Jump to content

கின்னஸ் சாதனைக்காக 13 மணி நேரம் பின்னோக்கியே ஓடிய குஜராத் பெண்கள்!!


Recommended Posts

பெண்கள் இருவரும் தங்களது பயணத்தை அகமதாபாத்தில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பர்தோலி என்ற இடத்தில் தொடங்கினர். முதல் நாள் மாலை 5 மணிக்கு தொடங்கிய பின்னோக்கிய ஒட்டம் மறுநாள் இரவு 9 மணிக்கு தண்டி என்ற இடத்தில் முடிந்தது.

கின்னஸ் சாதனைக்காக 13 மணி நேரம் பின்னோக்கியே ஓடிய குஜராத் பெண்கள்!!

பிரதமர் மோடிதான் தங்களுக்கு ஊக்கம் அளிப்பவராக இருந்தார் என்று பெண்கள் கூறியுள்ளனர்.

 

Bardoli-Dandi: 

கின்னஸ் சாதனைக்காக குஜராத்தை சேர்ந்த 2 பெண்கள் 13 மணி நேரம் பின்னோக்கி ஓடியுள்ளனர். இந்த 13 மணி நேரத்தில் அவர்கள் 53 கிலோ மீட்டரை கடந்திருக்கிறார்கள். தங்களுக்கு பிரதமர் மோடி ஊக்கம் அளிப்பவராக இருக்கிறார் என்று அந்தப் பெண்கள் கூறியுள்ளனர். 

ட்விங்கிள் தாகர் மற்றும் ஸ்வாதி தாகர் என்ற அந்த இரு பெண்கள் தங்களது பயணத்தை அகமதாபாத்தில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பர்தோலி என்ற இடத்தில் செவ்வாயன்று மாலை 5 மணிக்கு தொடங்கினர். 

தொடர்ந்து பின்னோக்கி ஓட ஆரம்பித்து இடையே ஓய்வெடுத்துக் கொண்ட அவர்கள், மறு நாளும் பயணத்தை தொடர்ந்தனர். இவ்வாறு தண்டி என்ற இடத்தில் செவ்வாயன்று இரவு 9 மணிக்கு பயணம் முடித்துக் கொள்ளப்பட்டது. 

மொத்தம் 13 மணி நேரத்தில் அவர்கள் 53 கிலோ மீட்டரை கடந்திருக்கிறார்கள். அவர்களது இந் சாதனை கின்னஸ் ரிக்கார்டுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

பின்னோக்கிய ஓட்டம் குறித்து ட்விங்கிள் தாகர் கூறும்போது, 'முதலில் நாங்கள் இந்த பின்னோக்கிய ஓட்டத்தை வெற்றிகரமாக முடிப்போமா என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. இருப்பினும் எங்களது குடும்பத்தினர்தான் எங்களை ஊக்கப்படுத்தினர். 

 

திறமையை வெளிப்படுத்த பெண்கள் முன்னால் வரவேண்டும். ஒவ்வொரு பெண்களிடமும் தனித்திறமை இருக்கும். அவர்களுக்கு ஆதரவுதான் தேவை. அது அளிக்கப்பட்டால் அவர்கள் முன்னுக்கு வந்து விடுவார்கள்' என்றார். 

இரு பெண்களுக்கும் தங்களுக்கு ஊக்கம் அளிப்பராக பிரதமர் மோடி இருக்கிறார் என்று கூறியுள்ளனர். 
Link to comment
Share on other sites

12 hours ago, ampanai said:

கின்னஸ் சாதனைக்காக குஜராத்தை சேர்ந்த 2 பெண்கள் 13 மணி நேரம் பின்னோக்கி ஓடியுள்ளனர். இந்த 13 மணி நேரத்தில் அவர்கள் 53 கிலோ மீட்டரை கடந்திருக்கிறார்கள். தங்களுக்கு பிரதமர் மோடி ஊக்கம் அளிப்பவராக இருக்கிறார் என்று அந்தப் பெண்கள் கூறியுள்ளனர். 

பெண்களின் பின்னோக்கிய ஒட்டத்திற்கு மோடி ஊக்கம் அளிப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஆர். எஸ். எஸ் மற்றும் பா.ஜ.க வின் பெரு விருப்பமே அது தானே. 

Link to comment
Share on other sites

12 hours ago, tulpen said:

ஆர். எஸ். எஸ் மற்றும் பா.ஜ.க வின் பெரு விருப்பமே அது தானே. 

அப்படியானால் இந்தியாவும் நாளைய  சவூதி அரேபியாவா?  

இந்தியா தொடர்ந்தும் பொருளாதார ரீதியாக முன்னேறி வரும் நாடு. அதில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. அதில் இப்பொழுது ஆட்சியில் உள்ள அரசின் பங்களிப்பும் அதில் பெண்களின் பங்களிப்பும் சிறந்தவையே !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ampanai said:

அப்படியானால் இந்தியாவும் நாளைய  சவூதி அரேபியாவா?  

இந்தியா தொடர்ந்தும் பொருளாதார ரீதியாக முன்னேறி வரும் நாடு. அதில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகின்றது. அதில் இப்பொழுது ஆட்சியில் உள்ள அரசின் பங்களிப்பும் அதில் பெண்களின் பங்களிப்பும் சிறந்தவையே !

இந்தியா நாளைய சவூதிஅரேபியா அல்ல! அது இப்போதே சவூதி, எகிப்து, லிபியா தரத்தில் தான் இருக்கிறது பெண்களின் பாதுகாப்பைப் பொறுத்தவரை!

ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை குஜராத்தில் கொல்ல மௌனமாக (ஜே.ஆர் 83 இல் செய்தது போல) பார்த்திருந்த கொலைப் பொறுப்பாளி தான் மோடி! அவர் ஆட்சியில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கும் பாதுகாப்பில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பில்லை!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புலம்பெயர் தமிழர் எல்லாம் ஜேர்மன், ஏனைய ஐரோப்பிய நாடுகள், பலர் இங்கிலாந்தில் எந்த மொழி பேசினார்களோ - அந்த மொழியில் என ஊகிக்கிறேன். ஆனால் இவர்களுக்கு மொழி ஒரு பெரிய தடை என்கிறது அந்த பதிவு. இந்தியாவில் ஒருத்தரை சண்டை பிடிக்கும் பகுதியில் கிளீனர் என அழைத்துப்போய் - சண்டையே பிடிக்க வைத்துள்ளார்களாம்.
    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா? பிற்சேர்க்கை ஒலிப்பதிவை கேட்டேன், இதில் சிலாகிக்கபடுவது கிட்டதட்ட முழுவதும் ரஸ்யா போனவர்கள் பற்றியே. எனிலும் உக்ரேனுக்கும் இப்படி போவதாக இரெண்டு இடத்தில் சொல்லவும் படுகிறது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.