Jump to content

Recommended Posts

1 minute ago, அக்னியஷ்த்ரா said:

நமது அரசியலே வீக்  ....எங்கள் அரசியல் கோமாளிகள் இந்த ஏரியாவில் படு வீக் 
அடுத்தவனுடன் வெட்டியோடி தமக்கு தேவையானவற்றை பெறத்தெரியாது,பிழையை நம்மீது வைத்துக்கொண்டு கோத்தா பூச்சாண்டி காட்டி பருப்பை ரொம்ப நாள் வேகவைக்க முடியாது பாத்தியளோ 

கூட்டமைப்பினர் பேரம் பேசுவதில்லை என நானே விமர்சனம் வைத்திருக்கிறேன். இங்கு கூட்டமைப்பு பற்றி நான் கதைக்கவில்லை.

கூட்டமைப்பினரே இத்தேர்தலில் கோத்தாவை வெல்ல வைக்க முயல்கிறார்களோ தெரியவில்லை.

கோத்தா வந்தால் தமிழினம் விரைவில் அழியும்.

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply

JVP hopeful of getting TELO, PLOTE support

JVP MP Vijitha Herath said yesterday there had been several unofficial discussions between the Janatha Vimukthi Peramuna (JVP) and constituent parties of the Tamil National Alliance (TNA) to garner their support to Anura Kumara Dissanayake, who was fielded as the presidential candidate of the National Peoples’ Power (NPP).

He said they had discussions with the Tamil Eelam Liberation Organisation (TELO) and the People's Liberation Organisation of Tamil Eelam (PLOTE) which are constituent parties of the TNA.

Mr. Herath said the TNA had not taken a final decision as to which candidate they will support at the presidential election.

He said the NPP had held several rounds of discussions to garner the support of the Tamil and Muslim people in the north, east and in the upcountry.

http://www.dailymirror.lk/breaking_news/JVP-hopeful-of-getting-TELO-PLOTE-support/108-176034

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

கூட்டமைப்பினர் பேரம் பேசுவதில்லை என நானே விமர்சனம் வைத்திருக்கிறேன். இங்கு கூட்டமைப்பு பற்றி நான் கதைக்கவில்லை.

கூட்டமைப்பினரே இத்தேர்தலில் கோத்தாவை வெல்ல வைக்க முயல்கிறார்களோ தெரியவில்லை.

கோத்தா வந்தால் தமிழினம் விரைவில் அழியும்.

கூத்தமைப்பு விட்ட இடைவெளிகளை கோத்தாவை வைத்து நிரப்ப முடியாது.
கோத்தா வந்தால் மட்டும் தான் தமிழினம் அழியும் என்பது போன்று கட்டமைப்பதை தான் நான் நிராகரிக்கிறேன். கோத்தா சயனைட் என்றால் சஜித் ஆசனிக், பாய்சன் பாய்சன் தான்
பாய்சனிடம் இருந்து எம்மை காப்பாற்றும் சக்தி எமது அரசியல் தலைமைகளுக்கு இல்லை அவர்களிடம்  தலைவிதியை கொடுத்து  விட்டு எந்த பாய்சன் Less Effective என்று நோண்டி  ஒரு பிரயோசனமும் இல்லை.   

Link to comment
Share on other sites

6 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கூத்தமைப்பு விட்ட இடைவெளிகளை கோத்தாவை வைத்து நிரப்ப முடியாது.
கோத்தா வந்தால் மட்டும் தான் தமிழினம் அழியும் என்பது போன்று கட்டமைப்பதை தான் நான் நிராகரிக்கிறேன். கோத்தா சயனைட் என்றால் சஜித் ஆசனிக், பாய்சன் பாய்சன் தான்
பாய்சனிடம் இருந்து எம்மை காப்பாற்றும் சக்தி எமது அரசியல் தலைமைகளுக்கு இல்லை அவர்களிடம்  தலைவிதியை கொடுத்து  விட்டு எந்த பாய்சன் Less Effective என்று நோண்டி  ஒரு பிரயோசனமும் இல்லை.   

சிங்கள இனவாதத்தில் இருந்து தமிழரை காப்பாற்றும் சக்தி 1950 களில் தமிழ் அரசியல்வாதிகளுக்கும், 2002 ல்  புலிகளுக்கும் இருந்தது. இரண்டையும் சம்பந்தப்பட்ட அந்த  இருவரும் சரிவர பயன்படுத்த வில்லை. இப்போது அந த சக மி அறவே இல்லை. இருப்பதுல் எது கொஞ்சம் ரிலாக்ஸ் தருமோ அதை தெரிவு செய்ய வேண்டியது தான் . 

Link to comment
Share on other sites

17 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கூத்தமைப்பு விட்ட இடைவெளிகளை கோத்தாவை வைத்து நிரப்ப முடியாது.
கோத்தா வந்தால் மட்டும் தான் தமிழினம் அழியும் என்பது போன்று கட்டமைப்பதை தான் நான் நிராகரிக்கிறேன். கோத்தா சயனைட் என்றால் சஜித் ஆசனிக், பாய்சன் பாய்சன் தான்
பாய்சனிடம் இருந்து எம்மை காப்பாற்றும் சக்தி எமது அரசியல் தலைமைகளுக்கு இல்லை அவர்களிடம்  தலைவிதியை கொடுத்து  விட்டு எந்த பாய்சன் Less Effective என்று நோண்டி  ஒரு பிரயோசனமும் இல்லை.   

