Jump to content

கூட்­ட­மைப்பின் ஆத­ரவை பெறு­வ­தற்கு பொதுஜன பெரமுன கடும் பிர­யத்­தனம்: சுமந்­தி­ர­னுடன் தொலை­பே­சியில் உரை­யாடல்


Recommended Posts

IMAGE-MIX.png
 

(ஆர்.யசி)

ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னூ­டாக தமிழ் மக்­களின் ஆத­ரவை பெற்­று­­க்கொள்­வதில் பொது­ஜன பெர­மு­ன­வினர் கடும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­, ஜனா­தி­பதி வேட்­பாளர் கோத்­த­பாய ராஜபக் ஷ இரு­வ­ருமே தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் உறுப்­பினர் எம்.எ.சுமந்­தி­ர­னுடன் தனித்­த­னியே பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுத்­துள்னர்.

இந்­நி­லையில் மஹிந்த, கோத்­த­பாய , பசில் ராஜபக் ஷவினர் வெகு விரைவில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின்  தலைவர் இரா.சம்­பந்­தனை சந்­தித்து பேசு­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்­ளனர்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் எம்.ஏ.சுமந்­தி­ர­னுடன் நேற்று முன்­தினம் தொலை­பே­சியில் தொடர்பு கொண்ட கோத்­த­பாய ராஜ­பக்ஷ கூட்­ட­மைப்பின் தலை­வர்­களை சந்­தித்து பேசு­வ­தற்கு விருப்பம் தெரி­வித்­துள்ளார். 

இது குறித்து கூட்­ட­மைப்பின் பேச்­ச­சாளர் சுமந்­தி­ர­னிடம் வின­வி­ய­போது அவர் தெரி­வித்­த­தா­வது,

கோத்­த­பாய  ராஜபக்  ஷ எனக்கு தொலை­பேசி மூல­மாக அழைப்பு விடுத்து பேச்­சு­வார்த்­தைகள் முன்­னெ­டுக்க முடி­யுமா என கேட்டார்.  "தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினர் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுத்த விருப்பம் தெரி­வித்­த­தாக எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்­னிடம் தெரி­வித்தார். அதற்­க­மை­யவே நான் உங்­களை தொடர்­பு­கொண்டேன். எப்­போது நாம் பேசலாம்" என கோத்­தா­பய ராஜபக் ஷ என்­னிடம் கேட்டார். 

எனினும் கடந்த வாரம் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ என்னை தனிப்­பட்ட முறையில் சந்­தித்து சில விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டினார். இதில் இம்­முறை ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் ஆத­ரவை எமக்கு பெற்­று­கொ­டுக்க முடி­யுமா என்ற கோரிக்­கையை என்­னிடம் முன்­வைத்தார். எனினும் ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு என்ன என்­பதை நான் அவ­ருக்கு எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தேன். 

அதா­வது தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள் என்ற வகையில்  சகல ஜனா­தி­பதி வேட்­பா­ளர்­க­ளி­டமும் பேச்­சு­வார்த்தை நடத்த தயா­ராக உள்ளோம். தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்வு வேண்டும் என்­பதே எமது ஒரே நிலைப்­பாடு. இதில் தமிழ் மக்­களின் அர­சியல் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­களை பெற்­றுக்­கொ­டுக்க உங்­களால் என்ன செய்ய முடியும், புதிய அர­சியல் அமைப்பு விட­யத்தில் உங்­களின் நிலைப்­பாடு என்ன? அதி­கார பகிர்வில் உங்­களின் நிலைப்­பாடு என்ன. என்ற விட­யங்­களை நான் கேட்டேன். எனினும் அவ­ரிடம் இருந்து ஆரோக்­கி­ய­மான பதில் வர­வில்லை. எனினும் அர­சியல் கட்­சிகள் அனைத்­தையும் சந்­தித்து எமது கோரிக்­கை­களை முன்­வைக்க நாம் தயா­ரா­கவே உள்ளோம். அந்த அடிப்­ப­டையில் உங்­க­ளுடன் பேசவும் நான் தய­ரா­கவே உள்ளோம்  என்ற கார­ணியை நான் கூறினேன். 

