Jump to content

பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையை முன்னிட்டு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு


Recommended Posts

இந்திய பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரம்  வருகையையொட்டி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் செல்லவும், இறங்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு சமீபத்தில் சென்று இருந்தபோது இந்தியாவிற்கு வருமாறு சீனா அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை ஏற்ற சீன அதிபர் ஜின்பிங் வரும் 11ம் தேதி இந்தியா வருகிறார்.இவர்களின் சந்திப்பு தமிழகத்தில் புராதன நகரமான மாமல்லபுரத்தில் வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது. இதில் வர்த்தகம், எல்லை பிரச்னை, இரு நாட்டின் பாதுகாப்பு, சர்வதேச தீவிரவாதம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இரண்டு தலைவர்களும் பேசுகின்றனர். இதற்காக பிரதமர் மோடி மற்றும் சீன அதிபருக்கு மாமல்லபுரத்தில் பாதுகாப்பு நிறைந்த ஓட்டல்களில் தங்க இருக்கின்றனர். அங்கிருந்து மாமல்லபுரத்தின் புராதன சின்னங்கள் அவற்றின் வரலாறு ஆகியவற்றை 2 தலைவர்களும் தனியாக நடந்து சென்றே பார்வையிடுகின்றனர். அதற்காக மாமல்லபுரத்தில் முக்கிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

2  நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நிகழ்ச்சி என்பதால் உலகளவில் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, இந்த நிகழ்ச்சியில் தலைவர்கள் தங்கும் இடம், கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் இடம், விருந்து நடக்கும் இடங்கள் அனைத்தும் ரகசியமாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்பட்டுள்ளது.மேலும் சீன அதிபரின் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த சிறப்பு அதிகாரிகள் அதிபர் ஜின்பிங் விமானத்தில்இறங்கும் இடம். அவர் செல்லும் இடங்கள். தங்கும் இடங்களை தங்கள் பாதுகாப்பில் கொண்டு வந்துள்ளனர். அதையடுத்து மத்திய பாதுகாப்பு அமைப்புகளும், அதன் பின்னர் மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.மீனம்பாக்கம்: மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடக்க உள்ள நிலையில் சீனா மற்றும் இரு நாட்டின் பெரும் தலைவர்கள் வருவதால் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் ஏற்கனவே ரெட் அலார்ட்டான உச்சக்கட்ட பாதுகாப்பில் உள்ளது. இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர், இந்திய பிரதமர் ஆகிய இரண்டு தலைவர்களின் சிறப்பு தனி விமானங்கள் தரையிறங்கும்போதும் அவர்கள் சென்னையில் இருந்து புறப்படும்போதும் இந்த தலைவர்களின் ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் செல்லும்போதும் மற்ற பயணிகள் விமானங்கள், சரக்கு விமானங்கள், தனியார் விமானங்கள் தரையிரங்கவும் புறப்படவும் பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லியில் உள்ள மத்திய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையும் விதித்துள்ளது. அதன்படி சீன அதிபர், விமானம் சென்னை வான்வெளிக்குள் வந்ததும் அடுத்த பத்துநிமிடத்தில் வழக்கமாக தரையிறங்கும் இந்த பத்து நிமிடங்களிலும் சென்னை விமான நிலையத்தில் வேறுஎந்த விமானங்களும் வந்து தரையிறங்க அனுமதி கிடையாது. அதைபோல் சென்னையில் இருந்து அந்த பத்து நிமிடத்தில் எந்த விமானங்களும் புறப்படுவதற்கும் அனுமதி கிடையாது. அதற்கு தகுந்தாற்போல் அந்தந்த விமான நிறுவனங்கள் தங்கள் பயண நேரத்தை முன்னதாகவோ அல்லது  பின்னாலோ மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதைப்போல் பிரதமர் நரேந்திரமோடியின் சிறப்பு தனி விமானம் சென்னையில் வந்து தரை இறங்கும்போதும் அதைப்போன்ற வழிமுறை கடைப்பிடிக்கப்பட்டும், பிரதமர் சிறப்பு தனிவிமானம் வரும்போதும் மற்ற விமானங்கள் விமான நிலையத்திற்குள் தரையிறங்கவும் புறப்படுவதற்கும் அனுமதி கிடையாது. மேலும் பிரதமர் மற்றும் சீன அதிபர் பயணம் செய்யும் ஹெலிஹாப்டர் புறப்படும்போதோ தரையிறங்கும் போதோ இதேபோல் மற்ற விமானங்களுக்கு அனுமதிகிடையாது. மேலும் பிரதமர் சீன அதிபரின் நிகழ்ச்சிகள் அனைத்தும் மாமல்லபுரம் மற்றும் கோவளம் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியில் அமைந்துள்ளதால் சென்னையில் இருந்து புறப்பட்டு குறிப்பாக தூத்துக்குடி, திருவனந்தபுரம், சார்ஜா, போன்ற பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் கிழக்கு கடற்கரை சாலையை கடந்து செல்லும். ஆனால் பாதுகாப்பு நலன் கருதி இது செல்லும் வழித்தடம் பெரும்புதூர் வழியாக மாற்றுப்பாதையில் பறப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளன. இதேபோல் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாது. வழக்கம்போல் நடக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங் 11ம் தேதி பகல் 1.20மணிக்கு சீனாவில் உள்ள பீஜிங்கின் இருந்து தனி விமானத்தில் சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்கிறார். அங்கு அவருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. வரவேற்பு முடிந்ததும் சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். மாலை 4 மணிக்கு ஹோட்டலில் இருந்து புறப்பட்டு மாமல்லபுரம் செல்கிறார். அங்கு சரித்திரப் புகழ்வாய்ந்த  இடங்களை பார்வையிடுகிறார். பின்பு இரவு 9 மணிக்கு மாமல்லபுரத்தில் இருந்து புறப்புட்டு சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு வருகிறார்.  

