Jump to content

தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகளை நேரடியாக கலந்துரையாட விரும்புகின்றோம். அனுரகுமார


Recommended Posts

IMAGE-MIX.png
 

(ஆர்.யசி)

தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான கோரிக்கைகள் நியாயமானவையே.ஆனால் தமிழ் மக்களை வைத்து அரசியல் செய்தும் தமிழ் அரசியல் வாதிகள் தமிழர்களின் கோரிக்கைகளை திசை திருப்புகின்றனர். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுகொடுக்க தமிழ் மக்களுடன் நேரடியாக பேசவே முயற்சிக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

anurakumara.jpg 

எமக்கு அதிகாரம் கிடைத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து அவர்களின் நலன்களில் பிரதான பங்கினை வகிப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய ரீதியிலான நகர்வுகள் குறித்து  ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயகவிடம் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில். 

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்த அழிவுகள் இன்றும் எமக்கு நினைவில் உள்ளது. யாழ்தேவி புகையிரத குண்டுவெடிப்பில் எனது நண்பர்கள் பலர் கொல்லப்பட்டனர். அவர்களை இழந்த துயரம் இன்றும் எனக்கு உள்ளது. அதேபோல் 1988,1989 ஆண்டுகளில் இந்த நாட்டில் இடம்பெற்ற கலவரத்தில் எனது பாடசாலை மாணவர்கள் பலரை நான் இழந்துள்ளேன். 

இந்த வேதனைகளுக்கு நாம் எவ்வாறு முகம்கொடுத்து வாழ்கின்றோமோ அதேபோல் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புகள் அதிகமாகும். 

எம்மை விடவும் தமிழ் மக்கள் இழந்தவையும், அனுபவித்த வேதனைகளும் அதிகம் என்றே நான் கருதுகின்றேன்.  மிகப்பெரிய யுத்தம் ஒன்றை உருவாக்கினர். 

ஆனால் எமது பிரதேசத்தில் வைத்தியசாலையில் தமிழ் வைத்தியர் இருந்தார். அருகாமையில் உள்ள வீடுகளில் தமிழர்கள் வாழ்ந்தனர். கிராமங்களில் தமிழ் சிங்கள திருமணங்கள் இடம்பெற்றது. ஆனால் அனாவசியமான யுத்தம் ஒன்றினை உருவாக்கி தமிழ் சிங்கள மக்கள் இடையில் அனாவசிய பிரிவினை உருவாக்கி நாட்டினை சுடுகாடாக மாற்றினர். இதனை எல்லாம் யார் விரும்பியது. யாருக்கு இந்த யுத்தம் தேவைப்பட்டது.

 இனியும் தமிழர் சிங்கள மக்கள் மத்தியில் நிரந்தரமாக ஒரு பிரிவு அவசியமா என்ற கேள்வி எம்மத்தியில் எழுகின்றது. 

அவ்வாறான ஒரு பிரிவுக்கு நாம் இடமளிக்க கூடாது. அனாவசியமாக தமிழர் தண்டிக்கப்படவோ நிராகரிக்கப்படவோ நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/66731

Link to comment
Share on other sites

14 hours ago, ampanai said:

தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான கோரிக்கைகள் நியாயமானவையே.ஆனால் தமிழ் மக்களை வைத்து அரசியல் செய்தும் தமிழ் அரசியல் வாதிகள் தமிழர்களின் கோரிக்கைகளை திசை திருப்புகின்றனர். தமிழ் மக்களின் நியாயமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுகொடுக்க தமிழ் மக்களுடன் நேரடியாக பேசவே முயற்சிக்கின்றோம் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.

என்ன தீர்வு என்று சொல்லும் தைரியம் இருக்கா?

இல்லாதபடியால் இதுவும் இன்னொரு சிங்கள இனமதவெறிப் போக்கிற்கு ஆதரவான ஒருவரின் தேர்தல்கால சரவெடியாகவே இருக்கும்!

Link to comment
Share on other sites

தமிழ் மக்களுக்கு தீர்வை வழங்குவதாக 2015ஆம் ஆண்டு    ரணில் விக்கிரமசிங்க  வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் அதனை செய்யவில்லை.  அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது.  நான்கரை வருடங்களாக பொய்த்தனமாக   அரசியலமைப்புக்கதையை இழுத்துக்கொண்டு சென்றனர்.  தமிழ் மக்களின்   வாக்குகளுக்காகவே இதனை செய்தனர்.  தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

கேள்வி அனுர குமார திசாநாயக்க வெற்றிபெற்றால் என்ன நடக்கும்?

பதில் நாங்கள் ஜனாதிபதி  தேர்தலில் வெற்றிபெற்றால் பொதுத் தேர்தலிலும் வெற்றிபெறுவோம். நான்கரை வருடங்ளில் பாராளுமன்றத்தை கலைக்க முடியும். அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியானால் குறித்த காலப்பகுதியில் பாராளுமன்றத்தை  கலைத்து தேர்தலுக்கு சென்று  புதிய அரசை அமைக்க முடியும்.  நிபுணர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பொறியியலாளர்கள் வைத்தியர்களை உள்ளடக்கிய அரசாங்கம் உருவாகும்.

 

கேள்வி: இதனூடாக தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில்  உங்கள் அணுகுமுறை எவ்வாறிருக்கும்?