கோத்தா வந்தால் மட்டும் தான் தமிழினம் அழியும் என யாரும் கூறவில்லை. 

கோத்தா வந்தால் தமிழினம் விரைவில் அழியும். சஜித் வந்தால் தமிழினம் மெதுமெதுவாக அழியும். 

எப்படியும் இருவரில் ஒருவர் தான் ஜனாதிபதி. 

தமிழர்கள் இத்தேர்தலில் எடுக்கும் முடிவு தமிழினத்தை விரைவில் அழிக்கும் ஒருவரை வெற்றியடைய வைத்துவிட கூடாது.

மகிந்த, கோத்தா தரப்பு 2009 இல் மேற்கொண்ட தமிழின அழிப்பையும் இலகுவில் மறந்துவிட முடியாது.

Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

விமானம் வாங்கலாம்,ஆயுதம் வாங்கலாம்  ...சரிதானுங்கோ 
வாங்கி யாரை போடலாம் .....?  மின்னாடி போட புலிகள் இருந்தாங்கோ 
இப்போ செத்த பாம்புதான் இருக்கு ,
நாட்டின்பேரில கடனை வாங்கி தன்னோட  வயித்தை ரொப்பினா பாதிக்கப்படப்போவது 12 லட்சம் தமிழர்கள் மட்டுமல்ல 75 லட்சம் சிங்களவர்களும் சேர்ந்துதான் என்ன தமிழர்களுக்கு வெளிநாட்டு காசாவது வரும் அடித்தட்டு சிங்களவனுகளுக்கு கக்கா மட்டும் தான் வரும் , இதுக்குமுன்னாடி இருந்த அரசாங்கமும் இதே மொள்ளமாரிகள் தான் என்ன இவன்  ஊர் பொறுக்கி அவனுகள் தெருப்பொறுக்கி ,எதோ கோத்தா மட்டும் தான் ஊரையடிச்சி உலையில் போட்டது போலவும் அவனுகள் நாட்டுக்கு சேவை செய்தது போலவும் சொல்லுறியள். இவன் அவன்ட்கார்ட் என்றால் அவனுகள் பிணைமுறி, இலங்கையை பொறுத்தவரை எப்பவும் போணியாகும் இனவாத அரசியல் அதில் கோத்தாவின்  கம்பனி கிங்.   இதில என்ன ஸ்பெஷலா விளங்க இருக்கு. 

முதலே சொன்னேனே? Version 2 வுக்கு  ஆதாரம் கேட்டீர்கள். அதை இப்பொது உங்களால் இல்லை என்றும் சொல்ல முடியவில்லை - குழம்பி போய்  விட்டீர்களே. இப்படி அலம்பலாமா? 😋

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Jude said:

முதலே சொன்னேனே? Version 2 வுக்கு  ஆதாரம் கேட்டீர்கள். அதை இப்பொது உங்களால் இல்லை என்றும் சொல்ல முடியவில்லை - குழம்பி போய்  விட்டீர்களே. இப்படி அலம்பலாமா? 😋

 

நீங்க சொன்ன ஆதாரம் சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்று உங்களுக்கே புரியலையா 
இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா 😂😂😂
ஆதாரம் கேட்டால் ஆதாரம் போடவேண்டும் இலங்கையில் அன்றாடம் நடப்பதையல்ல , 
Version 2 இற்கு ஆதாரம் கேட்டால் 
ஆயுதம் வாங்கி கள்ளச்சந்தையில் விற்பதையெல்லாம் போடுகிறீர்கள் ...இதற்கும் Version 2 இற்கும் என்ன தொடர்பு...? ,நான்கு அமைச்சர்களுக்கு V8 சஹாரா தீர்வையற்று இறக்கினாலே பொருளாதாரம் கிடுகிடுக்குமளவுக்கு வீக்கான பொருளாதாரத்தில் ஆயுதம் வாங்குவாராம்... விப்பாராம்.
கேக்கிறவன் கேனையானா இருந்தா பழ மொழி தான் ஞாபகம் வருது 

போர்க்காலத்தில் கதைவேற கேட்காமலே ஆயுதம் கூரையை பிளந்து கொட்டியது கோத்தாவும் அதை வச்சு 
பணம் பார்த்தார். இப்போ எந்த நாடு எதற்கு இலவசமாக  இவருக்கு ஆயுதம் கொடுக்கும்.    

18 minutes ago, Lara said:

கோத்தா வந்தால் மட்டும் தான் தமிழினம் அழியும் என யாரும் கூறவில்லை. 

கோத்தா வந்தால் தமிழினம் விரைவில் அழியும். சஜித் வந்தால் தமிழினம் மெதுமெதுவாக அழியும். 

எப்படியும் இருவரில் ஒருவர் தான் ஜனாதிபதி. 

