Jump to content

Recommended Posts

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

 

எண்ட அம்மே ...
காமடித்திலகமே ...நீங்க மேலே குறிப்பிட்ட குழுவில் யாரவது ஒருவரை போய் மக்களிடம் ஆயுதம் தாறன் 
போராடுறியா ...என்று கேட்கச்சொல்லுங்கள் அதற்க்கு அவர்களது பதில் எந்தவடிவில் இருந்தது என்று முடிந்தால் பதிலிடுங்கள் ...பிந்தன்வாலேயையும் முதலில்  பலநாடுகள் முள்ளிவாய்க்கால் போல  சுத்திவச்சி செஞ்சிருந்தால் தெரிஞ்சிருக்கும் இந்திரா கொடுத்த ஆயுதத்தை தொட்டிருப்பாரா என்று.
இங்கே மக்கள் இருக்கும் நிலையறியாமல் போர் ...Version2 எண்டுக்கிட்டு... யாரவது போர் என்று வாயை திறந்தால் வாயை திறந்தவனுடன் தான் போர் நடக்கும்

உங்களுக்கு இது புரியாது என்று நான் முதலில் எழுதியதை மீண்டும் மீண்டும் இப்படி நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்ற தேவை இல்லையே? தமிழ் சினிமா அளவில் உங்கள் அறிவுத்திறன் மட்டுப் படுத்தப் பட்டிருப்பதும் தெரிகிறது.

கோத்தபாய வெல்ல வேண்டும் என்று நீங்கள் விடாப்பிடியாக விரும்புகிறீர்கள். அது நடக்கவும் கூடும். ஈஸ்ரர் ஞாயிறு போல பல சம்பவங்களும் வந்து போகும். போர் என்று எவரும் வெளிப்படையாக ஆரம்பிக்க போவதில்லை. நான் அப்படி எழுதவும் இல்லை. Version 2 என்று ஜஸ்ரின் எழுதியது போர் பற்றியதல்ல. உங்களுக்கு புரியாத விடயத்தை பார்க்க அது உங்களுக்கு நகைச்சுவையாக தெரிவது ஆச்சரியமும் அல்ல. 

Link to comment
Share on other sites

  • Replies 115
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Jude said:

உங்களுக்கு இது புரியாது என்று நான் முதலில் எழுதியதை மீண்டும் மீண்டும் இப்படி நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்ற தேவை இல்லையே? தமிழ் சினிமா அளவில் உங்கள் அறிவுத்திறன் மட்டுப் படுத்தப் பட்டிருப்பதும் தெரிகிறது.

கோத்தபாய வெல்ல வேண்டும் என்று நீங்கள் விடாப்பிடியாக விரும்புகிறீர்கள். அது நடக்கவும் கூடும். ஈஸ்ரர் ஞாயிறு போல பல சம்பவங்களும் வந்து போகும். போர் என்று எவரும் வெளிப்படையாக ஆரம்பிக்க போவதில்லை. நான் அப்படி எழுதவும் இல்லை. Version 2 என்று ஜஸ்ரின் எழுதியது போர் பற்றியதல்ல. உங்களுக்கு புரியாத விடயத்தை பார்க்க அது உங்களுக்கு நகைச்சுவையாக தெரிவது ஆச்சரியமும் அல்ல. 

திருவாளர் யூட் அவர்களே ...
ஆரம்பத்திலிருந்தே நான் தெளிவாக கேட்டவிடயம் ஒன்றுதான் 
Version 1 இற்கு மூல காரணம் போர் என்றால் version 2 இற்கு மூல காரணம் எது என்பது மட்டுமே .
அதற்க்கு அவன்ட் கார்ட் இலிருந்து பின்தன்வாலே வரை இழுத்துக்கொண்டு வந்து சளப்பியது நீங்கள் ..
தரவுகளும் ஆதாரங்களும் கேட்டு வைத்து பழக்கப்பட்ட இடங்களில் இப்பிடி குடிகுடுப்பை காரன் போல Version 2 எதிர்வுகூறல்கள் வேலைக்காகாது கண்டியளோ. 
கோத்தா வெல்லவேண்டுமென்றோ ,மக்கள் எல்லோரும் அவனுக்கு தான் வாக்களிக்க வேண்டுமென்றோ நான் எந்த இடத்திலும் கூறவில்லை. சரி ஒரு பேச்சுக்குகேக்கிரேன் கோத்தா ஒட்டுமொத்த சிங்களவாக்குகளையும் பெற்று சிறுபாண்மை  ஆதாரவில்லாமல் ஜனாதிபதியானால் நீங்களும் ஜஸ்டின் அவர்களும் கூறிய வெள்ளைவான்கள் ,ஐம்பதாயிரம் ரூபா கொலைகள் தலையில்லா முண்டங்களும் வந்துவிடுமே இதனை எதனை வைத்து தடுக்கப்போகிறீர்கள். உலகத்தையே திரும்பிப்பார்க்கவைத்த ஒரு அதிபயங்கரவாத  தாக்குதலை செய்த முஸ்லிம்சமூகம் நான்கைந்து மாதங்களில் அதன் தடமே இல்லாமல் செய்து அதிலிருந்து மீண்டெழுந்து அரசியல் பேரம்பேசலை தொடரும் வகையில் வலிமையான அரசியலை, காய் நகர்த்தலை செய்யும் போது , நாங்கள் குடுகுடுப்பை அரசியல் மட்டுமே செய்துகொண்டிருக்கிறோம் ,
Version 2 வராவிட்டால் என்ன நாளைக்கே அடிப்போம் குடுகுடுப்பை Version 3 இற்கு ,
எம்மரசியலில்  மாற்றுத்தெரிவு இல்லாதவரை கோத்தாக்கு மட்டுமல்ல கோத்தா வீட்டு எலிக்கு கூட பயந்து தான் ஆகவேண்டும் 

Link to comment
Share on other sites

33 minutes ago, அக்னியஷ்த்ரா said:

திருவாளர் யூட் அவர்களே ...
ஆரம்பத்திலிருந்தே நான் தெளிவாக கேட்டவிடயம் ஒன்றுதான் 
Version 1 இற்கு மூல காரணம் போர் என்றால் version 2 இற்கு மூல காரணம் எது என்பது மட்டுமே .