பதில்: மிகத் தெளிவாக இந்த நாட்டின் தமிழ், சிங்கள முஸ்லிம், மற்றும்   பௌத்த இந்து , கிறிஸ்தவ,  இஸ்லாம்,  வித்தியாசமின்றி அனைத்து மக்களினதம் உரிமைகளை   நாம் பாதுகாப்போம். தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவதே எமது முதன்மை நோக்கமாகும்.  அனைத்து மக்களையும் சமமாக பார்ப்போம்.அந்த கோட்பாடுகளை  அடிப்படையாக  கொண்டு  தேசிய பிரச்சினைக்கு தீர்வைக் காண்போம். அதனை எமது தேசிய சக்தியின்  ஊடாக மட்டுமே செய்யமுடியும். மாறாக இரண்டு பிரதான கட்சிகளினால் செய்ய முடியாது என்பதை நிரூபித்துள்ளனர்.

 

கேள்வி: மேலும் இதில் சில விடயங்கள் உள்ளன. அதிகாரப்பகிர்வு, அரசியல் அதிகாரம், போன்றன உள்ளன. இவை தொடர்பில்?

பதில்:  மக்களுக்கு அதிராத்தைப் பகிரும் கொள்கையையே நாம் கொண்டுள்ளோம்.  கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ளவருக்கும் அம்பாந்தோட்டை சூரியவெவில் உள்ளவருக்கும்  ஒரே சமமான அதிகாரம் கிடைக்கவேண்டும்.  ஒருவர் தமிழர் என்பதால் குறைந்த அதிகாரமும்,  மற்றொருவர் சிங்களவர் என்பதால் கூடிய அதிகாரமும் வழங்கப்பட முடியாது.  பிரஜைகளைப் பலப்படுத்தும் கொள்கை எம்மிடம் உள்ளது. 

 

கேள்வி: இப்படி ஒரு தீர்வைக் கொடுப்போம் என்று கூறாமல் முன்னெச்சரிக்கையாக  பேசுகின்றீர்களா?

பதில்: அவ்வாறு இல்லை. நாம் பொய் கூறவில்லை.  வாக்குகளைப் பெறுவதற்காக பொய்களை கூற முடியாது. 2015ஆம் ஆண்டு  வடக்கு, கிழக்கு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க இந்த வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் அதனை செய்யவில்லை.  அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றியது.  நான்கரை வருடங்களாக பொய்த்தனமாக   அரசியலமைப்புக்கதையை இழுத்துக்கொண்டு சென்றனர்.  தமிழ் மக்களின்   வாக்குகளுக்காகவே இதனை செய்தனர்.  தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அவ்வாறான பொய்த்தனமான வேலைகளை நாம் செய்யமாட்டோம். 

Link to comment
Share on other sites

2 hours ago, ampanai said:

  நிபுணர்கள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பொறியியலாளர்கள் வைத்தியர்களை உள்ளடக்கிய அரசாங்கம் உருவாகும்.

ஜேவிபி யின் நிபுணர்களும் மிக மோசமான சிங்கள-பௌத்த இனமதவெறியர்களே!

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

நான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞன் ஒருவர் என்னை சந்தித்தான். அவர் 14 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  தமீழீழ விடுதலைப்புலிகளின் அடையாள அட்டையை வைத்திருந்தமைக்காகவே தான் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்டிருந்தார். அவர் வைத்திருந்த அடையாள அட்டையில் யார் கையொப்பமிட்டது என கேட்டேன். தயா மாஸ்டர் என அவர் பதிலளித்தார். தமிழீழ விடுதலைப்புலிகளின் அடையாள அட்டையில் கையொப்பம் இட்டவர் வெளியிலும் அதனை வைத்திருந்தவர் சிறையிலும் உள்ளனர்.

 

வவுனியாவில் உள்ள மெனிக் பாரம் முகாம் உள்ள பகுதிக்கு நான் விஜயம் செய்திருந்தேன். அப்போது ஒருவர் என்னிடம் கூறினார், நானும் குடும்பமும் போரின் போது சரணடைந்து பாலத்துக்கு அருகில் சென்றிருந்த போது அங்கு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தனது மனைவியும் மகளும் கொல்லப்பட்டதாக கூறினார்.  இதனை யார் செய்தது என்பது தெரியாது. அந்த பாலத்துக்கு அருகில் சென்று அழவேண்டும் என்று தோன்றுவதாக  அவர் என்னிடம் கூறினார். இதுதான் வேதனையின் வடிவம். இந்த வேதனை என்னவென்பது எனக்கும் நன்றாக தெரியும். ஏனெனில் எனது சகோதரரும் காணாமல் போனதால் எனக்கும் அந்த வலி உள்ளது.  காணமால் போனவர் வருவார் என பத்து வருடங்களாக எதிர்பார்த்து இருக்கக்கூடிய அந்த வேதனையை யாராலும் சொல்லிவிட முடியாது. காணமால் போன உறவுகள் எப்போதாவது வருவார்கள் என அவர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். காணமால் போனோர் விடயத்தில் அரசாங்கத்தால் நியாயமான தீர்வு வழங்கப்பட வேண்டும். அது காலம் தாழ்த்தப்படாத செயலாக இருக்க வேண்டும். அதுதான் எதிர்பார்ப்பு.

 

 

 

*** கட்டணம் செலுத்தப்பட்டது ***

https://www.virakesari.lk/article/68754

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.