Jump to content

ஏன் இந்த தமிழக கிராமத்தில் மது, வரதட்சணை கிடையாது?


Recommended Posts

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே ஆலவிளாம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் பல தலைமுறைகளாக மது அருந்தாமல், வரதட்சணை வாங்காமல் வாழ்ந்து வருகின்றனர்.

சிவகங்கையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது மதகுபட்டி. இங்கிருந்து கல்லல் செல்லும் சாலையில் 7 கி.மீ. தூரத்தில் உள்ளது ஆலவிளாம்பட்டி. இக்கிராமத்தில் மூப்பர் சமுதாயத்தை சேர்ந்த 170 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது முன்னோர்கள் இக்கிராமத்திற்கு 13ம் நூற்றாண்டில் குடியேற திருச்சி கொள்ளிடம் பகுதியிலிருந்து (வடநாடு) வந்தவர்கள், அப்போது அங்குள்ள ராமசுவாமி, பொன்னழகி அம்மாள் தெய்வங்களிடம் எப்போதும் மது அருந்துவதில்லை என சத்திய வாக்கு கொடுத்துள்ளனர். அதை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.

இக்கிராமத்தில் போதை பொருள்கள் யாரும் பயன்படுத்தக் கூடாது என சத்தியம் செய்ததை நினைவு கூறும் வகையில் ஊர் முகப்பில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது. மீறிச் செயல்படுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும்.

மேலும், இக்கிராமத்தைச் சேர்ந்த பெண்களை வெளியூரில் திருமணம் செய்து கொடுக்கும் போது, பெண் வீட்டார் சார்பில் மணமகனுக்கு வரதட்சணை வழங்குவதில்லை. இவர்களும் வெளியூர் பெண்களை திருமணம் செய்யும் போது வரதட்சணை வாங்குவதில்லை என்ற கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வருகின்றனர். அதே போல், குற்றங்களைத் தடுக்க ஊர் முழுவதும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தியுள்ளனர்.

 

 

 

விவசாயமே பிரதான தொழில்

ஏன் இந்த கிராமத்தில் மது வரதட்சணை கிடையாது?

ஆலவிளாம்பட்டி கிராமத்தில் வாழும் மக்கள் பிரதானமாக விவசாயம் செய்து வருகின்றனர். வானம் பார்த்த பூமியாக உள்ள இக்கிராமத்தில் மழை பெய்தால் மட்டும்மே விவசாயம் செழிக்கும்.வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அவ்வப்போது கிடைக்கும் என்பதால் இவர்கள் வரட்சியை தாங்கி வளர கூடிய பஞ்சு,கேள்விரகு,மல்லி, மிளாகாய் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர்.விவசாயத்தில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிள்ளைகளை படிக்க வைப்பது, திருமணம் செய்து கொடுப்பது என வாழ்ந்து வருகின்றனர்.

இக்கிராமத்தை பொருத்தமாட்டிலும் வெகுவான இளைஞர்கள் வெளி நாடுகளில் வேலை செய்து வருகின்றனர்.இதனால் கிராமத்தில் படிக்கும் மாணவர்களை தவிர இளைஞர்களை காண முடியவில்லை.

 

மது போதை என்றால் என்னவென்றே தெரியாது!

ஏன் இந்த கிராமத்தில் மது வரதட்சணை கிடையாது?

"கொட்டகுடி ஊராட்சியில் உள்ள 9 கிராமங்களில் ஆலவிளாம்பட்டி கிராமமும் ஒன்று. எங்களது மூதாதையர் தெய்வங்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றும் வகையில் இங்குள்ள இளைஞர்கள் யாரும் மது அருந்துவது கிடையாது. மது போதை என்றால் என்னவென்று கூட எங்களுக்கு தெரியாது.

மதுப்பழக்கம் இல்லாததால் எங்களது கிராமத்தில் இதுவரை பிரச்சனை என்ற ஒன்று வந்ததே இல்லை.மது பழக்கம் இல்லாததால் எங்களது சட்டை பாக்கெட்டில் வைத்துள்ள ரூபாய் நோட்டுகள் அப்படியே இருக்கிறது. மது பழக்கம் இருந்து இருந்தால் எங்களால் பணத்தை சேமிக்க முடியாமல் பணத்தை இழப்பதுடன் வாழ்கையையும் இழந்து இருப்போம்" என்றார் ஆலவிளாம்பட்டி கிராம இளைஞர் பிரேம்.