நான் எழுதிய மூலகாரணம் உங்களுக்கு புரிந்திருந்தால் அதை எழுதுங்கள் பார்க்கலாம். உங்களுக்கு நான் எழுதிய விடயம் புரியவில்லை, புரியக்கூடிய சாத்தியமும் இல்லை என்ற எனது அபிப்பிராயத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

நான் எழுதிய மூலகாரணம் உங்களுக்கு புரிந்திருந்தால் அதை எழுதுங்கள் பார்க்கலாம். உங்களுக்கு நான் எழுதிய விடயம் புரியவில்லை, புரியக்கூடிய சாத்தியமும் இல்லை என்ற எனது அபிப்பிராயத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள்.

விளங்குகிறது .....அநேகமாக அந்த மூல காரணம் உங்களுக்கு மட்டுமே விளங்குவதாக நீங்கள் நினைக்கும் காரணமே இல்லாத ஒரு காரணாமாக இருக்கலாம் ...ஆச்சரியமில்லை இதற்க்கு முன்னும் உங்களிடம் இப்படி பல காரணங்களை பார்த்து பழக்கப்பட்டதால் ஆச்சரியமில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன அண்ணை 

அவ்வளோ பெரிய கேள்வியை இப்பிடி சிம்பிளா கேட்டுட்டீங்க தமிழரின் ஏக பிரதிநிதிகளே பதில் தெரியாமல்  ஏகத்திற்கும் முளிக்கினம், வியாழன் என்ன பண்ணுவார். 

ஆனால் சிலர் அவர் சயனைட்  என்று கருணாவுடன் காேர்த்து விட முயற்சித்ததை முற்றிலும் மறுதலித்து முகநூல் பதிவு இட்டுள்ளார்

ம்... அப்ப எல்லாரும் வளைச்சு வளைச்சு முளிச்சுக் கொண்டுதான் நிக்கிறார்கள் போல😂.

கூட்டமைப்பு பலதையும் பத்தையும் யோசிக்கவேணும். வியாழேந்திரனுக்கு அப்படி ஒரு நிர்ப்பத்தமும் இல்லையே?

யார் மட்டு மாவட்டத்துக்கு அதிக அபிவிருத்தி செய்வதாக சொல்கிறார்கள் எனப் பேரம்பேசி, வெளிப்படையாக ஒப்பந்தம் போட்டு (எந்த துறைக்கு பிரதி அமைச்சர் என்பதை கமுக்கமாக பேசி) ஆதரவை வழங்க வேண்டியதுதானே? இவர் ஏன் சுணங்குகிறார்?

மகிந்தவை பிரதமராக ஏற்றவருக்கு, கோட்டவை ஜனாதிபதியாக ஏற்பதில் ஒரு கொள்கை நெருடலும் இருக்க வாய்ப்பில்லையே?

இன்னும் பேரம் படியவில்லையோ?

3 hours ago, Lara said:

இந்த செய்தி வந்ததிலிருந்து வியாழேந்திரன் ஐதேக பக்கம் என்று தான் நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். (தமிழ் முற்போக்கு கூட்டணி ஐதேக பக்கம்).

https://www.pagetamil.com/66540/

பிள்ளையானுடனும் மனோ கணேசன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். ஆனால் பிள்ளையான் மனோ கணேசனின் கோரிக்கையை ஏற்கவில்லை, அவர் மகிந்த, கோத்தாவின் பக்கம் என யாழ்கள உறவு தனிக்காட்டுராஜா முன்னர் ஒரு திரியில் கூறியிருந்தார்.

வியாழேந்திரன் தமுகூ வில் இல்லையே? 

மட்டுவில் வியாழேந்திரன், புள்ளையான் எடுக்கும் நிலைப்பாடு அதிக தாக்கத்தை எடுக்கும் என நினைகிறேன். காத்தாங்குடி வாக்குகள் ஹிஸ்புலாவுக்கு சிதற, யாழ், வன்னி, மட்டு தேர்தல் மாவட்டங்களில் கோத்த வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ள தேர்தல் மாவட்டமாக நான் மட்டுவை பார்கிறேன்.

விரைவில் வியாழேந்திரன் கோட்ட பக்கம் சாய்வார் எனவே நான் நினைக்கிறேன்.

இத்திரியில் அக்னி முன்வைக்கும் வாதங்களே அவரின் இந்த நிலைப்பாட்டுக்கான நியாயப்படுத்தலாகவும் இருக்கும்.

ஏலவே நான் கதைத்த சில மட்டுவாழ் ஆதரவாளர்களுக்கு இந்த நிலைப்பாட்டை வியாழேந்திரன் தரப்பு கூறியுள்ளதாக சொல்கிறார்கள்.

ஏன் தாமதிக்கிறார் என்பதுதான் புரியவில்லை. முஸ்லீம்களை போல சலுகை அரசியல்தான் என வியாழேந்திரன் முடிவு செய்து மக்களும் அதை ஆதரித்தால் அதில் தப்பொன்றும் இல்லை.

ஆனால் இதில் கொள்கைத் தயக்கம் ஏற்பட வாய்பில்லை. ஆகவே ஏன் சுணக்கம்?