தமிழர்கள் இத்தேர்தலில் எடுக்கும் முடிவு தமிழினத்தை விரைவில் அழிக்கும் ஒருவரை வெற்றியடைய வைத்துவிட கூடாது.

மகிந்த, கோத்தா தரப்பு 2009 இல் மேற்கொண்ட தமிழின அழிப்பையும் இலகுவில் மறந்துவிட முடியாது.

ஆக அழிவதுதான் என்று முடிவெடுத்துவிட்டீர்கள் , தமிழர்களது முள்ளிவாய்க்காலுக்கு விடுதலை புலிகளை Sole ownership ஆக்குவது போல , தமிழர்களின் தற்போதைய அரசியல் தற்கொலைக்கு கூத்தமைப்பை Sole ownership ஆக்க தயாரா ...தயார் என்றால் அத்துடன் எனது விவாதம் முடிகிறது 

Link to comment
Share on other sites

18 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நீங்க சொன்ன ஆதாரம் சின்னப்புள்ளத்தனமா இருக்கு என்று உங்களுக்கே புரியலையா 
இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா 😂😂😂
ஆதாரம் கேட்டால் ஆதாரம் போடவேண்டும் இலங்கையில் அன்றாடம் நடப்பதையல்ல , 
Version 2 இற்கு ஆதாரம் கேட்டால் 
ஆயுதம் வாங்கி கள்ளச்சந்தையில் விற்பதையெல்லாம் போடுகிறீர்கள் ...இதற்கும் Version 2 இற்கும் என்ன தொடர்பு...? ,நான்கு அமைச்சர்களுக்கு V8 சஹாரா தீர்வையற்று இறக்கினாலே பொருளாதாரம் கிடுகிடுக்குமளவுக்கு வீக்கான பொருளாதாரத்தில் ஆயுதம் வாங்குவாராம்... விப்பாராம்.
கேக்கிறவன் கேனையானா இருந்தா பழ மொழி தான் ஞாபகம் வருது 

போர்க்காலத்தில் கதைவேற கேட்காமலே ஆயுதம் கூரையை பிளந்து கொட்டியது கோத்தாவும் அதை வச்சு 
பணம் பார்த்தார். இப்போ எந்த நாடு எதற்கு இலவசமாக  இவருக்கு ஆயுதம் கொடுக்கும்.    

ஆக அழிவதுதான் என்று முடிவெடுத்துவிட்டீர்கள் , தமிழர்களது முள்ளிவாய்க்காலுக்கு விடுதலை புலிகளை Sole ownership ஆக்குவது போல , தமிழர்களின் தற்போதைய அரசியல் தற்கொலைக்கு கூத்தமைப்பை Sole ownership ஆக்க தயாரா ...தயார் என்றால் அத்துடன் எனது விவாதம் முடிகிறது 

ம்  ... குழப்பம் இன்னும் தீரவில்லையா? 😋 ஆயுதத்துக்கும் போருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கும் அளவுக்கு குழம்பி விட்டீர்களே? அதற்குள் எங்கே இருந்து "இலவச" சங்கதி வந்தது? 😅 புரிவதற்கு சிக்கலான சங்கதி என்றால் விட்டுவிடுங்கள் என்றேன். இப்போதாவது அந்த முடிவுக்கு வந்தது நல்லது தான். அல்லது மேலும் குழம்பி மேலே தட்டிவிட்டால் ... நான் பொறுப்பாக மாட்டேன்.😎

Link to comment
Share on other sites

54 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஆக அழிவதுதான் என்று முடிவெடுத்துவிட்டீர்கள் , தமிழர்களது முள்ளிவாய்க்காலுக்கு விடுதலை புலிகளை Sole ownership ஆக்குவது போல , தமிழர்களின் தற்போதைய அரசியல் தற்கொலைக்கு கூத்தமைப்பை Sole ownership ஆக்க தயாரா ...தயார் என்றால் அத்துடன் எனது விவாதம் முடிகிறது 

அழிவது என முடிவெடுத்தது நாம் அல்ல.

சிங்களவர்கள் இலங்கையை சிங்கள பௌத்த நாடாக்கும் வரைக்கும் தமிழர்களை அழித்துக்கொண்டு தான் இருப்பார்கள். யார் ஜனாதிபதியாக வந்தாலும் அது நடக்கும். இது பலருக்கும் தெரிந்த விடயம்.

தமிழர்கள் பக்கம் எந்த ஒரு நாடும் இல்லை. தமிழர்களின் தேவையும் எந்த ஒரு நாட்டிற்கும் இல்லை. 

முள்ளிவாய்க்காலுக்கு புலிகள் தான் காரணம் என நான் இதுவரை எழுதியதில்லை. இலங்கை அரசுடன் சர்வதேசம் சேர்ந்து நடத்திய அழிவு அது.

கூட்டமைப்பு ஒழுங்கான அரசியல் செய்வதில்லை என்பது உண்மை. அவர்கள் இந்தியா, அமெரிக்காவின் வால்களாக தான் இதுவரை இருந்தார்கள். இனியும் இருப்பார்கள். ஆனால் கூட்டமைப்பு நினைத்தால் கூட தமிழின அழிவை தடுக்க முடியாது. ஆனால் முஸ்லிம்கள் போல் அரசியல் செய்து தமிழர்கள் நிலையை இருப்பதை விட சற்று முன்னேற்ற முடியும். அதை அவர்கள் செய்வதில்லை.

