Jump to content

‘உறுதிமொழி கிடைத்தால் நான் விலகுவேன்’ - எம்.கே.சிவாஜிலிங்கம்


Recommended Posts

எஸ்.நிதர்ஷன்

தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது ஒருவர், தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றுமென உறுதிமொழி தருவார்களாயின் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலகுவேன் என முன்னாள் எம்.பியும் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழர்களின் கோரிக்கையை, ஜனாதிபதித் தேர்தலில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ்த் தரப்புகளை ஒன்றிணைத்து தயாரிக்கவுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

யாழ்.பாடி விருந்தினர் விடுதியில், நேற்று(10) நடத்திய ஊடகவியலாளார் சந்திப்பிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ்த் தேசிய இனத்தின் மறுமலர்ச்சிக்கான மக்கள் சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் தமிழ்த் தேசிய இனத்தின் பொது வேட்பாளராக நான் ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கியுள்ளேன்” என்றார்.

ஜனாதிபதித் தேர்தலில் கடந்த காலங்களில் நான் போட்டியிட்டபோதும் பணம் வாங்கிவிட்டு ஒரு தரப்பினரை, வெற்றிப்பெற வைப்பதற்காக செயற்படுகின்றேன் என பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர் என்று தெரிவித்த அவர், இன்றும் நான் தேர்தலில் இறங்கியதும் ராஜபக்‌ஷ தரப்பிடம் பணம் வாங்கி போட்டியிடுவதாக குற்றம் சுமத்துகின்றனர் என்றார்.

2010ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றபோது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், போரை முன்னிணின்று வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவை ஆதரித்திருந்தனர். அந்த நேரத்தில் கஜேந்திரகுமாரும் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுமையுடன் உள்ளது. எனினும், இவர்களின் திட்டம் தேர்தலுக்கு ஒருவாரமே இருவாரத்துக்கு முன்னர் மஹிந்த தரப்பை ஆட்சி பீடம் ஏறக்கூடாது எனக்கூறி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாகச் செயற்படக்கூடும் பெரும்பாலும் கூட்டமைப்பின் திட்டம் இதுவாகவே இருக்கும் என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/உறுதிமொழி-கிடைத்தால்-நான்-விலகுவேன்/175-239846

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply

’சிவாஜிலிங்கத்துக்கு எனது சொந்தப் பணத்திலேயே கட்டுப்பணம் செலுத்தினேன்’

image_8e205b7bb1.jpg

 

-எஸ்.நிதர்ஷன்

ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, தனது சொந்தப் பணத்திலேயே கட்டுப்பணம் செலுத்தியதாகத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்,  மாறாக நான் எந்தவொரு ராஜபக்ஷ ஆட்களையும் சந்திக்கவில்லையெனவும் தான் ராஜபக்ஷ தரப்புகளை சந்தித்தேன்; அவர்களின் பின்னணியில் தான் இயங்குகிறேன் எனக் குற்றம் சுமத்துபவர்கள் ஆதாரத்துடன் நிரூபிக்குமாறும் சவால் விடுத்தார்.

நல்லூரில் அமைந்துள்ள யாழ். பாடி விருந்தினர் விடுதியில், .ன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“கடந்த 1987இல் இந்தியப்படை இங்கு வந்தபோது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் தனது சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்தியாவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போரை உருவாக்கினார். 

“இந்தியப்படை வெளியேறட்டும் என்று சொல்லிப் பதவிக்கு வந்த ரணசிங்க பிரேமதாசவும் 'ஈழம் தவிர எல்லாம் தருவேன்' என்று சொல்லி ஆறாம் சட்டத்திருத்தத்தை மாற்றலாம் என்றும் சொல்லி பின்னர்அதை மாற்றாது தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலித்தார். போரை நோக்கி நகர்ந்தார். 

“பின்னர் சமாதானப் புறாவாகத் தன்னைக் காட்டிக்கொண்டு ஜனாதிபதிப் பதவிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கொடிய போர் ஒன்றைக் கட்டவிழ்த்து விட்டார்.  அவரைத் தொடர்ந்து வந்த மஹிந்த ராஜபக்ஷ இன அழிப்புப் போரின் உச்சிக்கே சென்றார். பின்னர் வந்த மைத்திரிபால சிறிசேன 'நல்லாட்சி' என்ற பெயரில் தமிழர் தாயகத்தின் மீது ஒரு மரபுரிமை இனஅழிப்புப் போரையே தொடுத்திருக்கிறார். 

“அநுராதபுரத்தையும் பொலன்னறுவையையும் மய்யமாகக் கொண்டது அவரது சிந்தனை. இது வடக்கையும் கிழக்கையும் நிரந்தரமாக உடைக்கும் திட்டம். நல்லிணக்கம் என்ற பெயரில் நடாத்தப்படும் ஒரு புதுவிதமான போர். “இதற்கு கிழக்கில் கன்னியாவும் வடக்கில் நீராவியடியும் சாட்சி. இந்தப் போர்கள் எல்லாம் ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பின் ஒவ்வொரு பரிமாணங்களாக அடுத்தடுத்த கட்டப்படி முறைகளாக விரிகின்றன. தொடரும் இந்தப் போர்களின் அடுத்த வடிவத்தை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்ற போட்டியே தற்போது தென்னிலங்கையில் நடக்கவிருக்கிறது. 

“இந்தத் தருணத்தில் ஈழத்தமிழர்களான நாங்கள் மேற்கொள்ள வேண்டிய தெரிவு என்ன? சொல்ல வேண்டிய செய்திதான் என்ன? கோட்டாபய ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ, ஜே.வி.பியின் அநுராகுமார திசநாயக்க போன்றவர்கள் சிங்களப் பேரினவாதத்தை ஒருபோதும் கைவிடப் போவதில்லை.

“இவர்களுடன் தமிழர்தரப்பு பேரம் பேசவேண்டும் என்று சிலர் வாதிடுகிறார்கள். பேரம் பேசும் போது அவர்கள் தரும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்பதற்கு எந்தவித ச்சர்வதேச உத்தரவாதமும் இல்லாமல் பேரம் பேசுவதில் உண்மையில் ஒருபலனும் இல்லை.  சிங்களப் பேரினவாதத் தலைவர்களுடன் பேரம்பேசுதல் என்பது தற்போதைய நிலையில் செல்லாக்காசு போன்றது. 

“எழுதிய ஒப்பந்தங்களையே கிழித்துப்போடும் சிங்களப் பேரினவாதத் தலைவர்களுடன் பேரம் பேசுவதில் பலன் ஏதும் இல்லை. மாறாக இவர்களை இயக்கும் சர்வதேச சக்திகளுடன் தான் நாங்கள் பேரம் பேச வேண்டும். அமெரிக்காவும் இந்தியாவும் இன்று இறுக்கமாகப் பின்னிப்பிணைந்த ஓர் அணியாகச் செயற்படுகின்றன.

“இந்து-பசிபிக் கடற்போர் முனையில் சீனாவுக்கெதிரான வியூகம் வகுப்பதில் அமெரிக்காவும் இந்தியாவும் ஜப்பானுடனும் அவுஸ்திரேலியாவுடனும் நான்முனைச்சக்திகளாக இணைந்திருக்கின்றன. இந்து சமுத்திரம் போர்ச்சூட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கிறது.

“2009இல் இருந்த பூகோளப் போட்டா போட்டியை விட தற்போதைய இந்து சமுத்திரக் கேந்திர முக்கியத்துவம் பல மடங்கு வீச்சாகியிருக்கிறது. அமெரிக்காவும் இந்தியாவும் நினைத்திருந்தால் கோட்டபாய ராஜபக்ஷவை தேர்தலில் போட்டியிட முடியாத சூழலை இலகுவாகத் தோற்றுவித்திருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.
“இராணுவத் தளபதியாக சவேந்திரசில்வா நியமிக்கப்பட்ட போது அதைக் கண்டித்த சர்வதேசத் தரப்புகள்  ஐ.நாவில் சமாதானப்படைக்கான இலங்கையின் பங்களிப்பைக் குறைக்கவுள்ளதாக இலங்கை அரசுக்கு ஒரு செய்தியைச் சொல்லி மிரட்டிய சர்வதேசச் சமூகம் ஷவேந்திர சில்வாவுக்கே  நடைமுறையில் கட்டளைத் தளபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலில் களமாட அனுமதித்தது மட்டும் ஏன் என்ற கேள்வி எழுகிறது. 

