Jump to content

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம். 

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் மற்றும் அறிவிப்பு பலகைகளில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

-பிரசாந்தன் நவரத்தினம்.-

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாக்காளர்களின் மனங்களை மாற்றும் ஒரு தந்திரோபாய உத்தி தான். சில படங்களில் கூரை தற்காலிகமாக அமைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. குறுக்கும் நெடுக்குமாக கம்பிகள் தெரிகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்படி இருந்த போதிலும் ஒரு சர்வதேச விமான நிலையம் வடமாகாணத்தில் இருப்பது நல்லதுதான். என்ன தானிய அறையாக மாறாமல் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.....!  👍

Link to comment
Share on other sites

53 minutes ago, vanangaamudi said:

வாக்காளர்களின் மனங்களை மாற்றும் ஒரு தந்திரோபாய உத்தி தான். சில படங்களில் கூரை தற்காலிகமாக அமைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. குறுக்கும் நெடுக்குமாக கம்பிகள் தெரிகின்றன.

புலம் பெயர்ந்த தமிழர்களின் வருகையையும், தமிழ்நாட்டு உல்லாச பயணத்தையும், வணிகத்தையும் அதிகரிக்கும் நோக்கத்திலேயே இந்த விமானநிலையம் அமைக்கப்படுகிறது. இதன் மூலம் அந்நிய செலாவணியை அதிகரிக்க முடியும் என்று இந்தியா ஆலோசனை வழங்கி இருக்கலாம்.  போர்க்கால கடனுக்கான வட்டி கட்ட பெருமளவு அந்நிய செலாவணி இலங்கைக்கு தேவை. அதை தமிழரிடம் இருந்து பெற்றுக் கொள்ள தமிழ் இங்கே உதவுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vanangaamudi said:

வாக்காளர்களின் மனங்களை மாற்றும் ஒரு தந்திரோபாய உத்தி தான். சில படங்களில் கூரை தற்காலிகமாக அமைக்கப்பட்டது போல் காணப்படுகின்றது. குறுக்கும் நெடுக்குமாக கம்பிகள் தெரிகின்றன.

வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம். கால் பட்டால் குற்றம் 😂

Link to comment
Share on other sites

நாமல் ராஜபக்சவின் twitter பதிவு. 😀

The @officialunp staunchly opposed the Mattala Airport saying there was no need for another international airport, despite its location in a crucial tourist zone in #SriLanka. Why is an international airport being promoted now right before elections?

Link to comment
Share on other sites

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

வெற்றி! தமிழர் போராட்டம் இத்துடன் முடிவிற்கு வந்து விட்டது  🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சர்வதேச செயற்பாடுகள் இடம்பெறும் பகுதியொன்றில் தமிழ் மொழிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

வெற்றி! தமிழர் போராட்டம் இத்துடன் முடிவிற்கு வந்து விட்டது  🙂 

உங்களுக்கு ஒரு இரண்டாவது பேரழிவு வராமல் தமிழர் பிரச்சினை முடிவுக்கு வரக்கூடாதென்ற படபடப்பு இருப்பது புரிகிறது! 

Link to comment
Share on other sites

2 hours ago, Lara said:

நாமல் ராஜபக்சவின் twitter பதிவு. 😀

The @officialunp staunchly opposed the Mattala Airport saying there was no need for another international airport, despite its location in a crucial tourist zone in #SriLanka. Why is an international airport being promoted now right before elections?

தேர்தல் வரும்பொழுது ஆட்சியில் உள்ள மற்றும் எதிர்க்கட்சிகள் 'பணத்தை' இறைப்பதும் வாக்குறுதிகளை அள்ளி வீசுவந்தும் சனநயாக விழுமியங்களில் ஒன்று 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமளவு வட இலங்கை தமிழர்கள் தென்னிந்தியா போவது வருவதும். கட்டுநாயக்கவில் இருந்து 7 மணி தொலைவில் யாழ் இருப்பதும், இங்கே ஏலெவே இருந்த விமானநிலையமே தரமுயர்தப்படுகிறது என்பதும் நாமல் பேபிக்கு தெரியும்.

இதை அத்துவானக் காட்டில், கட்டுநாயக்கவில் இருந்து 4 மணத்தியால தூரத்தில், புதிதாக பெரும் எடுப்பில் தாம் கட்டிய விமான நிலையத்தோடு ஒப்பிடுவது சரியில்லை என்பதும் தெரியும்.

