Jump to content

அசுரன்: சினிமா விமர்சனம்


Recommended Posts

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை படங்களுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் நடிகர் தனுஷும் இணைந்திருக்கும் நான்காவது படம். எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலின் திரைவடிவம்தான் அசுரன்.

1960களில் நடக்கிறது கதை. தன் அண்ணனைக் கொலை செய்த வடக்கூரானை (ஆடுகளம் நரேன்) கொலை செய்கிறான் 15 வயதுச் சிறுவனான சிதம்பரம் (கென் கருணாஸ்). வடக்கூரானின் ஆட்களும் காவல்துறையும் தேட ஆரம்பிக்க, சிதம்பரமும் அவனது தந்தை சிவசாமியும் (தனுஷ்) காட்டுக்குள் தப்பிச் செல்கிறார்கள். மிகவும் பயந்தவராகவே தன் தந்தையை அறிந்திருந்த சிதம்பரத்திற்கு காட்டுக்குள் பதுங்கியிருக்கும்போதுதான் அவரது மறுபக்கம் தெரிகிறது. இந்தக் கொலை வழக்கிலிருந்தும் வடக்கூரான் குடும்பத்தின் பகையிலிருந்தும் சிதம்பரத்தின் குடும்பம் எப்படி மீள்கிறது என்பது மீதிக் கதை.

வெற்றி மாறனின் படங்களில் பெரும்பாலானவை தீராப் பகையையும் துரோகத்தையும் பழிவாங்குவதையும் மனம் திடுக்கிடும் வகையில் சொல்லிச் செல்பவை. இந்தப் படமும் அதேபோலத்தான். ஒரு நாவல் திரைப்படமாகும்போது, அதன் மையப் புள்ளியிலிருந்து விலகி, வேறொரு கதையாக மாறிவிடும். ஆனால், பூமணியின் வெக்கையை கிட்டத்தட்ட அதே உக்கிரத்துடன் திரையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் வெற்றிமாறன்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

ஒரு கொலையைச் செய்துவிட்டு சிதம்பரமும் சிவசாமியும் காட்டுக்குள் நுழைய, மெல்ல மெல்ல ஒரு கரிசல்காட்டு வாழ்க்கையை திரையில் விரிக்கிறார் வெற்றிமாறன். வெக்கை நாவலின் ஆசிரியரான பூமணி ஒரு முறை அந்த நாவலைப் பற்றிப் பேசும்போது, "கொலை செய்தது சிதம்பரம். காட்டுக்குள் திரிந்தது நான்" என்றார். இப்போது அந்தக் காட்டுக்குள் ரசிகர்களையும் அழைத்துச் சென்றிருக்கிறார் வெற்றிமாறன். அவரது மிகச் சிறந்த படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். ஏன் மிகச் சிறந்த படமாகக்கூட ஒருவர் கருதலாம்.

சிவசாமி பாத்திரத்திற்கு தனுஷ் மிகச் சிறந்த தேர்வு. பல காட்சிகளில் தன் முந்தைய உயரங்களைத் அனாயாசமாகத் தாண்டிச் செல்கிறார் அவர். குறிப்பாக, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி மஞ்சு வாரியர் கேட்கும்போது, தனுஷின் முகத்தில் இருக்கும் பரிதவிப்பு, அட்டகாசம்.

கொலை செய்துவிட்டு தந்தையுடன் தப்பிச் செல்லும் சிறுவனாக வரும் கென் கருணாஸ், ஒரு மிகச் சிறந்த அறிமுகம். 16 வயதுச் சிறுவனுக்கே உரிய படபடப்பு, கோபம், பயம் எல்லாவற்றையும் தொடர்ந்து முகத்தில் தக்கவைக்கிறார் கென்.

பசுபதி, நரேன், பிரகாஷ் ராஜ், மஞ்சு வாரியர், அம்மு அபிராமி என ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பொருத்தமான ஆளைப் பார்த்துத் தேர்வுசெய்திருக்கிறார் இயக்குநர்.

அசுரன்படத்தின் காப்புரிமைINDIAGLITZ/ASURAN

ஜி.வி. பிரகாஷின் இசை படத்தில் மிகப் பெரிய பலங்களில் ஒன்று. படத்தின் தீவிரத்தை இவரது இசை இன்னும் பல மடங்கு அதிகரிக்கிறது. 'கத்தரிப் பூவழகி' பாடல், கொடும் பாலைவனத்தில் பெய்யும் பெரு மழையைப் போல இருக்கிறது. வேல்ராஜின் ஒளிப்பதிவும் அபாரம்.

பல கொலைகளுக்குப் பிறகும், பிரச்சனைகளுக்குப் பிறகும் இறுதியில் ஒரு நம்பிக்கைக் கீற்றை விதைக்கிறது படம். 'பிறகு', 'வெக்கை' என பூமணியின் எல்லா நாவல்களிலும் அடிப்படையான அம்சம் இதுதான். பிரச்சனைகள், அழிவுகளைத் தாண்டியும் மனித வாழ்க்கை முன்னோக்கிச் செல்லும் என்பதற்கான நம்பிக்கையை அவரது கதைகள் கொடுத்துக்கொண்டே இருக்கும். வெற்றி மாறனின் இந்தப் படமும் அதே நம்பிக்கைக் கீற்றுடன் முடிகிறது.

ஒரு நாவலைத் திரைப்படமாக்கும்போது ஒன்று திரைக்கதைக்காக நாவல் மாற்றப்பட்டு முற்றிலும் அடையாளம் தெரியாமல் போய்விடும். அல்லது அப்படியே படமாக்கப்பட்டு பார்க்கச் சகிக்காமல் இருக்கும். ஆனால், ஒரு நாவலை சிறந்த திரைக்கதையாக்கும் சூத்திரத்தை இந்தப் படத்தில் முன்வைத்திருக்கிறார் இயக்குநர். அந்த வகையிலும் இது முக்கியமான படம்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-49931644

Link to comment
Share on other sites

Dhanush-Asuran.jpg
 

அசுரன்- திரைப்பட விமர்சனம்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘அசுரன்’ எப்படி என்று பார்ப்போம்.

