Jump to content

‘உறுதிமொழி கிடைத்தால் நான் விலகுவேன்’ - எம்.கே.சிவாஜிலிங்கம்


Recommended Posts

2015 ஜனாதிபதி தேர்தலில் இலங்கை முழுவதிலும்,

மைத்திரி - 6,217,162 (51.28%)

மகிந்த - 5,768,090 (47.58%)

மைத்திரி மகிந்தவை விட 449,072 வாக்குகள் கூடுதலாக பெற்றிருந்தார்.

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, விசுகு said:

 

கருத்துக்களை  வைக்கும்போது  எழுந்தமானத்துக்கு 

எம்மை வெளிநாட்டில்  வாழ்வதால்  என்று அடைமொழிக்குள்  நீங்களாகவே எம்மை புகத்தி எழுதாதீர்கள்

அப்படியாயின்  எம்மாலும் உங்களைப்பற்றி  எழுதமுடியும்

இங்கு  நியாயமாக  தமிழ்  மக்களின் நீண்டநாள் பிரச்சினைகளுக்கு  தீர்வை  எவ்வாறு யாரால்  பெற்றுத்தரமுடியும்

இதுவரை  முடிந்திருக்கிறதா? 

முடியாதவரை  என்ன  செய்வது என்று  ஆதங்கத்துடனேயே  கருத்துக்களை  வைக்கின்றோம் 

அவற்றை  உதாசீனப்படுத்தி 

ஏதோ  எமது சுயநலங்களுக்காக சண்டையை  விரும்புகின்றோம்  என்பது எம்மை  மட்டுமல்ல  உங்களை  நீங்களே ஏமாற்றிக்கொள்வது தான்.

கீழே முகநூலில்  ஒருவர்  எழுதியதை  பதிகின்றேன்

இவரது  கருத்துக்கும் எமக்கு  எழுதியது போல்  நீங்கள் பதிலளிக்கமுடியாது

காரணம்  அவர்  அதே  நிலத்திலிருந்:து எழுதுகிறார்.

 

தேர்தலைப் புறணிப்பது பற்றி கதை எடுத்தால் சில பயலுகள் உடனே கேட்கிறாங்கள்,

"2005 இலே பகிஸ்கரித்ததாலே வந்த விளைவு தெரியும்தானே?" என்று.

ஆனால் பகிடி என்னவென்றால், அப்பிடி கேட்கிறவர்கள் எல்லாம், "எப்படா இந்த சண்டை முடியும் என்று காத்திருந்தவர்கள். 2009க்குப் பின்னரான சூழலை, நிம்மதி எனக் கொள்பவர்கள், முத்தையா முரளிதரன் சொன்னதையே தம் மனதுக்குள் தினமும் நினைப்பவர்கள்..."

அந்த அடிப்படையில் பார்த்தால் இவர்களும் முரளி மாதிரி மகிந்த ரெஜிமுக்குத்தான் நன்றி சொல்ல வேணும்!

ஆனால் இவர்கள் என்னடாவெண்டால், "இந்த நாட்டில் ஆர் யுத்தத்தத்தை ஆரம்பித்து வைத்தார்களோ அவர்களை நம்புகிறார்கள்"

இந்த முரண்நகை எனக்கு விளங்குதில்லை!
இந்த விசயத்திலை, சும்மா சொல்லக்கூடாது, முரளியின் வெளிப்படைத் தன்மையைப் பாராட்ட வேணும்!

ஒருவேளை இன்னொரு யுத்தம் வேண்டும் என நினைக்கிறார்களோ?

 

https://www.facebook.com/gnanadas.kasinathar

யாரையும் தனிப்பட்டு விமர்சிக்கவில்லை.

மற்றும்படி இதுவிடயமாக சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டதால் இன்னும் விவாதத்தை நீடிக்க விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Justin said:

மேல்தட்டு ஆட்களுக்கு தான் ஆபத்து என்கிறார், வெள்ளைவானில் கொண்டு செல்லப் பட்டோருக்கு காசு செலவழித்து சோறு போட்டார்களாம் என்கிறார்! தலையில்லாத முண்டங்களாக உடல்கள் கிடைத்ததையும், வெறும் ஐம்பதினாயிரம் ரூபாய்க்காகவே மனிதர்கள் கொல்லப் பட்டதையும் அறிந்தவர்களுக்கு விசர் வராதா இதைக் கேட்டால்?

