Jump to content

கோட்டா வெற்றிபெற நாக காளி அம்மன் ஆலயத்தில் விசேட யாக பூஜை செய்த முன்னாள் எம்.பி!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Lara said:

ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்தது அமெரிக்காவுக்கு நல்லது.

வடகொரியா, ஈரானுடன் ட்ரம்ப் யுத்தத்துக்கு போனால் வரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள அவருக்கு திராணி இல்லாமல் அவற்றுடன் போர் தொடங்காமல் இருக்கவில்லை. 

ட்ரம்புக்கு போர் தொடங்க விருப்பமில்லை. ஆனால் பின்னால் போர் தொடங்க அழுத்தம் கொடுக்கிறார்கள்.

இதை நீங்களோ, நானோ இப்போ சொல்ல முடியாது ஆனால் அமேரிக்கவின் உலக ஆளுமை முடிவுக்கு வருகிறது. அதன் ஆரம்ப்பபுள்ளி, தொடக்கி வைத்தவர் என வரலாறு டிரம்பை குறிக்கும். 50 வருடத்தில் யார் சரி எனப்பார்ப்போம் 😂

Link to comment
Share on other sites

7 minutes ago, goshan_che said:

இதை நீங்களோ, நானோ இப்போ சொல்ல முடியாது ஆனால் அமேரிக்கவின் உலக ஆளுமை முடிவுக்கு வருகிறது. அதன் ஆரம்ப்பபுள்ளி, தொடக்கி வைத்தவர் என வரலாறு டிரம்பை குறிக்கும். 50 வருடத்தில் யார் சரி எனப்பார்ப்போம் 😂

கோஷான்,

அமெரிக்கா எப்பொழுதோ வீழ்ந்து விட்டது. John F. Kennedy அமெரிக்காவை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர நினைத்ததால் அவரை கொன்று விட்டார்கள். அவருக்கு பின் வந்த அனைத்து ஜனாதிபதிகளும் puppet ஆக இருந்தார்கள்.

ட்ரம்ப் ஓரளவு சுழித்தோடுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

ட்ரம்ப் ஜனாதிபதியாக வந்தது அமெரிக்காவுக்கு நல்லது.

வடகொரியா, ஈரானுடன் ட்ரம்ப் யுத்தத்துக்கு போனால் வரும் பின்விளைவுகளை எதிர்கொள்ள அவருக்கு திராணி இல்லாமல் அவற்றுடன் போர் தொடங்காமல் இருக்கவில்லை. 

ட்ரம்புக்கு போர் தொடங்க விருப்பமில்லை. ஆனால் பின்னால் போர் தொடங்க அழுத்தம் கொடுக்கிறார்கள்.

யுத்தத்தை விரும்பாது அமெரிக்கா ஒருபோதும் இல்லை 
அமெரிக்க அரசு அரசியல்வாதிகளை கட்டுப்பாடில் வைத்திருப்பது 
ஆயுதஉற்பத்தியாளர்கள்தான்  அவர்களுக்கு எப்போதும் போர் நடந்துகொண்டே இருக்க வேண்டும்.

ட்ரம் விரும்பி விரும்பாமல் போர் நடக்கும் அளவுக்கு வட கொரியாவோ ஈரானோ இல்லை 
ஈராக் போர் என்பதுக்கு வழி திறந்து விட்டதே  ஆயுத பரிசோதனைக்கு சதாம் ஐ நா வை 1992இல் 
விட்டதுதான் அன்றில் இருந்து போர் நடந்த 2003 வரை ஆயுத பரிசோதனை என்ற பெயரில் ஈராக்கை 
வேவுபார்த்து மூலை முடுக்கெல்லாம் தகவல் திரட்டிய பின்னரே போர் தொடங்கியது.

ஈரான் வட கொரிய நிலைமை அப்படி இல்லை ... வட கொரியாவோடு போருக்கு போகும் நிலையில் 
பிராந்தியம் இல்லை தென் கொரியாவோ ஜப்பானோ அதை இறுதிவரை எதிர்த்தே தீரும் ... அழிவு என்பது 
இந்த இரு நாடுகளுக்கும் உறுதியானது ... அதைவிட முக்கிய விடயம் சீனாவின் பலத்தை சோதிக்கும் யுத்த களமாக அது இருப்பதால் .. என்ன வகையான ஆயுதங்கள் அங்கிருந்து வரும் என்பது யுத்தம் தொடங்குமட்டும் யாருக்கும் தெரியாது.

