Jump to content

Recommended Posts

36 minutes ago, goshan_che said:

புலிகள் ஏன் முதலில் மறுத்தார்கள்? இதை செய்யும் போது பாலசிங்கம் உட்பட பலருக்கு இதை செய்யப்போகிறார்கள் என்பது தெரியாது. 1991 இல் மிகவும் குறுகிய ஒரு வட்டத்துக்கு மட்டும் தெரிந்த ரகசியம் இது.

வேலையை முடிப்பது, யார் எனத் தெரியாமல் இந்தியா திகைக்கும் போது. நாம் இல்லை எனச் சொல்லிவிடுவது. இதுதான் திட்டம்.

ஆனால் நீங்கள் மேலே சொன்ன பேர்வழிகள் சதிக்குள், சதிதீட்டினார்கள். வேலையை இவர்களை கொண்டு முடிப்பது, பின்னர் இவர்களை தக்க ஆதாரத்துடன் மாட்டிவிட்டு, தாம் தப்பிவிடுவது. ஈற்றில் இப்படியே நடந்தது. அதனால்தான் வழமைக்கு மாறாக, ஒவ்வொரு கட்டத்திலும் ஆதாரங்கள் இந்த வழக்கில் வேணும் என்றே மாட்டும் வகையில் விடப்பட்டது.

87 ற்கு பின் டெலோவில் இருந்ததெல்லாம் காடைக்கூட்டம். அவர்களாவது இப்படி ஒரு துணிகரத்தை செய்வதாவது. தவிரவும் குப்பி அடிக்கும் அளவுக்கெல்லாம் டெலோவில் ஒரு ஆள் கூட இருந்ததில்லை. 

91 காலப்பகுதியில் இதை மறுத்துவிடலாம், யாரும் கண்டு பிடிக்க மாட்டர்கள் என நினைத்து பகிரங்கமாக மறுத்த புலிகள். 2002 இல் இனி மறுப்பதால் பயனில்லை. உலகம் மேலும் எம்மை பொய்யர்களாகவே பார்க்கும் என்ற புரிதலுக்கு வந்துவிட்டார்கள்.

எனவேதான் 2002 அந்த பதில் சொல்லப்பட்டது. 

சம்பவங்களை வைத்து நான் புரிந்து கொள்வது இதைத்தான். உங்கள் புரிதல் வேறுவிதமானது. பிரபாகரன் இனி உயிர்த்து வந்து உண்மையை சொல்லாதவரை, இதில் எது சரி என்றவாதம் நீண்டுகொண்டே போகும்.

தவிர இதை அலசுவதில் இப்போ யாருக்கும் எந்த பயனுமில்லை.

உங்களுக்கும் இன்னொருவருக்கும் பிரச்சினை உள்ள போது அந்த இன்னொருவரை நான் கொன்று விட்டு உங்களில் பழி போட முடியும். அதை பலரும் நம்புவார்கள். 😊

புலிகள் செய்யாத பல கொலைகளுக்கு புலிகளில் பழி போடப்பட்டது போல் தான் ராஜீவ் காந்தி கொலையும்.

பலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசீர் அரபாத் ராஜீவ் காந்தியை Mossad கொல்ல திட்டமிட்டிருப்பதாக அவருக்கு கூறியிருந்தார்.

இதிலும் சில விடயங்களை எழுதியிருந்தேன்.

https://yarl.com/forum3/topic/228336-பேரறிவாளன்-உள்ளிட்ட-7-பேரின்-விவகாரம்-தமிழக-ஆளுநர்-டெல்லிக்கு-விஜயம்/#comments

 

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
16 hours ago, ampanai said:

சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு தமிழ் பொதுவேட்ப்பாளர் பற்றி ஆக்கபூர்வமான ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அந்த அணுகுமுறை தவறானது என்றால் அது பற்றிய விளக்கத்தை மக்களுக்கு தரவில்லை. 

இப்பொழுது சிவாசிலிங்கம் அவர்களும் பொது வேட்ப்பாளர் என்ற அந்த இடத்தை சரியோ தவறோ நிரப்பி  உள்ளார். 

இதன் மூலம் தமிழ் தேசிய அரசியல் ஒரு ஆரோக்கியமான நிலைக்குள் சென்றுள்ளது என்பது எனது கருத்து. 

கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால எல்லை நேற்றுடன் முடிந்து விட்டது. இன்று பலரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்கள்.

இத்தேர்தலில் இனி தமிழர்கள் பொது வேட்பாளரை நிறுத்த முடியாது. சிவாஜிலிங்கத்தை தமிழர்களின் பொது வேட்பாளருக்கு பிரதியீடாக கொள்ள முடியாது.

தொடர்ந்தும் கோத்தாவை வெல்ல வைக்க இவர்கள் முயல்வார்களாக இருந்தால்,

1) அநுரவுக்கு வாக்களிக்குமாறு கூறலாம்.

2) தேர்தலை புறக்கணிக்குமாறு கூறலாம்.

அநுர தனக்கு வாக்களிப்போரை இரண்டாம் விருப்ப தெரிவை சஜித்திற்கு இடுமாறு கூறியதாக வாசித்தேன். இது உண்மையா என யாரும் உறுதிப்படுத்த முடிந்தால் உறுதிப்படுத்துங்கள்.

இது உண்மையாக இருந்தால் அநுரவுக்கு வாக்களிக்கும் சிங்கள, முஸ்லிம் மக்களில் பலரின் இரண்டாம் விருப்ப தெரிவு சஜித்தாக இருக்கும். முதலாம் சுற்றில் யாரும் 50% இற்கு மேல் பெறாத நிலையில் இது முக்கியத்துவம் பெறும்.

தமிழர்களை அநுரவுக்கு வாக்களிக்குமாறு கூறினால் இரண்டாம் விருப்ப தெரிவை சஜித்திற்கு இடுமாறு யாரும் ஆலோசனை கூற மாட்டார்கள். எனவே தமிழர்கள் அநுரவுக்கு வாக்களித்தால் இரண்டாம் விருப்ப தெரிவுக்கு யாரையும் போடாமல் விடக்கூடும்.

தமிழர்களை தேர்தலை புறக்கணிக்க கோரினால் அது கோத்தாவுக்கு சாதகமானது என்பது சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

எனவே தமிழர்களை சஜித்துக்கு வாக்களிக்க கோரப்போகிறார்களா அல்லது மேலுள்ளவற்றில் ஒன்றை கூறப்போகிறார்களா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

IMG-0665.jpg

இந்த வீரச்சாவு தான் லாராவிற்கான பதில்

கடலில் கலந்த….. டேவிட்.

தமிழீழத்தின் திசைகளில் மோதும் காற்றில் கலந்துவிட்ட தென்றல்.

விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களையும் தன்காலத்திலேயே நேரடியாகக் கண்ட மிகச் சில போராளிகளில் ஒருவன்.

தமிழீழத்தின் விடுதலைப் போராட்டம் , எல்லாக் காலங்களிலும் , கடல் பிரயாணங்களை முதன்மைப் படுத்துவதாக அமைந்தது. எத்திசையும் கடலால் சூழப்பட்ட எம்தாயகத்தின் , தாக்கமுள்ள நகர்வுகள் கடல் மூலமே மேற்கொள்ளப்பட்டுள்ளன. எமது விடுதலைப் போராட்டத்தில் , கடல் பயணங்கள் பிடித்திருந்த இடத்தின் , அதே அளவு இடத்தை , எமது கடல் சரித்திரத்தில் டேவிட் பிடித்திருந்தான்.

அவனது இளமையிலேயே கடல் அவனை அழைத்தது. அவது குடும்பநிலை அவனை கடலுக்கு அனுப்பியது.

” இயக்கம் கடலிலும் பிரயாணம் செய்ய வேண்டிவரும் ” என்ரகாலம் போய் , ” இயக்கத்தின் பியானம் கடலில்தான் ” என்று வந்துவிட்ட 83ல் , இயக்கத்திற்க்காய் கடலில் இறங்கினான்.

