Jump to content

ஹிஸ்புல்லாஹ்வை களமிறக்கியமை சதித்திட்டமாகும் - ஹக்கீம்


Recommended Posts

IMAGE-MIX.png
(ஆர்.யசி)

நாட்டின் பாதுகாப்பு விடயத்தில் சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகள் முழுமையாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியும் அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.

hakem.jpg

அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். 

இது ஒரு சதித்திட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்று நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய பிரதான முஸ்லிம் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக தீர்மானம் எடுத்துள்ள நிலையில் நாம் இணைந்துள்ள அணியை பலப்படுத்துவதை விடுத்து ஏனைய ஒரு அணிக்காக துணை போவது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்ப வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் வேட்பாளரை ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் எடுக்கும் சதித்திட்டமாகும் என்றும் அவர் கூறினார்.

இம்முறை ஜனாதிபதி தேர்தலை முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லா போட்டியிட தீர்மானம் எடுத்துள்ள நிலையில் முஸ்லிம் தலைமைகளின் கருத்து குறித்து தெரிவிக்கையில் அவர் இவற்றைக் கூறினார். 

https://www.virakesari.lk/article/66788

Link to comment
Share on other sites

சஜித் பிரேமதாச வெற்றிபெறுவதற்கு சிறுபான்மை மக்கள் வாக்களிக்க வேண்டும்

Sunday, October 13, 2019 - 4:19pm

சஜித் பிரேமதாச வெற்றிபெறுவதற்கு சிறுபான்மை மக்கள் தங்களது வாக்களிப்பு விகிதாசாரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் அதியுச்ச வாக்குப்பதிவு இடம்பெற வேண்டியது அவசியாகும். அப்போதுதான் நமது வெற்றிவாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள முடியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழுக்கூட்டம் நிந்தவூரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரைநிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;

இந்த ஜனாதிபதி தேர்தல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் ஜனாதிபதியோ, பிரதமரோ, எதிர்க்கட்சித் தலைவரோ அல்லது சபாநாயகரோ போட்டியிடாமல் புதிய முகங்கள் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். அதுவும் பிரதான கட்சிகள் தங்களுக்கு இருந்த பலவிதமான உள்ளக முரண்பாடுகளுக்கு முகம்கொடுத்த பின்னணியில்தால் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

ஆட்சிக் கவிழ்ப்பின்போது பல இடங்களில் நாங்கள் கூட்டங்களை நடாத்தினோம். அந்த இடங்களில் சஜித் பிரேமதாசவுக்கு மக்கள் மத்தியில் பலத்த ஆதரவு காணப்பட்டது. பிரதமரை பேசுவதை விட சஜித் பேசுவதையே மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இதனால், நிகழ்ச்சிநிரலை மாற்றி இறுதியில் சஜித் பேசுகின்ற அளவுக்கு நிலைமை காணப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்ற வரவேண்டும் என்று பலரும் விரும்பினார்கள். கட்சிக்குள் இருப்பவர்களே அதை பேசுவதற்கு தயக்கம் காட்டினார்கள். இந்நிலையில், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச களமிறக்கப்பட வேண்டும் என்று பிரதமர் முன்னிலையில் நான் தைரியமாக கூறினேன். அன்றுமுதல் இன்றுவரை எனது நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்துகொண்டிருக்கிறேன்.

முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக பரிணமித்து 1988இல் முதலில் எதிர்கொண்ட ஜனாதிபதி தேர்தலில் ரணசிங்க பிரேமதாசவை மறைமுகமாக ஆதரித்தது. அவர் எங்களது வாக்குகளினால்தான்  வெற்றிபெற்றார் என்பது, பின்னர் வந்த பாராளுமன்ற தேர்தல்களில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டு பெற்ற வாக்குகளின் மூலம் நிரூபணமானது.

