Jump to content

காணாமல் போன கணவன் பற்றி தகவல் தாருங்கள் ; கைக்குழந்தையுடன் கணவனை தேடி அலையும் முல்லைத்தீவு பெண் !


Recommended Posts

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடொன்று  பதிவு செய்யப்பட்டுள்ளது .

 

IMG_5642_1600_1067.JPG

புதுக்குடியிருப்பு கோம்பாவில் இரண்டாம் வட்டாரத்தினை சேர்ந்த விஜயரட்ணம் தனுசன் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தர் கடந்த 07.10.2019 இரவு புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று சாப்பாடு வாங்கிவருவதாக மனைவிக்கு சொல்லிவிட்டு சென்ற நிலையில் வீடுதிரும்பவில்லை இவர் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மற்றும் தலைக்கவசம் என்பன அருகில் உள்ள ஒழுங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன .

 

thanushan.jpg

தனது கணவர் காணாமல் போனது பற்றி கருத்து தெரிவித்த மனைவி  கராத்தே வகுப்புகளை நடத்திவரும் எனது கணவர்  சமூக செயற்பாட்டாளராவார். போரால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு உதவி திட்டங்களை பெற்று  வழங்கி வரும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருபவர். எமக்கு ஐந்து வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கின்றார். 

மற்றைய குழந்தை பிறந்து 39 நாட்கள் தான் ஆகின்றன. எனது கணவரிடம் அடிக்கடி அரச புலனாய்வாளர்கள் வீட்டுக்கு வந்தும் வெளியில் அழைத்தும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காணாமல் போயுள்ளார் . கைக்குழந்தையுடன் எனது கணவரை தேடி அலைகின்றேன் . எனது கணவரை பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள். எனது தொலைபேசி இலக்கம் 0778116528 என வேண்டுகோள் விடுத்துள்ளார் .

accident.jpg

இந்தநிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ்  நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட  முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர் . இந்த சம்பவம் குறித்து  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறையிடவுள்ளதாக காணாமல் போயுள்ளவரின் மனைவி தெரிவித்துள்ளார் .

https://www.virakesari.lk/article/66548

Link to comment
Share on other sites

ரணில் / மைத்திரி ஆட்சியிலும் வெள்ளைவான் இல்லாவிட்டாலும், தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டவண்ணம் தான் உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத  யாரும் pipe dream என  சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறகென்ன எம்மக்களின் அழிவு நீங்கள் ஆசைப்பட்ட மாரியே துரிதமாகிறது. கோட்ட வர முன்னமே இப்படி.

உடனடியாக உங்கள் சர்வதேச வலைப்பின்னலை அவிழ்துவிட்டு, இந்த விடயத்தில் சர்வதேச அழுத்தம் கொடுக்கலாமே?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

பிறகென்ன எம்மக்களின் அழிவு நீங்கள் ஆசைப்பட்ட மாரியே துரிதமாகிறது. கோட்ட வர முன்னமே இப்படி.

உடனடியாக உங்கள் சர்வதேச வலைப்பின்னலை அவிழ்துவிட்டு, இந்த விடயத்தில் சர்வதேச அழுத்தம் கொடுக்கலாமே?

 

அம்பனை தான் தெளிவாக சொல்லியிருக்கிறாரே? இப்படி தெட்டந்தெட்டமாக நடந்தால் சர்வதேச சமூகம் கேட்காதாம்! பெரிய அளவில் கூட்டம் கூட்டமாக சாவதும் காணாமல் போவதும் நடந்தால் தான் கேட்குமாம்! உங்களுக்குப் புரியவில்லை! 😎

 

5 hours ago, kalyani said:

இத  யாரும் pipe dream என  சொல்ல மாட்டார்கள் என நினைக்கிறேன்.😆

Pipe dream என்பதற்கு என்ன அர்த்தம் என்றாவது தெரியுமா? உங்கள் கருத்தைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியாது என்று தான் படுகிறது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Justin said:

