Jump to content

"விகாரை அமைப்பு முதல், சட்டத்தை மீறிய தகனம் வரையில் ஒரு நேரடி சாட்சியத்தின் பகிர்வு": செம்மலையில் அரங்கேறிய அத்துமீறல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"விகாரை அமைப்பு முதல், சட்டத்தை மீறிய தகனம் வரையில் ஒரு நேரடி சாட்சியத்தின் பகிர்வு": செம்மலையில் அரங்கேறிய அத்துமீறல்கள்

தமிழர்கள் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை சட்டத்தை மீறி தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விடயம் நிச்சயமாக தீண்டும்.

virakesari.jpg


முல்லை மண்ணில் அரங்­கேற்­றப்­பட்ட மனி­தப்­பே­ர­வ­லங்­க­ளுக்­கான நீதிக்­கோ­ரிக்கை போராட்டம் தொடர்ந்து கொண்­டி­ருக்­கையில் அதே மண்ணில் வர­லாற்­றுப்­ப­ழைமை வாய்ந்த செம்­மலை நீரா­வி­ய­டிப்­பிள்­ளையார் ஆல­யத்தில் இரா­ணு­வத்­தி­னரின் பங்­கேற்­புடன் உரு­வான பௌத்த விகாரை இன முறு­கல்­க­ளுக்கு வித்­திட்­டது.

தற்­போது அந்த விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியின் மர­ணத்தின் பின்னர் அவ­ரது உடல் நீதி­மன்ற உத்­த­ரவை மீறி தகனம் செய்­யப்­பட்டு மீண்டும் தமி­ழி­னத்­திற்கு நீதி மறு­த­லிக்­கப்­பட்­டுள்­ளது.

இப்­பின்­ன­ணியில் இவ்­வி­ட­யங்கள் தொடர்பில் இம்­மண்ணில் ஒரு நேரடி­சாட்­சி­ய­மாக இருக்கும் தமிழர் மர­பு­ரி­மைகள் பேர­வையின் இணைத்­த­லைவர் வி.நவ­நீதன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு அவ்­வி­ட­யங்கள் குறித்த முக்­கிய தக­வல்­களை பகிர்ந்து கொண்டார். அவை வரு­மாறு,

வர­லாற்­றுத்­தொன்­மையும் கேந்­திர முக்­கி­யத்­து­வமும்

செம்­மலை நீரா­வி­யடி பிள்­ளையார் ஆல­யத்தின் வர­லாறு மிகப்­ப­ழை­மை­யா­னது. இந்த ஆல­யத்தின் விக்­கி­ர­கங்­களை ஆய்வு செய்த வர­லாற்­றா­சி­ரி­யர்­களால் அவற்றை செதுக்­கிய காலத்­தி­னைக்­கூட கணிக்க முடி­யா­த­ள­வுக்கு உள்­ளது. பிள்­ளையார் சிலை எப்­போது பிர­திஷ்டை செய்­யப்­பட்­டது என்­ப­தற்­கான மிகத்­தெ­ளி­வான வர­லாற்­றுத்­த­க­வல்கள் இல்லை. இருப்­பினும் இப்­பி­ர­தே­சத்தில் மக்­களின் வாய்­வழி வர­லாற்றுத் தக­வல்கள் மூலம் மிகத்­தொன்­மை­யா­னது என்­பதை உறு­திப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக உள்­ளது. 

தற்­போது வாழ்ந்­து­கொண்­டி­ருக்கும் 93 வய­தான முதி­யவர், தான் சிறு­ப­ரா­யத்­தி­லேயே இந்த ஆல­யத்தில் வழி­பா­டு­களில் ஈடு­பட்­டி­ருப்­ப­தாக கூறு­கின்றார். இவை இந்த ஆல­யத்தின் வர­லாற்­றுப் ப­ழைமையை காட்­டு­கின்­றது.