ஈரானுக்கும் கிட்ட தட்ட அதே நிலைதான் ரஸ்யாவின் இறுதி ஆதரவு நாடு ஈரான்தான் 
இதிலும் தோல்வியை சந்திக்க ரஸ்யா ஒருபோதும் விரும்பாது  சிரியா போர் முடிந்தால் அடுத்தது ஈரான் 
எனும் நிலை இருக்கும்போதுதான் யாரும் எதிர்பாராத விதமாக ரஸ்யா நேரடியாகவே சிரியாவுக்குள் சென்றது  அது யாரும் எதிர்பார்த்திராத திருப்பம். எல்லாவற்றையும் ஆயுத உதவியுடன் தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த  ரஸ்யா தொடர்ந்தும் அதேயே செய்யும் என்றுதான் அமேரிக்கா நினைத்து லிபியா போல  போரை தொடங்கியது ......இன்று 7 வருடங்களுக்கு மேல் ஆகியும் இவர்களுக்கு சாதகமான நிலை ஒன்றும் இல்லை  இறுதியாக தாமே ஐஸ்ஸ் சை அழித்ததுதான் செய்த வேலை. 

ட்ரம் இல்லை அவரது ஆட்டுக்குட்டி விரும்பினாலும் வட கொரியா / ஈரான் மீதான போர் ஒன்றில் அணுவாயுத போர்  அல்லது அதை பற்றி இனி அலட்டிகொள்ள ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மை நிலை. 

Link to comment
Share on other sites

21 hours ago, Maruthankerny said:

நீங்கள் சொல்ல வருவது எல்லாம் உண்மைதான் 
ஆனால் பொருளாதார ரீதியான பார்வை குறைவாக இருக்கிறது 
மகிந்த அண்ட் கோ இந்தியாவையோ அமெரிக்காவையே எதிர்க்கும் நிலையில் இல்லை 
எதிர்க்க போவதும் இல்லை.

ஆனால் சீனாவுடன் சேர வேண்டியது என்பது தவிர்க்க முடியாதது 
இவர்கள் ஜனாதிபதியாக துடிப்பதே பணத்துக்குத்தான் ... நீங்கள் ஒருவரும் 
இவர்களிடம் சிக்குண்டு கிடக்கும் கறுப்பு பணம் பற்றி சிந்திக்கிறீர்கள் இல்லை 
இவர்களுடைய நிலை வர வர மோசமாகிக்கொண்டே போகிறது ... எந்த பணத்தையும் 
வெள்ளையாக்க கூடிய மாதிரி சூழல் இவர்களுக்கு அமையவில்லை 
ஒரு சிறு தொகையை லைக்கா போன்ற நிறுவனங்கள் ஊடாகவும் சில சீனாவின் சிலுமிச்சங்காளாலும் 
வெள்ளையாக்குகிறார்கள். பணம் முதலீடு இன்றி தேங்கி கிடப்பது என்பதும் நஷ்ட்டத்துக்கு 
சமமானதுதான் காரணம் காலம் ஓடிக்கொண்டே இருக்கும், ஆட்டையை போட்ட பணம் என்றாலும் 
இனி அது அவர்களுடைய சொத்து .. அதில் கண்ணும் கணக்குமாகவே இருப்பார்கள். 

இன்னொரு உலக பொருளாதார சரிவு என்பதும் நெருங்கிக்கொண்டு இருக்கிறது 
இவை எல்லாம் எமக்கு சாதகமாக அமையலாம் என்பதே எனது கணிப்பு.  

இதிலுள்ள உண்மைகள் குறுகிய, சுயநல சிந்தனைகள் கொண்டவர்களுக்கு விளங்காது.

 

Link to comment
Share on other sites

8 hours ago, Maruthankerny said:

ஈராக் போர் என்பதுக்கு வழி திறந்து விட்டதே  ஆயுத பரிசோதனைக்கு சதாம் ஐ நா வை 1992இல் 
விட்டதுதான் அன்றில் இருந்து போர் நடந்த 2003 வரை ஆயுத பரிசோதனை என்ற பெயரில் ஈராக்கை 
வேவுபார்த்து மூலை முடுக்கெல்லாம் தகவல் திரட்டிய பின்னரே போர் தொடங்கியது.

ஈராக்கில் WMD உள்ளது என பொய் சொல்லி தான் 2003 இல் போர் தொடங்கினார்கள். இறுதியில் இல்லை என்றே முடிவானது.

ட்ரம்ப் கூட புஷ்ஷை வெளுத்து வாங்கினார். 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2019 at 2:24 AM, Lara said:

ஈராக்கில் WMD உள்ளது என பொய் சொல்லி தான் 2003 இல் போர் தொடங்கினார்கள். இறுதியில் இல்லை என்றே முடிவானது.

ட்ரம்ப் கூட புஷ்ஷை வெளுத்து வாங்கினார். 😀

 

 

Link to comment
Share on other sites

4 hours ago, Maruthankerny said:

 

நீங்கள் ஏன் எனது கருத்தை quote பண்ணி ஒரு பகுதியை சிவப்பில் அடையாளப்படுத்தியுள்ளீர்கள் என அறியலாமா?

அக்கருத்தை ஏற்கிறீர்களா மறுக்கிறீர்களா?

இதிலும் சில விபரங்கள் உள்ளன. விரும்பினால் வாசியுங்கள்.

https://www.wsws.org/tamil/articles/2005/jan/260105_WMD_p.shtml

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.