Jump to content

கோட்டாவுக்கே வியாழேந்திரன் ஆதரவு


Recommended Posts

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கடடவகக-வயழநதரன-ஆதரவ/175-239979

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

54 minutes ago, ampanai said:

முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள முற்போக்கு தமிழர் அமைப்பின் அலுவலகத்தில் இன்று (14) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கடடவகக-வயழநதரன-ஆதரவ/175-239979

நல்ல விடயம் ...பார்ப்போம் வியாழனின் அரசியல் திறமையை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோட்ட அபயவுக்கு ஆதரவளிப்பது நெருடலாக இருந்தாலும் வியாழேந்திரன் இதன் மூலம் மட்டு மாவட்ட மக்களுக்கு சிறிதளவேனும் பொருளாதார வாய்ப்புகளை பெறுவாராயின் அது நல்ல விடயமே.

சலுகை அரசியலா, இல்லை உரிமை அரசியலா என்ற 2009 முதல் நீண்ட கேள்விக்கு, சலுகை அரசியலே என முதன்முதலில் மணி கட்டியமைக்காக வியாழேந்திரன் பாராட்டப்ப்ட வேண்டியவரே.

இந்த சலுகை அரசியலை கையில் எடுப்பதன் மூலம் -மட்டு மக்களை பாதுகாப்பாக வைத்திருபதோடு, பொருளாதார முன்னேற்றத்தையும் கொடுக்க முடிந்தால்- இந்த அரசியலின் வெற்றி, மன்னார் முல்லை தீவு என்று பரவக்கூடும்.

ஈற்றில் இணைந்த வட-கிழக்கு அரசியலை, மாவட்ட-அரசியல் பிரதியீடு செய்யும். இதை ஜேஆர் 81 தந்தபோதே எடுத்திருக்கலாமே? என்பது நியாயமான கேள்வியே. ஆனாலும் இதுவே தக்கண பிழைக்கும் வழி என்றால், அதுவே மக்கள் விருப்பு என்றால், அப்படியே ஆவதில் ஒரு தப்பும் இல்லை.

மட்டு மாவட்டம் அநேகமாக கோட்டவுக்கே.

ஆனால் கோட்டவின் வெற்றி4 அல்லது 8 வருடம்தான். ஆனால் வியாழேந்திரனின் அரசியல் வெற்றி பெறுமாயின் அது தமிழ் தேசிய அரசியலை, அதன் போக்கையே புரட்டிப்போட வல்லது.

வாழ்துக்கள். கோட்டவை ஆதரிபதற்காக அல்ல, துணிச்சலாக, மட்டு-க்கு மட்டுமான மாவட்ட அபிவிருத்தி அரசியலை கையில் எடுத்தமைக்கு.

Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

நல்ல விடயம் ...பார்ப்போம் வியாழனின் அரசியல் திறமையை 

தேர்தலில் சஜித் வென்றால் வியாழ மாற்றம் நடப்பது போல் சஜித் பக்கம் தாவ மாட்டாரா? 😀

9 minutes ago, goshan_che said:

மட்டு மாவட்டம் அநேகமாக கோட்டவுக்கே.

2015 தேர்தலில் மட்டக்களப்பில்,

மைத்திரி - 209,422

மகிந்த - 41,631

பெருமளவு வித்தியாசம் உள்ளது. அதை உடைக்க முடியும் என நினைக்கிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Lara said:

தேர்தலில் சஜித் வென்றால் வியாழ மாற்றம் நடப்பது போல் சஜித் பக்கம் தாவ மாட்டாரா? 😀

2015 தேர்தலில் மட்டக்களப்பில்,

மைத்திரி - 209,422

மகிந்த - 41,631

பெருமளவு வித்தியாசம் உள்ளது. அதை உடைக்க முடியும் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக தாவுவார்.

ஆனால் மாவட்ட-மைய-அபிவிருத்தி அரசியலின் (செள. தொண்டா, பதியுதீன், ஹக்கீம் செய்வது) அடிப்படையே, தாவி-தாவி மக்களுக்கும், தமக்கும் வாய்ப்புகளை பெறுவதுதானே. ஆக இதில் ஒரு கொள்கை கேடும் வராது 😂.

உடைக்கலாம் என நினைக்கிறேன்.

மட்டில் எப்போதும், அது எந்த அரசியலாக இருந்தாலும் மாவட்டத்தை முன்னிறுத்தியே அரசியல் செய்ய முடியும்.

ராஜன் செல்வநாயகம், ராஜதுரை, காலத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற ஊன்றுகோலாய் இருந்தது மாவட்ட அபிமானம்.

புலிகளை கருணா கிழக்கில் அசுர பலத்தில் வைத்திருக்க கைகொடுத்ததும் அதுவே. மற்றைய மாவட்ட படையணிகளை மீறி நாம் சாதிக்க வேண்டும், நாம்தான் போராட்டத்தின் முதுகெலும்பு (இது உண்மை கூட) என அவர் நேரடியாகவே போராளிகள் மத்தியில் பேசுவார். 

கருணா பிரிவின் பின் அவரையும், பிள்ளையானையும் தொடர்ந்து அரசியல் செய்ய இலகுவாக்குவதும் இதே மாவட்ட அபிமானமே.

இப்போ வியாழேந்திரன் மாவட்ட அபிமானம், முஸ்லீம் விரோதம், அபிவிருத்தி, கூட்டமைப்பின் மீதான விமர்சனம் நாலையும் கையில் எடுக்கிறார்.

இது டிரம் செய்வதை போல ஒரு பக்க populist ஜனரஞ்சக அரசியல்(டிரம்புக்கு -அமெரிக்க அபிமானம், முஸ்லீம்/சிறுபான்மை விரோதம், அபிவிருத்தி make America great again, மற்றும் establishment மீதான விமர்சனம்) . 

இதுதான் உலகெங்கும் இப்பொ வெல்லும் டிரெண்ட். வியாழேந்திரன், பிள்ளையான் தமிழ் வோட்டுக்களை கவர, ஹிஸ்புலா முஸ்லிம் வோட்டுக்களை பிரிக்க- வெற்றி சாத்தியம். இல்லாவிடிலும் 45% வரை வாக்குகளை அள்ளலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் வியாளன்  கூட்டமைப்பு  சார்பில்  தான் கடந்த  தேர்தலில்  வென்றார்  என்பதையாவது  ஞாபகம்  வைத்திருக்கின்றோமா????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

ஆனால் வியாளன்  கூட்டமைப்பு  சார்பில்  தான் கடந்த  தேர்தலில்  வென்றார்  என்பதையாவது  ஞாபகம்  வைத்திருக்கின்றோமா????