“அமெரிக்காவிலே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்குகள் மனித உரிமை நிறுவனங்களால் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இதைக் காரணம்காட்டி அமெரிக்க அரசு அவரது அமெரிக்கப் பிரஜாவுரிமையை இரத்துச் செய்ய முடியாது என்று மறுத்திருக்கலாம். அதை வெளிப்படையாகவே ஒரு அறிக்கையிட்டுச் சொல்லியிருக்கலாம். ஏன் செய்யவில்லை? 

“மறுபுறத்தில் சஜித் பிரேமதாஸ போட்டியாளராக முன்னிலைப்படுத்தப்படுகிறார். அவரும் ஹம்பாந்தோட்டையின் பிரதிநிதி. ஜனாதிபதி ஆட்சியின் நிறைவேற்று அதிகாரத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க போன்றவர்கள் விரும்புவது போலத் தெரிந்தாலும், அப்படியெல்லாம் செய்வதாகத் தான் ஒத்துக் கொள்ளவில்லை என்ற தோரணையிலேயே சஜித் பிரேமதாஸ இயங்குகிறார்.

“ஒற்றையாட்சியைக் கைவிடப்போவதில்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். 'ஒற்றையாட்சியை மாற்றாமல் அதிகளவு அதிகாரப் பரவலாக்கம்' என்று அவர் சொல்லியிருப்பது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரு வெற்றுக் கோசமே. 

“அவரின் தகப்பன் சொன்ன 'எல்லாம் தருவேன் ஈழம் தவிர என்பதை'வரலாற்றில் பார்த்துவந்தவர்கள் தான் நாம் என்பதை மறந்து விடக் கூடாது. தென்னிலங்கையைப் பொறுத்தவரை இனவாத அரசியலையார் அதிகம் பேசுகிறார்களோ அவர்களைத் தெரிந்தெடுக்க வேண்டும் என்ற மன நிலை சிங்கள மக்கள் மத்தியில் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது” என்றார்.

 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/சிவாஜிலிங்கத்துக்கு-எனது-சொந்தப்-பணத்திலேயே-கட்டுப்பணம்-செலுத்தினேன்/71-239839

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுமையுடன் உள்ளது. எனினும், இவர்களின் திட்டம் தேர்தலுக்கு ஒருவாரமே இருவாரத்துக்கு முன்னர் மஹிந்த தரப்பை ஆட்சி பீடம் ஏறக்கூடாது எனக்கூறி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாகச் செயற்படக்கூடும் பெரும்பாலும் கூட்டமைப்பின் திட்டம் இதுவாகவே இருக்கும் என்றார்.

பார்க்கலாம். இதுவரை பொறுமையாக, மௌனமாக, வேட்ப்பாளர்கள் 'என்ன தருவார்கள்' என பார்த்து உள்ளார்கள்.  

 

1 hour ago, ampanai said:

தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது ஒருவர், தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றுமென உறுதிமொழி தருவார்களாயின் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலகுவேன் என முன்னாள் எம்.பியும் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

பந்து சிங்கள கட்சிகள் பக்கம் 🙂 

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

ஜனாதிபதித் தேர்தலில் களம் இறங்கியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு, தனது சொந்தப் பணத்திலேயே கட்டுப்பணம் செலுத்தியதாகத் தெரிவித்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன்,  

அனந்தி, சிவாஜிலிங்கத்துக்கு கட்டுப்பணம் செலுத்தியதை விட உண்ண உணவில்லாமல் தற்கொலை செய்யும் நிலையிலுள்ள 4 குடும்பத்திற்கு உதவி செய்திருக்கலாம்.

சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது வாக்குகளை பிரிப்பதை விட வேறு எதற்கும் பயன்படாது என்பது அனந்திக்கு தெரியாததல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் அவர்களுக்குக் கட்டுப் பணம் திரும்பக் கிடைக்காது (அதனாலேயே அவர் தன் காசை முதலிடவில்லைப் போல!). அவரை விட சீரியசாக இந்த தேர்தலை அணுகும் தமிழ் வாக்காளர்கள் அவருக்கு வாக்குப் போடப் போவதில்லை!எனவே அவர் வாக்குப் பிரிப்பிற்குக் காரணமாக இருப்பார் என சிங்களவர்கள் அஞ்சப் போவதில்லை! 

Link to comment
Share on other sites

கையாலாகாத தமிழ் அரசியல்வாதிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர தாயகத்தில் தமிழர் உரிமைக்கு குரல்கொடுக்கும் கிறிஸ்தவ - இந்து சமயத் தலைவர்களும் சமூக அக்கறையுடைய புத்திஜீவிகளும் முன்வந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களின் அரசியல் பலத்தை கணிசமாக அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் சம்மந்தன் கும்பலும் கஜேந்திரகுமார் கும்பலும் இந்த முயற்சிகளை தட்டிக்கழித்து வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக தமிழ் அரசியல்வாதிகள் வெறுமனே காலத்தைக் கடத்துவதை உணர்ந்த யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இரண்டும் இணைந்து மேற்படி அரசியல்வாதிகளை இணைக்கவும் அதன் மூலம் பொதுவேட்பாளர் ஒருவர் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை கணிசமாக அதிகரிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் வெளிப்படையாகவே இந்த முயற்சிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் ஒருமித்த முயற்சிக்கு ஈழ மக்களின் ஆதரவு பெருகிய நிலையில் அவர்களின் முயற்சிகளுக்கு மதிப்பளிப்பதைத் தவிர வேறுவழிகள் இல்லை என்று காலதாமதமாக உணர்ந்த சம்மந்தன் கும்பலும் கஜேந்திரகுமார் கும்பலும் வேண்டாவெறுப்பாக மாணவர்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தனர்.

அரசியல் விமர்சகராக கருதப்படும் நிலாந்தன் போன்ற சுயநல முதலைகளும், சுமந்திரன் மாவை போன்ற எடுபிடிகளும், கஜேந்திரகுமார் போன்ற சுயநல சந்தர்ப்பவாத அரசியல் கும்பல்களும் வெளிப்படையாக ஆதரவுபோல காட்டிக்கொண்டு இந்த முயற்சியை குழப்புவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.  

இந்த ஜனநாயக செயன்முறை விரும்பத் தகாத கால தாமதத்தை ஏற்படுத்தியதுடன் நேரமும் ஓடிக் கொண்டிருந்தது. இந்தப் பின்னணியிலேயே, இறுதிக்கணத்தில், சிவாஜிலிங்கம் அவசர அவசரமாக கொழும்பு சென்று கட்டுப்பணத்தை செலுத்தி, மறுநாள் வேட்பாளர் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

விதிவிலக்கின்றி அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் வழமைபோல் ஜனாதிபதி தேர்தல் பற்றி எந்தவொரு சிந்தனையும் அற்று,  காலத்தைக் கடத்தி, பிச்சைக்கார மனநிலையில் கையேந்தியபடி, சந்தர்ப்பங்களை நழுவவிட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், இறுதிக்கணத்தில் தான் சிவாஜிலிங்கம் அவசர அவசரமாக கட்டுப்பணத்தை செலுத்தி, மறுநாள் வேட்பாளர் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

இதன்  பின்னர்,நீண்டகால அரசியல் போக்குகளை ஆராய்ந்து ஒரு நீண்டகால நோக்கில் சிந்திக்கும் தன்மையற்ற பலர் சிவாஜிலிங்கத்தை கேலிசெய்ய முற்பட்டனர்.

'கனவான்' வேடம் பூண்ட கையாலாகாத அரசியல்வாதிகளினதும் 'கனவான்' வேடம் பூண்டு வெறுமனே உளறித்தள்ளும் அரசியல் விமர்சகர்களினதும் பார்வையில் அவர் ஒரு நகைச்சுவையாளராக உருவகிப்பட்டதை பகுத்தறிவற்ற பலரும் தங்கள் 'கனவான்' கருத்தாக புலம்பி வருகின்றனர்.  

ஆனால், பல இக்கட்டான சூழ்நிலைகளில் சிவாஜிலிங்கம் துணிந்து செயற்பட்டது வரலாறு.

  • சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளினது பல்வேறு கொலை அச்சுறுத்தல்களின்  மத்தியில், நாய்களைக் கொன்று அவர் வீட்டின் முன்னாள் வீசி மேற்கொண்ட  அச்சுறுத்தல்களின்  மத்தியில், விசாரணை என அழைக்கப்பட்டு மேற்கொண்ட  அச்சுறுத்தல்களின்  மத்தியில், 2009 இன் பின்னர் சிலவருடங்கள் மாவீரர் தினம் அனுட்டிக்கப்பட துணிந்து வெளிப்படையாக தொடர்ச்சியாக செயற்பட்ட அரசியல்வாதி சிவாஜிலிங்கம் என்பதை பல சந்தர்ப்பவாதிகள் மறந்திருக்கலாம்.  
  • அதுபோலவே திலீபனின் நினைவுதினம் அனுட்டிக்கப்பட துணிந்து வெளிப்படையாக தொடர்ச்சியாக செயற்பட்ட அரசியல்வாதி சிவாஜிலிங்கம் என்பதை பல மூடர்கள் மறந்திருக்கலாம்.  
  • பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில் தலைவர் பிரபாகரனின் தாயாரை அனைவரும் கைவிட்டபோது சிவாஜிலிங்கம் துணிந்து அவரது இறுதிக்காலம் வரை என்ற உண்மை அவரை கேலிசெய்யும் மூடர்கள் மறந்திருக்கலாம்.  
  • பல போராளிகளின் நலன்களை பேணுவதில் தனது சக்திக்கேற்ப இன்றுவரை உழைத்து வருபவர்.
  • பாராளுமன்றத்தில் இருந்தபோதும், மாகாணசபையில் இருந்தபோதும், கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தவறவிடாமல் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி குரல் கொடுத்தவர்.
  • சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளினது அச்சுறுத்தல்களின்  மத்தியில், ஒவ்வொரு வருடமும் ஐ.நா. வரை சென்று தமிழர் உரிமைகளை வலியுறுத்தி குரல் கொடுத்து  வருபவர்.
  • காணி சுவீகரிப்புகளை தொடர்ச்சியாக எதிர்த்து வருவதால் இன்றும் பல வழக்குகளை சந்தித்து வருபவர்.
  • சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளினது கைக்கூலிகளாக டக்ளஸ் கும்பலின் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளுக்கு சென்ற அரசியவாதிகளை முன்ணணியில் வழிநடத்திச் சென்றபோது தாக்குதல்களுக்கு உள்ளாகி காலில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி உயிராபத்துக்கு உள்ளாகி மீண்டு வந்தவர்.
  • வடக்கு மாகாண சபையில் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி சட்டவலுவுடைய பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்ற முன்ணணியில் நின்று உழைத்தவர்.
  • வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட பல சர்ச்சைகள் தீர சமரச முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்தவர்.

இவ்வாறு அவர் தனித்தும், சேர்ந்தும் செய்த சாதனைகளை பக்கம் பக்கமாக அடுக்கிக்கொண்டு போகலாம்.

இந்தப் பின்னணியில் தான் சதி முயற்சிகளில் பிரபல்யமான சில சிங்களப் பத்திரிகைகளும், பல்வேறு தமிழின விரோதிகளும், தமிழின கொலைகாரர்களின் எடுபிடிகளும், சிங்கள அரசுகளுக்கு முண்டு கொடுத்து வாழும் சுமந்திரன் போன்றவர்களும் அவர்களின் அடிவருடிகளும் சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவர்களுடன் காலங்காலமாக சிங்களவனின் அடிமைகளாக வாழ விரும்புபவர்களும் சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, போல் said:

கையாலாகாத தமிழ் அரசியல்வாதிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர தாயகத்தில் தமிழர் உரிமைக்கு குரல்கொடுக்கும் கிறிஸ்தவ - இந்து சமயத் தலைவர்களும் சமூக அக்கறையுடைய புத்திஜீவிகளும் முன்வந்து பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தி தமிழ் மக்களின் அரசியல் பலத்தை கணிசமாக அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் சம்மந்தன் கும்பலும் கஜேந்திரகுமார் கும்பலும் இந்த முயற்சிகளை தட்டிக்கழித்து வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக தமிழ் அரசியல்வாதிகள் வெறுமனே காலத்தைக் கடத்துவதை உணர்ந்த யாழ் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்கள் இரண்டும் இணைந்து மேற்படி அரசியல்வாதிகளை இணைக்கவும் அதன் மூலம் பொதுவேட்பாளர் ஒருவர் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பலத்தை கணிசமாக அதிகரிக்கவும் முயற்சிகளை மேற்கொண்டனர்.

பல பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் வெளிப்படையாகவே இந்த முயற்சிகளுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

பல்கலைக்கழக மாணவர்களின் ஒருமித்த முயற்சிக்கு ஈழ மக்களின் ஆதரவு பெருகிய நிலையில் அவர்களின் முயற்சிகளுக்கு மதிப்பளிப்பதைத் தவிர வேறுவழிகள் இல்லை என்று காலதாமதமாக உணர்ந்த சம்மந்தன் கும்பலும் கஜேந்திரகுமார் கும்பலும் வேண்டாவெறுப்பாக மாணவர்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்தனர்.

அரசியல் விமர்சகராக கருதப்படும் நிலாந்தன் போன்ற சுயநல முதலைகளும், சுமந்திரன் மாவை போன்ற எடுபிடிகளும், கஜேந்திரகுமார் போன்ற சுயநல சந்தர்ப்பவாத அரசியல் கும்பல்களும் வெளிப்படையாக ஆதரவுபோல காட்டிக்கொண்டு இந்த முயற்சியை குழப்புவதற்கு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டிருந்தனர்.  

இந்த ஜனநாயக செயன்முறை விரும்பத் தகாத கால தாமதத்தை ஏற்படுத்தியதுடன் நேரமும் ஓடிக் கொண்டிருந்தது. இந்தப் பின்னணியிலேயே, இறுதிக்கணத்தில், சிவாஜிலிங்கம் அவசர அவசரமாக கொழும்பு சென்று கட்டுப்பணத்தை செலுத்தி, மறுநாள் வேட்பாளர் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

விதிவிலக்கின்றி அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் வழமைபோல் ஜனாதிபதி தேர்தல் பற்றி எந்தவொரு சிந்தனையும் அற்று,  காலத்தைக் கடத்தி, பிச்சைக்கார மனநிலையில் கையேந்தியபடி, சந்தர்ப்பங்களை நழுவவிட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையில், மிகவும் இக்கட்டான சூழ்நிலையில், இறுதிக்கணத்தில் தான் சிவாஜிலிங்கம் அவசர அவசரமாக கட்டுப்பணத்தை செலுத்தி, மறுநாள் வேட்பாளர் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.

இதன்  பின்னர்,நீண்டகால அரசியல் போக்குகளை ஆராய்ந்து ஒரு நீண்டகால நோக்கில் சிந்திக்கும் தன்மையற்ற பலர் சிவாஜிலிங்கத்தை கேலிசெய்ய முற்பட்டனர்.

'கனவான்' வேடம் பூண்ட கையாலாகாத அரசியல்வாதிகளினதும் 'கனவான்' வேடம் பூண்டு வெறுமனே உளறித்தள்ளும் அரசியல் விமர்சகர்களினதும் பார்வையில் அவர் ஒரு நகைச்சுவையாளராக உருவகிப்பட்டதை பகுத்தறிவற்ற பலரும் தங்கள் 'கனவான்' கருத்தாக புலம்பி வருகின்றனர்.  

ஆனால், பல இக்கட்டான சூழ்நிலைகளில் சிவாஜிலிங்கம் துணிந்து செயற்பட்டது வரலாறு.

  • சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளினது பல்வேறு கொலை அச்சுறுத்தல்களின்  மத்தியில், நாய்களைக் கொன்று அவர் வீட்டின் முன்னாள் வீசி மேற்கொண்ட  அச்சுறுத்தல்களின்  மத்தியில், விசாரணை என அழைக்கப்பட்டு மேற்கொண்ட  அச்சுறுத்தல்களின்  மத்தியில், 2009 இன் பின்னர் சிலவருடங்கள் மாவீரர் தினம் அனுட்டிக்கப்பட துணிந்து வெளிப்படையாக தொடர்ச்சியாக செயற்பட்ட அரசியல்வாதி சிவாஜிலிங்கம் என்பதை பல சந்தர்ப்பவாதிகள் மறந்திருக்கலாம்.  
  • அதுபோலவே திலீபனின் நினைவுதினம் அனுட்டிக்கப்பட துணிந்து வெளிப்படையாக தொடர்ச்சியாக செயற்பட்ட அரசியல்வாதி சிவாஜிலிங்கம் என்பதை பல மூடர்கள் மறந்திருக்கலாம்.  
  • பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில் தலைவர் பிரபாகரனின் தாயாரை அனைவரும் கைவிட்டபோது சிவாஜிலிங்கம் துணிந்து அவரது இறுதிக்காலம் வரை என்ற உண்மை அவரை கேலிசெய்யும் மூடர்கள் மறந்திருக்கலாம்.  
  • பல போராளிகளின் நலன்களை பேணுவதில் தனது சக்திக்கேற்ப இன்றுவரை உழைத்து வருபவர்.
  • பாராளுமன்றத்தில் இருந்தபோதும், மாகாணசபையில் இருந்தபோதும், கிடைத்த சந்தர்ப்பங்களை எல்லாம் தவறவிடாமல் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி குரல் கொடுத்தவர்.
  • சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளினது அச்சுறுத்தல்களின்  மத்தியில், ஒவ்வொரு வருடமும் ஐ.நா. வரை சென்று தமிழர் உரிமைகளை வலியுறுத்தி குரல் கொடுத்து  வருபவர்.
  • காணி சுவீகரிப்புகளை தொடர்ச்சியாக எதிர்த்து வருவதால் இன்றும் பல வழக்குகளை சந்தித்து வருபவர்.
  • சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளினது கைக்கூலிகளாக டக்ளஸ் கும்பலின் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகளுக்கு சென்ற அரசியவாதிகளை முன்ணணியில் வழிநடத்திச் சென்றபோது தாக்குதல்களுக்கு உள்ளாகி காலில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி உயிராபத்துக்கு உள்ளாகி மீண்டு வந்தவர்.
  • வடக்கு மாகாண சபையில் தமிழர் உரிமைகளை வலியுறுத்தி சட்டவலுவுடைய பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்ற முன்ணணியில் நின்று உழைத்தவர்.
  • வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட பல சர்ச்சைகள் தீர சமரச முயற்சிகளை வெற்றிகரமாக முன்னெடுத்தவர்.

இவ்வாறு அவர் தனித்தும், சேர்ந்தும் செய்த சாதனைகளை பக்கம் பக்கமாக அடுக்கிக்கொண்டு போகலாம்.

இந்தப் பின்னணியில் தான் சதி முயற்சிகளில் பிரபல்யமான சில சிங்களப் பத்திரிகைகளும், பல்வேறு தமிழின விரோதிகளும், தமிழின கொலைகாரர்களின் எடுபிடிகளும், சிங்கள அரசுகளுக்கு முண்டு கொடுத்து வாழும் சுமந்திரன் போன்றவர்களும் அவர்களின் அடிவருடிகளும் சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

இவர்களுடன் காலங்காலமாக சிங்களவனின் அடிமைகளாக வாழ விரும்புபவர்களும் சிவாஜிலிங்கத்துக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

போல் ஐயா, சிவாஜிலிங்கம் அவர்களின் தமிழ்தேசியப்பற்று நீங்கள் பட்டியலிடாமலே இங்குள்ளவர்களுக்குத் தெரியும். மேலும் அவர் பிரபாகரனின் உறவினர், அந்த வகையிலும் பார்வதி அம்மாவைப் பராமரிக்கும் உரிமையை எடுத்துக் கொண்டவர்!

ஆனால், அரசியல் நடவடிக்கைகளில் அவர் தூர நோக்கில் சிந்திக்காமல் செயல் படும் கோமாளி என்று நீங்கள் குறிப்பிடும் அந்த "சில நூறு அடைமொழிகளால்" (எப்படித் தான் இப்படி வகை வகையாய் அடைமொழிகளை களைக்காமல் எழுதுகிறீர்களோ தெரியாது!) விளிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி பெரும்பாலான தமிழ் மக்களும் கருதுகிறார்கள்!

சர்வதேசத்திற்கு செய்தி சொல்லல், அவர்கள் மனம் மாறி எமக்கு உதவுதல், மாறிவரும் உலக ஒழுங்கு என்று நட்சத்திர ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் பற்றிப் பேசும் இந்த வேளையில் உங்களிடம் சில மாதங்களில் நடக்கக் கூடிய ஒரு நிகழ்வு பற்றிய கேள்வி: சிவாஜிலிங்கம் அவர்களுக்கு ஒன்றோ இரண்டோ வீத தமிழ் வாக்குகள் விழுந்து, கோத்தா அதே விகிதத்தால் முன்னணி வகித்தால், அதனால் வென்றால் சிங்களவருக்கு என்ன இழப்பு? தமிழருக்கு என்ன நன்மை?   

Link to comment
Share on other sites

2 minutes ago, Justin said:

ஆனால், அரசியல் நடவடிக்கைகளில் அவர் தூர நோக்கில் சிந்திக்காமல் செயல் படும் கோமாளி என்று நீங்கள் குறிப்பிடும் அந்த "சில நூறு அடைமொழிகளால்" (எப்படித் தான் இப்படி வகை வகையாய் அடைமொழிகளை களைக்காமல் எழுதுகிறீர்களோ தெரியாது!) விளிக்கப்பட்டவர்கள் மட்டுமன்றி பெரும்பாலான தமிழ் மக்களும் கருதுகிறார்கள்!

எப்படித் தான் இவ்வாறான பொய்களை வாய் கூசாமல் அவிழ்த்துவிடுகிறீர்களோ தெரியவில்லை?

5 minutes ago, Justin said:

சர்வதேசத்திற்கு செய்தி சொல்லல், அவர்கள் மனம் மாறி எமக்கு உதவுதல், மாறிவரும் உலக ஒழுங்கு என்று நட்சத்திர ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் பற்றிப் பேசும் இந்த வேளையில் உங்களிடம் சில மாதங்களில்

இப்படியே யாழ்களத்தில் உண்மைகளை புரட்டிப் போடும் உங்களைப் போன்றவர்களின் வெங்காயக் கேள்விகளுக்கு யாழ் களத்திலேயே பெரும்பாலானவர்கள் பதிலளித்து தங்கள் நேரத்தை விரயம் செய்வதில்லை!  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

6 minutes ago, போல் said:

எப்படித் தான் இவ்வாறான பொய்களை வாய் கூசாமல் அவிழ்த்துவிடுகிறீர்களோ தெரியவில்லை?

இப்படியே யாழ்களத்தில் உண்மைகளை புரட்டிப் போடும் உங்களைப் போன்றவர்களின் வெங்காயக் கேள்விகளுக்கு யாழ் களத்திலேயே பெரும்பாலானவர்கள் பதிலளித்து தங்கள் நேரத்தை விரயம் செய்வதில்லை!  

 

போல் ஐயா, நான் நினைத்த படி தான் துலங்கல் வந்திருக்கிறது! நீங்கள் சட்டியில் இல்லாததைத் தேடி நேரவிரயம் செய்யக் கூடாது என்பது தான் என் வேண்டுகோளும்!😎

இந்தக் கோமாளிக் கூத்து முடிவிற்கு வரும் நாளில் எது  பொய் என்பது விளங்கி விடும்! பொறுத்திருப்போமே!

Link to comment
Share on other sites

தமிழின ஆதரவாளர்கள் தமிழினப் பற்றாளர்கள் சிலரை தமிழினப் படுகொலைகாரர்கள், தமிழின விரோதிகள் கேலி செய்வதும், கோமாளிகளாக உருவகப்படுத்துவதும் காலங்காலமாக நடப்பது தான்.  

இந்த தமிழினப் படுகொலைகாரர்களின், தமிழின விரோதிகளின் அடிவருடிகளும், எடுபிடிகளும் அதேவழியில் தமிழின ஆதரவாளர்களை  தமிழினப் பற்றாளர்களை கேலி செய்வதும், கோமாளிகளாக உருவகப்படுத்துவதும் காலங்காலமாக நடப்பது தான்.

இவர்களைப் பார்த்து சுயபுத்தியில்லாத தமிழர்களும் மேற்படி தமிழின விரோத கும்பல்களுடன் இணைந்து தமிழின ஆதரவாளர்களை  தமிழினப் பற்றாளர்களை கேலி செய்வதும், கோமாளிகளாக உருவகப்படுத்துவதும் காலங்காலமாக நடப்பது தான்.

ஓர் உதாரணமாக வைகோவை சொல்லலாம்.   

 

Link to comment
Share on other sites

2 hours ago, Lara said:

அனந்தி, சிவாஜிலிங்கத்துக்கு கட்டுப்பணம் செலுத்தியதை விட உண்ண உணவில்லாமல் தற்கொலை செய்யும் நிலையிலுள்ள 4 குடும்பத்திற்கு உதவி செய்திருக்கலாம்.

சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது வாக்குகளை பிரிப்பதை விட வேறு எதற்கும் பயன்படாது என்பது அனந்திக்கு தெரியாததல்ல. 

அதிகமான வாக்குகள் இந்த நான்கு வேட்ப்பாளர்களு இடையிலேயே பிரியும். சிவாசிலிங்கம் உட்பட மற்றையயவர்களால் அதிகம் பாதிப்பு முன்னணி வேட்ப்பாளர்களுக்கு இல்லை.