தமிழீழத்தின் ஒவ்வொரு கரையிலும் கால் பதித்தான். நீண்ட பெரும் கடற்பரப்பு , கடற்பரப்பில் புள்ளியாய் நகரும் படகு , படகினைப் போல் பலமடங்கு விரிந்து , எழுந்து , விழுங்கவரும் அலைகள். சமுத்திர ராட்சதனின் அலைவாய் மூடமுதல் , விரைந்து , தத்திப்பாய்ந்து வெளியேறி , திரும்பிப்பார்க்கும் லாவசம். திரும்பிப்பார்வை நேரே நோக்க அடுத்த பெரும் அலை.

படகினை பலமடங்கு வேகத்துடன் துரத்தி உமிழும் பீரங்கிவாய்கள். அவற்றின் பல்முக நகர்வுகளிலும் தப்பி , தத்திச் செல்லும் வேகம். பின்னால் வரும் எதிரியின் கை அதிகமாய் நெருங்கின் , நின்று – நிதானித்து இயந்திரத்துப்பாக்கியை இயக்க ஆணையிடும் உறுதி , அந்தக் கணத்தில் எதிரி அடையும் அதிர்ட்சி டேவிட்டை பல தடவைகள் கரை சேர்த்துள்ளது.

அவனது கடல் பயணங்கள் மெய்சிலிர்க்கும் பல அனுபவங்களைக் கொண்டது. அவனது ஆசான்களும் , நல்ல நண்பர்களும் கடலிலேயே கலந்து விட்டனர். அப்போதெல்லாம் கூட , அவன் கடலில் நிலைத்துநின்றான். அவனது தப்பியோடும் லாவகமும் , தேவையின் பொது எதிர்த்து நின்று எதிர்கொள்ளும் நெஞ்சுறுதியுமே அவனை நிற்கவைத்தது.

இன்று இயக்கத்தின் வசமுள்ள பெருமளவு ஆயுதங்களுக்கு டேவிட்டைத் தெரியும்.

ஆம்…! அவை எமது கைகளுக்கு கிடைப்பதற்கு கிடையில் டேவிட் இருந்திருப்பான்.

அனேகமாக எப்போதுமே நாம் கரையில் காணும் டேவிட்டைக் கடலில் சந்திக்கமுடியாது. ஒருங்கிணைந்த சிந்தையுடன் , தன்னை நம்பி படகில் ஏறிய ” நீந்தத் தெரியாத சுமைகளுக்கு ” உத்தரவிடும் டேவிட் , கடுமையான வசைகளால் ஓட்டிமாரை கட்டுப்படுத்தும் மாலுமி. கடலில் டேவிட்டை , டேவிட்டாகப் பார்ப்பது கடினம்.

எப்போதாவது மிக அபூர்வமாக , சீரான , நேவியில்லாத , ஒதுக்குப்புறக்கடலில் , நல்ல நிலவும் சேர்ந்தால் அவனது படகு நிற்கும். இயந்திரச் சத்தத்தை மேவி அவன் குரல் ஒலிக்கும், ” கடல் மேல் பிறக்கவைத்தான்…. ” அவனது குரல் இனிய சங்கீதம் இல்லைத்தான் , ஆனாலும் அவன் பாடினால் நின்று , நிதானித்துக் கேட்கவைக்கும் வசீகரம். அந்த வசீகரம் அவனது குரலுக்கா…? அல்லது அவன் பாடும் பாடல்களுக்கா…?

அவனது குரலில் ; பாடல் கம்பீரம் பெறுவதும் தெரியும். அந்தக் குரலுக்கு , அவன் தெரிவு செய்யும் பாடல்களை விட , வேறுபாடல் எடுபடாதென்பதும் புரியும்.

அவனைத் தெரிந்த , அவனுடைய பழகாத எல்லோராலும் கூறப்படும் , எண்ணப்படும் , எண்ண வடிவங்களுக்கு அபபர்ப்பட்ட போராளி. அநேக போராளிகளைப் போல் அவனுக்கும் ” பழஞ்சோறு குழைத்துக்கையில கொடுக்கும் அம்மா “ ” ஆமியின் வெடி கேட்டும் சிறுபற்றை சரசரக்காமல் தேத்தண்ணி செம்புடன் அண்ணனை , அண்ணனின் தோழர்களை தேடும் தங்கைகள். “ வீட்டின் நிலையை எண்ணுவதா ? நாடா ? என்ற கேள்விக்கு எப்போதுமே குழப்பமிலாத பதிலைத் தன்வசம் வைத்திருந்த போராளி. மிக நெருக்கமான நண்பர்களிடம் மட்டும் ” தங்கச்சியவை ” என்று கூறிக் கண்கலங்கும் அண்ணன்.

எப்பேற்பட்ட வேலையாக இருந்தாலும் அவ் வேலையின் முக்கியத்துவம் விளங்கவைக்கப்பட்டால் , அந்த வேலையை செய்து முடிக்கும்வரை அவன் ஓய்வதும் அபூர்வம். அவனது நினைவுகள் மீட்டப்படும் பொது திரும்பத்திரும்ப அவனது அக்குணநலனே எவருக்கும் முன்னிற்கும்.

தமிழீழத்தின் கடற்பரப்பில் மட்டுமல்ல , தமிழீழத்தின் தரைப்போர் வாழ்க்கையிலும் அவன் சாத்த்தவை அதிகம். அதிலும் வடமராட்சியில் நடைபெற்ற அநேகமான சண்டைகளில் அவனது சுவடுகள் பதிந்திருந்தன.

இந்திய இராணுவத்திற்கு முந்தைய போர்வாழ்வில் , ஒப்பரேஷன் லிபறேசனுக்கு முன்பும் பின்பும் வடமராட்சியில் அவன் பங்கு அதிகம்.
ஒப்பரேஷன் லிபறேசனுகென ஆமி புறப்பட்டதிலிருந்து , நெல்லியடி முகாமிற்குள் மில்லர் புகுந்தது வரை அவன் ஓயவில்லை.

இந்திய இராணுவ யுத்தம் ஆரம்பித்த காலத்தில் தமிழ்நாட்டில் தங்கியிருந்தவன். யுத்தம் ஆரம்பித்து , கொழுந்துவிட்ட நேரத்தில் தள்ளியிருக்கமுடியாமல் , ஒரு கட்டுமரத்தில் வந்து சேர்ந்தான். இந்திய ஆக்கிரமிப்புக் காலத்தில் வடமராட்சியில் இயக்கத்தை உயிர்த்துடிப்புடன் வைத்திருந்ததில் , அவன் ப[அங்கு மிகப் பெரியது.

அனேகமாக இயக்கத்தின் எல்லாத் துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்தவன். அரசியல் ? அவன் அரசியல் வித்தகன் இல்லைத்தான் எனினும் , தான் ஏந்திய துப்பாக்கி எதற்காக என்பதில் குழப்பமில்லாதவன். மக்களுடன் பழகும் போதினில் அந்த மக்களில் ஒருவனாக நின்று சிந்திக்கத் தெரிந்தவன்.

எல்லாத் தலைமறைவுக்கால வாழ்க்கையிலும் , மக்களால் பாதுகாக்கப்பட்டவன். டேவிட் நின்றால் ஆமி பார்த்துச் சொல்வதற்க்கென ஒரு முதியோர் படையே திரளும்.

அவன் உலவும் ஊர்களில் சிறுகுழந்தைக்கும் அறிமுகமாகிவிடும் முகராசி. சிறுவர்களை ஒரு தடவை சந்தித்தால் , மறுதடவை சந்திக்கும்போது அவர்களை பெயர் சொல்லி அழைக்கும் நட்புணர்வு அல்லது அவர்கள் வெட்கத்தில் முகம் சிவக்க இவன் ஒரு பெயர் வைத்திருப்பான். சிறுவர்கள் என்றல்ல எவருடனுமே நட்பைப் பேணுவதில் தனித்துவமானவன் , பழைய நண்பர்களை மீண்டும் சந்திப்பதில் தனிமையான ஆர்வமுள்ளவன்.

