Jump to content

மன்னார் வளைகுடாவில் 62 வகையான புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு


Recommended Posts

157015280883171.jpg

இந்தியாவின் மிக முக்கிய கடல் வாழ் பல்லுயிர் பகுதியான மன்னார் வளைகுடாவில் 62 புதியவகை உயிரினங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

இந்தியாவின் தென்கோடியில் ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுள்ள இந்தப் பகுதியில் 21 தீவுக் கூட்டங்கள் உள்ளன. கடல் வாழ் பல்லுயிர் உயிர்கோளமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில் ஏராளமான பவளப்பாறைகள் உள்ளன.

இந்தப் பவளப்பாறைகள் மீன்கள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களுக்கு முக்கியமான வாழ்விடமாக அமைந்துள்ளன. இங்கு 4 ஆயிரத்து 223 வகையான கடல்வாழ் தாவரம் மற்றும் உயிரினங்கள், அழிந்துவரும் இனமான கடல் பசு, 117 வகை பவளப்பாறைகள், 14 வகை கடல் புற்களும் இருப்பதாகக் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் தற்போதைய கடல்வாழ் உயிரியல் வளம் குறித்து விரிவான ஆய்வு நடத்திட மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் திட்டமிட்டது.

இதையடுத்து கடந்த 2017 மே மாதம் முதல் 2019 மார்ச் மாதம் வரை மன்னார் வளைகுடாவில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த ஆய்வில் பல புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வில் 11 கடல் பஞ்சு இனங்கள், 14 கடின பவளப்பாறை இனங்கள், 2 கடல்பாசி இனங்கள், 2 மீன் இனங்கள், 17 மெல்லிய பவளப்பாறை இனங்கள்,16 சங்கு இனங்கள் என 62 புதிதான உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இவை தவிர 50-க்கும் மேற்பட்ட அடையாளம் காண முடியாத புதிய உயிரினங்களும் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் வளைகுடா என்பது பல்லாயிரக்கணக்கான மீன்களுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் உரித்தான இடம். இயற்கைச் சமநிலைக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் காரணமான மனங்கவரும் மன்னார் வளைகுடாவை காப்பதில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

https://www.polimernews.com/dnews/83171/மன்னார்-வளைகுடாவில்-62வகையான-புதிய-உயிரினங்கள்கண்டுபிடிப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

மன்னார் வளைகுடா என்பது பல்லாயிரக்கணக்கான மீன்களுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் உரித்தான இடம். இயற்கைச் சமநிலைக்கும் பல்லுயிர் பெருக்கத்திற்கும் காரணமான மனங்கவரும் மன்னார் வளைகுடாவை காப்பதில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.

இந்த வளைகுடாவுக்கு அருகில் உள்ள மன்னார் எனும் ஊரில் தமிழினம் அழிந்து வருகின்றது.

Link to comment
Share on other sites

20 hours ago, குமாரசாமி said:

இந்த வளைகுடாவுக்கு அருகில் உள்ள மன்னார் எனும் ஊரில் தமிழினம் அழிந்து வருகின்றது.

ஏன்..????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Dash said:

ஏன்..????

நாங்கள் எல்லாம் வெளி நாட்டில் இருப்பதால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

நாங்கள் எல்லாம் வெளி நாட்டில் இருப்பதால்.

ஏன் அங்கை இருக்கிறவை மனிசர் இல்லையோ? தமிழர் இல்லையோ? :grin:

Link to comment
Share on other sites

11 minutes ago, குமாரசாமி said:

ஏன் அங்கை இருக்கிறவை மனிசர் இல்லையோ? தமிழர் இல்லையோ? :grin:

வடக்கின் அடாவடி மினிஸ்டர் தனது ஆக்களை குடியேற்றியதை குறிப்பிட்டு உள்ளீர்கள் என நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