நீரா­வி­யடி பிள்­ளையார் ஆல­ய­மா­னது வடக்­கையும் கிழக்­கையும் இணைக்கும் கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த பகு­தியில் அதா­வது கொக்­கு­ளாய்க்கும் நாயா­றுக்கும் இடையில் உள்ள பழைய செம்­மலைப் பகு­தியில் காணப்­ப­டு­கின்­றது. கடந்த காலத்தில் கொக்­குளாய், முல்­லைத்­தீவு இடையில் மாட்­டு­வண்­டி­களில் பய­ணிப்­ப­வர்கள் பழைய செம்­மலை எனப்­படும் உய­ர­மான இப்­ப­கு­தியை கடக்­கின்­ற­போது நன்­றிக்­க­ட­னாக இந்த ஆல­யத்தில் வழி­பா­டு­களைச் செய்­வார்கள். தற்­போதும் அந்த மர­பு­முறை நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றது.

இரா­ணுவ உத­வி­யுடன்  உரு­வா­கிய விகாரை

2009ஆம் ஆண்டு போரின் உச்­ச­கட்­டத்தில் மக்கள் இடம்­பெ­யர்ந்­தனர். பின்னர் மீள்­கு­டி­யே­றிய போது செம்­ம­லைப்­ப­கு­தியில் அமைக்­கப்­பட்ட இரா­ணுவ முகா­மிற்குள் ஆல­யமும் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தது. இச்­ச­ம­யத்தில் ஆல­யத்­திற்கு எந்­த­வொரு நபர்­களும் செல்­வ­தற்கு அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது. 

2004ஆம் ஆண்டு அந்த முகா­மி­லி­ருந்த இரா­ணு­வத்­தினர் பௌத்த தேரர் ஒரு­வரை அழைத்து வந்து இந்த ஆல­யப்­ப­கு­தியில் சிறிய அளவில் பௌத்த மத வழி­பா­டு­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர்.

அத­னை­ய­டுத்து இரா­ணு­வத்­தி­னரின் நிதிப்­பங்­க­ளிப்­புடன் விகாரை அமைப்­ப­தற்­கான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டவும் அழைத்­து­வ­ரப்­பட்ட கொலம்பே மேதா­லங்­கார தேரரும் அங்கு சிறிய அறை அமைத்து தங்­கி­விட்டார். தற்­போதும் இந்த விகா­ரையின் நிர்­மாணப் ப­ணி­க­ளுக்­காக எந்­தெந்த இரா­ணுவ வீரர்கள் எவ்­வ­ளவு நிதி­ய­ளிப்புச் செய்­தார்கள் என்­ப­தற்­கான சான்­றுகள் விகா­ரை­யினுள் உள்­ளன. இதன்­மூலம் போரின் பின்னர் இரா­ணு­வத்தின் பங்­க­ளிப்­புடன் பிள்­ளையார் ஆல­யத்­துடன் இணைத்து விகாரை அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பது தெளி­வா­கின்­றது.

மக்கள் போராட்­டமும் நீதி­மன்ற உத்­த­ரவும்

ஆல­யத்­தினை விடு­விக்க வேண்­டு­மென தொடர்ச்­சி­யாக பொது­மக்கள் கோரி­வந்­தி­ருந்த நிலையில் 2014ஆம் ஆண்­டு­கா­லப்­ப­கு­தியில் வரு­டாந்த பொங்கல் நிகழ்­வு­க­ளுக்குச் சென்­ற­போ­தெல்லாம் இரா­ணு­வத்­தி­னரால் அங்­கி­ருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர். 

இந்தப் பின்­ன­ணியில் 2018இல் மிகுந்த ஆக்­ரோஷத்­துடன் அணி­யாக திரண்டு மக்கள் போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தார்கள். இதனால் பிர­தே­சத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்­ப­டுகின்றது என்ற அடிப்­ப­டையில் பொலிஸார் இந்த விட­யத்­தினை நீதி­மன்­றத்­திற்கு எடுத்துச் சென்­றனர்.