ஆனால் அரசியல் செய்ய, இனவாதத்தை கையில் எடுத்து, தமிழனுக்கு ஏர்போர்ட் எதுக்குன்னு கூவினாத்தான் போணியாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

ஆனால்  சிங்களம்   இதை  ஏன்  செய்கின்றது  என்ற  சந்தேகம்

வரலாற்றில்  நரித்தந்திரமாக  ஏமாற்றப்பட்ட  தமிழர்களுக்கு வரவே செய்யும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விசுகு said:

நல்லவிடயம்

ஆனால்  சிங்களம்   இதை  ஏன்  செய்கின்றது  என்ற  சந்தேகம்

வரலாற்றில்  நரித்தந்திரமாக  ஏமாற்றப்பட்ட  தமிழர்களுக்கு வரவே செய்யும்

சாமி, சாமி வோட்டு, வோட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சாமி, சாமி வோட்டு, வோட்டு.

எனது  கவலையெல்லாம்

கூட்டமைப்பின் திருகுதாளங்களாலும் 

சுயநலங்களாலும்

கையாலாகாத்தனங்களாலும்

ஏமாற்றப்பட்டு நொந்து போயிருக்கும் எனது  இனம்

தேசியக்கட்சிகளை  நாடி  போய்விடக்கூடாது  என்பது  தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை கிந்தியா - தமிழ் நாடு கூட்டே செய்வது போல தோன்றுகிறது.

சமீபத்தில், யாழ்பணத்தில் இருக்கும் இந்திய அரசின் consulate இல், இந்திய அரசின் சுதந்திர தினம், சொறி சிங்களம் கடுமையாக எதிர்த்தும், உயர் ஸ்தானிகர் (High Commision, தலை நகரம் அளவில்) அளவில் நடத்தப்பட்டதாக அறிந்தேன்.

இது அதன் தொடர்ச்சியோ என்று பார்க்கப்பட வேண்டி உள்ளது.

சிங்களதில், எந்த தரப்பாவது, விரும்பி செய்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

 

 

Link to comment
Share on other sites

37 minutes ago, விசுகு said:

ஆனால்  சிங்களம்   இதை  ஏன்  செய்கின்றது  என்ற  சந்தேகம்

அர்ஜுனா ரணதுங்க நீண்டகால அரசியல் நோக்கில் ஹிந்தியாவையும் தமிழரையும் மகிழ்ச்சிப்படுத்தவே பலாலி விமான நிலையப்பணிகளை வரும் தேர்தலுக்குள் முடிக்க முழுமூச்சாக இயங்குவதாக தெரிகிறது.

இதற்கு பிரதிபலனாக வருங் காலத்தில் ஹிந்திய கொலைகாரர்கள் அர்ஜுனா ரணதுங்கவை அரச உயர் பதவிகளுக்கு ஆதரிக்கக் கூடும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

இதை கிந்தியா - தமிழ் நாடு கூட்டே செய்வது போல தோன்றுகிறது.

சமீபத்தில், யாழ்பணத்தில் இருக்கும் இந்திய அரசின் consulate இல், இந்திய அரசின் சுதந்திர தினம், சொறி சிங்களம் கடுமையாக எதிர்த்தும், உயர் ஸ்தானிகர் (High Commision, தலை நகரம் அளவில்) அளவில் நடத்தப்பட்டதாக அறிந்தேன்.

இது அதன் தொடர்ச்சியோ என்று பார்க்கப்பட வேண்டி உள்ளது.

 

அப்படியே  ஒரு  காந்தி  சிலையையும்  வைத்து  மாலை  போட்டுவிட்டால் சுபம்

1 minute ago, போல் said:

அர்ஜுனா ரணதுங்க நீண்டகால அரசியல் நோக்கில் ஹிந்தியாவையும் தமிழரையும் மகிழ்ச்சிப்படுத்தவே பலாலி விமான நிலையப்பணிகளை வரும் தேர்தலுக்குள் முடிக்க முழுமூச்சாக இயங்குவதாக தெரிகிறது.

இதற்கு பிரதிபலனாக வருங் காலத்தில் ஹிந்திய கொலைகாரர்கள் அர்ஜுனா ரணதுங்கவை அரச உயர் பதவிகளுக்கு ஆதரிக்கக் கூடும்!