புறக்­க­ணிக்­கப்­பட்ட நிலையில்  மன்னார் மாவட்ட தமி­ழர்கள்

தமிழ் மக்கள் குறிப்­பாக இந்­துக்கள் வாழும் கிரா­மங்கள் சகல வழி­க­ளிலும் புறக்­க­ணிக்­கப்­பட்டு வரு­வதை ஆய்­வுகள், மதிப்­பீ­டுகள் மூலம் அறிய முடி­கின்­றது. கடந்­த­கால யுத்த சூழ்­நி­லையால் பெரிதும் பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் இம்­மா­வட்ட தமிழ் மக்கள் உள்­ளனர். வாழ்­வி­டங்­க­ளையும், சொத்து சுகங்­க­ளையும், உற­வு­க­ளையும் இவ்­வாறு பல இழப்­பு­க­ளையும் இழந்­த­வர்­க­ளாக இவர்கள் உள்­ளனர்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/5/2019 at 3:58 AM, குமாரசாமி said:

இந்த வளைகுடாவுக்கு அருகில் உள்ள மன்னார் எனும் ஊரில் தமிழினம் அழிந்து வருகின்றது.

இன்னும் கொஞ்ச காலம் பொறுங்கள் மொத்தமா சோலி முடியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இன்னும் கொஞ்ச காலம் பொறுங்கள் மொத்தமா சோலி முடியும் 

தமிழர்களுக்கென்று தமிழ் நாடு இருக்கின்றது.அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரந்து வசதியாக வாழ்கின்றார்கள். கோவில் கூட அமைத்து சுதந்திரமாக வாழ்கின்றார்கள். சிங்கள மக்களுக்கு சிறிலங்காவை விட்டால் உலகில் ஒரு இடமும் ஒரு பிடி மண் கூட இல்லை.அவர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும். அது சிறிலங்கா மட்டுமே. நாங்கள் கொஞ்சமாவது மனிதாபத்துடன் சகலதையும் உற்று நோக்க வேண்டும்.நீதி நியாயமாக பார்த்தால் சிறிலங்கா சிங்கள மக்களுக்கே உரித்தானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரிசார்ட் பதியுதீன் அழிப்பதில் மிஞ்சுவதை தந்திரி மலையில் இருந்து பரவும் குடியேற்றம் அழிக்கும்.

அதிலும் மிஞ்சுவதை நாமே, ரோட்டில் கட்டும் வளைவு பற்றிய சர்சைகளால் அழித்துக் கொள்வோம்.

விக்டரும் ராதாவும் தோளோடு தோள் நின்றநாட்களை, பாதர் சிங்கராயரை, நவாலியும் சுதுமலையும் ஒன்றாகவே குறிவைக்கப்பட்டன என்பதை எல்லாம் ஒரு பத்து வருடங்களில் மறந்து, வளைவுகளுக்காய் ஆளையாள் தொண்டையில் பிடிக்கும் இனம் - இன்னும் அழியாமல் இருப்பதுதான் விந்தையிலும் விந்தை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2019 at 2:18 AM, குமாரசாமி said:

தமிழர்களுக்கென்று தமிழ் நாடு இருக்கின்றது.அது மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பரந்து வசதியாக வாழ்கின்றார்கள். கோவில் கூட அமைத்து சுதந்திரமாக வாழ்கின்றார்கள். சிங்கள மக்களுக்கு சிறிலங்காவை விட்டால் உலகில் ஒரு இடமும் ஒரு பிடி மண் கூட இல்லை.அவர்களுக்கு என்று ஒரு நாடு வேண்டும். அது சிறிலங்கா மட்டுமே. நாங்கள் கொஞ்சமாவது மனிதாபத்துடன் சகலதையும் உற்று நோக்க வேண்டும்.நீதி நியாயமாக பார்த்தால் சிறிலங்கா சிங்கள மக்களுக்கே உரித்தானது.

இந்திய தமிழர்களுக்கு தமிழ் நாடு இருக்கிறது இலங்கை தமிழர்களுக்கு ???

புரிந்து கொண்டாலும் லேட்டாக புரிந்து கொண்டீர்கள் போல தோன்றுகிறது 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.