Jump to content

கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது - மைத்திரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 Min Read
September 29, 2019
Maithri-Mahinda.jpg?zoom=1.2100000262260
 

நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை என ராஜபக்ஸக்களுக்கு தெளிவாகக் கூறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ, கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் என்னை சந்தித்து பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணி தொடர்பில் கலந்துரையாடினார்கள். அதன் போது பரந்துபட்ட கூட்டணியாக கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் என்றாலும், கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுத்து ஆதரவளிக்க தயாரில்லை என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் காணப்படும் பிரதான கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாத்திரமே மக்களின் பிரச்சினைகள் குறித்து சிந்தித்து செயற்படுகின்றது. எனவே கட்சியின் தனித்துவத்தை காட்டிக் கொடுத்து தாம் யாருக்கும் ஆதவளிக்கப் போவதில்லை. ஆனால் நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் பின் சுதந்திர கட்சி இன்றி இந்த நாட்டுக்கு அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா மைத்திரியின் தாயாரின் சின்னம் என்ன? 😂

நல்ல எழுதுறாங்கையா தலைப்பு😂

Link to comment
Share on other sites

58 minutes ago, goshan_che said:

ஆமா மைத்திரியின் தாயாரின் சின்னம் என்ன? 😂

நல்ல எழுதுறாங்கையா தலைப்பு😂

தலைப்பு கூறுவது மைத்திரியின் தாயார் பற்றி அல்ல. தாயார் கட்சி (தாய்க்கட்சி) என கூறப்படுவது சுதந்திரக்கட்சியை.

இந்த சின்னம் பற்றிய பிரச்சினை நீண்டகாலமாக போய்க்கொண்டிருக்கிறது. கீழுள்ள இணைப்புகளில் சென்று வாசித்து பாருங்கள். புரியும்.

https://yarl.com/forum3/topic/231806-‘மொட்டு’-சின்னத்தை-கைவிட-முடியாது-–-கோத்தா/

https://yarl.com/forum3/topic/231905-மோடிக்கும்-மொட்டுக்கும்-முடிச்சுப்-போட்டுப்-பார்க்கும்-சிங்கள-வாக்காளர்கள்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Lara said:

தலைப்பு கூறுவது மைத்திரியின் தாயார் பற்றி அல்ல. தாயார் கட்சி (தாய்க்கட்சி) என கூறப்படுவது சுதந்திரக்கட்சியை.

இந்த சின்னம் பற்றிய பிரச்சினை நீண்டகாலமாக போய்க்கொண்டிருக்கிறது. கீழுள்ள இணைப்புகளில் சென்று வாசித்து பாருங்கள். புரியும்.

https://yarl.com/forum3/topic/231806-‘மொட்டு’-சின்னத்தை-கைவிட-முடியாது-–-கோத்தா/

https://yarl.com/forum3/topic/231905-மோடிக்கும்-மொட்டுக்கும்-முடிச்சுப்-போட்டுப்-பார்க்கும்-சிங்கள-வாக்காளர்கள்/

 

இல்லை லாரா,

தலைப்பு இப்படி இருந்திருக்க வேண்டும்.

கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தயார். ஆனால் கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது - மைத்திரி.

நீங்கள் சொல்லும் சொல் தாய்கட்சி (இதில் இடையே “க்” வராது என்று நினைக்கிறேன்.

தாயார், என்பதில் ஆர் விகுதி, இடை சொல்லாக வரும் போது அது ஒரு இயற்பெயரை அல்லவா குறிக்கும்?

தாயார் கட்சி என்பதன் அர்தம் mother’s party.

தாய்கட்சி என்பது mother-party. Motherland போல.

தமிழிலும் தாய்நாடுதானே? தாயார்நாடு அல்லவே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் இந்த விடயதானத்தை (context) ஆராய்ந்தால் தாயார் என்ற சொல்லின் பொருத்தமின்மை துலங்கும்.