உங்களுக்குப் புரியாது, உங்களுக்கு ஊரில் இப்ப நடப்பதும் தெரியாது 2009௨015 இல் நடந்ததும் தெரியாது. 

என்ன அண்ணை.. தமிழை வாசிச்சு கிரகிப்பதில் ஏதும் சிக்கலோ 
நான் எப்ப அண்ணை வெள்ளை வேன்களில் தூக்கி மூன்று வேளை சோறு போட்டார்கள் என்று சொன்னேன் ...?
நீங்கள் கூறுவது போல கும்பல் கும்பலாக தூக்கி போட்டுத்தள்ளி  அதனை Justify பண்ணும்நிலையில் முன்பிருந்தது போல ஒரு நிலை இப்போது இல்லை என்று தான் சொன்னேன். இனி தூக்கினால் சோறு போடவேண்டிதான் வரும். உந்த அம்பத்தாயிரம் மாதிரி பலகதைகள் உண்டு , ராணுவத்தோட  நாலு நாள் கதைச்சு அவனோட துப்பாக்கியை தூக்கி பார்த்துவிட்டு அந்தத்தைரியத்தில்  நாலுவீடு தள்ளி போன் பன்னி  சந்தைக்கு போன மனுஷனை வெள்ளை வானிலை தூக்கிட்டோம் உடனடியாக ஒரு லட்சம் இந்த வங்கிக்கணக்கிற்கு போட்டுவிடு என்று சொல்லி போனை கட் பண்ணமுன் சந்தைக்கு போன கணவன் வீடு வந்து சேர்ந்த கதையும் நடந்திருக்கு. சத்தியமாக நம்புங்கோ இதுக்கும்  காரணம் கோத்தா தான்...வெள்ளை வானில் தூக்குப்பட்டு காணாமல் போனவர் லண்டனில் அசைலம் அடிச்ச கதையும் உண்டு...சத்தியமாக நம்புங்கோ அதுவும் கோத்தா கைங்கரியம் தான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2019 at 7:27 PM, Justin said:

தேர்தல் புறக்கணிப்பால், அல்லது அரும்பொட்டில் சிவாஜி அவர்கள் பெறும் தமிழ் வாக்குகளால் கோத்தா ஆட்சிக்கு வந்தால் அது தாயக மக்களுக்கு நாசம் இல்லையென்று நீங்கள் நினைத்தால் நான் உங்களுக்கு மேலதிகமாக  எதுவும் சொல்ல முடியாது!  

ஒரு தரப்பின் மீதான வெறுப்பு ஒரு நாளும் அரசியல் கொள்கையாக முடியாது! 

இங்கே கூட்டமைப்பு மீதும், ரணில் மீதும், கிழக்கில் முஸ்லிம்கள்  மீதும் இருக்கும் வெறுப்பே, வெள்ளைவான் வந்தாலும் பரவாயில்லை, இந்த மூன்று தரப்புகளையும் பழிவாங்குவோம் என்று பலரைப் பேச வைக்கிறது. இது அழிவுப் பாதை என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை!

மிகச்சரியான கணிப்பு. ஆனால் கூட்டமைப்பே கோட்டாவை ஆதரிப்பார்கள் போலுள்ளதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2019 at 3:49 PM, Justin said:

இந்த விவகாரம் எனக்கு உணர்ச்சிபூர்வமான விவாதமாகி மாறி சிலரைத் திட்ட வேண்டிய அளவுக்கு வந்து விட்டது! அக்னி மன்னிக்க வேண்டும்! 

நேற்றே கோசான் விட்டு விடும்படி சொன்ன போது கேட்டிருக்க வேண்டும்! 

கோத்தாவை வரவைக்கும் எந்த நடவடிக்கையும் path to perdition என்பதே இது பற்றிய என் கடைசிப் பதிவு! அனைவரும் தொடர்ந்து உரையாடுங்கள்! 

அதுசரி சஜித் வந்தால் சரத் போன்சேகாதான் பாதுகாப்பு அமைச்சர் என்றும்  பேச்சு அடிபடுகிறதே??