 

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

வியாழேந்திரன் தமுகூ வில் இல்லையே? 

மட்டுவில் வியாழேந்திரன், புள்ளையான் எடுக்கும் நிலைப்பாடு அதிக தாக்கத்தை எடுக்கும் என நினைகிறேன். காத்தாங்குடி வாக்குகள் ஹிஸ்புலாவுக்கு சிதற, யாழ், வன்னி, மட்டு தேர்தல் மாவட்டங்களில் கோத்த வெல்ல வாய்ப்பு அதிகம் உள்ள தேர்தல் மாவட்டமாக நான் மட்டுவை பார்கிறேன்.

வியாழேந்திரன் தற்சமயம் தமிழ் முற்போக்கு கூட்டணியில் இல்லை. ஆனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ளதாக அச்செய்தி உள்ளது.

தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி தேர்தலில் ஐதேக க்கு ஆதரவு என்பதால் வியாழேந்திரனும் ஐதேக பக்கமாக இருக்கும் என கூற வந்தேன்.

Link to comment
Share on other sites

பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கோத்தாவை ஆதரிப்பதாக கூறியுள்ளது.

https://yarl.com/forum3/topic/232926-தமிழ்-மக்கள்-விடுதலை-புலிகள்-கட்சி-கோட்டாவுக்கு-ஆதரவு/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ம்... அப்ப எல்லாரும் வளைச்சு வளைச்சு முளிச்சுக் கொண்டுதான் நிக்கிறார்கள் போல😂.

கூட்டமைப்பு பலதையும் பத்தையும் யோசிக்கவேணும். வியாழேந்திரனுக்கு அப்படி ஒரு நிர்ப்பத்தமும் இல்லையே?

யார் மட்டு மாவட்டத்துக்கு அதிக அபிவிருத்தி செய்வதாக சொல்கிறார்கள் எனப் பேரம்பேசி, வெளிப்படையாக ஒப்பந்தம் போட்டு (எந்த துறைக்கு பிரதி அமைச்சர் என்பதை கமுக்கமாக பேசி) ஆதரவை வழங்க வேண்டியதுதானே? இவர் ஏன் சுணங்குகிறார்?

மகிந்தவை பிரதமராக ஏற்றவருக்கு, கோட்டவை ஜனாதிபதியாக ஏற்பதில் ஒரு கொள்கை நெருடலும் இருக்க வாய்ப்பில்லையே?

இன்னும் பேரம் படியவில்லையோ?

ஐ ..ஐ அஸ்க்கு புஸ்க்கு ....
கூத்தமைப்பு லட்டு போல பத்து வருடத்தை கூத்தடித்தே வீணாக்குவார்களாம் , இருக்கும் உடான்சையெல்லாம் தமிழரிடம் அள்ளிவிட்டு ஏக்கிய ராஜீய வரைவிலக்கணத்தோட மட்டும் விரல் சூப்பிட்டு வருவார்களாம்  ...வியாழன் மட்டும் உடனே முடிவு எடுக்கணுமோ ..? நல்லா இருக்கண்ணே உங்க நியாயம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, அக்னியஷ்த்ரா said:

ஐ ..ஐ அஸ்க்கு புஸ்க்கு ....
கூத்தமைப்பு லட்டு போல பத்து வருடத்தை கூத்தடித்தே வீணாக்குவார்களாம் , இருக்கும் உடான்சையெல்லாம் தமிழரிடம் அள்ளிவிட்டு ஏக்கிய ராஜீய வரைவிலக்கணத்தோட மட்டும் விரல் சூப்பிட்டு வருவார்களாம்  அதையும் எங்கடை அரசியல் அவியலாளர்கள் வாவ் என்று போற்றி புகழ்ந்து கொண்டாடுவார்களாம் ...வியாழன் மட்டும் உடனே முடிவு எடுக்கணுமோ ..? நல்லா இருக்கண்ணே உங்க நியாயம் 

அக்னி,

உங்கள் லாஜிக் உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. 2009- 2015 வரை கூட்டமைப்புக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என நான் எழுதியது மறுப்பதற்கில்லை.  ஆனால் 2015 இன் பின்னரே கூட்டமைப்பு வினைத்திறன் இன்றி செயல்படுகிறது என்பதை ஏற்று, தொடர்ந்து கூட்டமைப்பையும் விமர்சிப்பன் நான்.

எனவே கூட்டமைப்பு நேரத்தை வீணடித்தார்கள் என்பதில் எமக்குள் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் கூட்டமைப்புக்கு சரியில்லை என்று தெரியும் எனக்கு சரியான பாதையில் போபவர் யாரென்றும் தெரியவில்லை.

கூட்டமைப்பு ஒழுங்கில்லை, அதனால் வியாழேந்திரனின் நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் கூட்டமைப்பினை கைகாட்டி விளக்கம் சொல்ல முடியாதல்லவா?

வியாழேந்திரன் கோட்டவுடனே என்பது என் அனுமானம். நீங்கள் அதை வரவேற்று எழுதுவீர்கள் என்பது நீங்கள் மேலே Pre-emptive ஆக இப்போதே வியாழேந்திரன் எடுக்கப் போகும் நிலைக்கு ஆதரவாக எழுதுவதில் இருந்து தெரிகிறது.

எனது கேள்வி எல்லாம் உங்களை போல வெளிப்படையாக சலுகை அரசியல்தான் இப்போ சரி என்று கூறும் தைரியம் இல்லாமல், வியாழேந்திரன் ஏன் இன்னும் மெளனம் காக்கிறார் என்பதே?

