Jump to content

ஜனாதிபதி தேர்தல் : சுயாதீனக் குழுவும் பல்கலைக் கழக மாணவர்களும். கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களின் தலையீடு ? நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தல் : சுயாதீனக் குழுவும் பல்கலைக் கழக மாணவர்களும். கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களின் தலையீடு ? நிலாந்தன்

October 13, 2019

 

question.jpg?resize=750%2C362

பேரவையால் தொடக்கி வைக்கப்பட்ட சுயாதீனக் குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்த பொழுது அது தமிழ் அரசியற் சூழலையும் தென்னிலங்கையின் அரசியற் சூழலையும் சடுதியாகக் குழப்பியது. அப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டது பல தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏன் அப்படி அதிர்வுகள் ஏற்பட்டன?

ஏனெனில் அவ்வாறு சிவில் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தலையீடு செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னைய காலங்களைப் போல கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்க மாட்டார்கள் என்ற ஒரு செய்தியை தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் நாட்டிலுள்ள தூதரகங்களுக்கும் அது உணர்த்தியது. தமிழ் வாக்குகள் எனப்படுபவை மஹிந்தவுக்கு எதிராக விழுபவை. எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவானவை என்றுதான் தென்னிலங்கையில் உள்ள பெரும்பாலானவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சுயாதீன குழுவானது ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கேட்ட பொழுது எல்லாருமே உற்றுக் கவனித்தார்கள்.

முதல் முதலாக ஒரு சிவில் அமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் தமது பேரத்தை முன்வைக்க வேண்டும் என்று கிளம்பிய பொழுது அது பலருக்கும் உதைப்பைபைக் கொடுத்தது. இதுவரை காலமும் தமிழ் வாக்குகளை ஐக்கிய தேசிய கட்சிக்கு வாங்கிக் கொடுத்த கூட்டமைப்பு அதைத் தொடர்ந்தும் செய்வதற்கு எதிராகக் கேள்விகள் எழுந்தன. தமிழ் மக்களின் வாக்குகள் தனக்குத்தான் கிடைக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கும் சஜித் பிரேமதாச அதனால் பதட்டம் அடைந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒரு தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்த முற்படும் எவரும் மறைமுகமாக கோத்தபாயவுக்கு ஆதரவானவர்கள் என்று கூறினார்.

அதேசமயம் கோத்தபாயவை தோற்கடித்து ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று திட்டமிடும் வெளித் தரப்புக்கள் ஒரு தமிழ் பொது வேட்பாளர் முன்னிறுத்தப்படுவதை விருப்பத்தோடு பார்க்கவில்லை. ஏனெனில் தமிழ் வாக்குகள் கேள்விக்கு இடமின்றி சஜித் பிரேமதாசவிற்கு கிடைப்பதை ஒரு பொது வேட்பாளர் நிபந்தனைகளுக்கு உள்ளாக்கி விடுவார் என்று அவை சிந்தித்தன.

அதாவது ஒரு தமிழ் பொது வேட்பாளரை தமிழ் மக்கள் முன்னிறுத்த்தி ஒரு பேர அரசியலை முன்னெடுக்க முற்பட்ட போது அதற்கு தமிழ்த் தரப்பில் பெரிய கட்சிகள் தயாராக இருக்கவில்லை. தென்னிலங்கையில் அது அதிர்வுகளை ஏற்படுத்தியது. இலங்கையை யார் ஆள வேண்டும் என்பதனை தீர்மானிக்கப்பட்ட முற்பட்ட வெளித் தரப்புக்களும் அதை விருப்பத்தோடு பார்க்கவில்லை. முடிவில் சுயாதீன குழுவின் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதாவது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை களமிறக்க முடியவில்லை. இப்பொழுது ஒரு பொதுத் தமிழ் வேட்பாளருக்கான வாய்ப்புக்கள் ஒரு சிவாஜிலிங்கமாக சுருங்கி விட்டன.
இவ்வாறு சுயாதீன குழுவானது அதன் முயற்சியில் இறுதி வெற்றி பெறாமல் இருக்கலாம். ஆனால் அது மிகத் தெளிவான செய்திகளை தமிழ் கட்சிகளுக்கும் சிங்கள கட்சிகளுக்கும் வெளித் தரப்புகளுக்கும் உணர்த்தியது.