தனுஷ் குடும்பத்திற்கும், ஆடுகளம் நரேன் குடும்பத்திற்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சினை ஏற்படுகிறது. அந்த பிரச்சினையில் தனுஷின் மூத்த மகன் கொலை செய்யப்பட, அதற்கு பழிவாங்குவதற்காக தனுஷின் இளைய மகனான கென், நரேனை கொலை செய்துவிடுகிறார். இதனால் தனுஷின் குடும்பத்தை வேறோடு அறுக்க நரேனின் ஆட்கள் கிளம்ப, அவர்களுக்கு காவல் துறையும் துணை போகிறது. அவர்களிடம் தப்பிக்க மகனுடன் காட்டில் பதுங்கும் தனுஷின் மறு உருவம் தெரிய வருவதோடு, அதுவரை வன்முறையை தவிர்த்து சமாதானத்தை நாடிய தனுஷ், தனது குடும்பத்திற்காக மீண்டும் கத்தியை கையில் எடுக்க, அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் அத்தனையும் அதிரடி நிறைந்த சரவெடியாக திரையில் விரிகிறது.

வெக்கை நாவல் எந்த அளவுக்கு பரபரப்பாக இருக்குமோ அதைப்போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், வெக்கை நாவலை முழுமையாக படமாக்காமல், அதன் அடிநாதத்தை, தனது கற்பனை கதையுடன் சரியான புள்ளியில் இணைத்து ஒரு முழுமையான மண் சார்ந்த படத்தையும், அதன் மூலம் வன்முறை எந்த பிரச்சினைக்கும் தீர்வாகாது என்பதையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

40 க்கு மேற்பட்ட வயதுடைய கதாபாத்திரத்தில் தனுஷ் கச்சிதமாக பொருந்தி போகிறார். தனது பாடி லேங்குவேச் மற்றும் கண் மூலம் சின்னசாமி என்ற கதாபாத்திரத்தை நம்முள் கடத்திவிடுபவர், இளம் வயது தோற்றத்தில் காட்டும் வீரியம் மூலம் நம்மை மெய்சிலிரிக்க வைத்துவிடுகிறார்.

தனுஷின் மனைவியாக வரும் மஞ்சு வாரியர், திருநெல்வேலி தமிழ் பேச சில இடங்களில் கஷ்ட்டப்பட்டிருந்தாலும் கரிசல் மண்ணின் பெண்ணாக மனதில் ஒட்டிக்கொள்கிறார். தனுஷின் மூத்த மகனாக நடித்திருக்கும் டிஜே அருணாசலமும், இளைய மகனாக நடித்திருக்கும் கென் கருணாஸும், கதாபாத்திரத்திற்கு ஏற்ற கச்சிதமான தேர்வாக இருக்கிறார்கள்.

வழக்கறிஞராக வரும் பிரகாஷ்ராஜ், பசுபதி, போலீஸ் இன்ஸ்பெக்டரான இயக்குநர் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன் என அனைத்து நடிகர்களும் மண் சார்ந்த மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆக்‌ஷன் காட்சிகளில் வீசப்படும் வெடிகுண்டின் சத்தம், ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கொடுக்கப்பட்ட பின்னணி இசை, தனுஷ் காட்டில் பதுங்கி செல்வது என்று அனைத்து ஏரியாவிலும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை மிரட்டல்.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் நம்மையும் கோவில்பட்டியில் பயணிக்க வைத்துவிடுகிறார். பறந்து விரிந்த காட்டுக்குள் தனுஷ் சுற்றி திரியும் போது நாமும் ஏதோ காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் இவரது ஒளிப்பதிவு ஒரு முழுமையான பீரியட் படம் பார்த்த அனுபவத்தையும் கொடுக்கிறது.

பீட்டர் ஹெய்னின் ஆக்‌ஷன், ஆர்.ராமரின் படத்தொகுப்பு, ஜாக்கியின் கலை, பெருமாள் செல்வத்தின் உடை வடிவமைப்பு என அனைத்துமே படத்தை வேறு ஒரு உயர்த்திற்கு எடுத்துச் செல்லும் விதத்தில் அமைந்திருக்கிறது.

வெற்றிமாறனின் பெஸ்ட் படம் என்று சொல்லும் அளவுக்கு படம் தொடங்கியதில் இருந்து முடிவு வரை, படு பரபரப்பாக நகர்கிறது. அதிலும், நரேனை கென் வெட்டிய பிறகு வேகம் எடுக்கும் படம், தனுஷ் கத்தி எடுக்கும் போது பரபரப்பின் உச்சத்திற்கே சென்றுவிடுகிறது.

தலித் மக்களின் பஞ்சமி நிலங்களை மேல்தட்டு மக்கள் பறித்துக்கொண்டனர் என்பதை தைரியமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறன், ஜாதி பிரிவினை குறித்து அளவோடு பேசினாலும் அதை அழுத்தமாகவும், நியாயமாகவும் பேசியிருக்கிறார்.

நிலம் ஒவ்வொரு மனிதனின் உரிமை, அதை பறிக்க நினைத்தால் எதிர்த்து போராட வேண்டும், என்று சொல்லும் இயக்குநர் வெற்றிமாறன், வன்முறை காட்சிகளோடு கதையை நகர்த்தினாலும், படம் முழுவதும் வன்முறை வேண்டாம், என்பதையும் அழுத்தமாகவே வலியுறுத்தி வருகிறார்.

மொத்தத்தில், ‘அசுரன்’ அதிரடி நிறைந்த சரவெடியாக இருக்கிறது.

-ரேட்டிங் 4/5

https://chennaionline.com/tamil/அசுரன்-திரைப்பட-விமர்சன/

Link to comment
Share on other sites

நேற்ற கொழும்பில் இப் படத்தை பார்த்தேன்.  வெற்றிமாறனின் இன்னொரு அருமையான அரசியல் படைப்பு.

தனுஷ்....இதுக்கு மேலாக இன்னொரு படத்தில் இவரால் நடிக்க முடியுமா என ஒவ்வொரு படத்திலும் கேள்வி கேட்க வைத்தாலும் இந்தப் படத்தில் அதை நூறு தடவை கேட்க வைக்கின்றார்.

இப் படம் பேசும் அரசியல் தேசங்களை தாண்டி, மொழிகளை தாண்டி, உலகம் முழுக்க இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும், ஒடுக்குமுறையில் இருந்து வெளியே வர போராடும் வர்கத்தின் சவால்களையும் தெளிவான திரைக்கதையில் சொல்லியுள்ளார் வெற்றிமாறன்.