அம்பனை தான் தெளிவாக சொல்லியிருக்கிறாரே? இப்படி தெட்டந்தெட்டமாக நடந்தால் சர்வதேச சமூகம் கேட்காதாம்! பெரிய அளவில் கூட்டம் கூட்டமாக சாவதும் காணாமல் போவதும் நடந்தால் தான் கேட்குமாம்! உங்களுக்குப் புரியவில்லை! 😎

 

Pipe dream என்பதற்கு என்ன அர்த்தம் என்றாவது தெரியுமா? உங்கள் கருத்தைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியாது என்று தான் படுகிறது! 

 

 

ஏன் இப்போ ஆங்கிலத்தை உங்கசளூக்கு எழுதி வைத்து விட்டார்களா??

Link to comment
Share on other sites

காணாமல் போன குடும்பஸ்தர் கண்டுபிடிப்பு -  கண்களை கட்டி கடத்தி சென்று தாக்கியதாக தெரிவிப்பு !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம்குடும்பஸ்தர் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் நேற்று இரவு (9)கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

20191009125744_IMG_5669.JPG

புதுக்குடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த தனுஷன் என்பவர் தற்காப்பு கலை ஆசிரியரும் சமூக செயற்பாட்டாளருமான இளம்குடும்பஸ்தரை காணவில்லை என தெரிவித்து அவரது மனைவியால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் குறித்த நபர் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கூழாமுறிப்பு எனும் இடத்தில் கண்கள் கட்டப்பட்ட நிலையில் வாகனம் ஒன்றில் ஏற்றி வரப்பட்டு தள்ளி வீழ்த்தப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய குடுபத்தினர் ஒட்டுசுட்டான் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த நபர் மீட்கபட்டு ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கபட்டு வீடு சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த நபரை இன்றையத்தினம் நடந்த சம்பவங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துள்ளனர்.  

அதன்படி சம்பவம் இடம்பெற்ற 7ஆம் திகதி இரவு உணவு வாங்கிக்கொண்டு வீடு செல்லும் வழியில் வாகனம் ஒன்றில் வந்த இனம்தெரியாத நபர்கள் தன்னிடம் வவுனியா செல்வதற்கான வழியை கேட்டு விட்டு தன்னை இழுத்து வாகனத்தின் உள்ளே போட்டு கண்களை கட்டி கொண்டு சென்றதாகவும் 45 நிமிடங்கள் வளைந்து வளைந்து சென்ற வாகனம் இறுதியில் ஒரு காட்டு பகுதியை போன்ற இடத்தில் உள்ள வீட்டு அறையொன்றில் தன்னை விட்டு அடைத்து விட்டு அடுத்தநாள் காலை அதாவது 8 ஆம் திகதி முதல் ஒருவர் தன்னை விசாரித்ததாகவும் நீ புலம்பெயர் புலிகளிடம் இருந்து நிதி பெறுகின்றாய் . நீ விடுதலை புலி ஆதரவாளர் என்று தாக்கியதாகவும் உண்மையை கூறு எவ்வாறு பணம் வருகின்றது என கேட்டு தொடர்ந்து இரண்டு நாட்களாக தாக்கியதாக குறித்த குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார். 

இறுதியாக நேற்று இரவு மீண்டும் வேன் ஒன்றில் ஏற்றி கண்களை கட்டி மீண்டும் 30 நிமிடங்கள் பயணித்து வீதி ஒன்றில் வானிலிருந்து உதைந்து வீழ்த்தி விட்டு சென்றுவிட்டாதகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருக்கின்றனர்.

https://www.virakesari.lk/article/66630

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, kalyani said:

 

 

ஏன் இப்போ ஆங்கிலத்தை உங்கசளூக்கு எழுதி வைத்து விட்டார்களா??

