Jump to content

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோத்­தா­வுடன் பேசு­வதில் என்ன நியாயம்? - கஜேந்­திரன் கேள்வி


Recommended Posts

IMAGE-MIX.png
 

(தி.சோபிதன்)

மஹிந்த -மற்றும் கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வினர் இன அழிப்பை செய்­த­வர்கள் என்­பதால் அவர்­களை வெற்றி பெறச்செய்­யக்­ கூ­டாது என்று கடந்த காலங்­களில் கூறி வந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இப்­போது கோத்­த­பாய ராஜ­பக்­ ஷ­வு­டன் ­பேசு­வதில் என்ன நியாயம் இருக்­கின்­றது எனக் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் செயலர் செ.கஜேந்­திரன் இது­வ­ரைக்கும் தாம் சொல்லி வந்த நிலைப்­பா­டு­க­ளையும் இப்போது எடுத்­தி­ருக்­கின்ற நிலைப்­பா­டு­க­ளையும் வெளிப்­ப­டுத்த வேண்­டு­மெனவும் கோரி­யுள்ளார்.

யாழ். கொக்­கு­விலில் உள்ள கட்­சியின் தலைமை அலு­வ­ல­கத்தில் நேற்று முன்­தினம் மாலை நடத்­திய ஊடக சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

gajenderan.jpg

இவ்­வி­டயம் தொடர்­பாக அங்கு அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஜனா­தி­பதித் தேர்­தலை பகிஷ்­க­ரிக்க வேண்­டு­மென நாங்கள் தற்­போது கூறு­கின்­றது கோத்­த­பா­யவை வெல்ல வைப்­ப­தற்கு என சிலர் எம் மீது குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர். தேர்­தலை பகிஷ்­க­ரிப்­ப­தென்ற எங்கள் நிலைப்­பா­டுகள் நாங்கள் யாரை­யும்­ ஆ­த­ரிப்­ப­தாக அல்ல. இத் தேர்தல் பூகோளப் போட்­டியை பயன்­ப­டுத்தி தமிழ் மக்­களின் நலன்­களின் அடிப்­ப­டை­யில் ­தமிழ்த் தேசத்தை அங்­கீ­க­ரிக்க வேண்­டு­மென்­பதே எங்கள் நிலைப்­பாட்டு கோரிக்­கை­யாகும்.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள நிலை­யில் இந்தத் தேர்­தலில் எத்­த­கைய முடி­வு­களை எடுப்­பது என்­பது தொடர்­பாக கட்­சி­க­ளுக்­கி­டையே பல்­வே­று­பட்ட வாதப்­பி­ரதி வாதங்கள் நடை­பெற்று வரு­கின்­றன.அதிலும் இத் தேர்­தலில் யாரை ஆத­ரிப்­பது, யாரை ஆத­ரிப்­ப­தில்லை, பொது வேட்­பா­ளரை நிய­மிப்­பது, தேர்­த­லை ­ப­கிஷ்­க­ரிப்­பது என்­பது குறித்­தான கருத்­துக்கள் பர­வ­லாகப் பேசப்­பட்டு வரு­கின்ற நிலை­மையே காணப்­ப­டு­கி­றது. இவ்­வா­றான நிலை­மையில் சில கட்­சிகள் தமது நிலைப்­பா­டு­களை அறி­வித்தும் இருக்­கின்­றன.

இந் நிலையில், தமிழ்த் தரப்பில் இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது கோத்­த­பாய ராஜ­பக்­ ஷவுடன் பேச இருப்­ப­தாக செய்­திகள் வெளி­வந்­தி­ருக்­கின்­றன. அதா­வது கோத்த­பாய தரப்­பினர் கூட்­ட­மைப்பை சந்­திக்க கேட்டிருந்­த­தா­கவும் ஆனாலும் இனப்­பி­ரச்­சினை தீர்வு குறித்து மஹிந்த ராஜ­பக் ஷ­வோடு பேசு­மாறு கூறி­ய­தா­கவும் அதற்­கான சந்­திப்பை மேற்­கொள்ள ஏற்­பா­டுகள் நடை­பெற்று வரு­வ­தா­கவும் தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருக்­கி­ன்றன.

கோத்த­பாய ராஜபக் ஷவும் மஹிந்த ராஜ­பக் ஷவும் தமிழ் மக்கள் மீது இன அழிப்பை கட்­ட­விழ்த்து விட்­ட­வர்கள் என்­பதால் கடந்த 2015 ஆம் ஆண்டு மஹிந்­தவை ­தோற்­க­டிப்­ப­தற்­காக மகாத்மா காந்தி, நெல்சன் மண்­டேலா அல்­லது மார்டின் லூதர் சிங் என்று சொல்லி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வெல்ல வைக்­கின்ற நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டி­ருந்­தனர்.

