Jump to content

கனடிய தேர்தல் | தலைவர்களின் விவாதம் – வென்றது யார்?


Recommended Posts

கனடிய தேர்தல் | தலைவர்களின் விவாதம் – வென்றது யார்?

சிவதாசன்

விவாதம் ‘சப்’ பென்று போய்விட்டது. எதிர்பார்த்த வாண வேடிக்கை நடைபெறவில்லை. இருப்பினும் இரண்டு மணித்தியாலங்கள் பார்க்க வைத்துவிட்டன கனடிய தொலைக்காட்சிகள். அவர்களுக்கு வியாபாரம்.

இரண்டு முயல்களும் நான்கு ஆமைகளும் போட்டி போட்டன. முயல்கள் இரண்டும் தமக்குள் சண்டை பிடித்துக்கொண்டிருக்க ஜாக்மீட் சிங் என்ற ஆமை இலகுவாக வென்றுவிட்டது.

ஆளும் பிரதமர் என்ற வகையில் ட்ரூடோ அடி / வெடி வாங்கத் தயாராகத் தான் வந்தார். ஷீயர் பலரக ஆயுதங்களுடன் வந்தாரே தவிர கனரக ஆயுதங்களுடன் வரவில்லை. இயக்கக்காரர் சொல்வதுபோல எல்லாமே ‘சிம்பாப்வே’ வெடிகள் தான்.

SNC Lavalin ஆயுதத்தைச் ஷீயர் அடிக்கடி பாவித்து அது மழுங்கிப் போய்விட்டது. அதற்கு மறுப்பாயுதமாக ட்ரூடோ அடிக்கடி பாவித்த ‘கனடியர்களுக்கு வேலை’ என்ற ஆயுதமும் அப்படித்தான். இரண்டிலுமிருந்து சத்தம் வெளிவரவேயில்லை. இறுதியில் ஷீயர் பாவித்த ” “He can’t even remember how many times he put blackface on,” ; ”Mr. Trudeau, you are a phony, you are a fraud. You don’t deserve to lead this country.” என்ற வாயாயுதங்கள் தான் கொஞ்சம் காரமாக இருந்தது. இவ்வாயுதத்தினால் ட் ரூடோ காயப்பட்டதை விட ஷீயர் தான் அதிகம் காயப்பட்டிருக்கிறார். ஒரு விதமான below the belt punch என்று பார்க்கலாம். 

ஜோடி வில்சன் – றேபோல்ட் விடயமும் ஆறிப்போன கஞ்சிதான். எல்லாவற்றுக்கும் ட்ரூடோ வைத்துச் சுழற்றியது ஒரே- ‘கனேடியர்களுக்கு வேலை கொடுக்கிறேன்’ – ஆயுதம் தான். SNC Lavalin, Jody Wilson-Rebould விடயங்களைத் தொட்டதால் ஷீயர் கியூபெக் வாக்குகளை இழக்கப் போகிறார் என்பதை அவர் யோசித்ததாகத் தெரியவில்லை. கியூபெக் ஆசனங்கள் இல்லாமல் ஆட்சியைப் பிடிப்பது இலகுவானதல்ல. எனவே இதனால் ஷீயர் கியூபெக்கில் இழக்கப் போவது அதிகம்.

இந்த இரண்டு பேரும் போட்ட சண்டையைச் சாதகமாகப் பாவித்து அவ்வப்போது ஜக்மீட் சிங் நான்கைந்து ராக்கெட்டுக்களை விட்டார். “What we have here is Mr. Trudeau and Mr. Scheer arguing over who is worse for Canada. We have to start talking about who’s best for Canada,” என சிங் கொளுத்திப் போட்டார். 

பருவநிலை மாற்றம் தொடர்பான கேள்வி வரும்போது அதற்கும் சிங் விட்ட ராக்கட் பார்வையாளரைச் சிரிப்பால் உலுப்பியது. அவர் சொன்னது இது தான். “You don’t have to choose between Mr. Delay and Mr. Deny.” சிங் சிங்கன் தான் என்றும் சொல்லலாம்.

மொன்றியாலில் துவேஷ வெள்ளையருக்குப் பதில் சொல்லிச் செல்வாக்குப் பெற்றதுபோல இங்கும், விவாதத்துக்குப் பிறகு சிங்கின் செல்வாக்கு அதிகரிக்கப் போகிறது.

ட் ரூடோ, ஜேசன் கெனி, டக் போர்ட் போன்றவர்களை இழுத்துப் பார்த்தார். அவர்கள் தங்கள் மாகாணங்களில் மேற்கொள்ளும் செலவுச் சுருக்க நடவடிக்கைகளினால் மக்கள் படும் கஷ்டங்களை நினைவுபடுத்தினார். ஷீயரின் ஆட்சியிலும் இதுதான் நடக்கும் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் அதற்கு ஷீயர் கொடுத்த பதில் ஒரு classic. ” ஒன்ராறியோ லிபரல் கட்சிக்குத் தலைவரைத் தேடுகிறார்கள். நீர் அங்கு போவது தான் நல்லது” என்பது. ஷீயர் மத்திய அரசில் போட்டியிடும் ஒரு ஃபோர்ட் தான் என்று ட் ரூடோ சொல்லியிருக்கலாம் ஆனால் சொல்லவில்லை. 