முதலாவது செய்தி தமிழ் மக்கள் பேரம் செய்யப் புறப்பட்டு விட்டார்கள் என்பது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் தலைவர்கள் பேரம் பேசக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தாது விட்டார்கள். ஆனால் முதல் தடவையாக ஒரு சிவில் அமைப்பு பேர அரசியலைச் செய்யுமாறு தமிழ் கட்சிகளை கோரும் ஒரு நிலைமை தோன்றியது. இது இனிமேலும் பேரம் பேசாமல் அரசியலை முன் கொண்டு செல்ல முடியாது என்ற செய்தியை தமிழ் கட்சிகளுக்கு உணர்த்தியது.

குறிப்பாக கூட்டமைப்பு கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக பேரம் செய்யக் கிடைத்த எல்லா சந்தர்ப்பங்களையும் ரணிலுக்குச் சாதகமாக பயன்படுத்தியது. இனிமேலும் அவ்வாறு அரசியல் செய்ய முடியாது என்பதனை சுயாதீன குழு உணர்த்தியிருக்கிறது.

இரண்டாவது செய்தி தென்னிலங்கை மைய கட்சிகளுக்கு உரியது. தமிழ் வாக்குகளை நிபந்தனைகள் இன்றி பெற முடியாது என்ற ஒரு நிலை மெல்ல தலையெடுக்கிறது என்ற செய்தி மிகக் கூர்மையாக அங்கு சென்றடைந்துள்ளது. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்றால் இனவாதத்தோடு மோத வேண்டும் அல்லது இனவாதத்தை கனியச் செய்ய வேண்டும். இவை இரண்டையும் செய்யத் தயாரற்ற எந்த ஒரு தலைவரும் இனப்பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வை தரப்போவதில்லை.

இந்நிலையில் சிங்கள பௌத்த பெருந் தேசிய வாக்குகளை கவர்வதற்காக தமிழ் மக்களுக்கு எதையும் கொடுக்க விரும்பாத தலைவர்களோடு தமிழ் மக்கள் எப்படி பேரம் பேசுவது? அது பேரமா? அல்லது வழிஞ்சோடி அரசியலா? தமது பேரம் பேசும் பலம் எதுவென்பதை தமிழ் மக்கள் சிங்களத் தலைவர்களுக்கு கூர்மையான விதத்தில் உணர்த்துவதே ஒரே வழி. அதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒரு சிறந்த களம். அதை தமிழ் மக்கள் தமது ஆணையை வெளிக் கொண்டு வருவதற்கான மறைமுக வெகுசன வாக்கெடுப்பாக பயன்படுத்தலாம்.அதேசமயம் தென்னிலங்கையில் பேரம் பேசுவதற்கான ஒரு களமாகவும் அதை பயன்படுத்தலாம்.

இம்முறை தமிழ் மக்கள் மஹிந்தவை தோற்கடிப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டு சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப் போவதில்லை எந்த ஒரு செய்தியை தமிழ் பொது வேட்பாளருக்கான தேடல் உணர்த்தியுள்ளது.

மூன்றாவது செய்தி வெளிநாடுகளுக்கு உரியது. சஜித் பிரேமதாசவை வெல்ல வைக்க வேண்டும் என்று திட்டமிடும் நாடுகள் தமிழ் மக்களோடு பேரம் பேச வேண்டிய நிர்பந்தத்தை ஒரு தமிழ் பொது வேட்பாளர் அதிகப்படுபடுத்துவார். இதன் மூலம் தமிழ் மக்கள் சிங்கள அரசியல்வாதிகளுடன் உடன்படிக்கைகளை செய்ய முடியாது போனாலும் அவ்வரசியல்வாதிகளை பின்னிருந்து தீர்மானிக்க முயலும் நாடுகளிடம் ஏதாவது பாதுகாப்பு பொறிமுறையை கோரலாம்.

