Jump to content

பௌத்த மேலாண்மை பி.மாணிக்கவாசகம்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்த மேலாண்மை பி.மாணிக்கவாசகம்…

October 12, 2019

Gnasara.png?resize=622%2C331

நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலம் எரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த ஞானசார தேரர் மற்றும் சம்பவத்தில் தொடர்புபட்ட பௌத்த பிக்குகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறப்பினருமாகிய இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்புக் கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய அவர் இந்த விடயத்தில் பொலிசாரும் நீதிமன்றத் தீர்ப்பை உதாசினம் செய்துள்ளார்கள் என சுட்டிக்காட்டி, சம்பந்தப்பட்ட பொலிசார் மீதும் சட்ட நடவடிக்கை எடு;க்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அதேவேளை, நீராவியடி பிள்ளையார்; ஆலய வளவில் சடலம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் தமிழ் மக்களே குழப்பம் விளைவித்துள்ளார்கள். அவ்வாறு குழப்பம் விளைவித்து, ஒட்டுமொத்த சிங்கள மக்களையும் வேதனைப்படுத்தி உள்ளார்கள் என்று பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குப் பதிலளிக்கும் வகையில் உரையாற்றியபோது நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் மீது மத ரீதியான வன்முறையைப் பிரயோகித்து வருகின்ற பௌத்த பிக்குகளின் அடாவடித்தனத்தைச் சுட்டிக்காட்டி, அதற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்றே நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். அப்போது சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே பொது எதிரணி தரப்பில் மூக்கை நுழைத்து சம்பந்தனுக்குப் பதிலளிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே உரையாற்றி இருந்தார்.

நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் பௌத்த பிக்குவின் சடலத்தைக் கொண்டு சென்றவர்கள், இந்;து மத சம்பிரதாயங்கள் நியதிகளுக்கு மாறாக நடந்து கொண்டார்கள். இதன் மூலம் இந்து மதத்தின் புனிதத்தையும் மாசுபடுத்தியிருந்தார்கள். அது மட்டுமல்லாமல் நீதிமன்றத்தை அவமதித்து சட்டமீறல்களிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

மத நியதிகளை மீறி ‘காரியம்’ செய்தனர்

இந்து ஆலய வளவுக்குள் அதுவும் அந்த ஆலயத்தின் தீர்த்தக்கேணி கரையோரத்தில் வேற்று மதமாகிய பௌத்த மதப் பிக்கு ஒருவருடைய உடலுக்கு இறுதிக்கிரியையாக எரியூட்டி இருந்தார்கள். இந்த நடவடிக்கைக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டபோதே, இது இந்து மத சம்பிரதாயங்கள், நியதிகள், ஒழுக்கங்களுக்கு எதிரான நடவடிக்கை என்று அந்த ஆலயக் குருக்களும் ஆலய பரிபாலன சபையினரும் எடுத்துக்கூறி நீதிமன்றத்தில் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

இதனையடுத்து, பிக்குவின் உடல் நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் எரியூட்டப்படக் கூடாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், அருகில் உள்ள நாயாறு கடற்படை முகாமின் கடற்கரையோரத்தில் எரியூட்டுமாறு உத்தரவிட்டிருந்தது.

இந்த பிள்ளையார் ஆலய வளவுக்குள் ஏற்கனவே இராணுவ பொலிஸ் பாதுகாப்புடன் அடாத்தாக பௌத்த விகாரையை நிர்மாணித்து, அதன் விகாரதிபதியாக விளங்கிய கொலம்பே மேதானந்த தேரருடைய சடலத்தை அந்த விகாரைப் பகுதியில் – அதாவது நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் எரிக்க வேண்டும் என்று வாதிடுவதற்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளின் முன்னிலையிலேயே இந்த உத்தரவை நீதிமன்றம் வழங்கியிருந்தது.

இந்த உத்தரவு வழங்கப்படப் போகின்றது என்பதை அறிந்து, இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிப்பதற்காக நீதிமன்றத்தில் சமூகமளித்திருந்த பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளரும் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் தண்டிப்பட்டவருமாகிய ஞானசார தேரர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னரே அங்கிருந்து வெளியேறினார்.