கட்சியின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் ஐக்கிய தேசியக் கட்சியுடன் வெளிப்படையாக மோதினாலும், ஜனாதிபதியாகவிருந்த ரணசிங்க பிரேமதாசவுடன் நெருக்கமான உறவைப் பேணிவந்தார். அட்டாளைச்சேனை கல்வியில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ரணசிங்க பிரேமதாச மீண்டும் ஜனாதிபதியாக வரவேண்டும் என்று அவரின் முன்னாலேயே தலைவர் அஷ்ரஃப் கூறியிருந்தார்.

தற்போது போட்டியிடும் அவரது மகனை வெல்லவைப்பது முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் கடமையாகும். சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியல்ல, அது முஸ்லிம் காங்கிரஸ் தலைவரின் வெற்றியாகும். அஷ்ரஃப் உருவாக்கிய ஜனாதிபதியாக ஆர். பிரேமதாச இருந்ததுபோல, முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கிய ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசவை நாம் அடையாளப்படுத்த வேண்டும்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக விரல்நீட்டிய அனைத்து தரப்புகளும் ஒட்டுமொத்தமாக சங்கமித்திருக்கும் அணிக்கு எதிராகத்தான், நாங்கள் இத்தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறோம். முஸ்லிம் தரப்பு அடிமை சமூகமாக இருக்க வேண்டுமா, இல்லையா என்ற போராட்டம்தான் இந்த தேர்தலின் பின்னால் இருக்கிறது.

முஸ்லிம் விரோத சக்திகளின் பின்னால் மறைந்துகொண்டால் தப்பித்துக்கொள்ள முடியும் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். எங்களது கெளரவத்தை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. நீதி, நியாயத்துக்காக போராடும் இயக்கம் தப்பிப் பிழைப்பதற்காக அநியாயக்கார கும்பலிடம் சரணடைய முடியாது. தனது சொத்துகளை காப்பாற்றுவதற்காக சிலர் இத்தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இது முஸ்லிம் வாக்குகளை சிதறடிக்கும் சதித்திட்டமாகும்.

சஜித் பிரேமதாச வெற்றிபெறுவதற்கு சிறுபான்மை மக்கள் தங்களது வாக்களிப்பு விகிதாசாரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும். அண்மையில் கல்முனை தேர்தல் தொகுதியில் அதிகூடிய வாக்களிப்பு பதிவாகியிருந்தது. அதுபோல தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் அதியுச்ச வாக்குப்பதிவு இடம்பெற வேண்டியது அவசியாகும். அப்போதுதான் நமது வெற்றிவாய்ப்புகளை அதிகரித்துக்கொள்ள முடியும்.

முஸ்லிம்களில் சிலருக்கு இப்போது ஜே.வி.பி. மோகம் வந்துள்ளது. ஜே.வி.பி.க்கு வாக்களிப்பது என்பது மறைமுகமாக கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரளிப்பதாகும். ஜே.வி.பி. வேட்பாளர் ஒருபோதும் வெற்றிபெறப் போவதில்லை. சமூகத்துக்காக குரல்கொடுத்து பேசினார்கள் என்பதற்காக வெற்றிபெறாத ஒருவருக்கு வாக்களித்து உங்களது பொன்னான வாக்குளை வீணாக்கவேண்டாம். ஜே.வி.பி.யினர் வெளிப்படையாக எதையும் கையாள்வதற்கு தயக்கம் காட்டினார்கள் என்பதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது என்றார்.

https://www.thinakaran.lk/2019/10/13/அரசியல்/41967/சஜித்-பிரேமதாச-வெற்றிபெறுவதற்கு-சிறுபான்மை-மக்கள்-வாக்களிக்க-வேண்டும்

Link to comment
Share on other sites

44 minutes ago, ampanai said:

முஸ்லிம்களில் சிலருக்கு இப்போது ஜே.வி.பி. மோகம் வந்துள்ளது. ஜே.வி.பி.க்கு வாக்களிப்பது என்பது மறைமுகமாக கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரளிப்பதாகும்.