Link to comment
Share on other sites

7 minutes ago, Eppothum Thamizhan said:

அதுசரி சஜித் வந்தால் சரத் போன்சேகாதான் பாதுகாப்பு அமைச்சர் என்றும்  பேச்சு அடிபடுகிறதே??

சஜித்துக்கு நம்பிக்கையாக செயற்படுவேன்- பொன்சேகா உறுதி

sarath_fonseka--621x414

எவ்வித இன, மத, பிரதேச பேதங்களுமின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணி நேற்று வாரியபொல நகரில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சஜித் பிரேமதாச என்னிடம் ஒப்படைப்பதாக கூறியிருக்கின்றார். நான் அவருடைய நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் விதமாக புதிய அரசாங்கத்தில் எனது பொறுப்பை நிறைவேற்றுவேன் எனவும் பொன்சேகா எம்.பி. மேலும் கூறியுள்ளார். 

http://www.dailyceylon.com/190935/

Link to comment
Share on other sites

சஜித்தும் கோத்தாவும் கொழுக்கட்டையும் மோதகமும் மாதிரித்தான் 🙂 

Link to comment
Share on other sites

6 hours ago, Eppothum Thamizhan said:

அதுசரி சஜித் வந்தால் சரத் போன்சேகாதான் பாதுகாப்பு அமைச்சர் என்றும்  பேச்சு அடிபடுகிறதே??

2010 இல் சரத்பொன்சேகா சனாதிபதித் தேர்தலில் நிற்கும் போது அவருக்கு அதிகப்படியான வாக்கு வீதம் கிடைத்தது தமிழ் பகுதிகளில் இருந்து தான். மஹிந்தவுக்கு எதிராக எவர் நின்றாலும் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற அளவுக்கு தமிழ் மக்களிடம் மகிந்த வெறுப்பு இருந்தது. இப்பவும் வடக்கில் அந்த வெறுப்பில் பெரிய மாற்றம் இல்லை.

Link to comment
Share on other sites

55 minutes ago, நிழலி said:

இப்பவும் வடக்கில் அந்த வெறுப்பில் பெரிய மாற்றம் இல்லை.

நேரடியாக அறிந்த அனுபவங்களின் அடிப்படையிலான கருத்து என்டு நினைக்கிறன்!

Link to comment
Share on other sites

33 minutes ago, Rajesh said:

நேரடியாக அறிந்த அனுபவங்களின் அடிப்படையிலான கருத்து என்டு நினைக்கிறன்!

ஓம்.

வெறுப்பு மட்டுமல்லாமல் அச்சமும் காணப்படுகின்றது வடக்கில்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு முகநூலில் படித்தது!
 

அடே தமிழா.....
உங்களை ஆயுதம் தூக்க சொல்லவில்லை.
ஒரு குண்டை கட்டிக்கொண்டு வெடிக்கச் சொல்லவில்லை...
நீங்கள் கொஞ்சம்மேனும்சிந்தியுங்கள்!!!!
நாங்கள் தமிழர்கள் இது தமிழரின்தேசம் !!
சிங்களவனே சொல்கிறான் அடிக்கடி வடக்கு கிழக்கு மக்களை பார்த்து எச்சரிக்கறான் மீண்டும் இரத்த ஆறு ஓடும் ஏன்று ....புத்தனுக்கே தெரிகிறது , புரிகிறது அது தமிழர்களின் தேசம் ஏன்று ?

தேசம் என்பதைக்கூட விடு நாங்கள் மனிதர்கள்தானே?
பத்து வருடத்திற்கு முன் ஒரு மாபெரும் மனிதப்படுகொலையினை செய்தவனை
புனிதப்படுத்தாதீர்கள்!!
உங்களுக்கு முன் ஒரு சந்ததி செத்ததையும் அவர்கள் செய்த தியாகத்தைகொச்சை படுத்தாதீர்கள்.

இவன் உங்களை தேடி வரும்போது கூட தனது மெய்பாதுகாவலுடன் தானே வருகிறான்.

அந்த தமிழ் மண்ணில் ஆழத்தில் புதையுண்ட புலிப்பயத்தை பலியாக்கதீர்கள் பண்புள்ளவரே!!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.