அதிகமான வேட்பாளர்கள் களமிறங்கியிருப்பதால் வாக்குகள்  பிரிந்து செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாகவே கூறப்படுகிறது.  எனினும் 35வேட்பாளர்களுக்கும் வாக்குகள் பிரிந்து செல்லும் என்று  கூறுவதற்கு இடமில்லாவிட்டாலும், பிரதானமான நான்கு வேட்பாளர்கள் மத்தியில்  வாக்குகள் பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகவிருக்கின்றன.  

குறிப்பாக பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ,  ஜனநாயக தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிேரமதாச, தேசிய மக்கள்  சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள்  இயக்கத்தின் வேட்பாளர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஆகியோருக்கிடையிலேயே  வாக்குகள் பிரிந்து செல்லப் போகின்றன.

இருந்த போதும் இரு பிரதான  வேட்பாளர்களான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில்  கடும் போட்டி நிலவும். இதற்கிடையில் அநுரகுமார திஸாநாயக்க 5  இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும், மகேஷ் சேனாநாயக்க 5  இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளையும் எடுப்பார்களாக இருந்தால் பிரதான  வேட்பாளர்கள் இருவருக்கும் இடையில் மிகவும் கடுமையான போட்டி ஏற்படும்.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, போல் said:

தமிழின ஆதரவாளர்கள் தமிழினப் பற்றாளர்கள் சிலரை தமிழினப் படுகொலைகாரர்கள், தமிழின விரோதிகள் கேலி செய்வதும், கோமாளிகளாக உருவகப்படுத்துவதும் காலங்காலமாக நடப்பது தான்.  

இந்த தமிழினப் படுகொலைகாரர்களின், தமிழின விரோதிகளின் அடிவருடிகளும், எடுபிடிகளும் அதேவழியில் தமிழின ஆதரவாளர்களை  தமிழினப் பற்றாளர்களை கேலி செய்வதும், கோமாளிகளாக உருவகப்படுத்துவதும் காலங்காலமாக நடப்பது தான்.

இவர்களைப் பார்த்து சுயபுத்தியில்லாத தமிழர்களும் மேற்படி தமிழின விரோத கும்பல்களுடன் இணைந்து தமிழின ஆதரவாளர்களை  தமிழினப் பற்றாளர்களை கேலி செய்வதும், கோமாளிகளாக உருவகப்படுத்துவதும் காலங்காலமாக நடப்பது தான்.

ஓர் உதாரணமாக வைகோவை சொல்லலாம்.   

 

நீண்டகால நன்மை தராத கோமாளிகளை மக்கள் ஆதரித்துத் தலையில் தூக்கி வைக்காமல் விடுவதும், அதை துரோகம் என்று ஒரு தரப்புத் திட்டுவதும் பிறகு மக்கள் சரியாகத் தான் கணித்திருக்கிறார்கள் என்று சைட் மாறி நின்று திட்டுவதும் காலங்காலமாக நடப்பது தான்!

கஜேந்திரகுமார் சிறந்த உதாரணம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உறுதிமொழி கிடைத்தால் நான் விலகுவேன்’ - எம்.கே.சிவாஜிலிங்கம்

விலகாட்டிலும்,சும்மா லட்சக்கணக்கில வாக்கை அள்ளி குமிச்சுடுவாராக்கும்😂

3 hours ago, ampanai said:

பார்க்கலாம். இதுவரை பொறுமையாக, மௌனமாக, வேட்ப்பாளர்கள் 'என்ன தருவார்கள்' என பார்த்து உள்ளார்கள்.  

 

பந்து சிங்கள கட்சிகள் பக்கம் 🙂 

செம. சஜித், கோட்ட, அனுர எல்லாரும் விம்பிள்டன்ல ஆடீனம். சிவாஜி யாழ்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் கூட அல்ல, வல்வெட்டித்துறையில் ஒரு குச்சொழுங்கையில் ஆடுகிறார். இவர் பந்த அந்தபக்கம் அடிச்சா என்ன கிடந்தா என்ன. சிவாஜியை எல்லாம் ஒரு பொருட்டாய் தமிழ் மக்களே மதியாத போது, சிங்கள கட்சிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டர்கள்.

அது சரி சிவாஜிக்கே இல்லாத பணம், அனந்திக்கு ஏது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

அது சரி சிவாஜிக்கே இல்லாத பணம், அனந்திக்கு ஏது ?

அது எவ்வளவாம் கட்டுப் பணம்? சோலைவரி மாதிரி ஐநூறு ஆயிரமா அல்லது லட்சக்க் கணக்கா?

Link to comment
Share on other sites

14 minutes ago, Justin said:

நீண்டகால நன்மை தராத கோமாளிகளை மக்கள் ஆதரித்துத் தலையில் தூக்கி வைக்காமல் விடுவதும், அதை துரோகம் என்று ஒரு தரப்புத் திட்டுவதும் பிறகு மக்கள் சரியாகத் தான் கணித்திருக்கிறார்கள் என்று சைட் மாறி நின்று திட்டுவதும் காலங்காலமாக நடப்பது தான்!

காலங்காலமாக அரசியல் கோமாளிகள் இப்படித்தான் உளறுவார்கள் என்பதை மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.

 

Link to comment
Share on other sites

எனது பார்வையில். யார் சொல்லுகிறார்கள் என்பது முக்கியம்,

அதற்காக அவர் சொல்வது எல்லாவற்றையும் தலையில் வைப்பதும்,  ஒருவரை கோமாளி என்று முத்திரை குத்தி அவர் சொல்லும் விடயங்களை முழுமையாக நிகாரிப்பதும் சரியாக தெரியவில்லை. 

5 hours ago, ampanai said:

தென்னிலங்கையில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது ஒருவர், தாம் ஆட்சிக்கு வந்தால் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நிறைவேற்றுமென உறுதிமொழி தருவார்களாயின் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து தான் விலகுவேன் என முன்னாள் எம்.பியும் உறுப்பினரும் ஜனாதிபதி வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

 

1. இதன் மூலம் மூலம் இலங்கையில் ஒற்றையாட்சி தொடர்வதையும்

2. தமிழ் மக்கள் பிரச்சனைகளை இந்த அரசியல் முறை ஊடாக தீர்க்க முடியாது

என்பதை சிங்கள மக்களுக்கும், உலகத்திற்கும் கூறி உள்ளது கூட ஒரு வரலாற்று சந்தர்ப்பத்தில் பதிந்ததாகவும் பார்க்கலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாற்றம்   ஒன்றே  மாறாதது

சும்மா  கூட்டமைப்புக்கும் அதன்  பினாமிகளுக்கும்  யால்ரா  போடுவதை  முதலில் நிறுத்தணும்

அதிலிருந்தே மாற்றத்தை  நோக்கி  நகரமுடியும்

இல்லாதுவிட்டால்  தமிழக அரசியல் நிலை  தான்   ஈழத்திலும்😥😥

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Justin said:

அது எவ்வளவாம் கட்டுப் பணம்? சோலைவரி மாதிரி ஐநூறு ஆயிரமா அல்லது லட்சக்க் கணக்கா?

பெரிதாக இல்லை.

கட்சி சார்பாக 50,000.

சுயேட்சை 75000.

3 minutes ago, விசுகு said:

மாற்றம்   ஒன்றே  மாறாதது

சும்மா  கூட்டமைப்புக்கும் அதன்  பினாமிகளுக்கும்  யால்ரா  போடுவதை  முதலில் நிறுத்தணும்

அதிலிருந்தே மாற்றத்தை  நோக்கி  நகரமுடியும்

இல்லாதுவிட்டால்  தமிழக அரசியல் நிலை  தான்   ஈழத்திலும்😥😥

 

முன்பே அம்பனைக்கு பதிலாக பதிந்ததுதான். இப்போ உங்கள் பார்வைக்கும்.

large.659606E2-C057-4590-9478-154A39B1217C.jpeg.26b8bd2a681545c1dfbf5ac2688420ba.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ampanai said:

எனது பார்வையில். யார் சொல்லுகிறார்கள் என்பது முக்கியம்,

அதற்காக அவர் சொல்வது எல்லாவற்றையும் தலையில் வைப்பதும்,  ஒருவரை கோமாளி என்று முத்திரை குத்தி அவர் சொல்லும் விடயங்களை முழுமையாக நிகாரிப்பதும் சரியாக தெரியவில்லை. 