அதற்­க­மை­யவே கோத்­த­பாய  ராஜபக் ஷ என்னை தொடர்­பு­கொண்டு பேசினார். தானும் மஹிந்த ராஜபக் ஷவும், பஸில் ராஜபக் ஷவும் இணைந்து மூவ­ரு­மாக எங்­களை சந்­திக்க தயா­ராக உள்­ள­தாக கூறினார். எனினும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு சார்பில் நான் தனித்து தீர்­மானம் எடுக்க முடி­யாது. எங்­களின் கூட்­ட­ணியில் மூன்று கட்­சிகள் உள்­ளன.அவர்­க­ளு­டனும் பேசி நாம் ஒன்­றாக உங்­களை சந்­திக்க முடியும் என்றேன். 

அத்­துடன் எப்­போது சந்­திப்பை நடத்த முடியும் என்ற கேள்­வி­யையும் கேட்டார். எனினும் அவர் மருத்­துவ சிகிச்­சை­க­ளுக்­காக சிங்­கபூர் செல்­ல­வுள்­ளதால் நீங்கள் சிங்­கபூர் செல்ல முன்னர் சந்­திப்­பீர்­களா அல்­லது சென்று மீண்டும் நாட்­டுக்கு வந்­ததும் சந்­திப்­பீர்­களா என கேட்டேன். இது குறித்தும் எங்­களின் கோரிக்­கைகள் குறித்தும் மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பஸில் ராஜபக் ஷ ஆகி­யோ­ருடன் பேசிய பின்னர் மீண்டும் என்ன தொடர்­பு­கொள்­வ­தாக கூறினார். 

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை பொறுத்­த­வ­ரையில் நாம் இர­க­சி­ய­மாக யாரு­டனும் பேசி எமது கோரிக்­கை­களை இர­க­சி­ய­மாக செய்ய வேண்­டிய அவ­சியம் இல்லை. நாம் வெளிப்­ப­டை­யாக  எமது மக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு பதில் கேட்­கின்றோம். இதில் பிர­தான கட்­சிகள் எமக்கு இது­வரை கொடுத்த வாக்­கு­று­தி­களை நாம் மீண்டும் மீண்டும் நினை­வு­ப­டுத்­து­கின்றோம். ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என வரும்போது  அவர்களுக்கு எமது ஆதரவு தேவைப்படுகின்றது. அவ்வாறான நிலையில் நாம்  முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்க தயாராக உள்ள வேட்பாளர்களையே நாம் ஆதரிக்க முடியும். ஆகவே சகல ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாம் வெளிப்படையாக  பேச்சுவார்த்தை நடத்தி எமது மக்களின் கோரிக்கைகளை வெற்றிகொள்ளவே முயற்சிகின்றோம்  என்றார்.

https://www.virakesari.lk/article/66362

Link to comment
Share on other sites

நாளைய தலைப்பு செய்தி : கூட்டமைப்பினர் புது டெல்லி பயணம் 

அவர்கள் முடிவே எமது முடிவு 😞 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ampanai said:

நாளைய தலைப்பு செய்தி : கூட்டமைப்பினர் புது டெல்லி பயணம் 

அவர்கள் முடிவே எமது முடிவு 😞 

நோ நோ நோ
நொட் கூட்டமைப்பினர்.

தமிழரசுக்கட்சியினர்.