எப்போதோ ஒருமுறை ” வண்டி விடப்பட்ட கரையில் “ லாம்பு வெளிட்சத்தில் சாப்பாடு கொடுத்தவரை யாழ்ப்பாணத்தில் கண்டு ” என்னைத் தெரியேல்லையே , கலுவன் கேணியில றால் கரியோட புட்டு சாப்பிட்டனாங்கள் எல்லே ” என்று கேட்டு அசத்துவான்.

பழைய நண்பர்கள் ஒன்றாகச் சேர்ந்தால் , மறந்துவிட்ட திரும்பக் கிடைக்காத நினைவுகளை மீட்டுவது டேவிட்தான். இவனது நட்பைப் பேணும் பண்பால் பலராலும் விரும்பபட்டவன். சிலவேளைகளில் வேலை நேரங்களிலும் ” நட்பைப் பேணப்போய் ” வாங்கிக்கட்டிக் கொண்டு தலையைச் சொறிவான்.

இயக்கம் மிக அரிதாகச் சந்தித்த ” எல்லா வேலைகளிலும் வல்லுனர்களாக விளங்கக்கூடிய ” சிலரில் டேவிட் ஒருவன். ஆனால் கடல் என்பது ” பெரிய கடலாக ” இருந்தது. அதில் இயக்கத்தின் கடற்பிரிவு மிகச்சிறியதாக இருந்ததால் அவனால் காதலி விட்டுவிட்டு வரமுடியவில்லை. அவனது குறைந்த பாடசாலைக் கல்வியின் போதும்கூட பெரிய திட்டமிடல் திறன் இருந்தது. அது புரிந்தவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.

அவனது எதிர்பார்ப்புகளுக்கெல்லாம் அவனுக்கு களம் கிடைக்கவில்லை. கடல் அவனை மறித்துவைத்திருந்தது.

ஒரு மிக முக்கிய கடற்பயணம் , தவை பெரியது , டேவிட் தேவையான ஒழுங்குகளை வழமைபோல் சரிபார்க்கிறான். கடல் தெரிந்தவர்கள் கடலில் ஓடத்தயங்கும் காலநிலை , ஆனாலும் பிரயாணம் அவசியமானதாகவும் , ஒத்திவைக்க முடியாததாகவும் இருந்தது.

கடலைத் தவிர எல்லாமே வழமைபோலத்தான். வழமையான தடபுடல் ,ம் வேகமான பிக்கப்….. , பெரிய நம்பிக்கை விதையை நெஞ்சில் விதைத்துவிட்டு டேவிட் ஆயத்தமாகிறான். வழமையாக ஓடித்திரியும் நேவியையும் காணவில்லை. எல்லாமே நம்பிக்கையுடன் இருக்கிறது. வண்டி புறப்படும் , அதுவும் டேவிட் நேரில் புறப்படும் காரணம் சொல்லப்படாவிட்டாலும் , வழமைபோலவே ஊகித்துக் கொண்டு வழியனுப்புகிறார்கள். டேவிட்டை அன்புடன் வளர்த்துப் பாதுகாத்த மக்கள் – அவனுடன் மிக அன்பாகப் பழகியவர்களில் நல்லாய்க் கடல் தெரிந்தவர்கள் அன்று கரைக்கு வரவேயில்லை…..

படகு நீரில் இறங்கியது ” குழந்தைப்பிள்ளையைக் கையிலே பிடித்துக் கூட்டிச் செல்லும் வாஞ்சையுடன் “ இரு கரையிலும் ஆட்கள் வரிசையாய் நின்று , படகினை கடலுக்குள் இழுத்துச் செல்கிறார்கள். இடுப்பளவு தண்ணீரில் இறங்கிய பின்னர் , அணியத்தில் நின்ற அரி தடியால் ஊன்ற படகு தள்ளாடி , நகர , அண்ணார்ந்து நின்ற இயந்திரவால்கள் தண்ணீரில் குளிக்க , எல்லாம் வழமைபோலவே.

” நல்லாய் செவிச்போட்ட இயந்திரம் ஒரு இழுவையில் ஸ்ராட் வர “ இருட்டில் நின்ற தோழர்களும் , மக்களும் வண்டியில் நின்றவர்களுக்கு ” தெரியாது என்று தெரிந்தும் ” கையை உயர்த்தி மேல அசைகிறார்கள். வண்டியில் நின்றவர்களும் கையசைத்திருப்பார்கள்….?

ஒரு இயந்தியம் கொஞ்சத்தூரம் ஓடிப்போய் நின்று தயாராகையில் , ” துணியில் பொத்தி ரோச்லைட் அடிப்பதும் ” தெரிகிறது.

அல்பா , அல்பா…..

என்னமாதிரி….?

பிரச்சினையில்லை குதிரைக்கு சாப்பாடு கொடுக்கினம்…..

கரிகாலனின் பதில் வோக்கியில் கேட்கிறது.

பின் ஒவ்வொரு இயந்திரமாக சத்தமிட படகு நகராமலேயே இயந்திர சத்தம் அதிகரித்து குறைந்தது , மிக அதிகரித்து , தணிவது கேட்கிறது.

படகு வழமைபோல் வலப்புறமாய் வட்டமிட்டு , நிழலாய் நகர்கிறது. ” எப்போதும் போல் , ‘ தேவையும் கடலும் தவிர ‘ மற்ற எல்லாம் வழமைபோல் ”

நீரைக்கிழித்து , வெண்நுரை கிளப்ப , அலையில் எழும்பிப்பாய்ந்தது….. படகு புறப்பட்டுவிட்டது. அதிகரித்த சத்தமும். கரையில் கூடிய கூட்டமும் , சிறிது சிறிதாய் மறைய, கடல் தெரியாதவர்களின் திருப்திப் பெருமூச்சுடன் “ கலந்தபோது , ” வண்டி வெளிகிட்டு விட்டது. ”

இயந்திர சத்தம் கரைவடஹ்ர்க்கு முன்னரே கரையிலுள்ள வோக்கி.

அல்பா…… அல்பா….. என அழைத்தது.

” தண்ணியடிக்குது தானே வோக்கியை அது தான் லோக் ரியூப்பிலை வைத்திட்டினம் போல ” எனக் கூறிவிட்டு , முயற்சியைக் கைவிடும் போதும் கூட , இயந்திர சத்தம் கேட்டுக்கொண்டுதானிருக்கிறது.

நேரம் கரைய , முகாமுக்குத் திரும்ப நினைக்கும் வேளையில் , துரத்து முகாம் வோக்கியில் ஒரு அவசர அழைப்பு. ” வோக்கியில் அல்பா தொடர்பெடுத்து….. ”

” என்னவாம் “…..

” கிளியரில்லை , சரியாக விளங்கேல்லை பிறபோ…… பிறபோ…… என்று அவியல் கூப்பிட்டமாதிரியிருந்தது…..

” சொல்லு “….

” போட்வெடித்திட்டு , வண்டி அனுப்புங்கோ , ஏன்டா மாதிரிக் கிடந்தது. அவையளின்ர கிளியரில்லை , ஒண்டும் விளங்கேல்லை “……

” ஆர் கதைச்சது…..”

” டேவிட் அண்ணை மாதிரித்தான் கிடந்தது , ஒண்டும் விளங்கேல்லை ….. ”

அடுத்த படகினை ஆயத்தம் செய்தவேளை , இயந்திரம் எடுக்க பிக்க[ விரைந்த வேளை , உறுதியற்ற வோக்கிச் செய்தியை நம்புவதா , இல்லையா என்று யோசித்தவேளை , நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. அலை விரித்துக் கொண்டிருந்தது.

” சன்னதம் கொண்டு நின்றது கடல். தேடபோகும் படகினை , தேடப்போகவென மர்ரபடகை , தயாராக வைக்கக் , வைக்கும் கடல்…!

