Jump to content

தான் ஒரு இனவாதி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் கோத்தா!


Recommended Posts

தான் ஒரு இனவாதி என்பதை மீண்டும் காட்டியுள்ளார் கோத்தபாய என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சுட்டிக் காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

எதிர்வரும் பதினாறாம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற்றால் பதினேழாம் திகதி சிறையில் உள்ள அனைத்து இராணுவத்தினரையும் விடுதலை செய்வதாக இனவாத பேச்சுடன் அனுராதபுரத்தில் தனது பரப்பரையை ஆரம்பித்திருக்கிறார் கோத்தபாய.

பல்லின மக்கள் வாழும் இலங்கை தேசத்தில் ஒரு ஜனாதிபதியானவர் அனைத்து இனங்களையும் சமமாக பார்க்க வேண்டும்.

தமிழர்களின் உரிமைக்காக போராடி அரசியல் கைதிகளாக இருபது வருடங்களுக்கு மேலாக சிறையில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை புறக்கணித்து சிங்கள இராணுவத்திற்காக மனமிரங்கி பேசும் கோத்தபாயாவை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது?

கோத்தபாயாவினது வருகை தமிழ் மக்களுக்கு ஆபத்தானதாகவே அமையும்.

சிறையில் உள்ள சிங்கள இராணுவத்தினர் பல சமூக குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறும் கோத்தபாய ஏன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி வாய் திறக்கவில்லை.

இதிலிருந்து தெரிகிறது சிங்கள ஆட்சியாளர்களின் இதயம் இரும்பினால் ஆனதென்று. தமிழ் மக்கள் சுய கௌரவத்துடன் வாழ்வதை அவர்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள் தமிழ் மக்களை புறக்கணித்து சிங்கள ஆட்சியாளர்களால் ஒருபோதும் தனித்து ஆட்சி அமைத்துவிட முடியாது. அது எவராக இருந்தாலும் சரி.

உங்கள் குறிப்பேடுகளில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் பிரதான சிங்கள வேட்பாளர்களின் வெற்றிகளை வடக்கு கிழக்கு தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள். இனவாத விஷத்தை உமிழாத ஒருவரையே தமிழ் மக்களும் விரும்புவார்கள் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் அவர்கள் தெரிவித்தார்.

https://www.ibctamil.com/srilanka/80/129293?ref=rightsidebar

Link to comment
Share on other sites

34 minutes ago, போல் said:

சிறையில் உள்ள சிங்கள இராணுவத்தினர் பல சமூக குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்கள் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறும் கோத்தபாய ஏன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி வாய் திறக்கவில்லை

நியாயமான, கேட்கப்பட வேண்டிய கேள்வி. கோத்தாவை ஆதரிக்கும் தமிழ் கட்சிகளுக்கும் இதற்கான பதிலை கூற வேண்டிய தார்மீக கடமை உள்ளது.

அதேவேளை, மற்றைய வேட்பாளர்கள் கூட தமிழ் அரசியல் கைதிகள் பற்றியோ இல்லை வேறு எந்த கேள்விகளுக்கோ பதில் கூறவில்லை. எனவே, அவர்களும் இவ்வாறான, தமிழின விரோத கொள்கைகளையே கொண்டுள்ளார்கள்.   

----------------------------

எமது  மக்களின் கோரிக்கைகள் - சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முருகேசு சந்திரகுமார்

1.   அரசியல் தீர்வுக்கானது

இலங்கைத்தீவானது பல்லினச் சமூகங்களை உள்ளடக்கிய வாழிடப்பரப்பு என்ற அடிப்படையில் தமிழ்மொழிச் சமூகத்தினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துதல். அவற்றின் பாதுகாப்பு, நிலம், பண்பாடு, பொருளாதார அபிவிருத்திக்கான சுயாதீனம், மரபுரிமை உள்ளிட்ட அடையாளங்களைப் பேணும் சட்டவரைபையும் நடைமுறையையும் ஏற்படுத்துதல்.