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை பொறுத்­த­வ­ரையில் நாம் இர­க­சி­ய­மாக யாரு­டனும் பேசி எமது கோரிக்­கை­களை இர­க­சி­ய­மாக செய்ய வேண்­டிய அவ­சியம் இல்லை. நாம் வெளிப்­ப­டை­யாக  எமது மக்­களின் நியா­ய­மான கோரிக்­கை­க­ளுக்கு பதில் கேட்­கின்றோம். இதில் பிர­தான கட்­சிகள் எமக்கு இது­வரை கொடுத்த வாக்­கு­று­தி­களை நாம் மீண்டும் மீண்டும் நினை­வு­ப­டுத்­து­கின்றோம். ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என வரும்போது  அவர்களுக்கு எமது ஆதரவு தேவைப்படுகின்றது. அவ்வாறான நிலையில் நாம்  முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்க தயாராக உள்ள வேட்பாளர்களையே நாம் ஆதரிக்க முடியும். ஆகவே சகல ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாம் வெளிப்படையாக  பேச்சுவார்த்தை நடத்தி எமது மக்களின் கோரிக்கைகளை வெற்றிகொள்ளவே முயற்சிகின்றோம்  என்றார்.

#1: சுமந்திரன் அவர்கள் கட்சியின் பேச்சாளர். ஏன் அவருடன் மகிந்த அண்ட் கோ தனியாக சந்திக்க விரும்புகின்றது?

#2: ஒவ்வொரு முறையும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும்பொழுது கூட்டமைப்பினர் அரசை எந்தவித(?) வேண்டுகோளும் இல்லாமல் ஏன் காப்பாற்றி வந்தனர்? 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா..ஹா...

நேற்றுவரை கோட்டா வை வெல்ல வைக்க வேண்டும் என பக்கம் பக்கமாக கூவிய புலம்பெயர் மக்களில் சிலர், இப்போ பேந்த பேந்த முழிப்பது போல படுகிறது.

உங்கள் ராசதந்திரத்தைதான் சும் கையில் எடுக்கிறார். 

எப்படி வசதி, இப்பவும் கோட்டா வெல்வதுதான் நல்லமா?

செம டுவிஸ்ட் 😂

Link to comment
Share on other sites

1 hour ago, ஈழப்பிரியன் said:

நோ நோ நோ
நொட் கூட்டமைப்பினர்.

தமிழரசுக்கட்சியினர்.

உண்மைதான்.

மோடியும் ஜியும் மாமல்லபுரத்தில் சந்திக்கும்பொழுது இலங்கையும் உரையாடப்படலாம். அவர்கள் ஆட்ட இங்கு பலரும் ஆட வேண்டியது தான்.

 

Link to comment
Share on other sites

14 minutes ago, ampanai said:

உண்மைதான்.

மோடியும் ஜியும் மாமல்லபுரத்தில் சந்திக்கும்பொழுது இலங்கையும் உரையாடப்படலாம். அவர்கள் ஆட்ட இங்கு பலரும் ஆட வேண்டியது தான்.

இந்த திரியையும் கொஞ்சம் பாருங்கள். 😀

https://yarl.com/forum3/topic/232503-ரணில்-சொல்லே-சுமந்திரம்-–-ஜனாதிபதித்-தேர்தலைப்-புறக்கணிக்கிறது-கூட்டமைப்பு/

 

Link to comment
Share on other sites

2 minutes ago, Lara said:

நன்றிகள் லாரா.

தமிழரசு கட்சி நேற்று எடுத்த முடிவை நாளையும் அமுல்படுத்துவார்கள் என்று நிச்சயமாக நம்ப முடியாது 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆக குறைந்தது 7 million சிங்கள வாக்குகள் இருப்பதாக கோத்த அணி நம்புகிறது.

எனவே, ஏனையோரின் வாக்குகள் legitimacy க்கு ஆக விரும்புகிறது, கட்டயமாக தேவை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் தலைமை சட்டத்தரணி, Ali Sabry, ஓர் முஸ்லீம் zionist.

விமல் வீரவன்சாவின் சட்டத்தரணி, Muzzamil, ஓர் முஸ்லீம் zionist.  