அர்த்தம் தெரியாமல் எந்த மொழியின் வார்த்தையையும் பாவிப்பது உங்களுக்கு அந்த மொழி தெரியவில்லை என்று தான் காட்டிக் கொடுக்கும்! அதுவே நடந்தது!

இந்த லட்சணத்தில் யாருக்கு எந்த மொழி எழுதி வைக்கப்பட்டிருக்கிறது என்று கவலை வேறா? போய் அர்த்தம் கண்டு பிடியுங்கள், பிறகு வந்து நீங்கள் பயன்படுத்தியது சரியா என்று யோசியுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, kalyani said:

pipe dream 

இப்படியென்றால், நிறைவேற்றமுடியாத கனவுகள் அல்லது சாத்தியமில்லாத ஆசைகள் என்றல்லவா பொருள்? எமக்குத் தெரிந்த சொற்களில் சொல்வதானால் கானல் நீரென்று கூடச் சொல்லலாம். 

இதை ஏன் இங்கே பாவித்தீர்கள் என்று கூறமுடியுமா? அல்லது இதற்கு வேறேதும் விளக்கம் இருக்கிறதா? அறிந்துகொள்ளக் கேட்கிறேன். 

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

இறுதியாக நேற்று இரவு மீண்டும் வேன் ஒன்றில் ஏற்றி கண்களை கட்டி மீண்டும் 30 நிமிடங்கள் பயணித்து வீதி ஒன்றில் வானிலிருந்து உதைந்து வீழ்த்தி விட்டு சென்றுவிட்டாதகவும் தெரிவித்துள்ளார்.

'அவர்கள்' மீண்டும்  வருவார்கள் 😞 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

a hope, wish, or dream that is impossible to achieve or not practical.

மேற்படி சம்பவத்தை ஜஸ்டின் அப்படி கூறி விடுவாரோ என கூறி இருந்தேன். அவர் நினைக்கிறார் தான் ஆங்கிலத்தை குத்தகை எடுத்து விட்டட்காக. சில நொடிகளில் கருத்து தெரியாவிட்டாலும் அதனை கண்டு பிடிக்கும் உலகில் நாம் வாழ்கிறோம் என விதண்டாவாதம் செய்யும் ஜஸ்டின் புரிந்து கொள்ள வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1 minute ago, kalyani said:

a hope, wish, or dream that is impossible to achieve or not practical.

மேற்படி சம்பவத்தை ஜஸ்டின் அப்படி கூறி விடுவாரோ என கூறி இருந்தேன். அவர் நினைக்கிறார் தான் ஆங்கிலத்தை குத்தகை எடுத்து விட்டட்காக. சில நொடிகளில் கருத்து தெரியாவிட்டாலும் அதனை கண்டு பிடிக்கும் உலகில் நாம் வாழ்கிறோம் என விதண்டாவாதம் செய்யும் ஜஸ்டின் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த பயனற்ற விதண்டாவாதத்தை ஆரம்பித்ததே "மகிந்த வந்தால் சர்வதேசம் தலையிடும் என்ற pipe dream ஐ 2005 இல் ஊக்குவித்தார்கள்.." என்ற என் வேறுதிரிக் கருத்தை இங்கே காவி வந்த நீங்கள் தான்!

சொல்லின் அர்த்தம் புரியாமல் பொருத்தமற்ற பின்புலத்தில் பயன்படுத்தி விட்டு இப்ப "உடனே தேடலாம், அதனால் பரவாயில்லை" என்ற அலட்சியம் உங்களை பல மொழிகளுக்குச் சொந்தக் காரராக மாற்றும் என நம்பலாம்! 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேறு திரி கருத்தை அல்ல. வேறு திரியில் பாவித்த சொல்லை என்பதை மழுப்பாமல் எழுத பழகுங்கள்.
நான் எழுதிய கருத்தினை விளங்க முடியாமல் இருப்பது தெரிகிறது,  மீண்டும் திரிகளில் விதண்டாவாதம் செய்வதை நிறுத்துங்கள்.😐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2019 at 5:55 PM, kalyani said:

வேறு திரி கருத்தை அல்ல. வேறு திரியில் பாவித்த சொல்லை என்பதை மழுப்பாமல் எழுத பழகுங்கள்.
நான் எழுதிய கருத்தினை விளங்க முடியாமல் இருப்பது தெரிகிறது,  மீண்டும் திரிகளில் விதண்டாவாதம் செய்வதை நிறுத்துங்கள்.😐

விடுங்கள் கல்யாணி, ஆங்கிலம் என்பது ஒரு மொழியே அது அறிவல்ல என்பது இங்கு பலருக்கு தெரிவதில்லை!

Link to comment
Share on other sites

1 hour ago, Eppothum Thamizhan said:

விடுங்கள் கல்யாணி, ஆங்கிலம் என்பது ஒரு மொழியே அது அறிவல்ல என்பது இங்கு பலருக்கு தெரிவதில்லை!

இந்த வசனம் சொல்வதற்கும. கேட்பதற்கும் இனிமையாக இருக்கலாம். ஆனால் அறிவியலில்  எந்த துறையை எடுத்தாலும் ஒரு அளவுக்கு மேல் கற்பதற்கு  தமிழில் நூல்கள் இல்லை என்பது தான் யதார்த்தம். தமிழை அறிவியல் மொழியாக மாற்றுவதற்கான முனைப்பு காட்டாமல்  வெறும் பழம் பெருமை பேசுவதில்  மட்டுமே தமிழ் மொழி அறிஞர்கள் தமது நேரத்தை  செலவு செய்யும் வரை இந்த நிலையே நீடிக்கும். அறிவியலை விடுங்கள் ஒரு தகவலை விரைவாக அறிய  சாதாரண மக்களுக்கு உதவும் விக்கிபிடியாவில் பெருமளவு கட்டுரைகள்  மற்றய மொழிகளில் பக்கம் பக்கமாக  இருக்க தமிழில்  இரண்டு அல்லது மூன்று பந்தியுடன் கட்டுரை முடிந்துவிடும்.  

இப்படி யதார்தத நிலை இருக்க “ஆங்கிலம் என்பது அறிவல்ல” என்ற கூற்று வெறும்  சப்பை கட்டு வாதமாகவே இருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, tulpen said:

இந்த வசனம் சொல்வதற்கும. கேட்பதற்கும் இனிமையாக இருக்கலாம். ஆனால் அறிவியலில்  எந்த துறையை எடுத்தாலும் ஒரு அளவுக்கு மேல் கற்பதற்கு  தமிழில் நூல்கள் இல்லை என்பது தான் யதார்த்தம். தமிழை அறிவியல் மொழியாக மாற்றுவதற்கான முனைப்பு காட்டாமல்  வெறும் பழம் பெருமை பேசுவதில்  மட்டுமே தமிழ் மொழி அறிஞர்கள் தமது நேரத்தை  செலவு செய்யும் வரை இந்த நிலையே நீடிக்கும். அறிவியலை விடுங்கள் ஒரு தகவலை விரைவாக அறிய  சாதாரண மக்களுக்கு உதவும் விக்கிபிடியாவில் பெருமளவு கட்டுரைகள்  மற்றய மொழிகளில் பக்கம் பக்கமாக  இருக்க தமிழில்  இரண்டு அல்லது மூன்று பந்தியுடன் கட்டுரை முடிந்துவிடும்.  

இப்படி யதார்தத நிலை இருக்க “ஆங்கிலம் என்பது அறிவல்ல” என்ற கூற்று வெறும்  சப்பை கட்டு வாதமாகவே இருக்கும். 

இது பல திரிகளில் எ.த மீள மீளச் சொல்லித்திரியும் ஒரு கருத்துத் தான்! அவர் ஆங்கிலம் தெரிந்தவர்களை விடத் தான் அறிவாளி எனச் சுட்டிக் காட்டப் பாவிக்கும் ஒரு கருத்தே ஒழிய வேறெதுவும் இல்லை!