தரமான சினிமா பார்க்க விரும்புகின்றவர்கள் தவற விடக்கூடாத சினிமா..

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

திரை விமர்சனம்: அசுரன்

518858.jpg

சிவசாமி (தனுஷ்) குடும்பத்தின ரிடம் இருக்கும் சிறு நிலத்தை தன் தம்பி வெங்கடேசன் தொடங்கப்போகும் சிமென்ட் தொழிற்சாலைக்காக வாங்கத் துடிக்கிறான் வடக்கூரான் நரசிம்மன் (ஆடுகளம் நரேன்). சாதுவான சிவசாமியோ, அது அவரது மனை விக்கு அவளது அண்ணன் தந்த நிலம் என்பதால் விற்க மறுக்கிறார். இதில் ஏற்பட்ட தகராறு காரண மாக சிவசாமியின் மூத்த மகன் முரு கனை ஆள்வைத்துக் கொன்றுவிடு கிறான் நரசிம்மன். இதை நேரில் பார்த்த சிவசாமியின் இரண்டாவது மகன் சிதம்பரம் (கென் கருணாஸ்), நரசிம்மனையே கொன்றுவிடுகி றான். இதனால் சிவசாமியின் குடும்பத்தையே அழிக்க நரசிம் மன் குடும்பம் அலைகிறது. அவர் களுக்கு பயந்து மனைவி பச்சை யம்மாளையும் (மஞ்சு வாரியர்), குழந்தையையும், மைத்துனரான முருகேசன் (பசுபதி) பொறுப் பில் விட்டுவிட்டு சிதம்பரத்துடன் காட்டுக்குள் நுழைகிறார் சிவசாமி. போலீஸாரும் கொலையாளியைத் தேடுகிறார்கள். சிவசாமி போலீஸி டம் மாட்டினாரா? தன் குடும் பத்தைக் காப்பாற்றினாரா என்ப தற்கு விடை சொல்கிறது ‘அசுரன்’.

‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வட சென்னை’ வரிசையில் 4-ம் முறையாக ‘அசுர’னில் இறங்கி அடித்திருக்கிறது வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி. 80-களில் தொடங் கும் கதை 60-களில் பின்னோக்கி பயணித்து மீண்டும் 80-க்குள் வந்து படத்தை நிறைவுசெய்திருக்கும் விதமும், ஒரு படத்துக்குள் இரு பீரியட் கதைகளைச் சொன்ன விதமும் ரசிக்கவைக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்களை நுட்பமாகப் பயன்படுத்திக்கொள்ளும் ஆதிக்க வர்க்கத்தினரையும், அவர்களது சாதிய வன்மத்தையும் படம் உரக்கப் பேசியிருக்கிறது.

எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை அடிப்படையா கக் கொண்டு, மணிமாறனும் வெற்றி மாறனும் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். அடித்தட்டு மக்கள் பக்கம் நின்று அவர்களது நியா யத்தை துணிச்சலுடன் பேசியிருக் கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

சிவசாமி கதாபாத்திரத்தில் படத்தை முழுவதும் தாங்கிப் பிடிக் கிறார் தனுஷ். பிள்ளைகளுக்குப் பாசமான அப்பா, குடும்பத்தைக் காக்கப் போராடும் குடும்பத் தலை வன், பிளாஷ்பேக்கில் அழகான காதலன், சாதிய துவேஷங்களை எதிர்க்கும் ஆக்ரோஷமான இளை ஞன் என ஒவ்வொரு காட்சியிலும் தனுஷ் மிளிர்கிறார். ஆரம்ப காட்சி களில் அவரது உடல்மொழியும் ஒப்பனையும், ஐம்பதைத் தொடும் அந்தக் கதாபாத்திரத்துக்குப் பொருந்தாததுபோல் தோன்றினா லும், போகப் போக தனது நடிப்பால் ஈடுகட்டிவிடுகிறார் தனுஷ்.

மஞ்சு வாரியர் உடை, தோற்றம், நடிப்பு எல்லாம் பொருந்துகிறது. குரலில்தான் வட்டாரத்துக்குப் பொருந்தாத அந்நியத் தன்மை! தனுஷின் மூத்த மகனாக டிஜே அரு ணாச்சலமும், தனுஷை கையாலா காத அப்பாவாக நினைக்கும் இளைய மகன் கதாபாத்திரத்தில் கென் கருணாஸும் கச்சிதமா கப் பொருந்தியுள்ளனர். பசுபதி, ‘ஆடுகளம்’ நரேன், பாலாஜி சக்தி வேல், பிரகாஷ்ராஜ் என எல்லோ ரும் தெக்கத்தி மனிதர்களாகவே மாறியுள்ளனர்.

வேல்ராஜின் ஒளிப்பதிவு தேரிக் காட்டையும் கரிசல் பூமியையும் துல்லியமாகப் படம் பிடித்திருக் கிறது. காட்சிகளில் பயன்படுத்தப் பட்ட இருள், ஒளி ஆகியவற்றின் மூலம் கதாபாத்திரங்களின் மன நிலையை தத்ரூபமாகவே வெளிப் படுத்துகிறது ஒளிப்பதிவு.

‘‘அவனுக்கு நாய் போச்சுன்னு கஷ்டமாயிருக்கு.. எனக்கு நாயோட போச்சேன்னு ஆறுதலாயிருக்கு..’’, ‘‘காடு இருந்தா எடுத்துக்கிடுவா னுவ.. ரூபா இருந்தா புடுங்கிக்கிடு வானுவ.. ஆனா, படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது..’’ போன்ற வசனங்களி லும், பெண் குழந்தையைத் ‘தாய்’ என அழைக்கும் நுட்பத்திலும் கவனிக்க வைக்கிறார்கள் வசனம் எழுதிய சுகாவும், வெற்றிமாறனும்.

பாடல்களைவிட பின்னணி இசையில் ஜி.வி.பிரகாஷ் கவனம் ஈர்க்கிறார். காலகட்டத்தை சித்தரிப் பதில் கலை இயக்குநர் குறிப்பிடத் தக்க வகையில் பங்களித்துள்ளார்.

