Jump to content

சனி கிரகத்தை சுற்றி 20 புதிய நிலவுகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சனி கிரகத்தை சுற்றி 20 புதிய நிலவுகள்.. அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.. புத்தம் புது திருப்பம்.!

saturn-new-moons-768x384-1570529418.jpg

நியூயார்க்: சனி கோளைச் சுற்றி இருபது புதிய நிலவுகள் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் சூரிய குடும்பத்தில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.

விண்வெளியில் பல பால்வெளிகள் இருக்கிறது. இதில் பல சூரிய குடும்பங்கள் உள்ளது. இதில் நம்முடைய சூரிய குடும்பத்திலேயே நிறைய சுவாரசியமான, நமக்கு தெரியாத விஷயங்கள் இருக்கிறது.

நம்முடைய சூரிய குடும்பத்தில் இந்த புதிய விஷயங்களை கண்டுபிடிக்க தொடர்ந்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது .

.யார் என்ன செய்கிறார் ?

கார்னகி இன்ஸ்டிடியூஷன் ஃபார் சயின்ஸின் ஆராய்ச்சியாளர் ஸ்காட் ஷெப்பர்ட் மற்றும் அவரது குழு செய்த ஆராய்ச்சியில்தான் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. அதன்படி சனி கோளைச் சுற்றி இருபது புதிய நிலவுகள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

சனி கிரகம்

சனி கிரகத்தை சுற்றி 20 புதிய நிலவுகளை கண்டுபிடித்ததன் மூலம் , 79 நிலவுகளை கொண்ட வியாழனை பின்னுக்கு தள்ளி மொத்தம் 82 நிலவுகளை கொண்டு கிரகமாக சனி உருவெடுத்துள்ளது. ஆம் சூரிய குடும்பத்தில் அதிக அளவிலான நிலவுகளை கொண்ட கிரகமாக சனி உருவெடுத்துள்ளது. இது பற்றி ஆராய்ச்சியாளர் ஸ்காட் ஷெப்பர்ட் பல சுவாரசிய தகவல்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்தார்.

எப்படி ?

அதில், உண்மையில் சனி கிரகம் தான் நிலவுகளின் ராஜா, இது மிகவும் வியப்பூட்டும் விஷயமாக எங்களுக்கு இருந்தது. நாங்களும் எங்கள் குழுவும் சேர்ந்து சனியின் புதிய நிலவுகளைக் கண்டுபிடிக்க ஹவாயில் ஒரு தொலைநோக்கியைப் பயன்படுத்தினோம். சுமார் 100க்கும் மேற்பட்ட மிகச் சிறிய நிலவுகள் சனியைச் சுற்றி வருகின்றன.

இன்னும் நிறைய ..

இன்னும் நிறைய கண்டுபிடிப்புகள் வரும் நாட்களில் காத்திருக்கின்றன. சனியைச் சுற்றி 5 கிலோமீட்டர் மற்றும் வியாழனைச் சுற்றி 16 கிலோமீட்டர் தொலைவில் நிலவுகள் சுற்றி வருகிறது. அதிக நிலவுகளை சனி தன் வசம் கொண்டிருப்பதைக் கண்டறிவது சற்று கடினம்தான்.

ஆனால் எப்படி ?

ஆனாலும் வரும் காலத்தில் பெரிய தொலைநோக்கிகள் மூலம் துல்லியமாக கணக்கிடப்படும். இவை எல்லாம் மிக சிறிய நிலவுகள். சனி கிரகம் உருவான பின், பெரிய நிலவுகள், பிளவுகளின் காரணமாக இவ்வகை சிறிய நிலவுகள் உருவாகி இருக்கலாம்.

எவ்வளவு அருகே ?

மேலும் கண்டுபிடிக்கப்பட்ட புதிய நிலவுகளில் பதினேழு நிலவுகள் சனி கிரகத்தை எதிர் திசையில் சுற்றி வருகிறது மற்ற மூன்று நிலவுகள் சனி சுழலும் அதே திசையில் வட்டம் அடிக்கிறது. இவ்வகை சிறிய நிலவுகள் சனியிலிருந்து வெகு தொலைவில் உள்ளது, அவை ஒரு சுற்றுப்பாதையை முடிக்க இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் ஆகும்.

என்ன திருப்பம் ?

இந்த நிலவுகள் கிரகங்களை உருவாக்க உதவிய பொருட்களின் எச்சங்கள். எனவே அவற்றைப் படிப்பதன் மூலம், கிரகங்கள் எதில் இருந்து உருவாகின்றன என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். இது ஆராய்ச்சி உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும், என்று குறிப்பிட்டுள்ளார்.

https://tamil.oneindia.com/news/international/20-brand-new-moons-found-around-the-saturn-365054.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேன்நிலவுக்கு ... ஒவ்வரு நிலவுக்கு போனால் கூட 
20 முறை தேன்நிலவு போகலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

தேன்நிலவுக்கு ... ஒவ்வரு நிலவுக்கு போனால் கூட 
20 முறை தேன்நிலவு போகலாம். 

ஆக மொத்தத்திலை இவருக்கு இன்னும் தேன் நிலவு எண்ட சமாச்சாரம் நடந்திருக்க வாய்ப்பே இல்லை..:cool:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.