எனக்கு நியாபகம் இருக்கு.

அக்கினிக்கு எப்ப்டியோ தெரியா 😂.

ஆனால் - கூட்டமைப்பில் நின்று கேட்டேன் ஆனால் அவர்கள் அந்தவேலைக்கு சரி வரமாட்டார்கள், எனவே தனியாக கிளம்பி விட்டேன் எனும் அவர் வாதத்திலும் நியாயம் உண்டே?

வியாழேந்திரனின் ஆதரவுடன் கோட்ட வென்றால் - அது மட்டக்களப்பில் சேடம் இழுக்கும் தமிழ்தேசியத்துக்கு - பால் ஊற்றி கிரியை செய்தது போலவே இருக்கும்.

ஆனால் மக்களே தமிழ் தேசியத்தை விட்டு விலகி, தமக்கென ஒரு மாவட்ட தலைமையில் செயல்பட வேண்டும் என முடிவெடுத்தால், இல்லை என்று சொல்ல நாம் யார் ?

மட்டக்களப்பின் தமிழ் அரசியல் ஒரு கவர் விடும் பாதையில் வந்து நிக்கிறது. ஒரு பக்கம் தமிழ் தேசிய அடிப்படையிலான உரிமை அரசியல். மறுவழி மாவட்ட-மைய அபிவிருத்தி அரசியல். 

பார்கலாம் மக்களின் முடிவை.

Link to comment
Share on other sites

6 hours ago, goshan_che said:

உடைக்கலாம் என நினைக்கிறேன்.

இப்போ வியாழேந்திரன் மாவட்ட அபிமானம், முஸ்லீம் விரோதம், அபிவிருத்தி, கூட்டமைப்பின் மீதான விமர்சனம் நாலையும் கையில் எடுக்கிறார்.

வியாழேந்திரன், பிள்ளையான் தமிழ் வோட்டுக்களை கவர, ஹிஸ்புலா முஸ்லிம் வோட்டுக்களை பிரிக்க- வெற்றி சாத்தியம். இல்லாவிடிலும் 45% வரை வாக்குகளை அள்ளலாம்.

எனக்கென்னவோ கோத்தா தேர்தலில் வென்றால் கூட மட்டக்களப்பில் சஜித் தான் முன்னிலை வகிப்பார் என தோணுது. பார்க்கலாம்.

பிள்ளையான் முன்பே மகிந்த கோத்தா பக்கம். எனவே இத்தேர்தலில் அவரது ஆதரவாளர்களது வாக்குகள் பெரிய தாக்கம் செலுத்தாது. முன்பை போலவே இருக்கும்.

வியாழேந்திரன் கோத்தாவுக்கு ஆதரவளிப்பதற்காக எத்தனை பேர் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள் என்பதில், ஒரு பகுதி வாக்குகள் கோத்தாவுக்கு செல்லலாம்.

ஹிஸ்புல்லாவுக்கு முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருந்தாலும் ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெருமளவு வாக்குகளை பிரிக்கப்போவதில்லை, சிறுபகுதி வாக்குகளையே பிரிப்பார் என நினைக்கிறேன்.

2010 தேர்தலில் மகிந்த வென்ற போது மட்டக்களப்பில்,

சரத் பொன்சேகா - 146,057

மகிந்த - 55,663

வாக்குகளை பெற்றிருந்தார்கள்.

இம்முறை என்ன நடக்கும் என பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

இன்று யார் எப்படிக் கருத்துக்கள் சொன்னாலும்.... தமிழரைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். தந்தை செல்வா. 

காப்பாற்றக் கடவுள் வந்தார். ஆனால் அவரைத் தமிழர்கள் முழுமையாக ஏற்கவில்லை. Bildergebnis für %e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d+

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை 
பிடித்தவர்கள் கவிதை இயம்பி பாடுகிறார்கள் 
தெரிந்தவர்கள் துஸ்ட்டனை கண்டதுபோல் விலகி போகிறார்கள்.

இது நோயாளிக்கு மருந்துக்கு காசுத்தருகிறேன் ... நோயாளியை கொலைசெய்தால் 
என்பதை கேட்டு ... மருதத்துவ செலவுக்கு நோயாளியை கொல்லும் வேலை. 

இந்த வியாக்கினத்தின் படி 
சிங்களவர்களில் இப்போது ஏழையானவர்களே இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் இலைகையின் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் பெரும்பாண்மை சிங்களவர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, Maruthankerny said:

இவருக்கும் சிவாஜிலிங்கத்துக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை 
பிடித்தவர்கள் கவிதை இயம்பி பாடுகிறார்கள் 
தெரிந்தவர்கள் துஸ்ட்டனை கண்டதுபோல் விலகி போகிறார்கள்.

இது நோயாளிக்கு மருந்துக்கு காசுத்தருகிறேன் ... நோயாளியை கொலைசெய்தால் 
என்பதை கேட்டு ... மருதத்துவ செலவுக்கு நோயாளியை கொல்லும் வேலை. 

இந்த வியாக்கினத்தின் படி 
சிங்களவர்களில் இப்போது ஏழையானவர்களே இருக்க வாய்ப்பில்லை.
ஆனால் இலைகையின் வறுமை கோட்டுக்கு கீழே இருப்பவர்கள் பெரும்பாண்மை சிங்களவர்கள். 

வியாழேந்திரனை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கள உறவு அர்ஜூனின் நண்பர்( பழைய புளொட்?) என்பதாக நியாபகம். அர்ஜூன் இவரை பற்றி நல்லதாகவே எழுதி இருந்தார்.

இப்போ அக்னியும் ஆதரித்தே எழுதுகிறார். எதிரெதிர் துருவங்களான அர்ஜூனையும் அக்னியையும் ஒரு நபர் கவர்கிறார் என்றால், அவரில் கொஞ்சம் விடயம் இருக்க வேண்டும்.

இவர் சிவாஜியில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறார்.

சிவாஜி தனித்து நின்று சர்வதேச கவனத்தை ஈர்ப்பேன் என்கிறார்.

