Jump to content

காலி முகத்திடலில் பெரும் அளவில் திரண்ட சஜித் ஆதரவாளர்கள்!


Recommended Posts

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கான மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பறைசாற்றும் விதமாக இன்று கொழும்பு காலிமுகத்திடலில் பேரணியொன்று நடைபெற்று வருகிறது.

ஐ.தே.கவின் இம் மக்கள் ஆதரவுப் பேரணியில் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலரும் மேடையேறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்துத் தரப்புக்களும் தமது தீவிரமான தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/66620

ஏகாதிபத்தியத்திற்கு ஒரு போதும் இடமளிக்காது, என் தந்தையை போலவே நாட்டின் அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்பேன்: சஜித்

நாட்டில் மீண்டும் ஏகாதிபத்தியம் நிறைந்த ஒரு குடும்ப அரசியலுக்கு நாம் வழிகொடுக்க மாட்டோம் என்று குறிப்பிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சகோதரத்துவத்துடன் நாட்டை நாம் கட்டியெழுப்புவோம் என்றும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை அழுத்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற முஜிபுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றிருந்தது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது, மதவாதம்,ஏகாதிபத்தியம் நிறைந்த ஒரு ஆட்சியை மீண்டும் ஒரு முறை நாட்டில் இடம்பெற நாங்கள் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை. ரணசிங்க பிரேமதாச ஒரு போதும் மக்களிடையே  ஜாதி பேதம் பார்ப்பதில்லை அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து முன்னோக்கி செலவதே அவரின் ஆசை,அவர் நாட்டிற்கு செய்த அபிவிருத்திகளை போல் தொடர்ந்தும் நாட்டிற்கு நான் அபிவிருத்திகளை செய்வேன்.

அத்தோடு, கோவில்கள்,பள்ளிகள் தேவாலயங்கள் என்பவற்றை உடைத்து பௌத்த மத தலங்கள் அமைப்பது பௌத்த மதத்திற்கு அவர்கள் செய்யும் முன்னேற்றம் என கருதுகின்றனர். மக்கள் எவரும் முட்டாள்கள் அல்ல நாட்டின் நிலைமையை அறிந்தவர்கள் மீண்டும் ஒரு கருப்பு ஜூலையை விரும்ப மாட்டார்கள்.

மோசடி அரசாங்கத்திற்கு மீண்டும் ஒரு முறை வழி செய்யாமல் நல்லாட்சிக்கு வழி  செய்ய ஐ.தே.கவுடன் இணையுங்கள் என்றும் இதன் போது அவர் தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/66615

Link to comment
Share on other sites

’முடியாது என்ற வார்த்தை எமது அகராதியில் இல்லை’

“ஜனாதிபதியான பின்னர் 365 நாட்களும் 24 மணித்தியாலங்களும் மக்களுக்கு சேவை செய்வேன்” என, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது பிரசாரக் கூட்டம்  கொழும்பு – காலி முகத்திடலில் இன்று (10) பிற்பகல் ஆரம்பமாகியது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

அங்கு அவர் உரையாற்றுகையில், “இதுவரை நடைபெற்றிருக்காதவகையில், பாரிய அபிவித்தி யுகமொன்றை ஆரம்பித்து வைத்து, அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை மாற்ற நடவடிக்கை எடுப்போம்.

நாங்கள் உருவாக்கும் புதிய இலங்கைக்குள் எந்த வகையிலும், திருட்டு, மோசடி, ஊழலுக்கு இடமளிக்கப்படமாட்டாது. அரச சொத்துகளில் கைவைக்கப்பட மாட்டாது.

யாராவது நாட்டு சொத்துகளை கொள்ளையடிக்க எதிர்பார்த்திருந்தால், அவ்வாறானவர்கள் அரசாங்கத்தை அமைப்பதைவிட தற்போது வீட்டுக்கு செல்லுமாறு கூறுகின்றோம்.