இதற்கு சம­கா­லத்தில், கரைத்­து­றைப்­பற்று பிர­தேச சபை­யி­டத்தில் தக­வ­ல­றியும் உரி­மைச்­சட்­டத்தின் கீழ் பௌத்த விகாரை தொடர்பில் எட்டு வினாக்கள் எழுப்­பப்பட்­ட­போது, ஆலயம் அமைந்­துள்ள அரை ஏக்கர் நிலம் நீரா­வி­யடிப் பிள்­ளையார் ஆல­யத்­திற்குச் சொந்­த­மா­னது என்றும் இங்கு பௌத்த விகாரை பின்­னரே நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­தென்றும் அதற்கு காணி அனு­ம­திகள் பெறப்­ப­ட­வில்லை என்றும் இரா­ணு­வத்­தி­னரின் வழி­பாட்­டுக்­காக உரு­வாக்­கப்­பட்ட சிறிய பகுதி பௌத்த விகா­ரை­யாக உரு­வாக்­கப்­ப­டு­வ­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன என்றும் பௌத்­தர்கள் அங்கு வாழ­வில்லை என்றும்  தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மேலும் ஆலயம் அமைந்­துள்ள நில­மா­னது ஆல­யத்­திற்கே உரித்­தா­னது என்­பதை பிர­தேச செய­லா­ளரும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் நீதி­மன்றில் தொட­ரப்­பட்ட வழக்கின் மீது நீண்ட விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. அதன் ஈற்றில் பழைய செம்­ம­லையில் நீரா­வி­ய­டிப்­ பிள்­ளையார் பாரம்­ப­ரிய இந்­துக்­கோவில் காணப்­பட்­ட­தென்றும் தற்­போ­தைய சூழலில் இரு மதத்­த­வர்­களும் வழி­பா­டு­களை மேற்­கொள்­ள­மு­டியும் என்றும் ஆனால் நிர்­மா­ணங்­களைச் செய்­வ­தாக இருந்தால் எந்­த­வொரு தரப்­பி­னரும் பொருத்­த­மான உள்ளூர் திணைக்­க­ளங்­களின் அனு­ம­தியைப் பெறு­வது அவ­சியம் என்றும் நீதி­மன்றம் உத்­த­ரவு பிறப்­பித்­தது.

இந்த உத்­த­ரவால் அதி­ருப்தி யடைந்த விகா­ரா­தி­பதி தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் அதற்கு எதி­ராக வவு­னியா மாவட்ட நீதி­மன்றில் மேன்­மு­றை­யீடு செய்­தார்கள். இந்த வழக்கு  நிலு­வையில் இருக்­கின்ற நிலையில், நீரா­வி­யடி ஆலய வளாகம் நிலை­யியல் மாற்­றங்­க­ளுக்கு உட்­படும் வகையில் எவ்­வா­றான­தொரு நிர்­மா­ணங்­க­ளையும் செய்­ய­மு­டி­யாது என்றும் வழி­பா­டு­களில் தொடர்ந்தும் ஈடு­ப­ட மு­டியும் என்றும் இடைக்­கால உத்­த­ர­வொன்றை பிறப்­பித்­துள்­ளது.

விகா­ரா­தி­ப­தியின் பூத­வு­டலும் மீறப்­பட்ட நீதியும்

இந்த நிலை­மைகள் இருக்­கையில் தான் கடந்த 21ஆம் திகதி சனிக் கி­ழமை விகா­ரா­தி­பதி புற்­று­நோயால் உயி­ரி­ழந்து விட்­ட­தா­கவும் அவ­ரது உடலை செம்­ம­லைக்கு கொண்­டு­வந்து அங்கு தகனம் செய்­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தக­வல்கள் கிடைத்­தி­ருந்­தன. 