நேரம் செல்லச்செல்ல ” வேக்கிச் செய்தி பிரமையோ ? “ எனநினைக்க வைக்கும் , வெறுமையுடன் காத்திருக்கும் வேளையில் , தேடப்போன படகின் வோக்கி அழைக்கிறது.

அரியைக்கண்டிட்டம் , தூரத்தின் இன்னொமொரு ஆள் தெரியுது….

என்னமாதிரி….. என்னமாதிரி என்ற வோக்கிக்கு பதில் சொல்லாமல் தேடும் படகு கரைநோக்கி வர. ” படகில் அரியுடன் ரட்ணா ”

” என்ன நடந்தது ? ”

” போட பிரிஞ்சிட்டுது , நடுவாலை முறிஞ்சு அணியம்தனிய , கடயார்தனிய ரெண்டாகப் போச்சு ”

” மற்றாக்கள் என்ன மாதிரி ? டேவிட் அண்ணை என்ன மாதிரி ? ”

” இருட்டுக்குள் எல்லோரையும் கூபிட்டு டேவிட் அண்ணை ஒன்றாக்கினவர் , எல்லோரையும் நீந்தச்சொல்லிவிட்டுப்போட்டு , அவர் கரிகாலனைக் கூப்பிட்டு தன்னட்டை எடுத்தவர்.

முழுவிடயங்களையும் சொல்லமுடியாது அறியும் – ரட்னாவும் மயங்கிவிட்டார்கள்.

மீட்க்கப்பட்ட இருவரும் உப்பு நீரால் உதடுகள் வெடித்து. , முகம் புண்ணாக்கி , ” கோலம் கெட்டுப்போய் ” இருந்தார்கள்,

படகுகள் போயின , வந்தன. செய்தி கேள்விப்பட்ட சனமெல்லாம் கரைமுழுக்கக் கூடி நின்று தேடினர். படகுகளின் தேடுதலுக்கு மேலாக , டேவிட்டின் திறமையில் எல்லோரும் நம்பிக்கை கொண்டிருந்தனர்.

” முதலும் இரண்டு நாள் கடலுக்கு கிடந்தது , வந்து சேர்ந்தவன் தானே ”

” மன்னாரிலை ஒருக்கா இரண்டு பொம்பிளைப் பிள்ளையளைத் , தனியக் கொண்டுவந்து சேர்த்தவனெல்லெ…”

டேவிட்டின் நீச்சல் திறமையில் எலோருக்கும் நம்பிக்கை இருந்தது.

” உந்த மட்டு மட்டு நீச்சல் பொடியல் வந்து சேர்ந்திட்டாங்களாம் டேவிட் ஏன் வரமாட்டான் ? ”

எல்லோரும் நம்பிக்கையுடன் காத்திருந்த போதும் , அறி வைத்தியசாலியில் கூறிக்கொண்டிருந்தான். ” எங்களை நீந்தச்சொல்லிப்போட்டு கரிகாலனைத் தான் , இழுத்துக் கொண்டு நீண்டவர் ”

படகில் சென்றவர்களில் ” கடலுடன் கொஞ்சமும் பரிச்சயம் இல்லாத , நீச்சல் தெரியாதவன் ” கரிகாலன் மட்டும் தான்.

எல்லோரும் நம்பிக்கையுடன் இருந்த போதும் , அரியையும் – ரட்னாவையும் தவிர வேறு எவரும் வரவில்லை…..

கரிகாலன் வரவில்லை…..

டேவிட்டும் வரவில்லை …..

டேவிட் பங்குகொண்ட தாக்குதல்கள்…

* 1985ம் ஆண்டு மன்னார் போலிஸ் நிலையத்தாக்குதல் நடைபெற்றபோது , தாக்குதற் குழுவை படகில் ஏற்றி மறுகரைக்கு ( மன்னார் தீவுக்குள் ) கொண்டு சேர்க்கும் கடற்புலிகள் குழுவின் உதவிப்பொறுப்பாளராக இருந்தார். படகில் சென்று பாதுகாப்பாக இறங்குவதே தாக்குதலின் முதல் வெற்றி எனக் கருதப்பட்டது. இத்தாக்குதல் முடிந்த பின்பு அப்போதைய மன்னார்த் தளபதி லெப் கேணல் விக்ரர் அவர்களார் டேவிட் பாராட்டப்பட்டார்.

* 1987ம் ஆண்டில் ஆனையிறவு முகாமிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சிறிலங்கா இராணுவம் முன்னேற முயன்றபோது கிட்டு அண்ணா தலைமைதாங்கிய தாக்குதலின் பொது வீரமரணமடைந்த லெப் அங்கிளின் குழுவில் ஒருவராக சண்டை செய்து தோளில் காயமடைந்தார்.

* 1987ம் ஆண்டு யாழ் தொலைத்தொடர்பு நிலையத்தாக்குதலில் ( 8 இராணுவத்தினரைக் கைது செய்தபோது ) ” 50 கலிபர் ” குழு ஒன்றுடன் சென்று சண்டையில் ஈடுபட்டார்.

* 1989க் ஆண்டு நெல்லியடியில் இந்திய இராணுவக் காவலரண் மீதான தாக்குதலின் போது அத்தாகுதற் குழுவின் இரண்டாவது பொறுப்பாளராகச் சென்றார்.

* 1990ம் ஆண்டு வடமராட்சிக் கடலில் சிறிலங்காக் கடற்படையின் தாய்க்கப்பல் மீது நடாத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் ( கடற்கரும்புலிகள் : மேஜர் காந்தரூபன் – கப்டன் வினோத் – கப்டன் கொலின்ஸ் ) நடவடிக்கையினை தலைமை தாங்கியவர் இவரே.

ச . பொட்டு
( புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் – தமிழீழ விடுதலைப்புலிகள். )

விடுதலைப்புலிகள் இதழ் ( ஐப்பசி – கார்த்திகை : 1991 )

இது சிக்கிக்கொண்டவர்களை மீட்க தமிழகம் போன படகா?

1 hour ago, Lara said:

உங்களுக்கும் இன்னொருவருக்கும் பிரச்சினை உள்ள போது அந்த இன்னொருவரை நான் கொன்று விட்டு உங்களில் பழி போட முடியும். அதை பலரும் நம்புவார்கள். 😊

புலிகள் செய்யாத பல கொலைகளுக்கு புலிகளில் பழி போடப்பட்டது போல் தான் ராஜீவ் காந்தி கொலையும்.

பலஸ்தீன விடுதலை இயக்க தலைவர் யாசீர் அரபாத் ராஜீவ் காந்தியை Mossad கொல்ல திட்டமிட்டிருப்பதாக அவருக்கு கூறியிருந்தார்.

இதிலும் சில விடயங்களை எழுதியிருந்தேன்.

https://yarl.com/forum3/topic/228336-பேரறிவாளன்-உள்ளிட்ட-7-பேரின்-விவகாரம்-தமிழக-ஆளுநர்-டெல்லிக்கு-விஜயம்/#comments

 

லாரா நான்தான் முதலிலே கூறிவிட்டேனே புலிகள் தவிர மேலும் பல உள் வெளிநாட்டு சக்திகளுக்கு இதில் பங்கு இருப்பது மறுப்பதற்கில்லை.

நீங்கள் சொல்பவர்கள் திட்டமிடல். Project planning. 

புலிகள் project implementation. 

 implementation பண்ணியவர்களை மட்டும் மாட்டிவிட்டு planners தப்பித்துக் கொண்டார்கள்.   

Link to comment
Share on other sites

4 hours ago, goshan_che said:

லாரா நான்தான் முதலிலே கூறிவிட்டேனே புலிகள் தவிர மேலும் பல உள் வெளிநாட்டு சக்திகளுக்கு இதில் பங்கு இருப்பது மறுப்பதற்கில்லை.

நீங்கள் சொல்பவர்கள் திட்டமிடல். Project planning. 

புலிகள் project implementation. 

implementation பண்ணியவர்களை மட்டும் மாட்டிவிட்டு planners தப்பித்துக் கொண்டார்கள்.   