எமது வரபிரசாதங்கள் தொடர்பில் நாங்கள் நினைப்பதில்லை. இல்லை, முடியாது என்ற வார்த்தைகளை எமது அகராதில் இருந்து அகற்றிவிடுவோம்” என்றார்.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/முடியாது-என்ற-வார்த்தை-எமது-அகராதியில்-இல்லை/150-239829

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.dailymirror.lk/caption_story/NDF-inaugural-rally/110-175949#.XZ8toFfu2jI.link

 

A A A
 

image_88830104f5.jpg

The inaugural election rally organized by the New Democratic Front (NDF) was launched at the Galle Face with the participation of UNP MPs and supporters.

image_f9370d1216.jpgimage_013945b604.jpgimage_461f3c2dbb.jpg

image_9549ab1d20.jpg

Link to comment
Share on other sites

‘சஜித்தின் வெற்றி உறுதியாகிவிட்டது’

மக்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் சஜித்தின் வெற்றி உறுதியாகிவிட்டது என பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

இன்று காலி முகத்திடலில் நடைபெற்ற, ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கோட்டா ஜனாதிபதியானால் பிரதமராக மஹிந்தவும் அமைச்ரவையில் பசில், நாமல் என குடும்ப ஆட்சி மீண்டும் வந்து விடும்.

எனவே வறிய மக்களின் வேதனைகளின் புரிந்துகொண்டு அவர்களின் வேதனைகளை போக்கக் கூடிய ஒரே தலைவர் சஜித் பிரேமதாஸவே என்றார்.

அத்துடன் நுவரெலியாவில்  அமைச்சர் திகாம்பரத்தின் ஆதரவுடன் நாம் வெற்றிபெறுவோம் என்றும் துன்பபடும் மக்களின் வாக்கு பலத்துடன் சஜித்தை நாட்டின் தலைவராக்குவோம்' என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சஜித்தின்-வெற்றி-உறுதியாகிவிட்டது/175-239831

Link to comment
Share on other sites

தேசிய பாதுகாப்பின் பொறுப்பு சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்கப்படும் என இன்றைய கூட்டத்தில் சஜித் கூறியுள்ளார்.

Link to comment
Share on other sites

28 minutes ago, Lara said:

தேசிய பாதுகாப்பின் பொறுப்பு சரத் பொன்சேகாவிடம் ஒப்படைக்கப்படும் என இன்றைய கூட்டத்தில் சஜித் கூறியுள்ளார்.

அப்படியானால் மகேஷ் சேனநாயக்காவிற்கு  ( ஏதாவது ஒரு நாட்டிற்கு தூதுவராக ? ) ?

Link to comment
Share on other sites

16 minutes ago, ampanai said:

அப்படியானால் மகேஷ் சேனநாயக்காவிற்கு  ( ஏதாவது ஒரு நாட்டிற்கு தூதுவராக ? ) ?

மகேஷ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இதில் இறுதிப்பட்டியலில் 6 ஆவதாக அவர் பெயர் உள்ளது.

https://yarl.com/forum3/topic/232721-போட்டிக்-களத்தில்-உள்ள-35-வேட்பாளர்கள்-–-விலகிய-6-பேர்-விபரங்கள்/

எனவே அவருக்கு வேறு ஏதும் பதவிகள் வழங்கப்படுமா இல்லையா என்பதை தேர்தல் முடிந்த பின் தான் தெரிந்து கொள்ள முடியும். 😀

Link to comment
Share on other sites

19 minutes ago, Lara said:

மகேஷ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். இதில் இறுதிப்பட்டியலில் 6 ஆவதாக அவர் பெயர் உள்ளது.

இவர் (மகேஷ்) நிறுத்தப்பட்டதன் நோக்கம் கோத்தாவிற்கான வாக்குகளை பிரிப்பதற்கா (ஐ.தே.க. வினால்?) ? ஏனெனில், இருவரும் தம்மை நாட்டின் பாதுகாவலர்கள் என மக்களுக்கு கூறுகின்றனர். 