ஆங்கிலம் மட்டுமல்ல, ஒருவருக்குத் தெரிகிற ஒவ்வொரு மேலதிக மொழியும் ஒரு ஜன்னலைத் திறந்து வைப்பது போலத் தான்! 

இப்போது கூகிள் மொழிபெயர்ப்பும் செயலிகளும் வந்த பின்னர் அவை அவசரத்திற்கு எந்த மொழியிலும் உதவலாம்! ஆனால், ஆங்கிலம் தெரியாததால் சிறிலங்காவில் தாம் படித்த படிப்பிற்குரிய வேலைகளைப் பெற முடியாமல் இருப்போர், ஒரு படிவம் நிரப்ப உதவி தேடுவோர்,  தமிழில் மட்டும் போலிப் பரியாரி மார் வெளியிடும் யுரியூப் வீடியோக்கள் மட்டுமே உலகம் என்று நம்புவோர், இது போன்றோரிடம் தான் ஆங்கிலம் மொழி மட்டுமா அல்லது அதற்கு மேலுமா என்று கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/10/2019 at 4:30 PM, kalyani said:

a hope, wish, or dream that is impossible to achieve or not practical.

மேற்படி சம்பவத்தை ஜஸ்டின் அப்படி கூறி விடுவாரோ என கூறி இருந்தேன். அவர் நினைக்கிறார் தான் ஆங்கிலத்தை குத்தகை எடுத்து விட்டட்காக. சில நொடிகளில் கருத்து தெரியாவிட்டாலும் அதனை கண்டு பிடிக்கும் உலகில் நாம் வாழ்கிறோம் என விதண்டாவாதம் செய்யும் ஜஸ்டின் புரிந்து கொள்ள வேண்டும்.

கல்யாணி,

நீங்கள் தந்துள்ள விளக்கம் சரிதான் ஆனால் இந்த வார்த்தையை நீங்கள் பாவித்த களம் (context) தப்பு.

Pipe dream என்பது நடந்த ஒரு விடயத்தை (ஆள் காணமல் போதல்) நடக்கவில்லை என மறுப்பதல்ல. 

Pipe dream என்பது நடக்க முடியாத ஒரு விடயத்தை நடக்கும் என நம்புவது.

தமிழில் இதற்கு தக்க வார்தைகளாக கானல் நீரை விடவும், “பகற்கனவு” அமையும் என்பதே என் கருத்து.

BJP forming the government in Tamil Nadu will remain a pipe dream for the RSS.

தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சி அமைப்பதென்பது RSSற்கு வெறும் பகற்கனவாகவே நிலைக்கும்.

மொழி ஒரு கருவி, அறிவல்ல.

ஆனால் எந்தக் கருவியையும் எப்படி கையாளுவது என்பதை கருவியோடு பரிச்சயம் உள்ளவர்களோடு பேசி அறிந்துதான் கையாள வேண்டும்.

கூகிளில் கார் ஓட்டுவது எப்படி என்ற புத்தகத்தை வாசித்துவிட்டு, கார் ஓட்ட முடியாதுதானே? மொழிகளும் அப்படித்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, tulpen said:

இந்த வசனம் சொல்வதற்கும. கேட்பதற்கும் இனிமையாக இருக்கலாம். ஆனால் அறிவியலில்  எந்த துறையை எடுத்தாலும் ஒரு அளவுக்கு மேல் கற்பதற்கு  தமிழில் நூல்கள் இல்லை என்பது தான் யதார்த்தம். தமிழை அறிவியல் மொழியாக மாற்றுவதற்கான முனைப்பு காட்டாமல்  வெறும் பழம் பெருமை பேசுவதில்  மட்டுமே தமிழ் மொழி அறிஞர்கள் தமது நேரத்தை  செலவு செய்யும் வரை இந்த நிலையே நீடிக்கும். அறிவியலை விடுங்கள் ஒரு தகவலை விரைவாக அறிய  சாதாரண மக்களுக்கு உதவும் விக்கிபிடியாவில் பெருமளவு கட்டுரைகள்  மற்றய மொழிகளில் பக்கம் பக்கமாக  இருக்க தமிழில்  இரண்டு அல்லது மூன்று பந்தியுடன் கட்டுரை முடிந்துவிடும்.  

