Jump to content

அண்டாகாகசம் அபூக்காகசம் திறந்திடு கூசா


Recommended Posts

அண்டாகாகசம் அபூக்காகசம் திறந்திடு கூசா

இந்திய புலனாய்வு துறை மற்றும் சி.பி.ஜ தமிழ்நாடு காவல்துறையுடன் இணைந்து தமிழ்நாட்டு மக்களிற்காக வழங்கும் மாபெரும் மாஜாயால மந்திர கண்கட்டிவித்தை நிகழ்ச்சி

அனுசரனை வழங்குவோர் இலங்கை புலனாய்வு துறை

காணத்தவறாதீர்கள் . வாருங்கள் வந்து பாருங்கள் .சூடு. .திகில்.மர்மம் .மந்திரம்.மாயம். அத்தனை அம்சங்களையும் அடக்கிய மாபெரும் சுவாரசியமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறார் எம்.கே. நாயானவன்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து சிறப்பிப்பார்.

உங்கள் கண்முன்னே அலைகடலை வரவழைத்து அதில் ஒரு வள்ளம் அதில் சில மனிதர்கள் அவர்களை சிங்களவராக்குவார்கள் பின்னர் அவர்களை தமிழர்களாக்கவார்கள். மீண்டும் அவர்களில் பாதியை ஈழ தமிழர்களாகவும் மீதியை இந்திய தமிழர்களாகவும் மாற்றுவார்கள்.அந்த வள்ளத்தில் பயங்கர ஆயுதங்களை வரவழைப்பார்கள் .மீண்டும் அதை மறையவைப்பார்கள்.இறுதியில் அந்த வள்ளத்தில் இருந்தவர்களை கடற்புலிகளாக மாற்றும் அதிசயங்களை பார்த்து மகிழலாம். அதுமட்டுமல்ல சைக்கிள் போல்சுகள் ஏவுகணைகளாக மாறும் . ஏலக்காய் ஏ.கே யாக கிப்ஸ் சாரம் கிரைனைற்றாக.பட்டுசேலை பயங்கர வெடிகுண்டாக இப்படி பற்பல மாஜா யால நிகழ்ச்சிகள் தொடர்ந்தும் இடம்பெறும்.இடையிடையே சிறுவர்களை மகிழ்விப்பதற்காக இந்தியாவின் சிறந்த நகைசுவை நாயகர்களான அண்டபுழுகு சு. சுவாமி மற்றும் ஆகாச புழுகு சுதர்சனம் ஆகியோரின் கலக்கல் காமெடி நிகழ்ச்சியும் இடைவேளை சிறப்பு நிகழ்ச்சியாக கவர்ச்சி கன்னி ஜெ.. அவர்கள் "வருது வருது விலகு விலகு வேங்கை வெளியெ வருது" என்கிற பாடலிற்கு குலுக்கல் நடனமும் இடம்பெறும். எனவே ஒவ்வொரு தமிழனும் தவறாமல் பார்த்து உங்கள் தலை முடியை பிய்க்கலாம் தலையில் முடிஇல்லாதவர்கள் உடலில் முடிஉள்ளஇடத்தில் பிய்க்கலாம்

[இந்திய காவல்துறையினரின் அண்மைய அறிக்கைகள் போலவே சத்தியமா இதுவும் கற்பனை தானுங்கோ :unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ யின் குலுக்கலா? சாமி!! சுனாமி எச்சரிக்கை மையத்தை உசார் படுத்துங்கோ!

Link to comment
Share on other sites

சே... சாத்து,

நானும் கள்ளக் கொப்பியில பாக்காம தியேட்டரில பாப்பம் எண்டா.... கடைசில கற்பனை எண்டு போட்டுக்..........

Link to comment
Share on other sites

முக்கியமான பாடலைச் சேர்க்க மறந்த சாத்திரியாரை வன்மையாக கண்டிக்கிறோம்..

நம்ம ஜெ பாடுகிறார் (கருணாநிதியை பார்த்து...)

சிங்சா சிங்சா

படகு வருது சிங்குச்சா

புலி வருது சிங்குச்சா

கருணாநிதி சிங்குச்சா

புலி வளர்க்கிறார் சிங்குச்சா...

வண்ண வண்ண பிளேனுங்க

குண்டு போடும் பிளேனுங்க

புலிகளுக்கு போறதுக்கு

உதவிபண்ணுறாருங்க...

புலிய வளக்கிறாருங்க

உடனே கருணாநிதி பயந்துபோய் போற போக்கைப்பாத்தா நாமளும் பொடாவுல களி திங்க வேண்டியதுதான் என உசாராகிறார்.. எதிர்ப்பாட்டு தொடங்குகிறது........

கடலுக்குள்ள படகு வந்தல்லோ

வந்தல்லோ வந்தல்லோ

உளவுத்துறை துரத்தி பிடிச்சல்லோ

பிடிச்சல்லோ பிடிச்சல்லோ

சிங்களவன் தமிழனா ஆயல்லோ ஆயல்லோ

எலி புலியா போச்செல்லோ போச்செல்லோ

சு.சுவாமி குறுக்கிடுகிறார்....

விடுதலைப் புலிகளுக்கும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட

கிரகத்தில் உள்ளவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது..

எல்லோரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள்...................

:P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்திய திரைப்படதுறையினர் இனி மேல் மர்ம படங்கள் எடுப்பதானால் இந்திய புலனாய்வுத்துறை நாடலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.