இவர் கோட்டவை ஆதரித்து மாவட்டத்தை கட்டி எழுப்புவேன். முஸ்லீம்களை தாக்குபிடிக்கும் வல்லமையை ஏற்படுத்துவேன் என்கிறார்.

இருவரும் கோட்டவின் வெற்றிக்கே உழைக்கிறனர். ஆனால் வியாழேந்திரனில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. எனது அரசியல் சலுகை அரசியல் எனச் சொல்லிச் செய்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

வியாழேந்திரனை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கள உறவு அர்ஜூனின் நண்பர்( பழைய புளொட்?) என்பதாக நியாபகம். அர்ஜூன் இவரை பற்றி நல்லதாகவே எழுதி இருந்தார்.

இப்போ அக்னியும் ஆதரித்தே எழுதுகிறார். எதிரெதிர் துருவங்களான அர்ஜூனையும் அக்னியையும் ஒரு நபர் கவர்கிறார் என்றால், அவரில் கொஞ்சம் விடயம் இருக்க வேண்டும்.

இவர் சிவாஜியில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறார்.

சிவாஜி தனித்து நின்று சர்வதேச கவனத்தை ஈர்ப்பேன் என்கிறார்.

இவர் கோட்டவை ஆதரித்து மாவட்டத்தை கட்டி எழுப்புவேன். முஸ்லீம்களை தாக்குபிடிக்கும் வல்லமையை ஏற்படுத்துவேன் என்கிறார்.

இருவரும் கோட்டவின் வெற்றிக்கே உழைக்கிறனர். ஆனால் வியாழேந்திரனில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. எனது அரசியல் சலுகை அரசியல் எனச் சொல்லிச் செய்கிறார்.

வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்தால் ஒன்றையும் செய்ய முடியாது என விலகி வந்தது காலம் கடந்தது 

இருந்தாலும் பலர் கோட்டாவுக்கு ஆதரவு என்பது துளி கூட இல்லை ஆனால் அவருக்குத்தான் வாக்களிக்க உள்ளார்கள் காரணம் கிழக்கு என்பது கிழக்கு மக்களுக்கு சிங்களவன் எடுத்தாலும் பேசியாவது வாங்கி கொள்ளலாம் காணீகளை அதிகாரங்களை ஆனால் முஸ்லீம்களை பொறுத்த வரைக்கும் நமக்கு தெரியாத ஆண்டு (இல்லாத) ஆண்டு வரலாறுகளைக் கொண்டு வந்து சேர்க்கிரர்கள் உதாரணம் கல்முனை ஏன் கிழக்கு பக்கம் இருக்கும் பல பிரதேசங்கள்

ஒரு வேளை கோத்தா வென்றால் பிள்ளையான் வெளியில் வரலாம் அல்லது வராமல் போகலாம் கருணா கொஞ்சம் சோல்டரை கூட தூக்கி திரிய வாய்ப்பு உள்ளது கோட்டா சாம்ராஜ்ஜியத்தில். இது எங்களுக்கு சின்ன வரம்பை போட்டு பாதுகாப்பது போல தான் அணையை உடைத்து நீர் பாய்வதை தடுப்பது போல 

கூட்டமைப்பும்  நல்லாட்ட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து கொண்டுவந்தது வந்தவர்கள் இருந்தவர்கள் சென்றவர்கள் எல்லாம் பிரச்சினையை தீர்த்துவைக்கவும் இல்லை தீர்த்து வைக்கப்ப்போவதும் இல்லை  இப்படியே இருப்பதை விட அவனுகள் பரவாயில்லை போல தோன்றும் சில சர்வாதிகார ஆட்சி சில வேளைகளில் தேவைப்படுவது போல மனதுக்கு தோன்றும் இருந்தாலும் அடிமை வாழ்க்கையும் அல்லல்படும் வாழ்கையும் தமிழருக்கு இலங்கையில் இருந்து கொண்டுதான் இருக்கும் இதை எந்த அரசாங்கம் வந்தாலும் எமக்கு பரிசாக கொடுத்துத்தான் இருக்கும் 

கோத்தா கூட டம்மிதான் இந்த எலக்சன்ல பின்புலம் மகிந்தவும் பசிலும்தான் 

எனது வாக்கும் கோட்டாவுக்கு விரும்பம் இல்லை ஆனால் போடத்தான் வேண்டும் இரண்டு தெரிவுகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 

Link to comment
Share on other sites

வியாழேந்திரனின் துணிச்சலைப்பாராட்ட வேண்டும்.தமிழர் உரிமைக்காக அண்மைக்காலங்களில் அதிகம் கரிசனை கொண்ட ஒருவராகக் காணப்படுபவர்.இவரை அடியொற்றி அம்பாறை மாவட்டத்திலும் ஒருவர் உருவாகவேண்டும்.இல்லாவிடில் தமிழரின் இருப்பு அடியோடு அம்பாறை மாவட்டத்தில் மண்ணாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

வியாழேந்திரனை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கள உறவு அர்ஜூனின் நண்பர்( பழைய புளொட்?) என்பதாக நியாபகம். அர்ஜூன் இவரை பற்றி நல்லதாகவே எழுதி இருந்தார்.

இப்போ அக்னியும் ஆதரித்தே எழுதுகிறார். எதிரெதிர் துருவங்களான அர்ஜூனையும் அக்னியையும் ஒரு நபர் கவர்கிறார் என்றால், அவரில் கொஞ்சம் விடயம் இருக்க வேண்டும்.

இவர் சிவாஜியில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறார்.

சிவாஜி தனித்து நின்று சர்வதேச கவனத்தை ஈர்ப்பேன் என்கிறார்.

இவர் கோட்டவை ஆதரித்து மாவட்டத்தை கட்டி எழுப்புவேன். முஸ்லீம்களை தாக்குபிடிக்கும் வல்லமையை ஏற்படுத்துவேன் என்கிறார்.

இருவரும் கோட்டவின் வெற்றிக்கே உழைக்கிறனர். ஆனால் வியாழேந்திரனில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. எனது அரசியல் சலுகை அரசியல் எனச் சொல்லிச் செய்கிறார்.

அடிப்படை பிரச்சனை மறந்துவிட்டு எழுதுகிறீர்கள் 
அத்திவாரம் வேண்டாம் அது பிறகு பார்க்கலாம் 
இப்போ சுவருக்கு பெயிண்ட் அடிக்க வியாழேந்திரன்தான் சரியானவர் என்பதுபோல இருக்கிறது.

