Jump to content

230 மில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் ஐ.நா...: இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என தகவல்!


ampanai

Recommended Posts

Dkn_Tamil_News_2019_Oct_03__225475490093232.jpg

 

நியூயார்க்: 230 மில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறையுடன் இயங்கி வரும் ஐ.நா.வில், இம்மாத இறுதிக்குள் மீதமுள்ள நிதியும் தீர்ந்துவிடும் என்ற அபாயம் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய ஐ.நா.வின்., பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெரெஸ், ஐக்கிய நாடுகள் சபை தற்போது 230 மில்லியன் டாலர் பற்றாக்குறையுடன் இயங்கி வருகிறது. மேலும் அக்டோபர் மாத இறுதிக்குள் சபையை நடத்த பணம் இல்லாமல் போகக்கூடும். ஐ.நா. செயலகத்தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஐ.நாவுக்கு வழங்க வேண்டிய நிதிகளை உறுப்பு நாடுகள் முறையாக செலுத்தவில்லை. அதாவது, 2019ம் ஆண்டில் எங்கள் வழக்கமான பட்ஜெட் நடவடிக்கைகளுக்குத் தேவையான மொத்தத் தொகையில் 70 சதவிகிதத்தை மட்டுமே உறுப்பு நாடுகள் வழங்கியுள்ளன. இதன் காரணமாக, செப்டம்பர் மாத இறுதியில் 230 மில்லியன் டாலர் பணப் பற்றாக்குறை உள்ளது.

எங்கள் பணப்புழக்க இருப்புக்களை மாத இறுதிக்குள் குறைக்கும் அபாயத்தை நாங்கள் உணருகிறோம். எங்கள் நிதி ஆரோக்கியத்திற்கான இறுதி பொறுப்பு உறுப்பு நாடுகளிடம் உள்ளது. செலவுகளைக் குறைக்க, மாநாடுகள் மற்றும் கூட்டங்களை ஒத்திவைத்தல் மற்றும் சேவைகளைக் குறைத்தல் ஆகியவை மேற்கொள்ளப்பட உள்ளன. அதே நேரத்தில் அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வது என முடிவெடுத்துள்ளோம், என்று கூறியுள்ளார். 2018-19ம் ஆண்டுக்கான நிதியாக 5.4 மில்லியன் டாலர் வரையறுக்கப்பட்டதாகவும், அதில் 22 சதவகித பங்களிப்பை அமெரிக்கா வழங்கியுள்ளது எனவும் குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய ஐ.நா., அதிகாரி ஒருவர், நிதிப்பற்றாக்குறை காரணமாக, தேவையான பணத்தை வழங்கும்படி உறுப்பு நாடுகளிடம் ஐ.நா., பொதுச்செயலர் குட்ரெஸ் வலியுறுத்தினார். ஆனால், பணம் வழங்க அந்நாடுகள் மறுத்துவிட்டன, என்று தெரிவித்துள்ளார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=531836

Link to comment
Share on other sites

அன்புடன் ஐ.நா.விற்கு,

உங்கள் நிதிப்பற்றாக்குறை பற்றி அறிந்தேன்.

உங்களுக்கு 'டீலுகள்' போடுவது புதிதல்ல. அதனால், உங்களுடன் ஒரு 'டீல்.

தமிழீழம் என்ற ஒரு குட்டி நாட்டை அங்கீகரியுங்கள். உலகத்தமிழர்களும் நானும் உங்களுக்கு 230 மில்லியன்கள் அமெரிக்க டாலரை தருவோம், அன்பளிப்பாக!   

இப்படிக்கு,
நாளை காணாமல் ஆக்கப்படும் சங்க உறுப்பினர்  🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

ஐ.நா. செயலகத்தில் உள்ள 37,000 ஊழியர்களுக்காக சம்பளம் மற்றும் உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

அங்கு வேலை செய்யும்... 37,000 பேரும், சும்மா இருந்து, பக்கோடா சாப்பிட்டது போதும். 
ஐ.நா. இருப்பதிலும், பார்க்க... அதை மூடி  விடுவதே சிறந்த வழி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதவி எனும் பெயரில் சுரண்ட ஒரு கூட்டம் 
அலுவலகம் திறந்து இயங்குகிறது என்றால் ...
அதில் முதலில் இருப்பது ஐ நா 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

Dkn_Tamil_News_2019_Oct_03__225475490093232.jpg

 

 

எத்தனை நாளைக்கு சம்பளம் தரும் தனவந்த  நாடுகளுக்காக

உலகத்தையே ரணம்  செய்வது??