Link to comment
Share on other sites

"ஊழல் வாதிகளை கொண்டு அரசாங்கத்தை அமைக்க முயல்வோர் போட்டியை கைவிட்டு வெளியேற வேண்டும்" 

(நா.தனுஜா)

தூய்மையான மக்கள் மயமான அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம் எனத் தெரிவித்த புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஊழல் வாதிகளை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும் அனைவரும் போட்டியை கைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் பிரேமதாச இந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கான பொறுப்பை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கைகளிலேயே ஒப்படைப்பதாவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய ஜனாநயக  முன்னணியின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பிரசாரக்கூட்டம் இன்று கொழும்பு, காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறுனார்.

புதிய சிந்தனை கொண்ட சர்வதேசத்தை வெற்றிகொள்ளக்கூடிய ஜனநாயகமும் சகல மக்களின் நலன்சார்ந்த  அரசாங்கத்தை  உருவாக்கும் எமது பயணத்தில் இந்த நாட்டு  மக்களின் முழுமையான ஆதரவை எதிர்பார்க்கின்றோம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இந்த நாடு மக்கள் புதிய பயணம் ஒன்றினை உருவாக்க பங்களிப்பு வழங்கும் வேளையில் இந்த நாட்டில் பாகுபாடின்றி  இந்த நாட்டில் சகல மக்களுக்கும் செய்நன்றியை வெளிப்படுத்துவேன். 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது மக்களின் ஒட்டுமொத்த குரலுமாக நாம் வெற்றி பெறுவோம். இந்த புதிய யுகத்தில் புதிதாக சிந்திக்க நாம் பழகிக்கொள்ள வேண்டும். உலகுடன் போட்டியிட்டு முதல்தர நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும். அதற்கான புதிய சிந்தனை, புதிய தொழிநுட்பம், புதிய இலக்குகளுடன் நாம் முன்னோக்கி செல்லும் நாட்டினை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும். மனித உரிமைகளை பலப்படுத்தும் நாடாகவும், உற்பத்திகளை உருவாக்கும் நாடாகவும், ஏற்றுமது, இறக்குமதிகளை கொண்டு குறிப்பாக ஏற்றுமதியில் அதிக அக்கறை செலுத்தும் நாடாகவும், நாட்டுக்கு வளர்ச்சியை  உருவாக்கி சரியான இடத்தை மக்களுக்கு கொடுக்கும் நாடாகவும் , சகல  துறையுடனும் போட்டியிடும் விவசாய, மீனவ, நடுத்தர தொழிலாளர்களை  பலப்படுத்தும் நாட்டினை நாம் உருவாக்குவோம். 

எமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் போராட்டத்தில் ஒரு குடும்பத்தின் தீர்மனத்தை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. இந்த நாட்டுக்காக சிந்திக்கும் எமது இளம் சமூகம், நாட்டுக்காக வேலைசெய்யும் தொழிலாளர், பெண்கள் என அனைவரையும்  சிந்தித்து அவர்களையே  இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க இடமளிக்க வேண்டும். அதை விருத்து ஒரு குடும்பம் மட்டுமே இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க இடமளிக்கக்கூடாது. 

இதுவரை காலமாக நாட்டில் இடம்பெறாத அபிவிருத்தியை எனது ஆட்சியில் செய்து முடிக்கவே நான் விரும்புகின்றேன். அதற்கான வேலைத்திட்டங்களை நான் முன்னெடுத்து வருகின்றேன். நாம் உருவாக்கும் புதிய இலங்கையில் ஊழல், மோசடிகள், குற்றங்கள் இருக்காது. அரச சொத்துக்களை சூறையாட இடமளிக்க மாட்டோம். 