 

கோத்த இற்கு எதிராணா  எந்த வழக்குகளோ, அல்லது முறை கேடுகளோ, உண்மையாயினும், .தடைகள் அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, Kadancha said:

கோத்தாவின் தலைமை சட்டத்தரணி, Ali Sabry, ஓர் முஸ்லீம் zionist.

விமல் வீரவன்சாவின் சட்டத்தரணி, Muzzamil, ஓர் முஸ்லீம் zionist.  

 

கோத்த இற்கு எதிராணா  எந்த வழக்குகளோ, அல்லது முறை கேடுகளோ, உண்மையாயினும், .தடைகள் அல்ல. 

சையோனிஸ்ட் என்றால் யூதநலன் விரும்பி அல்லவா? இந்த முஸ்லீம்கள் இருவரை எந்த அடிப்படையில் சையோனிஸ்ட் என்கிறீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

சையோனிஸ்ட் என்றால் யூதநலன் விரும்பி அல்லவா? இந்த முஸ்லீம்கள் இருவரை எந்த அடிப்படையில் சையோனிஸ்ட் என்கிறீர்கள் ?

எனது ஆய்வில் வந்த முடிவல்ல.

இது நான் அறிந்தது.

நானும் உங்களை போல தான் நினைத்தேன். தெரிவித்த, கோத்தா அணிக்கு நெருக்கமானவரிடம் மறு  கேள்வி கேட்பதற்கு விருப்பிமில்லை.    

பின்பு, சவுதியும், இஸ்ரேல் உம் உறவை யோசித்து, சாத்தியம் இருக்கிறது என்று உணர்ந்தேன்.      

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kadancha said:

எனது ஆய்வில் வந்த முடிவல்ல.

இது நான் அறிந்தது.

நானும் உங்களை போல தான் நினைத்தேன். தெரிவித்த, கோத்தா அணிக்கு நெருக்கமானவரிடம் மறு  கேள்வி கேட்பதற்கு விருப்பிமில்லை.    

பின்பு, சவுதியும், இஸ்ரேல் உம் உறவை யோசித்து, சாத்தியம் இருக்கிறது என்று உணர்ந்தேன்.      

 

ம்ம்ம். சவுதி-இஸ்ரேல் உறவு நெருக்கம் எனிலும் MBS ஐ யாரும் சயோனிஸ்ட் என்று அழைத்து நான் கேள்விப்பட்டதில்லை.

இதை பற்றி மேலோட்டமாக பார்த்ததில் - முஸ்லீம்களிலும் பல சையோனிஸ்டுகள் இருந்ததாக நம்ம கூகிளன் சொல்கிறார்.

எனவே உங்கள் நண்பர் சொன்னது சரியாக இருக்கலாம்.

பிகு: அடுத்த முறை ஊரில் வெள்ளைவான் தூக்கினால் நான் கடஞ்சாவின் நண்பன் என சொல்லி தப்பிக்க எண்ணியுள்ளேன் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ampanai said:
ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என வரும்போது  அவர்களுக்கு எமது ஆதரவு தேவைப்படுகின்றது. அவ்வாறான நிலையில் நாம்  முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்க தயாராக உள்ள வேட்பாளர்களையே நாம் ஆதரிக்க முடியும். ஆகவே சகல ஜனாதிபதி வேட்பாளர்களுடனும் நாம் வெளிப்படையாக  பேச்சுவார்த்தை நடத்தி எமது மக்களின் கோரிக்கைகளை வெற்றிகொள்ளவே முயற்சிகின்றோம்  என்றார்.

கடந்த ஆட்சியின்போது இந்த யோசனைகள் எங்கய்யா போனது?!
எந்த கோரிக்கையும் வைக்காது அரசை கண்ணை மூடி ஆதரித்துவிட்டு இப்பிடி சொல்வது நியாயமாரே?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லுசு தமிழ் கட்டசிகளுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடம் கற்ப்பிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.