ஐதேக  எப்பொழுதும் இந்தியுடன்  சங்கமமாகும்  கட்சி  தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால், இது உணர்வு பூர்வமாக தமிழரை திருப்தி படுத்துவது.

சிங்களதிற்கு பொருள்சார் சுளைகள். நடைமுறையில் சிங்கள நிர்வாகம்.

 

Link to comment
Share on other sites

14 minutes ago, விசுகு said:

ஐதேக  எப்பொழுதும் இந்தியுடன்  சங்கமமாகும்  கட்சி  தானே?

ஐதேக மட்டுமல்ல எந்தவொரு சிங்களக் கட்சிகளும் எக்காலத்திலும் ஹிந்தியனுடன் உளப்பூர்வமாக ஐக்கியமாதில்லை. ஆனால் ஐக்கியம் போல நடித்து ஹிந்தியனை ஏமாற்றுவதில் வல்லவர்கள். சிங்களவனின் தந்திரத்தில் ஏமாறுவது ஹிந்தியனின் வழமையான பிச்சைக்கார புத்தி.

சிறிசேன கூரே போன்ற ஒருசில விதிவிலக்குகளைத் தவிர ஜெ.ஆர்., பிரேமதாச ... உட்பட பெரும்பாலான ஐதேக வினர் ஹிந்தியனை ஒருபோதும் மதித்ததில்லை.

மதிமயங்கி ஹிந்தியனுடன் முழுமையாக ஐக்கியமாகி தமிழின அழிவுக்கு துணைபோவது தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, புளட் ஈபிடிபி, .... என்று பல தமிழ்க் கட்சிகளை  பட்டியலிடலாம்.

Link to comment
Share on other sites

இலங்கையின் அரசியலமைப்பின்படி நாடு முழுவதற்குமான தேசிய  மொழியாகவும், நிர்வாக மொழியாகவும் சிங்கள மொழியும், தமிழ் மொழியும்  ஏற்கப்பட்டுள்ளன. அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முதன்மை நிர்வாக  மொழியாகத் தமிழும் ஏனைய ஏழு மாகாணங்களின் முதன்மை நிர்வாக மொழியாகச்  சிங்களமும் இருக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.

ஆங்கிலம் இணைப்பு மொழியாக ஏற்கப்பட்டுள்ளது.

இருப்பினும், நாட்டின் எப்பகுதியிலும் ஒரு குடிமகன்  தனக்கு விரும்பிய ஏதாவது ஒரு மொழியில் தனது அரசுடான தொடர்புகளையும்  அன்றாடக் கடமைகளையும் ஆற்றிக் கொள்ள முடியுமென்ற உரிமையும்  வழங்கப்பட்டிருக்கின்றது.அதேவேளை இரு மொழிகளையும் முதன்மை மொழியாகக் கொண்ட  மாகாணங்களில் மாற்று மொழியான சிங்களம் அல்லது தமிழை தாய்மொழியாகக்  கொண்டவர்கள் வாழும் பிரதேச செயலகப் பிரிவுகளை இரு மொழிப் பிரதேச செயலகப்  பிரிவுகளாக, அதாவது இருமொழிகளையும் அன்றாடம் அரச அலுவலகங்களில்  பயன்படுத்தும் உரிமையுடையவையாகப் பிரகடனப்படுத்தவும் சட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, போல் said:

ஐதேக மட்டுமல்ல எந்தவொரு சிங்களக் கட்சிகளும் எக்காலத்திலும் ஹிந்தியனுடன் உளப்பூர்வமாக ஐக்கியமாதில்லை. ஆனால் ஐக்கியம் போல நடித்து ஹிந்தியனை ஏமாற்றுவதில் வல்லவர்கள். சிங்களவனின் தந்திரத்தில் ஏமாறுவது ஹிந்தியனின் வழமையான பிச்சைக்கார புத்தி.

சிறிசேன கூரே போன்ற ஒருசில விதிவிலக்குகளைத் தவிர ஜெ.ஆர்., பிரேமதாச ... உட்பட பெரும்பாலான ஐதேக வினர் ஹிந்தியனை ஒருபோதும் மதித்ததில்லை.