மீண்டும் 12ம் தேதி காலை 9 மணிக்கு மாமல்லபுரம் செல்கிறார். அங்கு இந்திய பிரதமர் மோடியுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. சந்திப்பை முடித்துவிட்டு அவர் மீண்டும் பகல்1.15 மணிக்கு நட்சத்திரவிடுதிக்கு வரும் அவர் மீண்டும் 2.20 சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். இதையொட்டி விமான நிலைய சுவர்களில்  அலங்கார ஓவியங்கள் வரையும் பணிகள் நடக்கிறது. கோவளத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில் தங்குகிறார். அவருக்காக மூன்று அறைகள் ஒன்றாக்கப்பட்டு பிரம்மாண்ட அரங்கம், உணவருந்தும் கூடம், நவீன படுக்கைகள் கொண்டதாகவும், அங்கிருந்து கடற்கரையைப் பார்க்கும் வகையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோர் இங்கு வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் கோவளம் வரும் பிரதமர் மோடி தங்கும் ஓட்டல் மற்றும் கோவளம், குன்றுக்காடு, செம்மஞ்சேரி கிராமங்களிலும், அவரது ஹெலிகாப்டர் தரையிறங்கும் திருவிடந்தை கிராமமும் நாளை 8ம் தேதி முதல் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

இதற்காக 7 அடுக்கு பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. 20 மாவட்ட எஸ்.பி.க்கள், 30 டி.எஸ்.பி.க்கள், 100 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட பாதுகாப்பு குழு உருவாக்கப்பட்டு யார் எங்கு நிற்க வேண்டும் என்ற வரைபடம் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை, கடற்கரை என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் 8,500 போலீசார் இன்று கோவளம் வருகின்றனர்.இவர்களுக்கான தனியார் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், அரசு சமுதாயக் கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நாளை 8ஆம் தேதி காலை 9 மணிக்கு கோவளத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்கான நேற்று திருவிடந்தை ஹெலிகாப்டர் தளம் சீரமைக்கப்பட்டது. தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்த பாதுகாப்பு ஒத்திகை நாளை நடைபெற உள்ளது. வடக்கு மண்டல காவல் துறையில் அடங்கிய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து நிலை காவலர்களும் இன்று திங்கட்கிழமை இரவு அல்லது நாளை செவ்வாய்க்கிழமை காலை கோவளத்தில் இருக்க வேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளது.இந்த ஒத்திகை பணிகளுக்கு கோவளம், செம்மஞ்சேரி, குன்றுக்காடு, திருவிடந்தை கிராம மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் வெளியே செல்லும் அனைவரும் ஏதேனும் ஒரு உள்ளூர் அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு தடை
உலக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான மாமல்லபுரத்தில் இந்திய-சீன தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் அப்பகுதி பாதுகாப்பு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாமல்லபுரத்திலுள்ள வெண்ணெய் உருண்டை பாறைப் பகுதியில் பெங்களூரிலிருந்து கொண்டு வரப்பட்ட செயற்கையாக புல் தரை அமைக்கும் பணியும் மற்றும் அப்பகுதியில் சீரமைப்புப் பணி நடைபெறு வருகின்றது. இதனால், நேற்று முதல் வெண்ணை உருண்டைப் பாறை பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால், இரு தலைவர்கள் வருகையால் கெடுபிடி காரணமாக  சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வராததால் மாமல்லபுரம் வெறிச்சோடி காணப்பட்டது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=531532

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.