கூட்டமைப்பு இத்தேர்தலில் அநுரவுக்கு வாக்களிக்க சொன்னாலோ, அல்லது தேர்தலை புறக்கணிக்க சொன்னாலோ கூட மக்கள் சஜித்துக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து.

கோத்தா வருவதை விட சஜித் வருவது ஒப்பீட்டளவில் தமிழர்கள் தமது இருப்பை நீண்டகாலம் தக்க வைத்துக்கொள்ள உதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Jude said:

ம்  ... குழப்பம் இன்னும் தீரவில்லையா? 😋 ஆயுதத்துக்கும் போருக்கும் என்ன தொடர்பு என்று கேட்கும் அளவுக்கு குழம்பி விட்டீர்களே? அதற்குள் எங்கே இருந்து "இலவச" சங்கதி வந்தது? 😅 புரிவதற்கு சிக்கலான சங்கதி என்றால் விட்டுவிடுங்கள் என்றேன். இப்போதாவது அந்த முடிவுக்கு வந்தது நல்லது தான். அல்லது மேலும் குழம்பி மேலே தட்டிவிட்டால் ... நான் பொறுப்பாக மாட்டேன்.😎

அண்ணை காமெடிக்கு அளவே இல்லை 🤣
அண்ணை போர் ..போர் என்கிறீங்களே அந்த போரை யாரோட அண்ணை கோத்தா புரியப்போறார் ...? 😂
போரில்லாமலா Version 2 வரப்போகுது , Vesion 2 இல்லாமலா ஆயுதம்,விமானம் வாங்கப்போறார் 
தமிழரோட புரிய தமிழரிடம் என்ன மீதி இருக்கு ....? இதுக்கெல்லாம் பதில் சொல்லாமல் போர் , Version 2 என்றால் இதுக்குள்ள அடுத்தவனை குழப்பிட்டாராம் ...  அவண்ட் கார்ட் பற்றி அடுத்தவனுக்கு பாடம் எடுக்க முதல் நமக்கு அதைப்பற்றி  தெளிவு இருக்கணும் அண்ண ...அண்ண அவண்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியத்தில் இலங்கை அரச ஆயுதக்களஞ்சியத்திலுள்ள ஆயுதங்களை திருடி அதனை தனியார் கடல் பாதுகாப்பிற்க்கெண்டு  என்று சொல்லி கள்ளச்சந்தையில் விற்றது தான் அவர் மீதான குற்றம்.
இதில் பல காணாமல் போன ஆயுதங்கள் இறுதியுத்தத்தில் இலங்கைக்கு பலவித பெயர்களால் அளிக்கப்பட்டவை . இதுவெல்லாம் தெரிந்து தான் கருத்திடுகிறீர்களா இல்ல எப்போதோ எங்கேயோ கேள்விப்பட்ட பெயரை சகட்டுமேனிக்கு அடித்து விடுகிறீர்களா...?
நமக்கெதுக்கண்ணை தெரியாத சமாச்சாரம் ... அடிப்படையே வீக் இதுல எதுக்கு அடுத்தவனை சொறிவான் ....?😎

Quote

“Police investigating the Avant-Garde Security Service floating armoury case sought and secured a ban on their travel abroad,” the statement said, naming the four individuals involved.

Shortly after former president Mahinda Rajapaksa was defeated at 8 January elections, partly on corruption and cronyism claims, police in Galle found a ship carrying more than 3,000 automatic weapons, including machine guns.

Investigators have been trying to locate thousands of weapons they say have disappeared from the inventories of the island’s security forces and are thought to have been transferred to individuals.

Avant-Garde Security Service has said its legally obtained armoury had been authorised by Gotabhaya Rajapaksa to enable the private company to carry out armed escorts of commercial ships.

The new government of President Maithripala Sirisena insists Rajapaksa did not have the legal authority to approve such private hauls.

A police source said the former defence secretary has been questioned in Colombo as part of the ongoing investigation and the travel ban was sought because they need to interview him further.

The former president’s brothers and other family members held key positions in the previous government. Mahinda Rajapaksa’s younger brother Basil, who had been economic development minister, left the island soon after the president’s defeat.

 

Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

ஆக அழிவதுதான் என்று முடிவெடுத்துவிட்டீர்கள் , தமிழர்களது முள்ளிவாய்க்காலுக்கு விடுதலை புலிகளை Sole ownership ஆக்குவது போல , தமிழர்களின் தற்போதைய அரசியல் தற்கொலைக்கு கூத்தமைப்பை Sole ownership ஆக்க தயாரா ...தயார் என்றால் அத்துடன் எனது விவாதம் முடிகிறது 