புலிகளுக்கு இதில் சம்பந்தமில்லை, சந்திரசுவாமியால் TELO இலுள்ள சிலர் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம், அல்லது நம்ப வைத்து அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் மேல் பழி போடப்பட்டிருக்கலாம். இது தான் நான் கருதுவது.

சிவராசன் உட்பட சிலர் மரணம் கூட தற்கொலை அல்ல, கொலை என்றே நான் கருதுகிறேன். உண்மையை வெளிவராமல் தடுக்க செய்யப்பட்ட கொலையாக இருக்கும்.

ராஜீவ் கொலையை புலிகள் செய்ததாக சுப்ரமணியன் சுவாமி கூறிய போது புலிகள் இக்கொலையை செய்யவில்லை என RAW கூறியிருந்தது. அவர்களுக்கு உண்மை தெரியும்.

Link to comment
Share on other sites

விருப்பு வாக்குகளும் வெறுப்பு வாக்குகளும் 

தமிழர் அரசியல் தலைமைகள் மக்களை வெறுப்பு வாக்குகளை அளிக்க வேண்டலாம். அதாவது. 'இவர்' வெல்லக்கூடாது என்ற காரணத்தால், 'அவருக்கு' வாக்களிக்க கேட்கலாம். விரும்பி வாக்களிக்க ஒருவரும் இல்லை எனவும் வாதாடலாம். 

இழக்கப்பட்ட சந்தர்ப்பங்கள், புதிய மாற்று சிந்தனையற்ற தூரநோக்கங்கள் தான் எமது இனத்தின் தொடர் அழிவிற்கு காரணம்.   

Link to comment
Share on other sites

யார் குற்றியேனும் அரிசி கிடைக்கட்டும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர் பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதி களை அழைத்து ஆராய்ந்துள்ளது. இது கடந்த 5ஆம் திகதி இடம்பெற்றது.


ஏலவே மதத்தலைவர்கள், புத்திஜீவிகள், அரசியல் ஆய்வாளர்களைக் கொண்ட சுயா தீனக்குழு; தமிழ் அரசியல் கட்சிகளிடையே ஓர் உடன்பாட்டை ஏற்படுத்தி தமிழ் மக்களுக் குச் சாதகமான ஒரு முடிவை அனைவரும் ஏகமனதாக எடுத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
 

இந்நிலையில் அந்த முயற்சிகளைக் கடந்து யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அவசர அவசரமாக தமிழ் அரசியல் கட்சிகளை அழைத்துச் சந்திப்பை நடத்தியுள்ளது.
 

இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 

சின்மயாமிசன்சுவாமிகள், யாழ்.மறை மாவட்ட குருமுதல்வர், திருகோணமலை மறைமாவட்ட ஆயர், தென்கயிலைஆதீனசுவாமிகள் என மதிப்புக்குரிய சமயத்தலைவர் களையும் பொதுமை நிலையில் உள்ள புத்தி ஜீவிகள், அரசியல் ஆய்வாளர்களையும் உள்ளடக்கியதான சுயாதீனக்குழுவின் முயற்சியை தடுத்து நிறுத்துவதற்காக, ஓர் அரசியல் கட்சியின் ஏற்பாட்டிலேயே யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்போந்த அவசர நடவடிக்கையில் ஈடுபட்டது என ஒரு தரப்பினர் கூறிக் கொள்கின்றனர்.
 

தவிர, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முயற்சி நல்லது. ஆனால் ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஒரு சில மாணவர்கள், அரசியல் கட்சிகளில் தங்களுக்கு இடத்தைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு முயற்சியின் பின்னணியில்தான் இந்த ஏற் பாடு என்று குறைபடுவோர்,
 

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் ஏலவே இருந்தவர்கள் பின்னர் அரசியல் கட்சிகளில் இணைந்துள்ளனர் என்றும் இப்போது இருக்கின்ற யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் தாங்கள் எந்த அரசியல் கட்சியிலும் சேர மாட்டோம் என்ற உத்தரவாதத்தை முன்வைப்பார்களா? என்ற கேள்வியையும் தொடுத்துள்ளனர்.
 

இவைதான் என்றால்; கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்களுக்குத் தெரிவிக்காமல், கிழக்கிலுள்ள அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் எவரும் இடம்பெறாத வகையில் செய்யப்பட்ட சந்திப்பானது கிழக்குத் தமிழ் மக்களை ஓரங்கட்டுகின்ற நடவடிக்கை என்றும் பலவாறான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 

எம்மைப் பொறுத்தவரை எழுந்த விமர்சனங்களை ஆற்றுப்படுத்தும் அதேவேளை எம் தமிழினம் வாழ்வதற்காக யாராயினும் ஏதேனும் செய்ய வேண்டும் என்பதுதான்.
 

சுயாதீனக்குழுவின் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் செயற்பட்டது என்ற விமர்சனத்தை நிராகரிக்க முடியாதாயினும், யார் குற்றியேனும் அரிசி கிடைத்தாக வேண்டும் என்ற அடிப்படையில், எங்கள் தமிழி னம் வாழ வேண்டும். எங்கள் இனத்துக்கு நேர்ந்த அவலங்கள் நீங்கி எம் மக்கள் சுதந் திரமாக வாழுகின்ற சூழல் உருவாக வேண்டும்.  இந்தப் பணியில் யார் ஈடுபட்டாலும் அதனை ஆதரிப்பதும் வரவேற்பதும் நம் அனைவரதும் கடமையாகும்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19461&ctype=news

Link to comment
Share on other sites

3 hours ago, goshan_che said:

இது சிக்கிக்கொண்டவர்களை மீட்க தமிழகம் போன படகா?

லாரா நான்தான் முதலிலே கூறிவிட்டேனே புலிகள் தவிர மேலும் பல உள் வெளிநாட்டு சக்திகளுக்கு இதில் பங்கு இருப்பது மறுப்பதற்கில்லை.

நீங்கள் சொல்பவர்கள் திட்டமிடல். Project planning. 

புலிகள் project implementation. 

 implementation பண்ணியவர்களை மட்டும் மாட்டிவிட்டு planners தப்பித்துக் கொண்டார்கள்.   

இதை விட சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்த விடயத்தைப் பற்றி விளக்க முடியாது. 👍🏻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் ஒன்றிணைந்து தாம் சிங்கள முதன்மை வேட்பாளர்கள் எவரையும் ஆதரிக்கப்போவதில்லை என்று காட்டுவார்கள் அல்லது ஒருவரையும் 50 வீதத்திற்கு மேல் எடுக்கவிடமாட்டார்கள் என்று பார்த்தால், அப்படி எந்த முயற்சியும் ஒழுங்காக நடக்கவில்லை. வழமையாக அணில் ஏறவிட்ட நாய்க்குட்டி போலத்தான் இருக்கின்றார்கள்.  கோமாளி அரசியல் செய்யும் சிவாஜி கட்டுப்பணம் செலுத்தி சந்தி சிரிக்க வைத்துள்ளார்.

அதைப் பற்றி அலச இந்தத் திரியில் எதுவும் இல்லையென்று கு.சா. ஐயா  எப்பவோ கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியை உள்ளே இழுத்துவிட்டார்.  இப்ப அது திரியின் திசையை திருப்புகின்றது என்று சொல்லிக்கொண்டே பக்கம் பக்கமாக எழுத பலர் வந்துவிட்டார்கள். இதுதான் பல திரிகளிலும் நடக்கின்றது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கிருபன் said:

ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் ஒன்றிணைந்து தாம் சிங்கள முதன்மை வேட்பாளர்கள் எவரையும் ஆதரிக்கப்போவதில்லை என்று காட்டுவார்கள் அல்லது ஒருவரையும் 50 வீதத்திற்கு மேல் எடுக்கவிடமாட்டார்கள் என்று பார்த்தால், அப்படி எந்த முயற்சியும் ஒழுங்காக நடக்கவில்லை. வழமையாக அணில் ஏறவிட்ட நாய்க்குட்டி போலத்தான் இருக்கின்றார்கள்.  கோமாளி அரசியல் செய்யும் சிவாஜி கட்டுப்பணம் செலுத்தி சந்தி சிரிக்க வைத்துள்ளார்.