மதிமயங்கி ஹிந்தியனுடன் முழுமையாக ஐக்கியமாகி தமிழின அழிவுக்கு துணைபோவது தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, புளட் ஈபிடிபி, .... என்று பல தமிழ்க் கட்சிகளை  பட்டியலிடலாம்.

மிகச் சரியான கணிப்பு... போல். :)

Link to comment
Share on other sites

6 hours ago, Paanch said:

before%2Belection%2Bafter%2Belection%2B1.jpg

பெற்றோல் விலையை குறைத்தது ஐ.ஓ.சி

      2019 ஒக்டோபர் 11 , பி.ப. 12:48

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் விலையை குறைக்க தீர்மானித்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் யூரோ 03 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாயால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 142 ரூபாய் ஆகும்.

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகின்து.

இம்மாதம் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படாது என நிதி அமைச்சு நேற்று (10) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/பறறல-வலய-கறததத-ஐ-ஓ-ச/175-239850

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டா அதிபராகி வந்தால் எங்கட ஏர்போட்டை மாட்டு தொளுவமா மாத்திட்டு தான் முதல் வேலை பாப்பாரு.
அப்படி இல்லை தொடர்ந்து அதை இயங்க விட்டாலும் 100 %  தென்னிலங்கை  அலுவலர்களை வேலைக்கு அமர்த்தி போக்குவரத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்திய இலங்கை விமான சேவைகளில் இணையவழி பயண சீட்டு பதிவுகளுக்காக  யாழ் விமான நிலையம் இன்னும் பட்டியலிடப்படவில்லை. தொடர்ச்சியான சேவைகளை கண்டபின் தான் எதுவும் நிச்சயம். எதற்கும் அதிபர் தேர்தல் நடந்து முடிய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vanangaamudi said:

கோட்டா அதிபராகி வந்தால் எங்கட ஏர்போட்டை மாட்டு தொளுவமா மாத்திட்டு தான் முதல் வேலை பாப்பாரு.
அப்படி இல்லை தொடர்ந்து அதை இயங்க விட்டாலும் 100 %  தென்னிலங்கை  அலுவலர்களை வேலைக்கு அமர்த்தி போக்குவரத்தை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

இந்திய இலங்கை விமான சேவைகளில் இணையவழி பயண சீட்டு பதிவுகளுக்காக  யாழ் விமான நிலையம் இன்னும் பட்டியலிடப்படவில்லை. தொடர்ச்சியான சேவைகளை கண்டபின் தான் எதுவும் நிச்சயம். எதற்கும் அதிபர் தேர்தல் நடந்து முடிய வேண்டும்.

யாழ்ப்பாண விமான நிலையத்தை,  கோட்டா...  மாட்டுத் தொழுவமாக்கினால்,
இந்தியாவுக்கு,  இரட்டிப்பு... சந்தோசமாக இருக்குமே....  :grin:

Link to comment
Share on other sites

CIMG2445-1200x550.jpg_72781110_bafe287f-cf9e-473d-8e84-c0ce2b

C2dHcYSUkAAfvhq.jpg

ஏற்கனவே ரனில் சொன்னது  புலம்பெயர் தமிழர்களின் வருகையால் அந்நியசெலவாணி பில்லியனில் வருவதாக குறிப்பிட்டு இருந்தார். அதனால் வடக்கில் சர்வதேச விமானநிலையம் வருவது மேலும் அந்நிய செலவாணியை கொடுக்கும்.அது நாட்டுக்கு நல்லது தானே. மந்தலவில் மகிந்த குடும்பம் இலையான் கலைத்ததால் வந்த ஆற்றமையால் இனவாதத்தை கக்குகிறார் நாமல்.

தமிழில் முதல் முறையாக எழுத்துப்பிழை இல்லாமல் முதலில் தமிழை போட்டு தமிழ் மக்களுக்கு ஐஸ் வைத்துள்ளார்கள். அரசியல் நிச்சயமாக உண்டு. எத்தனையோ போராட்டங்களை தமிழ் மக்கள் நடாத்தியும் தீர்வு காணப்படாமல் உள்ள வேளையில் தமிழில் பெயர்ப்பலகையை  திடீரென போடுவது சந்தேகத்தை  கிளப்புகிறது. நீண்ட காலப்போக்கில் என்ன நடக்கிறது என பார்க்கலாம்.

_72780162_bus_sign.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.