இதுவரையில் முஸ்லீம்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்தது 
அதன் மூலம் சலுகைகளை பெற்றது என்பதுக்கு  முக்கிய காரணம் 
வீறு கொண்ட தமிழரின் விடுதலை போராட்டம் வெற்றிப்பாதையில் இருந்தது என்பதால்தான் 
தமிழரிடம் இருந்து முஸ்லிம்களை பிரிக்க வேண்டிய கட்டாயம் சிங்களத்துக்கு இருந்ததால் 
தற்காலிக சலுகைகளை முஸ்லீம்களுக்கு கொடுத்தார்கள் என்பதுதான் உண்மை.

தமிழரை முளையிலேயே கிள்ளவேண்டும் என்று எண்ணும் கொடூரனான கோத்தா 
வியாழேந்திரன் ஆதரவு தந்தார் என்பதால் புல்டோசரை கொண்டுவந்து இவருக்கு ரோட்டு போட 
போவதில்லை டக்கிளசு மற்ற ஒட்டின ஓட்டாத குழுவெல்லாம் இவர்களால் தமிழரை அழிக்கவும் 
காட்டி கொடுப்புக்கும்தான் காவல் நாய்கள்போல வளர்க்கபட்டார்கள்.
இனி விசுவாச நாய்களுக்கு போக இடமில்லை எஜமான் வீட்டுக்குள் சுத்தத்துவது தவிர்த்து வேறு வழியில்லை 
என்பது சாதாரண சிங்கள குழந்தைக்கும் தெரியும் ..... இவர்கள் தமிழருக்கு எதுவும் செய்யப்போவதில்லை 
என்பதும் அவர்களுக்கு நன்றே தெரியும். 

வியாழேந்திரன் மைத்திரியை நம்பி மகிந்த பிரதமர் ஆவார் என்றுதான் குத்துகாரணம் அடித்தவர் 
அந்த குத்துகரணத்தில்  உள்ளூர் அபிவிருத்தியோ முஸ்லீம் ஆக்கிரமிப்புக்கு ஏதும் எதிர்வினையோ இல்லை  
அதில் பரிமாறப்பட்ட பண பெட்டி மட்டும்தான் இருந்தது என்பது சின்ன பிள்ளைக்கும் தெரியும்.
இவரை விட கிழக்கில் கொண்டுவந்து சூரியனையே கட்டுறன் எண்டுதான் கொம்மான் கிளம்பினவர் 
பின்பு எந்த கிழக்குக்குள் என்னத்தை கொண்டுபோய் கட்டினார் என்பது ஊரே பார்த்துச்சு.
இப்பிடியான கூலாந்திகளால் ஏதும் நல்லது நடந்தது என்று உலகில் உதாரணத்துக்கு சொல்ல கூட ஒன்று இல்லை. 

கருணாநிதி வைக்கோவை விலக்கியபோது வைகோவோடு சென்ற அத்தனை பேரும் ஒன்றுமே இல்லாத 
வைக்கோவிடம் பதவியையோ  பணத்தையோ எதிர்பார்த்து போகவில்லை. கருணாநிதியின் துரோகத்தை பார்த்த கோபமும் தமிழ் என்ற உணர்வும் தவிர்த்து வேறு ஏதும் இல்லை. இன்று அத்தனை பேரும் நடு ரோட்டில்தான்  நிற்கிறார்கள் .... வியாழேந்திரன்  போல வைக்கோ கட்சி விட்டு கட்சி தாவி கொள்கையை கொன்றதால்  அவர்கள் தெருவில்தான் நிற்கமுடியும்.

கிழக்கு மக்களுக்கும் வைகோ பின்னால் போனவர்களுக்கு முடிவு ஒன்றுதான்.
இது வியாழேந்திரனுக்கும் நன்கு தெரியும்  கோத்தாவுக்கும் நன்கு தெரியும் 
தெரியாதவர்கள்  ..... ஏன்? எப்படி? எங்கே? எப்போது? என்ற ஆறறிவுக்கு எட்டும் கேள்விகள் இல்லாதவர்கள். 

5 hours ago, goshan_che said:

வியாழேந்திரனை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கள உறவு அர்ஜூனின் நண்பர்( பழைய புளொட்?) என்பதாக நியாபகம். அர்ஜூன் இவரை பற்றி நல்லதாகவே எழுதி இருந்தார்.

இப்போ அக்னியும் ஆதரித்தே எழுதுகிறார். எதிரெதிர் துருவங்களான அர்ஜூனையும் அக்னியையும் ஒரு நபர் கவர்கிறார் என்றால், அவரில் கொஞ்சம் விடயம் இருக்க வேண்டும்.

இவர் சிவாஜியில் இருந்து முற்றிலும் வேறுபடுகிறார்.

சிவாஜி தனித்து நின்று சர்வதேச கவனத்தை ஈர்ப்பேன் என்கிறார்.

இவர் கோட்டவை ஆதரித்து மாவட்டத்தை கட்டி எழுப்புவேன். முஸ்லீம்களை தாக்குபிடிக்கும் வல்லமையை ஏற்படுத்துவேன் என்கிறார்.

இருவரும் கோட்டவின் வெற்றிக்கே உழைக்கிறனர். ஆனால் வியாழேந்திரனில் வெளிப்படைத்தன்மை இருக்கிறது. எனது அரசியல் சலுகை அரசியல் எனச் சொல்லிச் செய்கிறார்.

இவருக்கும் புளட்டுக்கும் சம்மந்தம் ஒன்றும் இல்லை 
அர்ஜுனுக்கு இவரை .... இவர் கனடா வந்த போதுதான் தெரியும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வியாழேந்திரனின் உறவினர் (அத்தான்??) முன்னாள் புளட் அவ்வளவுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

 

இவருக்கும் புளட்டுக்கும் சம்மந்தம் ஒன்றும் இல்லை 
அர்ஜுனுக்கு இவரை .... இவர் கனடா வந்த போதுதான் தெரியும் 

 

10 hours ago, goshan_che said:

வியாழேந்திரனை பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கள உறவு அர்ஜூனின் நண்பர்( பழைய புளொட்?) என்பதாக நியாபகம். அர்ஜூன் இவரை பற்றி நல்லதாகவே எழுதி இருந்தார்.