அநுர பெறும் வாக்குகளில் பெரும்பாலானவை சஜித்துக்கான வாக்குகளிலிருந்து பிரிந்து வருபவை. முதல் சுற்றில் அது கோத்தாவுக்கு சாதகமாக இருக்கும்.

அநுரவுக்கு வாக்களிப்போரில் பெரும்பாலானோர் இரண்டாம் விருப்ப தெரிவுக்கு சஜித் பெயரை இடுவார்கள் என்பதால் இரண்டாம் சுற்றுக்கு சென்றால் அது சஜித்துக்கு ஆதரவாக இருக்கும்.

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

இது ஒரு சதித்திட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை. இன்று நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய பிரதான முஸ்லிம் தலைமைகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அணியாக தீர்மானம் எடுத்துள்ள நிலையில் நாம் இணைந்துள்ள அணியை பலப்படுத்துவதை விடுத்து ஏனைய ஒரு அணிக்காக துணை போவது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்ப வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் வேட்பாளரை ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கத்தில் எடுக்கும் சதித்திட்டமாகும் என்றும் அவர் கூறினார்.

சனநாயக நாடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கும், தேர்தலில் சுயாட்சி வேட்பாளர்களும் களம் இறங்குவார்கள். இல்லாவிட்டால் அது சர்வாதிகார இல்லை மன்னர் ஆட்சி நிலவும் நாடாக இருக்கும்.    

 

Link to comment
Share on other sites

13 minutes ago, Lara said:

அநுர பெறும் வாக்குகளில் பெரும்பாலானவை சஜித்துக்கான வாக்குகளிலிருந்து பிரிந்து வருபவை. முதல் சுற்றில் அது கோத்தாவுக்கு சாதகமாக இருக்கும்.

அநுரவுக்கு வாக்களிப்போரில் பெரும்பாலானோர் இரண்டாம் விருப்ப தெரிவுக்கு சஜித் பெயரை இடுவார்கள் என்பதால் இரண்டாம் சுற்றுக்கு சென்றால் அது சஜித்துக்கு ஆதரவாக இருக்கும்.

கடந்த காலத்தை கொண்டவர் கோத்தா. அதனால், பல சிறுபான்மை தலைவர்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என கோருகிறார்கள். ஆனால், சஜித்தின் அரசில் இருக்கப்போகும் சரத்தும் கடந்த காலத்தை கொண்டவர், கோத்தாவிற்கு சளைத்தவர் அல்ல. 

சஜித் அனுபவம் குறைந்தவராக அரசியலில் உள்ளார். அவர், மூத்தவர்களின் சொற்படி நடப்பாரா இல்லை தனெக்கென ஒரு புதியபாதையை எழுதுவாரா என்பதில், அவரிடம் சிறுபான்மை மக்கள் புதுமையை எதிர்பார்ப்பது புதிதல்ல.  இவ்வாறு புதியவர்களிடம் புதுமையை எதிர்பார்த்து ஏமாந்ததும் புதிது அல்ல.     

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

கடந்த காலத்தை கொண்டவர் கோத்தா. அதனால், பல சிறுபான்மை தலைவர்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என கோருகிறார்கள். ஆனால், சஜித்தின் அரசில் இருக்கப்போகும் சரத்தும் கடந்த காலத்தை கொண்டவர், கோத்தாவிற்கு சளைத்தவர் அல்ல. 

சஜித் அனுபவம் குறைந்தவராக அரசியலில் உள்ளார். அவர், மூத்தவர்களின் சொற்படி நடப்பாரா இல்லை தனெக்கென ஒரு புதியபாதையை எழுதுவாரா என்பதில், அவரிடம் சிறுபான்மை மக்கள் புதுமையை எதிர்பார்ப்பது புதிதல்ல.  இவ்வாறு புதியவர்களிடம் புதுமையை எதிர்பார்த்து ஏமாந்ததும் புதிது அல்ல.     

சரத் பொன்சேகா ஏற்கனவே மைத்திரி - ரணில் அரசில் இருந்தவர் தான். ஆனால் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கவில்லை.