முள்ளிவாய்ககால் அழிவுக்கு  விடுதலைப்பு லிகள்  Sole ownership அல்ல. விடுதலைப் போராடங்கள் பற்றிய உலகத்தின் பார்வை  எமக்கு எதிராக மாறியதே முக்கிய காரணம்.  இருந்தாலும் போராட்டத்தை ஏக பிரதிநிதிகளாக நடத்தியவர்கள் என்ற ரீதியில் உலகத்தின் புதிய கோட்பாடுகளுக்கேற்ப  அரசியல் காய்நகர்த்தல்களில்  தோல்வி அடைந்ததற்கு விடுதலைப் புலிகளுக்கும் அதில் கூட்டுப் பொறுப்பு உண்டு. இது புலிகளுக்கு எதிரான அவதூறு அல்ல. எமது வரலாறு தொடர்பான விமர்சனப்பார்வை  மட்டுமே. தமிழரின் பலமும் பலவீனமும் விடுதலைப்புலிகளே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2019 at 9:09 AM, Lara said:

 

தமிழர்கள் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதால் தமிழர்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அது கோத்தாவுக்கு தான் சாதகமானது.

எவ்வாறு  இந்தக்குற்றச்சாட்டை  முன்  வைக்கிறீர்கள்??

தமிழர்கள்  ஒற்றுமையாக 

ஒரு  சக்தியாக திரண்டு  ஒரு பொது வேட்பாளரை  நிறுத்தி

தமிழ்  மக்களின்  ஒட்டுமொத்த  வாக்கை  பெறுவது

சிறீலங்காவின்  முன்னைநாள் வாக்குறுதிகளால் தமிழர்கள்  ஏமாற்றப்பட்டு

தனி  முடிவுக்கு  வந்துவிட்டார்கள்  எனும் பெரும் உண்மையை  உலகுக்க  சொல்லுமே

இது அவர்களுக்கு  வாக்களிப்பதால்  வரும்  நன்மை  தீமைகளைவிட  உயர்வானதே?

அதைத்தான்  தாயகத்தில்  சிலர் முன்  வைக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, அக்னியஷ்த்ரா said:

Version 1 இற்கு போர் எனும்  மூல காரணம்  இருந்தது , Version 2 இற்கு  அப்படியான என்ன காரணம் உள்ளது என உங்கள் தரவு ரீதியான ஆதாரத்தை அறிந்துகொள்ளலாமா ....? இல்லை  Version 2 முஸ்லிம்களுக்கெதிரானது என்ற எதிர்வுகூறலாக எடுத்துக்கொள்ளலாமா...? அப்படி நடந்தால் அதைப்பற்றி யோசிக்க, கவலைப்படவேண்டிய அவசியம் தமிழர்களுக்கில்லை , 
ஆனால் ஒரு சாத்தியம் உள்ளது Version 2 இற்குள் தமிழ்மக்களையும் இழுத்துக்கொண்டு போய் வாண்டடா கோர்த்துவிட்டுவிடும் சாணக்கியம் கூத்தமைப்பின் கோமாளிகளுக்கு உண்டு. சகோதர பாசத்தில் அவர்கள் சின்னத்தம்பி பட அண்ணன்மார் 

அக்னி, உங்களுக்கு ஏதோ ஊரில் நடந்தது எல்லாம் தெரியும் என்று நினைத்தேன்! மற்றைய திரியில் வெள்ளைவான் கடத்தல் பற்றிய உங்கள் "விழிப்புணர்வை" கண்ட பின்னர், நீங்களும் முகநூலில் நியூஸ் வாசிக்கிற டுபாக்கூர் பேர்வழி என்றி தெளிவாகி விட்டது! 

எப்படி வேர்ஷன் 2.0 நடக்குமா? "இனி சிறுபான்மையினரிடம் வாக்குக் கேட்டு சிங்களவன் போகவே கூடாது!" என்று கோத்தா குழு நினைத்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை முகநூலில் தேடிப் பாருங்கோ கிடைக்கும் தரவுகள்! 

கட்டாயம் நீங்கள் நினைப்பது போல முஸ்லிம்களை மட்டும் தான் கோத்தா அழிப்பார்! நம்பிக் கொண்டிருங்கள்! 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

எவ்வாறு  இந்தக்குற்றச்சாட்டை  முன்  வைக்கிறீர்கள்??

தமிழர்கள்  ஒற்றுமையாக 

ஒரு  சக்தியாக திரண்டு  ஒரு பொது வேட்பாளரை  நிறுத்தி

தமிழ்  மக்களின்  ஒட்டுமொத்த  வாக்கை  பெறுவது

சிறீலங்காவின்  முன்னைநாள் வாக்குறுதிகளால் தமிழர்கள்  ஏமாற்றப்பட்டு

தனி  முடிவுக்கு  வந்துவிட்டார்கள்  எனும் பெரும் உண்மையை  உலகுக்க  சொல்லுமே

இது அவர்களுக்கு  வாக்களிப்பதால்  வரும்  நன்மை  தீமைகளைவிட  உயர்வானதே?

அதைத்தான்  தாயகத்தில்  சிலர் முன்  வைக்கிறார்கள்

தீமை: கடத்தல், கொலைகள், கட்டுப்பாடற்ற சிங்களக் குடியேற்றம், தீர்வு தேவையில்லை நாயைப் பிடி என்ற தமிழர் நிலை:

நன்மை: (என்று நீங்கள் சொல்வது, நான் அல்ல!): உலகத்திற்கு செய்தி சொல்லல்!விளைவு? 50% வாய்ப்புக் கூட தீர்வை அவர்கள் தருவதற்கு இல்லை! 

