Jump to content

இவர்களை பச்சை மட்டையை... எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும்.. சீமான் ஆவேசம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிங்கிலர்கள்

இவர்களை பச்சை மட்டையை... எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும்.. சீமான் ஆவேசம்

10 வருடமாக கத்தி உன் பேச்சை கேட்கிறீர்கள், ஏன் வாக்கு வரலை..ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை. 18 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளார்கள் அல்லவா.. அவர்கள் தான் தமிழர்கள் என்று சீமான் ஆவேசமாக பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "10 வருடமாக கத்தி உன் பேச்சை கேட்கிறீர்கள், ஏன் வாக்கு வரலை..ஏன் என்றால் அவர்கள் தமிழர்கள் இல்லை. 18 லட்சம் பேர் எனக்கு வாக்களித்துள்ளார்கள் அல்லவா அவர்கள் தான் தமிழர்கள்.

ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்கள் தமிங்கிலர்கள். இவர்கள் கேட்கும் பாட்டு புரியவில்லை என்பதற்காக அவர்களுக்கு ஆங்கல எழுத்துக்கள் ஓடவிடப்படுகிறது. எழுத்து இங்கிலீஸ், ஆனால் அது தமிழ் வார்த்தைகள். இவர்கள் தான் தமிங்கிலர்கள். இவர்களை என்ன செய்ய வேண்டும் என்றால், பிடித்து மரத்தில் கட்டி வைத்து, திருக்கவால் பார்த்திருக்கிறீர்களா.. இல்லை விட்டுவிடுங்கள்,, பச்சை மட்டையை எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும். தொலைத்துவிடுவேன் என்றார்.

ஆங்கிலம் கலந்து தமிழ் பேசுபவர்கள் தமிங்கிலர்கள். இவர்கள் கேட்கும் பாட்டு புரியவில்லை என்பதற்காக அவர்களுக்கு ஆங்கல எழுத்துக்கள் ஓடவிடப்படுகிறது. எழுத்து இங்கிலீஸ், ஆனால் அது தமிழ் வார்த்தைகள். இவர்கள் தான் தமிங்கிலர்கள். இவர்களை என்ன செய்ய வேண்டும் என்றால், பிடித்து மரத்தில் கட்டி வைத்து, திருக்கவால் பார்த்திருக்கிறீர்களா.. இல்லை விட்டுவிடுங்கள்,, பச்சை மட்டையை எடுத்து அடித்து முதுகு தோலை உரிக்க வேண்டும். தொலைத்து விடுவேன் என்றார்.

தமிழில் பெயர் வைக்காத தமிழ் திரைப்பட இயக்குனர்களை கடுமையாக சீமான் விமர்சித்தார். வீரத்துல கட்டபொம்மன்.. சுரத்துல ஊமத்துரை.. ரோசத்துல நீ ஒரு தேசிங்கு ராஜா என்று சினிமா பாடல் ஒன்றை பாடி அதில் உள்ள கட்டபொம்மன், ஊமைத்துரை, தேசிங்கு ராஜா போன்ற மூன்று மன்னர்களும் தமிழர்கள் இல்லை என்று விமர்சனம் செய்தார்.

மானமும் வீரமும் அறம் என்று வாழ்ந்த கூட்டம் தமிழ் இனம்.. எங்கள் கூட்டத்தில் ஒருவர் கூடவா இல்லை என்று கேள்வி எழுப்பினார். வைரமுத்து கூட ஒருமுறை ஜான்சி ராணியிடம் வீரம் வாங்குவோம் என்று எழுதி இருந்தார். ஏன் வேலுநாச்சியாரிடம் வீரம் வாங்கலாம் அல்லவா என்றும் கேட்டார்.

Read more at: https://tamil.oneindia.com/news/villupuram/seeman-attacks-who-not-vote-to-his-party-on-election-364960.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஒரு தமிழன் என்றல்லவா நான் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன்.

அவர்கூட தெலுங்கரா??? 

Link to comment
Share on other sites

2 hours ago, ரஞ்சித் said:

வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஒரு தமிழன் என்றல்லவா நான் இதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன்.

அவர்கூட தெலுங்கரா??? 

உண்மை தான்.... அது தான் கருணாநிதியின் திறமை தெலுங்கனை தமிழனாக்கியது அதை விட இவர் ஒரு மன்னன் கூட இல்லை வழிப்பறி கொள்ளைக்காரன்; அதே போல் எட்டப்பன் தான் உண்மையான  தமிழ் அரசன்.

திருடனை அரசனாக்கி,மன்னனை துரோகியாக்கி, தெலுங்கனை தமிழனாக்கியது கருணாநிதியின் தந்திரம்.

