Jump to content

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில்... தமிழுக்கு முதல் இடம்.


Recommended Posts

37 minutes ago, tulpen said:

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இயங்குகிறதா அல்லது சத்தமில்லாமல் மூடப்பட்டு விட்டதா? அதைப்பற்றிய செய்திகளையும் காணோம். E booker, Swoodoo போன்ற பிரயாண முகவர் தளங்களில் சென்னையில் இருந்து யாழ்பபாணம் விமான நிலையத்திற்கு ரிக்கற் பதிவு செய்ய முடியவில்லை. யாராவது யாழிற்கு விமான சீட்டு பதிவு செய்துள்ளீர்களா? 

 

10 நாட்களுக்கு முன்னர் என் மாமி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை சென்றுள்ளார். வீசா எடுப்பதில் இருந்து எதையும் கொழும்பில் செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை.  பயண நேரம் தான் கொஞ்சம் அதிகம் (ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் என்கிறார்). மீண்டும் 16 யாழ்ப்பாணம் திரும்புகின்றார்.

Link to comment
Share on other sites

  • Replies 83
  • Created
  • Last Reply
33 minutes ago, நிழலி said:

 

10 நாட்களுக்கு முன்னர் என் மாமி யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை சென்றுள்ளார். வீசா எடுப்பதில் இருந்து எதையும் கொழும்பில் செய்ய வேண்டிய தேவை ஏற்படவில்லை.  பயண நேரம் தான் கொஞ்சம் அதிகம் (ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் என்கிறார்). மீண்டும் 16 யாழ்ப்பாணம் திரும்புகின்றார்.

நன்றி நிழலி. நண்பர் ஒருவருக்கு சென்னை Transit உடன் யாழ்ப்பாணத்திற்கு விமானச்சீட்டு  ஓன்லைனில்  புக்பண்ண try பண்ணினோம்.  முடியாமல் உள்ளது. யாராவது  ஐரோப்பாவில் இருந்து  விமானசீட்டு பதிவு செய்திருந்தால் தளத்தின் பெயரை அறியதரவும். நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

நன்றி நிழலி. நண்பர் ஒருவருக்கு சென்னை Transit உடன் யாழ்ப்பாணத்திற்கு விமானச்சீட்டு  ஓன்லைனில்  புக்பண்ண try பண்ணினோம்.  முடியாமல் உள்ளது. யாராவது  ஐரோப்பாவில் இருந்து  விமானசீட்டு பதிவு செய்திருந்தால் தளத்தின் பெயரை அறியதரவும். நன்றி. 

https://www.skyscanner.net 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna-Airport-2-720x450.jpg

யாழ். சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியா உதவி

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு உதவி செய்வதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய 300 மில்லியன் ரூபாயை உதவித் தொகையாக இந்தியா வழங்கவுள்ளது.

கைத்தொழில் ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை, நேற்று (புதன்கிழமை) இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரங்ஜித் சிங் சந்தித்தபோதே குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதேவேளை, சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளுக்கான மற்றும் பொதிகளை சோதனை செய்வதற்கான இடங்களை அபிவிருத்தி செய்வதற்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://athavannews.com/யாழ்-சர்வதேச-விமான-நிலைய-6/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்..! 300 மில்லியன் வழங்குகிறது இந்திய அரசு..

30euene.jpg

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி பணிகளுக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாய் நிதி வழங்கவுள்ளது.

ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை,  இன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரங்ஜித் சிங் சந்தித்தபோதே குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதேவேளை, சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளுக்கான மற்றும் பொதிகளை சோதனை செய்வதற்கான இடங்களை அபிவிருத்தி செய்வதற்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://jaffnazone.com/news/14873

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்..! 300 மில்லியன் வழங்குகிறது இந்திய அரசு..

30euene.jpg

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி பணிகளுக்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாய் நிதி வழங்கவுள்ளது.

ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை,  இன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரங்ஜித் சிங் சந்தித்தபோதே குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இதேவேளை, சர்வதேச விமான நிலையத்தின் பயணிகளுக்கான மற்றும் பொதிகளை சோதனை செய்வதற்கான இடங்களை அபிவிருத்தி செய்வதற்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://jaffnazone.com/news/14873

யாழ்ப்பாண சர்வதேச(?) விமான நிலைய அபிவிருத்தி என்ற போர்வையில் பல தந்திரங்கள் உள்ளடக்கியதாக தெரியுது..

  • விமான நிலையம் எந்த விதத்திலும் மற்ற நாட்டின் சர்வதேச விமான நிலையங்களைப் போல பெரிய விமானங்கள் வந்திறங்குமளவிற்கு தரம் உயர்ந்து விடக்கூடாது என்பதில் முழுக் கவனம்.
  • இலங்கையின் அபிவிருத்தியில் உதவுகிறேன் பேர்வழியென சீன பிரசன்னத்திற்கு ஒரு செக்..
  • புலம்பும் தமிழர்களை திருப்தி செய்ய ஒரு கண்துடைப்பு அபிவிருத்தி..

("ஈயம் பூசுனது மாதிரியும் இருக்கணும், பூசாதது மாதிரியும் இருக்கணும்.." )

 

 

Link to comment
Share on other sites

20 minutes ago, ராசவன்னியன் said:

யாழ்ப்பாண சர்வதேச(?) விமான நிலைய அபிவிருத்தி என்ற போர்வையில் பல தந்திரங்கள் உள்ளடக்கியதாக தெரியுது..

  • விமான நிலையம் எந்த விதத்திலும் மற்ற நாட்டின் ச்ர்வதேச விமான நிலையங்களைப் போல பெரிய விமானங்கள் வந்திறங்குமளவிற்கு தரம் உயர்ந்து விடக்கூடாது என்பதில் முழுக் கவனம்.
  • இலங்கையின் அபிவிருந்தியில் உதவுகிறேன் பேர்வழியென சீன பிரசன்னத்திற்கு ஒரு செக்..
  • புலம்பும் தமிழர்களை திருப்தி செய்ய கண்துடைப்பு அபிவிருத்தி..

("ஈயம் பூசுனது மாதிரியும் இருக்கணும், பூசாதது மாதிரியும் இருக்கணும்.." )

 

 

இந்திய அரசாங்கம் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாயை ஒதுக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம்  இந்த சர்வதேச விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த (?) போவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது இன்றய காலை செய்தியின்படி அறிந்துகொண்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Vankalayan said:

இந்திய அரசாங்கம் பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக 300 மில்லியன் ரூபாயை ஒதுக்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. இதன்மூலம்  இந்த சர்வதேச விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த (?) போவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது இன்றய காலை செய்தியின்படி அறிந்துகொண்டது. 

  ரொம்ப நல்ல செய்தி..!  tenor.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.