மைத்திரி சுக வின் கை சின்னத்தை விட்டுக்கொடுக்க எப்போதும், இப்போதும் தயார். கையும் இல்லாமல், மொட்டும் இல்லாமல் ஒரு பொது சின்னத்தில் கோட்டா இறங்க வேண்டும் என்பதே மைதிரியின் கோரிக்கை. ஆகவே இங்கே “தாயார்-கட்சியின்” சின்னத்தை விட்டுக்கொடுத்தல் என்ற பேச்சே எழ வாய்ப்பில்லை.

Link to comment
Share on other sites

12 minutes ago, goshan_che said:

இல்லை லாரா,

தலைப்பு இப்படி இருந்திருக்க வேண்டும்.

கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தயார். ஆனால் கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுக்க முடியாது - மைத்திரி.

நீங்கள் கூறுவது போல் தயார் என்பதை தான் தாயார் என எழுதியுள்ளார்கள் போலிருக்கு.

நீங்கள் முதலில் மைத்திரியின் தாயாரின் சின்னம் என எழுதியதால் நான் “தாயார்” கோணத்தில் வாசித்து பதிலளித்து விட்டேன்.

17 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்லும் சொல் தாய்கட்சி (இதில் இடையே “க்” வராது என்று நினைக்கிறேன்.

தாய் கட்சி என இடையில் இடைவெளி விட்டு எழுதும் போது இடையில் “க்” வராது. இடைவெளி விடாமல் சேர்த்து எழுதும் போது இடையில் “க்” வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Lara said:

நீங்கள் கூறுவது போல் தயார் என்பதை தான் தாயார் என எழுதியுள்ளார்கள் போலிருக்கு.

நீங்கள் முதலில் மைத்திரியின் தாயாரின் சின்னம் என எழுதியதால் நான் “தாயார்” கோணத்தில் வாசித்து பதிலளித்து விட்டேன்.

தாய் கட்சி என இடையில் இடைவெளி விட்டு எழுதும் போது இடையில் “க்” வராது. இடைவெளி விடாமல் சேர்த்து எழுதும் போது இடையில் “க்” வரும்.

நன்றி.

எனக்கு தெரிந்த தமிழ் புணர்ச்சி விதிகளின் படி, தாய்கட்சி என்றே வரும். 

என்னை விட பெரிய புணர்சி நிபுணர்கள் (தமிழ்புணர்ச்சியை சொன்னேன்) இங்கே இருக்கிறார்கள். பார்க்கலாம் யாராவது ஆதாரத்தோடு வருக்கிறார்களா என.

பிகு: கணணித் தமிழில் புணர்ச்சி விதிகளை கடைப்பிடிப்பது மிகவும் கடினம். குறிப்பாக, ரோமனைஸ்ட் முறையில் எழுதும் போது.

Link to comment
Share on other sites

34 minutes ago, goshan_che said:

தாயார், என்பதில் ஆர் விகுதி, இடை சொல்லாக வரும் போது அது ஒரு இயற்பெயரை அல்லவா குறிக்கும்?

தாயார் கட்சி என்பதன் அர்தம் mother’s party.

தாயார் கட்சி என்பதை இரு வகையில் பார்க்கலாம்.

1) தாயாரின் கட்சி

2) தாய் கட்சி 

தாயார் என்பது தாய் எனவும் அர்த்தம் கொள்ளலாம்.

எனது தாயார் - எனது தாய்

தாயார் பாடல்கள் - தாய்ப்பாடல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Lara said:

தாயார் கட்சி என்பதை இரு வகையில் பார்க்கலாம்.

1) தாயாரின் கட்சி

2) தாய் கட்சி 

தாயார் என்பது தாய் எனவும் அர்த்தம் கொள்ளலாம்.

எனது தாயார் - எனது தாய்

தாயார் பாடல்கள் - தாய்ப்பாடல்கள்

இல்லை மீரா,

எனது தாயார், என்பதில் ஆர் விகுதியை இடைச்சொல்லாக சேர்க்கும் போது, அது இயற்பெயரை மட்டுமே குறிக்கும். அதாவது “எனது தாயார்”  (my mother) என்ற அர்தத்தை மட்டுமே தரும்.  

