Jump to content

கோத்தாவை விரைவில் சந்திக்கின்றது கூட்டமைப்பு


Recommended Posts

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச என்னை சந்திக்கவேண்டும் என தெரிவித்துள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 கோத்தாபய ராஜபக்சவுடன் மகிந்த ராஜபக்ச பசில் ராஜபக்சவும்  இந்த சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியதேசிய முன்னணியின்  சஜித்பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு கட்சியின் நிலைப்பாட்டை அவரிடம் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோத்தாபய  ராஜபக்சவிடம் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம் நாங்கள் புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கவேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தவிர படையினர் வசமுள்ள நிலங்களை விடுவிப்பது, அரசியல் கைதிகள் விடுதலை போன்ற விடயங்களும் உள்ளன என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாங்கள் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை பார்த்த பின்னர் முடிவெடுப்போம் எனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

https://www.virakesari.lk/article/66604

 

 

Link to comment
Share on other sites

சிங்கப்பூர் பயணமானார் கோத்தா

கோத்தாபய ராஜபக்ஷ வைத்திய பரிசோதனைக்காக இன்று சிங்கப்பூர் சென்றுள்ளார்.

கோத்தாபய உட்பட அவரின் குழுவினர் இன்று காலை 12.50 மணியளவில் சிங்கப்பூருக்குச் சென்றுள்ளனர். 

குறித்த குழுவினர்  எதிர்வரும் சனிக்கிழமை நாடு திரும்பவுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/66597

Link to comment
Share on other sites

'தமிழ் கட்சிகளின் மௌனம் கவலையளிக்கிறது’

image_44e64ee658.jpg

“ஜனாதிபதியான மறுநாளே சிறையிலுள்ள இராணுவ வீரர்களை விடுதலை செய்வேனென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் மௌனம் காக்கின்றமை கவலையளிக்கின்றது” என, மக்கள் முன்னேற்றக் கூட்டணியின் செயலாளர் கணேஸ் வேலாயுதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் அநுராதபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, தான் ஜனாதிபதியானதும் நவம்பர் 17 ஆம் திகதி சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார். 

“அவரது பேச்சில் சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

"அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதன்போது வாக்குறுதிகள் வழங்கி உண்ணாவிரதங்கள் முடித்து வைக்கப்பட்டன. ஆனால் அவர்களின் விடுதலை என்பது முடிவின்றி தொடர்ந்து செல்கின்றது.

“இவ்வாறான சூழ்நிலையில் சிறையிலுள்ள இராணுவ வீரர்கள் விடுவிக்கப்படுவர் என்ற கோட்டாபயவின் கருத்து இனவாதத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. 

"மேலும், நல்லாட்சியில் 4 1/2 வருடமாக மறைந்திருந்த கடந்த கால இருண்ட யுகத்தை மீண்டும் நினைவு படுத்துவதாக அமைந்துள்ளது. இக்கருத்து தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள தமிழ் கட்சிகள் மௌனம் காக்கின்றன.

“இது கவலையளிக்கின்றது. எனவே, கோட்டாபயவின் கருத்து தொடர்பில் அவருக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சிகள் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்” என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/தமிழ்-கட்சிகளின்-மௌனம்-கவலையளிக்கிறது/175-239795

Link to comment
Share on other sites

12 hours ago, ampanai said:

தமிழ்க் கட்சிகள் மௌனம் காக்கின்றமை கவலையளிக்கின்றது

இவ்வாறான பேரினவாத கருத்துக்களை எதிர்ப்பவர்களை கோமாளிகள் என்னுமளவுக்கு பிரச்சினைகளை பாத்து தப்பியோடும் அடிமைப்புத்தியுள்ள பலரும், பின்கதவால் கோடிகளை பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் பலரும் இருக்கும் போது எதிர்ப்புக் குரல்கள் உரத்துக் கேட்காது.

Link to comment
Share on other sites

5 hours ago, Rajesh said:

இவ்வாறான பேரினவாத கருத்துக்களை எதிர்ப்பவர்களை கோமாளிகள் என்னுமளவுக்கு பிரச்சினைகளை பாத்து தப்பியோடும் அடிமைப்புத்தியுள்ள பலரும், பின்கதவால் கோடிகளை பெற்றுக்கொண்டு அரசியல் செய்பவர்கள் பலரும் இருக்கும் போது எதிர்ப்புக் குரல்கள் உரத்துக் கேட்காது.

அவர்களை எல்லாம் என்ன செய்ய போகிறீர்கள்?

  • காணாமல் போக செய்யப் போகிறீர்களா?
  • அல்லது மின்கம்ப தண்டனை கொடுக்க போகிறீர்களா?
  • வெள்ளை வேன் அனுப்பும் நோக்கம்?

 

Link to comment
Share on other sites

18 ஆம் திகதிக்கு பின்னர் தான் சந்திப்பார்கள் என ஒரு கதை அடிபடுது.

உறுதியாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

17 hours ago, Jude said:

அவர்களை எல்லாம் என்ன செய்ய போகிறீர்கள்?

  • காணாமல் போக செய்யப் போகிறீர்களா?
  • அல்லது மின்கம்ப தண்டனை கொடுக்க போகிறீர்களா?
  • வெள்ளை வேன் அனுப்பும் நோக்கம்?

இப்பிடி நீங்க செய்ற வேலைகளை மற்றவங்க தலையில கட்டிவிட்டு நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்டு நினைக்கிறீங்களோ?
இப்பிடி எழுதி தமிழின கொலைகாராக் கும்பலிட்டை எவ்வளவு கோடிகள் வாங்க போறீக?
உங்களைப்போல மற்றவங்களையும் நினைத்து யாரை ஏமாத்த நினைக்கிறீங்க?

 

இப்பிடி எழுதி தமிழின பற்றாளர்களை அழித்துவிடலாம் என்டு நினைகிறீங்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Lara said:

18 ஆம் திகதிக்கு பின்னர் தான் சந்திப்பார்கள் என ஒரு கதை அடிபடுது.

உறுதியாக தெரியவில்லை.

18´ம் திகதிக்கு பிறகு....  தேர்தல் முடிந்து விடுமே.... :grin:
அப்ப...   நாலாம் மாடியில் தான்.... சந்திப்பு நடக்கும் என நினைக்கின்றேன். 🤣

Link to comment
Share on other sites

On 10/10/2019 at 1:56 PM, ampanai said:

கோத்தாவை விரைவில் சந்திக்கின்றது கூட்டமைப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்தா இந்தியா கிளம்பிறம் இந்தா இந்தியா கிளம்பிறம் இந்தா இந்தியா கிளம்பிறம் என்டு ஜூன் மாதம் முதல் கத்தின சம்சும் கும்பல் இன்னும் கிளம்பினபாட்டை காணேல!

அதுக்குள்ள இதுவேறை!

அதுசரி போனவருசம் சுமந்திரன் முக்கி முனகி ரணிலுக்கு முண்டு கொடுத்துபோட்டு ஜனவரிக்குள்ளை தீர்வுப்பொதி பாராளுமன்றத்துல சமர்ப்பிக்கப்படும், மார்ச்க்குள்ளை அரசியல் தீர்வு வந்திடும், இல்லாட்டி நான் உடன ரிசைன் பண்ணுவன் என்டு பீலா விட்டார். இப்ப என்ன ஆச்சு? சுமந்திரன்டை வாலுகளும் இப்ப சைலன்ட். அவை ஜனாதிபதி தேர்தல்ல தமிழ் மக்களை மிரட்டி சிங்களவனுக்கு முண்டு கொடுக்க பிசி ஆக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Rajesh said:

இந்தா இந்தியா கிளம்பிறம் இந்தா இந்தியா கிளம்பிறம் இந்தா இந்தியா கிளம்பிறம் என்டு ஜூன் மாதம் முதல் கத்தின சம்சும் கும்பல் இன்னும் கிளம்பினபாட்டை காணேல!

அதுக்குள்ள இதுவேறை!

அதுசரி போனவருசம் சுமந்திரன் முக்கி முனகி ரணிலுக்கு முண்டு கொடுத்துபோட்டு ஜனவரிக்குள்ளை தீர்வுப்பொதி பாராளுமன்றத்துல சமர்ப்பிக்கப்படும், மார்ச்க்குள்ளை அரசியல் தீர்வு வந்திடும், இல்லாட்டி நான் உடன ரிசைன் பண்ணுவன் என்டு பீலா விட்டார். இப்ப என்ன ஆச்சு? சுமந்திரன்டை வாலுகளும் இப்ப சைலன்ட். அவை ஜனாதிபதி தேர்தல்ல தமிழ் மக்களை மிரட்டி சிங்களவனுக்கு முண்டு கொடுக்க பிசி ஆக்கும்!

கூத்தமைப்பு  சரியான...  "**** கூட்டங்கள்" என்று, எல்லாருக்கும்   தெரியும்.
அதனால் தான்... இவர்களை, ஒருவரும்... கணக்கில் எடுப்பதில்லை. 
ஆனால்... அவர்களின் நினைப்பு....  
இன்னும்...  சொறிலங்காவின்  எதிர் கட் சி  தலைவர் என்ற மாதிரி,  ஒரு... இறுமாப்பு.

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

18´ம் திகதிக்கு பிறகு....  தேர்தல் முடிந்து விடுமே.... :grin:
அப்ப...   நாலாம் மாடியில் தான்.... சந்திப்பு நடக்கும் என நினைக்கின்றேன். 🤣

இம்மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர்.

தேர்தல் அடுத்த மாதம் 16 ஆம் திகதி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.