Link to comment
Share on other sites

5 hours ago, அக்னியஷ்த்ரா said:

 போர் ..போர் என்கிறீங்களே அந்த போரை யாரோட அண்ணை கோத்தா புரியப்போறார் ...? 😂
போரில்லாமலா Version 2 வரப்போகுது , Vesion 2 இல்லாமலா ஆயுதம்,விமானம் வாங்கப்போறார் 

போரை ஆரம்பிப்பது இலகுவானது. ஈஸ்ரர் ஞாயிறு குண்டு வெடிப்புக்கு முன்னர் இலங்கனயில் ISIS பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. இன்றும் அந்த குண்டு வெடிப்புக்கு உண்மையாக யார் காரணம் என்று தெரியாது.

கருணா, பிள்ளையான், தயா மாஸ்ரர் , டக்ளஸ் , வாள் வெட்டு குழுக்கள்  இப்படி பலர் இருக்கும் போது பாதிக்கப்பட்ட அடுத்த தலைமுறையை ஆயுதம் தூக்க வைத்து ஆயுத வியாபாரம்   செய்வது இலகுவானது. அது தான் Version 2.  இது முன்னரும் பலர் தமிழர் மத்தியில் செய்தது தான். 

சீக்கிய பிரிவினைவாதி பிந்தரன்வாலேக்கு ஆயுதம் கொடுத்து ஆரம்பித்து வைத்தவர் இந்திய பிரதமர் இந்திரா. பயங்கரவாத்த்தை ஆரம்பித்து விட்டு போர் வரும் என்று சொல்லி ஆயுதம் வாங்குவது பல நாடுகளில் தொடரும் இலகுவான ஊழல்.

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

எவ்வாறு  இந்தக்குற்றச்சாட்டை  முன்  வைக்கிறீர்கள்??

தமிழர்கள்  ஒற்றுமையாக 

ஒரு  சக்தியாக திரண்டு  ஒரு பொது வேட்பாளரை  நிறுத்தி

தமிழ்  மக்களின்  ஒட்டுமொத்த  வாக்கை  பெறுவது

சிறீலங்காவின்  முன்னைநாள் வாக்குறுதிகளால் தமிழர்கள்  ஏமாற்றப்பட்டு

தனி  முடிவுக்கு  வந்துவிட்டார்கள்  எனும் பெரும் உண்மையை  உலகுக்க  சொல்லுமே

இது அவர்களுக்கு  வாக்களிப்பதால்  வரும்  நன்மை  தீமைகளைவிட  உயர்வானதே?

அதைத்தான்  தாயகத்தில்  சிலர் முன்  வைக்கிறார்கள்

1. இனித்தானா உலகத்துக்கு தமிழர் “தனி முடிவுக்கு” வந்தது பற்றிய “பெரும் உண்மையை” சொல்ல போகிறீர்கள்?

2. இந்த  “பெரும் உண்மையை” சொல்லி என்ன கிடைக்க போகிறது?

3. இந்த  “பெரும் உண்மையை” சொல்வதற்கு மக்கள் மீண்டும் மீண்டும் கொடுக்கும் விலை என்ன என்று தெரிந்து தானா எழுதுகிறார்கள்?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவகாரம் எனக்கு உணர்ச்சிபூர்வமான விவாதமாகி மாறி சிலரைத் திட்ட வேண்டிய அளவுக்கு வந்து விட்டது! அக்னி மன்னிக்க வேண்டும்! 

நேற்றே கோசான் விட்டு விடும்படி சொன்ன போது கேட்டிருக்க வேண்டும்! 

கோத்தாவை வரவைக்கும் எந்த நடவடிக்கையும் path to perdition என்பதே இது பற்றிய என் கடைசிப் பதிவு! அனைவரும் தொடர்ந்து உரையாடுங்கள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Jude said:

1. இனித்தானா உலகத்துக்கு தமிழர் “தனி முடிவுக்கு” வந்தது பற்றிய “பெரும் உண்மையை” சொல்ல போகிறீர்கள்?

2. இந்த  “பெரும் உண்மையை” சொல்லி என்ன கிடைக்க போகிறது?

3. இந்த  “பெரும் உண்மையை” சொல்வதற்கு மக்கள் மீண்டும் மீண்டும் கொடுக்கும் விலை என்ன என்று தெரிந்து தானா எழுதுகிறார்கள்?

 

இதை விட எதுக்கு  உங்களுக்க  தாய்  நிலம்  என்று  கேட்டிருக்கலாம்

அது  சரி

மகிந்தவோ  அல்லது கோத்தாவோ

ரணிலோ  அவரது  சீடர்களோ  வந்து என்ன  தரப்போகிறார்கள்??

1 hour ago, Justin said:

1 - தீமை: கடத்தல், கொலைகள், கட்டுப்பாடற்ற சிங்களக் குடியேற்றம், தீர்வு தேவையில்லை நாயைப் பிடி என்ற தமிழர் நிலை:

நன்மை: (என்று நீங்கள் சொல்வது, நான் அல்ல!): உலகத்திற்கு செய்தி சொல்லல்!விளைவு? 50% வாய்ப்புக் கூட தீர்வை அவர்கள் தருவதற்கு இல்லை! 

