Jump to content

தோல்வி அடைவதையே நோக்கமாகக் கொண்ட போலி வேட்பாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வி அடைவதையே நோக்கமாகக் கொண்ட போலி வேட்பாளர்கள்

எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஒக்டோபர் 09 புதன்கிழமை, பி.ப. 05:12 Comments - 0

இதுவரை கால வரலாற்றில், அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக, நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 பேர் கட்டுப்பணம் செலுத்திய போதும், 35 பேர் மட்டுமே நேற்று முன்தினம் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.   

இந்த 35 பேரில், பெரும்பாலானவர்கள் எதற்காகப் போட்டியிடுகிறார்கள் என்பதை, அவர்களால் மற்றவர்களுக்கு நியாயப்படுத்திக் கூற முடியுமா என்பது சந்தேகமே! அவர்கள், “வெற்றி பெற்று, நாட்டை ஆட்சி செய்வதற்காகவே தேர்தலில் போட்டியிடுகின்றோம்” எனக் கூறலாம். ஆனால், அவர்கள் வெற்றி பெறப்போவதில்லை என்பதை, அவர்கள் உட்பட, நாட்டில் சகலரும் அறிந்திருக்கிறார்கள்.  

இந்த 35 பேரில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி என்ற கூட்டணியின் சார்பில், தேசிய ஜனநாயக முன்னணியின் ‘அன்னம்’ சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாஸவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவும் மட்டுமே, உண்மையில் வெற்றி பெறும் நோக்கத்தில் போட்டியிடுகிறார்கள்.   

தமது இளைய சகோதரரான கோட்டாபயவின் பிரஜாவுரிமை விடயத்தில், இரண்டு சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பு, அவருக்குப் பாதகமாக அமைந்தால், மாற்று வேட்பாளராகப் போட்டியிடுவதற்காகவே, முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ கட்டுப் பணம் செலுத்தியிருந்தார். கடந்த வெள்ளிக்கிழமை, அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதால் சமல், திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை.  

வேட்புமனுத் தாக்கல் செய்தவர்களில் ‘தேசிய மக்கள் சக்தி’ என்ற கூட்டணியின் சார்பில் போட்டியிடும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவும் முன்னணி சோஷலிசக் கட்சியின் வேட்பாளரான துமிந்த நாகமுவவும் தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் காணப்படும் அரசியல் ஆர்வத்தைப் பாவித்துத் தமது கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பும் நோக்கில் போட்டியிடுகிறார்கள். இது இடதுசாரிக் கட்சிகளின் ஓர் உத்தியாகும்.  
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான கூட்டணி, “இம்முறை பத்து இலட்சத்துக்கும் மேல் வாக்குகளை எதிர்ப்பார்க்கின்றோம்” என்று கூறியிருக்கிறது. இதன் மூலம் தமது கட்சி, அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வரும் கட்சி என்ற செய்தியை, மக்களுக்கு வழங்குவதும் அம் முன்னணியின் மற்றொரு நோக்கமாகும்.  

ஏனைய வேட்பாளர்களில் சிலர், பிரதான இரு வேட்பாளர்களின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகப் போட்டியிடுகிறார்கள் என ஊகிக்கலாம். அதாவது, தாம் ஆதரவு வழங்கும் வேட்பாளருக்குச் சாதகமாகும் வகையில், மற்றைய பிரதான வேட்பாளருக்குக் கிடைக்கக்கூடிய வாக்குகளில் ஒரு சிலவற்றையாவது பெற்றுக் கொள்வதே, அவர்களின் நோக்கமாகும். 

ஏற்கெனவே, முன்னாள் இராணுவத் தளபதி மஹேஷ் சேனநாயக்கவை, கோட்டாவின் ஆதரவாளர்கள் அவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளனர். அதாவது, “கோட்டாவுக்குக் கிடைக்கக்கூடிய இராணுவத்தினரின் வாக்குகளில் ஒரு பகுதியைப் பெற்று, கோட்டா பெறும் வாக்குகளைக் குறைப்பதே, சேனநாயக்கவின் நோக்கம்” என, கோட்டாவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.  

ஒரு வேட்பாளருக்குச் சாதகமாக, வேறு சில வேட்பாளர்கள் களமிறங்குவது இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளது. சில வேட்பாளர்கள், பகிரங்கமாகவே தமக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் இன்னாருக்கு வாக்களியுங்கள் என்று, பகிரங்க மேடையில் கூறிய சந்தர்ப்பங்களும் உண்டு. 
வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் தொலைக்காட்சி நேரம் போன்ற சலுகைகளை, பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்காக, மேலதிகமாகப் பெற்றுக் கொடுப்பதே, இவ்வாறான ‘போலி’ வேட்பாளர்கள் களத்தில் இறங்குவதன் நோக்கமாகும்.  