மூடிட்டு  உழைச்சு  சாப்பிடும் வழிகளை  பாருங்கள்

அப்ப  தெரியும் மனித  உயிர்களின்  மதிப்பு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேவையில்லா ஆணி ..!

hj.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அங்கு வேலை செய்யும்... 37,000 பேரும், சும்மா இருந்து, பக்கோடா சாப்பிட்டது போதும். 
ஐ.நா. இருப்பதிலும், பார்க்க... அதை மூடி  விடுவதே சிறந்த வழி.

உந்த 37,000 பேரும் என்னத்தை வெட்டி புடுங்கீனமாம்?

பேசாமல் ஆடுமாடு மேய்க்க போகலாம்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

உலக நாடுகளுக்கு பயங்கர அதிர்ச்சி...!! இந்தியா கொடுத்த நிதியில்தான் ஐநா மன்றமே செயல்படுகிறது..??

una-jpg.jpg

எப்போதும் இல்லாத அளவிற்கு ஐநா மன்றத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன்  அதன் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாடுகளின் அமைதிக்காகவும், சர்வதேச நாடுகளுக்கிடையே ஏற்படும் சச்சரவு மற்றும் பிணக்குகளை  தீர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளை கைதூக்கி விடுவதற்காகவும் உருவாக்கப்பட்டது தான் UNA எனப்படும் ஐக்கிய நாடுகள் சபை.  இந்த சபையால்  இவ் உலகத்தில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த  பல பிரச்சனைகளுக்கு  தீர்வு காணப்பட்டுள்ளது.  இதுவரையில் உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் அனைத்து நாடுகளின் நடுநாயகமாக உள்ள இந்த ஐநா மன்றமே அதற்கு காரணம்... இச்சிறப்பு வாய்ந்த இம்மன்றத்திற்கு இது போதாதகாலம் என்று சொல்லும் அளவிற்கு அதன் நிலை மாறியுள்ளது. சுமார் 193 நாடுகள் இம்மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளன,

அமெரிக்கா,  பிரான்ஸ்,  ரஷ்யா,  சீனா ,  பிரிட்டன், போன்ற நாடுகள் நிரந்தர  உறுப்பினர்களாகவும் இருந்து வருகின்றனர். இதில் உள்ள உறுப்பு நாடுகள் ஐநாவுக்கு ஆண்டுதோறும் ஒரு கணிசமான தொகையை செலுத்தவேண்டும் அந்த தொகையை வைத்துதான்  ஐநாமன்றம்  இயங்க வேண்டும் என்பது விதி. இந்த நிலையில்  ஐநாவின் உறுப்பு நாடுகள் கடந்த சில ஆண்டுகளாக முறையாக தொகை செலுத்தவில்லை என கூறப்படுகிறது. அதில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் மட்டுமே கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக செலுத்தியுள்ளன என தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால்  மற்ற நாடுகள் முறையாக தொகை செலுத்தாததால்,  ஐநா மன்றம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக ஐநாமன்றம் தெரிவித்துள்ளது.  அத்துடன் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாத ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போதிய நிதி இல்லாததால்  வார இறுதிநாட்களில் அலுவலகம் செயல்படாது என ஐநாமன்றம் அறிவித்துள்ளது. உலக ஒற்றுமைக்காக ஏற்படுத்தப்பட்ட இச்சபை, உலக வல்லரசுகள் ,  பணம் குவிக்கும் நாடுகள் உறுப்பினர்களாக உள்ள சபை,  நிதி நெருக்கடியால் நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்ற தகவல்  உலக நாடுகள் பலவற்றிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

https://tamil.asianetnews.com/world/una-council-have-functioning-by-indian-fund-uan-now-very-crucial-situation-and-struggling-with-out-fund-pzm2yc

டிஸ்கி:

memees.php?w=650&img=Z291bmRhbWFuaS9uYWR

டேய் தம்பி.. பொய் சொல்லலாம் தப்பில்லை..! ஆனா ஏக்கர் கணக்குல விடப்படாது..,☺️

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.