Jump to content

றிசாத்தின் முயற்சியில், யாழ் முஸ்லிம்களுக்கு 250 வீடுகள் - பாடுபட்ட சகலருக்கும் நன்றி கூறுகிறார் நிலாம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 பாறுக் ஷிஹான் -
 
யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த முஸ்லீம் மக்களிற்கு கிடைக்கப்பெற்ற வீட்டுத்திட்டம் அம்மக்களிற்கு ஓரளவு ஆறுதலளிப்பதாக உள்ளது எனவும்    பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக யாழ்  மாநகர சபை உறுப்பினர் கே.எம் நியாஸ்( நிலாம்) தெரிவித்துள்ளார்.
 
யாழ்ப்பாண மாவட்டத்தில்  250 முஸ்லிம் குடும்பங்களிற்கான வீட்டுத் திட்டம் அமைப்பதற்கு  அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதை அறிந்தேன்.இந்த வீட்டுத்திட்டத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் றிசாட் பதியுதீன் மேற்கொண்ட துரித முயற்சியினால் கிடைக்கப்பெற்றுள்ளது.கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் எமது கட்சியின் தலைவர் மிக நிதானமாக சில விடங்களை எனக்கு உத்தரவாக வழங்கி இருந்தார்.அதற்கிணங்க காணிகள் பெறப்பட்டு இன்று இத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படவுள்ளது.
 
 இரண்டு மாடிகளை கொண்ட இரட்டை வீடுகளாக அமையவுள்ள குறித்த வீடுகள் புதிய சோனகத்தெரு பகுதியில் அமையவுள்ளன.ஒவ்வொரு வீடும் 600 சதுர அடிகளை கொண்டிருக்கும்.
 
இந்த வீட்டுத் திட்டம் பற்றி இறுதியாக பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, இந்த வீட்டுத் திட்டம் தொடர்பாக நான் மிகுந்த அக்கறை எடுத்து கூறியிருந்தேன். அதற்கு முன்னர் பிரதமர் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது  வீட்டுத்திட்டத்திற்கான முதற்கட்ட ஆலோசனையை அமைச்சர் ரிசாத் பதியுதீன் நான் உட்பட   யாழ் முதல்வர் ஆகியோர் முஸ்லிம் மக்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்தோம். இவ்வீட்டுத்திட்டத்தை அமைப்பதற்காக   குறித்த  காணியை எனது பங்களிப்புடன் பெற்றுக்கொடுத்து எமது மக்கள்  கடந்த காலங்களில் பட்ட துன்பங்களுக்கு ஆறுதல்  அளித்துள்ளேன்.யாழ்.மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களிற்கு  தற்போது  புதிய மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்கள் அமைக்கப்படுவது  பெரும்  ஆறுதலாக உள்ளது.அமைச்சர் ரிஷாட்பதியுதீனின்  கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது.
 
 நீண்ட கால இடம்பெயர்ந்தோரை மீள்குடியேற்றும் அமைச்சு நிதிகளையும் ஒதுக்கியது. சொந்த இடங்களில் மீளக் குடியேற விருப்புடைய இம்மக்கள் அடிக்கடி பதிவுகளை மேற்கொண்ட போதிலும் அரச காணிகள் கிடைக்காததால் அலைக்கழிவது குறித்தும் அமைச்சர் ரிஷாட் பிரதமரின் கவனத்திற்கு  நான் கொண்டு சென்றிருந்தேன். இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு முஸ்லிம்களை மீள் குடியேற்றத் தேவையான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அங்கீகாரம் கடந்த காலங்களில்  வழங்கியது.
 
2010ம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 9 வருடங்களாக நான் எமது மக்களின் மீள்குடியேற்ற செயற்பாடுகளில் நான் கவனம் செலுத்தி வருகின்றேன் இதற்கு எமது  மக்கள்  சாட்சியாக இருக்கின்றார்கள்.தற்போது எமது கட்சித்தலைவர் றிசாட் பதியுதீன்  நீண்டகாலமாக இடம்பெயர்ந்த அகதிகளை குடியேற்றல்  என்ற அமைச்சினை   பெற்று  இந்த அமைச்சு    ஊடாக எமது மக்களின் பிரச்சினைகளை தீர்த்துள்ளார்.
 