வெற்றி பெறப் போட்டியிடுவோரும் அரசியல் பிரசாரத்துக்காகப் போட்டியிடுவோரும் இந்தப் ‘போலி’ வேட்பாளர்களும் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்கள், எதற்காகப் போட்டியிடுகிறார்கள் என்பது தெளிவில்லை. சகல தேர்தல்களிலும் போட்டியிடும் சிலரும் இருக்கிறார்கள்.  

சாதாரண சூழ்நிலையில், 4,000 அல்லது 4,500 மில்லியன் ரூபாய் ஜனாதிபதித் தேர்தலுக்காக செலவிடப்பட வேண்டியிருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்ததாகவும் வேட்பாளர்கள் அதிகரித்ததன் காரணமாக, அத்தொகை மேலும் 1,000 மில்லியன் ரூபாயால்  அதிகரிக்கலாம் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, கடந்த வாரம் கூறியிருந்தார். இந்தச் செலவைப் பொது மக்களின் வரிப் பணத்திலிருந்துதான் இறுதியில் செலுத்த வேண்டியிருக்கிறது.   ‘போலி’ வேட்பாளர்கள் களத்தில் இறக்கப்பட்டால், தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் அண்மையில் கூறியிருந்தார். 

ஆனால், ஒன்றில் இந்தப் ‘போலி’ வேட்பாளர்கள், தாம் ஆதரவு வழங்கும் பிரதான வேட்பாளரைப் பாராட்டிப் புகழ்ந்து பேசுவதற்காகத் தமது மேடைகளையும் தொலைக்காட்சி,  வானொலி நேரத்தையும் பாவிப்பார்கள்; அல்லது, தாம் எதிர்க்கும் பிரதான வேட்பாளரை விமர்சித்துப் பிரசாரம் செய்வார்கள். இதனைத் தேர்தல் ஆணைக்குழுவால் தடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.  

இந்தப் ‘போலி’ வேட்பாளர்களால், அவர்கள் ஆதரவு வழங்கும் வேட்பாளர் தவிர்ந்த ஏனைய வேட்பாளர்களுக்கு, அநீதி இழைக்கப்படுகிறது. 

தேர்தல்கள் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என்றே, ஜனநாயகத்தை விரும்பும் சகலரும் விரும்புகிறார்கள். ஆனால், இந்தப் ‘போலி’ வேட்பாளர்களால், தேர்தலின் ஆரம்பத்திலேயே நீதி பாதிக்கப்பட்டுள்ளது.  

அதேவேளை, கோட்டாவின் பிரஜா உரிமைப் பிரச்சினை தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர், அந்த வழக்கைத் தாக்கல் செய்த சிவில் சமூக ஆர்வலர்களான காமினி வியன்கொட, பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர ஆகியயோருக்கு எதிராகச் சமூக ஊடகங்கள் மூலம், மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது, தேர்தலின் சுதந்திரத் தன்மையையும் பாதிக்கும் நிலைமையாகும்.   

இதனைக் கோட்டா பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த எவரும், இன்னமும் கண்டிக்கவில்லை. இது, தேர்தல் சுதந்திரமாக நடைபெறுமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அதுமட்டுமல்லாமல், இது எதிர்கால ‘காட்டு தர்பார்’ ஆட்சியொன்றுக்கான அறிகுறியா என்ற அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.  

ஏற்கெனவே பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவரோ, பிரதமர் ஒருவரோ, எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரோ போட்டியிடாத தேர்தலாக, இம்முறை ஜனாதிபதித் தேர்தல் அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும். 

அதேவேளை, பிரதான இரு கட்சிகளின் வேட்பாளர்களும் தத்தமது கட்சிகள் தம்மை வேட்பாளராக நியமிக்கும் முன், தாமாக மேடையேறி, தத்தமது கட்சி, தம்மை வேட்பாளராக நியமிக்கும் நிலையை உருவாக்கிக் கொண்டவர்கள் என்பதும் முக்கிய அம்சமாகும். 

சஜித், கட்சிக்குள் போராடி வேட்பாளரானார். கோட்டா 2017 ஆம் ஆண்டு முதல், ‘எலிய’, ‘வியத் மக’ போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகளை நடத்தி, பொதுஜன பெரமுனவுக்குள் தாமே வேட்பாளர் என்றதோர் அபிப்பிராயத்தைக் கட்டி எழுப்பியிருந்தார்.  