டீச்சர், டீச்சர் அந்த பையனும் சுவரில் கீறினான் என கூட்டமைப்பை இழுக்காமல், இதற்கான பதிலைச் சொல்ல முடியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அக்னி,

உங்கள் லாஜிக் உண்மையிலேயே எனக்கு புரியவில்லை. 2009- 2015 வரை கூட்டமைப்புக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என நான் எழுதியது மறுப்பதற்கில்லை.  ஆனால் 2015 இன் பின்னரே கூட்டமைப்பு வினைத்திறன் இன்றி செயல்படுகிறது என்பதை ஏற்று, தொடர்ந்து கூட்டமைப்பையும் விமர்சிப்பன் நான்.

எனவே கூட்டமைப்பு நேரத்தை வீணடித்தார்கள் என்பதில் எமக்குள் மாற்றுக்கருத்தில்லை.

ஆனால் கூட்டமைப்புக்கு சரியில்லை என்று தெரியும் எனக்கு சரியான பாதையில் போபவர் யாரென்றும் தெரியவில்லை.

கூட்டமைப்பு ஒழுங்கில்லை, அதனால் வியாழேந்திரனின் நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் கூட்டமைப்பினை கைகாட்டி விளக்கம் சொல்ல முடியாதல்லவா?

வியாழேந்திரன் கோட்டவுடனே என்பது என் அனுமானம். நீங்கள் அதை வரவேற்று எழுதுவீர்கள் என்பது நீங்கள் மேலே President emptive ஆக இப்போதே வியாழேந்திரன் எடுக்கப் போகும் நிலைக்கு ஆதரவாக எழுதுவதில் இருந்து தெரிகிறது.

எனது கேள்வி எல்லாம் உங்களை போல வெளிப்படையாக சலுகை அரசியல்தான் இப்போ சரி என்று கூறும் தைரியம் இல்லாமல், வியாழேந்திரன் ஏன் இன்னும் மெளனம் காக்கிறார் என்பதே?

டீச்சர், டீச்சர் அந்த பையனும் சுவரில் கீறினான் என கூட்டமைப்பை இழுக்காமல், இதற்கான பதிலைச் சொல்ல முடியாதா?

பதில் கூறலாம் தான் அண்ணை ...(எத்தனை தரம் தான் கூத்தமைப்பை நானும் போட்டு நாத்துவது அவர்களும் பாவம் செத்த பாம்புகள் தான் பிழைத்து போகட்டும் )
நல்லாட்சி அரசாங்கம் நடத்திய கூத்துக்களால் அநேகமாக இம்முறை சிறுபாண்மை ஆதரவில்லாமலே கோத்தா வெல்லும் சாத்தியம் அதிகம் போல்தான் தெரிகிறது, வியாழன் கூத்தமைப்பிட்க்கெதிரான அரசியலை கையில் எடுத்திருப்பதால் சிலவேளை அவர்களது முடிவை பொறுத்து தனது முடிவை அறிவிக்க அமைதி காக்கலாம் இது எனது அனுமானமே ,
வியாழன் என்ன முடிவு எடுத்தாலும் அவர் கோத்தாவுக்கு ஆதரவு தெரிவித்தால் அதனை நான் ஆதரிக்க தயார். காரணம் இது முஸ்லிம்களை போன்று இருபக்கமும் தமது ஆட்களை வைத்து வெல்லும் பக்கத்தில் இருந்து மட்டும் சத்தத்தை ஒலிக்கச்செய்யும் வித்தை , அதாவுல்லா ஏற்கனவே கோத்தாவுக்கு ஆதரவு தெரிவித்தாயிற்று ,இப்போ கோத்தா வென்றால் அதாவுல்லா ஒலிக்க முஸ்லிம் காங்கிரஸ் அடக்கி வாசிக்கும் 
மாறி நடந்தால் அதாவுல்லா அமைதிகாக்க முஸ்லீம் காங்கிரஸ் ஓங்கி ஒலிக்கும் இதில் யார் ஒலித்தாலும் பயனடைவது முஸ்லிம்களே. நாம்தான் ஏகபிரதிநிதிகளிடம் அரசியலை அடமானம் வைத்து ஒன்றுமில்லாமல் நிற்கிறோமே ..இனித்தான் இப்படி எதையாவது முயன்று பார்க்க வேண்டும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

பதில் கூறலாம் தான் அண்ணை ...(எத்தனை தரம் தான் கூத்தமைப்பை நானும் போட்டு நாத்துவது அவர்களும் பாவம் செத்த பாம்புகள் தான் பிழைத்து போகட்டும் )
நல்லாட்சி அரசாங்கம் நடத்திய கூத்துக்களால் அநேகமாக இம்முறை சிறுபாண்மை ஆதரவில்லாமலே கோத்தா வெல்லும் சாத்தியம் அதிகம் போல்தான் தெரிகிறது, வியாழன் கூத்தமைப்பிட்க்கெதிரான அரசியலை கையில் எடுத்திருப்பதால் சிலவேளை அவர்களது முடிவை பொறுத்து தனது முடிவை அறிவிக்க அமைதி காக்கலாம் இது எனது அனுமானமே ,
வியாழன் என்ன முடிவு எடுத்தாலும் அவர் கோத்தாவுக்கு ஆதரவு தெரிவித்தால் அதனை நான் ஆதரிக்க தயார். காரணம் இது முஸ்லிம்களை போன்று இருபக்கமும் தமது ஆட்களை வைத்து வெல்லும் பக்கத்தில் இருந்து மட்டும் சத்தத்தை ஒலிக்கச்செய்யும் வித்தை , அதாவுல்லா ஏற்கனவே கோத்தாவுக்கு ஆதரவு தெரிவித்தாயிற்று ,இப்போ கோத்தா வென்றால் அதாவுல்லா ஒலிக்க முஸ்லிம் காங்கிரஸ் அடக்கி வாசிக்கும் 
மாறி நடந்தால் அதாவுல்லா அமைதிகாக்க முஸ்லீம் காங்கிரஸ் ஓங்கி ஒலிக்கும் இதில் யார் ஒலித்தாலும் பயனடைவது முஸ்லிம்களே. நாம்தான் ஏகபிரதிநிதிகளிடம் அரசியலை அடமானம் வைத்து ஒன்றுமில்லாமல் நிற்கிறோமே ..இனித்தான் இப்படி எதையாவது முயன்று பார்க்க வேண்டும்   