சஜித் சரத் பொன்சேகாவை தனது அரசில் கொண்டிருப்பதை விட கோத்தா ஜனாதிபதியாக வருவது மிக மோசமான நிலையை உருவாக்கும். தவிர மகிந்த & கோவுக்கு அரசியல் காய்நகர்த்தல்கள் அத்துப்படி. சரத் பொன்சேகாவுக்கு அரசியல் தெரியாது. அவருக்கு இருப்பது இராணுவ பலம்.

மிக மோசமான இனவழிப்பை நடத்திய மகிந்த & கோவை எதிர்ப்பதற்காக, எதிர்ப்பவர்கள் சஜித்திடம் புதுமையை எதிர்பார்க்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. சஜித்திடம் நான் புதுமை எதையும் எதிர்பார்க்கவில்லை. என்னைப்போல் தான் பலர் என நினைக்கிறேன்.

1 hour ago, ampanai said:

சனநாயக நாடுகளில் ஒன்றிற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கும், தேர்தலில் சுயாட்சி வேட்பாளர்களும் களம் இறங்குவார்கள். இல்லாவிட்டால் அது சர்வாதிகார இல்லை மன்னர் ஆட்சி நிலவும் நாடாக இருக்கும்.    

ஹிஸ்புல்லா களமிறங்குவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் அல்ல, வாக்குகளை பிரிக்கும் எண்ணத்தில்.

Link to comment
Share on other sites

1 hour ago, Lara said:

ஹிஸ்புல்லா களமிறங்குவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் அல்ல, வாக்குகளை பிரிக்கும் எண்ணத்தில்.

இருக்கலாம். அதுவும், வாக்குகளை பிரிப்பது, சனநாயகத்தின் ஒரு அம்சமே. சனநாயக ஆட்சி முறைக்குள் உட்பட்டதே.

சனநாயக ஆட்சி முறையே இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஆட்சி முறைகளில் சிறந்தது. 

Link to comment
Share on other sites

1 hour ago, Lara said:

சரத் பொன்சேகா ஏற்கனவே மைத்திரி - ரணில் அரசில் இருந்தவர் தான். ஆனால் தேசிய பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கவில்லை.

சஜித் சரத் பொன்சேகாவை தனது அரசில் கொண்டிருப்பதை விட கோத்தா ஜனாதிபதியாக வருவது மிக மோசமான நிலையை உருவாக்கும். தவிர மகிந்த & கோவுக்கு அரசியல் காய்நகர்த்தல்கள் அத்துப்படி. சரத் பொன்சேகாவுக்கு அரசியல் தெரியாது. அவருக்கு இருப்பது இராணுவ பலம்.

மிக மோசமான இனவழிப்பை நடத்திய மகிந்த & கோவை எதிர்ப்பதற்காக, எதிர்ப்பவர்கள் சஜித்திடம் புதுமையை எதிர்பார்க்கிறார்கள் என நீங்கள் நினைத்தால் அது தவறு. சஜித்திடம் நான் புதுமை எதையும் எதிர்பார்க்கவில்லை. என்னைப்போல் தான் பலர் என நினைக்கிறேன்.

'அனுர வென்றால் புதிய அரசியலமைப்பு': விஜித்த ஹேரத்' - ஏன்  தேசிய மக்கள் சக்திக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக ஆதரவு தரக்கூடாது? 

இரண்டு முதன்மை வேட்ப்பாளர்கள் சார்ந்த கட்சிகளை விட இவர்கள் ஒப்பீட்டளவில் குறைவான தீங்குகளை செய்தவர்கள். ஆட்சியில் அமராதவர்கள்.   

Link to comment
Share on other sites

12 hours ago, ampanai said:

அத்துடன் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் இந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்பது முஸ்லிம் வாக்குகளை திசைதிருப்பும் நோக்கத்தில் முன்னெடுக்கும் செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம். 