நாட்டின் பிரதான கட்சிகளில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிலைமை மிகவும் பரிதாபகரமானதாக உள்ளது. அக்கட்சி, இந்தத் தேர்தலின் போது, என்ன செய்வது என்பதை, உத்தியோகபூர்வமாக இன்னமும் தீர்மானிக்கவில்லை.   

பொதுஜன பெரமுனவோடு இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்ள முயற்சித்த அக்கட்சி, அவ்வாறு முடியாது போனால், கட்சியின் வேட்பாளர் ஒருவரைப் போட்டியில் நிறுத்துவதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியிருந்தார். 

ஆனால், அக்கட்சியைச் சேர்ந்த எவரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை. பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர், தமது கட்சியின் சார்பில் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தாத முதலாவது சந்தர்ப்பம் இதுவேயாகும்.    

தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு எவ்வாறு அமைகிறது?

நாட்டிலுள்ள ஏறத்தாழ சகல பிரதான அரசியல் கட்சிகளும், ஜனாதிபதித் தேர்தல் களத்தில், தமது அணியைத் தற்போது தேர்ந்தெடுத்துள்ளன. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இன்னமும் தாம் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பதைப் பற்றி, எதையும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.   

தமது கட்சி, தேசிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் என, அக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சரவணபவன் தெரிவித்திருந்த போதிலும், அது, அக்கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடா என்பது இன்னமும் தெளிவில்லை.   

வழமையாக அக்கட்சியின் முக்கிய அறிவித்தல்களைக் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் அல்லது கட்சியின் ஊடகப் பேச்சாளர்  எம்.ஏ. சுமந்திரன் தான் அறிவிப்பார்கள். எவரும் எதிர்பார்க்காத முடிவொன்றைத் தமது கட்சி எடுக்கும் என்றே, சுமந்திரன் சில நாள்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.  

த.தே.கூ உத்தியோகபூர்வ அறிவித்தலொன்றை விடுக்காவிட்டாலும், அக்கட்சி சஜித்தை ஆதரிக்கும் வாய்ப்புகளே அதிகம் காணப்படுகின்றன. ஐ.தே.க தலைவர் ரணில் போட்டியிட்டு இருந்தால், தமிழ்க் கூட்டமைப்பு, எவ்வித தயக்கமுமின்றி அவரை ஆதரிக்கும். இப்போது, சஜித்தை ஆதரித்து, ரணில்  பிரசாரம் செய்து வரும் நிலையில், கூட்டமைப்பும் சஜித்தை ஆதரிக்கலாம்.   

ஏற்கெனவே, தென்பகுதியில் சகல தமிழ்க் கட்சிகளும் சஜித்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளன. அண்மைக் காலம் வரை, நிலைப்பாடொன்று இல்லாமல் ஊசலாடிக் கொண்டு இருந்த ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் சஜித்தை ஆதரிக்கும் வாய்ப்புகள் காணப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பிரதான முஸ்லிம் கட்சிகளான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, ஐ.தே.க வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருந்தன.   

சாதாரண தமிழ், முஸ்லிம் மக்களின் நிலைப்பாடே இக்கட்சிகள் இவ்வாறு சஜித்தை ஆதரிக்கக் காரணமாகியுள்ளன. 2015ஆம் ஆண்டுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சியில் இடம்பெற்ற இனவாதச் செயற்பாடுகளும் அவற்றுக்கான அவ்வரசாங்கத்தின் தலைவர்களின் வெளிப்படையான ஆதரவும் காரணமாகத் தமிழ், முஸ்லிம் மக்கள், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி, நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, ஒட்டுமொத்தமாக மஹிந்த தலைமையிலான கட்சியை எதிர்த்து வாக்களித்தனர். அந்த நிலைமை இன்னமும் மாறியதாகத் தெரியவில்லை.   

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, பொதுஜன பெரமுன பெற்ற அமோக வெற்றியின் பின்னர், முஸ்லிம்கள் சிலர் அக்கட்சியின் பக்கம் சாயும் நிலைமை உருவாகியிருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அதாவது உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள், இஸ்லாத்துக்கு எதிரான பிரசாரங்களில் பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளின் கைவரிசை காணப்பட்டதன் காரணமாக, அவ்வாறு சாய்ந்தவர்களில் பலர், மீண்டும் மஹிந்த விரோதிகளாக மாறிவிட்டனர்.  

