போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தாங்கள் இன்னும் கற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும், அதன் மூலம் தமது திறமையை மென்மேலும் வளர்த்துக் கொள்ள முடியும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.