Jump to content

மஹா பாரத தேடல் அலெக்ஸாண்டர் இரகசியம்


Recommended Posts

அலெக்ஸாண்டரின் இந்தியா நோக்கிய படையெடுப்பு உண்மையாகவே அவனின் உலகத்தை பிடிக்கும் ஆசையின் பகுதியா? அல்லது வேறு ஏதோ ஒரு இரகசியத்தை தேடி வந்தானா?  அப்படி 25000 மைல்கள் வரை வந்தவன் சிந்து நதி தீரம்(இன்றைய பஞ்சாப் /பாகிஸ்தான் பகுதிகள்?) உடன் திரும்பியதற்கான காரணம் என்ன?  அவன் தேடி வந்த இரகசியத்தை அவன் கண்டறிந்து அதை அடைந்து விட்டதனாலா? அல்லது அவனின் படையினரின் எதிர்ப்பா? களைப்பா? 

#######################

ஒலிம்பியாஸிடம் ( அலெக்ஸாண்டரின் அம்மா)  தூரதேசத்து துறவி ஒருவரினால் 5 கட்டளைகள் எழுதப்பட்ட கன சதுரமும் ஆட்டு தோலில் எழுதிய குறிப்பு மற்றும் வரை படங்களும் கொடுத்து இவற்றை அவன் சரியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் அப்படி நிறைவேற்றுவானாயின் அவள் எதிர்பார்ப்பதை அவன் அடைவான் அதில் ஏதும் தவறுகள் வருமிடத்து பெரும் விளைவுகள் ஏற்படுமெனவும் எச்சரிக்க படுகிறாள் பாரசீக படையெடுப்பற்கு தயாராகும் அலெக்ஸ்சாண்டரிடம் ஒலிம்பியாஸ் இதனை கொடுக்கிறாள்..அதுவே அவனை இந்திய நோக்கி படையெடுக்க தூண்டுதலாக இருந்திருக்க கூடும்..

#########################
சாகா வரம் பெற வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய மந்தரமலை மத்தாகவும் வாசுகியை கயிறாகவும் பயன்படுத்துகின்றனர் வாசுகியின் நஞ்சால் துரத்தப்படும் இவர்கள் ஆதி சிவன்/ உருத்திரனிடம் தஞ்சமடைகின்றனர் ஆதி சிவன் நஞ்சை உண்டு நீலகண்டர் ஆகிறார் அமிர்தத்தை பெறும் சண்டையில்   மகாவிஷ்ணு மோகினி உருவம் கொண்டு அசுரர்களை மயக்கி தேவர்களிற்கே அமிர்தம் முழுவதையும் கிடைக்குமாறு செய்கிறார் .. இதன்மூலம் தேவர்கள் சாகாவரம்/ என்றும் இளமை  பெறுகின்றனர்...இது மகாபாரத ஆதி பர்வத்தில் உள்ள கதை...(ஆண்டு 3 சமயபாடத்திலும் எங்களுக்கிருந்த்து)

############################
அமிர்தம் என்பது சாகாவரம் கொடுக்கும் ஒரு பண்டம் எனில் சாகாவரம் என்பது முதுமையடைவதிலிருந்து தடுத்தல்
 எங்கள் உடலில் உள்ளமரபணுக்கூறுகளை அப்படி தடுக்ககூடியதான புரதங்களை உற்பத்தி செய்ய கூடியதாக  சரியாக வேலை செய்ய வைத்தல் (P53 எனும் புரதம் கான்சர் செல் களை கொல்லுகிறதாம், இப்படியே, அல்ஷைமர் நீரிழிவு, மற்றும் வேறு
நோய்களை  கட்டுபடுத்தும் புரதங்களை உற்பத்தி செய்யக்கூடிய மரபணுக்கள்  நிறையவே இருக்கன்றனவாம்.. அவற்றின் சிதைவு அல்லது செயல்படா தன்மை தான் இந்த நோய்கள் நம்மை பாதிக்க செய்ய காரணமாம் , அவற்றை வெளித்தூண்டல் மூலம் செயற்பட() வைக்க முடியுமாக இருப்பின் இவ்வகையான நோய்களிலிருந்து எம்மால்  தப்பிக்க முடியுமாம் ..

உடலில் உள்ள இப்படியான புரதங்களை உற்பத்தி செய்ய மரபணுக்களிற்கு தூண்டலை கொடுக்க  வெளியிலிருந்து கொடுக்கப்படும் ஒரு வகையான சம அளவுகளில் கலக்கப்பட்ட  இரசாயன கரைசலே அமிர்தமாக இருக்க கூடும் என்கிறார் 
#########################

ஒலிம்பியாஸிடம் கொடுக்கபட்டது இதை எப்படி எங்கு பெற வேண்டும் என எழுதப.பட்ட கட்டளைகள் அடங்கிய பகுதியே அதை அவள் அலெக்ஸாண்டரிடம் கொடுத்து அதை அடைந்து வருமாறு கூறுகிறாள்...அலெக்ஸாண்டரும் அதை பின் பற்றுகிறான்.. அவன் அமிரத்தை  அடைந்தானா இல்லையா? 

 

இங்கு நான் எழுதியிருப்பது சில பகுதிகள் பற்றிய மட்டுமே அன்று  இன்று என மாறி மாறி வரும் ஒரு த்ரில்லர் இது இன்று நடைபெறும் எதையும் நான் இங்கு எழுதவில்லை, தொன்மங்கள் பற்றி மட்டும் எழுதியிருக்கிறேன்...

https://images.app.goo.gl/v3NN4iPPsPncyiEF8

https://images.app.goo.gl/v3NN4iPPsPncyiEF8

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.