ஐதேக வை வெற்றி பெறச் செய்து பெருமளவு அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள ஹக்கீம் செய்த சதி முயற்சிக்கு ஹிஸ்புல்லாவின் சதி முயற்சி முட்டுக்கட்டையாக இருப்பதால் ஹக்கீம் ஒப்பாரி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

Link to comment
Share on other sites

11 hours ago, ampanai said:

இருக்கலாம். அதுவும், வாக்குகளை பிரிப்பது, சனநாயகத்தின் ஒரு அம்சமே. சனநாயக ஆட்சி முறைக்குள் உட்பட்டதே.

சனநாயக ஆட்சி முறையே இதுவரை மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட ஆட்சி முறைகளில் சிறந்தது. 

நீங்கள் கோத்தா வெல்ல வேண்டும் என விரும்புவதால் இவ்வாறு எழுதுகிறீர்கள்.

இங்கு யாராலும் ஹிஸ்புல்லா போட்டியிடுவதை தடுக்க முடியாது. ஆனால் ஹிஸ்புல்லா போட்டியிடுவது வாக்குகளை பிரிப்பதற்கு என்பதை கூறி மக்களை விழிப்புணர்வூட்டலாம். 

Link to comment
Share on other sites

12 hours ago, ampanai said:

'அனுர வென்றால் புதிய அரசியலமைப்பு': விஜித்த ஹேரத்' - ஏன்  தேசிய மக்கள் சக்திக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக ஆதரவு தரக்கூடாது? 

இரண்டு முதன்மை வேட்ப்பாளர்கள் சார்ந்த கட்சிகளை விட இவர்கள் ஒப்பீட்டளவில் குறைவான தீங்குகளை செய்தவர்கள். ஆட்சியில் அமராதவர்கள்.   

ஜேவிபி ஒரு இனவாத கட்சி, தமிழர் விரோத கட்சி.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தது.

சமஸ்டியை எதிர்த்தது.

தற்காலிகமாக இணைந்திருந்த வடக்கு கிழக்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பிரித்தது.

சுனாமி பொதுக்கட்டமைப்பை எதிர்த்தது.

இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையில் யுத்த நிறுத்தம் நிலவிய போது அதை குழப்பும் முயற்சிகளில் ஈடுபட்டது.

2005 தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவு வழங்கி புலிகள் மற்றும் தமிழர்களுக்கெதிராக நடந்த போருக்கும் தீவிர ஆதரவை வழங்கியிருந்தது.

இப்படி பல....

JVP உடைந்து விமல் வீரவன்ச JNP ஐ உருவாக்கியிராவிட்டால் இன்றைய JVP இல் இனவாதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

2009 இல் மகிந்த & கோவின் யுத்த வெற்றியின் பின் அவர்களது இனவாதத்தின் முன் JVP இன் இனவாதம் எடுபடாததால் இப்பொழுது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்.

தவிர கடந்த தேர்தலில் மைத்திரிக்கு வாக்களித்த அனைத்து வடக்கு கிழக்கு தமிழர்களும் இம்முறை அநுரவுக்கு வாக்களித்தாலும் அவர் வெற்றி பெற மாட்டார். 3 ஆம் நிலையிலேயே இருப்பார். இது முதல் சுற்றில் கோத்தா, சஜித்தை விட பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்க உதவும். இரண்டாம் சுற்றில் கோத்தா வெற்றிபெற உதவும். (தமிழர்கள் பெரும்பாலும் இரண்டாம் விருப்ப தெரிவுக்கு யாரையும் போட மாட்டார்கள்).

Link to comment
Share on other sites

1 hour ago, Lara said:

ஜேவிபி ஒரு இனவாத கட்சி, தமிழர் விரோத கட்சி.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்தது.

சமஸ்டியை எதிர்த்தது.

தற்காலிகமாக இணைந்திருந்த வடக்கு கிழக்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பிரித்தது.

சுனாமி பொதுக்கட்டமைப்பை எதிர்த்தது.

இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமிடையில் யுத்த நிறுத்தம் நிலவிய போது அதை குழப்பும் முயற்சிகளில் ஈடுபட்டது.