 

1. இதன் மூலம் மூலம் இலங்கையில் ஒற்றையாட்சி தொடர்வதையும்

2. தமிழ் மக்கள் பிரச்சனைகளை இந்த அரசியல் முறை ஊடாக தீர்க்க முடியாது

என்பதை சிங்கள மக்களுக்கும், உலகத்திற்கும் கூறி உள்ளது கூட ஒரு வரலாற்று சந்தர்ப்பத்தில் பதிந்ததாகவும் பார்க்கலாம். 

இந்த செய்தி சொல்லல் அதன் விளைவு பற்றியெல்லாம் பல திரிகளில் அலசியாகி விட்டது! திரும்பவும் வட்டப் பாதையில் விவாதிப்பது நேர விரயம்! 

முதலில் தமிழ் மக்களுக்கு இப்போது இருக்கிற பயங்கள் பிரச்சினைகளை இந்த மாற்றங்கள் எப்படி கூட்டும் அல்லது குறைக்கும் எனப் பாருங்கள்! அதைக் கேட்டால் "வெங்காயக் கேள்வி" எனும் அளவுக்கு மக்கள் மீது அக்கறையுள்ளவர்கள் தான் இப்படி பட்ட சிம்பொலிக் செய்தி சொல்ல இன்னும் சில ஆயிரம் உயிர்கள் பலியானால் பரவாயில்லை எனத் திரிகிறார்கள்!

சிவாஜி அவர்கள் மீது தனிப்பட எதுவும் கோபம் இல்லை! ஆனால் அரசியல் நடவடிக்கையில் அவர்  கோமாளித் தன் செய்தால் "கோமாளி" என்று அழைப்பது தான் சரி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

சிவாஜி அவர்கள் மீது தனிப்பட எதுவும் கோபம் இல்லை! ஆனால் அரசியல் நடவடிக்கையில் அவர்  கோமாளித் தனம் செய்தால் "கோமாளி" என்று அழைப்பது தான் சரி!

உங்களது  இந்த அழைப்பு  சார்ந்து எனக்கும்  உடன்பாடுண்டு

இங்கே  என்ன கேள்வி  வருமென்றால்

அந்தக்கோமாளிக்கு பதிலாக  நீங்கள்  யாரை முன் வைக்கிறீர்கள்??  என்பது  தான்

அது  உங்களிடம்  இல்லாதபோது  கோமாளிகளால் நாசங்கள்  வந்துவிடுவதில்லையே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

உங்களது  இந்த அழைப்பு  சார்ந்து எனக்கும்  உடன்பாடுண்டு

இங்கே  என்ன கேள்வி  வருமென்றால்

அந்தக்கோமாளிக்கு பதிலாக  நீங்கள்  யாரை முன் வைக்கிறீர்கள்??  என்பது  தான்

அது  உங்களிடம்  இல்லாதபோது  கோமாளிகளால் நாசங்கள்  வந்துவிடுவதில்லையே???

தேர்தல் புறக்கணிப்பால், அல்லது அரும்பொட்டில் சிவாஜி அவர்கள் பெறும் தமிழ் வாக்குகளால் கோத்தா ஆட்சிக்கு வந்தால் அது தாயக மக்களுக்கு நாசம் இல்லையென்று நீங்கள் நினைத்தால் நான் உங்களுக்கு மேலதிகமாக  எதுவும் சொல்ல முடியாது!  

ஒரு தரப்பின் மீதான வெறுப்பு ஒரு நாளும் அரசியல் கொள்கையாக முடியாது! 

இங்கே கூட்டமைப்பு மீதும், ரணில் மீதும், கிழக்கில் முஸ்லிம்கள்  மீதும் இருக்கும் வெறுப்பே, வெள்ளைவான் வந்தாலும் பரவாயில்லை, இந்த மூன்று தரப்புகளையும் பழிவாங்குவோம் என்று பலரைப் பேச வைக்கிறது. இது அழிவுப் பாதை என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை!

Link to comment
Share on other sites

30 minutes ago, goshan_che said:

முன்பே அம்பனைக்கு பதிலாக பதிந்ததுதான். இப்போ உங்கள் பார்வைக்கும்.

large.659606E2-C057-4590-9478-154A39B1217C.jpeg.26b8bd2a681545c1dfbf5ac2688420ba.jpeg

 

Do just once what others say you can't do, and you will never pay attention to their limitations again.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

7 minutes ago, Justin said:

தேர்தல் புறக்கணிப்பால், அல்லது அரும்பொட்டில் சிவாஜி அவர்கள் பெறும் தமிழ் வாக்குகளால் கோத்தா ஆட்சிக்கு வந்தால் அது தாயக மக்களுக்கு நாசம் இல்லையென்று நீங்கள் நினைத்தால் நான் உங்களுக்கு மேலதிகமாக  எதுவும் சொல்ல முடியாது!  

ஒரு தரப்பின் மீதான வெறுப்பு ஒரு நாளும் அரசியல் கொள்கையாக முடியாது! 

இங்கே கூட்டமைப்பு மீதும், ரணில் மீதும், கிழக்கில் முஸ்லிம்கள்  மீதும் இருக்கும் வெறுப்பே, வெள்ளைவான் வந்தாலும் பரவாயில்லை, இந்த மூன்று தரப்புகளையும் பழிவாங்குவோம் என்று பலரைப் பேச வைக்கிறது. இது அழிவுப் பாதை என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை!

பேய்க்கும் பிசாசுக்குமிடையில்   நான் வித்தியாசத்தை  காணவில்லை

சில விடயங்களை

கண்ணுக்கு தெரிதல்

கண்ணுக்க தெரியாமையை  வைத்து

வரலாற்றுக்கணிப்புக்களை  செய்வது மிகமிக ஆபத்தானது

காலம் தான்  பதில்  தரும்

நாமெருவரும்  கூட அதை  பார்க்காது   போகலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

 

பேய்க்கும் பிசாசுக்குமிடையில்   நான் வித்தியாசத்தை  காணவில்லை

சில விடயங்களை

கண்ணுக்கு தெரிதல்

கண்ணுக்க தெரியாமையை  வைத்து

வரலாற்றுக்கணிப்புக்களை  செய்வது மிகமிக ஆபத்தானது

காலம் தான்  பதில்  தரும்

நாமெருவரும்  கூட அதை  பார்க்காது   போகலாம்

என்ன விசுகர் இது? பகிடியா விடுகிறீர்கள்? 2005 இல் இதே விவாதம், மகிந்த வரவு, வந்த ஆபத்தை 2009 இல் காணாதவர் மாதிரியல்லவா பேசுகிறீர்கள்? அதன் பிறகும் வந்து "மகிந்தவை வர வைத்தது தலைமையின் இராஜதந்திரம்!" என்று எழுதினீர்களே?

காலம் 2009 முதல் 2015 வரை தொடர்ந்து பதில் சொல்லி விட்டது! நாம் தான் கண்ணை மூடிக் கொண்டு தெரியவில்லை என்கிறோம்!

ஆபத்தை உணர்ந்தவர்கள் சுட்டிக் காட்ட வேண்டியது  கடமை! ஏனெனில் இப்போது சுட்டிக் காட்டா விட்டால்,  அடிக்கடி சொல்லப் படுவது போல "புலிகளின்/தமிழரின் அழிவுக்கு எல்லாத் தமிழரும் காரணம்!" என்று விமரசனம் வைப்போரை வாயடைக்க வைக்கும் வேலை நடக்கும்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜஸ்டின் அண்ணா,

மாற்றம், மாற்றம் என்று ரஜினி பட டலயாக் எல்லாம் கேட்க நல்லாய் இருக்கும்.

இவர்கள் சுகமாக வெளிநாட்டில் இருந்தபடி, எமது மக்களை சோதனை எலிகளாக்கி மாற்றத்தை பரிதோனை செய்ய நினைக்கும் இவர்களின் பேச்சில் துளியளவும் தார்மீகம் இல்லை.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்னும் இப்படியானவர்களுடன் நானும் நீங்களும் இன்னும் சிலரும் உண்மையை எடுத்துரைக்க படாதபாடு படுவோம். சங்கு காதில் ஏறவே ஏறாது.

தேர்தல் அன்று, நாம் இங்கே என்ன சொன்னோமோ அதையேதான் மக்களும் சொல்லி இருப்பார்கள்.

2012 வடமாகாண சபை தேர்தலில் இருந்து இதுதான் வழமை.

இவர்களை இப்படியே விட்டுவிடுங்கள். எம் மக்களின் புத்திசாதுரியத்தின் மீது எனக்கு அளப்பரிய நன்மையுண்டு.

நபம்பர் 16இல் எல்லா மாற்ற மாணிக்கங்களுக்கும் மக்கள் மணி கட்டுவார்கள்.