இத­னை­ய­டுத்து அன்­றைய தினம் நீதி­மன்­றுக்கு விடு­மு­றை­யா­கையால் தமிழர் மர­பு­ரி­மைப்­பே­ர­வையும், ஆலய நிரு­வா­கத்­தி­னரும் ஆலய வளா­கத்­தினுள் உயி­ரற்ற உட­லத்­தினை வைக்­கக்­கூ­டாது என்றும் அவ்­வாறு வைக்­கப்­ப­டு­கின்­ற­ போது இந்­துக்­களின் பாரம்­ப­ரியம் மீறப்­படும். 

இதனால் இன,மதங்­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­வ­குக்கும். 

ஆகவே அதனை உடன் தடுக்க வேண்டும் என்று கோரி முல்­லைத்­தீவு பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­டொன்றை மேற்­கொண்டோம். பொலிஸார்  முதலில் இந்த முறைப்­பாட்­டினை கருத்தில் கொண்­டி­ருக்­காத நிலையில் தொடர்ச்­சி­யாக எமது தரப்­புக்­களின் அழுத்­த­மான கோரிக்­கை­க­ளினை அடுத்து நள்­ளி­ரவைத் தாண்டி எமது முறைப்­பாட்­டினை பதில்­நீ­தி­வானின் வீட்­டிற்கு எடுத்துச் சென்­றனர். 

அத­னை­ய­டுத்து பதில்­நீ­திவான் 23ஆம் திகதி திங்­கட்­கி­ழமை கட்­டளை பிறப்­பிக்கும் வரையில் பூத­வு­டலை தகனம் செய்­வ­தற்கு தடை உத்­த­ரவை விதித்­தி­ருந்தார்.

பின்னர் திங்கட்­கி­ழ­மை­யன்று நீதி­மன்­றத்தில் வழக்கு விசா­ரணை எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது எமது தரப்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அன்ரன் புனி­த­நா­யகம் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் தேரர்­களின் சட்­டத்­த­ர­ணி­க­ளுக்கும் இடையில் நீண்ட வாதப்­பி­ர­தி­வா­தங்கள் நடை­பெற்­றி­ருந்­தன. இத­னை­ய­டுத்து இரு­த­ரப்­பி­னரின் இணக்­கப்­பாட்­டிற்­காக வழக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

அச்­ச­ம­யத்தில் பௌத்த மத கு­ருவின் தக­னக்­கி­ரி­யை­களை முல்­லைத்­தீவில் நடத்­து­வ­தற்கு நாம் எதிர்க்­க­வில்லை. ஆனால் இந்து ஆல­யத்­திற்­குள்ளோ அல்­லது வளா­கத்­திலோ நடத்­து­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது என்று தெளி­வாக கூறினோம். அத­னை­ய­டுத்து ஆல­யத்­திற்கு முன்னால் உள்ள இரா­ணுவ முகா­மினை அண்­டிய கடற்­க­ரைப்­ப­கு­தியில் தக­னக்­கி­ரியை நடத்­து­வ­தற்கு இணக்­கப்­பாடு ஏற்­ப­டவும் நீதி­மன்றம் அதனை ஏற்று கட்­ட­ளையை பிறப்­பித்தது.

நீதி­மன்­றிற்கு வரு­கை­தந்­தி­ருந்த பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் ஞான­சார தேரர் வாதப்­பி­ர­தி­வா­தங்­களை அவ­தா­னித்து விட்டு நீரா­வி­ய­டிப்­பிள்­ளையார் ஆல­யத்­திற்குச் சென்­றி­ருந்தார். நீதி­மன்ற கட்­டளை தயா­ரிக்­கப்­படும் ஏக 

கா­லத்தில் அங்­கி­ருந்த ஞான­சார தேரர் ஆல­யத்தின் கேணிப்­ப­கு­தியில் விகா­ர­ாதி­ப­தியின் உட­லத்­தினை தகனம் செய்­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்தார் என்ற தக­வல்கள் எமக்கு கிடைத்­தி­ருந்­தன.

