Jump to content

வானுயர்ந்து நிற்கும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி


Recommended Posts

125 ஆண்டுகள் வெற்றிப் பயணம்

காந்திமகானின் பாதம்பட்ட கல்விக்கூடம் கல்விமான்களை உருவாக்கிய சாதனைக் கல்லூரி

இலங்கை காலனித்துவ ஆட்சியின் கீழ் காணப்பட்ட போது சுதேச மதங்கள், அவற்றின் கலாசாரம், மொழி என்பன நலிவுற்றிருந்தன. ஆங்கிலேயர்கள் தமது மதத்தையும், கலாசாரத்தையும் பரப்புவதற்கு கல்வியை ஆயுதமாகப் பயன்படுத்தியிருந்தனர்.இலங்கை முழுவதும் பல கிறிஸ்தவ ஆங்கிலப் பாடசாலைகளை நிறுவி, அதன் மூலம் தமது மதத்தையும், தமது நாட்டு பண்பாடுகளையும் பரப்பியதோடு எமது மதங்களை நசுக்கவும் தொடங்கினர்.

இவ்வாறான நிலையில், இந்து மதத்தையும், தமிழ்மொழியையும், அதன் பண்பாடுகளையும் காப்பாற்றுவதற்கு ஆங்கிலேயர் பயன்படுத்திய ஆயுதத்தையே பயன்படுத்தி வடக்கே ஆறுமுக நாவலரும், கிழக்கே விபுலானந்தரும் இந்துப் பாடசாலைகளை அமைத்தனர். இவர்களது முயற்சியால் இந்து மதம் மீண்டும் புத்துயிர் பெற்று எழுச்சி பெறலாயிற்று. அது மாத்திரமின்றி தமிழ்மொழி, பண்பாடு என்பனவும் இப்பாடசாலைகளூடாக வளர்க்கப்பட்டன.

a14.jpg?itok=XGVUzww8

 

இவ்வாறு தோற்றம் பெற்ற பாடசாலைகளில் ஒன்றுதான்  யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி. இப்பாடசாலையை ஸ்தா பித்தவர்,    ஆறுமுகநாவலரின் பிரதம சீடரும், தமிழ்நாடு திருவாவடூதுறை ஆதீனம் நாவலர் பட்டம் வழங்கி கௌரவித்த நால்வரில் ஒருவருமான அம்பலவாண நாவலர் ஆவார்.

சித்தர்கள் வாழ்ந்து பெருமை பெற்ற ஊரான சித்தங்கேணியைச் சேர்ந்த இவர், 1894ஆம் ஆண்டு தனது பணத்தில், சொந்த நிலத்தில் ஓர் திண்ணைப் பாடசாலையாக இதனை அமைத்தார். அன்று திண்ணைப் பாடசாலையாக அமைக்கப்பட்ட இப்பாடசாலை, ஓர் நூற்றாண்டு கடந்து இரண்டாம் நூற்றாண்டிலும் கால் நூற்றாண்டை நிறைவு செய்து விருட்சமாய் உயர்ந்து நிற்கிறது.

இன்றைய தினத்துடன் (09.10.2019) 125ஆண்டுகளை நிறைவு செய்யும் இப்பாடசாலை வெறுமனே கல்வி போதிக்கும் கல்விச்சாலையாக மாத்திரமாக இல்லாமல் சுதேசிய எழுச்சியின் சின்னமாகவும் மிளிர்கிறது. தமிழ் கூறும் நல்லுலகம் எங்கும் 'தங்கத் தாத்தா' எனக் கொண்டாடப்படும், "ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே.." என்ற புகழ் பெற்ற சிறுவர் பாடலை எழுதிய நவாலியூர் சோமசுந்தரப் புலவர் நாற்பது ஆண்டுகளாக தமிழ் கற்பித்த பெருமை இப்பாடசாலைக்கு உண்டு.