இந்த இடத்திலிருக்­கின்ற கேள்வி என்ன­வென்றால் இன­ அ­ழிப்பை செய்­த­வர்கள் மஹிந்த மற்றும் கோத்­த­பாய என்­று­கூ­றி­ய­வர்கள் இப்­போது கோத்­த­பா­ய­வுடன் பேசு­கின்­றார்கள் என்றால் அதில் என்ன நியா­யம் இருக்க முடி­யும்­ என்­பது தெரி­ய­வில்லை.

தமிழ் மக்­களின் நலன்­களின் அடிப்­ப­டையில் தமிழ்த் தேசத்தின் அங்­கீ­கா­ரத்தைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தமிழ்த் தேசத்­திற்­கான அங்­கீ­கா­ரத்தைப் பெறுவதற்கு நாங்கள் முயற்சிக்கிறோம். 

அதற்காக தேர்தல்களை பகிஷ்கரித்தால் அந்த சக்திகள் எங்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற அடிப்படையில் எங்கள் நிலைப்பாடுகளை வெளியிடுகிறோம். எங்களது இந்த நிலைப்பாடுகள் என்பது யாரையும் ஆதரிப்பது என்பதாக அல்ல. இந்த பூகோளப் போட்டியை பயன்படுத்தி எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதே என்றார்.
 

Link to comment
Share on other sites

17 minutes ago, ampanai said:

அதற்காக தேர்தல்களை பகிஷ்கரித்தால் அந்த சக்திகள் எங்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற அடிப்படையில் எங்கள் நிலைப்பாடுகளை வெளியிடுகிறோம். எங்களது இந்த நிலைப்பாடுகள் என்பது யாரையும் ஆதரிப்பது என்பதாக அல்ல. இந்த பூகோளப் போட்டியை பயன்படுத்தி எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதே என்றார்

இதை நீங்கள் தான் தெளிவு படுத்த வேண்டும் ? 

Link to comment
Share on other sites

29 minutes ago, ampanai said:

ஜனா­தி­பதித் தேர்­தலை பகிஷ்­க­ரிக்க வேண்­டு­மென நாங்கள் தற்­போது கூறு­கின்­றது கோத்­த­பா­யவை வெல்ல வைப்­ப­தற்கு என சிலர் எம் மீது குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலை பகிஷ்கரிக்க கோருவது கோத்தாவை வெல்ல வைக்க என நானும் கருதுகிறேன். 😀

29 minutes ago, ampanai said:

இந்த இடத்திலிருக்­கின்ற கேள்வி என்ன­வென்றால் இன­ அ­ழிப்பை செய்­த­வர்கள் மஹிந்த மற்றும் கோத்­த­பாய என்­று­கூ­றி­ய­வர்கள் இப்­போது கோத்­த­பா­ய­வுடன் பேசு­கின்­றார்கள் என்றால் அதில் என்ன நியா­யம் இருக்க முடி­யும்­ என்­பது தெரி­ய­வில்லை.

1) அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என மக்களுக்கு காட்டுவதற்கு.

2) மகிந்த & கோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் ஐதேக இடம் பெரிய பணப்பெட்டியை பெற்றுக்கொள்ளலாம்.

3) அல்லது அமெரிக்கா, இந்தியா சொல்லி பேச்சுவார்த்தை நடத்தலாம்.

அதை பற்றி உங்களுக்கு என்ன அக்கறை? நீங்கள் தேர்தலை பகிஷ்கரிக்க கோருவதும் கோத்தாவை வெல்ல வைக்க தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, ampanai said:

அதற்காக தேர்தல்களை பகிஷ்கரித்தால் அந்த சக்திகள் எங்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற அடிப்படையில் எங்கள் நிலைப்பாடுகளை வெளியிடுகிறோம். எங்களது இந்த நிலைப்பாடுகள் என்பது யாரையும் ஆதரிப்பது என்பதாக அல்ல. இந்த பூகோளப் போட்டியை பயன்படுத்தி எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தை பெறுவதே என்றார்.

யாரப்பா அந்த சக்திகள் ....?
கஜேந்திரா ..கஜேந்திரா ...
முடிந்தால் கோத்தாவை தடுத்து நிறுத்த போராடுங்கள், இல்லை வெளிப்படையான ஆதரவை தெரிவித்து காய்களை நகர்த்துங்கள் ...இப்படி மொள்ளமாரித்தனம் செய்து தமிழர்களை நட்டாத்தில் கொண்டுபோய் விட்டது போதும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, அக்னியஷ்த்ரா said:

யாரப்பா அந்த சக்திகள் ....?
கஜேந்திரா ..கஜேந்திரா ...
முடிந்தால் கோத்தாவை தடுத்து நிறுத்த போராடுங்கள், இல்லை வெளிப்படையான ஆதரவை தெரிவித்து காய்களை நகர்த்துங்கள் ...இப்படி மொள்ளமாரித்தனம் செய்து தமிழர்களை நட்டாத்தில் கொண்டுபோய் விட்டது போதும்  

சவுக்கடி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.