1. இந்த அணுகுமுறையில், வியாழேந்திரன் போன்றோர் கோட்டவுடன் இருப்பதால் -கோட்டவின் அரசின் ஆபத்துகளில் இருந்து தமிழர்களை காக்க முடியும் என நினைக்கிரீர்களா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், அங்கஜன், டக்லஸ், கருணா, பிள்ளையான், அருண் தம்பிமுத்து, ஶ்ரீரங்கா எனப் பலர் மகிந்த பக்கம் இருந்தும் தமிழ் மக்களை அவர்களின் நெருக்குவாரத்தில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. தனியே அவர்கள் சொந்தமாக பலனடையவே முடிந்தது. முஸ்லிம் அரசியல்வாதிகள் போல இதுவரை அரசுடன் இருந்த எம் அரசியல்வாதிகள் யாரும் எமக்கு எந்த சலுகைகளையும் பெற்றுத்தரவில்லை. வியாயேந்திரன் உங்கள் பார்வையில் வித்தியாசமாக தெரிகிறாரா? ஏன்?

2. சப்போஸ் கூட்டமைப்பு கோட்ட பக்கம் சாய்ந்தால். வியாழேந்திரன் கோட்டாவுக்கு ஆதரவளித்தால் வரவேற்பது போல இதையும் வரவேற்பீர்களா?

 

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

1. இந்த அணுகுமுறையில், வியாழேந்திரன் போன்றோர் கோட்டவுடன் இருப்பதால் -கோட்டவின் அரசின் ஆபத்துகளில் இருந்து தமிழர்களை காக்க முடியும் என நினைக்கிரீர்களா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், அங்கஜன், டக்லஸ், கருணா, பிள்ளையான், அருண் தம்பிமுத்து, ஶ்ரீரங்கா எனப் பலர் மகிந்த பக்கம் இருந்தும் தமிழ் மக்களை அவர்களின் நெருக்குவாரத்தில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. தனியே அவர்கள் சொந்தமாக பலனடையவே முடிந்தது. முஸ்லிம் அரசியல்வாதிகள் போல இதுவரை அரசுடன் இருந்த எம் அரசியல்வாதிகள் யாரும் எமக்கு எந்த சலுகைகளையும் பெற்றுத்தரவில்லை. வியாயேந்திரன் உங்கள் பார்வையில் வித்தியாசமாக தெரிகிறாரா? ஏன்?

தமிழ் கூட்டமைப்பு கடந்த 4 வருடங்களுக்கு மேலாக ஐதேக அரசுக்கும் மைத்திரிக்கும் முக்கி முக்கி முண்டு கொடுத்ததன் மூலம் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்பு குறைந்ததா? தமிழ் கூட்டமைப்பு விழுந்தடித்து முண்டு கொடுத்தும் தமிழ் மக்களை சிங்கள அரசின் நெருக்குவாரத்தில் இருந்து காப்பாற்ற முடிந்ததா?

இதற்கான பதிலும் மேற்படி உங்கள் கேள்விக்கான பதிலும் ஒன்றாகவே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. இந்த அணுகுமுறையில், வியாழேந்திரன் போன்றோர் கோட்டவுடன் இருப்பதால் -கோட்டவின் அரசின் ஆபத்துகளில் இருந்து தமிழர்களை காக்க முடியும் என நினைக்கிரீர்களா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், அங்கஜன், டக்லஸ், கருணா, பிள்ளையான், அருண் தம்பிமுத்து, ஶ்ரீரங்கா எனப் பலர் மகிந்த பக்கம் இருந்தும் தமிழ் மக்களை அவர்களின் நெருக்குவாரத்தில் இருந்து காப்பாற்ற முடியவில்லை. தனியே அவர்கள் சொந்தமாக பலனடையவே முடிந்தது. முஸ்லிம் அரசியல்வாதிகள் போல இதுவரை அரசுடன் இருந்த எம் அரசியல்வாதிகள் யாரும் எமக்கு எந்த சலுகைகளையும் பெற்றுத்தரவில்லை. வியாயேந்திரன் உங்கள் பார்வையில் வித்தியாசமாக தெரிகிறாரா? ஏன்?