தாய்கட்சி என்பது பொதுப்பெயர் (இயற்பெயர் அல்ல) எனவே இங்கே தாய்கட்சி (mother-party) எனும் அர்த்தத்தில்  தாயார்கட்சி என்ற சொல்லை பாவிக்க முடியாது.

சுருங்கச் சொல்லின், அனுர, சுனேத்திரா, சந்திரிகா மட்டுமே SLFP யை “தாயார்கட்சி” எனலாம். ஏனையோர்கு அது “தாய்கட்சி” மட்டுமே.

Link to comment
Share on other sites

46 minutes ago, goshan_che said:

நன்றி.

எனக்கு தெரிந்த தமிழ் புணர்ச்சி விதிகளின் படி, தாய்கட்சி என்றே வரும். 

தாய் கட்சி - தாய்க்கட்சி

தாய் பாசம் - தாய்ப்பாசம்

தாய் பால் - தாய்ப்பால்

வாய் சொல் - வாய்ச்சொல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Lara said:

தாய் கட்சி - தாய்க்கட்சி

தாய் பாசம் - தாய்ப்பாசம்

தாய் பால் - தாய்ப்பால்

வாய் சொல் - வாய்ச்சொல்

இங்கே: கவனிக்க வேண்டியது நிலைச்சொல் என்ன எழுத்தில் முடிகிறது என்பதும், வரும் சொல்லின் முதல் உயிர்-மெய் வேர் எழுத்து என்ன என்பதும்.

1. நான் இது ஒரு இயல்புப்புணர்சி தாய்கட்சி என்கிறேன்.

2. நீங்கள் இல்லை இது ஒரு தோன்றல் விகாரம் (க் சேர்வதால்). தாய்க்கட்சி என்கிறீர்கள்.

நிலைச் சொல் ய் இல் முடிந்து, வரும் சொல் க் இல் தொடங்கினால் தோன்றல் விகாரம் இல்லை என நான் படித்த ஞாபகம்.

கீழே உள்ள பட்டியலும் அதை உறுதி செய்கிறது. ஆனால் இதன் நம்பகம் தெரியவில்லை.

நீங்கள் மேற்கோள் காட்டிய சொற்களும் உங்கள் கருத்தை ஆமோதிக்கிறன என்பதும் மறுப்பதற்கில்லை.

large.BC2B38C4-BC13-404C-868F-2FF4C408973A.jpeg.066ad9d6d69858bd146da628dd7e5de9.jpeg 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகு: தமிழிலக்கணத்தை நான் முறையாக கற்கவில்லை. சும்மா அங்கே இங்கே வாசித்த அரைகுறை அறிவுதான். உங்களின் தமிழ்ப் புலமையின் பின்புலம் எனக்குத் தெரியாது. சிலவேளை நீங்கள் தமிழ் எம் ஏ ஆக இருக்க நான் உங்களுடன் முட்டி மோதுகிறேனோ தெரியவில்லை. 😂

இங்கே வேறு ஏதும் விதிகள், அல்லது விதி விலக்குகள் செயல்பாட்டில் இருக்க கூடும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பிழம்பு said:
1 Min Read
September 29, 2019
Maithri-Mahinda.jpg?zoom=1.2100000262260
 

நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை என ராஜபக்ஸக்களுக்கு தெளிவாகக் கூறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருணாகலில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ, கோத்தாபய ராஜபக்ஸ மற்றும் பசில் ராஜபக்ஸ ஆகியோர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் என்னை சந்தித்து பொதுஜன பெரமுன – சுதந்திர கட்சி கூட்டணி தொடர்பில் கலந்துரையாடினார்கள். அதன் போது பரந்துபட்ட கூட்டணியாக கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்க தாயார் என்றாலும், கட்சியின் சின்னத்தை விட்டுக் கொடுத்து ஆதரவளிக்க தயாரில்லை என்று தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் காணப்படும் பிரதான கட்சிகளில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாத்திரமே மக்களின் பிரச்சினைகள் குறித்து சிந்தித்து செயற்படுகின்றது. எனவே கட்சியின் தனித்துவத்தை காட்டிக் கொடுத்து தாம் யாருக்கும் ஆதவளிக்கப் போவதில்லை. ஆனால் நவம்பர் 16 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலின் பின் சுதந்திர கட்சி இன்றி இந்த நாட்டுக்கு அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