 

அர்ஜுன் அண்ணருக்கு  இவரை கனடா  வந்தபோது தான்  தெரியும்

அதுவும் கூட்டமைப்பின்  ஒரு  நாடாளுமன்ற  உறுப்பினராக..

ஆனால்  பழைய புளட்  உறவை  வைத்து

அதை  நம்பி

அர்ஜுன் அண்ணரரும் அவரது  புளட்  நண்பர்களும்  ஊரில் சில  விடயங்களை செய்யலாம்  என  இவரை அணுகி பேசியது  உண்மை

ஆனால்  அடுத்த  சில  மாதங்களில்  இவர் கூட்டமைப்பிலிருந்து ஓடி

 எங்கிருக்கிறார்  என்றே  தெரியாமல் ஒழிந்து

கடைசியில் மகிந்தவிடம்  சங்கமிக்க

அர்ஜுன் அண்ணரரும் அவரது  புளட்  நண்பர்களும்  தலைக்கு  வந்தது தலைப்பாகையுடன்  என....??(அதை  இங்கே  அவரே எழுதியிருக்கிறார்)

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, Maruthankerny said:

வியாழேந்திரன் மைத்திரியை நம்பி மகிந்த பிரதமர் ஆவார் என்றுதான் குத்துகாரணம் அடித்தவர் 
அந்த குத்துகரணத்தில்  உள்ளூர் அபிவிருத்தியோ முஸ்லீம் ஆக்கிரமிப்புக்கு ஏதும் எதிர்வினையோ இல்லை  
அதில் பரிமாறப்பட்ட பண பெட்டி மட்டும்தான் இருந்தது என்பது சின்ன பிள்ளைக்கும் தெரியும்.

வியாழேந்திரன் மகிந்த பக்கம் தாவிய போது பிரதேச அபிவிருத்தி (கிழக்கு மாகாண) பிரதியமைச்சராக நியமிக்கப்பட்டவர். ஆனால் அது நிலைக்கவில்லை.

DrANM7iU8AAgs5J.jpg

Link to comment
Share on other sites

6 hours ago, Maruthankerny said:

இவருக்கும் புளட்டுக்கும் சம்மந்தம் ஒன்றும் இல்லை 

புளொட்டினூடாக தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டவர்.

Link to comment
Share on other sites

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வியாழேந்திரன் கூட்டமைப்பில் இருந்தால் ஒன்றையும் செய்ய முடியாது என விலகி வந்தது காலம் கடந்தது 

இருந்தாலும் பலர் கோட்டாவுக்கு ஆதரவு என்பது துளி கூட இல்லை ஆனால் அவருக்குத்தான் வாக்களிக்க உள்ளார்கள் காரணம் கிழக்கு என்பது கிழக்கு மக்களுக்கு சிங்களவன் எடுத்தாலும் பேசியாவது வாங்கி கொள்ளலாம் காணீகளை அதிகாரங்களை ஆனால் முஸ்லீம்களை பொறுத்த வரைக்கும் நமக்கு தெரியாத ஆண்டு (இல்லாத) ஆண்டு வரலாறுகளைக் கொண்டு வந்து சேர்க்கிரர்கள் உதாரணம் கல்முனை ஏன் கிழக்கு பக்கம் இருக்கும் பல பிரதேசங்கள்

ஒரு வேளை கோத்தா வென்றால் பிள்ளையான் வெளியில் வரலாம் அல்லது வராமல் போகலாம் கருணா கொஞ்சம் சோல்டரை கூட தூக்கி திரிய வாய்ப்பு உள்ளது கோட்டா சாம்ராஜ்ஜியத்தில். இது எங்களுக்கு சின்ன வரம்பை போட்டு பாதுகாப்பது போல தான் அணையை உடைத்து நீர் பாய்வதை தடுப்பது போல 

கூட்டமைப்பும்  நல்லாட்ட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்து கொண்டுவந்தது வந்தவர்கள் இருந்தவர்கள் சென்றவர்கள் எல்லாம் பிரச்சினையை தீர்த்துவைக்கவும் இல்லை தீர்த்து வைக்கப்ப்போவதும் இல்லை  இப்படியே இருப்பதை விட அவனுகள் பரவாயில்லை போல தோன்றும் சில சர்வாதிகார ஆட்சி சில வேளைகளில் தேவைப்படுவது போல மனதுக்கு தோன்றும் இருந்தாலும் அடிமை வாழ்க்கையும் அல்லல்படும் வாழ்கையும் தமிழருக்கு இலங்கையில் இருந்து கொண்டுதான் இருக்கும் இதை எந்த அரசாங்கம் வந்தாலும் எமக்கு பரிசாக கொடுத்துத்தான் இருக்கும் 

கோத்தா கூட டம்மிதான் இந்த எலக்சன்ல பின்புலம் மகிந்தவும் பசிலும்தான் 

எனது வாக்கும் கோட்டாவுக்கு விரும்பம் இல்லை ஆனால் போடத்தான் வேண்டும் இரண்டு தெரிவுகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான் 

உங்கள் முன்னைய கருத்துகளை வாசித்ததன் அடிப்படையில் நீங்கள் இம்முறை கோத்தாவுக்கு தான் வாக்களிப்பீர்கள் என முன்னரே ஊகித்திருந்தேன். உங்களைப்போல் நினைக்கும் சிலர் இருக்கலாம்.

ஆனால் கூட்டமைப்பின் மேலுள்ள விமர்சனத்திற்காக ஜனாதிபதி தேர்தலில் இனப்படுகொலையாளி கோத்தாவுக்கு வாக்களிக்க பலர் நினைக்க மாட்டார்கள், பெரும்பாலானோர் சஜித்துக்கு வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறேன். தேர்தல் முடிவுகளை பார்க்கலாம்.

வியாழேந்திரனுக்கு கூட்டமைப்பில் விமர்சனம் இருந்தது தெரியும். ஆனால் மனோ கணேசன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் வியாழேந்திரனை போட்டியிட கேட்டிருந்தார்.

இப்பொழுது கோத்தாவை ஆதரித்ததன் மூலம் வியாழேந்திரன் அச்சந்தர்ப்பத்தை இல்லாமலாக்கிக்கொண்டு விட்டாரோ என தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

11 hours ago, நந்தி said:

வியாழேந்திரனின் துணிச்சலைப்பாராட்ட வேண்டும்.தமிழர் உரிமைக்காக அண்மைக்காலங்களில் அதிகம் கரிசனை கொண்ட ஒருவராகக் காணப்படுபவர்.இவரை அடியொற்றி அம்பாறை மாவட்டத்திலும் ஒருவர் உருவாகவேண்டும்.இல்லாவிடில் தமிழரின் இருப்பு அடியோடு அம்பாறை மாவட்டத்தில் மண்ணாகும்.