அதைப் பற்றி அலச இந்தத் திரியில் எதுவும் இல்லையென்று கு.சா. ஐயா  எப்பவோ கொல்லப்பட்ட ராஜீவ் காந்தியை உள்ளே இழுத்துவிட்டார்.  இப்ப அது திரியின் திசையை திருப்புகின்றது என்று சொல்லிக்கொண்டே பக்கம் பக்கமாக எழுத பலர் வந்துவிட்டார்கள். இதுதான் பல திரிகளிலும் நடக்கின்றது.

 

ஜீயே சொல்லீட்டார்! இனியும் என்ன இங்க நிண்டு எல்லாரும் ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என்று குசு குசுக்கிரியள்? 

போ, போ கூட்டம் போடாத.

 

large.BD976026-E027-44A2-8C96-DC4B98498066.jpeg.b9f37592d61bd726c5471c03499a1899.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ஜீயே சொல்லீட்டார்! இனியும் என்ன இங்க நிண்டு எல்லாரும் ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி என்று குசு குசுக்கிரியள்? 

போ, போ கூட்டம் போடாத.

 

 

விவாதிப்பதை நான் நிப்பாட்டச் சொல்லவில்லை😀. தலைப்பை விட்டுவிட்டு தும்பின் வாலைப்பிடிச்சு அதை  வளைச்சு மரத்தில கட்டிவிட்டு வேறு எதையோ பற்றி அலசுவது நல்லதா? அதுக்கு இன்னொரு தலைப்பை தொடங்கி ஆராயலாம். 😎

அதிலும் conspiracy theory என்றால் எவ்வளவு தூரத்தில் நின்றாலும் லாராவுக்கு மூக்கில் மணத்துவிடும்😂🤣 வந்து பெரிய dossier ஒன்று எழுதி முடிப்பார்😃

Pakistan/PAKSTAN இல் ஒரு I இல்லாததற்கே கடஞ்சாவை மத்தில போட்டுக் கடைஞ்சு எடுத்து இப்ப அவர் தயிரா இருக்கிறா அல்லது மோராகிவிட்டாரா என்றே தெரியவில்லை😆

அது மாதிரி இந்த திரியில் சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி என்றெல்லாம் கதைக்கவேண்டுமா?

Link to comment
Share on other sites

8 minutes ago, கிருபன் said:

Pakistan/PAKSTAN இல் ஒரு I இல்லாததற்கே கடஞ்சாவை மத்தில போட்டுக் கடைஞ்சு எடுத்து இப்ப அவர் தயிரா இருக்கிறா அல்லது மோராகிவிட்டாரா என்றே தெரியவில்லை😆

PAKSTAN இல் I சேர்த்து PAKISTAN உருவாக முதலே PAKISTAN என்ற பெயர் இருந்தது என கடஞ்சா கூறியது தான் அங்கு நடந்த விவாதத்துக்கு காரணம்.

கடஞ்சா தயிராவோ மோராவோ ஆகவில்லை என்பதை இத்திரியை பார்த்தால் உங்களுக்கு புரியும். 😂

https://yarl.com/forum3/topic/232299-சிறிலங்காவில்-‘ஆர்எஸ்எஸ்’சின்-17-கிளை-அமைப்புகள்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இது சிக்கிக்கொண்டவர்களை மீட்க தமிழகம் போன படகா?

ஆம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

ஆம்

😢

3 hours ago, கிருபன் said:

விவாதிப்பதை நான் நிப்பாட்டச் சொல்லவில்லை😀. தலைப்பை விட்டுவிட்டு தும்பின் வாலைப்பிடிச்சு அதை  வளைச்சு மரத்தில கட்டிவிட்டு வேறு எதையோ பற்றி அலசுவது நல்லதா? அதுக்கு இன்னொரு தலைப்பை தொடங்கி ஆராயலாம். 😎

அதிலும் conspiracy theory என்றால் எவ்வளவு தூரத்தில் நின்றாலும் லாராவுக்கு மூக்கில் மணத்துவிடும்😂🤣 வந்து பெரிய dossier ஒன்று எழுதி முடிப்பார்😃

Pakistan/PAKSTAN இல் ஒரு I இல்லாததற்கே கடஞ்சாவை மத்தில போட்டுக் கடைஞ்சு எடுத்து இப்ப அவர் தயிரா இருக்கிறா அல்லது மோராகிவிட்டாரா என்றே தெரியவில்லை😆

அது மாதிரி இந்த திரியில் சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி என்றெல்லாம் கதைக்கவேண்டுமா?

சும்மா இடைகிடை தமிழ் படத்துக்கு நடுவில பாட்டு வாறமாரி இந்த விசயங்கள் வரும் மட்டும் ஓகே. படமே பாட்டாகி பாகவதர் படம் போல ஆனால்தான் பிரச்சினை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.theguardian.com/world/2019/oct/07/us-to-let-turkish-forces-move-into-syria-abandoning-kurdish-allies

👆🏼தேவைப்படும் வரை உபயோகித்து விட்டு, சிரியா வாழ் குர்திய இன மக்களை முதுகில் குத்திய அமேரிக்கா.

சர்வதேசம உதவியுடன் நாம் தீர்வு பெறலாம் என்போர்க்கு.

Link to comment
Share on other sites

16 hours ago, goshan_che said:

இது சிக்கிக்கொண்டவர்களை மீட்க தமிழகம் போன படகா?   

 

11 hours ago, MEERA said:

ஆம்

இவருடைய மரண சடங்குக்கு போன பழைய நினைவு. முன்னாள் நண்பரின் உறவினர். வாய்வழி கதைகள் இப்போது எழுத்துருவில் நிலையாக இணையத்தில் என்றென்றும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

😢

சும்மா இடைகிடை தமிழ் படத்துக்கு நடுவில பாட்டு வாறமாரி இந்த விசயங்கள் வரும் மட்டும் ஓகே. படமே பாட்டாகி பாகவதர் படம் போல ஆனால்தான் பிரச்சினை.

அட்றா... சக்கை.  நல்ல உவமானம்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

 

இவருடைய மரண சடங்குக்கு போன பழைய நினைவு. முன்னாள் நண்பரின் உறவினர். வாய்வழி கதைகள் இப்போது எழுத்துருவில் நிலையாக இணையத்தில் என்றென்றும்....

ம்ம்ம்...இப்படி எத்தனை இழப்புகள்...இந்த இனத்தில் சுயநலமில்லாத மனிதர்கள் எல்லாம் ஒரு கால இடைவெளியில் பிறந்து, ஒரு கால இடைவெளியில் இறந்து விட்டார்களோ எனவும் நான் எண்ணுவதுண்டு.

11 hours ago, தமிழ் சிறி said:

அட்றா... சக்கை.  நல்ல உவமானம்.  :grin:

🙏🏾. உவ மானம் எண்டா? எவ மானம்?

Link to comment
Share on other sites

On 10/6/2019 at 7:04 PM, Justin said:

கடந்த பத்திற்கு மேற்பட்ட ஆண்டுகளில் சகலருக்கும் கிடைத்த தரவுகளின் படி, சஜித் வந்தால் ஏற்படக் கூடிய நிலை, கோத்தா வந்தால் ஏற்படக்கூடிய நிலையை விட மேல் தான்! இதன் அர்த்தம் சஜித் கோத்தாவை விட மேல் என்று நாம் சான்றிதழ் கொடுப்பதாக அமையாது! இருக்கிற வரையறுக்கப் பட்ட தெரிவுகளில், தாயக மக்களை மீண்டும் கடத்திக் கொலை செய்யாத ஒருவரை பதவிக்கு வரச் சார்பாகக் கருத்துரைப்பது அடிமைப் புத்தி அல்ல!

