Jump to content

Recommended Posts

வடக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான நான்காவது சந்திப்பு இணக்கமேதும் எட்டப்படாமல் முடிவடைந்துள்ளது.

பொது உடன்படிக்கையில் கட்சிகள் எவையும் ஒப்பமிடாத நிலையில் நாளை காலை மீண்டும் சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமும், சர்வதேச சமூகத்திடமும் தமிழர்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய சரத்துக்கள் அடங்கிய பொது உடன்படிக்கையில் கட்சிகள் முன்வைத்த திருத்தங்களுடன் நாளை பிற்பகல் 1.30 மணிக்கு ஒப்பமிடுவதற்கு கலந்துகொண்ட கட்சிப் பிரமுகர்களிடையே இணக்கம் ஏற்பட்டிருப்பதாக அறியவருகிறது.

தமிழ் கட்சிகளின் ஒருமித்த முடிவு என்ன? – நான்காவது சுற்று பேச்சு இடம்பெறுகிறது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கட்சிகளை பொதுநிலைப்பாடு ஒன்றுக்கு வரச்செய்வதற்கான முயற்சியில் வடக்கு – கிழக்கு பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் ஈடுபட்டுள்ளது.

இதன்படி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக பிரதிநிதிகளுக்கும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான நான்காவது சந்திப்பு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அண்மையாகவுள்ள ப்ரைட் இன் விடுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.

இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.

அத்துடன் புளொட் சார்பில் அதன் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்ந்தன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பில் அதன் தலைவர் பொ.கஜேந்திரகுமார், செயலாளர் செ.கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் கனகரட்ணம் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும், ஈ.பீ.ஆர்.எல்.எஃப் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.அருந்தவபாலனும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை, இன்றைய சந்திப்பில் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளதோடு சின்மய மிஷன் வதிவிட சுவாமிகள், யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் எஸ்.ஜோதிலிங்கம் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

Jaffna-University-and-Tamil-Political-Pa

Jaffna-University-and-Tamil-Political-Pa

 

Jaffna-University-and-Tamil-Political-Pa

Jaffna-University-and-Tamil-Political-Pa

Jaffna-University-and-Tamil-Political-Pa

Jaffna-University-and-Tamil-Political-Pa

 

Jaffna-University-and-Tamil-Political-Pa

Jaffna-University-and-Tamil-Political-Pa

http://athavannews.com/தமிழ்-கட்சிகளின்-ஒருமித்/

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🙏கூட்டத்துக்கு வரும்பொழுது சாப்பிட்டுவிட்டு வரக்கூடாதா?இனி மாவை க க்கா இருந்துவிட்டு வாறன் என்று வெளிக்கிடப்போறார். சாப்பிட்டு விட்டு வருவதாகச் சொல்லி சுமத்திரன் வெளியேறினார்.சோறா சுதந்திரமா?தமிழன்டா 😇🙏🙏🙏

🙏

http://www.vakeesam.com/?p=35596&fbclid=IwAR2_KriOd30_W8fvHjqY_yJsXnmRTmhBqxc3MgIWtH2haYRuDQbAVGmnG10

 

சுமந்திரன் - ஆனந்தன் வெளியேறியது ஏன்?

பரபரப்பை ஏற்படுத்திய கலந்துரையாடல் சறுக்கல்

FB_IMG_1570986007087.jpg
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் இன்று (13) மாலை முதல் இரவு 10 மணி வரை இடம்பெற்றது.

பிரிங்டின் விடுதியில் கடும் வாதப்பிரதிவாதங்கள், சராமரியான தர்க்கத்திற்கு மத்தியில் நடைபெற்ற இக் கூட்டம் இணக்கமேதும் எட்டப்படாமலே முடிவடைந்துள்ளது.

பொது  உடன்படிக்கையில் கட்சிகள் எவையும் ஒப்பமிடாத நிலையில் குறித்த கலந்துரையாடல் நாாளை (14) பிற்பகல் 1.30 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யார் கையொப்பம் வைக்காவிடனும் எங்களது முயற்சி தொடரும். ஒப்பமிட்ட கையொப்பங்களுடன் பொது உடன்படிக்கை வெளியிடப்படும் என்று மாணவர் ஒன்றியம் சற்றுமுன் அறிவித்தது.
Link to comment
Share on other sites

மாணவர்களின் கலந்துரையாடல் நடந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்திலிருந்த முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் இந்த கூடத்தில் கலந்துகொள்ளவில்லை.

விக்கினேஸ்வரன் இந்தக் கூட்டத்தை குழப்பும் நோக்கத்துடன் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

விக்கினேஸ்வரன் யாரிடம் காசை வாங்கி இந்த முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை என பலரும் கதைத்துக்கொண்டதாக தெரிகிறது.