பசுமைத் தலைவி மே யின் வாதம் திறமையாக இருந்தாலும் பெரிதளவில் பன்ச் லைன்களைக் கொண்டிருக்கவில்லை. நல்ல மனிசி, பாவம் என்பதற்காக வாக்குகளைப் போடவிருக்கும் எவரையும் இழக்குமளவுக்கு அவரது விவாதம் இருக்கவில்லை. புதிதாக எவரையும் திருப்புமளவுக்கும் விவாதம் இருக்கவில்லை. 

ஏனைய இருவரும் முகம் காட்ட வந்தவர்கள் போலத்தான். மக்சிம் பேர்ணியர் பருவநிலை மாற்றத்தில் நம்பிக்கை இல்லாதவராக இருந்தும் தன்னிடம் திறமான மருந்து இருப்பதாகச் சிரமப்பட்டுச் சொல்லிவிட்டுப் போனார். புளொக் கியூபெக்குவா தலைவர் பிளான்செட் தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தில் ஷீயருக்கு இரண்டு தட்டுகள் தட்டிவிட்டுப் போனார். SNC lavalin விவகாரத்தில் அந்நிறுவனத்தின் பங்குகளின் விலை இறக்கத்தால் நட்டப்பட்ட 3600 பேரும் அப்பாவிகள் என்றார். அது கியூபெக் வாக்காளர்களுக்கும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் இடையில் வைத்த பெரிய ஆப்பு. 

விவாதத்தில் கொள்கை கோதாரிகள் என்று எதுவும் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. ஒரு reality show தான்.   6 பேரில் யாருக்கு அதிக attention கிடைத்தது என்பதை அளவுகோலாக வைத்துப் பார்த்தால் (1) அதிக கை தட்டல்கள் (2) அதிக சிரிப்புகள் (3) முகத்தைக் குறிவைத்த அதிக கமரா நேரம் (4) witty answers என்ற காரணங்களுக்காக ஜாக்மீட் சிங் தான் வெற்றி பெறுவார். இந்த வருடத் தேர்தலுக்கு அவருக்கு இவை எதுவும் உதவி செய்யாது. 

நடந்து முடிந்த விவாதங்கள் எல்லாவற்றாலும் சாதிக்கக்கூடிய ஒன்று, இழுத்து இழுத்தென்றாலும் ட்ரூடோ வை இன்னொரு தடவை பிரதமராக்குவது. அது அவரது கெட்டித்தனத்தால் அல்ல மற்றவர்களின் இயலாத்தனத்தால். 

https://marumoli.com/?p=4846&fbclid=IwAR1D0YKvfDrqyM3Wsofu-GrjqGfNaphM0cx4IOJEAXUUlmlxzrNL-TliQ0U

 

Link to comment
Share on other sites

22 hours ago, nunavilan said:

விவாதத்தில் கொள்கை கோதாரிகள் என்று எதுவும் பெரிதாக விவாதிக்கப்படவில்லை. ஒரு reality show தான்.   6 பேரில் யாருக்கு அதிக attention கிடைத்தது என்பதை அளவுகோலாக வைத்துப் பார்த்தால் (1) அதிக கை தட்டல்கள் (2) அதிக சிரிப்புகள் (3) முகத்தைக் குறிவைத்த அதிக கமரா நேரம் (4) witty answers என்ற காரணங்களுக்காக ஜாக்மீட் சிங் தான் வெற்றி பெறுவார். இந்த வருடத் தேர்தலுக்கு அவருக்கு இவை எதுவும் உதவி செய்யாது. 

நடந்து முடிந்த விவாதங்கள் எல்லாவற்றாலும் சாதிக்கக்கூடிய ஒன்று, இழுத்து இழுத்தென்றாலும் ட்ரூடோ வை இன்னொரு தடவை பிரதமராக்குவது. அது அவரது கெட்டித்தனத்தால் அல்ல மற்றவர்களின் இயலாத்தனத்தால்.

லிபரல் கட்சி தமிழர்கள் உட்பட பல நாட்டு குடியேறிகளை வர விட்ட நாடு. அந்த நன்றிக்கு பல பல்லின சமூகத்தவரும் ஆரம்பத்தில் ஆதரவு வழங்குவார்கள். 

பின்னர், தாங்களும் ஒரு உழைக்கும் பிரசையானவுடன், அடடா கட்டும் வரி, எவ்வளவு உழைத்தும் முன்னேற முடியவில்லை என்ற சலிப்பு, பிள்ளைகளின் எதிர்காலம் என திசைகள் மாறிய பயணம் ஆரம்பமாகின்றது. 

அந்த வகையில் சிலர் பழமைவாத  கட்சிக்கு ஆதரவு தர விரும்புகிறார்கள். 

அடுத்த தலைமுறையினர்  பசுமை கட்சியை விரும்புகிறார்கள். 

என்ன நடந்தாலும், அமெரிக்க அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை வைத்தே கனடா முக்கிய முடிவுகளை எடுக்கும். ஆகவே, 2020 கார்த்திகையில் தான் கனடாவின் தேர்தலும் கூட !

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.