தவிர்க்கமுடியாத சூழலிலேயே சிவசாமி வன்முறையை தேர்ந் தெடுப்பதாகக் காண்பித்தாலும், வன்முறைக் காட்சிகள் படம் பிடிக் கப்பட்ட விதமும், திரைக்கதையில் அவை இடம்பெறும் விதமும் வன் முறையைக் கொண்டாடுவதாக அமைந்துவிடுகின்றன. கெட்ட வார்த்தைகளும் தாராளம்! இது போக இளைஞன் தலையில்லாமல் கிடக்கும் காட்சி, துண்டிக்கப்பட்டுக் கிடக்கும் கை..! (பெற்றோர் துணை யுடன் சிறுவர்களும் பார்க்கலாம் என்று பரிந்துரைக்கும் யு/ஏ சான்றிதழைத் தணிக்கை வாரியம் வழங்கியிருக்கிறது).

உறவுகளின் அன்பைச் சொல் லும் ஒரு நாவலை சினிமாத்தனத் துக்கு மாற்றியதில் இயக்குநர் வெற்றிமாறன் ஜெயித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மனிதர்கள் செருப்பு அணியக்கூட முடியாமல் இருந்த சாதிய ஒடுக்குமுறையையும், அந்த மக்களின் கண்ணீர்க் கதையையும் சரியாகவே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார். கல்வி மட்டுமே அந்த மக்களுக்கு விடியல் தரும் என்பதையும் ஆக்கபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார்.

ஆனால், வழக்கமான சினிமா உத்திகளையே பின்பற்றிய வகை யில், வெற்றிமாறனும் சில ‘கிளிஷே’க்களுக்கு தப்பவில்லை. ஈட்டியில் ஒரே குத்தில் வில்லன் சாகி றான். நாயகனுக்கு நெஞ்சில் ஈட்டி பாய்ந்தாலும் உயிரோடு எழுந்து சரணடையப் போகிறான். பீரியட் படம் என்பதைக் காட்டுவதற்காக பழைய போன், சுவர் விளம்பரங் கள் என வழக்கமான உத்திகளையே காட்டுவதும் அலுப்பூட்டுகிறது.

அனைத்தையும் மீறி, ‘அசுரன்’ - வன்முறைக் கறைபடிந்த ஒடுக் கப்பட்டவர்களின் நாயகன்தான்.

 

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/518858-asuran-review.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசுரன்

வா. மணிகண்டன்


சமீபத்தில் ஒரு திருமண விழாவில் இளைஞனொருவன் அருகில் அமர்ந்திருந்தான். ‘எப்படிங்கண்ணா புக் ரிலீஸ் பண்ணுறது?’ என்று ஆரம்பித்தான். கவிதை எழுதுவானோ என்று நினைத்து சற்று தள்ளி அமர்ந்தேன். சாதியப் பெருமைகளை புத்தகமாக எழுதப் போகிறானாம். இப்படி நிறையப் பேர் சுற்றுகிறார்கள். கிடா வெட்டுவது கூட அவர்களுக்கு சாதியப் பெருமைதான். ‘என்ன மாதிரியான பெருமைகள்’ என்றால் ஐம்பது வருடங்களுக்கு முன்பாக எப்படி கெளரவமாக இருந்தோம் என்று எழுதுவதாகச் சொன்னான். அவனிடம் என்ன பேசுவது என்று கொஞ்ச நேரம் குழப்பமாக இருந்தது.  உண்மையில் அவன் பெருமைகள் என்று நினைத்துக் கொண்டிருப்பது அன்றைக்கு அப்பட்டமாக வெளிப்பட்ட சாதிய வெறி. அக்கம்பக்கத்தில் கேள்விப்படும் நான்கைந்து சாதிகளைத் தவிர அவனுக்கு பெயர் கூடத் தெரியவில்லை. அவன் பேசுவது அத்தனையும் செவிவழிச் செய்தி- செவிவழி என்பதைவிட வாட்சாப் வழிச் செய்தி.

 

தமிழகத்தின் சாதியச் சிக்கல்களைப் புரிந்து கொள்ளாத இளந்தலைமுறையினர் மிகப்பெரிய கூட்டமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு மேம்போக்காகத் தெரிந்ததெல்லாம் எங்கள் தாத்தா காலத்தில் அடங்கியிருந்தவர்கள் தங்களது அப்பன் காலத்தில் திமிர் பிடித்தவர்களாகிவிட்டார்கள் என்பதுதான். அவர்களை பழையபடி மீண்டும் அடக்கி வைப்பதுதான் தங்களின் வாழ்நாள் லட்சியமாகச் சொல்லிக் கொண்டு வாட்ஸாப்பில் வாசித்துக் கொண்டிருப்பவர்கள். சிலர் கைகளில் சாதியப் பெருமைகளைப் பச்சை குத்திக் கொள்கிறார்கள். மற்றவர்கள் நெஞ்சுக்குள் குத்திக் கொள்கிறார்கள். 

 

இங்கே நிலம்-அரசியல்-சமூகம்- பொருளாதாரம் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. நிலத்துக்கான அரசியல், அரசியலுக்கான பொருளாதாரம், பொருளாதாரத்துக்கான நிலம் என எந்தவொன்றையும் இன்னொன்றோடு தனித்தனியாகவும் பொருத்திப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் எல்லாவற்றையும் இணைத்துப் புரிந்து கொள்ளத் தொடங்கும் போதுதான் தமிழகத்தின் வரலாற்றின் ஒரு நுனியை எட்டிப்பிடிக்க முடியும். இத்தகைய விரிவான புரிதலானது பரவலாக, வெகுஜன மட்டத்தில் உண்டாகாமல் ‘சமத்துவ சமூகம்’ அவ்வளவு சுலபமாக அமைந்துவிடாது. ஆனால் அத்தகைய புரிதல்களுக்கான வாய்ப்புகளே உருவாக்கப்படுவதில்லை. இங்கே இது வரை நடந்த போராட்டங்கள், விழிப்புணர்வு இயக்கங்கள், சட்டங்கள் யாவும் பிற சாதியினர் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கவும், ஆதிக்கம் செலுத்தினால் எதிர்த்து நில் என்பதையும் சாதித்திருக்கும் அளவுக்கு பரவலான மனநிலை மாற்றங்களை உருவாக்கியிருக்கவில்லை என்பதுதான் நிதர்சனம். 

