Jump to content

கலைந்த வேசமும் களைத்த தேசமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கலைந்த வேசமும் களைத்த தேசமும்

Editorial / 2019 ஒக்டோபர் 09 புதன்கிழமை, பி.ப. 01:20 Comments - 0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடனான சந்திப்பின்போது, “ஒளிவு மறைவு இல்லாது மக்களுக்கு அறிவியுங்கள்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்து உள்ளார். ஐ.தே.க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக முன்வைக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில், வடக்கு - கிழக்குத் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்ன என்பதை, நாட்டு மக்கள் மத்தியில், ஐ.தே.க வௌிப்படையாக அறிவிக்க வேண்டும் என்பதே, சம்பந்தனின் மேற்குறிப்பிட்ட  கோரிக்கையே யாகும்.இதையே, இன்று தமிழ் மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.   

ஆனால், யதார்த்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ, ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவோ, ஏன் ஒட்டுமொத்த ஐ.தே.கவோ, தமிழ் மக்களது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வுத் திட்டத்தை வழங்க மாட்டார்கள். சிலவேளை, அவ்வாறு விருப்பமிருந்தாலும் அதனை அவர்களால் வெளிப்படுத்தவும் முடியாது.  

இதுவே, இலங்கையின் 70 ஆண்டு காலக் கறைகள் படிந்த அரசியல் வரலாறு ஆகும். ஏனெனில், தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்கின்ற அரசியல் தீர்வை, ஐ.தே.க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தினால், அதுவே அவர்களுக்கான சாவு மணி ஆகும். அதாவது, ‘தடியைக் கொடுத்து அடி வாங்கியதற்குச் சமம்’ ஆகும்.  

அவ்வாறு நடந்தால், “தமிழ் மக்களுக்கு ஈழம் வழங்க உள்ளார்கள்; தனி நாடு வழங்க உள்ளார்கள்; அன்று புலிகளது ஆயுதங்களால் ஆற்ற முடியாததை, இன்று கூட்டமைப்புப் பெற்றுக் கொள்ள உள்ளது” என விசம் கலந்து, எதிர்த்தரப்பால் சிங்கள மக்களுக்குப் பொருள் மாற்றி ஊட்டப்படும்.  

இதனால், ஐ.தே.க நம்பி உள்ள கணிசமான பௌத்த சிங்களப் பெரும்பாண்மை வாக்குகளை இழக்க நேரிடும். விளக்கைப் பிடித்துக் கொண்டு, கிணற்றில் வீழ்ந்த கதையாக, ஐ.தே.கவுக்கு அமையும். இது ஐ.தே.கவுக்கு என அல்ல; மாறாக, பொதுஐன பெரமுனவுக்கும் ஏற்புடையதே.   

இதிலிருந்து இலகுவாக விளங்கிக் கொள்வது யாதெனில், பெரும்பான்மைச் சிங்கள மக்களைத் திருப்திப்படுத்த வேண்டுமெனின், சிறுபான்மைத் தமிழ் மக்களை, அவர்களது நியாயமான கோரிக்கைகளை அதிருப்திக்கும் அவதிக்கும் உள்ளாக்க வேண்டும் என்பதாகும்.  

தற்போது தேர்தல்க் காலம்; ஜனாதிபதி வேட்பாளர்கள், தங்களது பரப்புரைகளில், பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவோம்; வேலைவாய்ப்பைப் பெருக்குவோம்; நாட்டைச் சுபீட்சமாக்குவோம் எனப் பொதுவான வாக்குறுதிகளை வழங்குகின்றார்கள்.  

மாறாக, இனப்பிரச்சினையே எமது நாட்டின் மூலப்பிரச்சினை. அதை முதலில் நாம் எல்லோரும் கூடி, ஒற்றுமையாகத் தீர்ப்போம்; அது தீர்க்கப்பட்டால், ஏனைய பிரச்சினைகள் தானாகவே தீர்ந்து விடும் என, எவரும் வெளிப்படையாகவும் விருப்பத்துடனும் தெரிவித்ததாகத் தெரியவில்லை; தெரிவிக்கவும் மாட்டார்கள்.  

இனப்பிரச்சினை ஏதோ, தமிழ் மக்களுக்கு மட்டுமே சொந்தமான பிரச்சினை போலவும் 2009 போர் நிறைவு பெற்றதன் பின்னர், அதுவும் தீர்க்கப்பட்டு, இலங்கை அனைத்திலும் தன்நிறைவு பெற்ற நாடு போலவுமே, சிங்கள மக்களுக்குக் காட்சிகள் காண்பிக்கப்பட்டு வருகின்றன.  