அவர் மாத்திரமின்றி, கடந்து வந்த 125ஆண்டுகளிலும் பல ஆசிரியர்கள், அதிபர்கள் இப்பாடசாலையின் வளர்ச்சிக்காவும், மாணாக்கர்களது கல்விக்காகவும், இந்து மதத்தின், இனத்தின் பண்பாடுகளை பேணிப் பாதுகாக்கவும் தம்மை உருக்கி உழைத்திருக்கிறார்கள். இப்போதும்  பலர் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அகிம்சையை உலகுக்குப் போதித்த மாகாத்மா காந்தியும் தனது இலங்கை விஜயத்தின் போது இப்பாடசாலைக்கு வந்துள்ளமை சிறப்பம்சமாகும். இப்பாடசாலையில் கல்வி கற்ற பல்லாயிரம் மாணவர்கள் உலகம் முழுவதும் இப்பாடசாலையின் விழுதுகளாக இருக்கிறார்கள். இன்று இலங்கையில் இருக்கக் கூடிய பதினைந்து பல்கலைக்கழகங்களில் பதினான்கு பல்கலைகழகங்களிலும் இக்கல்லூரியின் மாணவர்கள் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

அதேநேரம் பல மாணவர்கள் நாட்டில் உயர் அரச பதவிகளிலும், நாட்டின் நிர்வாக சேவைகளிலும், பொறியியல், மருத்துவ, சட்டத் துறைகளிலும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். இது தவிர, புலம்பெயர் தேசங்களிலும் இக்கல்லூரியின் மாணவர்கள் பல துறைகளிலும் சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நூற்றாண்டு நிறைவுக்குப் பின்னர் இப்பாடசாலை பல்வேறு அரச திட்டங்களின் கீழ் உள்வாங்கப்பட்டு பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள் பலமிக்கதாக்கப்பட்டன. 'நவோதயா' திட்டத்தின் கீழும் அதனைத் தொடர்ந்து 'ஆயிரம் பாடசாலைகள் திட்டத்தின் கீழும் (இத்திட்டத்தின் கீழே ஆரம்பப் பிரிவு பாடசாலை தனியாக்கப்பட்டு இப்பாடசாலை தனியே உயர்தரப் பாடசாலையாக மாற்றமடைந்தது.) அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தற்போது சங்கானை கோட்டத்தில் 1AB Super Grade பாடசாலையாகவும் E- – Libary உள்ள ஒர் பாடசாலையாகவும் காணப்படுகிறது. இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால் இணையப் பரீட்சைகள் நடத்துவதற்கு தகுதி உடைய வளம் கொண்ட பாடசாலையாக இப்பாடசாலை தெரிவு செய்யப்பட்டு பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.

புதிதாக உயர்தரத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடமான தொழில்நுட்ப பாடத்திற்கென விஷேடமாக அமைக்கப்பட்ட ஆய்வுகூடத் தொழில்நுட்ப பீடம் காணப்படுவதுடன் உயர்தரத்தில் அனைத்து துறைகளுக்குமான கற்றல் கற்பித்தல் வகுப்பறைகளும், ஆசிரியர் வளமும் கொண்ட  பாடசாலையாகவும் காணப்படுகிறது.

தற்போது 1200மாணவர்களுக்கு மேல் கற்பதுடன் 66ஆசிரியர்களையும் 7கல்வி சாரா ஊழியர்களையும் கொண்டதாகக் காணப்படுகிறது. தேசிய பாடசாலை என்ற நிலைக்கு மிக அண்மையாகச் சென்றுள்ள நிலையில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையால் அந்நிலையை அடைவது தாமதப்படுகிறது. எனினும் எதிர்வரும் ஆண்டு தேசிய பாடசாலையாக இது தரமுயர்த்தப்படும் என்ற நம்பிக்கை பாடசாலை சமூகத்திடம் உள்ளது. 125ஆண்டுகளை நிறைவு செய்து உயர்ந்து நிற்கும் இப்பாடசாலையின் மாணவர்கள் எனக் கூறிக் கொள்வதில் இங்கு கற்ற ஒவ்வொரு மாணவரும் பெருமைப்படுகின்றனர். இன்னும் பல நூறு ஆண்டுகள் இப்பாடசாலை நிலைத்திருந்து கல்வியையும்,  இனத்தின் மொழி, பண்பாடு, தனித்துவங்களையும் வளர்த்திட வேண்டும் என பிராத்திப்போம்.

இந்துவின் முத்துக்கள் நாம் என்று உரக்கச் சொல்வோம் எப்போதும்.

ரி.விரூஷன்
(பழைய மாணவன்)  

http://www.thinakaran.lk/2019/10/09/கட்டுரைகள்/41749/வானுயர்ந்து-நிற்கும்-வட்டுக்கோட்டை-இந்துக்-கல்லூரி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அழகிய பாடசாலை, மேலும் பெரிய மைதானமும் கொண்டது. நன்றி அம்பனை.....!  👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.