அண்ணை ...நீங்கள் கேள்வியை என்னிடம் கேட்பதால் பதிலை எனது பார்வையிலேயே  தருகிறேன்.
2010 பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் கூத்தமைப்பு பலத்த அடிவாங்கியது, இதற்க்கு காரணம் பிள்ளையான்  படுவான்கரை மற்றும் முதலைக்குடா ,கன்னன்குடா போன்ற மட்டுநகரின் பின்னடைந்த ஊர்களுக்குச்சென்று விசாரித்தால் பிள்ளையான் மீது அந்த மக்கள் இன்றளவும் அபிமானம் வைத்திருக்கிறார்கள் .தமிழ்  அரசியல்வாதிகளிலே எங்களுக்கு எதாவது செய்தது என்றால் அவர் மட்டும்தான் என்பதே அவர்களது அபிமானத்திற்கு காரணம், ஏன் நான் கூட அந்தக்காலகட்டத்தில் மட்டுநகர் வாக்காளர்களுக்கு திட்டியுள்ளேன் , கூத்தமைப்பின் இந்திய  Proxy அரசியலின் மாயை தெரியாது ஏதாவது வெட்டி பிடுங்கி வருவார்கள் என்று நினைத்தே  , பிறகுதான் தெரிந்தது மட்டு வாக்காளர்களின் தூர நோக்கு 
கருணாவிற்கு பிள்ளையானின் மீதிருந்த அதே ஆதரவு எப்போதும் இருந்ததில்லை , மற்றயவர்களில் அருண் தம்பிமுத்து அவருடைய அப்பா சாம் தம்பிமுத்து மீதிருந்த மக்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெளித்தெரியாமலே போய்விட்டார்.ஸ்ரீ ரங்கா ,அங்கஜன் போன்றோர் கிழக்கு மாகாண தொடர்பே அற்றவர்கள் இவர்களுக்கு கிழக்கு மாகாண தமிழர்களுக்கு எது அவசியம் அவர்கள் எவ்வவகையான நெருக்குவாரங்களை எதிர்கொள்கிறார்கள் என்ற அடிப்படை அறிவு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை . போர் முடிந்த கையுடன் போரினால் பிணைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் மீது அரசு ஏவிய நெருக்குவாரங்களை ஒரு அளவுக்கு மேல் இவர்களால் Deflect செய்திருக்க முடியாது ஏனென்றல் அரசுக்கு புலிகளுடன் தொடர்புடைய சிறு  வேர் தென்பட்டாலும் அழிக்கவேண்டிய தேவையிருந்தது, அதை அவர்களும்  எந்த எல்லைக்கும் சென்று செய்திருந்தார்கள், முஸ்லிம்கள் மாட்டியிருந்தாலும் அவர்களுக்கும் இதுவே நடந்திருக்கும். ஆனால் தற்போதைய நிலைமை அப்படியல்ல 
தமிழர்களை முண்டு கட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக அழித்து அதனால் எதுவும் ஆகாது அந்த இடத்தை சனத்தொகையில் , பொருளாதாரத்தில் முஸ்லீம்கள்  நிரப்புவார்கள் என்பது சிங்களவர்களுக்கு தெரியும்.

இந்த GAP ஐ Fill பண்ணக்கூடிய  அரசியல் தலைமை நம்மிடையே இல்லை, காரணம் எப்போதும் பிளான் A ஐ சிந்தித்த எமக்கு பிளான் B அவசியப்படவில்லை ,பிளான் B அவசியப்படும்  போது அதற்கான முஸ்தீபே கைவசம் இல்லை, 
சரி வியாழனுக்கு வருகிறேன் ,ஏன் வியாழன் எனக்கு வித்தியாசமானவர் என்றால் கூத்தமைப்பின் கூடாரத்திலிருந்து வெளியேறி கூத்தமைப்பின் கையாலாகாத்தனத்துக்கு உதாரணமாக தன்னை முன்னிலைப்படுத்துகிறார். இந்த விடயத்தில் அவர் மற்றைய அனைவரையும் விட வித்தியாசமானவர். நானும் கூத்தமைப்பில் இருந்தவன் தான் கூத்தமைப்பை பற்றி என்னிடம் சொல்லாதீர்கள் 
கூத்தமைப்பு இவ்வளவு காலமும் என்ன வெட்டி புடுங்கினவைகள் என்ற கேள்வி கூத்தமைப்பையும்  கூத்தமைப்பின் ஆதரவாளர்களையும்  மிரள வைக்கும் கேள்வி, இந்த கேள்வியை இப்படி கேட்கும் தகுதி அவருக்கு மட்டும் தான் இருக்கிறது என்பது எனது  வாதம். மற்றும் பேரம் பேசல் காசை அமத்துதல் இப்பிடி எல்லாம் அவரது தனிப்பட்ட விவகாரம் எனக்கு அவசியமில்லை ,இலங்கை அரசியலும் மாகாத்மாக்களும் கறை படா கரங்களுக்கு சொந்தக்காரர்களும் செய்யும்  அரசியல் இல்லை அது  மில்லியன் கணக்கிலும் கோடிக்கணக்கிலும் ஏப்பம் விடும் அரசியல், இதுவரை கறை படா கரங்களுக்கு சொந்தக்காரர்களான கூத்தமைப்பிற்கும் தமது சொத்துப்படியலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதை தவிர்த்து தமிழ் மக்களுக்கு அதன் கறை படா கரத்தால்  எதுவுமே செய்ய முடியவில்லை. வியாழன் தனக்கு  அமத்துவதை அமத்திவிட்டு  மீதியில்  ஒரு தமிழனுக்காவது நன்மை செய்தால் அதுவே இப்போதிருக்கும் நிலையில் பெரிய விடயம் .       

2 hours ago, goshan_che said:

2. சப்போஸ் கூட்டமைப்பு கோட்ட பக்கம் சாய்ந்தால். வியாழேந்திரன் கோட்டாவுக்கு ஆதரவளித்தால் வரவேற்பது போல இதையும் வரவேற்பீர்களா?

ஒரு படத்தில் வடிவேலுவை ..சீச்சீ நீ அந்த விடயத்திற்கு சரிப்பட்டுவரமாட்ட என்று பார்க்கும் எல்லோரும் சொல்வார்கள் பாருங்கோ.அப்படி  கூத்தமைப்பை பொறுத்தவரை அந்த நிலைப்பாட்டிற்கு வந்தாச்சு
கூத்தமைப்பு இனி யார் பக்கம் சேர்ந்தாலும் அவர்கள் டம்மி பீசுகள் தான் 
 

Link to comment
Share on other sites

On 10/13/2019 at 9:57 AM, goshan_che said:

விரைவில் வியாழேந்திரன் கோட்ட பக்கம் சாய்வார் எனவே நான் நினைக்கிறேன்.