நிலைமைகள் இவ்வாறிருக்க, கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் 25 இலட்சம் இளைஞர்கள், நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள் எனவும் அவர்களில் கணிசமானோர், நாட்டுக்கு மீள வரமாட்டார்கள் எனவும் மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறி உள்ளார்.  

பத்து ஆண்டுகளில் 25 இலட்சமெனின், ஓர் ஆண்டுக்குச் சராசரியாக இரண்டரை இலட்சம் எனவும் தினசரி 694 இளைஞர்கள் எனவும் இவ்வாறு இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறிக் கொண்டு இருப்பதாவது, நாடு எத்திசையை நோக்கிப் பயணிக்கின்றது என்பதை ஊகிக்கவேண்டி இருப்பதாகவும் தெரித்திருக்கின்றார்.  

அதாவது, ஒரு நாட்டின் முதுகெலும்பான இளைஞர் படை, போர் ஓய்ந்த வேளையில் இருந்து, ஓயாது புலம்பெயர்ந்து கொண்டு இருக்கின்றது; வீழ்ந்து போய்க் கிடக்கின்ற நாட்டை, மீளத் தூக்கி நிறுத்த வேண்டிய பொறுப்புடைய இளைஞர்கள், நாட்டை விட்டு வெளியேறத் துடித்துக் கொண்டு இருக்கின்றார்கள்; ஒவ்வொரு இளைஞனின் இலட்சியக் கனவும் வௌிநாடு செல்லதாகவே இன்று மாறி உள்ளது.  

இதனைத் தமிழ் மக்களின் பார்வையிலும் சிங்கள மக்களின் பார்வையிலும் இருவிதமாக நோக்கலாம். 2009இல் போர் ஓய்ந்தாலும், தமிழ் மக்களின் மனங்கள் இன்னமும் போராடிக் கொண்டே இருக்கின்றன. போருக்குள் வாழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதாவது, போர்க்காலக் கவலைகள், நிழல்கள் போலக் கூடவே அவர்களுடன் உயிர்வாழுகின்றன.   

தாங்கள் விரும்புகின்ற அரசியல்த் தீர்வு, அமைதியானதும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் அற்றதுமான, இனிய சுதந்திர வாழ்வு தங்களுக்குக் கிடைக்கும் என்ற சிறு நம்பிக்கை ஒளிக்கீற்றுக் கூட, அற்ற தமிழ்ச் சமூகமே இன்று வடக்கு, கிழக்கு மண்ணில் சீவிக்கின்றது.  

இந்நிலையில், நிரந்தரமாக வெளிநாடு செல்வதற்கு ஏதாவது சந்தர்ப்பங்கள் கிடைத்தால், ஓடித் தப்புவோம் என்றே தமிழ் மக்கள் ஏங்குகின்றார்கள். 

இந்நாட்டின் மூத்த குடி மக்களாக இருந்தாலும், இங்கு இரண்டாந்தரப் பிரஜையாக இருப்பதைக் காட்டிலும், வேற்று நாட்டில் குடியேறி முதல்த் தரப் பிரஜையாக, கௌரவமாக வாழ விரும்பும் தமிழர்களின் எண்ணம் நியாயமானதே.  

குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் புள்ளிவிவரங்களின் பிரகாரம், நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ஆகாரம் மற்றும் ஏனைய தேவைகளுக்காக 50 ஆயிரத்து 500 ரூபாய் தேவைப்படுகின்றது என, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ அண்மையில் தெரிவித்து உள்ளார்.  

ஆனால், ஓர் எடுத்துக்காட்டாக, பல்கலைக்கழகப் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்து, அரச நிறுவனங்களில் பணியாற்றும் பட்டதாரி அலுவலர்கள், மாதாந்த மொத்தச் சம்பளமாக சராசரியாக நாற்பது ஆயிரம் ரூபாய்க்கும்  உட்பட்ட தொகையையே பெறுகின்றார்கள்.  

இவ்வாறானவர்கள், தங்களது குடும்பங்களைப் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே கொண்டு நடத்துகின்றார்கள். அவர்களும் தங்களது அறிவு, ஆற்றல், அனுபவத்துக்கு ஏற்றமாதிரியாகத் தொழில்வாய்ப்புகள் வெளிநாடுகளில் கிடைக்கும் சந்தர்ப்பங்களில், அங்கு சென்று குடியேறவே விரும்புகின்றார்கள்.  

இவ்வாறாக, நாட்டை விட்டு நிரந்தரமாகப் புலம்பெயர்பவர்கள் சிறிது காலத்தின் பின்னர், தங்களது வாழ்க்கைத் துணையையும் (கணவன் அல்லது மனைவி) பிள்ளைகளையும் தாங்கள் வதியும் நாடுகளுக்கு வரவழைத்துக் கொள்கின்றார்கள்.  