தூய்மையான மக்கள் மயமான அரசாங்கத்தை நாம் உருவாக்குவோம். அதை விடுத்து ஊழல் வாதிகளை வைத்துக்கொண்டு அரசாங்கத்தை அமைக்க முயற்சிக்கும் அனைவரும் போட்டியை கைவிட்டு வெளியேற வேண்டும். இல்லை என்ற கோசத்தை எமது ஆட்சியில் நாம் இல்லாது செய்வோம். மக்கள் எம்மை ஆட்சிக்கு கொண்டுவருவதே அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகளை பெற்றுகொடுபோம் என்ற நம்பிக்கையில் தான். அவ்வாறு இருக்கையில் உங்களின் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் தலைமைத்துவத்தை எடுக்க நான் தயாராக இருக்கின்றேன் என்றார். 

https://www.virakesari.lk/article/66639

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

இவர் (மகேஷ்) நிறுத்தப்பட்டதன் நோக்கம் கோத்தாவிற்கான வாக்குகளை பிரிப்பதற்கா (ஐ.தே.க. வினால்?) ? ஏனெனில், இருவரும் தம்மை நாட்டின் பாதுகாவலர்கள் என மக்களுக்கு கூறுகின்றனர். 

2010 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த வெற்றி பெற்று மகிந்த அரசு அமைந்ததும் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். பின் மகேஷ் சேனநாயக்கவும் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார்.

மைத்திரி-ரணில் அரசு ஆட்சியமைத்ததும் இவர் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார். இவ்வருடம் ஓகஸ்ட் 18 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றவர். 

அடுத்த மாதம் திடீரென ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். எனவே கோத்தாவிற்கான வாக்குகளை பிரிப்பதற்காக தான் களமிறங்குகிறார் என நினைக்கிறேன்.

சஜித் சரத் பொன்சேகாவை தெரிவு செய்ய கூறும் காரணம் இது.

EGhHFyvWkAAIUFS?format=jpg&name=large

Link to comment
Share on other sites

4 minutes ago, Lara said:

2010 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த வெற்றி பெற்று மகிந்த அரசு அமைந்ததும் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார். பின் மகேஷ் சேனநாயக்கவும் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார்.

மைத்திரி-ரணில் அரசு ஆட்சியமைத்ததும் இவர் மீண்டும் இணைத்துக்கொள்ளப்பட்டார். இவ்வருடம் ஓகஸ்ட் 18 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றவர். 

அடுத்த மாதம் திடீரென ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். எனவே கோத்தாவிற்கான வாக்குகளை பிரிப்பதற்காக தான் களமிறங்குகிறார் என நினைக்கிறேன்.

சஜித் சரத் பொன்சேகாவை தெரிவு செய்ய கூறும் காரணம் இது

நன்றிகள் லாரா.

ஆக, ஒரு பக்கம் கோத்தா மறு பக்கம் சரத் (சஜித்) .

கோத்தாவை ஆதரிக்காவிட்டால், சரத்தை ஆதரித்த மாதிரி முடியும். இரு பக்கமும் போர்க்குற்றவாளிகள் 😞  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா சிங்கப்பூர் சென்று விட்டதாக செய்தி உள்ளது. உண்மை, பொய் தெரியாது.

அண்ணலும், இந்த நேரத்தி கோத்தா சிங்கப்பூர் செல்வதென்பது, முன்பே திட்டமிட்டிருந்தாலும், எதிர்பார்க்காதது.


அனுராதபுரத்தில் கோத்தாவின் கூட்டம் எதிர்பார்த்த அளவு அலை மொதவில்லை என்றும், சஜித்தின் காலிமுகத்திடல் ஜனத்திரள்  அனுராதபுரத்தில் கோத்தாவின் கூட்டத்தை விட அதிகம் என்றும் சிங்களர்வார்கள் சொல்கிறார்கள்.  உண்மை, பொய் தெரியாது.