முஸ்லிம் சமூகத்திலே பல பராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் தமக்கான அதிகார எல்லைகளைக் கொண்டிருக்கின்றார்கள்.ஆனால்  அமைச்சர் றிசாத் மட்டுமே எல்லை கடந்து   எமது மக்களுக்காக அன்று தொடக்கம் இன்று வரை குரல் கொடுக்கின்றார்.உதவுகின்றார். இதனை நாம் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும். கடந்த காலங்களில் பல  மீள்குடியேற்றத்திற்கான நடமாடும் சேவைகள் அவர் முயற்சியினால்  நடைபெற்றன.இன்னும் அமைச்சர் ஊடாக இங்கு  இடம்பெற என்னால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 
இந்நடமாடும் சேவை   யாழ் முஸ்லிம் சமூகத்தின் எல்லா தரப்பினருடையதும் பங்களிப்போடு இடம்பெறும். வீட்டுத்திட்டம் காணியற்றோரது பிரச்சினைகள் வாழ்வாதாரம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து நாம் தற்போது  தீவிர கவனம் செலுத்துகின்றோம். அத்தோடு யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை சீரழிப்பதற்காக எமது மக்களை வைத்து வாக்குவேட்டை அரசியல் செய்வதற்கு ஒருசிலர் கனவு காண்கின்றார்கள் இதில் நாம். மிகவுமே நிதானமாக செயற்பட வேண்டும்என கேட்டுக்கொண்டார்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” 👍 - யாழ்ப்பாணஸ்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

றிசாட் எம்பிக்கு வாழ்த்துக்கள் தன்ற மக்களுக்கு பாடுபட்டு வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுத்ததற்கு வந்த வீடுகளையே ஒதுக்கி வைத்தார்கள் பொருத்து வீடு சரிவராது என இப்பவரைக்கும் அந்த மக்களுக்கு வீடு இல்லை என்பது தொடர்கிறது 

இன்னும் பல வருடத்தில் அப்துல் முபாறக் பாய் நல்லூர்  முருகன் என்னுடைய நண்பர் முதலில் முஸ்தபா  என்றுதான் நாங்கள் கூப்பிட்ட நாங்கள்  தமிழர்கள் யுத்த காலத்தில் அவரை கடத்தி முருகனாக்கி விட்டார்கள் என்று சொல்லாதவரைக்கும் ஓகே

வாழ்த்துக்கள் யாழ்  மக்காள்ஸ்

Link to comment
Share on other sites

தனியார் காணிகள் வாங்கி குடியேற்றம் செய்யப்படும் என்றால் அது யாருடைய காணிகள்;அதை விற்க போவது யார், ஆனால் நான் பார்த்தளவுக்கு இவர்களுக்கு காணி விற்க கூடாது என்பதில் மக்கள் சிரத்தை காட்டுவதாகவே தெரிகிறது. ஆனாலும் இப்போதைய யுக்த்தி என்னவென்றால் தமிழ்ர் ஒருவரை வைத்து காணி வாங்கி அதை பிறகு தமது பெயரில் மாற்றுவது. 

மேலே குறிப்பிட்ட காணி அராலி சிவன் கோவிலுக்கு சொந்தமானது; இதை தமிழர் ஒருவர் இதை விற்றுள்ளார்.கோவில்  வழக்கு போட்டும் அது வெற்றியளிக்கவில்லை.

மக்கள் விழிப்பாக இருக்க வேண்டிய தருணம் இது, காணி விற்கும் போது யாருக்கு விற்கிறோம் என அவதானமாக இருக்க வேண்டும்.தமிழருக்கு விற்றால் கூட  அவர் யார் என தீர விசாரிக்க வேண்டும்.

ஒரு காலத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க வெளிக்கிட்டு இப்ப யாழ் மத்தியில்;தமிழர் அரசியலின் இதய பூமியில் இருக்கும் கோவில் காணியை கூட காப்பாற்ற முடியாத இழி நிலைக்கு அளாகி உள்ளோம். இதற்கு யார் காரணம் ............????????????

புலம்பெயர்தமிழன் தமிழக நட்சதிரங்களை அழைத்து ஷோ பண்ண்வதிலும்,கல்யாண வீடும் சாமர்த்திய சடங்கு பண்ண்வதிலும் பிசி.

தாயக தமிழன் எப்படி புலம் பெய்ரலாம் என்று சிந்திப்பதில் பிசி....!!!!!!!

இறுதியில் தாயக கணவுடன் உயிர் விட்டவன் தான் பாவம்........

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Dash said:

புலம்பெயர்தமிழன் தமிழக நட்சதிரங்களை அழைத்து ஷோ பண்ண்வதிலும்,கல்யாண வீடும் சாமர்த்திய சடங்கு பண்ண்வதிலும் பிசி.

தாயக தமிழன் எப்படி புலம் பெய்ரலாம் என்று சிந்திப்பதில் பிசி....!!!!!!!

இறுதியில் தாயக கணவுடன் உயிர் விட்டவன் தான் பாவம்........

 

 

இது தான் உண்மை

Link to comment
Share on other sites

1 hour ago, Dash said:

ஒரு காலத்தில் தனி தமிழ் ஈழம் அமைக்க வெளிக்கிட்டு இப்ப யாழ் மத்தியில்;தமிழர் அரசியலின் இதய பூமியில் இருக்கும் கோவில் காணியை கூட காப்பாற்ற முடியாத இழி நிலைக்கு அளாகி உள்ளோம். இதற்கு யார் காரணம் ............????????????

நாங்கள்தான். இதிலே மாற்றுக்கருத்து இல்லை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
    • சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.