அவ்வாறு வெளியேறிய அவர் நீதிமன்ற உத்தரவைப் புறக்கணித்து, நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில், அந்த ஆலயத்தின் தீர்த்தக்கரையில் பௌத்த பிக்குவின் உடலை எரிப்பதற்கான ஏற்பாடுகளில் மூழ்கி இருந்தார். நீராவியடி ஆலய வளவுக்குள் சடலம் எரிக்கப்படக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவுஇறுதிக்கிரியைகளுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், ஞானசார தேரர் தலைமையிலான பௌத்த பிக்குகளும் அவர்களுடன் அங்கு குழுமியிருந்த சிங்கள பௌத்தவர்களும் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் சடலத்தை எரிக்கும் ‘காரியம்’ அங்கு நிறைவேற்றப்பட்டது.

பாரதூரமான விடயங்கள்

இந்த நடவடிக்கையின் மூலம் பௌத்த பிக்குகளும், சிங்கள பௌத்தவர்களும், பௌத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் எவருமே வசிக்காத பகுதியில் இந்துக்களுடைய ஆலயமாகிய நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் அந்த மதத்தின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் அடாவடித்தனம் புரியப்பட்டுள்ளது.

இரண்டு மதங்கள் சார்ந்த ஓர் ஆலய விவகாரத்தில் ஒரு மனித சடலத்திற்கான இறுதிக்கிரியைகளை வலிந்து புகுத்தி பிரச்சினை கிளப்பிவிடப்பட்டுள்ளது.

மத சம்பிரதாயங்கள், அதன் புனிதத் தன்மையுடன் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான ஒரு விடயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு புறக்கணிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு புறக்கணிக்கப்பட்டதன் மூலம் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளது.

இரு சமூகம் சார்ந்த உணர்வுபூர்வமான மதவிவகாரம் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டையும் பொறுப்பையும் கொண்டுள்ள பொலிஸ் தனது கடமையைச் செய்யத் தவறிவிட்டது.

இந்த விவகாரத்தில் இன முரண்பாட்டைத் தவிர்ப்பதற்காகவே நீதிமன்ற உத்தரவை கவனத்திற் கொள்ளவில்லை என்று மனித உரிமைகள் ஆணையக விசாரணை ஒன்றில் நாட்டின் நீதிப் பொறிமுறை சார்ந்த கடமைப் பொறுப்பை எடுத்தெறிந்த வகையில் பொலிஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் பின்னரான நிலைமையில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை உருவாக்குகின்ற கடப்பாட்டை அலட்சியப்படுத்தி, இனங்களுக்கிடையில் குரோதத்தையும் பகைமையையும் வளர்ப்பதற்கான தவறை பொலிஸ் தரப்பு இழைத்துள்ளது.

ஐநாவின் கொள்கை வழியில் நிறைவேற்றப்பட்டுள்ள சிவில், மதம் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தை மீறிய பௌத்த பிக்குகளினால் பொது அமைதிக்குப் பங்கம் வளைவிக்கப்பட்டுள்ளது.

நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கரையில் பௌத்த பிக்குவின் சடலம் எரிக்கப்பட்டதன் மூலம், பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள போதிலும் ஏனைய மதங்களுக்குள்ள உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பின் நியதி மீறப்பட்டிருக்கின்றது. இதனால் நாட்டின் அதி உயர் சட்டமாகிய அரசியலமைப்புச் சட்டம் அவமதிக்கப்பட்டுள்ளது.

இவ்வளவு நடந்த பின்பும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பொது எதிரணி உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் பௌத்த பிக்குகளும் அவர்களுடன் இணைந்திருந்தவர்களும் செயற்பட்ட முறைமையை நியாயப்படுத்தி உள்ளார். இந்த விடயத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினராகிய தமிழ் மக்களே தவறு இழைத்துள்ளார்கள் என்று அவர் குற்றம் சுமத்தி உள்ளார்.