35 minutes ago, ampanai said:

 

Do just once what others say you can't do, and you will never pay attention to their limitations again.

 

ஜேம்ஸ் குக்கின் மரணம் எப்படி சம்பவித்தது என்பதை தெரிந்தவர்களுக்கு, முட்டாள்தனமாக மாற்றத்தை ஏற்படுத்துவதின் ஆபத்து புரியும் 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 இல் போனபோது 1000 ரூபாய் கேட்டு போராடி கொண்டிருந்தனர். 1000 ரூபாய் ஆக்கிய கையோடு, அதன் பெறுமதி 300 ஆகிவிட்டது. இப்போ 1700…. பாவப்பட்ட சனங்கள். இதில் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் கட்சியே போராட்டம் நடத்தும் கண்துடைப்பு வேற.
    • கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த இளைஞர் பிணை கோருவதை எதிர்பார்க்கவில்லையாம்! 19 APR, 2024 | 05:05 PM   கனடாவின் ஒட்டாவாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் பிணை கோருவதை எதிர்ப்பார்க்கவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 19 வயதான  குறித்த இளைஞன் கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் மீது ஆறு கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.    கல்விக்காக கனடா சென்றிருந்த அவர், அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன் அவர் மீதான வழக்கின் முதற்கட்ட விசாரணைக்கு நாட்கள் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181473
    • எனது பதிலும் மனிதன் தான். ஆனால், விளக்கம் நாளாந்த வாழ்க்கையோடு. இதில், நடக்கும் என்பதற்கு நடை மட்டும் என கருது எடுக்காது, நடக்கும் (இயங்கும்) விலங்கு. காலை பொழுது : 4 கால் , உறங்கம், உறக்கத்தில் இருந்து எழுவது. மதியம் : நடை  அந்தி மயங்கி,  இயங்க விரும்புவது ... ஆணும், பெண்ணும் 3 'கால்களில்'  இயங்குவது. 
    • மக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 51.41% வாக்குப்பதிவு 19 ஏப்ரல் 2024, 01:31 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7:00 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதியம் 3:00 மணிவரை மொத்தம் சராசரியாக 51.41% வாக்குகள் பதிவாகிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட வாக்காளர்கள் தங்களது ஆவணங்களோடு, தங்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். இந்தத் தேர்தலில் பொதுமக்களுடன், முக்கியத் தலைவர்களும் பிரபலங்களும் வாக்களித்து வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எஸ்.ஐ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தினருடன் நடந்தே சென்று வாக்கு செலுத்தினார். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி வாக்கு சாவடியில் அண்ணாமலை வாக்களித்தார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். சேலம் சிலுவம்பாளையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிதம்பரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம், சென்னை சாலிகிராமத்தில் பா.ஜ.க தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்களித்தனர். தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌம்யா அன்புமணியும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் வாக்களித்தனர்.   தமிழகத்தில் 51.41% வாக்குப்பதிவு தமிழகத்தில் மதியம் 3:00 மணியின் வாக்குப்பதிவு நிலவரத்தை தேர்தல் ஆனையம் வெளியிட்டிருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் 51.41% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதிகபட்சமாக தர்மபுரியில் 57.86% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. அதைத்தொடர்ந்து இரண்டாமிடத்தில் 57.67% வாக்குகளுடன் நாமக்கல்லும், 57.34% வாக்குகளுடன் கள்ளக்குறிச்சியும் இருக்கின்றன. மாநிலத்திலேயே ஆகக்குறைவாக மத்திய சென்னை தொகுதியில் 41.47% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. முன்னர் செய்தியாளர்களிடம் பேசியிருந்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, வெயில் அதிகமாக இருப்பதும் சென்னையில் குறைந்த அளவே வாக்குகள் பதிவானதற்கு காரணமாக இருக்கலாம் என்றார். அதற்காக வாக்குச்சாவடிகளில் பந்தல், இருக்கைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும் தெரிவித்தார். படக்குறிப்பு,வெறிச்சோடிக் காணப்பட்ட பரந்தூர் வாக்குச்சாவடி தேர்தலைப் புறக்கணித்த தமிழக கிராமங்கள் பரந்தூர் கிராமம், காஞ்சிபுரம்: சென்னை விமான நிலையத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையை எதிர்த்து 600 நாட்களுக்கும் மேலாக பரந்தூர் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக பரந்தூர் மக்கள் கூறுகின்றனர். மொத்தம் 1,375 வாக்குகள் உள்ள இந்தக் கிராமத்தின் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க போவதில்லை என்றும் அம்மக்கள் பிபிசி தமிழிடம் கூறினர். திருமங்கலம் தொகுதியில் 5 கிராமங்கள்: விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் 5 கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் கோழிக் கழிவு மூலம் உற்பத்தி செய்யப்படும் கெமிக்கல் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னம்பட்டி, ஓடைப்பட்டி, சோளம்பட்டி, பேக்குளம், உன்னிப்பட்டி ஆகிய கிராம பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு முன்னிட்டு புறக்கணித்து வருகின்றனர். படக்குறிப்பு,தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குசாவடி மையம் வெறிச்சோடி காணப்பட்டது ஜோதிஅள்ளி கிராமம், தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஜோதிஅள்ளி கிராமத்தில் ரயில்வே தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் நாடாளுமன்ற ஒட்டுமொத்த கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்திருக்கின்றனர். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிம் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதிஹள்ளி கிராமத்தில் நீண்ட நாட்களாக ரயில்வே தரைபாலம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கையை முன்வைத்து வந்தனர். இதுவரை எந்த அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தவராததால் ஒட்டுமொத்த கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். இக்கிராமத்தில் 1,436 வாக்குகள் உள்ளன. இதுவரை ஒருவாக்கு கூட பதிவாகவில்லை. பொட்டலூரணி, தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் அப்பகுதியிலுள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொட்டலூரணி கிராமத்தில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையில் பணியாற்றுபவர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சுற்றி மூன்று தனியார் மீன் கழிவு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் மற்றும் இரவு நேரங்களில் வெளியேறும் நச்சுப் புகை காரணமாக அந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள், நோயாளிகள், பொதுமக்கள் ஆகியோர் மூச்சுத் திணறல் மற்றும் பல்வேறு சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர். இந்த மீன் கழிவு ஆலைகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக மூட வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக பொட்டலூரணி கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வீடுகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் கருப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கிராமத்தில் மொத்தம் உள்ள 931 வாக்குகளில் இதுவரை 15 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. படக்குறிப்பு,தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுள்ள வேங்கைவயல் கிராம மக்கள் வேங்கைவயல், புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் வாக்களிக்க வராமல் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி ஒரு பிரிவினர் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்த விவகாரத்தில் ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை சிபிசிஐடி போலீசாரால் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக 139 நபர்களிடம் வாக்குமூலம் பெற்று அதில் 31 நபர்களிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனையும் இரண்டு பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் செய்யப்பட்டது. டிஎன்ஏ மாதிரி பரிசோதனை ஒருவருக்கு கூட ஒத்து போகாததால் சிபிசி விசாரணை பின்னடைவை சந்தித்துள்ளது. குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடிக்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக வேங்கை வயல் கிராம மக்கள் அறிவித்திருந்தனர். குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரை தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறியுள்ளனர். பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். பட மூலாதாரம்,UGC சென்னையில் வாக்களித்த திரைப்பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தமிழ் திரைப்படப் பிரபலங்கள் வாக்களித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைச் செலுத்தினார். அதேபோல் நடிகர் தனுஷ்-உம் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியிலுள்ள வாக்குச்சாவடியில் தனது வக்கைச் செலுத்தின்னார். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் பாரதி தாசன் தெருவில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில், அதே பகுதியில் வசிக்கும் நடிகர் அஜித்குமார், தனது வாக்கை பதிவு செய்ய செய்தார். முதல் நபராக வரிசையின் நின்று தனது வாக்கை அவர் பதிவு செய்தார். நடிகர் சிவகார்த்திகேயன் சென்னையில் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அப்போது பேசிய அவர், “புல்லட்டை விட வலிமையானது வாக்கு, வாக்களித்தால் தான் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க முடியும்,” என்றார். அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். சென்னை விருகம்பாக்கத்தில் இயக்குநர் வெற்றிமாறன் வரிசையில் நின்று காலையிலேயே தனது வாக்கைச் செலுத்தினார். சென்னை தி.நகரில் நடிகர் பிரபு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இன்று விடுமுறை என்று கருதி வீட்டில் இருக்க வேண்டாம். வாக்களிப்பது ஜனநாயக உரிமை. உங்கள் விருப்பப்படி அனைவரும் வாக்களியுங்கள்," என்றார். பட மூலாதாரம்,UGC உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 96 கோடியே 88 லட்சத்து 21 ஆயிரத்து 926 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 49,72,31,994 ஆண் வாக்காளர்களும், 47,15,41,888 பெண் வாக்காளர்களும், 48,044 மூன்றாம் பாலின வாக்காளர்களும் உள்ளனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மொத்தமாக 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.06 கோடி ஆண்கள், 3.17 கோடி பெண்கள் மற்றும் 8,467 மூன்றாம் பாலினத்தவர்கள் அடங்குவர். தமிழ்நாட்டில் ஆண்களைவிட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம். மேலும் தமிழ்நாட்டில், நூறு வயதை எட்டிய 8,765 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயதுக்கு உட்பட்ட, முதல்முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 10.92 லட்சம். இதே இந்தியா முழுவதும் 100 வயதைக் கடந்தவர்களின் எண்ணிக்கை 2,38,791. 18-19 வயதுக்குட்பட்ட முதல் முறை வாக்காளர்களின் எண்ணிக்கை 1,84,81,610 ஆகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். யாரெல்லாம் வாக்கு செலுத்தலாம்? இந்திய தேர்தல் தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் என அங்கீகரிக்கப்பட்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் வாக்கு செலுத்த முடியும். ஆனால், அதற்கு அந்த நபர் குறிப்பிட்ட தொகுதிக்குள் வரையறுக்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். இதுவரை வாக்காளர் பட்டியலில் இடம்பெறாதவர்கள் வாக்கு செலுத்த முடியாது. அதே போல் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகள் வாக்கு செலுத்த முடியாது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உங்கள் வாக்குச்சாவடி மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை அறிந்துக் கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. உங்கள் வாக்குச்சாவடியை அறிவது எப்படி? உங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறதா என்பதை அறிய அதற்காக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இணையதளத்திற்கு ( https://electoralsearch.eci.gov.in/ ) சென்று உங்களது விவரங்களை உள்ளிட்டு தேடிப் பார்க்கலாம். அதே தளத்தில் உங்களது வாக்குச்சாவடி குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், voters.eci.gov.in என்ற இணையதளத்திலும் இந்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இதற்கு உங்களுடைய வாக்காளர் எண் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் 1950 என்ற எண்ணை அழைத்தோ அல்லது ECI என்று டைப் செய்து, ஓர் இடைவெளி விட்டு, உங்களின் EPIC எண்ணைப் (வாக்காளர் எண்) பதிவிட்டு குறுஞ்செய்தி அனுப்பியோ விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம். பொதுவாக வாக்குச் சாவடிகள் உங்களது வீட்டிலிருந்து சுமார் 2 கி.மீ. தூரத்திற்குள் இருக்கும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாக உங்கள் தொகுதியின் வேட்பாளர் யார் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். உங்கள் தொகுதி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இதற்காக வழங்கப்பட்டுள்ள பக்கத்திற்கு (https://affidavit.eci.gov.in/CandidateCustomFilter) சென்று, எந்த மாநிலத்தில் எந்தத் தொகுதி எனத் தேர்வுசெய்தால், அந்தத் தொகுதியில் போட்டியிட அனுமதிக்கப்பட்ட வேட்பாளர்கள், அவர்களது சொத்து விவரங்கள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளலாம். வாக்குச் சாவடியிலும் வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் அவர்களது சின்னங்கள் ஒட்டப்பட்டிருக்கும். வாக்குச்சாவடிக்கு என்னென்ன எடுத்து செல்ல வேண்டும்? ஒவ்வொரு வாக்காளருக்கும் அவரது தொகுதியின் அடிப்படையில் அவர்களது பகுதியிலேயே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கும். அந்த வாக்காளர் அவருக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் தான் வாக்கு செலுத்த முடியும். அப்படி வாக்கு செலுத்த போகும்போது, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதாவது ஒன்றை எடுத்துச் செல்ல வேண்டும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்குச்சாவடிக்கு செல்லும்போது அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அடையாள அட்டைகள் என்னென்ன? வாக்காளர் அடையாள அட்டை ஆதார் அட்டை பான் அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வங்கி அல்லது தபால் நிலையத்தில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம் தொழிலாளர் நல அமைச்சகம் வழங்கியுள்ள உடல்நலக் காப்பீட்டு அட்டை ஓட்டுநர் உரிமம் பாஸ்போர்ட் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை மகாத்மா காந்தி 100 நாள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கான அட்டை மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். வாக்குச் சாவடியில் என்ன நடக்கும்? வாக்காளர்கள் வாக்குப்பதிவுக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரி ஒருவர், வாக்காளர் பட்டியலில் உள்ள உங்கள் பெயரையும் உங்கள் அடையாள அட்டையையும் சரிபார்த்து, சத்தமாக அதனை அறிவிப்பார். அதற்குப் பிறகு மற்றொரு தேர்தல் அலுவலர் உங்களது இடது கை ஆள்காட்டி விரலில் அழியாத மையை வைத்து, ஒரு ஸ்லிப்பை அளிப்பார். பின்னர் படிவம் 17 இல் கையெழுத்திட வேண்டும். இதற்கு அடுத்த அதிகாரியிடம் நம்மிடம் உள்ள ஸ்லிப்பை கொடுத்தால், அவர் நம்மை வாக்களிக்கும் இயந்திரத்தில் வாக்களிக்க அனுமதிப்பார். வாக்களிக்கும் இயந்திரத்தில் விரும்பும் வேட்பாளர் அல்லது சின்னத்திற்கு எதிரில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். பீப் என்ற ஒலி ஏற்பட்டால், உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக அர்த்தம். அருகில் உள்ள VVPAT (வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை) எந்திரத்தில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்களோ அவர்களது பெயர், சின்னம் ஆகியவை ஒரு காகிதத்தில் அச்சிடப்பட்டு 7 விநாடிகளுக்குத் தெரியும். இத்துடன் வாக்களிப்பது நிறைவடையும். பீப் சத்தம் வராவிட்டாலோ, விவிபாட் இயந்திரத்தில் எதுவும் தெரியாவிட்டாலோ, தேர்தல் அலுவலரை அணுக வேண்டும். உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்தி விட்டால் என்ன செய்வது? உங்கள் வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக நீங்கள் கண்டறிந்தால் நீங்கள் பதற்ற படவோ, திரும்பி வந்து விடவோ வேண்டாம். அங்கேயே உங்களது வாக்கை நீங்களே பதிவு செய்ய முடியும். அதற்கு வாக்குச் சாவடியின் தலைமை அதிகாரியிடம் புகார் அளித்து, அதற்கென உள்ள கோரிப் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் (Tendered Ballot Paper) வாக்களிக்கலாம். இது தனியாக ஒரு உறையில் வைக்கப்படும்.   பட மூலாதாரம்,DIPR படக்குறிப்பு,தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் என்ன? தமிழ்நாட்டில் இன்று தொடங்கியுள்ள வாக்குபதிவில், 3.32 லட்சம் தேர்தல் அலுவலர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினரும் தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்திருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் மொத்தமாக 68,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 8,050 வாக்குச் சாவடிகள் பதற்றமானவையாகவும், 181 வாக்குச் சாவடிகள் மிகப் பதற்றமானவையாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சான்றிதழ் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு வருவதற்கு மாநில அரசின் பேருந்துகளைப் பயன்படுத்தினால், கட்டணம் செலுத்தத் தேவையில்லை. தேவைப்பட்டால், 1950 என்ற எண்ணை அழுத்தி, வாகன வசதிகளையும் ஏற்பாடு செய்துகொள்ளலாம். மேலும் அவர்களுக்கு வாக்குச் சாவடிகளில் முன்னுரிமை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,50000த்திற்கு அதிகமான பணம் எடுத்து செல்ல வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் உண்டு. பணம் எடுத்து செல்வதற்கான கட்டுப்பாடுகள் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் 50,000த்திற்கும் மேல் பணம் எடுத்து செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்நிலையில் இன்று வாக்குப் பதிவு நிறைவடையும் வரை அதே விதி நீடிக்கும். ஆனால், உரிய ஆவணங்கள் இருந்தால், அந்தப் பணத்தையோ, பொருட்களையோ பறிமுதல் செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் 18வது மக்களவைத் தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஒட்டுமொத்த தேர்தல்களுக்கான முடிவுகள் ஜூன் 4 2024 அன்று வெளியிடப்படும். https://www.bbc.com/tamil/articles/cd13q41gzl7o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.