 

ஆனாலும், ஆயிரக்கணக்கான ஆண்டுகாலமாக புரையோடிக் கிடக்கும் சாதியக் கட்டமைப்புகள் கொண்ட இந்தியா போன்ற தேசத்தில் தமிழகம் இந்த அளவுக்கு முன்னேறி வந்திருப்பதே பெரிய சாதனைதான் என்றாலும் நாம் முன்னே பயணிக்க வேண்டியது வெகுதூரம் பாக்கியிருக்கிறது. 

 

சாதிய அடுக்குகள், அவற்றோடு பிணைந்திருக்கும் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் நிலம் சார்ந்த கண்ணிகளை மேம்போக்காகவாவது புரிந்து கொள்ளாமல் சாதி வெறியேற்றுகிறவர்களுக்கு ஒரு கூட்டம் இரையாகிக் கொண்டிருக்கும் போதுதான் அசுரன் மாதிரியான படங்களின் தேவை உருவாகிறது. இன்றைக்கும் கூட சாதி வெறி அடங்கிவிட்டது என்று சொல்லிவிட முடியுமா என்ன? நீறு பூத்த நெருப்புதான் அது. உள்ளே கனன்று கொண்டேயிருக்கிறது. ஆனால் துணிந்து எரிந்துவிடாது. எதிர்தரப்பினர் விழித்துக் கொண்டார்கள். படித்து விவரம் தெரிந்தவர்கள் ஆகிவிட்டார்கள். மிரட்ட எத்தனித்தால் எதிர்ப்பார்கள். அவர்களின் இந்த எதிர்ப்புதான் சாதிய உணர்வு கொண்டவர்களை நிலை கொள்ளாமல் தவிக்க வைக்கிறது.

 

காலங்காலமாக அடங்கியே கிடந்தவர்களுக்கு அப்படி என்ன திமிரு என்று கேள்வி எழுப்புகிறவர்களுக்கும்,  ‘அவர்கள் ஆடுகிற ஆட்டத்தையெல்லாம் நாங்க வேடிக்கை பார்த்துட்டு இருக்கணுமா?’ என்று கண்மூடித் தனமாக கேள்வி கேட்கிறவர்களுக்கும் என்ன சொல்வது?  

 

கட்டப்பஞ்சாயத்து, நாடகக் காதல், ரவுடியிசம் என்றுதானே இருக்கிறார்கள் என்பதை பெரிய குற்றச்சாட்டாக வைக்கிறார்கள். சாதிக்காரர்கள் நான்கு பேர் சந்தித்தால் இதைத்தான் பிரதானமாகப் பேசுகிறார்கள். பிற சாதிகளில் இதெல்லாம் நடப்பதில்லையா என்று கேட்டால் நடக்கும். ஆனால் அது அடுத்தவர்களை உறுத்தாது. அதுவே தாத்தா காலத்தில் செருப்பு கூட போட அனுமதியற்றவர்கள் இன்றைக்கு மிரட்டுகிறார்கள், எதிர்க்கிறார்கள் என்றால் அது உறுத்தும். அதுதான் ஒரு தரப்பின் இரத்தத்தைக் கொதிக்கச் செய்துவிடுகிறது. பி.சி.ஆர் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்று ஒவ்வொரு சாதிக் கூட்டத்திலும் பேசுகிறார்கள். ஆனால் பி.சி.ஆரின் தேவை எப்பொழுதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது என்றுதான் தோன்றுகிறது. 

 

இங்கே என்னதான் சட்டம் இருந்தாலும் கூட ரயில் தண்டவாளத்தில் கிடத்தப்படுகிறார்கள். டி.எஸ்.பிக்கள் கூட மர்மமாகச் சாகிறார்கள். இத்தகைய செய்திகளை எவ்வளவு நாட்களுக்கு நினைத்துக் கொண்டிருக்கிறோம்? அதிகபட்சம் ஒரு வாரம். அந்த வாரத்து ஜுவி, ரிப்போர்ட்டர், நக்கீரனில் கட்டுரை வெளியானவுடன்  ‘இப்படியெல்லாம் செஞ்சாத்தான் பயமிருக்கும்’ என்பதோடு அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

 

asuran-65.jpg

 

அசுரன் படம் பார்க்கும் போது படத்தோடு சேர்ந்து இப்படித்தான் ஏதோ மண்டைக்குள் ஓடிக் கொண்டிருந்தது. 

 

பூமணியின் வெக்கை, வெற்றிமாறன், தனுஷ், சுகா, ஜி.வி.பிரகாஷ் என எல்லோரும் கச்சிதமாகக் கலந்திருக்கிறார்கள். பொதுவாக, திரையரங்குக்குள் சென்று பார்க்க வேண்டுமெனில் வண்ணமயமான படமாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவேன். ஆடல், பாடல், கொண்டாட்டமாக இரண்டரை மணி நேரங்களைக் கழித்துவிட்டு வர வேண்டும் என்று நினைப்பேன். தமிழ் சினிமா நாயகர்கள் எதிரியை அடிக்க இடைவேளை வரை காத்திருக்க மாட்டார்கள். நான்காம் காட்சியில் விசிலடிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் தனுஷ் காத்திருப்பார். கதாபாத்திரத்துக்கு ஏற்ப தன்னை ஏற்றியும் இறக்கியும் கூட்டியும் குறைத்தும் உருமாறும் தனுஷ் தமிழ் சினிமாவின் பொக்கிஷம். 

 

முதல் பத்தியில் குறிப்பிட்ட, புத்தகம் எழுத விரும்பும் பையனைப் போலவே பாரம்பரியத்தைக் காட்டுகிறேன், சமூகக் கட்டமைப்பை யதார்த்தமாகக் காட்டுகிறேன் என்று குறிப்பிட்ட சாதியப் பெருமைகளை வண்ண வண்ணக் காட்சிகளுடன் முன் வைத்து ஹீரோயிசத்தை அளவுக்கதிமாகத் தூக்கிப் பிடித்து சாதிய உணர்வுகளைத் தூண்டுகிற படங்களின் காலத்தில் அசுரன் தேவையானதாக இருக்கிறது. அசுரன் படத்திலும் கூட சில நம்ப முடியாத காட்சிகள் உண்டு. ஒற்றை ரூபாய் பெரிய பணமாக இருந்த காலத்தில், செருப்பு அணியவே அனுமதிக்கப்படாத காலத்தில் - முதலாளிக்காக சாராயம் காய்ச்சுகிறவன்- அவனது திறமை என்னதான் மதிக்கப்பட்டாலும் ஊருக்குள் அவ்வளவு கெத்தாக அனுமதித்த ஊரா நம் ஊர் என்று கேள்வி எழாமல் இல்லை. இருந்துவிட்டுப் போகட்டும்.