மேலாண்மை நிலைநாட்டப்பட்டது
நீராவியடி பிள்ளையார் ஆலயப் பகுதி யுத்த மோதல்கள் நிலைமையில் இராணுவத்தின் முகாம் பகுதிக்குள் உள்ளடங்கியிருந்தது. யுத்தம் முடிவடைந்த பின்னரும், அந்த ஆலயப் பகுதிக்குள் செல்வதற்குப் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், இராணுவத்தின் வசமிருந்த அந்த ஆலயத்தில் படையினர் வழிபாடு நடத்தி வந்ததுடன், பௌத்த பிக்கு ஒருவரை அங்கு வரவழைத்து, ஆலய வளவுக்குள் புத்தர் சிலையொன்று முதலில் நிறுவப்பட்டது. பின்னர் அங்கு பௌத்த விகாரையொன்று அங்கு நிலைகொண்டு வசித்து வந்த கொலம்பே மேதானந்ததேரரினால் நிர்மாணி;க்கப்பட்டது.

அவருடைய நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரும் பொலிசாரும் உறுதுணையாக இருந்ததுடன், அந்த பௌத்த பிக்குவுக்குப் பாதுகாப்பு வழங்கி இருந்தார்கள். இதனால் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்ற போதிலும் தயக்கமின்றியும் மிகத் துணிவோடும் செயற்பட்ட கொலம்பே மேதானந்ததேரர் தமிழ் மண்ணில் அதுவும் இந்துமத மக்களுடைய பிரதேசத்தில் பௌத்த மதத் திணிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டிருந்தார்.

அந்த மண்ணில் அடாத்தாக நீதியற்ற நியாயமற்ற முறையிலும் மனிதாபிமானமற்ற வகையிலும் இடம்பெற்ற பௌத்த மதத் திணிப்பையும், அடிப்படை மத உரிமை மீறலையும் நீதிமன்ற நடவடிக்கைகளினாலோ அல்லது மக்கள் எழுச்சியினாலோ தடுத்த நிறுத்த முடியவில்லை. அடாத்தான அத்துமீறல் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்த சூழலிலேயே அந்த விகாராதிபதி கொலம்பே மேதானந்ததேரர் புற்றுநோய்க்கு ஆளாகி மகரகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

உயிரிழந்த அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவே அவர் நிர்மாணித்த பௌத்த விகாரை பகுதியில் இந்து மத மக்களுடைய மனங்களைப் புண்படுத்தி வேதனை அடையச் செய்யும் வகையில் அடாத்தாக அவருடைய சடலத்தை எரிப்பதற்கான நடவடிக்கைகளை ஞானசாரதேரர் தலைமையிலான பிக்குகள் சிலரும், அவர்களுக்கு ஆதரவான சிங்கள பௌத்த தீவிர மதப்பற்றாளர்களும் முன்னெடுத்திருந்தனர்.

இந்து ஆலயப்பகுதியில் பௌத்த பிக்கு ஒருவருடைய சடலத்திற்கு எரியு}ட்டி இறுதிக்கிரியைகள் செய்வதென்பதை சாதாரணமாக எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும், பௌத்த மதமே இந்த நாட்டின் முதன்மை பெற்ற மதம் என்ற பேரினவாத மேலாண்மை நிலையை நிலைநாட்டுவதற்காகவே அந்த பிக்குவின் சடலத்திற்கு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கரையில் எரியூட்டப்பட்டது.

அச்சுறுத்தல்

இது முழுக்க முழுக்க சிங்கள பௌத்த தேசிய தீவிரவாத அரசியல் ஆக்கிரமிப்பின் வெளிப்பாடாகவே நடந்து முடிந்தது. சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதத்தின் முன்னால் நீதி நியாய நெறிமுறைகளோ நீதிமன்ற உத்தரவுகளோ அல்லது நீதிமன்ற தீர்ப்புக்களோ செயலற்றவை என்பதை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் இடம்பெற்ற பிக்குவின் சடலம் எரிக்கப்பட்ட சம்பவம் நிதர்சனமாகக் காட்டியுள்ளது.

