Jump to content

ஹூஸ்டன் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.14 கோடி நிதி திரண்டது


Recommended Posts

157019349283303.jpg

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக 14 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பு அங்குள்ள தமிழர்களால் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மிகவும் பழமையான தமிழ்மொழியை கற்பிப்பதற்கும், தமிழ் இலக்கியங்கள், அதன் பாரம்பரிய மற்றும் பண்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துவதற்கும் தமிழ் இருக்கை அமைப்பு நிதி திரட்டி வருகிறது.

அதன்படி, தமிழ் இருக்கை அமைப்பிற்கு 2 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 14 கோடி ரூபாய் நிதி தமிழ் ஆர்வலர்கள் மூலம் கிடைத்துள்ளது. இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கும் அமெரிக்காவில் இந்த நிதியை கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்த நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவதற்கும், கல்வி திட்டங்களை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஹூஸ்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

 

https://www.polimernews.com/dnews/83303/ஹூஸ்டன்-பல்கலையில்-தமிழ்இருக்கை-அமைக்க-ரூ.14-கோடிநிதி-திரண்டது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.