Link to comment
Share on other sites

7 minutes ago, Kadancha said:

கோத்தா சிங்கப்பூர் சென்று விட்டதாக செய்தி உள்ளது. உண்மை, பொய் தெரியாது.

அண்ணலும், இந்த நேரத்தி கோத்தா சிங்கப்பூர் செல்வதென்பது, முன்பே திட்டமிட்டிருந்தாலும், எதிர்பார்க்காதது.

செய்தி உண்மை.

கோத்தா 9 - 12 வரை சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு என முன்கூட்டியே நீதிமன்றத்தில் அனுமதி பெற்றிருந்தார்.

நேற்று கூட்டத்தில் கலந்து கொண்டதால் இன்று சிங்கப்பூர் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

Link to comment
Share on other sites

22 minutes ago, Kadancha said:

அனுராதபுரத்தில் கோத்தாவின் கூட்டம் எதிர்பார்த்த அளவு அலை மொதவில்லை என்றும், சஜித்தின் காலிமுகத்திடல் ஜனத்திரள்  அனுராதபுரத்தில் கோத்தாவின் கூட்டத்தை விட அதிகம் என்றும் சிங்களர்வார்கள் சொல்கிறார்கள்.  உண்மை, பொய் தெரியாது.

சஜித்தின் கூட்டம் அலைமோதியது என்பது உண்மை. ஆனால் இக்கூட்டத்திற்கு ஐதேக பல திட்டமிடல்களை செய்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Lara said:

ஆனால் இக்கூட்டத்திற்கு ஐதேக பல திட்டமிடல்களை செய்துள்ளார்கள் என நினைக்கிறேன்.

வேறு இடங்களில் இருந்து இலவசமாக பஸ் இல் அழைத்து வந்தார்கள் unp.

Link to comment
Share on other sites

15 minutes ago, Kadancha said:

வேறு இடங்களில் இருந்து இலவசமாக பஸ் இல் அழைத்து வந்தார்கள் unp.

நன்றி. அவ்வாறு தான் நானும் கருதினேன்.

12 மணியளவில் 3000 பஸ்கள் வந்து சேர்ந்ததாம்.

ரவி கருணாநாயக்க கொழும்பிலிருந்து மட்டும் 30000 பேரை அழைத்து வந்தாராம்.

என்பது போன்ற செய்திகளை வாசித்தேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
    • வடையை ரூ.800க்கு விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, உளுந்து வடை மற்றும் தேநீரை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபரை, களுத்துறை நீதவான் நீதிமன்றில்  இன்று (19) முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வெளிநாட்டு சுற்றூலாப் பயணிக்கு சந்தேகநபர், உளுந்து வடை மற்றும் தேநீரை 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முற்பட்டிருந்தார்.    அது தொடர்பில் சுற்றுலாப் பயணி கேள்வி எழுப்பியிருந்த நிலையில் அவரிடம் சந்தேகநபர் 800 ரூபாயை பெற்றுக்கொண்டுள்ளார்.  இதனையடுத்து,  அதிகூடிய விலைக்கு வடையை விற்பனை செய்தவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் களுத்துறை பகுதியைச் சேர்ந்த ஓட்டோ சாரதி என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.    பொருள் விலை காட்சிப்படுத்தப்படாமை, பற்றுச்சீட்டு வழங்கப்படாமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை போன்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபையானால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.    இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொத்துரொட்டியை 2,000 ரூபாய்க்கு விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவரும் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.    https://www.tamilmirror.lk/செய்திகள்/வடையை-ரூ-800க்கு-விற்றவர்-கைது/175-336087
    • அன்புள்ள ஐயா தில்லை  காதலுக்கு இல்லை ஐயா எல்லை  கணனிக் காதலர்க்கு  நீங்கள் ஒரு தொல்லை ........!  😂 நல்லாயிருக்கு நகைச்சுவை .......தொடருங்கள்.......!  👍  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.