இப்படி யதார்தத நிலை இருக்க “ஆங்கிலம் என்பது அறிவல்ல” என்ற கூற்று வெறும்  சப்பை கட்டு வாதமாகவே இருக்கும். 

நான் சொல்ல வந்தது ஆங்கிலம் என்பது ஒரு துறையை கற்பதற்கு பயன்படும்  கருவியே தவிர ஆங்கிலம் மட்டும் தெரிவதால் நீங்கள் துறைசார் வல்லுனர்களாக இருக்கமுடியாது என்பதே! அப்படிப்பார்த்தால் இங்கிலாந்தில் எல்லோரும் உங்களைப்போல் மேதாவியாக அல்லவா இருக்கவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Justin said:

இது பல திரிகளில் எ.த மீள மீளச் சொல்லித்திரியும் ஒரு கருத்துத் தான்! அவர் ஆங்கிலம் தெரிந்தவர்களை விடத் தான் அறிவாளி எனச் சுட்டிக் காட்டப் பாவிக்கும் ஒரு கருத்தே ஒழிய வேறெதுவும் இல்லை!

ஆங்கிலம் மட்டுமல்ல, ஒருவருக்குத் தெரிகிற ஒவ்வொரு மேலதிக மொழியும் ஒரு ஜன்னலைத் திறந்து வைப்பது போலத் தான்! 

இப்போது கூகிள் மொழிபெயர்ப்பும் செயலிகளும் வந்த பின்னர் அவை அவசரத்திற்கு எந்த மொழியிலும் உதவலாம்! ஆனால், ஆங்கிலம் தெரியாததால் சிறிலங்காவில் தாம் படித்த படிப்பிற்குரிய வேலைகளைப் பெற முடியாமல் இருப்போர், ஒரு படிவம் நிரப்ப உதவி தேடுவோர்,  தமிழில் மட்டும் போலிப் பரியாரி மார் வெளியிடும் யுரியூப் வீடியோக்கள் மட்டுமே உலகம் என்று நம்புவோர், இது போன்றோரிடம் தான் ஆங்கிலம் மொழி மட்டுமா அல்லது அதற்கு மேலுமா என்று கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்! 

நான்  எந்த திரியிலும் நான்தான் அறிவாளி என்று யாரையும் உங்களைப்போல்  மட்டம் தட்டுவதில்லை. ஆங்கில வார்த்தைகளை  பிரயோகிப்பதும் இல்லை. அதற்காக எனக்கு ஆங்கிலம் தெரியாதென்பதல்ல. 

எத்தனை வளர்ச்சியடைந்த, ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம் கட்டாயமாக தேவைப்படுகிறது.  அங்குள்ளவர்கள் யாரும் அறிவாளி இல்லையா?? ஒரு துறைசார் கல்வியை கற்கும் அளவிற்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதுமானதே. அதற்கு ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றிருக்க தேவையில்லை!!

பரியாரிகளின் youtube ஆ எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

On 10/10/2019 at 8:46 AM, ampanai said:

இறுதியாக நேற்று இரவு மீண்டும் வேன் ஒன்றில் ஏற்றி கண்களை கட்டி மீண்டும் 30 நிமிடங்கள் பயணித்து வீதி ஒன்றில் வானிலிருந்து உதைந்து வீழ்த்தி விட்டு சென்றுவிட்டாதகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருக்கின்றனர்.

இவ்வாறான சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மௌனமாக இருக்கவேண்டிய அடக்குமுறைக்குள் இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை. 