இது குறித்து வெளியூரில் இருந்து ஆலவிளாம்பட்டி கிராமத்திற்கு திருமணமாகி வந்த சுபா பிபிசி தமிழிடம் பேசுகையில்,வரதட்சணை போன்ற தொந்தரவுகள் இந்த கிராமத்தில் இல்லை.அதே போல் இக்கிராமத்து இளைஞர்களுக்கு மது பழக்கம் கிடையாது. இதன் காரணமாக இக்கிராம இளைஞர்களுக்கு வெளியூரைச் சேர்ந்த பலர் பெண் கொடுக்க போட்டி போட்டு கொண்டு முன் வருகிறார்கள்.

எனது கணவர் வீட்டில் இருந்து எனது பெற்றோரிடம் வரதட்சணை என்று கேட்கவில்லை ஆனால் எனது பெற்றோர் அவர்கள் எனக்காக சேர்த்து வைத்த நகைகளை மட்டுமே போட்டு திருமணம் செய்து கொடுத்தனர் என்றார்.

 

வெளிநாட்டில் மது குடித்தால்?

அழகு Image captionஅழகு

இந்த கிராமத்தில் மது குடிக்க கூடாது, சூதாட கூடாது, வரதட்சணை வாங்க கூடாது என்பது எங்கள் கிராமத்தின் கட்டுபாடு அதை மீறி மது அருந்தினால் அவருக்கு அரை மொட்டை அடித்து அபராதம் விதிக்கபடுவதுடன் அவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஊர் விசேஷங்கள், முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதிப்பதில்லை. வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் ஊருக்கு தெரியாமல் அங்கு மது அருந்தினால் அவர்களுடைய ஒரு கால், ஒரு கை வேலை செய்யாமல் போய்விடும். பின்னர் அவர்களை வெளி நாடுகளில் இருந்து அழைத்து வந்து பின்னர் அவருக்கு தண்டனை வழங்கப்படும். இது போல் இரண்டு, மூன்று முறை நடந்துள்ளது.

மேலும் குற்றங்களைத் தடுக்க ஊர் முழுவதும் கேமராக்களை ஊர் மக்கள் சொந்த செலவில் பொருத்தியுள்ளோம். அந்த கேமராக்கள் மூலம் சமீபத்தில் பெண் கடத்தலை தடுத்தோம். மதகுபட்டி-கல்லல் சாலையில் விபத்து ஏற்படுத்திய வாகனங்கள் மற்றும் குற்றங்களைக் கண்டுபிடிக்க இந்த கேமராக்கள் போலீஸாருக்கு உதவியாக உள்ளது என பிபிசி தமிழிடம் பேசிய ஊர் தலைவர் அழகு தெரிவித்தார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அக்கிராமத்து பெண் லட்சுமி, எங்கள் ஊர் ஆண்கள் மது குடிக்காமல் இருப்பது எங்கள் கிராம பெண்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆண்கள் மது குடிப்பதால் பெண்களின் வாழ்கை மிகவும் பாதிக்கபடுகிறது.ஆனால் எங்கள் ஊரில் அந்த பிரச்சனைகள் இல்லை.பக்கத்து ஊர் பெண்கள் எல்லாம் எங்கள் கிராமத்தை பார்த்து பெறாமைபடும் அளவில்தான் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறோம் இதே போல் வரும் தலைமுறைகள் மது, வரதட்சணை இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எங்கள் கிராம மக்களின் ஆசை என்றார்.

https://www.bbc.com/tamil/india-49916815

Link to comment
Share on other sites

நல்ல விடயம்..சினிமாவில் மட்டுமே இது போன்ற கிராமங்களைப் பார்த்திருந்தோம். 

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் ஊருக்கு தெரியாமல் அங்கு மது அருந்தினால் அவர்களுடைய ஒரு கால், ஒரு கை வேலை செய்யாமல் போய்விடும்.

நமக்கு ஒரு செய்தி 🙂 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.