ஹல்லோ மிஸ்டர் பிழம்பு
இந்தச் செய்தியின் மூலம் எது  என அறியத்  தாருங்கள்
இல்லையேல் மட்டுறுத்தினர்கள்   தயார் நிலையில் உள்ளார்கள் 😂😂

தாயா தாயாரை    தயாரா  தாமரை ஒரே குழப்பமாக உள்ளது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாத்தியார் said:

ஹல்லோ மிஸ்டர் பிழம்பு
இந்தச் செய்தியின் மூலம் எது  என அறியத்  தாருங்கள்
இல்லையேல் மட்டுறுத்தினர்கள்   தயார் நிலையில் உள்ளார்கள் 😂😂

தாயா தாயாரை    தயாரா  தாமரை ஒரே குழப்பமாக உள்ளது 😂

 வாத்தியாரையே குழப்பீட்டமா? விளங்கின மாரித்தான் 😂

Link to comment
Share on other sites

49 minutes ago, வாத்தியார் said:

ஹல்லோ மிஸ்டர் பிழம்பு
இந்தச் செய்தியின் மூலம் எது  என அறியத்  தாருங்கள்
இல்லையேல் மட்டுறுத்தினர்கள்   தயார் நிலையில் உள்ளார்கள் 😂😂

தாயா தாயாரை    தயாரா  தாமரை ஒரே குழப்பமாக உள்ளது 😂

அவர் அவசரமாக கள்ளுக் கடை பக்கம் ஒதுங்கும் போது பதிந்த செய்தியாம்...மூலம் குறிப்பிட தவறி விட்டாராம், உது தான் மூலமாம் என்று வட்ஸப் இல் தகவல் அனுப்பியுள்ளார். 

மூலம்

http://globaltamilnews.net/2019/131387/

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

இங்கே: கவனிக்க வேண்டியது நிலைச்சொல் என்ன எழுத்தில் முடிகிறது என்பதும், வரும் சொல்லின் முதல் உயிர்-மெய் வேர் எழுத்து என்ன என்பதும்.

1. நான் இது ஒரு இயல்புப்புணர்சி தாய்கட்சி என்கிறேன்.

2. நீங்கள் இல்லை இது ஒரு தோன்றல் விகாரம் (க் சேர்வதால்). தாய்க்கட்சி என்கிறீர்கள்.

நிலைச் சொல் ய் இல் முடிந்து, வரும் சொல் க் இல் தொடங்கினால் தோன்றல் விகாரம் இல்லை என நான் படித்த ஞாபகம்.

கீழே உள்ள பட்டியலும் அதை உறுதி செய்கிறது. ஆனால் இதன் நம்பகம் தெரியவில்லை.

நீங்கள் இணைத்த அட்டவணையில் ய் இல் முடிந்து க் இல் தொடங்குவது மட்டுமல்ல, ச், த், ப் என எவற்றில் தொடங்குவதற்கும் உதாரணம் காட்டப்படவில்லை. 

பேய் காற்று - பேய்க்காற்று

செவ்வாய் கிழமை - செவ்வாய்க்கிழமை 

இவை ய் இல் முடிந்து க் இல் ஆரம்பிப்பவை.

பி.கு: நானும் தமிழ் இலக்கணத்தை முறையாக கற்றதில்லை. ஏதோ தெரிந்தவற்றை வைத்து எழுதுகிறேன்.

1 hour ago, goshan_che said:

இல்லை மீரா,

நான் மீரா அல்ல, லாரா. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Lara said:

நீங்கள் இணைத்த அட்டவணையில் ய் இல் முடிந்து க் இல் தொடங்குவது மட்டுமல்ல, ச், த், ப் என எவற்றில் தொடங்குவதற்கும் உதாரணம் காட்டப்படவில்லை. 

பேய் காற்று - பேய்க்காற்று

செவ்வாய் கிழமை - செவ்வாய்க்கிழமை 

இவை ய் இல் முடிந்து க் இல் ஆரம்பிப்பவை.

