Jump to content

பால்வழி மண்டலத்தில் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன?


Recommended Posts

நமது சூரிய குடும்பம் அமைந்துள்ள பால்வழி மண்டலம் என்கிற நட்சத்திர கூட்டத்தின் மையப்பகுதியில் 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பெரும் பிரளயம் போன்ற ஆற்றல் வெடித்து கிளம்பியதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்பெர்ட் பிழம்பு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்வு பால்வழி மண்டலத்தின் மையப்பகுதியிலுள்ள மிகப் பெரிய கருந்துளைக்கு அருகே தொடங்கியதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பெரும் பிரளயத்தின் தாக்கம் 2,00,000 ஒளியாண்டுக்கு அப்பாலும் உணரப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கு முன்னர் நிறுவப்பட்டதை விட, பால்வழி மண்டலத்தின் மையம் மிகவும் ஆற்றல் வாய்ந்தது என்ற இந்த கண்டுபிடிப்பு அதன் பரிணாம வளர்ச்சி பற்றி இதுவரை புரிந்துகொள்ளப்பட்டவற்றை மாற்றவேண்டிய நிலைமைக்கு வழிவகுக்கும்.

"பால்வழி மண்டலம் குறித்த நமது புரிதலை இந்த கண்டுபிடிப்பு தலைகீழாக மாற்றுகிறது" என்று கூறுகிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் உறுப்பினரான ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மக்தா குக்லீல்மோ.

"நாம் எப்போதும் நமது பால்வழி மண்டலம், பிரகாசமற்ற மையப்பகுதி கொண்ட செயலற்ற நட்சத்திர கூட்டம் என்றே நினைத்து வந்துள்ளோம்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

இந்த பிரளயமானது இரண்டு மிகப் பெரிய "அயனியாக்க கூம்பு வடிவ அலைகளை" உருவாக்கியதாகவும், அவை பால்வழி மண்டலத்தை ஊடறுத்து வெளிப்பட்டு, மாகெல்லானிக் மேகக்கூட்டத்தில் அதன் முத்திரையை பதித்ததாகவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பால்வழி மண்டலத்தின் மையப்பகுதி 35 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வெடித்தது

படத்தின் காப்புரிமைMARK GARLICK/SCIENCE PHOTO LIBRARY

இந்த அமைப்பு பால்வழி மண்டலத்திலிருந்து சுமார் 2 லட்சம் ஒளியாண்டு தூரத்தில் அமைந்துள்ளது.

ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு ஆராய்ச்சியில், இந்த மிகப் பெரிய பிரளயத்துக்கு, பால்வழி மண்டலத்தின் மையப்பகுதியிலுள்ள மிகப் பெரிய கருந்துளையின் அணுக்கதிர் வீச்சுதான் காரணமாக இருக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.

தனுசு ராசிக்கு அருகே அமைந்துள்ள இந்த மிகப் பெரிய கருந்துளையின் நிறை நமது சூரியனை விட நான்கு மில்லியன் மடங்கு அதிகம்.

இதுகுறித்து மேலதிக ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலும், இந்த ஆய்வின் முடிவுகளை புறந்தள்ளிவிட முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

"பிரளயம் வெளிப்படுத்திய ஒளி, கிட்டத்தட்ட ஒரு கலங்கரை விளக்கத்தின் ஒளி போல இருபுறமும் கூம்பு வடிவில் இருந்திருக்கக் கூடும். இருளை கற்பனை செய்து பாருங்கள். பின்னர் யாரோ ஒருவர் கலங்கரை விளக்கத்தை ஒரு குறுகிய காலத்திற்கு செயல்பட வைப்பதை போன்று நினைத்து பாருங்கள்" என்று கூறுகிறார் இந்த ஆய்வின் தலைமை விஞ்ஞானியான சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த பிளாண்ட்- ஹாவ்தோர்ன்.

ஹப்பிள் தொலைநோக்கியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் விரிவான முடிவுகள் அஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னல் எனும் சஞ்சிகையில் வெளியிடப்படும்.

https://www.bbc.com/tamil/science-49965689

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.