சிவசக்தி ஆனந்தன், சுமந்திரன் இருவரும் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு, அவர்களின் கட்சித் தலைவர்கள் (சுரேஷ், மாவை) தொடர்ந்து கலந்துகொள்ள தகுந்த காரணங்களால் வெளியேறியதாக தெரிகிறது.

கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளும் இந்தக் கூட்டத்தில் விக்கினேஸ்வரன் கலந்து கொள்ளாமல் இரண்டு அரசியல் ஞானசூனியன்களை அனுப்பியதாக கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர். இதனாலேயே விக்கினேஸ்வரன் யாரிடமோ காசை வாங்கிக் கொண்டு இந்த கலந்துரையாடல்களை குழப்ப முயல்வதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

 

Link to comment
Share on other sites

கஜேந்திரகுமார் கும்பலும் இன்றை கூட்டத்தில் வழமைபோல தங்கள் சுயநலத்தையும் காட்டுமிராண்டி அரசியலை முன்னெடுத்ததாகவும் தெரிகிறது. குதிரை கஜேந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை புதைகுழியில் தள்ளிவருவதாக பலரும் தெரிவித்தனர்.

தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் கலந்துகொண்ட சுயநலவாதிகளும் அரசியல் ஞானசூனியங்கள்  இருவரின் சொற்படி விக்கினேஸ்வரன் நடப்பதால் அவரும் தமிழ் மக்கள் கூட்டணியை புதைகுழியில் தள்ளிவருவதாக பலரும் தெரிவித்தனர்.
 

Link to comment
Share on other sites

கலந்து கொள்பவர்கள், மாணவர்கள் என்ற சக்திக்கு பயந்து கலந்து கொள்கிறார்கள். 
ஒரு பொது உடன்படிக்கைக்கு வர வேண்டும் என்ற இதய சுத்தி இல்லை.  
கருத்தால் வேறுபடலாம், கொள்கையில் வேறு பட முடியாது. 

இறுதியில், ஒரு உடன்படிக்கை அமையாவிட்டாலும், மாணவ சமுதாயத்திற்கு ஒரு 'சலூட்'.  
 

Link to comment
Share on other sites

3 hours ago, போல் said:

மாணவர்களின் கலந்துரையாடல் நடந்த இடத்திலிருந்து கூப்பிடு தூரத்திலிருந்த முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் இந்த கூடத்தில் கலந்துகொள்ளவில்லை.

விக்கினேஸ்வரன் இந்தக் கூட்டத்தை குழப்பும் நோக்கத்துடன் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிகிறது.

விக்கினேஸ்வரன் யாரிடம் காசை வாங்கி இந்த முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை என பலரும் கதைத்துக்கொண்டதாக தெரிகிறது.

கலந்து கொள்ளாதாத்திற்கு என்ன காரணம் என நாளை கேட்க்கும் சந்தர்ப்பம் உண்டு. 

அதற்காக, அவர் காசை  வேண்டி கலந்து கொள்ளவில்லை என்பது சேறு பூசும் செயலாக தெரிகின்றது. இல்லை அதற்கு ஆதாரம் இருந்தால் அதை வெளியிட வேண்டும், அதுதான் பண்பு. 

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

கலந்து கொள்ளாதாத்திற்கு என்ன காரணம் என நாளை கேட்க்கும் சந்தர்ப்பம் உண்டு. 

அதற்காக, அவர் காசை  வேண்டி கலந்து கொள்ளவில்லை என்பது சேறு பூசும் செயலாக தெரிகின்றது. இல்லை அதற்கு ஆதாரம் இருந்தால் அதை வெளியிட வேண்டும், அதுதான் பண்பு. 

மாணவர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட சகல கட்சிகளினதும் தலைவர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில் விக்கினேஸ்வரன் மட்டும் எந்தவொரு காரணத்தையும் கூறாது பண்பற்ற முறையில் கலந்து கொள்ளாமையால் பலர் பலவிதமாக விக்கினேஸ்வரன் பாணியிலேயே ஊகித்து கதைப்பதற்கு அவரே இடம் கொடுத்துள்ளார் எனத் தெரிகிறது.

இங்கு மாணவர்களின் முயற்சியை மதிக்காமல், தலைவர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்ற முயற்சியை மதிக்காமல், தூர இடங்களில் இருந்து கூட வந்து கலந்து கொண்ட ஏனைய தலைவர்களை மதிக்காமல் மிகவும் பண்பற்ற முறையில் மிகவும் அநாகரிகமான முறையில் விக்கினேஸ்வரன் நடந்துகொண்டார் என்றே பலரும் தெரிவித்துள்ளனர்.

