Jump to content

தேசிய நிகழ்வுகளை கட்சி நிகழ்வாக்கும் இழிவரசியல்


Recommended Posts

 

தமிழர்களின் மண்ணில் இடம்பெறும் தேசிய நிகழ்வுகள், தமிழர்களின் பண்பாடு ஆகிவிட்டன. மாவீரர் நாள் தொடங்கி, தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாள், அன்னை பூபதி அவர்களின் நினைவு நாள், கப்டன் மில்லரின் நினைவு நாள் என்று வருடம் முழுவதும் தேச விடுதலைக்கு தங்களை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்களை அனுஷ்டிப்பது தாயகத்தின் வழக்கமும் பண்பாடும் ஆகும். 2009இற்குப் பின்னர், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையும் அதன் வரலாறுகளையும் மாத்திரமின்றி, மாவீரர்களின் நினைவு நாட்களையும் கட்சி அரசியலுக்கு பயன்படுத்தும் இழிவரசியல் நிலமை தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில், மாவீரர் நாட்கள் உள்ளிட்ட தேசிய நிகழ்வுகள் யாவுமே பொது இடங்களிலேயே நடாத்தப்பட்டுள்ளன. பொது மக்களும் போராளிகளும் அனுஷ்டிக்கும் இத் தேசிய நிகழ்வுகள் விடுதலைப் புலிகளின் பாசறைகளில் இடம்பெறுவதில்லை. அங்கு போராளிகளுக்கு மாத்திரமான நிகழ்வுகளே இடம்பெறும். மாவீரர் பொது மண்டபங்கள், சனசமூக நிலையங்கள், மைதானங்களின் அமைக்கப்பட்ட பொது மண்டபங்கள் போன்று மக்கள் இயல்பாக கூடக்கூடிய இடங்களில் இன உணர்வு எழிச்சி பெற போராளிகளின் வழிகாட்டலில் மக்கள் அமைப்புகளால் இந்த நிகழ்வுகள் . முழுவதும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே நிகழ்வுகள் இடம்பெறும் .காரணம் இந்த பெரும்போர் மக்களுக்காகவே நடந்தது அவர்களின் உணர்வுகளே அந்த இடத்துக்கு முக்கியமானதுன புலிகள் சரியான புரிந்துணர்வை கொண்டிருந்தனர் .

2009ஆம் ஆண்டுக்கு இற்குப் பின்னர், மக்கள் தமிழ் தேசிய நினைவு நாட்கள் எல்லாவற்றையும் தவறாமல் நினைவு கொள்கின்றனர். அது மாத்திரமல்ல, யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளிட்ட பொது நிறுவனங்கள் பலவற்றிலும் தேசிய நிகழ்வுகள் கொண்டாப்படுகின்றன. இதனால் அவர்கள் பல்வேறு இராணுவ நெருக்கடிகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அது மாத்திரமின்றி மக்கள் பெரும் நெருக்கடிகளின் மத்தியில் தமது பிள்ளைகளுக்கு அஞ்சலியை செலுத்தியுள்ளனர். இந்தக் காலத்தில் தமிழ் அரசியல் கட்சிகளும் தமது அலுவலகங்களில் தேசிய நினைவு நாட்களை நடத்தியுள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இலங்கையில் நெகிழ்வான அரு அரசியல் போக்கு காணப்பட்டது. இந்தக் காலத்தில்தான் மாவீரர் நாள் கொண்டாடக்கூடிய சூழலும் நாட்டில் ஏற்பட்டது. மக்கள் தன்னெழுச்சியாக மாவீரர் இல்லங்களை துப்புரவு செய்து கடந்த மூன்று ஆண்டுகளாக மாவீரர்களை நினைவு கூர்ந்து வருகின்றார்கள். மாவீரர் நாளை கொண்டாடுவதையும், தேசிய நிகழ்ச்சிகளை முன்னெடுப்பதையும் கட்சி நிகழ்வுகளாக்கும் செயற்பாடுகள் தற்போது இடம்பெறுகின்றன.

அண்மையில், தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாட்கள் வந்தன. கடந்த ஆண்டு யாழ் மாநகர சபை முதல்வர் தியாக தீபத்திற்கு நினைவுத் தூபி அமைப்பதாக அறிவித்தபோதும் இன்றுவரையில் அது நடக்கவில்லை. அந்த அறிவிப்பும் அவரது பதவிக்கும் கட்சிக்கும் விளம்பரமாகதான் இருந்ததே தவிர, காரியம் நடக்கவில்லை. தியாக தீபத்தின் நினைவுத் தூபியிலும் நினைவு நாட்களிலும் சில கட்சிகள் மோதி அரசியல் செய்யப் பாக்கின்றன. வவுனியாவில் இருந்து நடை பவனி ஒன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இளைஞர்கள் கலந்துகொள்ளவில்லை என்று முன்னணியினர் கவலை தெரிவித்தார்கள்.