பி.கு: நானும் தமிழ் இலக்கணத்தை முறையாக கற்றதில்லை. ஏதோ தெரிந்தவற்றை வைத்து எழுதுகிறேன்.

நான் மீரா அல்ல, லாரா. 😊

ம்... அது முழுமை அடையாத பட்டியல் போலும்.

யோசிச்சு பார்க்க நீங்கள் சொல்வதுதான் சரி போல படுகிறது.

இந்த குழப்பத்தில் எனக்கு லாரா, மீராவும் குழம்பிவிட்டது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ம்... அது முழுமை அடையாத பட்டியல் போலும்.

யோசிச்சு பார்க்க நீங்கள் சொல்வதுதான் சரி போல படுகிறது.

இந்த குழப்பத்தில் எனக்கு லாரா, மீராவும் குழம்பிவிட்டது 😂

லாரா மீரா யாராக இருந்தாலும் எல்லோரும் என்னுடைய தமிழ் படிப்போம் திரியை கவனிக்கவில்லை என்று நினைக்கின்றேன்

கோஷான் நான் பல திரிகளிலும் உங்களுடன் தான்

உங்களின் கருத்துக்களை எதிர்க்கவென்றே சில பேர் தயாராக இருக்கின்றார்கள்

கவனிக்க
தாயாராக  அல்ல    
தயாராக  😎

26 minutes ago, நிழலி said:

அவர் அவசரமாக கள்ளுக் கடை பக்கம் ஒதுங்கும் போது பதிந்த செய்தியாம்...மூலம் குறிப்பிட தவறி விட்டாராம், உது தான் மூலமாம் என்று வட்ஸப் இல் தகவல் அனுப்பியுள்ளார். 

மூலம்

http://globaltamilnews.net/2019/131387/

சரி சரி
பிழம்பரை விசாரித்ததாகச் சொல்லவும்  😁

Link to comment
Share on other sites

20 minutes ago, வாத்தியார் said:

லாரா மீரா யாராக இருந்தாலும் எல்லோரும் என்னுடைய தமிழ் படிப்போம் திரியை கவனிக்கவில்லை என்று நினைக்கின்றேன்

இணைப்பு தாருங்கள்.

Link to comment
Share on other sites

21 minutes ago, வாத்தியார் said:

கோஷான் நான் பல திரிகளிலும் உங்களுடன் தான்

உங்களின் கருத்துக்களை எதிர்க்கவென்றே சில பேர் தயாராக இருக்கின்றார்கள்

இதில் என்னையும் சேர்த்தா கூறுகிறீர்கள்? நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல. :grin:

தாய் கட்சி என்பது இடையில் இடைவெளி விட்டு தானே எழுதப்பட வேண்டும்?

இடைவெளி விடாமல் எழுதும் போது இடையில் க் சேர்க்கப்பட வேண்டும் தானே? (அது தோன்றல் விகாரமா அல்லது வேறு வழிமுறையா என்பது அடுத்த பிரச்சினை).

இதற்கு பதில் தாருங்கள். ப்ளீஸ்.

Link to comment
Share on other sites

வாத்தியாரிடம் கேள்வி கேட்டேன். அவர் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா தான் யாழுக்கு வருவார் போல. 😀

இவை சில இணையத்தளங்களில் உள்ள செய்திகளில் பார்த்தவை.

தாய் கட்சி என இடையில் இடைவெளி விட்டு எழுதப்படுதல்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டோரில், 16 பேர் தாய் கட்சி திரும்ப பச்சைக்கொடி.

https://m.dinamalar.com/detail.php?id=2037798

நாட்டில் 70-க்கும் மேற்பட்ட கட்சிகளை உருவாக்கிய தாய் கட்சி காங்கிரஸ்.

https://www.dailythanthi.com/amp/News/India/2019/05/13173225/congress-breakaways-and-how-theyve-performed-in-the.vpf

தாய்க்கட்சி என இடையில் இடைவெளி இல்லாமல் க் சேர்த்து எழுதப்படுதல்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாய்க்கட்சி.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமிழர்களின்-பிரச்சினையை-ஜக்கிய-நாடுகள்-வரை-கொண்டு-செல்ல-சுயேற்சைக்கு-முடியுமா/73-210247

கோஷான் எழுதிய தாய்கட்சி என்ற இடையில் இடைவெளியும் இல்லாத க் உம் இல்லாத ஒரு சொல்லை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

வாத்தியாரிடம் கேள்வி கேட்டேன். அவர் ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா தான் யாழுக்கு வருவார் போல. 😀

இவை சில இணையத்தளங்களில் உள்ள செய்திகளில் பார்த்தவை.