முடிந்தால், இந்த குடும்பத்திற்கு நீதி கேட்டு, இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் ஒரு  வசனமோ இல்லை இரண்டை பதிந்து விடுங்கள். 

sechrcsl@gmail.com

http://hrcsl.lk/english/contact-us/

பி.கு. நான் எனது பங்கிற்கு எழுதிவிட்டேன்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

7 hours ago, Eppothum Thamizhan said:

நான்  எந்த திரியிலும் நான்தான் அறிவாளி என்று யாரையும் உங்களைப்போல்  மட்டம் தட்டுவதில்லை. ஆங்கில வார்த்தைகளை  பிரயோகிப்பதும் இல்லை. அதற்காக எனக்கு ஆங்கிலம் தெரியாதென்பதல்ல. 

எத்தனை வளர்ச்சியடைந்த, ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம் கட்டாயமாக தேவைப்படுகிறது.  அங்குள்ளவர்கள் யாரும் அறிவாளி இல்லையா?? ஒரு துறைசார் கல்வியை கற்கும் அளவிற்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதுமானதே. அதற்கு ஆங்கிலத்தில் பாண்டித்தியம் பெற்றிருக்க தேவையில்லை!!

பரியாரிகளின் youtube ஆ எந்தக்காலத்தில் இருக்கிறீர்கள்?

நீங்கள் மேலே எழுதிய தவறான தகவலுக்கே என் பதில்! நான் ஆங்கில வார்த்தைகள் பிரயோகிப்பது சில நேரங்களில் அதற்கு இணையான தமிழ் சொற்கள் உடனே கிடைக்காததால் மட்டுமே! எனக்கு ஆங்கிலம் தெரியுமென்று இங்கே யாரிடமும் காட்டி சான்றிதழ் வாங்கும் நிலையை நான் தாண்டிக் கனகாலம்! உங்களுக்கு வேண்டுமான மொழியில் வேண்டுமான பாண்டித்தியத்தை வைத்திருப்பது உங்கள் உரிமை! ஆனால் , அதற்காக ஒரு மொழியில் பாண்டியத்திற்கும் அறிவுக்கும் தொடர்பில்லை என்று ஆய்வுகளில் நிரூபிக்காத தகவலை இங்கே பரப்புவது தவறு! ஆங்கிலம் அல்லது போதனை மொழியில் மட்டுப் படுத்தப் பட்டோரின் அறிவுத் திறன், கல்வி முன்னேற்றம் முதல் வேலை வாய்ப்பு என எல்லாமே பாதிக்கப் பட்டிருப்பதாகத் தான் ஏராளமான ஆய்வுகளின் முடிவு! நீங்களே இவற்றைத் தேடிப் பார்த்து முடிவு செய்து கொள்ளலாம்!

போலிப் பரியாரிகளின் யூரியூப்புகள் இங்கே இணைக்கப் பட்டு நீக்கப் படுகிற நிகழ்வுகள் பல நூற்றாண்டுகள் முன்பல்ல, சில மாதங்களாக நடப்பது தான்! அப்படி தூக்கப் படும் இணைப்புகளின் சொந்தக்காரர் தான் உங்கள் தவறான தகவலுக்கு பச்சை குத்தியிருக்கிறார்!  அப்டேற் ஆக வேண்டியது நீங்கள் தான்! நான் அல்ல!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

போலிப் பரியாரிகளின் யூரியூப்புகள் இங்கே இணைக்கப் பட்டு நீக்கப் படுகிற நிகழ்வுகள் பல நூற்றாண்டுகள் முன்பல்ல, சில மாதங்களாக நடப்பது தான்! அப்படி தூக்கப் படும் இணைப்புகளின் சொந்தக்காரர் தான் உங்கள் தவறான தகவலுக்கு பச்சை குத்தியிருக்கிறார்!  அப்டேற் ஆக வேண்டியது நீங்கள் தான்! நான் அல்ல!😎

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.