1 - இது  எதுவும் தற்பொழுது  தமிழர் தாயகத்தில் இல்லை  என்றா  சொல்கிறீர்கள்??

2 - ஒன்றுமே  இல்லாததைவிட  நீங்களே  சொல்லும் 50 வீதம்  உயர்ந்ததில்லையா??

Link to comment
Share on other sites

9 hours ago, விசுகு said:

எவ்வாறு  இந்தக்குற்றச்சாட்டை  முன்  வைக்கிறீர்கள்??

தமிழர்கள்  ஒற்றுமையாக 

ஒரு  சக்தியாக திரண்டு  ஒரு பொது வேட்பாளரை  நிறுத்தி

தமிழ்  மக்களின்  ஒட்டுமொத்த  வாக்கை  பெறுவது

சிறீலங்காவின்  முன்னைநாள் வாக்குறுதிகளால் தமிழர்கள்  ஏமாற்றப்பட்டு

தனி  முடிவுக்கு  வந்துவிட்டார்கள்  எனும் பெரும் உண்மையை  உலகுக்க  சொல்லுமே

இது அவர்களுக்கு  வாக்களிப்பதால்  வரும்  நன்மை  தீமைகளைவிட  உயர்வானதே?

அதைத்தான்  தாயகத்தில்  சிலர் முன்  வைக்கிறார்கள்

வாக்குகள் பிரிவது கோத்தாவின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

உலகுக்கு சொல்வதன் மூலம் என்ன நன்மை கிடைக்கும் என நினைக்கிறீர்கள்? எதுவும் கிடைக்காது என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

12 hours ago, Justin said:

அக்னி, உங்களுக்கு ஏதோ ஊரில் நடந்தது எல்லாம் தெரியும் என்று நினைத்தேன்! மற்றைய திரியில் வெள்ளைவான் கடத்தல் பற்றிய உங்கள் "விழிப்புணர்வை" கண்ட பின்னர், நீங்களும் முகநூலில் நியூஸ் வாசிக்கிற டுபாக்கூர் பேர்வழி என்றி தெளிவாகி விட்டது! 

எப்படி வேர்ஷன் 2.0 நடக்குமா? "இனி சிறுபான்மையினரிடம் வாக்குக் கேட்டு சிங்களவன் போகவே கூடாது!" என்று கோத்தா குழு நினைத்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை முகநூலில் தேடிப் பாருங்கோ கிடைக்கும் தரவுகள்! 

கட்டாயம் நீங்கள் நினைப்பது போல முஸ்லிம்களை மட்டும் தான் கோத்தா அழிப்பார்! நம்பிக் கொண்டிருங்கள்! 
 

அண்ணை ...நானும் உங்களை இந்தளவு எதிர்பார்க்கவில்லை 
எதோ கோத்தாவும் வெள்ளை வானும் இதுதான் வேலையாக திரிந்ததாகவும் ....தமிழர்களை கூட்டம் கூட்டமாக அள்ளி போட்டுத்தள்ளினது போல எல்லவோ எடுத்து விடுறீங்க , அதெப்பிடி அண்ணை வெள்ளைவான்   இவ்வளவு கூட்டம் கூட்டமா  போட்டு தள்ளியும் தமிழினம் இலங்கையில் உயிர்வாழுது. 
ஐம்பதாயிரம் ,கழுத்தில்லா முண்டங்கள் இப்படி எல்லாவற்றிர்க்கும் ஆதாரமும் தரவும் நீங்கள் தான் தரணும் 

கோத்தா பெரிய நீர்த்தொட்டியில் சுறாமீன்கள் வளர்ப்பதாகவும் அதற்க்கு ஒவ்வொரு நாளும் தமிழர்களின் இறைச்சியை உணவாக போடுவதாகவும் புலம்பெயர் இத்துப்போன இணையத்தள  செய்திகளையும்  இலங்கையில் இருந்து பார்த்து சிரித்தவர்கள்  தான் நாங்கள் .

இதைவிட காமடி என்னவென்று தெரியுமா ...? எல்லாவற்றிட்கும் Credible / Trustworthy Source கேட்கும் நீங்கள் உங்கள் ஆதாரத்திற்கு முகநூலை பிடித்து தொங்குவது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

கருணா, பிள்ளையான், தயா மாஸ்ரர் , டக்ளஸ் , வாள் வெட்டு குழுக்கள்  இப்படி பலர் இருக்கும் போது பாதிக்கப்பட்ட அடுத்த தலைமுறையை ஆயுதம் தூக்க வைத்து ஆயுத வியாபாரம்   செய்வது இலகுவானது. அது தான் Version 2.  இது முன்னரும் பலர் தமிழர் மத்தியில் செய்தது தான். 

 

11 hours ago, Jude said:

போரை ஆரம்பிப்பது இலகுவானது. ஈஸ்ரர் ஞாயிறு குண்டு வெடிப்புக்கு முன்னர் இலங்கனயில் ISIS பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை. இன்றும் அந்த குண்டு வெடிப்புக்கு உண்மையாக யார் காரணம் என்று தெரியாது.