2015 தேர்தலில் அம்பாறையில்,

மைத்திரி - 233,360

மகிந்த - 121,027

2010 தேர்தலில் அம்பாறையில்,

சரத் பொன்சேகா - 153,105

மகிந்த - 146,912

இம்முறை எவ்வாறு அமைகிறது என பார்ப்போம்.

Link to comment
Share on other sites

இதுவரைக்கும் கோத்தாவுடன் இணைந்து கொண்டவர்கள் யார் யார் என பார்ப்போம்

முரளிதரன் (கருணா)
டக்கிளஸ் தேவானந்தா
வரதராஜப் பெருமாள்
அத்தாவுல்லா
பிள்ளையான் கட்சி

இவர்கள் 2009 ஆண்டு இனப்படுகொலையின் போது எங்கு எவருடன் கூட்டு வைத்து இருந்தனர் என்பதும் இவர்கள் கூட்டு இனப்படுகொலையின் பங்காளர்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். எம் போராட்டத்தினை காட்டிக் கொடுத்து, சிங்களவர்களிடம் சராணகதி அடைய வேண்டிய நிலைக்கு எம் தமிழ் மக்களை கொண்டு வந்து விட்டவர்களில் இவர்களும் அடங்குகின்றனர்.

கோத்தாவுக்காக எவர் ஆதரவு கொடுத்தாலும், கோத்தாவை வெல்ல வைப்பதற்காக பிறருக்கு வாக்களிக்க எவர் சொன்னாலும் அவர்கள் தன்னளவில் இந்த அணியில் இணைதவர்களாகவே கொள்ளப்படல் வேண்டும்.

இதில் வியாழேந்திரனும் இணைந்து விட்டார்.

முஸ்லிம்களை காரணம் காட்டி இவர் இணைந்து இருப்பதும் சிங்களத்தின் வெற்றியே தவிர தமிழர்களிற்கு எதையும் பெற்றுக் கொடுக்க போவதில்லை. கடும் பெளத்த சிங்கள தேசியவாதத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக இருக்கும் கோத்தா தமிழர் தாயகத்தின் முதுகெழும்பான கிழக்கில் தமிழர்கள் பலம் பெறும் வண்ணம் உரிமைகளையோ அல்லது சலுகைகளையோ கொடுப்பார் என நம்புவது நாம் வரலாறுகளில் இருந்து ஒருக்காலும் பாடம் படிக்க மாட்டோம் என்பதையே மீண்டும் மீண்டும் காட்டி நிற்கும்.

Link to comment
Share on other sites

இலங்­கையில் சுமார் 15.99 மில்­லியன் பதிவு செய்­யப்­பட்ட வாக்­கா­ளர்கள் உள்­ளனர். சுமார் 80% வாக்­கெ­டுப்பு நடந்தால் சுமார் 12 மில்­லியன் செல்­லு­ப­டி­யாகும் வாக்­கு­க­ளாக கரு­தப்­படும். எங்கள் இலக்கு 6.5 மில்­லியன் வாக்­குகள். வெற்றி பெற தேவை­யான 50 வீதத்தை கடந்­தாலே போதும். ஒரு உள்­ளூ­ராட்சி மன்ற வாக்­கெ­டுப்­புக்கு 40 வீத வாக்­குகள் போது­மா­ன­தாக இருந்­தது, ஆனால் ஒரு தேசிய தேர்­த­லுக்கு அது போதாது- பசில்

சில சிறுபான்மை கட்சிகளை 'இணைத்ததன்' மூலம், வெற்றியை ஒரு தேசிய தேர்தல்  வெற்றியாக உலகிற்கு காட்டமுடியும்.

Link to comment
Share on other sites

48 minutes ago, ampanai said:

இலங்­கையில் சுமார் 15.99 மில்­லியன் பதிவு செய்­யப்­பட்ட வாக்­கா­ளர்கள் உள்­ளனர். சுமார் 80% வாக்­கெ­டுப்பு நடந்தால் சுமார் 12 மில்­லியன் செல்­லு­ப­டி­யாகும் வாக்­கு­க­ளாக கரு­தப்­படும். எங்கள் இலக்கு 6.5 மில்­லியன் வாக்­குகள். வெற்றி பெற தேவை­யான 50 வீதத்தை கடந்­தாலே போதும். ஒரு உள்­ளூ­ராட்சி மன்ற வாக்­கெ­டுப்­புக்கு 40 வீத வாக்­குகள் போது­மா­ன­தாக இருந்­தது, ஆனால் ஒரு தேசிய தேர்­த­லுக்கு அது போதாது- பசில்

சில சிறுபான்மை கட்சிகளை 'இணைத்ததன்' மூலம், வெற்றியை ஒரு தேசிய தேர்தல்  வெற்றியாக உலகிற்கு காட்டமுடியும்.

2015 தேர்தலில்,

பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்: 15,044,490

வாக்களித்தவர்கள்: 12,264,377

நிராகரிக்கப்பட்ட வாக்குகள்: 140,925

செல்லுபடியான வாக்குகள்: 12,123,452

மைத்திரி பெற்ற வாக்குகள்: 6,217,162 (51.28%)

மகிந்த பெற்ற வாக்குகள்: 5,768,090 (47.58%)

மிகுதி வாக்குகள்: ஏனையோர்

இம்முறை அநுர போட்டியிடுவதால் முதல் சுற்றில் 50% இற்கு மேல் யாரும் பெறுவார்கள் என உறுதியாக கூற முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Maruthankerny said:

அடிப்படை பிரச்சனை மறந்துவிட்டு எழுதுகிறீர்கள் 
அத்திவாரம் வேண்டாம் அது பிறகு பார்க்கலாம் 
இப்போ சுவருக்கு பெயிண்ட் அடிக்க வியாழேந்திரன்தான் சரியானவர் என்பதுபோல இருக்கிறது.

