Jump to content

வரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்குள் ஓடி முடித்த கென்ய வீரர்!!


Recommended Posts

முழு மாரத்தான் (Full Marathon) எனப்படும் 42 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரத்திற்குள் முடித்து கென்ய வீரர் எலியூத் கிப்சோக் (Eliud Kipchoge) சாதனை படைத்துள்ளார். மாரத்தான் வரலாற்றில் இது யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. இதனை எலியூத்தின் மனைவி, 3 குழந்தைகள் நேரில் பார்த்து அவரை உற்சாகமூட்டினர்

வரலாற்று சாதனை : 42 கி.மீ. தூர மாரத்தானை 2 மணி நேரத்திற்குள் ஓடி முடித்த கென்ய வீரர்!!

 

42 கிலோ மீட்டர் தூர முழு மாரத்தானை கென்யாவை சேர்ந்த பிரபல மாரத்தான் வீரர் எலியூத் கிப்சோக் 2 மணி நேரத்திற்குள்ளாக ஓடி முடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 1 மணி 59 நிமிடம் 40.2 வினாடிகளில் அவர் 42 கிலோ மீட்டரை ஓடி முடித்தார். இது இதுவரையில் யாரும் செய்யாத சாதனையாக உள்ளது. 

34 வயதாகும் அவர் இதே முழு மாரத்தானை 2018 - ல் ஜெர்மனியின் பெர்லினில் 2 மணி நேரம் 1நிமிடம் 39 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார். 42 கிலோ மீட்டர் தொலைவை 2 மணி நேரத்திற்குள் ஓட வேண்டும் என்பதற்காக எலியூத் ஆண்டுக்கணக்கில் பயிற்சி மேற்கொண்டிருந்தார். அவரது விடா முயற்சிக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. 

அமெரிக்காவின் வியன்னா பார்க்கில் அவர் இந்த சாதனையை செய்து முடிக்க, கூடியிருந்த பார்வையாளர்கள் கூட்டம் உற்சாகம் மிகுதியால் ஆர்ப்பரித்தது. எலியூத்துடன் துணைக்காக 41 பேர் பல்வேறு தொலைவுகளில் உடன் வந்தார்கள். அவருக்கு முன்பாக கார் ஒன்று இயக்கப்பட்டு அதில் நேரம் காட்டப்பட்டுக் கொண்டே இருந்தது. 

வரலாற்று சாதனை படைத்தாலும் எலியூத் மிகுந்த எளிமையுடன் பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், '2 மணி நேரத்திற்குள் மாரத்தானை முடித்திருக்கிறேன். இதனை செய்த முதல் மனிதன் நான்தான். மனிதர்களால் இத்தகைய சாதனையை செய்ய முடியும். மற்றவர்களும் இதனை செய்ய வேண்டும். அவர்களை ஊக்கப்படுத்துபவர்களாக நான் இருக்க விரும்புகிறேன். மனித சக்திக்கு அளவே இல்லை. 

நாம் இந்த உலகை மிக அழகானதாக, அமைதி கொண்டதாக மாற்ற முடியும். எனது சாதனையை பார்க்க மனைவி, 3 குழந்தைகள் வந்துள்ளனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.' என்று கூறியுள்ளார். 

எலியூத் சாதனை படைத்திருப்பதை கென்ய மக்களும், மாரத்தான் ஆர்வலர்களும் கொண்டாடி வருகின்றனர்.

https://www.ndtv.com/tamil/kenyas-eliud-kipchoge-made-history-in-marathon-completed-within-2-hours-2115729?pfrom=home-tamil_bigstory

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

42´வது  கிலோ.மீற்றர், ஓடி முடித்து... வெற்றிக் கோட்டை  நெருங்கும் போதும்...
அவர் களைக்காமல்  உற்சாகமாக ஓடி வருகின்றார். வாழ்த்துக்கள்.  

Link to comment
Share on other sites

இது திறந்த மாராத்தான் போட்டியில்லையென்பதாலும், இந்த போட்டியில் ஏலியுட், வேகத்தை ஒழுங்குபடுத்தும் ஊக்குநர் அணி ஒன்றைப் பயன்படுத்தினார் என்பதாலும் இது அதிகாரப்பூர்வ மாரத்தான் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்படாது.

 

2 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் இந்த தூரத்தை கடப்பது தடகள வரலாற்றில் இதுவே முதல் முறை.

34 வயதாகும் ஏலியுட், கென்யாவைச் சேர்ந்தவர். ஆஸ்திரியாவில் நடக்கும் 'இனியஸ் 1:59 சேலன்ஞ்' மாரத்தான் போட்டியில் இவர் 1 மணி 59 நிமிடம் 40 விநாடிகளில் 42.2 கிலோமீட்டரைக் கடந்து இலக்கை அடைந்தார்.

”இது எல்லோராலும் முடியும் என காட்டுகிறது. இப்போது இதை நான் செய்துவிட்டேன், எனக்கடுத்து நிறைய பேர் இதை செய்ய வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்” என்கிறார் கிப்ட்சோகே.

2017 மோன்ஸாவில் நடந்த இத்தாலியன் கிராண்ட் ப்ரிக்ஸ் சர்கியூட் போட்டியில் 25 விநாடிகளில் முந்தைய முயற்சியை தவறவிட்டார் கிப்ட்சோகே.

42 ஊக்குநர்கள் (பேஸ்மேக்கரின்) அணியின் உதவியோடு இந்த சாதனையைப் படைத்துள்ளார் கிப்ட்சோகே.

 

இடையே அவருக்கு தண்ணீரும், சத்துக் களிம்பும் அவரது பயிற்சியாளர்களால் பைக்கில் கொண்டுவந்து கொடுக்கப்பட்டன. பொதுவாக இவை அனைத்தும் ஆங்காங்கே இருக்கும் மேஜைகளின் மீதிருந்து எடுத்து கொள்ளப்படும். ஐஏஏஎஃப் தடகள கட்டுப்பாட்டு குழுவின் விதிகளின்படி இவ்வாறு கொண்டுவந்து கொடுப்பது அனுமதிக்கப்படாது. இதனாலும், இந்த சாதனை அதிகாரபூர்வமானது அல்ல. ஏலியுட் கிப்ட்சோகேவின் அதிகாரபூர்வ மாரத்தான் சாதனை கடைசியாக 2018ல் அவர் ஜெர்மனியில் ஓடிய 2:01:39 என்பதே ஆகும்.

இந்த சாதனையைப் பற்றிப் பேசிய கிப்ட்சோகேவின் பயிற்சியாளர் ஒருவர், "இந்த முயற்சியில் எல்லாம் சரியாக நாங்கள் எண்ணியபடி நடந்தன. எங்களை கிப்ட்சோகே ஊக்கப்படுத்திவிட்டார். மேலும் வாழ்வில் எங்கள் லட்சியத்தை இன்னும் விரிவாக்கிக் கொள்ள நம்பிக்கை அளித்துவிட்டார். இதை நம்பமுடியவில்லை" என கூறினார்.

https://www.bbc.com/tamil/global-50027771

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.