Jump to content

எமக்கும் இந்த நிலை வரலாம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

EMOTIONAL: "முதியோர் இல்லம் தான் BEST!" Life Story of Mothers in Old Age Home.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளை படிபடி என்று எவ்வளவோ கஸ்டப்பட்டு படிக்க வைத்து உத்தியோகம் பார்க்கும் போது பெற்றோர்களுடன் நேரம் போட முடியாது கூடவே இருந்து பார்க்க முடியாமல் போன பிள்ளைகளும் என்ன தான் செய்யலாம்.

எனக்கும் இந்த நிலை வரலாம்.திடீர்ரென்று கண் மூடும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
எந்த வயதுக்காரராக இருந்தாலும் தனது வயதுக்காரருடன் கதைத்து சிரித்து பொழுதை களிப்பதும் ஒரு சுகமே.

இணைப்புக்கு நன்றி குமாரசாமி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதுமை என்பது ஒரு சுமைதான், அது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று. இளமையில் அதை மறந்து விடுகின்றோம் அல்லது நினைக்க பயப்படுகின்றோம் அதுதான் நிஜம்.......!  🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதுமை அடைகிறோம் என உணரும்போதே எதிர்காலம் பற்றிய அங்கலாய்ப்பு  மனதிற்குள் ஆரம்பித்துவிடும். உண்மையில் இந்த முதுமை என்பதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியானதுதான். பொதுவாக ஆண்களுக்கு அநேகமாக துணைவி இருந்து பராமரித்து அவர்கள் கடைசிக்காலம்வரை குழந்தைமாதிரி பாதுகாத்துவிடுவார். பெண்கள்தான் மிகவும் பாவப்பட்டவர்கள் உடல் இயக்கம் உறுதியாக இருக்கும்வரை குடும்பத்திற்காக உழைத்து களைத்தவர்களை அவர்களின் இறுதிகாலத்தில் குழந்தைபோல் கவனிக்க யாருமே இருப்பதில்லை. பிள்ளைகள் வெறுக்கிறார்கள் என்பதல்ல இன்றைய இயந்திரத்தனமான பொருளாதாரத்தைத் தேடி ஓடும் வாழ்க்கையில் சுமையாகும் முதியவர்களை கவனிப்பதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இயலாமை, கவனிக்க நேரமில்லாமை ஒருங்கே சேர இயல்பாக கோபத்தை வெறுப்பாக்கி முதியவர்கள் நோக்கி வெளிப்படுத்திவிடுவது சூழலாக இருக்கிறது. அண்மையில் எனக்கு வேண்டப்பட்ட ஒருவர் ஒரு முதியோர் இல்லம் அமைப்பது தொடர்பாக என்னிடம் பேசியபோது தனிய ஆண்களுக்கு மட்டும் தான் அத்தகைய இல்லம் அமைக்க இருப்பதாக தெரிவித்தபோது அவருடைய மட்டுப்படுத்தப்பட்ட சிந்தனையை விரிவாக்க பரிந்துரைத்தேன். பெண்கள் தொடர்பான நியாயமான புரிதல்களை அவருக்கு எடுத்துரைத்து பெண்களுக்கும் சேர்த்து அமைக்க கேட்டுக்கொண்டேன். பெண்கள் தொடர்பான இல்லத்திற்கு என்னை வந்து பொறுப்பெடுத்துச் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார். காலம் கைகொடுக்கும்போது நிச்சயமாக அப்பொறுப்பை ஏற்று செயற்பட எண்ணியுள்ளேன். எதிர்காலத்தில் இன்றைய "யுத்"களாக தங்களைக் காட்டி தில்லாக உலாவும் யாழ் உறவுகளும் அவ்வில்லத்தில் சேரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதுமை
மனைவி இருக்கும் போதே நான் போய் சேர்ந்திட வேண்டும் என்ற பேராசை எனக்கிருந்தாலும்..
நான் இல்லாத நேரம் என் மனைவி கஷ்ரப்பட்டு விடுவாரோ என்ற பயமும் அச்சமும் தலையில் பாரமாக இருக்கின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெற்ற தாயை சாலையில் வீசிச் சென்ற கொடூர மகன்கள்..!

mom.png

ஜெயங்கொண்டம் அருகே பெற்ற தாயை கொடூர மனம் படைத்த மகன்கள் சாலையில் வீசி எறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கம்பர் தெருவை சேர்ந்தவர்  பட்டம்மாள். 95 வயதான இந்த மூதாட்டியின் கணவர் இறந்து விட்ட நிலையில் மகன்களுடன் வசித்து வந்தார். இவருக்கு ஸ்வீட் கடை நடத்தி வரும் சண்முகம், ஓய்வு பெற்ற ஆசிரியரான சதாசிவம் என இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை தனித் தனியே வசித்து வரும் மகன்கள் இருவரும் சரியாக கவனிக்காததால் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதியோர் இல்லம் ஒன்றில் சேர்த்துள்ளார். அங்கிருந்து மகன்களைப் பார்ப்பதற்காக மீண்டும் வீட்டிற்கு வந்த மூதாட்டி பட்டம்மாளை மகன்கள் இருவரும் துரத்தியுள்ளனர். இதன்பின் மகள் சகுந்தலாவின் வீட்டிற்கு மூதாட்டி பட்டம்மாள் சென்றுள்ளார்.