இந்தச் சம்பவம் இடம்பெற்று இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டபோதிலும், சட்டத்தையும் ஒழுங்கையும் கடைப்பிடித்து, நீதியை நிலைநாட்டவேண்டிய அரச பொறிமுறைகள் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

நீதிமன்ற உத்தரவு உதாசீனம் செய்யப்பட்டது மட்டுமல்லாமல், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காக அந்தப் பகுதிக்குச் சென்றிருந்த நீராவியடி பிள்ளையார் ஆலயம் சார்ந்த குருக்களும் சட்டத்தரணி ஒருவரும் அவர்களுடன் இருந்தவர்களும் பௌத்த பிக்குகள் உள்ளிட்டவர்களினால் தாக்கப்பட்டார்கள். அவர்களில் இந்து மதகுரு காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.

நீதிமன்ற உத்தரவு கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய சட்டத்தரணி சுகாஷ் பௌத்த பிக்கு ஒருவரினால் பகிரங்கமாக அச்றுத்தப்பட்டார். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்காகச் சென்றிருந்த அவருக்கு இந்த நாட்டில் ஹாமதுருவுக்வே முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் தெரியாதா என்று தமிழில் உரத்து ஆணித்தரமாகவும் அச்சுறுத்தும் வகையிலும் அந்த பிக்கு வினவியிருந்தார்.

ஹாமதுருவுசு;கே முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற சட்டம் தெரியாதா என்று அந்த சட்டத்தரணி சுகாஷை நோக்கி வினவியிருந்தாலும், உண்மையில் அந்தக் கேள்வி நீதிமன்றத்தை நோக்கியே எழுப்பப்பட்டிருந்தது என்றே கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவிலும் பார்க்க பௌத்த பிக்குகளின் விருப்பமும், அவர்களின் நடவடிக்கைகளுமே மேலோங்கியவை என்பதை அந்த பிக்கு எழுப்பிய கேள்வி மட்டுமல்லாமல், தொடர்ந்து அங்கு இடம்பெற்ற பௌத்த பிக்குவின் சடலம் எரிப்பும்கூட சந்தேகத்திற்கு இடமின்றி நிலைநாட்டியுள்ளன.

எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

இந்தச் சம்பவத்தின் பின்னர் கருத்து வெளியிட்ட ஞானசார தேரர் நீராவியடி பிள்ளையார் ஆலய வளவுக்குள் பௌத்த பிக்குவின் சடலம் எரிக்கப்பட்ட சம்பவத்தை அப்படியே விட்டுவிடுமாறு கூறியிருந்தார். அது ஒரு சாதாரண சம்பவம். பௌத்த பிக்கு ஒருவர் மரணமானார். அவர் வசித்து வந்த பகுதியில் அவருடைய இறுதிக்கிரியைகள் நடத்தப்பட்டன. அவ்வளவுதான். இதில் மத சம்பிரதாயங்களுக்கோ அல்லது மதம் சார்ந்த உணர்வுகளுக்கோ, உரிமை சார்ந்த விடயங்களுக்கோ இடமில்லை. ஆகவே நடந்து முடிந்ததை நடந்து முடிந்ததாகக் கருதி இயல்பான காரியங்களைக் கவனியுங்கள் என்ற ரீதியில் அவருடைய கருத்து வெளிப்பட்டிருந்தது.

ஆனாலும் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை மீறியவர்களைக் காணொளி காட்சிகளின் மூலமாக அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறியவர்களும், குழப்பம் விளைவித்தவர்களும், ஆலய குருக்கள் மற்றும் சட்டத்தரணி உள்ளிட்டவர்களைத் தாக்கியவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படடுள்ளதாகக் கூறப்பட்ட போதிலும், நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறிய பொலிசார் மீது நடவடிக்கை எடுப்பதற்கான நகர்வுகள் எதுவும் இடம்பெற்றிருப்பதாகத் தெரியவில்லை.