இதுவரையில் முஸ்லீம்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்தது 
அதன் மூலம் சலுகைகளை பெற்றது என்பதுக்கு  முக்கிய காரணம் 
வீறு கொண்ட தமிழரின் விடுதலை போராட்டம் வெற்றிப்பாதையில் இருந்தது என்பதால்தான் 
தமிழரிடம் இருந்து முஸ்லிம்களை பிரிக்க வேண்டிய கட்டாயம் சிங்களத்துக்கு இருந்ததால் 
தற்காலிக சலுகைகளை முஸ்லீம்களுக்கு கொடுத்தார்கள் என்பதுதான் உண்மை.

தமிழரை முளையிலேயே கிள்ளவேண்டும் என்று எண்ணும் கொடூரனான கோத்தா 
வியாழேந்திரன் ஆதரவு தந்தார் என்பதால் புல்டோசரை கொண்டுவந்து இவருக்கு ரோட்டு போட 
போவதில்லை டக்கிளசு மற்ற ஒட்டின ஓட்டாத குழுவெல்லாம் இவர்களால் தமிழரை அழிக்கவும் 
காட்டி கொடுப்புக்கும்தான் காவல் நாய்கள்போல வளர்க்கபட்டார்கள்.
இனி விசுவாச நாய்களுக்கு போக இடமில்லை எஜமான் வீட்டுக்குள் சுத்தத்துவது தவிர்த்து வேறு வழியில்லை 
என்பது சாதாரண சிங்கள குழந்தைக்கும் தெரியும் ..... இவர்கள் தமிழருக்கு எதுவும் செய்யப்போவதில்லை 
என்பதும் அவர்களுக்கு நன்றே தெரியும். 

வியாழேந்திரன் மைத்திரியை நம்பி மகிந்த பிரதமர் ஆவார் என்றுதான் குத்துகாரணம் அடித்தவர் 
அந்த குத்துகரணத்தில்  உள்ளூர் அபிவிருத்தியோ முஸ்லீம் ஆக்கிரமிப்புக்கு ஏதும் எதிர்வினையோ இல்லை  
அதில் பரிமாறப்பட்ட பண பெட்டி மட்டும்தான் இருந்தது என்பது சின்ன பிள்ளைக்கும் தெரியும்.
இவரை விட கிழக்கில் கொண்டுவந்து சூரியனையே கட்டுறன் எண்டுதான் கொம்மான் கிளம்பினவர் 
பின்பு எந்த கிழக்குக்குள் என்னத்தை கொண்டுபோய் கட்டினார் என்பது ஊரே பார்த்துச்சு.
இப்பிடியான கூலாந்திகளால் ஏதும் நல்லது நடந்தது என்று உலகில் உதாரணத்துக்கு சொல்ல கூட ஒன்று இல்லை. 

கருணாநிதி வைக்கோவை விலக்கியபோது வைகோவோடு சென்ற அத்தனை பேரும் ஒன்றுமே இல்லாத 
வைக்கோவிடம் பதவியையோ  பணத்தையோ எதிர்பார்த்து போகவில்லை. கருணாநிதியின் துரோகத்தை பார்த்த கோபமும் தமிழ் என்ற உணர்வும் தவிர்த்து வேறு ஏதும் இல்லை. இன்று அத்தனை பேரும் நடு ரோட்டில்தான்  நிற்கிறார்கள் .... வியாழேந்திரன்  போல வைக்கோ கட்சி விட்டு கட்சி தாவி கொள்கையை கொன்றதால்  அவர்கள் தெருவில்தான் நிற்கமுடியும்.

கிழக்கு மக்களுக்கும் வைகோ பின்னால் போனவர்களுக்கு முடிவு ஒன்றுதான்.
இது வியாழேந்திரனுக்கும் நன்கு தெரியும்  கோத்தாவுக்கும் நன்கு தெரியும் 
தெரியாதவர்கள்  ..... ஏன்? எப்படி? எங்கே? எப்போது? என்ற ஆறறிவுக்கு எட்டும் கேள்விகள் இல்லாதவர்கள். 

இவருக்கும் புளட்டுக்கும் சம்மந்தம் ஒன்றும் இல்லை 
அர்ஜுனுக்கு இவரை .... இவர் கனடா வந்த போதுதான் தெரியும் 

உங்களது இந்த பார்வையில் நான் மறுத்துரைக்க ஒன்றும் இல்லை மருதர்.

உண்மையில் இங்கே நாம் கதைக்காமல் விடும் விடயம், கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதே.

ஒரு காலம், கடந்த பாராளுமன்ற தேர்தல் வரை, வடக்கை விட தமிழ் தேசிய அரசியலை, கூட்டமைப்பை அதிகம் தாங்கி பிடித்தது கிழக்கு மக்கள். யாழில் எப்போதும் 10% டக்லசுக்கு போட, மட்டகளப்பில் சில தொகுதிகளில் 99% கூட்டமைப்பு போட்டது கூட உண்டு.

ஆனால் - முஸ்லிம்கள் உடனான கிழக்கு தமிழர்களுக்கு வரலாறு நெடுக இருந்த வளங்களுக்கான போட்டி, 2015 இல் மகிந்த தோற்றதின் பின் வேண்டும் என்றே இரண்டு பகுதியிலும் தூண்டி விடப்பட்டது. 

ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போதும் இந்த முரண்பாடு ஒரு படி உயரப் போனதை நானே கண்டேன்.

ஈஸ்டர் தாக்குதல் காலத்தில் இதை பற்றி நான் இங்கே எழுத முனைய, என்னை முஸ்லீம் அபிமானி எனப் பட்டம் கட்டி, வாயை அடைத்து விட்டார்கள்.

கிழக்கில் தமிழ் முஸ்லீம் உறவை கொதி நிலையில் வைப்பது நீண்ட காலத்தில் பின்வரும் விளைவுகளை தரும்.

1. முஸ்லீம்களும் தமிழரும் எப்போதும், ஒருவரை ஒருவர் வெட்டி ஆட தெற்கின் தயவை நாடுவர்.

2. முஸ்லீம்களை வெட்டி ஆட, சலுகை அரசியல் ஒன்றே தீர்வு எனும் முடிவுக்கு கிழக்கு தமிழர் வந்து - தமிழ் தேசியத்தை கைவிடுவர்.

3. இதனால் தமிழ்தேசிய அரசியல் வடக்குக்கு மட்டுமே என்றாக. மட்டகளப்பின் அரசியல் நுவரெலியாவின் அரசியல் போல ஆகும்.