அத­னை­ய­டுத்து ஞான­சா­ர­தே­ரரும் அவர்­த­ரப்பு சட்­டத்­த­ர­ணி­களும் கலந்­து­ரை­யா­டி­விட்டு தாம் வழக்கில் வெற்­றி­ய­டைந்து விட்­ட­து­போன்று பிர­தி­ப­லிப்­புக்­களைச் செய்­து­விட்டு நீதி­மன்ற கட்­ட­ளைகள் தம்மைக் கட்­டுப்­ப­டுத்­தாது திட்­ட­மிட்ட வகையில் நாம் எமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம் என்று கூறி தகன ஏற்­பா­டுகள் இடம்­பெற்­றி­ருந்த பகு­திக்கு விரைந்­தி­ருந்தார் என்ற தக­வல்­களும் ஒருங்கே கிடைத்­தன.

பொலி­ஸாரின் பரா­மு­கமும் திட்­டமிட்ட தாக்­கு­தல்­களும்

அச்­ச­ம­யத்தில் நீதி­மன்­றத்தில் குழு­மி­யி­ருந்த நாம் விட­யத்­தினை மீண்டும் நீதி­ப­தியின் கவ­னத்­திற்கு கொண்டு சென்றோம். அப்­போது நீதி­மன்றக் கட்­ட­ளையை பொலிஸார் அமு­லாக்க வேண்டும் என்று குறித்­து­ரைக்­கப்­பட்­டது. இவ்­வா­றான கட்­ட­ளையை நாம் எடுத்­துக்­கொண்டு உரிய இடத்­திற்குச் சென்ற எமது சட்­டத்­த­ர­ணி­களின் கோரிக்­கைகள் மறுக்­கப்­பட்டு பொலிஸார் தேரர்­களின் செயற்­பா­டு­களை தடுப்­ப­தற்கு பதி­லாக அவர்­க­ளையும் எம்­மையும் அப்­ப­கு­திக்குள் பிர­வே­சிக்க விடாது தடுத்­தி­ருந்­தார்கள்.

அத்­துடன் நீதி­மன்றக் கட்­ட­ளையை அமு­லாக்­கு­மாறு வாதிட்ட சட்­டத்­த­ர­ணி­களும் தாக்­கப்­பட்­டனர். அங்­கி­ருந்த இளை­ஞர்கள், சாதா­ர­ண மக்­க­ளென அனைவர் மீதும் திட்­மிட்ட தாக்­கு­தல்கள் ஆரம்­பிக்­கப்­பட்டு நிலை­மைகள் மோச­ம­டைந்­தி­ருந்­தன. 

குறிப்­பாக நீதி­மன்ற உத்­த­ர­வு­களை அமு­லாக்க வேண்­டிய பொலிஸார் குற்­ற­வா­ளி­களை நடத்­து­வது போன்று சட்­டத்­த­ர­ணி­க­ளையும் தமிழ் இளை­ஞர்­க­ளையும் நடத்தி அவர்­களை வன்­மு­றையை பிர­யோ­கித்­தா­வது அங்­கி­ருந்து அகற்­று­வ­தற்கு முயற்­சித்­தி­ருந்­தார்கள். 

அத்­துடன் தேரர்­க­ளுக்கு பாது­காப்­ப­ளித்து சார்­பாக செயற்­பட்­டி­ருந்­தார்கள். நீதிமன்றக் கட்­ட­ளை­களை விடவும் பௌத்த தேரர்­களின் கட்­ட­ளை­க­ளையே அவர்கள் நிறை­வேற்­றி­னார்கள் என்­பதை கண்­கூ­டாக கண்­டி­ருந்தோம். இந்த சம்­பவம் தமி­ழர்கள் இந்த நாட்டில் இரண்டாம் தரப்­பி­ர­ஜை­க­ளாக நடத்­தப்­ப­டு­கின்­றார்கள் என்­பதை மீண்டும் சான்­றுப்­ப­டுத்­தி­யது.

