Jump to content

சம்மந்தன் சுமந்திரன் இருவரும் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே ;காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க செயலாளர்


Recommended Posts

தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சம்மந்தன் மற்றும் சந்திரன் ஆகிய இருவரும் தமிழர்களுக்கான பிரதிநிதிகள் இல்லை அவர்கள் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

ssss.JPG

வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பொதுப் பிரச்சினைகள் போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை குறிப்பாக நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் திறமைவாய்ந்த சட்டத்தரணியாக இருக்கும் சுமந்திரனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏன் குறித்த விடையம் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என ஊடகவியலாளர்களால் கேள்வி கேட்டபோது.

இதன்போது பதில் வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் ஒருநாடு என் கோட்பாடு மற்றும் வடக்குகிழக்கை ஏற்றுக்கொண்டவர்கள் இவர்கள் தமிழர்களுக்கான பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வு தரமாட்டார்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விலைபோய்விட்டார்கள். தமது பதவிகளும் சுகபோகங்களுமே இவர்களுடைய குறிக்கோள் எனவும் நீராவியடி சம்பவத்தில் சட்டத்தரணிகள் குரல்கொடுத்திருந்தார்கள் ஆனால் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட சம்மந்தன் இதுவரைக்கும் வாய்திறந்து கதைக்கவில்லை 300 கோடிரூபா வீட்டைவாங்கியவரால் வாய்திறந்து கதைக்கமுடியாது இதேபோல சுமந்தரினும் அதற்கு அடிபை எனவும் பல குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

இதன்போது வவுனியாவில் உருவாக்கப்பட்ட தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமே முதலில் ஆரம்பிக்கப்பட்டதென்றும் இச் சங்கமே தொடற்சியாக போராட்டங்களில் ஈடுபட்டுவருவதாகவும் ஏனைய சங்கங்கள் போராட்டங்களை மழுங்கடிப்பக ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/65792

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோர் அமைப்புக்களை உடைப்பதற்கு கூட்டமைப்பு முயலுவதாக குற்றச்சாட்டு

Sep 29, 20190

 
 

காணாமல் போனோர் அமைப்புக்களை உடைப்பதற்கு கூட்டமைப்பு முயலுவதாக குற்றச்சாட்டு

காணாமல் போனோர் அமைப்புக்களை உடைக்க கூட்டமைப்பு முற்படுகின்றதென காணாமல் போனோர் சங்கங்கள் குற்றச்சாட்டுக்களை எழுப்பியுள்ளன.

கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகிய இருவரும் தமிழர்களுக்கான பிரதிநிதிகள் இல்லை. அவர்கள் சிங்களவர்களுக்கான பிரதிநிதிகளே என்று வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பொதுப் பிரச்சினைகள் போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்வதில்லை. குறிப்பாக நீராவியடி பிள்ளையார் கோவில் விவகாரம் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் போராட்டங்களில் திறமைவாய்ந்த சட்டத்தரணியாக இருக்கும் சுமந்திரனாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினாலும் ஏன் குறித்த விடயம் தொடர்பில் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என ஊடகவியலாளர்களால் கேள்வி கேட்டபோது, இதன்போது பதில் வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விலைபோய்விட்டார்கள்.தமது பதவிகளும் சுகபோகங்களுமே இவர்களுடைய குறிக்கோள் எனவும் நீராவியடி சம்பவத்தில் சட்டத்தரணிகள் குரல்கொடுத்திருந்தார்கள். ஆனால் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட சம்பந்தன் ஐயா இதுவரைக்கும் வாய்திறந்து கதைக்கவில்லை. 300 கோடி ரூபா வீட்டை வாங்கியவரால் வாய்திறந்து கதைக்க முடியாது. இதேபோல சுமந்தரனும் அதற்கு அடிமை எனவும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார்.

 

http://www.samakalam.com/செய்திகள்/காணாமல்-போனோர்-அமைப்புக்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.