 

யதார்த்தத்தைப் பேசுவதாகக் கருதி வன்மத்தை ஊட்டாமல், வெறுப்பை ஏற்றாமல் ‘நமக்கு முன்னால் இருக்கும் பெரிய சிக்கலின் ஒரு பிடி இது’ என்று காட்டுகிற அசுரன் போன்ற படங்கள் வணிகரீதியிலும் வெற்றி பெறுவது மிக அவசியம். அப்படி வெற்றியடைந்திருப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது
 

http://www.nisaptham.com/2019/10/blog-post_18.html

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2019 at 6:09 AM, நிழலி said:

நேற்ற கொழும்பில் இப் படத்தை பார்த்தேன்.  வெற்றிமாறனின் இன்னொரு அருமையான அரசியல் படைப்பு.

தனுஷ்....இதுக்கு மேலாக இன்னொரு படத்தில் இவரால் நடிக்க முடியுமா என ஒவ்வொரு படத்திலும் கேள்வி கேட்க வைத்தாலும் இந்தப் படத்தில் அதை நூறு தடவை கேட்க வைக்கின்றார்.

இப் படம் பேசும் அரசியல் தேசங்களை தாண்டி, மொழிகளை தாண்டி, உலகம் முழுக்க இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும், ஒடுக்குமுறையில் இருந்து வெளியே வர போராடும் வர்கத்தின் சவால்களையும் தெளிவான திரைக்கதையில் சொல்லியுள்ளார் வெற்றிமாறன்.

தரமான சினிமா பார்க்க விரும்புகின்றவர்கள் தவற விடக்கூடாத சினிமா..

ஒரு சாதி இன்னொரு சாதிக்கு குனிந்து கொண்டுதான் இருக்கணுமா என கேள்விகள் கேட்டாலும் இந்தியாவால் ( தமிழ்நாட்டால் ) இதிலிருந்து மீண்டுவர முடியாது 

நேற்று ஒரு முகநூல் நண்பரின் பதிவைப்பார்த்தேன்  சவக்காலை சடலம் அடக்கப்படும் இடத்தில் கூட இந்த இந்த சாதியினர்தான் அடக்கம் செய்யலாம் என மதில் சுவரில் கொட்டை எழுத்தாக எழுதப்பட்டிருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் தனுசின் மூத்த மகனாக நடித்திருப்பவர் இலங்கை தமிழனா?

Link to comment
Share on other sites

18 hours ago, ரதி said:

இதில் தனுசின் மூத்த மகனாக நடித்திருப்பவர் இலங்கை தமிழனா?

கருணாசின் மகன் என்று படித்த நினைவு மூத்தவரா இளையவரா தெரியல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, அபராஜிதன் said:

கருணாசின் மகன் என்று படித்த நினைவு மூத்தவரா இளையவரா தெரியல 

அது இரண்டாவது மகன் ...சூப்பர் நடிப்பல்லவா! அந்த பெடியன் ...முதலாவது மகனாக நடித்தவர் இலங்கையை சேர்ந்தவராம் என்று கேள்விப்பட்டேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/30/2019 at 6:29 AM, ரதி said:

இதில் தனுசின் மூத்த மகனாக நடித்திருப்பவர் இலங்கை தமிழனா?

அவரது பெயர் டீஜேய் அருணாசலம். லண்டனில் பிறந்த இந்தியத் தமிழர்.

https://www.famousbirthdays.com/people/teejay.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ரஞ்சித் said:

அவரது பெயர் டீஜேய் அருணாசலம். லண்டனில் பிறந்த இந்தியத் தமிழர்.

https://www.famousbirthdays.com/people/teejay.html

நன்றி 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎3‎/‎2019 at 10:54 AM, ரஞ்சித் said:

அவரது பெயர் டீஜேய் அருணாசலம். லண்டனில் பிறந்த இந்தியத் தமிழர்.

https://www.famousbirthdays.com/people/teejay.html

இவர் புலத்தில் பிறந்த ஈழத்தவர் என்று சொல்கிறார்கள் .. Teejay என்ற பெயரில் நிறைய யூ ரியூப் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ரதி said:

இவர் புலத்தில் பிறந்த ஈழத்தவர் என்று சொல்கிறார்கள் .. Teejay என்ற பெயரில் நிறைய யூ ரியூப் வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்

 

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, லண்டனில் பிறந்த தமிழராம்.ஈழத்தமிழர்களுடனும் தொடர்பிருக்கலாம்.

எங்கு பிறந்தாலென்ன, தமிழர் தமிழர்தான். அதற்காகப் பெருமைப்படலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரஞ்சித் said:

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, லண்டனில் பிறந்த தமிழராம்.ஈழத்தமிழர்களுடனும் தொடர்பிருக்கலாம்.

எங்கு பிறந்தாலென்ன, தமிழர் தமிழர்தான். அதற்காகப் பெருமைப்படலாம். 

அதில்லை ரஞ்ஜித் சில பேர் தாங்கள் ஈழத்தவர் என்று தெரிந்தால் முன்னேற சான்ஸ் கிடைப்பதில்லை என்பதற்காக தமிழகம் என்று சொல்வார்கள். இவர் பெற்றோர் தமிழகமாயிருந்தால் தமிழகத்தில் தனது பெற்றோர் எந்த இடம் என்று சொல்லி இருப்பார் ..மற்றும் படி தமிழன் எங்கேயிருந்தும் முன்னேறினால் சந்தோசம் ...தமிழை வளர்ப்பதற்காக இவரை பாராட்டலாம் 
 

Link to comment
Share on other sites

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அகன்ற திரையில் பார்க்கவில்லை. அமேசன் பிரைமில் சிறந்த தரத்தில் (4K) நேற்றுத்தான் அசுரன் படம் பார்த்தேன். நடிப்பு, இயக்கம் எல்லாம் மிகவும் சிறப்பாகவும், முழுமையாகவும் அமைந்துள்ள தமிழ்ப்படம் இப்படி வருவது குறைவு. வருடத்திற்கு 250 சராசரிப் படங்களை எடுப்பதை விட அசுரன் போல படங்களை வாரம் ஒன்றிற்கு வெளியிட்டாலே போதும்👍🏾

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

அசுரன், ஆனால் அதைமட்டும் பற்றியதல்ல..