இந்நிலையில், இவர்களது வயது முதிர்ந்த பெற்றோர் காலப்போக்கில் கவனிக்க ஆட்களற்று, முதியோர் இல்லங்களில் தங்க வேண்டிய நிலையும் அநாதரவான நிலையில் சொந்த ஊரையும் உறவையும் பிரிந்து, ஊர் ஊராகத் திரிய வேண்டிய நிலை போன்ற சமூகப் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன.  

துயரங்களிலும் துயரமாக, வீட்டுப்பணிப் பெண்களாகப் பல்லாயிரம் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றார்கள். இவர்களது வெளியேற்றம், அவர்களது குடும்பங்களுக்கும் நாட்டுக்கும் அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருகின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.  

அதேவேளை, பல்வேறு வழிகளிலும் சமூக கலாசாரச் பின்னடைவுகள் ஏற்படவும் வழி வகுக்கின்றது. தங்களது தனிப்பட்ட கனவுகளைத் துறந்து, குடும்பத்துக்காகவே சிரித்த முகத்துடன் செல்லும் இவர்களில் சிலர், மூடிய பிரேதப்பெட்டிகுள் வீடு வந்து சேர்வதும், வராது விடுவதுமாகவும் சோகங்கள் தொடர்கின்றன.  

மேலும், வைத்தியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் எனக் கணிசமான துறைசார் அரச ஊழியர்கள், மாறி மாறித் தங்களது சம்பள உயர்வு தொடக்கம், ஏனைய உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனப் பணிப்புறக்கணிப்புகளை நடத்தி வருகின்றனர்.  

நாட்டின் உள்ள அரச செயலகங்களுக்கு முன்பாக, வேலை வழங்குமாறு வேலையற்ற பட்டதாரிகள் போராட்டங்கள் நடத்துகின்றார்கள். இதைவிடப் பட்டதாரிப் பயிலுநர்களாக மாதாந்தம் 20,000 ரூபாய் கொடுப்பனவுகளுடன் நியமிக்கப்பட்ட பட்டதாரிகள், “எங்களது படிப்புக்கு இதுவா சம்பளம்; இதுவா வேலை” என உள்ளூரப் புழுங்குகின்றார்கள்.  

இதைவிடக் கொழும்பு மத்திய ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள பகுதி, ஆர்ப்பாட்டங்களுக்கும் உண்ணாவிரதங்களுக்கும் ஒதுக்கப்பட்ட பிரதேசம் போல ஆகிவிட்டது. தினசரி ஏதாவது ஆர்ப்பாட்டங்களும் அடையாள உண்ணாவிரதங்களும் நடைபெற்று வருகின்றன. கொட்டகைகள் அமைத்து, கோரிக்கைகள் தாங்கிய பதாதைகளைக் கையில் ஏந்தியவாறு, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.  

வரலாறு, விந்தைகள் நிறைந்த விடயம் ஆகும். அதிலிருந்து நாம், எங்கள் நாட்டின் எதிர்காலத்தை எப்படித் தீர்மானிக்க வேண்டும் எனவும், எப்படித் தீர்மானிக்கக் கூடாது எனவும் தீர்மானிக்க வேண்டும். ஆனால், வரலாற்றையே தீர்மானிக்கின்றவர்கள் (இளைஞர்கள்) நாட்டை விட்டு ஓடிக் கொண்டு இருக்கின்றார்கள்.  

‘ஆசியாவின் ஆச்சரியம்’ எனவும் மைத்திரி ஆட்சி ‘பேண்தகு யுகம்’ எனவும் நல்லிணக்கத்துக்கு ஊடாக வளமானதும் வளமிகுந்ததுமான எதிர்காலம் எனப் போடப்பட்ட கோசங்கள், வெறும் வெற்றுக் கோசங்கள் என ஆகி விட்டன.  

“புலிகளும் அவர்களது பயங்கரவாதமுமே நம்நாட்டைக் குட்டிச்சுவராக்கி வருகின்றன. அவர்கள் மட்டும் ஒழிந்தால் நாடு எல்லா விதத்திலும் ஒளிரும்” எனக் கூறினார்கள்; உலகமே நம்பியது. 
ஆனால், புலிகள் இல்லாத பத்து ஆண்டுகள் கடந்தும் தீர்வும் இல்லை; நாட்டில் ஒளி ஏற்றவும் முடியவில்லை. அவ்வாறெனின், பிரச்சினை எங்கு உள்ளது?  

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கலைந்த-வேசமும்-களைத்த-தேசமும்/91-239723

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.