கருணா, பிள்ளையான், தயா மாஸ்ரர் , டக்ளஸ் , வாள் வெட்டு குழுக்கள்  இப்படி பலர் இருக்கும் போது பாதிக்கப்பட்ட அடுத்த தலைமுறையை ஆயுதம் தூக்க வைத்து ஆயுத வியாபாரம்   செய்வது இலகுவானது. அது தான் Version 2.  இது முன்னரும் பலர் தமிழர் மத்தியில் செய்தது தான். 

சீக்கிய பிரிவினைவாதி பிந்தரன்வாலேக்கு ஆயுதம் கொடுத்து ஆரம்பித்து வைத்தவர் இந்திய பிரதமர் இந்திரா. பயங்கரவாத்த்தை ஆரம்பித்து விட்டு போர் வரும் என்று சொல்லி ஆயுதம் வாங்குவது பல நாடுகளில் தொடரும் இலகுவான ஊழல்.

எண்ட அம்மே ...
காமடித்திலகமே ...நீங்க மேலே குறிப்பிட்ட குழுவில் யாரவது ஒருவரை போய் மக்களிடம் ஆயுதம் தாறன் 
போராடுறியா ...என்று கேட்கச்சொல்லுங்கள் அதற்க்கு அவர்களது பதில் எந்தவடிவில் இருந்தது என்று முடிந்தால் பதிலிடுங்கள் ...பிந்தன்வாலேயையும் முதலில்  பலநாடுகள் முள்ளிவாய்க்கால் போல  சுத்திவச்சி செஞ்சிருந்தால் தெரிஞ்சிருக்கும் இந்திரா கொடுத்த ஆயுதத்தை தொட்டிருப்பாரா என்று.
இங்கே மக்கள் இருக்கும் நிலையறியாமல் போர் ...Version2 எண்டுக்கிட்டு... யாரவது போர் என்று வாயை திறந்தால் வாயை திறந்தவனுடன் தான் போர் நடக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, அக்னியஷ்த்ரா said:

கூத்தமைப்பு விட்ட இடைவெளிகளை கோத்தாவை வைத்து நிரப்ப முடியாது.
கோத்தா வந்தால் மட்டும் தான் தமிழினம் அழியும் என்பது போன்று கட்டமைப்பதை தான் நான் நிராகரிக்கிறேன். கோத்தா சயனைட் என்றால் சஜித் ஆசனிக், பாய்சன் பாய்சன் தான்
பாய்சனிடம் இருந்து எம்மை காப்பாற்றும் சக்தி எமது அரசியல் தலைமைகளுக்கு இல்லை அவர்களிடம்  தலைவிதியை கொடுத்து  விட்டு எந்த பாய்சன் Less Effective என்று நோண்டி  ஒரு பிரயோசனமும் இல்லை.   

இந்த தேர்தலில் வியாழேந்திரனின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி ஏதேனும் தெரியுமா?

சயனைட்டமா? ஆசனிக்காமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இந்த தேர்தலில் வியாழேந்திரனின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி ஏதேனும் தெரியுமா?

சயனைட்டமா? ஆசனிக்காமா?

என்ன அண்ணை 

அவ்வளோ பெரிய கேள்வியை இப்பிடி சிம்பிளா கேட்டுட்டீங்க தமிழரின் ஏக பிரதிநிதிகளே பதில் தெரியாமல்  ஏகத்திற்கும் முளிக்கினம், வியாழன் என்ன பண்ணுவார். 

ஆனால் சிலர் அவர் சயனைட்  என்று கருணாவுடன் காேர்த்து விட முயற்சித்ததை முற்றிலும் மறுதலித்து முகநூல் பதிவு இட்டுள்ளார்

Link to comment
Share on other sites

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

இதைவிட காமடி என்னவென்று தெரியுமா ...? எல்லாவற்றிட்கும் Credible / Trustworthy Source கேட்கும் நீங்கள் உங்கள் ஆதாரத்திற்கு முகநூலை பிடித்து தொங்குவது .

இப்பிடி உண்மைகளை புட்டுப்புட்டு வைச்சா அவங்க பிழைப்பு என்னாகிறது?

சந்திரனுக்கு தான் தப்பி ஓடணும்!

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

இந்த தேர்தலில் வியாழேந்திரனின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி ஏதேனும் தெரியுமா?

சயனைட்டமா? ஆசனிக்காமா?

இந்த செய்தி வந்ததிலிருந்து வியாழேந்திரன் ஐதேக பக்கம் என்று தான் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். (தமிழ் முற்போக்கு கூட்டணி ஐதேக பக்கம்).

https://www.pagetamil.com/66540/

பிள்ளையானுடனும் மனோ கணேசன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். ஆனால் பிள்ளையான் மனோ கணேசனின் கோரிக்கையை ஏற்கவில்லை, அவர் மகிந்த, கோத்தாவின் பக்கம் என யாழ்கள உறவு தனிக்காட்டுராஜா முன்னர் ஒரு திரியில் கூறியிருந்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.