இளங்கோ-டிசே

1.jpg

மேஸன் பிரைமில் 'அசுரன்' வந்துவிட்டது என்பதறிந்து நேற்று நள்ளிரவிலேயே பார்க்கத் தொடங்கினேன்.. இதுவரை இதுகுறித்து நிறைய விமர்சனங்கள் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை வாசிக்காமலே தவிர்த்திருந்தேன். எனக்கான பார்வையை நானே உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காய் திரைப்பட விடயங்களில் நான் இவ்வாறு அடிக்கடி செய்வதுதான்.
அசுரனில் தனுஷின் நடிப்புப் பற்றியும், வெற்றிமாறனின் நேர்த்தியான நெறியாள்கை குறித்தும் ஏற்கன‌வே எழுதப்பட்டிருக்கும் விமர்சனங்களில் விதந்தேந்தப்பட்டிருக்குமென‌ நினைக்கின்றேன். ஆகவே அவற்றைச் சிலாகிப்பதை  இங்கே நான் தவிர்க்கின்றேன். நாவலிலிருந்து திரைக்கதைக்கு மாற்றுவது குறித்த்தும், சிறந்த படைப்பாளிகளை/படைப்புக்களை திரைக்குக் கொண்டு வருவதோ குறித்தும், அவற்றின் சிக்கல்கள்/தடுமாற்றங்கள் குறித்தும் பிறகொருபொழுது பேசலாம்.
 

3.jpg

மலையாளத்தில் அண்மையில் வந்த 'ஜல்லிக்கட்டி'ல் ஹரீஸ் போன்ற எழுத்தாள‌ர்களை எப்படி அற்புதமாகப் பாவிக்கின்றார்கள்  என்பதை மட்டும் ஒரு சிறுகுறிப்பாய விடுகின்றேன். கடந்தவருடம் நான் கேரளாவில் நின்றசமயந்தான் இதே ஹரீஸின் 'மீச' நாவல் வெளிவராது இந்த்துத்துவசக்திகள் தடுத்து நிறுத்த பெரும் சர்ச்சைகள் நடந்ததது என்பதையும் குறிப்பிட்டாகவேண்டும்.

இவ்வாறு சிக்கலுக்குள்ளானவரை தம் திரைக்குப் பாவித்தது என்பதே ஓர் 'அரசியல் அறிக்கை'தான். மலையாளச் சூழலில் எழுத்தாளர்களும், திரைப்பட நெறியாளர்களும் எவ்வாறு அரசியல்மயப்பட்டிருக்கின்றார்கள், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கின்றார்கள்/ஊடாடிக்கொள்கின்றார்கள் என்பதற்காய் இதைச் சொல்கின்றேன்.

நமது சூழலில் அரிதாக திரைக்குள் நுழையும் எழுத்தாளர்களும் வெகுசன சினிமாவுக்கு திரைக்கதை எழுதி, அதை நியாயப்படுத்துவதையும், இந்த இலக்கிய திரைப்பட‌ இடைவெளியைக் குறைப்பதற்குப் பதிலாக இலக்கியத்தைப் போல சினிமா இல்லை என்று அடிக்கடி எழுதி, தங்களுக்கான இருப்பை நிரூபிப்பதற்காய் இன்னும் இந்த‌ விரிசலை அதிகரித்தபடியும் இருக்கின்றார்கள் (இதை ஏற்கனவே ஒரு பதிவில் விரிவாக‌ எழுதியிருக்கின்றேன்).

ஆகவேதான் அசுரன் ஒரு கொடூரவாழ்வின் நிஜமுகத்தைத் திரைக்குக் கொண்டுவரும்போதும், அங்கே 'வெகுசன' சினிமாவுக்கான சமரசங்கள் இருக்கவேண்டும் எனச் சொல்கின்றார்கள். இந்தளவாவது திரையில் வருகின்றதே என திருப்திப்பட்டுக்கொள்ளவேண்டுமென எங்களுக்கு அறிவுரை சொல்கிறார்கள்.
 

2.jpg

அசுரனின் கதையே ஒருவகையில் நிலத்தை மீட்டெடுப்பதற்கான போராட்டமே. ஒருவகையில் நமது ஈழப்போராட்டம் கூட நிலமீட்புப் போராட்டந்தான். எனக்கு முன்பு இருந்த தலைமுறைக்கு அது மொழிக்கான போராட்டமாகவோ, தரப்படுத்தலுக்கான போராட்டமாகவோ இருந்தாலும், என்னைப் போன்றவர்களுக்கு அது நிலமீட்புப் போராட்டமாக இருந்தது. ஆகவேதான் நாம் 'இந்த மண் எங்களின் சொந்த மண்/ இதன் எல்லையை மீறி வந்தவன் யார்' என்ற பாடலிலும், 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்/ நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்' என்று வார்த்தைகளிலும் நாம் எமது போராட்டத்தை நிலமீட்பாகப் பார்த்தோம்.

என்னுடைய குழந்தை/பதின்மப் பருவத்தில் இலங்கை இராணுவம்/பொலிஸ் என்பவற்றையே பார்க்காதால் போராளிகள் என்பது எமது நிலங்களைப் பாதுகாப்பவர்களாக, இராணுவ முகாங்களை அழித்து வெற்றிகொண்டபோது அவர்கள் எங்களுக்கு மீட்பர்களாகவும் இருந்திருக்கின்றார்கள். வன்முறை நமக்குள் திணிக்கப்பட்டது என்றாலும், வேறு வழியின்றி வன்முறையே எமக்குரிய முதற் தெரிவாக இருந்தபோதும் (அல்லது அதற்கு முன் தலைமுறையால எந்தத் தெரிவுகளுமின்றி எமக்கு கையளிக்கப்பட்டபோதும்), வன்முறை நமக்கு இறுதியில் எதைத் தந்தது என்பதற்கு வரலாற்றின் சாட்சிகளாக நாங்களே இருக்கின்றோம்.