அதற்கு காரணம் அந்தக் கட்சியே. அவர்கள் தமது கட்சிக்கும் நடை பவனிக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிக் கொண்டு, தமது கட்சிப் பெயரை அந்த நடைபவனியில் விளம்பரம் செய்தார்கள். அது மாத்திரமல்ல, பெரும்பாலான தேசிய நிகழ்வுகளிலும் மக்கள் எழுச்சிப் போராட்டங்களிலும் தமது கட்சி பெயர் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியிருப்பது முன்னணியின் வழக்கமாகிவிட்டது. அத்துடன் அந்த நடைபவனியின்போது முன்னணியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் அரசியல் விளம்பரத்தில் ஈடுபட்டார்கள். இதனால் தாயக இளைஞர்களுக்கு அந்த நடைபவனியில் ஈடுபாடு வரவில்லை. நினைவு தினங்களை நாம் செய்கின்றோம் என்பதை முன்னிறுத்துவதை மட்டுமே முன்னணியினர் தமது தேசிய கொள்கை என நினைக்கின்றனர் போலும் ,மகளின் தமது விடிவுக்காக தம் உயிர்களை கொடுத்தவர்களுக்கு மக்கள் தன்னிச்சையாக சென்று தமது ஆத்மார்த்தமான அஞ்சலியை செலுத்த கட்சிகள் இடம்கொடுக்காதது மக்கள் மனதை பெரிதும் காயப்படுத்தி இருக்கிறது .
சென்ற வருடம் தியாதீபம் திலீபனின் நினைவுத்தூபிக்கு அருகில் சென்று மேலே ஏறாதே கீழே இறங்கு இது புனிதமான இடம் என கட்சியின் சிறுசுகள் ஆர்ப்பரித்ததை பெரியவர்கள் அதாவது திலீபனோடு பேசிப் பழகியவர்கள் அவர் இறப்பை கண்முன் பார்த்து கதிகலங்கி போனவர்கள் வாயடைத்துபோய் வெளியே வந்து சொல்லி மனமுடைந்த சம்பவம் யாவரும் அறிந்ததே .

இதைப்போல மற்றொரு சம்பவம் கிளிநொச்சியில் நடந்துள்ளது. கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் வேலைகளை செய்வதற்காக பணிக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது. தற்போது புதிய பணிக்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
மாவீரர் துயிலும் இல்லம் என்பது பொதுவான இடம். அங்கே அனைத்து மக்களும் திரண்டு தமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தி தமது மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்துகின்ற இடம்.

எனவே மாவீரர் துயிலும் இல்ல பொதுப் பணிக்குழு ஒன்றை அமைப்பதாக இருந்தால் பகிரங்கமாக அழைத்து அனைத்து மக்களின் பிரதிநிதிகளும் அதில் தேர்வு செய்யப்படவேண்டும். ஒரு கட்சி உறுப்பினர்களை கொண்டு குழு அமைப்பதும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அதிகாரத்திற்குள் வைத்திருப்பது தேசிய நிகழ்ச்சிகளை குறுகிய எல்லைக்குள் அடக்கும்

கடந்த காலத்தில் மாவீரர் நாளில் துயிலும் இல்லத்தில் சில அரசியல்வாதிகள் விளக்கேற்றி பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருந்தார்கள். அதன் பின்னர் அவர்கள் அந்த இடத்தை நெருங்குவதில்லை. மக்களே அவற்றை முன்னெடுக்கின்றனர். மாவீரர் குடும்பங்கள், அவர்களின் பிள்ளைகள், உரித்துடையவர்களிடம் இத்தகைய நிகழ்வுகளை கையளிப்பதே சரியான அணுகுமுறை என்பதே பலரதும் கருத்து.

தேசிய நிகழ்வுகளின் போது கட்சிகள் பின்னால் ஒதுங்கி நிற்பதே நல்லது. மக்கள் அவற்றை முன்னெடுப்பார்கள். மக்களின் கைகளில் இதனை ஒப்படைக்க வேண்டும். விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படி கட்சி உறுப்பினர்களை வைத்து பணிக்குழு அமைக்கும் வேலைகள் நடக்குமா? இன்று தமிழ் கட்சிகள் எல்லாமே தமது வாக்கு வங்கிகளை இலக்கு வைத்தே செயற்படுகின்றன. மாவீரர் துயிலும் இல்லத்தில் தமது ஆதிகத்தை காட்டி, வாக்கு வேட்டையில் ஈடுபடுவது இழிவரசியல் ஆகும்.

தமிழ்க் குரலுக்காக தாயகன்

http://thamilkural.net/?p=4873&_thumbnail_id=4887

 
Link to comment
Share on other sites

தேசிய நிகழ்ச்சிகளை கட்சிகளும் மக்கள் அமைப்புகளும் இணைந்து கட்ச்சிச் சார்பற்று செய்வது வரவேற்க்கத்தக்கது. அத்தகைய சூழலோ வாய்ப்போ இல்லாதசூழலில் அரசியலாக்காமல் போட்டியில்லாமல் மக்கள் அமைப்புகளும் அரசியல்கட்ச்சிகாளும் தனித் தனியே செய்யலாம். இத்தகைய நிகழ்வுகளின் அமைப்புரீதியான நடைமுறைகள் தொடர்பாக அமைபுகளிடை புரிந்துணர்வும்  ஜனநாயகமும் பேணப்படுதல் அவசியம் என்பது எனது அவிப்பிராயமும் வேண்டுகோளுமாகும். .   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.