தாயகத்திலோ புலத்திலோ பாதுகாப்பாக இருந்தபடி, அந்தப் பாதுகாப்பு இல்லாத தமிழர்களை கோத்தாவிடம் பலி கொடுத்து, படம் எடுத்து தீர்வு பெறலாம் என நினைக்கும் நப்பாசைக்கு என்ன பெயர் என்று எனக்குத் தெரியவில்லை! 

தாயக மக்களின் உயிரைப் பணயம் வைத்து சர்வதேசத்திடம் இருந்து பெற இனி ஒன்றும் இல்லை! நூறு வழிகளில் சொன்னாலும் இது தான் அடிப்படையான யதார்த்தம்! 

தமிழினத்துக்கு மிகவும் நியாயமான பிரச்சினைகள் இருந்தும் இன்னமும் தொடர்ந்து இனவழிப்பை எதிர்கொள்வதற்கு முக்கிய காரணம் தமிழினத்தில் முற்போக்காளர்கள் என்ற போர்வையில மோசமான பிற்போக்காளர்களும், யதார்த்தவாதிகள் என்ற போர்வையில மோசமான முட்டாள்களும் (பலரை இங்கேயே காணலாம்), ஒரு தமிழின கொலைகாரக் கும்பலை விட மற்றைய தமிழின கொலைகாரக் கும்பல் திறம் என்று அந்தக் கொலைகாரக் கும்பலின் பின்னால் திரியும் மிக மோசமான அடிமைப் புத்தி கொண்டவர்கள் (டக்ளஸ், ஆனந்தசங்கரி, சுமந்திரன் வகையறாக்கள்), ராஜதந்திரம் என்ற போர்வையில சுயநலப் பிசாசுகள்  என பலர் இருப்பது ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Rajesh said:

தமிழினத்துக்கு மிகவும் நியாயமான பிரச்சினைகள் இருந்தும் இன்னமும் தொடர்ந்து இனவழிப்பை எதிர்கொள்வதற்கு முக்கிய காரணம் தமிழினத்தில் முற்போக்காளர்கள் என்ற போர்வையில மோசமான பிற்போக்காளர்களும், யதார்த்தவாதிகள் என்ற போர்வையில மோசமான முட்டாள்களும் (பலரை இங்கேயே காணலாம்), ஒரு தமிழின கொலைகாரக் கும்பலை விட மற்றைய தமிழின கொலைகாரக் கும்பல் திறம் என்று அந்தக் கொலைகாரக் கும்பலின் பின்னால் திரியும் மிக மோசமான அடிமைப் புத்தி கொண்டவர்கள் (டக்ளஸ், ஆனந்தசங்கரி, சுமந்திரன் வகையறாக்கள்), ராஜதந்திரம் என்ற போர்வையில சுயநலப் பிசாசுகள்  என பலர் இருப்பது ஆகும்.

நீங்க லேட்டா வந்தாலும் அதே பழைய பல்லவியோடு வருவீர்கள் என்பது தெரியும்! இந்த தேர்தலில் தமிழர் நிலையை விளங்கிக் கொள்ள முன்கூட்டியே அறிந்து கொள்ள முற்போக்கு, பிற்போக்கு நடுப் போக்கு எதுவும் தேவையில்லை!  

தமிழர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தால் கோத்தா வருவார், சஜித்தை எதிர்த்து கோத்தாவுக்கு வாக்குப் போட்டாலும் கோத்தா வருவார்!அவர் வந்தால் முள்ளிவாய்க்கால் வேர்ஷன் 2.0 வரும்! இதை மறுக்க உங்களிடம் தரவு ரீதியான ஆதாரங்கள் இருந்தால் தாருங்கள்!

இல்லையேல் இப்படியே இருங்கள்! பெருவாரியான தாயக மக்களுக்கு உங்கள் "இசக்" கருத்துகளால் ஒரு பயனும் இல்லை, விக்கினமும் இல்லை! ஏனெனில் அவர்கள் சிம்பொலிக் அரசியலைத் தாண்டிக் கனகாலமாகி விட்டது!

Link to comment
Share on other sites

10 hours ago, Justin said:

நீங்க லேட்டா வந்தாலும் அதே பழைய பல்லவியோடு வருவீர்கள் என்பது தெரியும்!

நீங்க எப்ப வந்தாலும் திட்டமிட்ட தமிழின படுகொலைகார்களுக்கு ஆதரவான பல்லவியோட வருவீங்க என்டு எல்லாருக்குமே தெரியுமே!

10 hours ago, Justin said:

இந்த தேர்தலில் தமிழர் நிலையை விளங்கிக் கொள்ள முன்கூட்டியே அறிந்து கொள்ள முற்போக்கு, பிற்போக்கு நடுப் போக்கு எதுவும் தேவையில்லை!  

ஓ! அப்பிடியா? அப்ப கண்ணை மூடிக்கொண்டு உளறினா போதுமென்டுறீங்க!

10 hours ago, Justin said:

தாயக மக்களுக்கு உங்கள் "இசக்" கருத்துகளால் ஒரு பயனும் இல்லை, விக்கினமும் இல்லை!

அப்ப உங்கட "வெறிக்" கருத்துக்களால் தான் தாயக மக்கள் சம்சும் சம்சும் சம்சும் என்டு சிங்களவனுக்கு மாறி மாறி முண்டு அழிஞ்சு போகீனம் என்டு ஒத்துக்கிறீங்க!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Justin said:

தமிழர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தால் கோத்தா வருவார், சஜித்தை எதிர்த்து கோத்தாவுக்கு வாக்குப் போட்டாலும் கோத்தா வருவார்!அவர் வந்தால் முள்ளிவாய்க்கால் வேர்ஷன் 2.0 வரும்! இதை மறுக்க உங்களிடம் தரவு ரீதியான ஆதாரங்கள் இருந்தால் தாருங்கள்!

Version 1 இற்கு போர் எனும்  மூல காரணம்  இருந்தது , Version 2 இற்கு  அப்படியான என்ன காரணம் உள்ளது என உங்கள் தரவு ரீதியான ஆதாரத்தை அறிந்துகொள்ளலாமா ....? இல்லை  Version 2 முஸ்லிம்களுக்கெதிரானது என்ற எதிர்வுகூறலாக எடுத்துக்கொள்ளலாமா...? அப்படி நடந்தால் அதைப்பற்றி யோசிக்க, கவலைப்படவேண்டிய அவசியம் தமிழர்களுக்கில்லை , 
ஆனால் ஒரு சாத்தியம் உள்ளது Version 2 இற்குள் தமிழ்மக்களையும் இழுத்துக்கொண்டு போய் வாண்டடா கோர்த்துவிட்டுவிடும் சாணக்கியம் கூத்தமைப்பின் கோமாளிகளுக்கு உண்டு. சகோதர பாசத்தில் அவர்கள் சின்னத்தம்பி பட அண்ணன்மார் 

Link to comment
Share on other sites

15 hours ago, Justin said:

தமிழர்கள் தேர்தலைப் பகிஷ்கரித்தால் கோத்தா வருவார், சஜித்தை எதிர்த்து கோத்தாவுக்கு வாக்குப் போட்டாலும் கோத்தா வருவார்!அவர் வந்தால் முள்ளிவாய்க்கால் வேர்ஷன் 2.0 வரும்! இதை மறுக்க உங்களிடம் தரவு ரீதியான ஆதாரங்கள் இருந்தால் தாருங்கள்!

 

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

Version 1 இற்கு போர் எனும்  மூல காரணம்  இருந்தது , Version 2 இற்கு  அப்படியான என்ன காரணம் உள்ளது என உங்கள் தரவு ரீதியான ஆதாரத்தை அறிந்துகொள்ளலாமா ....? 

கோத்தபாயவுக்கு உள்ள மூல காரணம், தானும் தன் சகோதரர்களும். அனைத்து வழிகளிலும் இலங்கையை விற்று ஆடம்பரமாக வாழ்வது.