நீங்கள் கூறியது போல் வியாழேந்திரன் கோத்தா பக்கம் சாய்ந்து விட்டார். 😀

https://yarl.com/forum3/topic/232994-கோட்டாவுக்கே-வியாழேந்திரன்-ஆதரவு/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, போல் said:

தமிழ் கூட்டமைப்பு கடந்த 4 வருடங்களுக்கு மேலாக ஐதேக அரசுக்கும் மைத்திரிக்கும் முக்கி முக்கி முண்டு கொடுத்ததன் மூலம் தமிழர்கள் மீதான திட்டமிட்ட இனவழிப்பு குறைந்ததா? தமிழ் கூட்டமைப்பு விழுந்தடித்து முண்டு கொடுத்தும் தமிழ் மக்களை சிங்கள அரசின் நெருக்குவாரத்தில் இருந்து காப்பாற்ற முடிந்ததா?

இதற்கான பதிலும் மேற்படி உங்கள் கேள்விக்கான பதிலும் ஒன்றாகவே இருக்கும்.

 

9 hours ago, அக்னியஷ்த்ரா said:

அண்ணை ...நீங்கள் கேள்வியை என்னிடம் கேட்பதால் பதிலை எனது பார்வையிலேயே  தருகிறேன்.
2010 பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் கூத்தமைப்பு பலத்த அடிவாங்கியது, இதற்க்கு காரணம் பிள்ளையான்  படுவான்கரை மற்றும் முதலைக்குடா ,கன்னன்குடா போன்ற மட்டுநகரின் பின்னடைந்த ஊர்களுக்குச்சென்று விசாரித்தால் பிள்ளையான் மீது அந்த மக்கள் இன்றளவும் அபிமானம் வைத்திருக்கிறார்கள் .தமிழ்  அரசியல்வாதிகளிலே எங்களுக்கு எதாவது செய்தது என்றால் அவர் மட்டும்தான் என்பதே அவர்களது அபிமானத்திற்கு காரணம், ஏன் நான் கூட அந்தக்காலகட்டத்தில் மட்டுநகர் வாக்காளர்களுக்கு திட்டியுள்ளேன் , கூத்தமைப்பின் இந்திய  Proxy அரசியலின் மாயை தெரியாது ஏதாவது வெட்டி பிடுங்கி வருவார்கள் என்று நினைத்தே  , பிறகுதான் தெரிந்தது மட்டு வாக்காளர்களின் தூர நோக்கு 
கருணாவிற்கு பிள்ளையானின் மீதிருந்த அதே ஆதரவு எப்போதும் இருந்ததில்லை , மற்றயவர்களில் அருண் தம்பிமுத்து அவருடைய அப்பா சாம் தம்பிமுத்து மீதிருந்த மக்களின் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெளித்தெரியாமலே போய்விட்டார்.ஸ்ரீ ரங்கா ,அங்கஜன் போன்றோர் கிழக்கு மாகாண தொடர்பே அற்றவர்கள் இவர்களுக்கு கிழக்கு மாகாண தமிழர்களுக்கு எது அவசியம் அவர்கள் எவ்வவகையான நெருக்குவாரங்களை எதிர்கொள்கிறார்கள் என்ற அடிப்படை அறிவு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை . போர் முடிந்த கையுடன் போரினால் பிணைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் மீது அரசு ஏவிய நெருக்குவாரங்களை ஒரு அளவுக்கு மேல் இவர்களால் Deflect செய்திருக்க முடியாது ஏனென்றல் அரசுக்கு புலிகளுடன் தொடர்புடைய சிறு  வேர் தென்பட்டாலும் அழிக்கவேண்டிய தேவையிருந்தது, அதை அவர்களும்  எந்த எல்லைக்கும் சென்று செய்திருந்தார்கள், முஸ்லிம்கள் மாட்டியிருந்தாலும் அவர்களுக்கும் இதுவே நடந்திருக்கும். ஆனால் தற்போதைய நிலைமை அப்படியல்ல 
தமிழர்களை முண்டு கட்டிக்கொண்டு கூட்டம் கூட்டமாக அழித்து அதனால் எதுவும் ஆகாது அந்த இடத்தை சனத்தொகையில் , பொருளாதாரத்தில் முஸ்லீம்கள்  நிரப்புவார்கள் என்பது சிங்களவர்களுக்கு தெரியும்.

இந்த GAP ஐ Fill பண்ணக்கூடிய  அரசியல் தலைமை நம்மிடையே இல்லை, காரணம் எப்போதும் பிளான் A ஐ சிந்தித்த எமக்கு பிளான் B அவசியப்படவில்லை ,பிளான் B அவசியப்படும்  போது அதற்கான முஸ்தீபே கைவசம் இல்லை, 
சரி வியாழனுக்கு வருகிறேன் ,ஏன் வியாழன் எனக்கு வித்தியாசமானவர் என்றால் கூத்தமைப்பின் கூடாரத்திலிருந்து வெளியேறி கூத்தமைப்பின் கையாலாகாத்தனத்துக்கு உதாரணமாக தன்னை முன்னிலைப்படுத்துகிறார். இந்த விடயத்தில் அவர் மற்றைய அனைவரையும் விட வித்தியாசமானவர். நானும் கூத்தமைப்பில் இருந்தவன் தான் கூத்தமைப்பை பற்றி என்னிடம் சொல்லாதீர்கள் 
கூத்தமைப்பு இவ்வளவு காலமும் என்ன வெட்டி புடுங்கினவைகள் என்ற கேள்வி கூத்தமைப்பையும்  கூத்தமைப்பின் ஆதரவாளர்களையும்  மிரள வைக்கும் கேள்வி, இந்த கேள்வியை இப்படி கேட்கும் தகுதி அவருக்கு மட்டும் தான் இருக்கிறது என்பது எனது  வாதம். மற்றும் பேரம் பேசல் காசை அமத்துதல் இப்பிடி எல்லாம் அவரது தனிப்பட்ட விவகாரம் எனக்கு அவசியமில்லை ,இலங்கை அரசியலும் மாகாத்மாக்களும் கறை படா கரங்களுக்கு சொந்தக்காரர்களும் செய்யும்  அரசியல் இல்லை அது  மில்லியன் கணக்கிலும் கோடிக்கணக்கிலும் ஏப்பம் விடும் அரசியல், இதுவரை கறை படா கரங்களுக்கு சொந்தக்காரர்களான கூத்தமைப்பிற்கும் தமது சொத்துப்படியலை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதை தவிர்த்து தமிழ் மக்களுக்கு அதன் கறை படா கரத்தால்  எதுவுமே செய்ய முடியவில்லை. வியாழன் தனக்கு  அமத்துவதை அமத்திவிட்டு  மீதியில்  ஒரு தமிழனுக்காவது நன்மை செய்தால் அதுவே இப்போதிருக்கும் நிலையில் பெரிய விடயம் .       