தாயை சில நாட்கள் வைத்திருந்த மகள் சகுந்தலா மீண்டும் சகோதரர் சண்முகத்தின் வீட்டுத் திண்ணையில் கொண்டு போய் போட்டுவிட்டு வந்துள்ளார். ஆத்திரமடைந்த சண்முகம் மற்றொரு மகனான சதாசிவம் வீட்டு வாசலில் மூதாட்டி பட்டம்மாளை போட்டுவிட்டு வந்துள்ளார். இதையடுத்து சதாசிவம் தாய் பட்டம்மாளை சாலையில் வீசிச் சென்று விட அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இரு மகன்கள் மீதும் பொதுமக்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/3/10/2019/sons-left-mother-road?fbclid=IwAR1lbBjHNH8y6fP3o2JGwSACGXgJfbxR_zS6Tr41xailNsTUONhKbdhfXm4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image result for ரோபோ

இது நான் தான் என்று சொன்னால் குமார சாமி அண்ண நம்பவா போறார் 

முதுமை என்பது தவிர்க்க முடியாதது மரணம் என்பதை எப்படி மனது ஏற்றுக்கொள்ள மறுக்கிறதோ அதைப்போலவே முதுமையும் எம்மை ஆட்கொள்ளும் போது ஏற்றுக்கொள்ள மறுக்கிறது ஆடி அடங்கும் வாழ்க்கையும் ஆடிடவும் வேண்டும் அடங்கிடவும் வேண்டும் . 

Link to comment
Share on other sites

பிள்ளைகள் பெற்றோரை வயதான காலத்தில் தன் வீட்டில் வைத்து பராமரித்துப் பாரக்கவேணும் என்பதை உணர்ச்சிவசமாக அணுகுவது  எம்மில் பலரிடம் காண முடியும்.. நடமுறையில் அது சாத்தியம் இல்லாத போது அது அறம் தவறிய செயலாகாது. நாம் எப்படி குழநதைகளை அதற்கான பராமரிப்பு இடங்களில் கொண்டுபோய் விட்டு வேலைக்கு சென்று மாலையில் வீடு கூட்டி வருகின்றோமோ அதே போல் முதியவர்களை அவர்களுக்கான பராமரிப்பு இல்லங்களில் வைத்து பராமரிப்பதே ஆரோக்கியமானது. குழந்தையானாலும் சரி முதியவரானாலும் சரி என்னுமொருவரை சார்ந்து இருக்கும் நிலையில் அதை ஏற்றுக்கொள்ள சந்தரப்பம் அமையவேண்டும். இந்த இயந்திர உலகில் வேலை வீடு என்று தன்னையே பராமரிக்க முடியாத நிலையில் பலரும் அதை நோக்கி மீதமுள்ளோரும் ஓடுகின்றோம். இதில் எப்படி தன்னை சார்ந்திருபவர்களை பராமரிப்பது என்ற பிரச்சனை உள்ளது. இவை திட்டமிட்டு அறிவு பூர்வமாக அணுகப்படவேண்டும். தரமான முதியோர் இல்லங்களை உருவாக்குவதும் அதற்கான செலவை முன்கூட்டியே சேமிப்பதும். அடிக்கடி போய் வரக் கூடிய தூரத்தில் அமைப்பதும் என இக் கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு நகர்வதே ஆரோக்கியமானது. எமக்கு வயதாகும் போது நாமாகவே பிள்ளைகளை சார்திருக்காமல் நகர்ந்துவிடவேண்டும். அதை எமது பிள்ளைகளும் தெடரவேண்டும்.  இவை எல்லாம் தவறு அறம் கிடையாது. முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விடுறவன் எல்லாம் பிள்ளையா என்று உணர்சிவசப்பட்டு கத்திக்கொண்டிருந்தால் அநாதரவாய்  முதேயோர்கள் தெருவில் கிடப்பார்கள் பலர் வாய்கரிசி போட்டுதல் என்ற பெயரில் கொல்லப்படுவார்கள். என்னும் பல வளிகளில் கொல்லப்படுவார்கள். நடமுறைக்கு சாததியமற்ற இடங்களில் கலாச்சாரம் பண்பாடு கௌரவம் அறம் என உணர்சிவசமாக திணிக்கப்படும் விசயங்களுக்கு எதிர்வினை மிக கேவலமாக இருக்கும். 