இவ்­வா­றான நிலை­மைகள் இடம்­பெற்­று­க்­கொண்­டி­ருந்த தரு­ணத்தில் தேரர்கள் நீதி­மன்ற உத்­த­ரவை மீறி மர­ணித்த தேரரின் உடலை ஆலய கேணிக்கு அருகில் வைத்து எரி­யூட்­டி­விட்­டார்கள். 

தமிழ் இளை­ஞர்கள் கிளர்ந்­தெ­ழுந்­த­போதும் மீண்டும் வன்­மு­றை­யான நிலை­மைகள் தோற்­றம்­பெ­றக்­கூ­டாது என்­பதில் அங்­கி­ருந்த சட்­டத்­த­ர­ணிகள் உள்­ளிட்ட அனை­வரும் அவர்­களை கட்­டுப்­ப­டுத்­தி­யி­ருந்­தார்கள்.

தென்­னி­லங்­கையின் புரி­தலும் மக்­களின் ஜன­நா­யக எழுச்­சியும்

தென்­னி­லங்­கையில் முல்­லைத்­தீவில் தேரரின் உடலை தகனம் செய்­வ­தற்கு இட­ம­ளிக்­க­வில்லை என்ற தவ­றான செய்தி பரப்­பப்பட்­டுள்­ளது. உண்­மையில் நாம் மத­கு­ருவின் இறு­திக்­கி­ரி­யைகள் இடம்­பெ­று­வ­தை­எ­திர்க்­க­வில்லை. ஆனால் இந்­து­மத பாரம்­ப­ரி­யங்­களை சிதைத்து, பண்­பா­டு­களை அழித்து, எமது புனி­தத்­தினை இல்­லாதொ­ழிக்கும் ஒரு திட்­ட­மிட்ட செயற்­பாட்­டி­னையே எதிர்த்­தி­ருந்தோம். மேலும் பௌத்­தர்­க­ளையும், இந்­துக்­க­ளையும் பிரிப்­ப­தற்கு மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு செயற்­பா­டாக தேரர்­களால் கூறப்­ப­டு­கின்­றது. 

அவ்­வாறு திட்­ட­மிட்­ட­ செ­யற்­பாடு என்றால் ஓரி­ரு­வ­ருடன் அல்­லது சில­நூறு பேருடனேயே முரண்­பா­டுகள் ஏற்­பட்­டி­ருக்கும். ஆனால் இந்த சம்­பவம் தமி­ழர்­க­ளையும் இந்­துக்­க­ளையும் காயப்­ப­டுத்­து­வ­தற்­காக மேற்­கொள்­ளப்­பட்ட அநீ­தி­யான செயற்­பா­டாகும். அதனால் தான் எட்டு மணி­நே­ரத்­தினுள் ஏற்­பாடு செய்து போராட்­டத்தில் இரண்­டா­யி­ரத்­திற்கும் அதி­க­மான மக்கள் மறு­தி­னமே ஒன்­றி­ணைந்து ஜன­நா­யக முறையில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்­தனர்.

அத்­துடன் மக­ஜர்­க­ளையும் கைய­ளித்­தி­ருந்­தார்கள். சட்­டத்­த­ர­ணிகள் வடக்கு கிழக்கில் பணிப்­பு­றக்­க­ணிப்பில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்டு வரு­கின்­றார்கள். இதில் தமி­ழர்­களின் அர­சியல் பிர­தி­நி­தி­க­ளாகவும் ஆட்­சியின் உறு­திப்­பாட்­டிற்கு கார­ண­மாக இருப்­ப­வர்­க­ளு­க­்குமான கூட்­ட­மைப்பின் பங்­க­ளிப்பும் அர­சாங்­கத்­திற்­கான அழுத்­தங்­களும் எந்­த­ள­விற்கு இருந்­தன என்­பதை சீர்­தூக்கி பார்க்­க­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலையில் இருக்­கின்றோம்.