தமிழர்கள், முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வரும் இணையத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களை அவதானிக்கும் போது, மஹிந்த தரப்பினருக்கு ஆதரவாக  எதுவும் அவற்றில் காணப்படுவதில்லை. ஊடகங்கள், தமது வாடிக்கையாளர்களின் நிலைப்பாட்டையே அனேகமாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அம் மக்கள் எந்த நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பது தெளிவாகிறது. 

எனவே, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதாக இருந்தால், அதே நிலைப்பாட்டைத் தான் எடுக்க வேண்டும். ஆனால், ஐ.தே.கவோடு இணைவதில் சிக்கல் உள்ள சில தமிழ், முஸ்லிம் கட்சிகளும் பெரிதாகத் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. சில கட்சிகளும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபயவை ஆதரிக்க முன்வந்திருக்கின்றன. அவற்றைக் காட்டியே, தமக்குத் தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு இருப்பதாகப் பொதுஜன பெரமுன கூறுகிறது. 

இம்முறை, இரண்டு தமிழ் வேட்பாளர்களும் மூன்று முஸ்லிம் வேட்பாளர்களும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் தேர்தல் முடிவுகளில் பெரிதாக ஏதும் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது சந்தேகமே. 

அவர்கள் பெறும் வாக்குகளால் சிறிதளவேனும் பாதிக்கப்படுவது சஜித் பிரேமதாஸவே. எனவே, அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ, திட்டமிட்டோ திட்டமிடாமலோ கோட்டாபய ராஜபக்‌ஷவே பயனடையப் போகிறார்.     

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தோல்வி-அடைவதையே-நோக்கமாகக்-கொண்ட-போலி-வேட்பாளர்கள்/91-239763

Link to comment
Share on other sites

தமிழர்கள், முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வரும் இணையத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களை அவதானிக்கும் போது, மஹிந்த தரப்பினருக்கு ஆதரவாக  எதுவும் அவற்றில் காணப்படுவதில்லை. ஊடகங்கள், தமது வாடிக்கையாளர்களின் நிலைப்பாட்டையே அனேகமாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அம் மக்கள் எந்த நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பது தெளிவாகிறது. 

இவ்வாறு கட்டுரையாளர் குறிப்பிடுவது போன்று ஊடகங்கள் இருந்தால், அது வருத்தப்பட வேண்டிய விடயம். காரணம், ஊடக தர்மம் என்பது செய்திகளை அவற்றின் உண்மை சார்ந்து மக்களுக்கு சொல்வது.

எனவே, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதாக இருந்தால், அதே நிலைப்பாட்டைத் தான் எடுக்க வேண்டும்.

கட்சிகள் தமது எதிர்காலத்திலேயே குறியாக உள்ளார்கள் 😞 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

தமிழர்கள், முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வரும் இணையத்தளங்கள் உள்ளிட்ட ஊடகங்களை அவதானிக்கும் போது, மஹிந்த தரப்பினருக்கு ஆதரவாக  எதுவும் அவற்றில் காணப்படுவதில்லை. ஊடகங்கள், தமது வாடிக்கையாளர்களின் நிலைப்பாட்டையே அனேகமாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அம் மக்கள் எந்த நிலைப்பாட்டில் உள்ளார்கள் என்பது தெளிவாகிறது. 

இவ்வாறு கட்டுரையாளர் குறிப்பிடுவது போன்று ஊடகங்கள் இருந்தால், அது வருத்தப்பட வேண்டிய விடயம். காரணம், ஊடக தர்மம் என்பது செய்திகளை அவற்றின் உண்மை சார்ந்து மக்களுக்கு சொல்வது.

எனவே, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதாக இருந்தால், அதே நிலைப்பாட்டைத் தான் எடுக்க வேண்டும்.

கட்சிகள் தமது எதிர்காலத்திலேயே குறியாக உள்ளார்கள் 😞 

 

அம்பனை, நான் அவதானித்த வரையில், "உண்மை" என்று நீங்கள் நம்பிக் கொண்டிருப்பது ஊர் நிலைமை கொஞ்சமும் தெரியாமல் ஊதிப் பெருப்பித்த எதிர்வுகூறல்களால் நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் உங்கள் சொந்த அபிப்பிராயம் தான்!

இங்கே பேசப்படும் ஊடகங்கள் ஊர் நிலையை பல ஆண்டுகளாக ஆவணப்படுத்தி வரும் வேலையைச் செய்வதால் அவர்கள் மகிந்த குழுவை ஆதரித்து எதுவும் எழுதுவதில்லை! வரலாறு முக்கியம் அம்பனை! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.