Link to comment
Share on other sites

1 hour ago, சண்டமாருதன் said:

பிள்ளைகள் பெற்றோரை வயதான காலத்தில் தன் வீட்டில் வைத்து பராமரித்துப் பாரக்கவேணும் என்பதை உணர்ச்சிவசமாக அணுகுவது  எம்மில் பலரிடம் காண முடியும்.. நடமுறையில் அது சாத்தியம் இல்லாத போது அது அறம் தவறிய செயலாகாது. நாம் எப்படி குழநதைகளை அதற்கான பராமரிப்பு இடங்களில் கொண்டுபோய் விட்டு வேலைக்கு சென்று மாலையில் வீடு கூட்டி வருகின்றோமோ அதே போல் முதியவர்களை அவர்களுக்கான பராமரிப்பு இல்லங்களில் வைத்து பராமரிப்பதே ஆரோக்கியமானது. குழந்தையானாலும் சரி முதியவரானாலும் சரி என்னுமொருவரை சார்ந்து இருக்கும் நிலையில் அதை ஏற்றுக்கொள்ள சந்தரப்பம் அமையவேண்டும். இந்த இயந்திர உலகில் வேலை வீடு என்று தன்னையே பராமரிக்க முடியாத நிலையில் பலரும் அதை நோக்கி மீதமுள்ளோரும் ஓடுகின்றோம். இதில் எப்படி தன்னை சார்ந்திருபவர்களை பராமரிப்பது என்ற பிரச்சனை உள்ளது. இவை திட்டமிட்டு அறிவு பூர்வமாக அணுகப்படவேண்டும். தரமான முதியோர் இல்லங்களை உருவாக்குவதும் அதற்கான செலவை முன்கூட்டியே சேமிப்பதும். அடிக்கடி போய் வரக் கூடிய தூரத்தில் அமைப்பதும் என இக் கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு நகர்வதே ஆரோக்கியமானது. எமக்கு வயதாகும் போது நாமாகவே பிள்ளைகளை சார்திருக்காமல் நகர்ந்துவிடவேண்டும். அதை எமது பிள்ளைகளும் தெடரவேண்டும்.  இவை எல்லாம் தவறு அறம் கிடையாது. முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விடுறவன் எல்லாம் பிள்ளையா என்று உணர்சிவசப்பட்டு கத்திக்கொண்டிருந்தால் அநாதரவாய்  முதேயோர்கள் தெருவில் கிடப்பார்கள் பலர் வாய்கரிசி போட்டுதல் என்ற பெயரில் கொல்லப்படுவார்கள். என்னும் பல வளிகளில் கொல்லப்படுவார்கள். நடமுறைக்கு சாததியமற்ற இடங்களில் கலாச்சாரம் பண்பாடு கௌரவம் அறம் என உணர்சிவசமாக திணிக்கப்படும் விசயங்களுக்கு எதிர்வினை மிக கேவலமாக இருக்கும். 

ஜதார்தத பூர்வமான சிந்திக்க வேண்டிய சிறந்த கருத்து. உண்மையில் நடைமுறைச்சாத்தியமற்றது என்று தெரிந்தும் உணர்ச்சி பூர்வமாக பேசுவதே எமது வழமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிவரும் காலங்களில் முதியோர்இல்லங்களில் பெற்றோரைக் கொண்டுசென்றது விடுவது அதிகரிக்கத்தான் போகிறது. அதை முற்றுமுழுதாகத் தவறென்று கூற முடியாது. ஆனாலும் நாமும் எம் மனதை இப்போதே தயார்படுத்துவதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். வயதுபோன காலத்தில் கண்ட இடங்களிலும் போய் இருக்காது நாமே கொஞ்சப்பேர் சேர்ந்து எமக்கான இடத்தைத் தயார்படுத்தி மகிழ்வாக்க் கழிக்கலாமே என்னும் ஆதங்கத்தில் எழும் சிந்தனை தொடர்பாக பிள்ளைகளுடன் கதைக்கும்போது நாங்கள் உங்களை அங்கெல்லாம் விடமாட்டோம் என்று அவர்கள் ஆணித்தரமாக்க் கூறினாலும் எம் சமூகத்து முதியோருக்கு ஏற்றதுபோல் எதாவது செய்யவேண்டும் என்ற ஆசை எனக்குள் விழுதுவிட்டபடிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் சிக்கலான விடயம். எதையும் எதிர்கொள்ள, அதிலும் உள்ள இன்பங்களை துய்க்க பழகிகொள்ள வேண்டியதுதான்.

நான் இப்பவே ஓல்டேஜ் கோமுக்கு போக ரெடி 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.