Link to comment
Share on other sites

On 10/10/2019 at 10:49 PM, Dash said:

உண்மை தான்.... அது தான் கருணாநிதியின் திறமை தெலுங்கனை தமிழனாக்கியது அதை விட இவர் ஒரு மன்னன் கூட இல்லை வழிப்பறி கொள்ளைக்காரன்; அதே போல் எட்டப்பன் தான் உண்மையான  தமிழ் அரசன்.

திருடனை அரசனாக்கி,மன்னனை துரோகியாக்கி, தெலுங்கனை தமிழனாக்கியது கருணாநிதியின் தந்திரம்.

வீரபாண்டிய கட்ட பொம்மன் வரலாற்றை கருணாநிதி  எழுதவில்லை. அந்த வரலாற்றிற்கும் கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம் . அந்த படத்தின்  கதை வசனத்தைக் கூட கருணாநிதி எழுதவில்லை. எமக்கு யாரிலாவது இருக்கும்  ஆத்திரத்தைக்  காட்ட சும்மா சகட்டு மேனிக்கு    அவதூறை  அள்ளி வீசக்கூடாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்கு எம்மவர்களையே அடையாளம் காண முடியாதபடிக்கு எமது இன வரலாறு எம்மிடம் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.

காரணம்.. எமது வரலாற்றை நாம் முறையாக எழுதி வைக்காததும் ஒரு காரணம். அதனை படிப்பிக்காததும் ஒரு காரணம். 

மேலும் இலங்கை உட்பட.. காந்திக்கு சில வைக்க முடிகிறது. ஆனால்.. காந்தியை விட தியாகத்தில் விஞ்சிய தியாக தீபம் திலீபனுக்கு சிலைகளை இந்தியாவில் வைக்க முடியுமா..?! ஏன் தமிழகத்தில் முடியுமா... ஏன் ஈழத்தில் நல்லூரில் தான் வைக்க முடியுமா?!

Link to comment
Share on other sites

கெட்டி பொம்முலுவை “வீரபாண்டியன்” என திரித்து (வடுக கொல்டி என்பதே உண்மை 😃) சிவாஜியை வைத்து நடிக்க வைத்தார்கள். இயக்குநரின் பெயர் பி.ஆர். பந்துலு. 😲🚶🏻‍♂️🚶🏻‍♂️

Link to comment
Share on other sites

...அப்ப தமிழ் நாட்டில் / இந்தியாவில் அந்நிய ஆட்சிக்கு, முக்கியமாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய ஒரு தமிழ் மன்னன் கூட இல்லையா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உளவியல் அராய்ச்சி ஒன்றில் மாணவர்களை அவர்களது சோசல் பாதுகாப்பு இலக்கதின் இறுதி இரண்டு இலக்கத்தை எழுதுமாறு கூறப்பட்டது பின்னர் , அவர்களிடம் ஒரு மதுபான போத்தல் ஒன்ற்றுக்கு ஏலம் விடப்பட்டது , அந்த ஏலம் முடிவில் பார்த்த போது சோசல் பாதுகாப்பு இலக்கதின் இறுதி இரண்டு அதிகமாகவுள்ளவர்களின் ஏலத்தொகையே அதிகமாகவிருந்த்தது , இதனை உளவியலில் Anchoring Bias என்பார்கள்

Link to comment
Share on other sites

15 hours ago, நிழலி said:

...அப்ப தமிழ் நாட்டில் / இந்தியாவில் அந்நிய ஆட்சிக்கு, முக்கியமாக ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய ஒரு தமிழ் மன்னன் கூட இல்லையா?

 

உள்ளார்களே.. மன்னர்கள் மருது பாண்டியர்கள், அரசி வேலு நாச்சியார் என சிலர் உள்ளார்கள். வெள்ளையர்கள் உள்ளே வரும்பொது தமிழகம் ஏற்கனவே தெலுங்கர்களாலும், மராட்டியர்களாலும் ஆளப்பட்டு வந்தது. மீதமாக இருந்தவர்கள் ஒருசில குறுநில மன்னர்களே.

Link to comment
Share on other sites

2 hours ago, இசைக்கலைஞன் said:

உள்ளார்களே.. மன்னர்கள் மருது பாண்டியர்கள், அரசி வேலு நாச்சியார் என சிலர் உள்ளார்கள். வெள்ளையர்கள் உள்ளே வரும்பொது தமிழகம் ஏற்கனவே தெலுங்கர்களாலும், மராட்டியர்களாலும் ஆளப்பட்டு வந்தது. மீதமாக இருந்தவர்கள் ஒருசில குறுநில மன்னர்களே.

ஆனால் தமிழ் மன்னர்கள் தமது வீரத்தை மிக அதிகமாக காட்டியது தமக்குள் மோதிக்கொண்ட போது மட்டும் தான்.  அது இன்றும் தொடர்கிறது என்பது தான் வேதனையான உண்மை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.