அந்த காரணத்துக்கு ஆதாரம் அவரது மகனின் ஆடம்பர திருமணம். அவரது முன்னாள் செயலாளருக்கான ஓய்வூதியத்தில் இந்த கலியாணம் நடந்திருக்க முடியாது இல்லையா?

Version 2 வந்தால் தான் போர் விமானங்கள் வாங்கலாம், ஆயுதங்கள் வாங்கலாம். அரசின் கடனில் வாங்கி வேறு அமைப்புகளுக்கு விற்று அந்த பணத்தில் துபாயில் வேறு பினாமிகள் பெயரில் ஹொட்டேல்கள் வாங்கலாம்.... இது தான் கோத்தாவின் அவான்ற் கிறேட் செய்த வணிகம். போர் விமான ஊழல் தான் லசந்தவின் கொலைக்கு காரணமானது.

இது புரிவதற்கு சிக்கலான சங்கதி ... புரியாவிட்டால் விட்டு விடுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Jude said:

Version 2 வந்தால் தான் போர் விமானங்கள் வாங்கலாம், ஆயுதங்கள் வாங்கலாம். அரசின் கடனில் வாங்கி வேறு அமைப்புகளுக்கு விற்று அந்த பணத்தில் துபாயில் வேறு பினாமிகள் பெயரில் ஹொட்டேல்கள் வாங்கலாம்.... இது தான் கோத்தாவின் அவான்ற் கிறேட் செய்த வணிகம்.

இது புரிவதற்கு சிக்கலான சங்கதி ... புரியாவிட்டால் விட்டு விடுங்கள்.

விமானம் வாங்கலாம்,ஆயுதம் வாங்கலாம்  ...சரிதானுங்கோ 
வாங்கி யாரை போடலாம் .....?  மின்னாடி போட புலிகள் இருந்தாங்கோ 
இப்போ செத்த பாம்புதான் இருக்கு ,
நாட்டின்பேரில கடனை வாங்கி தன்னோட  வயித்தை ரொப்பினா பாதிக்கப்படப்போவது 12 லட்சம் தமிழர்கள் மட்டுமல்ல 75 லட்சம் சிங்களவர்களும் சேர்ந்துதான் என்ன தமிழர்களுக்கு வெளிநாட்டு காசாவது வரும் அடித்தட்டு சிங்களவனுகளுக்கு கக்கா மட்டும் தான் வரும் , இதுக்குமுன்னாடி இருந்த அரசாங்கமும் இதே மொள்ளமாரிகள் தான் என்ன இவன்  ஊர் பொறுக்கி அவனுகள் தெருப்பொறுக்கி ,எதோ கோத்தா மட்டும் தான் ஊரையடிச்சி உலையில் போட்டது போலவும் அவனுகள் நாட்டுக்கு சேவை செய்தது போலவும் சொல்லுறியள். இவன் அவன்ட்கார்ட் என்றால் அவனுகள் பிணைமுறி, இலங்கையை பொறுத்தவரை எப்பவும் போணியாகும் இனவாத அரசியல் அதில் கோத்தாவின்  கம்பனி கிங்.   இதில என்ன ஸ்பெஷலா விளங்க இருக்கு. 

Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

Version 1 இற்கு போர் எனும்  மூல காரணம்  இருந்தது , Version 2 இற்கு  அப்படியான என்ன காரணம் உள்ளது என உங்கள் தரவு ரீதியான ஆதாரத்தை அறிந்துகொள்ளலாமா ....? இல்லை  Version 2 முஸ்லிம்களுக்கெதிரானது என்ற எதிர்வுகூறலாக எடுத்துக்கொள்ளலாமா...? அப்படி நடந்தால் அதைப்பற்றி யோசிக்க, கவலைப்படவேண்டிய அவசியம் தமிழர்களுக்கில்லை , 
ஆனால் ஒரு சாத்தியம் உள்ளது Version 2 இற்குள் தமிழ்மக்களையும் இழுத்துக்கொண்டு போய் வாண்டடா கோர்த்துவிட்டுவிடும் சாணக்கியம் கூத்தமைப்பின் கோமாளிகளுக்கு உண்டு. சகோதர பாசத்தில் அவர்கள் சின்னத்தம்பி பட அண்ணன்மார் 

கோத்தா வந்தால் சாதாரண முஸ்லிம்களையும் அழித்து சாதாரண தமிழர்களையும் அழிப்பார். அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Lara said:

கோத்தா வந்தால் சாதாரண முஸ்லிம்களையும் அழித்து சாதாரண தமிழர்களையும் அழிப்பார். அரசியல்வாதிகள் தப்பித்துக்கொள்வார்கள்.

நமது அரசியலே வீக்  ....எங்கள் அரசியல் கோமாளிகள் இந்த ஏரியாவில் படு வீக் 
அடுத்தவனுடன் வெட்டியோடி தமக்கு தேவையானவற்றை பெறத்தெரியாது,பிழையை நம்மீது வைத்துக்கொண்டு கோத்தா பூச்சாண்டி காட்டி பருப்பை ரொம்ப நாள் வேகவைக்க முடியாது பாத்தியளோ 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு விழிப்புண‌ர்வு  குறைய‌ இவ‌ர்க‌ளின் ஆட்ட‌ம் இன்னும் சிறிது கால‌ம் தான் கைபேசி மூல‌ம் வ‌ள‌ந்த‌ பிளைக‌ளிட‌ம் 1000 2000ரூபாய் எடுப‌டாது...................... நாட்டு ந‌ல‌ன் க‌ருதி யார் உண்மையா செய‌ல் ப‌டுகின‌மோ அவைக்கு தான் ஓட்டு..............................
    • அதுதான்…. இல்லை. அந்தச் சனத்துக்கு சாராயத்தை விற்று, அந்த மண்ணின் கனிம வளங்களை சுரண்டி… அரசியல்வாதிகள் தான்  முன்னேறிக் கொண்டு இருக்கிறார்கள்.
    • இப்ப‌டி ப‌ல‌ரின் பெய‌ர் வாக்க‌ள‌ர் ப‌ட்டிய‌லில் இல்லை புல‌வ‌ர் அண்ணா..........................நாம் த‌மிழ‌ர் க‌ட்சி பெடிய‌ன் சொந்த‌ ஊரில் ப‌ல‌ வாட்டி ஓட்டு போட பெடிய‌னுக்கு நீ இந்த‌ ஊரில் போட‌ முடியாது வேறு ஊரில் போய் போட‌ சொல்ல‌ அந்த‌ பெடிய‌ன் 40கிலே மீட்ட‌ர் மோட்ட‌ சைக்கில‌ சென்று ஓட்டு போட்ட‌து அந்த‌ பெடிய‌ன் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு பெரிய‌ பங்காற்றினது...................... காணொளி ஆதார‌ம் இதோ..........................................     இந்த‌ பெடிய‌னுக்கும் மேடையில் பேசிக்கு கொண்டு இருக்கும் போது திராவிட‌ குண்ட‌ர்க‌க் இந்த‌ பெடிய‌னுக்கு அடிக்க‌ மேடை ஏறின‌வை ஆனால் இந்த‌ பெடிய‌ன் நினைத்து இருந்தால் திராவிட‌ குண்ட‌ர்க‌ளை அடிச்சு வீழ்த்தி இருப்பார்..................வ‌ய‌தான‌ கிழ‌டுக‌ள் திமுக்காவில் அராஜ‌க‌ம் செய்துக‌ள்.................இப்ப‌டி ஒவ்வொரு த‌ரின் ஓட்டு உரிமைக்கு தேர்த‌ல் நேர‌ம் வேட்டு வைப்ப‌து ப‌ய‌த்தின் முத‌ல் கார‌ண‌ம்........................விடிய‌ல் ஆட்சி எப்ப‌ க‌வுழுதோ அப்ப‌ தான் த‌மிழ் நாட்டில் மீண்டும் அட‌க்குமுறை இல்லாம‌ ஊட‌க‌த்தில் இருந்து ஓட்டு உரிமையில் இருந்து எல்லாம் நேர்மையா ந‌ட‌க்கும்.......................................................................
    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.