ஆகவேதான் அசுரன் காட்சிப்படுத்திய ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கை, நிலத்தை மீட்பதற்கான அவர்களின் தத்தளிப்புக்கள் என்பவற்றை நெருக்கமாக உணர்ந்து பார்த்தபோதும், முக்கிய பாத்திரத்தை சாகச நாயகனாக்கியபோது, அதுவும் வன்முறையினூடாக அதை நிகழ்த்தியபோது படத்திலிருந்து வெளியேற்றப்பட்டவனாக உணர்ந்தேன். இந்த 'வன்முறை' சாகச நாயகனாக்கும் முயற்சியிலிருந்து சுசீந்திரனின் 'மாவீரன் கிட்டு' கொஞ்சம் தப்பியிருக்கின்றது  என்றே சொல்வேன்.

இவ்வாறான கதைகளினூடாக தமிழ்த்திரை யதார்த்ததிற்குள் நகரும்போது, ஏற்கனவே இருக்கும் திரைக்கதை சொல்நெறிகளினூடாக அணுகமுடியாது என்பதை, வெற்றிமாறன் உணராமல் இருந்ததாலேயே அருமையான ஓர் படத்தை இழந்துவிட்டிருக்கின்றார் என்றே தோன்றியது. அதுவும் முக்கியமாக வன்முறையை கையாளும் விதத்தால்/காட்சிப்படுத்தலாலும், ஒருவர் சாகசத்தால் எதிரிகளைப் பழி வாங்கும்போதும்கூட‌ -,பரியேறும்பெருமாள் நமது மனதில் ஏற்படுத்திய உறுத்தல்களினதோ/ குற்ற உணர்வின் எந்தத் துளியையும்- அசுரன் எனக்குள் விட்டுச் செல்லவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

இதே இடத்தில் இன்னொரு விடயத்தைக் குறித்தாக வேண்டும். அசுரன் படம் வந்த கையோடு ஜெயமோகன் ஏற்கனவே எழுதிய கதையான 'குருதி'யை திரும்பப் பகிர்ந்துகொண்டார். அவரின் வழமையான வாசகர்கள் எப்படிப் புகழ்ந்துரைந்திருப்பார்கள் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இந்தக் கதையை அசுரன் படம் வந்ததன் பின் அல்ல, அது வெளிவந்த காலத்திலேயே வாசித்து, ஜெமோவின் பாணியில் சொல்வதால் எனக்கான கருத்தைத் 'தொகுத்து' வைத்திருந்தேன். இப்படி ஒரு துண்டு நிலத்துக்காய் பழிவாங்கு என்று உசுப்பிக் கதையெழுதுகின்ற ஜெமோவால் எப்படி எங்களின் ஈழப்போராட்டத்திற்கான காரணத்தையோ  அல்லது வன்முறையைக்  கையிலெடுத்ததையோ எந்தக் காலத்திலும் விளங்கிக் கொள்ளமுடியாதுபோனது என்று யோசித்திருக்கின்றேன்.

போரிலிருந்து அல்லது இப்படி சாதியால் ஒடுக்கப்பட்டு மேலெழுந்து வருபவர்க்குத் தெரியும், மண்மீட்பை விட உயிர்களுக்கு எவ்வளவு மதிப்பு இருக்கின்றதென்று, ஆனால் இறுதியில் எதையும் செய்யமுடியாக் கையாலாக நிலையிலேயே எதிர் வன்முறையைப் பாவிக்கின்றார்கள் என்பது பற்றியும் அவர்களே நன்கும் அறிவார்கள்.

அப்படி வந்தவர்கள் திருப்பி அடிப்பதைவிட, ஏன் எங்களை அடிக்கின்றீர்கள் என ஆதிக்க/இனவெறிச் சக்திகளிடம் மன்றாடவும், அவர்களின் மனச்சாட்சியையும் உலுக்குவதையுமே தம் கலை இலக்கியங்களினூடாக செய்வதற்கு அதிகம் விரும்புகின்றவர்களாக இருப்பார்கள் என்பதே யதார்த்தமானது.

அசுரனை இரவு பார்த்துவிட்டு முதலில் வாசித்த கட்டுரை டி.தர்மராஜினதுடையது.  அதில்  அசுரன் தொட மறந்த/மறுத்த புள்ளிகளை அவர் அற்புதமாகத் தொட்டிருக்கின்றார். இறுதியில் அவரின் இந்த வார்த்தைகளையே இங்கு விட்டுச் செல்கின்றேன்.

"...ஏனென்றால், ஒடுக்கப்பட்டோரின் வன்முறை என்பது சாகசம் அல்ல என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.  அது உயிர் வாழ்வதற்காகச் செய்யப்படும் கடைசி யத்தனம்.  அவர்கள் அவதார புருசர்களைப் போல அந்த வன்முறைக்குப் பழகியவர்கள் இல்லை.  அதனால், தப்பும் தவறுமாகவே வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்."
......................................

(1) டி.தர்மராஜ்ஜினது கட்டுரை: https://tdharumaraj.blogspot.com/2019/10/uncut.html?spref=fb&fbclid=IwAR1Be9uOdepIrbF2NsMhzKzDWn1QKLDuMkZ5AH0B1PfyCjvYW6qABNWilMI

(2) ஜெயமோகனின் 'குருதி' கதை: https://www.jeyamohan.in/34372

(Nov 08, 2019)

 

http://djthamilan.blogspot.com/2020/04/blog-post_23.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
    • பொருளாதார ரீதியாகவும், கடந்தகால பட்டறிவில்  இருந்தும், பெருமெடுப்பிலான யுத்தத்தை யாருமே தற்போதைக்கு  விருப்பவில்லை. இப்படியான நொட்டல்கள் ( tit for tat) தொடர்ந்து நடைபெறும். 
    • சகோதரி சிகண்டி அக்கா, 22ம் திகதி, விஷு புண்ணிய காலத்தில், R. விஜி மற்றும் மிர்சேல் ஒபாமா வை ஏவும் படி நெதென்யாகுவிற்கு நேரம் குறித்து கொடுத்தவ. ஆள் அவசரப்பட்டுட்டார்.  
    • அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.