ஒரு படத்தில் வடிவேலுவை ..சீச்சீ நீ அந்த விடயத்திற்கு சரிப்பட்டுவரமாட்ட என்று பார்க்கும் எல்லோரும் சொல்வார்கள் பாருங்கோ.அப்படி  கூத்தமைப்பை பொறுத்தவரை அந்த நிலைப்பாட்டிற்கு வந்தாச்சு
கூத்தமைப்பு இனி யார் பக்கம் சேர்ந்தாலும் அவர்கள் டம்மி பீசுகள் தான் 
 

போல்/அக்னி,

கூட்டமைப்பு ரணில் அரசுக்கு முண்டு கொடுத்ததால் ஒன்றும் ஆகவில்லை. ஆனால் ஒபீட்டளவில் வடக்கில் 2010-2015 இருந்த அன்றாட கெடுபிடிகள் பல குறைந்தன. குடியேற்றங்கள் சற்றே வேகம் குறைந்தன என்பதும் உண்மையே. கிழக்கில் 2007 வாக்கிலேயே முகாம்கள் பல மூடபட்டு படைகள் வடகுக்கு போயினர். 2009 போருக்கு பின்னர் வடக்கைவிட கிழக்கில் கெடுபிடிகள் குறைவாகவே இருந்தது.

எனவே இந்த 2010-15 vs 2015-19  வித்தியாசத்தை கிழக்கில் வாழ்ந்த அக்னி உணர்வது கொஞ்சம் கடினமாய்  இருக்கலாம். ஆனால் வடக்கில் முன்னர் போல் சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு இல்லை என்பதே உண்மை.

இந்த சின்ன சின்ன முன்னேறங்களையும் கோட்டவின் வரவும், ராணுவ இயந்திரத்தின் வரவும் இல்லாமல் ஒழிக்கவே வாய்ப்புகள் அதிகம்.

பண பேரம் இத்யாதி பற்றி அக்னி சொல்வது சரிதான். இலங்கை அரசியலில் விக்கியை தவிர கை சுத்தமானவர்கள் யாருமில்லை. ஆகவே வியாழேந்திரனிடம் அதை எதிபார்க்க முடியாதுதான்.

அக்னியை போல நான் ஒரு போதும் ஒரு அமைப்பில் இருந்தவனல்ல. ஆனால் இணைந்த வடக்கு-கிழக்கு என்பது சாத்தியம் இல்லை என மனதுக்கு தெரிந்தாலும் வடக்கிலும், கிழக்கிலும் மக்கள் அதை இன்னும் வேண்டுகிறார்களா? அல்லது கைவிட்டு விட்டார்களா? என்ற தெளிவு எனக்கும் இல்லை.

வியாழேந்திரனின் அரசியல் வெற்றி பெற்றால், குறைந்த பட்சம், தற்காலிகமாகவேனும் மட்டகளப்பு-அம்பாறை மாவட்ட மக்கள் தமிழ்தேசிய அரசியலில் இருந்து டிவோர்ஸ் எடுத்து கொண்டார்கள் என்ற தெளிவுக்கு வர முடியும்.

இந்த முடிவில் ஒரு தப்பும் இல்லை. மாவட்ட ரீதியில் மனோ கணேசன் போல அவரவர் அரசியலை பாதுகாப்பதுதான் இனி எமக்கான அரசியல் என்றால் அதை மாற்ற முடியாது.

 

3 hours ago, Lara said:

நீங்கள் கூறியது போல் வியாழேந்திரன் கோத்தா பக்கம் சாய்ந்து விட்டார். 😀

https://yarl.com/forum3/topic/232994-கோட்டாவுக்கே-வியாழேந்திரன்-ஆதரவு/

 

பழைய கடிகாரமும் நாளைக்கு 2 தரம் சரியாக நேரம் சொல்லும்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2019 at 2:12 AM, குமாரசாமி said:

கோத்தாவை ஆதரியுங்கள்......வாக்களியுங்கள்.
அவர் குடும்பம் தான் சிறிலங்காவின் பயங்கரவாதிகளை பூண்டோடு அழித்தவர்கள்.
அந்த நன்றிக்கடனுக்காவது கோத்தாவுக்கு வாக்களிக்க வேண்டும்.

கிழக்கி னை பொறுத்தவரைக்கும் பல வாக்குகள் கோத்தாவிற்கு காரணம் அரசியல் வங்குரோந்து தமிழ் தேசிய கூட்ட,மைப்பின் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.