Jump to content

ரஃபேல் போர் விமானங்களை, ஆயுத பூஜையுடன்... பிரான்சிடம் இருந்து இன்று பெறுகிறார் ராஜ்நாத்சிங்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Defence Minister Rajnath Singh to receive first Rafale fighter aircraft in France today

ரஃபேல் போர் விமானங்களை, ஆயுத பூஜையுடன்... பிரான்சிடம் இருந்து இன்று பெறுகிறார் ராஜ்நாத்சிங்!

பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று பெற்றுக் கொள்கிறார். ரஃபேல் போர் விமானத்துக்கு 'ஆயுத பூஜை' வழிபாடு நடத்தப்பட உள்ளது.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பிரான்ஸின் பார்டியாக்ஸ் நகருக்கு அருகே உள்ள மெரிக்னாக் விமான படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த போர் விமானத்தை முறைப்படி பெற்றுக் கொள்கிறார். இதற்காக 3 நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார் ராஜ்நாத்சிங்.

ரஃபேல் போர் விமானத்துக்கான சாஸ்திரப்படியான ஆயுத பூஜை வழிபாடு நடத்தப்பட்ட பின் அதில் ராஜ்நாத்சிங் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நமது நாட்டின் வான்படை உருவாக்கப்பட்ட நாளை முன்னிட்டு இந்நிகழ்வு நடைபெறுகிறது.

மேலும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கும் ராஜ்நாத்சிங் இருதரப்பு பாதுகாப்பு, ராணுவ உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பிரான்ஸின் பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் நாளை உரையாற்றும் ராஜ்நாத்சிங், மேக் இன் இந்தியா திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்க இருக்கிறார்.

Read more at: https://tamil.oneindia.com/news/international/defence-minister-rajnath-singh-to-receive-first-rafale-fighter-aircraft-in-france-today-365017.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

pooja.png

😄

Link to comment
Share on other sites

சந்தனப் பொட்டு; டயருக்குக்கீழ் எலுமிச்சை; இந்தியில் `ஓம்' - முதல் ரஃபேல் விமானத்தைப் பெற்ற ராஜ்நாத்!

இந்தியாவில் ஆயுத பூஜைகள் கொண்டாடப்பட்டு வரும் வேளையில் பாரிஸ் பறந்த ராஜ்நாத் சிங் அங்கு அதிபர் இமானுவேல் மேக்ரானைச் சந்தித்துப் பேசினார். இருநாடுகளின் பாதுகாப்பு தொடர்பான மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு பாரிஸிலிருந்து 590 கிலோ மீட்டர் தொலைவில் ரஃபேல் விமானம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கும் மெரிக்னா பகுதிக்கு பிரான்ஸின் ராணுவ விமானத்தில் சென்ற ராஜ்நாத் சிங், அங்கு இருந்த ரஃபேல் விமானத்தைப் பார்வையிட்டார்.

பின்பு ``இது வரலாற்றின் மிக முக்கிய நாள். இன்றைய நாளில் இந்த நிகழ்வு நடைபெறுவது இருநாடுகள் இடையேயான உறவின் ஆழத்தை பிரதிபலிக்கிறது. ரஃபேல் விமானங்கள் சொன்ன நேரத்தில் தரப்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. 36 விமானங்களும் சொன்ன நேரத்தில் கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இது எங்கள் விமானப்படைக்கு மேலும் பலத்தை அளிக்கும் என்று நான் நம்புகிறேன். இதன்மூலம் இந்தியா- பிரான்ஸ் உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம். இந்த இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பு அனைத்துத் துறைகளிலும் அதிகரிக்கவே விரும்புகிறேன். ரஃபேல் என்பது ஒரு பிரெஞ்சு சொல், இதற்கு இந்தியில் "பலமான காற்று" என்று பொருள். அதன்படி பார்த்தால் ரஃபேல், அதன் பெயருக்கு ஏற்ப வாழும் என்று நான் நம்புகிறேன்" எனப் பேசினார் ராஜ்நாத் சிங்.

இருநாட்டு அதிகாரிகளின் உரைக்குப் பிறகு முதல் ரஃபேல் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட ரஃபேல் விமானத்திற்குச் சந்தனம், பொட்டு, டயர்களின் கீழ் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்தார் ராஜ்நாத் சிங். அதேபோல் ரஃபேல் விமானத்தின் மீது தேங்காய், பூக்கள் வைத்தும், முன்பகுதியில் ஓம் என்று இந்தியிலும் எழுதினார் ராஜ்நாத் சிங். பூஜைக்குப் பின் ரஃபேல் விமானத்தின் பறந்தார் ராஜ்நாத்.

https://www.vikatan.com/news/india/rajnath-singh-receives-first-rafale-jet-in-france

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டயருக்கு கீழே எலுமிச்சை வைத்து, தேங்காய் சுற்றி.. ரபேல் போர் விமானத்திற்கு பூஜை செய்த ராஜ்நாத்சிங்

Read more at: https://tamil.oneindia.com/news/delhi/rajnath-singh-performs-shastra-puja-on-the-rafale-combat-jet-365074.html

View image on Twitter

View image on Twitter

View image on Twitter

View image on Twitter

 

Link to comment
Share on other sites

மூட நம்பிக்கைகளை
பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றால்
 உயர் பதவியில் உள்ளவர்கள் தொடர்ந்துஇது  போன்ற செயல்களை செய்ய வேண்டும்.அப்போதுதான் குடி மக்களை மூட நம்பிக்கைகளில்
மூழ்க வைத்து எளிதாக அரசாட்சி
செய்ய முடியும்.

பிரான்ஸ்காரன் முகமெல்லாம்  வெளிறிப்போச்சுத் தெரியுமா? ஏனென்றால் ஒரு சின்னப்பழத்ததை நசுக்க  இவ்வளவு செலவுபண்ணி ஒருவிமானத்தை வாங்குறாங்களே அப்பா இவங்க என்ன பெரிய பணக்கார் எண்டு. அடுத்த விமானம் தயாரிக்கும் போது எலுமிச்சம் பழம் free ஆ கொடுப்பினம் போல. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/9/2019 at 2:03 AM, தமிழ் சிறி said:

டயருக்கு கீழே எலுமிச்சை வைத்து, தேங்காய் சுற்றி.. ரபேல் போர் விமானத்திற்கு பூஜை செய்த ராஜ்நாத்சிங்

ராஜ்நாத் ஜீ 
உம்பா சூச்சாவை மறந்துவிட்டார் ...ரபேல் விமானத்தின் எரிபொருளுடன் அதையும் கொஞ்சம்  கலந்து விட்டிருந்தால் ...ரபேல் நடுவானில் குட்டிக்கரணமெல்லாம் அடித்திருக்கும் . 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.