முன் யோசனை இன்றி தமிழ் முஸ்லீம் விரோதத்தை தூண்டி விடும் போது இது இப்படி தமிழ் தேசிய அரசியல்/வட-கிழக்கு ஒற்றுமை மீதே பூமராங் ஆகும் என நம்மில் பலர் யோசிக்வில்லை.

கூட்டமைப்பும் இந்த விடயத்தை பொறுப்பாக கையாளாமல் கிடப்பில் போட்டது. கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்தும் ஹிஸ்புல்லா போன்ற அரச ஆதரவு பெரும்புள்ளிகளின் ஆதரவில் நடந்த நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்தார்கள்.

இன்னொருபுறம் முஸ்லிம் எதிர்ப்பு மனோநிலை மேலும் மேலும் ஏரியூட்டப்பட்டது. முஸ்லிம் பக்கத்தில் மேலும் மேலும் தமிழர்களை சீண்டும் செயல்கள் அரங்கேறின.

இருபுறமும் இதை பிண்ணணியில் நின்று இயக்கியவர்கள் மகிந்தவின் ஆட்கள்.

இப்போ இந்த திட்டம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.

இங்கே வியாழேந்திரனை எதிர்த்து எழுதுபவர்கள் யாரும் மட்டகளப்பு வாசிகள் அல்ல.

தனியும் அக்கினியும் எழுதுவதை பாருங்கள். என்னை விட தமிழ் தேசியத்தில் பற்றுக் கொண்டு எழுதியவர்கள் அவர்கள்.

தமிழ்தேசியத்தை நம்பி பலனில்லை, முஸ்லீமை எதிர்க்க கோட்டவே கதி என கூறப்படும் செய்தியை ஏற்றுக்கொண்டு “மூக்கை பிடித்தபடி” கோட்டவுக்கு வோட்டுப் போட பல மட்டு வாழ் தமிழ் மக்கள் தயாராகிறார்கள், தயாரக்கப்படுகிறார்கள்.

இப்போ புரிகிறாதா ஈஸ்டர் தாக்குதல் ஏன் மட்டுவில் நடந்தது என?

ஏனைய அரசியல்வாதிகளால் முடியாத போது வியாழேந்திரன் மட்டும் எமக்கு விடிவை தருவாறா? என்ற உங்கள் கேள்வியே தவறானது. வியாழேந்திரன் தமிழ் இனத்துக்கு தீர்வு தருவதாக சொல்லவில்லை. மாகாண சபை அதிகாரத்தை கூட்டுவேன் என்பது கூட இல்லை. தமிழ் ஊர்களுக்கு அபிவிருத்தி, அரசவேலை, முஸ்லீம்களிடம்பிருந்து காணியை பாதுகாப்பது, இப்படி அன்றாட பிரச்சினகளை கோட்டாவிடம் கேட்டு தீர்ப்பேன் என்பதே அவர் கூறுவது. இதை ஒரு எல்லை வரைக்கும் அவரால் செய்ய முடியும்.

மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள், வியாழேந்திரனின் சலுகை வழி செல்வார்களா? இல்லை தமிழ் தேசிய வழி செல்வார்களா?

வியாழேந்திரன் காட்டிய வழியில் போனால், குறுகிய காலத்தில் சில நன்மைகளை மட்டு தமிழ் மக்கள் அடைவார்கள். இந்த அரசியல் வெல்ல வேண்டும் என்பதே இனவாதிகளின் ஆசையும். எனவே வியாழேந்திரன் கேட்பதை ஒரு அளவுக்கு கொடுப்பார்கள். அவரும் கொடுக்க முடியாததை கேட்க மாட்டார்.

இந்த அரசியல், ஈற்றில் தமிழ் தேசிய அரசியலை வடக்குக்கு மட்டும் சுருக்கும்.

இந்த அவல நிலைக்கு யார் காரணம் 

1. இதை முளையிலேயே தீர்க்காத கூட்டமைப்பு

2. கண்மூடித்தனமாக தமிழ்-முஸ்லீம் விரோதத்தை தூண்டிய சகல தமிழர்களும், முஸ்லீம்களும்.

3. 4 வருடமாக கச்சிதமாக காய் நகர்த்திய மகிந்த தரப்பு.

8 hours ago, விசுகு said:

 

அர்ஜுன் அண்ணருக்கு  இவரை கனடா  வந்தபோது தான்  தெரியும்

அதுவும் கூட்டமைப்பின்  ஒரு  நாடாளுமன்ற  உறுப்பினராக..

ஆனால்  பழைய புளட்  உறவை  வைத்து

அதை  நம்பி

அர்ஜுன் அண்ணரரும் அவரது  புளட்  நண்பர்களும்  ஊரில் சில  விடயங்களை செய்யலாம்  என  இவரை அணுகி பேசியது  உண்மை

ஆனால்  அடுத்த  சில  மாதங்களில்  இவர் கூட்டமைப்பிலிருந்து ஓடி

 எங்கிருக்கிறார்  என்றே  தெரியாமல் ஒழிந்து

கடைசியில் மகிந்தவிடம்  சங்கமிக்க

அர்ஜுன் அண்ணரரும் அவரது  புளட்  நண்பர்களும்  தலைக்கு  வந்தது தலைப்பாகையுடன்  என....??(அதை  இங்கே  அவரே எழுதியிருக்கிறார்)

 

 

வியாழேந்திரன் மகிந்த பக்கம் தாவிய நாட்களில் அர்ஜூன் அண்ணா இங்கே எழுதுவதை நிறுத்தி விட்டாரே?

மேலதிக தகவல்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாய வருவது கிந்தியவிற்கு ஏற்புடையது  அல்ல என்றே நம்பப்படுகிறது, தகவல் மற்றும் விடயம் அறிந்த வட்டங்களில்.

நான் அறிந்தது, கடந்த 18 மாதங்களில், ஹிந்தியை சீனாவை சொறி சிங்களத்தின் பல்வேறு துறைகள் மற்றும் விடயங்களில் இருந்து வெளியேற்றி உள்ளது. இதன் விபரங்களை அறியமுடியவில்லை.
 
கோத்தபாய வந்தால், சீனா மீண்டும் உள் வரும் என்பதை கோத்தபாய அணியில் உள்ள ரம்புக்வெல வெளிப்படையாக அறிவித்திருபது தெரிந்ததே.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.