எனவே ஒரு தமிழ் பொது வேட்பாளரை நிறுத்த முடியாது போனாலும் கூட சுயாதீனக் குழுவானது தமிழ் அரசியலையும் தென்னிலங்கை அரசியலையும் மிகக் குறுகிய காலத்தில் குளப்பியிருக்கிறது.
சுயாதீன குழுவில் நடவடிக்கைகளுக்குச் சற்று பின்னாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் களத்தில் குதித்தது. கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தையும் இணைத்துக் கொண்டு அவர்கள் ஒரு புதிய முயற்சியை தொடங்கினார்கள். அது ஏறக்குறைய சுயாதீனக் க்குழுவின் நடவடிக்கைகளுக்கு சமாந்தரமானது. ஒருவிதத்தில் அது சுயாதீன குழுவுக்கு பக்கபலமானது. கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களும் மாணவ அமைப்புக்களும் இவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிப்பது என்பது ஜனநாயகமான ஒரு முன்னேற்றம்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எல்லா கட்சிகளையும் ஒரு மேசையில் கொண்டு வந்து சேர்த்தது. எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான கோரிக்கைகளை தென்னிலங்கை நோக்கி முன்வைக்க வேண்டும் என்று மாணவர்கள் கேட்கிறார்கள். கட்சிகளும் அதற்கு சம்மதித்தன. கட்சிகள் ஏற்கனவே எப்படிப்பட்ட கோரிக்கைகளை முன் வைக்க வேண்டும் என்பது குறித்து சிந்தித்து வைத்திருந்தன. அக்கோரிக்கைகள் அனைத்தையும் தொகுத்து ஒரு பொது கோரிக்கையாக மாற்றி அதுதான் தென்னிலங்கையில் முன்வைக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் கேட்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான சந்திப்புக்களை மூலம் சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டுவதில் பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறி இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் ஒரு தேர்தலை முன்வைத்து தமிழ்த் தரப்புக்கள் இவ்வாறு ஒன்றிணைக்கப்படுவது மிகவும் அரிது.

அவ்வாறு ஒன்றிணைக்க தக்க பலம் முன்னாள் மன்னார் ஆயரிடம் இருந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் அவர் தமிழ் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசியப் பேரவை என்ற ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று ஊக்குவித்தார். ஆனால் அம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. இப்பொழுது மறுபடியும் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு முயற்சியை தொடங்கியிருக்கிறார்கள். தமிழ் கட்சிகள் எந்த அளவுக்கு இதில் தொடர்ச்சியாக ஒத்துழைக்கும் என்று பொறுத்திருந்தே பார்க்க வேண்டும.;; ஜனாதிபதி தேர்தலை தனித்தனியாக அணுகக்கூடாது என்ற ஒரு நிலையை பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்படுத்துவர்களாக இருந்தால் அது ஒரு பெரிய வெற்றி. அதிகளவு மக்கள் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் ஒரு கட்சி ஏனைய கட்சிகளை கலந்தாலோசிக்காமல் வாக்களித்த மக்களுக்கும் கூறாமல் தென்னிலங்கையோடு நிபந்தனைகள் இன்றி சமரசம் செய்யக்கூடிய நிலைமைகளை இவ்வாறான முயற்சிகள் தடுக்குமா?

அவ்வாறு தடுத்தால் அது பெரிய வெற்றிதான். 2016 இல் மன்னாரில் அம் மாவட்டத்தின் முன்னாள் மறை மாவட்ட ஆயர் முன்னிலையில் இப்படி ஒரு சந்திப்பு நிகழ்ந்த போது ஆயர் சம்பந்தரை நோக்கி விமர்சன பூர்வமாக கருத்துக்களை முன் வைத்தார். அப்பொழுது சம்பந்தர் என்ன சொன்னார்? ‘நீங்கள் சொல்வதை சொல்லுங்கள் ஆனால் கடைசியில் முடிவெடுப்பது நான்தான்’ என்றுதானே சொன்னார்? இப்பொழுதும் அப்படிக் கூறப்படுமா?

உள்ளூராட்சித் தேர்தலில் கிடைத்த படிப்பினைகளின் பின்னணியில் கடந்த ஐந்து ஆண்டுகால அரசியலில் கிடைத்த படிப்பினைகளின் பின்னணியில் குறிப்பாக கடந்த ஒக்ரோபர் மாதம் நிகழ்ந்த ஆட்சிக் குளப்பத்திற் கிடைத்த படிப்பினைகளின் பின்னணியில் தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை தமிழ் மக்கள் பேரவை நியமித்த சுயாதீனக் குழுவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் உருவாக்கியுள்ளன. # ஜனாதிபதிதேர்தல்  #சுயாதீனக் குழு  #பல்கலை #தலையீடு

 

http://globaltamilnews.net/2019/131855/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.