2.   அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பானது (இயல்புவாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான அடிப்படைகள்)

(அ) குறுகிய கால அடிப்படையில் அரசியற்கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளல்.

(ஆ) யுத்தக்குற்ற விசாரணைக்கூடாக் காணாமலாக்கப்பட்டோரின் விவகாரத்துக்கு வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் தீர்வு காணுதல்.

(இ) மக்களின் இயல்பு (சிவில் – civil) வாழ்வில் இராணுவத்தலையீடுகளையும் நெருக்கடிகளையும் இல்லாமற் செய்தல்.

(ஈ) படைத்தரப்பின் பிடியிலுள்ள காணிகளை விடுவித்தல்.

(உ) இன, சமூக முரண்பாடுகளையும் நெருக்கடிகளையும் உருவாக்கும் வகையிலான மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்தல்.

(உ) கடல், நிலம் சார்ந்த தொழில் மற்றும் பொருளாதார ரீதியிலான எல்லை மீறல்கள், ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல்.

(ஊ) யுத்தத்தப் பாதிப்பிலிருந்து இன்னமும் மீண்டெழ முடியாத நிலையிலிருக்கும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்துக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட தொழில்துறை மேம்பாட்டை விருத்தி செய்தல். அத்துடன், இந்தப் பிரதேசங்களில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

(எ) பெண் தலைமைத்துவக்குடும்பங்கள், போராளிகளாகச் செயற்பட்டோர், யுத்தத்தின்போது பெற்றோரை இழந்த சிறுவர்கள், மாற்றுவலுவுடையோர் ஆகியோருக்கான விசேட நிதி ஒதுக்கீட்டையும் சிறப்பு வேலைத்திட்டங்களையும் உருவாக்குதல்.

 

Link to comment
Share on other sites

5 minutes ago, ampanai said:

எமது  மக்களின் கோரிக்கைகள் - சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முருகேசு சந்திரகுமார்

1.   அரசியல் தீர்வுக்கானது

இலங்கைத்தீவானது பல்லினச் சமூகங்களை உள்ளடக்கிய வாழிடப்பரப்பு என்ற அடிப்படையில் தமிழ்மொழிச் சமூகத்தினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துதல். அவற்றின் பாதுகாப்பு, நிலம், பண்பாடு, பொருளாதார அபிவிருத்திக்கான சுயாதீனம், மரபுரிமை உள்ளிட்ட அடையாளங்களைப் பேணும் சட்டவரைபையும் நடைமுறையையும் ஏற்படுத்துதல்.

2.   அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பானது (இயல்புவாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான அடிப்படைகள்)

(அ) குறுகிய கால அடிப்படையில் அரசியற்கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளல்.

(ஆ) யுத்தக்குற்ற விசாரணைக்கூடாக் காணாமலாக்கப்பட்டோரின் விவகாரத்துக்கு வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் தீர்வு காணுதல்.

(இ) மக்களின் இயல்பு (சிவில் – civil) வாழ்வில் இராணுவத்தலையீடுகளையும் நெருக்கடிகளையும் இல்லாமற் செய்தல்.

(ஈ) படைத்தரப்பின் பிடியிலுள்ள காணிகளை விடுவித்தல்.

(உ) இன, சமூக முரண்பாடுகளையும் நெருக்கடிகளையும் உருவாக்கும் வகையிலான மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்தல்.

(உ) கடல், நிலம் சார்ந்த தொழில் மற்றும் பொருளாதார ரீதியிலான எல்லை மீறல்கள், ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல்.

(ஊ) யுத்தத்தப் பாதிப்பிலிருந்து இன்னமும் மீண்டெழ முடியாத நிலையிலிருக்கும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்துக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட தொழில்துறை மேம்பாட்டை விருத்தி செய்தல். அத்துடன், இந்தப் பிரதேசங்களில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்.