அதேநேரம் இந்த விடயம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் தொலைபேசி வழியாக உறுதியளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களம் எத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என்பது பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகியதாகத் தெரியவில்லை. சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விவகாரம் குறித்து தீவிர கவனம் செலுத்தி இருக்கின்றதா என்பதும் இதுவரையில் அதிகாரபூர்வமாக வெளிப்பட்டதாகவும் தெரியவில்லை.

இயல்பாக எழும் கேள்விகள்

இன முரண்பாட்டைத் தடுப்பதற்காகவே நீதிமன்றத் தீர்ப்பைக் கவனத்தில் கொள்ளவில்லை என்று மனித உரிமைகள் ஆணையக விசாரணையொன்றில் பதிலளித்துள்ள பொலிசார், இந்த விடயம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்திருப்பதாகத் தெரியவில்லை.

இரண்டு இனங்களுக்கிடையில் உணர்ச்சிகரமான மத விடயங்கள் சம்பந்தப்பட்ட ஒரு நடவடிக்கையில் நீதிமன்றம் ஓர் உத்தரவைப் பிறப்பித்து, நடைமுறைப்படுத்துமாறு பொலிசாருக்கு ஆணையிட்டது. சூழ்நிலை காரணமாக அந்த உத்தரவைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினால் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதா என்பதும் தெரியவில்லை. அல்லது இந்த விடயம் குறித்து நீதிமன்றத்தில் கவனம் செலுத்தப்பட்;டதாகவும் தெரியவில்லை.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவு உதாசீனப்படுத்தியதையும், சட்டத்தரணி உள்ளிட்டவர்களைத் தாக்கியதையும் கண்டித்து நீதிமன்ற பணிகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்திய சட்டத்தரணிகள் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன் அமைதியடைந்துவிட்டார்கள் என்றே தெரிகின்றது.

நீதிமன்ற உத்தரவு புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீதிமன்றம் அவமதிக்கப்பட்டுள்ளது என்பதே சாதாரண குடிமகனுடைய நிலைப்பாடு. இந்த நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளில் மக்கள் நம்பிக்கை வைத்து நீதியும் நியாயமும் நிலைநாட்டப்படும் என்று எந்த வகையில் எதிர்பார்க்க முடியும் என்று தெரியவில்லை.

நீதிமன்ற உத்தரவுகள் புறக்கணிக்கப்பட்டு, நீதி நியாயத்திற்காகப் பணியாற்றுகின்ற சட்டத்தரணிகள் அஹிம்சையையும் காருண்யத்தையும் இரு கண்களாகப் போற்றி கடைப்பிடித்து ஒழுக வேண்டிய பௌத்த பிக்குகளின் தலைமையில் தாக்கப்படுவார்கள் என்றால், நாட்டின் நீதிப்பொறிமுறை எந்த அளவுக்கு சுதந்திரமாகச் செயற்பட முடியும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது.

நாட்டின் நீதிப்பொறிமுறை எந்த அளவுக்கு அதிகார பலம் கொண்டிருக்கின்றது, எந்த அளவுக்கு பயன்தரத்தக்க வல்லமையைக் கொண்டிருக்கின்றது என்ற கேள்வியும் மனதில் இயல்பாக எழுகின்றது.

 

http://globaltamilnews.net/2019/131836/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமாக பெளத்த மேலாதிக்கமும் தமிழர் இனமும்.. இலங்கைத் தீவும் பற்றி எழுதிக்கொண்டு தான் இருக்கிறோம்.

பெளத்த மேலாதிக்கம் வலுப்பெற்று.. மொத்த தமிழினத்தையும் தின்று ஏப்பம் விடும் காலத்தை நெருக்கினதை தவிர.. சாதித்தது எதுவும் இல்லை.

பெளத்த மேலாதிக்க வீழ்ச்சி என்பது.. இலங்கைத் தீவுக்குள் லிபரல் சிந்தனைகளின் பெருக்கத்தை இளையோரிடத்தில் வளர்ப்பதில் மட்டுமே தான் வர முடியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.