2005 தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவு வழங்கி புலிகள் மற்றும் தமிழர்களுக்கெதிராக நடந்த போருக்கும் தீவிர ஆதரவை வழங்கியிருந்தது.

இப்படி பல....

JVP உடைந்து விமல் வீரவன்ச JNP ஐ உருவாக்கியிராவிட்டால் இன்றைய JVP இல் இனவாதம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

2009 இல் மகிந்த & கோவின் யுத்த வெற்றியின் பின் அவர்களது இனவாதத்தின் முன் JVP இன் இனவாதம் எடுபடாததால் இப்பொழுது கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்.

தவிர கடந்த தேர்தலில் மைத்திரிக்கு வாக்களித்த அனைத்து வடக்கு கிழக்கு தமிழர்களும் இம்முறை அநுரவுக்கு வாக்களித்தாலும் அவர் வெற்றி பெற மாட்டார். 3 ஆம் நிலையிலேயே இருப்பார். இது முதல் சுற்றில் கோத்தா, சஜித்தை விட பெருமளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்க உதவும். இரண்டாம் சுற்றில் கோத்தா வெற்றிபெற உதவும். (தமிழர்கள் பெரும்பாலும் இரண்டாம் விருப்ப தெரிவுக்கு யாரையும் போட மாட்டார்கள்).

எல்லா கட்சிகளும் இனவாத கட்சிகள், எனவே எந்த ஒரு கட்சியையும் பிரித்து குறை கூறுவதில் நியாயம் இல்லை. 

மற்றைய இரு கட்சிகளை விடவும், ஜே.வி.பி. கட்சியின் கைகளில் தமிழர் படுகொலைகள் இல்லை.
   

Link to comment
Share on other sites

20 minutes ago, ampanai said:

எல்லா கட்சிகளும் இனவாத கட்சிகள், எனவே எந்த ஒரு கட்சியையும் பிரித்து குறை கூறுவதில் நியாயம் இல்லை. 

மற்றைய இரு கட்சிகளை விடவும், ஜே.வி.பி. கட்சியின் கைகளில் தமிழர் படுகொலைகள் இல்லை.

‘அநுர வென்றால் புதிய அரசியலமைப்பு' என்ற வரிகளை வைத்து தமிழர்கள் ஏன் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க கூடாது என கேட்டீர்கள். அநுர ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு தீர்வு தரப்போவதில்லை என்பதற்கு தான் ஜேவிபி பற்றி முன்னைய சில விடயங்களை பட்டியலிட்டேன்.

ஜேவிபி கைகளில் தமிழர் படுகொலை உள்ளது. இறுதிப்போரை ஆரம்பித்து வைத்ததே தாம் என ஜேவிபி காரரே மார்தட்டிக்கொண்டவர்கள்.

அநுரவுக்கு தமிழர்கள் வாக்களித்தாலும் அவர் வெல்ல மாட்டார், அது கோத்தாவின் வெற்றிக்கு வழிவகுக்கும் என ஏற்கனவே விளக்கம் தந்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 சிவாஜிலிங்கம் என்னத்துக்காக கேட்கிரார் என்றுதான் எனக்கு விளங்குதில்லை 😄 வடக்கு மக்கள் கோட்டாவுக்கு வாக்களிக்கப்போவதில்லை  அங்கால சைக்கிள் கோஷ்டிகள் பகிஸ்கரிக்கிறம் என்று சொல்லி திரியுதுகள் செம்புகளின்ட பேச்சுகளை காணல சும்ந்திரன் மட்டும் பேசுகிறார் என்று சொல்லுறாங்கள் ஆனால் கட்சி ரீதியாக அல்ல தனிப்பட்ட விசயமாக என்று சொல்லுறாங்கள் சரத்பொன்சேகாவுக்கு வாக்கு அளியுங்கள் என்ற கூட்டம் நாளைக்கு என்ன த்த சொல்ல போகுதோ தெரியல

பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள் போல

karakattakaran-movie.png

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.