(எ) பெண் தலைமைத்துவக்குடும்பங்கள், போராளிகளாகச் செயற்பட்டோர், யுத்தத்தின்போது பெற்றோரை இழந்த சிறுவர்கள், மாற்றுவலுவுடையோர் ஆகியோருக்கான விசேட நிதி ஒதுக்கீட்டையும் சிறப்பு வேலைத்திட்டங்களையும் உருவாக்குதல்.

சில திறமைகளைக் கொண்ட முருகேசு சந்திரகுமார் தேர்தல் காலத்தில் வெளிப்படுத்தும் கோரிக்கைகள் நல்ல கோரிக்கைகள் தான்!

டக்ளஸ் கும்பலுடன் நீண்ட காலம் இருந்து, சில வருடங்களின் முன்னர் அந்தக் கும்பலில் இருந்து வெளியேறி தனியாக அரசியல் செய்யும் முருகேசு சந்திரகுமார் கடந்த சில மாதங்களில் 4, 5 தரம் போர்க்குற்றவாளிகளான மஹிந்தவையும் கோட்டாபயவையும் சந்தித்துள்ளார்!  இவரது சந்திப்பின் போது இவரது மேற்படி நல்ல கோரிக்கைகள் தொடர்பில் போர்க்குற்றவாளிகளான மஹிந்தவும் கோட்டாபயவும் என்ன கருத்துக்களை முன்வைத்தனர் என்றும் தமிழ் மக்களை தெளிவுபடுத்தினால் நல்லது!

 

Link to comment
Share on other sites

ஆட்சிப் பீடம் ஏறினால் இராணுவத்தினர் விடுதலை-கோட்டா! ஞானசாரர் விடுத்துள்ள கருத்து!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், குற்றமிழைக்காமல் சிறைக்குச் சென்ற இராணுவத்தினரை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

உண்மையில், எம் அனைவருக்கும் இராணுவம் மீது மிகுந்த மரியாதை இருக்கின்றது. இராணுவத்தினர் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாமும் இருக்கிறோம்.

இதனை கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்து தான் செய்ய வேண்டும் என்றில்லை. இப்போதுள்ள ஆட்சியாளர்கள் கூட இதனை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக மக்கள் சிந்தித்தே செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களைப் பொறுத்தவரை, இந்த நாட்டுக்கு எவரால் குறைவான அநியாயங்கள் இழைக்கப்பட்டுள்ளன என்பதை சிந்தித்தே செயற்படவேண்டும்.

தற்போது கோட்டாபய ராஜபக்ஷ தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தான் ஜனாதிபதியானால், இராணுவத்தினரை விடுவிப்பதாக அவர் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பிறகே நாம் இறுதி முடிவை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/129376

Link to comment
Share on other sites

சட்டத்தை மீறியுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள்! சிக்கலில் கோத்தபாய

இராணுவ அதிகாரிகளின் படங்களை தமது அறிக்கைகளில் பிரசுரிப்பதன் மூலம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் சட்டத்தை மீறியுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

சிஎம்இவி என்ற தேர்தல்கள் கண்காணிப்பு மையம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.

தேர்தல் வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒழுங்குகளை மதித்து நடப்பதாக உறுதியளித்துள்ளனர்.

எனினும் பத்திரிகை விளம்பரங்களில் அவர்கள் இந்த ஒழுங்குகளை மீறி வருகின்றனர். முப்படைகளின் தளபதிகளை தாங்கிய கோத்தபாய ராஜபக்சவின் விளம்பரங்கள் மூன்று பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

உதாரணமாக 2009ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் திகதி தற்போதைய இராணுவத்தளபதி சவேந்திர சில்வா அன்று விடுத்த அறிக்கை ஒன்று இந்த விளம்பரங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதையும் சிஎம்இவி சுட்டிக்காட்டியுள்ளது.

https://www.tamilwin.com/politics/01/228526?ref=rightsidebar

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.