தாய் கட்சி என இடையில் இடைவெளி விட்டு எழுதப்படுதல்.

தகுதி நீக்கம் செய்யப்பட்டோரில், 16 பேர் தாய் கட்சி திரும்ப பச்சைக்கொடி.

https://m.dinamalar.com/detail.php?id=2037798

நாட்டில் 70-க்கும் மேற்பட்ட கட்சிகளை உருவாக்கிய தாய் கட்சி காங்கிரஸ்.

https://www.dailythanthi.com/amp/News/India/2019/05/13173225/congress-breakaways-and-how-theyve-performed-in-the.vpf

தாய்க்கட்சி என இடையில் இடைவெளி இல்லாமல் க் சேர்த்து எழுதப்படுதல்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாய்க்கட்சி.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/தமிழர்களின்-பிரச்சினையை-ஜக்கிய-நாடுகள்-வரை-கொண்டு-செல்ல-சுயேற்சைக்கு-முடியுமா/73-210247

கோஷான் எழுதிய தாய்கட்சி என்ற இடையில் இடைவெளியும் இல்லாத க் உம் இல்லாத ஒரு சொல்லை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

லாரா,

நீங்கள் சுட்டிய 3 தளங்களில் எழுதுபவர்களுக்கும் தமிழறிவு எங்களை விட மோசம் 😂 ஆகவே அவர்கள் எழுதுவது சரி என சொல்ல முடியாது.

இந்த இணைப்பைப் பாருங்கள். முகபுத்தகம்தான் ஆனால் தெளிவான விளக்கமாகத் தெரிகிறது.

வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்களை பற்றிய விதிகளை பார்க்கவும்.

குறிப்பாக வல்லினம் மிகா இடங்கள் - விதி/எடுத்துக்காட்டு 12.

https://m.facebook.com/notes/தமிழ்-tamil/புணர்ச்சி-விதிகள்-தமிழ்-இலக்கணம்/424480224709/ 

large.4E145826-62EF-4830-B591-8DDC3B3042BD.jpeg.cc2498fc2bb4376390e96f5e4dc2bc57.jpeg

பிகு: தமிழ் புணர்ச்சியில், சொற்கள் எப்போதும், புணர்ச்சியின் பின் சேர்த்து எழுதப்படும் என்பதும் இல்லை.

எனவே நான் நினைக்கிறேன். 

தாய்+ கட்சி = தாய் கட்சி.

தாய்க்கட்சி அல்லது தாய்கட்சி என எழுதுவது வழுவானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/29/2019 at 3:11 PM, goshan_che said:

நன்றி.

எனக்கு தெரிந்த தமிழ் புணர்ச்சி விதிகளின் படி, தாய்கட்சி என்றே வரும். 

என்னை விட பெரிய புணர்சி நிபுணர்கள் (தமிழ்புணர்ச்சியை சொன்னேன்) இங்கே இருக்கிறார்கள். பார்க்கலாம் யாராவது ஆதாரத்தோடு வருக்கிறார்களா என.

பிகு: கணணித் தமிழில் புணர்ச்சி விதிகளை கடைப்பிடிப்பது மிகவும் கடினம். குறிப்பாக, ரோமனைஸ்ட் முறையில் எழுதும் போது.

சகி + கலா = ஷக்கீலா 
என்றுதான் சேரநாட்டுப்பக்கம் வருகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

சகி + கலா = ஷக்கீலா 
என்றுதான் சேரநாட்டுப்பக்கம் வருகிறது 

 

ஏன் லேட்? 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.