மேலும் விக்கினேஸ்வரன் சிறுபான்மை பொதுவேட்பாளர்கள் பற்றி நேற்று பத்திரிகைகளுக்கு கூறிய கருத்துக்கள் மூலம், மாணவர் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியை குழப்பும் நோக்கில் அவரது புறக்கணிப்பு ஒரு திட்டமிட்ட சதியாகவே கருதப்படுகிறது.

Link to comment
Share on other sites

11 minutes ago, போல் said:

மேலும் விக்கினேஸ்வரன் சிறுபான்மை பொதுவேட்பாளர்கள் பற்றி நேற்று பத்திரிகைகளுக்கு கூறிய கருத்துக்கள் மூலம், மாணவர் மற்றும் சமூக ஆர்வலர்களின் முயற்சியை குழப்பும் நோக்கில் அவரது புறக்கணிப்பு ஒரு திட்டமிட்ட சதியாகவே கருதப்படுகிறது.

சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்கவே சில வேட்பாளர்கள் களமிறக்கம்: – சி.வி.

சிறுபான்மை மக்களின் வாக்குகளை சிதறடிக்கவே சில வேட்பாளர்கள் களமிறக்கம்: – சி.வி.

சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே திட்டமிட்டு ஜனாதிபதித் தேர்தலில் சிலர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண முன்னாள் முதல்வரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “நாட்டில் இம்முறை அதிகளவானோர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதில் முக்கியமான சிலரை விட ஏனையோர் வேறு காரணங்களுக்காக போட்டியிடுவதற்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பார்கள் என்று நம்புகின்றேன்.

அதாவது குறிப்பாக சிறுபான்மையினரின் இடங்களில் சிலரை களமிறக்கி அவர்களின் வாக்குகளை பிரிப்பதற்கான ஒரு தந்திரோபாயம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.

இதனை யார் செய்கின்றார்கள் என்று கூற முடியாது. தேர்தலில் மூன்று முக்கிய கட்சிகள் தான் உள்ளன. ஏனையோர் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிப்பதற்காக போட்டியிடுவதாகவே நான் பார்க்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

https://www.perikai.com/

Link to comment
Share on other sites

யாழ் பல்கலைக்கழக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து செய்யும் இந்த முயற்சி தமிழ் மக்களின் பரவலான பாராட்டை பெற்றுள்ளது.

மாணவர்கள் முயற்சி வெற்றிபெற வேண்டும் என்பதே தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தில் உண்மையான அக்கறை உடைய அனைவரினதும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

மாணவர்களின் இந்த முயற்சிக்கு ஈபிஆர்எல்எப், டெலோ, புளட், தமிழரசுக்கட்சி ஆகியவை இதுவரை நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், கஜேந்திரகுமார் கோஷ்டி நிபந்தனைகளை விதித்து குழப்புவதையும் விக்கினேஸ்வரன் கலந்துகொள்ளாமல் குழப்புவதையும் பொது மக்கள் கவனமாக அவதானித்தபடியே உள்ளனர்.

Link to comment
Share on other sites

மாணவர் முயற்சி வெற்றி பெற்றது! ஐந்து கட்சிகள் பொது உடன்படிக்கை மூலம் இணைந்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் முடியும்வரை இவர்கள் இவர்கள் இணைந்து செயற்பட இணங்கியுள்ளனர்.

கலந்து கொள்ளாமல் குழப்பத்தை  ஏற்படுத்திய விக்கினேஸ்வரன் (தமிழ் மக்கள் முன்னணி) அழுத்தங்களால் "மனம் திருந்தி" இன்று கலந்துகொண்டு பொது உடன்பாட்டில் முதலாவதாக கையெழுத்து வைக்க, பின்னர் தமிழரசுக்கட்சி (மாவை), செல்வம் அடைக்கலநாதன் (டெலோ), சுரேஷ் பிரேமச்சந்திரன் (ஈபிஆர்எல்எப்), சித்தார்த்தன் (புளட்) ஆகியோர் கையெழுத்து வைத்தனர்.

தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தாங்கள் கபட நோக்கத்துடன் பகிரங்கமாக அறிவித்த கொள்கையை எல்லாரும் ஏற்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று வலியுறுத்திய கஜேந்திரகுமார் கோஷ்டி கையெழுத்து வைக்காமல் வெளியேறினார்.  

tamiul-party.jpg

 

சுயநல நோக்கில் வெளியேறிய கஜேந்திரகுமார் தெருவில் நின்று புலம்புவதாக தெரிவிக்கின்றனர்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.