தமி­ழர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு உள்­நாட்டு நீதிப்­பொ­றி­மு­றைக்குள் நீதி­யைப்­பெ­ற­ மு­டி­யாது என்­பதை தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கின்றோம். அவ்­வா­றி­ருக்­கையில் தமி­ழர்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு உள்­நாட்டில் நீதியைப் பெற­மு­டி­யாது என்­ப­தற்கு இது மற்­று­மொரு உதா­ர­ண­மாக உள்­ளது. குறிப்­பாக நீதி­மன்­றங்கள் உத்­த­ர­வு­களை, தீர்ப்­புக்­களை பிறப்­பி­த்தாலும் பெரும்­பான்மை, இன, மத தரப்­பி­ன­ருக்கு எதி­ராக அவை ஒரு­போதும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­மாட்­டாது என்­பது இதன்­மூலம் வெளிப்­பட்­டுள்­ளது.

இதன்­மூலம் நீதித்­து­றையின் மீதான நம்­ப­கத்­தன்மை கேள்­விக்­குள்­ளா­கின்­றது. அது­மட்­டு­மன்றி நல்­லெண்­ணத்­தினை வெளிப்படுத்தியுள்ள இலங்கை அரசாங்கம் நீதியான விடயங்களை முன்னெடுப்பார்கள். ஆகவே தமிழர்கள் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கும் சர்வதேசத்தின் மனச்சாட்சியை இந்த விடயம் நிச்சயமாக தீண்டும்.


பௌத்த துறவிகளின் இருவேறு நிலை

தமிழர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று பௌத்த தேரர்கள் இதய சுத்தியுடன் கிழக்கு மாகாணத்தில் போராடியிருக்கவில்லை. ஒருசிறுபான்மையினத்தின் பிரச்சினையை பயன்படுத்தி பிறிதொரு சிறுபான்மையினத்தினை அடக்குவதற்கு அவர்கள் கையாண்ட தந்திரோபாயமாகவே அதனை பார்க்கின்றேன்.  

கிழக்கில் மனச்சாட்சியுடன் தமிழர்களின் தார்மீகமான கோரிக்கைக்காக அவர்கள் போராடியிருந்தால் முல்லையில் தமிழர்கள், இந்துக்களின் பாரம்பரியத்தினையும், பண்பாட்டினையும் அவமதித்து நீதிமன்ற உத்தரவை மீறிச் செயற்பட்டிருக்க மாட்டார்கள். அதுமட்டுமன்றி அத்தகைய செயற்பாட்டினை சரியென்று நியாயப்படுத்திக் கொண்டிருக்கவும் மாட்டார்கள்.


பரிந்துரைகள்
முல்லைத்தீவில் மட்டுமல்ல, தமிழர்தாயகத்தில் நடைபெறுகின்ற பௌத்த மதத்தின் பெயராலான ஆக்கிரமிப்புக்களும், சட்ட மீறல்களும் ஓரிரு தேரர்களால் நடைபெறவில்லை. தமிழர் தாயகத்தில் பௌத்த ஆக்கிரமிப்புக்களும், சட்டமீறல்களும் அரச அனுசரணையுடன் திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

தற்போதைய சூழலில் அந்த நிலைமைகளுக்கு ஒருமுற்றுப்புள்ளி வைப்பதானால், நாம் தோற்றுப்போனாலும் நீதிப்பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும். 

ஜனநாயக ரீதியான மக்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும். கட்டமைக்கப்பட்ட அரசாங்கத்தின் திட்டமிடலை சர்வதேச மயமாக்குதல் வேண்டும். தமிழர்களின் அரசியல் பலத்தினை ஒன்றுதிரட்டி குரலெழுப்புதல் வேண்டும். இந்த நான்கு வழிகள் ஊடாகவே எமது எஞ்சியிருக்கும் இருப்பினை தக்க வைத்துக்கொள்ள முடியும்.


 - ஆர்.ராம் -

 

https://www.virakesari.lk/article/65816

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.