Jump to content

கோட்டாவுக்கே வியாழேந்திரன் ஆதரவு


Recommended Posts

1 hour ago, goshan_che said:

மக்கள் என்ன முடிவு எடுப்பார்கள், வியாழேந்திரனின் சலுகை வழி செல்வார்களா? இல்லை தமிழ் தேசிய வழி செல்வார்களா?

வியாழேந்திரன் சலுகை அரசியல் செய்தால் அதை மக்கள் ஆதரிப்பார்கள்.

ஆனால் கோத்தாவுடன் கைகோர்ப்பதை எத்தனை பேர் ஆதரிப்பார்கள் என்பது கேள்வி.

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

கோத்தபாய வருவது கிந்தியவிற்கு ஏற்புடையது  அல்ல என்றே நம்பப்படுகிறது, தகவல் மற்றும் விடயம் அறிந்த வட்டங்களில்.

 

இந்தியா கோத்தாவுக்கு ஆதரவில்லையெனில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (ஆறுமுகம் தொண்டமான்) கோத்தாவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்து இருக்காது.

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

கோத்தபாய வருவது கிந்தியவிற்கு ஏற்புடையது  அல்ல என்றே நம்பப்படுகிறது, தகவல் மற்றும் விடயம் அறிந்த வட்டங்களில்.

நான் அறிந்தது, கடந்த 18 மாதங்களில், ஹிந்தியை சீனாவை சொறி சிங்களத்தின் பல்வேறு துறைகள் மற்றும் விடயங்களில் இருந்து வெளியேற்றி உள்ளது. இதன் விபரங்களை அறியமுடியவில்லை.
 
கோத்தபாய வந்தால், சீனா மீண்டும் உள் வரும் என்பதை கோத்தபாய அணியில் உள்ள ரம்புக்வெல வெளிப்படையாக அறிவித்திருபது தெரிந்ததே.

அமெரிக்கா, இந்தியா கோத்தாவுக்கு ஆதரவு. கோத்தா வேட்பாளரானதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளது. 

“இலங்கை ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த சர்­வ­தேச தரப்­பி­னரும் தலையிட முயற்­சிக்க மாட்­டார்கள்.

2015 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் இந்­தியா அல்­லது வேறு எந்த நாடும் அவர்­களை (எதிர்க்­கட்சி கூட்ட­ணியை) ஆத­ரித்­தன என்பதற்கு தனிப்­பட்ட முறையில் என்­னிடம் எந்த ஆதா­ரமும் இல்லை. ஆனால் என்ன தவறு நடந்­தது என்பதை இப்­போது நாங்கள் நன்றாக புரிந்து கொண்டோம். முன்ன­தாக எங்கள் அர­சாங்­கத்தை மாற்ற யாரும் செயற்­பட்­டி­ருந்தால் நாங்கள் இப்­போது நிலை­மையை சரி­செய்­துள்ளோம்.

இந்­தியா எங்கள் முத­லிட நண்பர் மற்றும் அண்டை நாடு. எனவே அரசியல் மற்றும் பாது­காப்பு விஷயங்களில் நாங்கள் எப்­போதும் இந்­தி­யா­வுடன் செல்ல வேண்டும், ஆனால் பொரு­ளா­தார மற்றும் பிற விஷ­யங்­களில் நீங்கள் சீனாவை மறக்க முடி­யாது.”

பசில் ராஜபக்ச

https://yarl.com/forum3/topic/233036-சர்வதேசம்-தலையிடாது-பசில்-நம்பிக்கை/

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

கோத்தபாய வருவது கிந்தியவிற்கு ஏற்புடையது  அல்ல என்றே நம்பப்படுகிறது, தகவல் மற்றும் விடயம் அறிந்த வட்டங்களில்.

நான் அறிந்தது, கடந்த 18 மாதங்களில், ஹிந்தியை சீனாவை சொறி சிங்களத்தின் பல்வேறு துறைகள் மற்றும் விடயங்களில் இருந்து வெளியேற்றி உள்ளது. இதன் விபரங்களை அறியமுடியவில்லை.
 
கோத்தபாய வந்தால், சீனா மீண்டும் உள் வரும் என்பதை கோத்தபாய அணியில் உள்ள ரம்புக்வெல வெளிப்படையாக அறிவித்திருபது தெரிந்ததே.

இதை ஒத்த கூற்றைத்தான் விக்கினேஸ்வரன் அவர்களும் கூறி இருந்தார்.

ஏதோ ஒரு விதத்தில் கோத்தா வென்றால், அவர் மீதான சந்தேகத்தை, அதாவது அவர்களுக்கும் சீனாவிற்கும் இடையான உறவுகள் மேலும் பலப்படும். இதை, ஏற்கனவே மாலைத்தீவில் கண்ட இந்தியா அங்கிருந்து சீனாவை அகற்றியது. வேறு பல நாடுகளிலும், சீனாவின் வளர்ச்சியை இந்தியா விரும்பவில்லை. ஏற்கனவே அம்பாந்தோட்டை பற்றியும், கொழும்பு துறைமுகம் பற்றியும் கவலை கொண்டுள்ளது இந்தியா. 

எனவே, எமக்கு விருப்பமில்லாத ஒன்றாக கோத்தாவின் வெற்றி இருந்தாலும், அதுவே சில நீண்ட திறவுகோலுக்கு உதவலாம்.

Link to comment
Share on other sites

21 minutes ago, ampanai said:

இதை ஒத்த கூற்றைத்தான் விக்கினேஸ்வரன் அவர்களும் கூறி இருந்தார்.

ஏதோ ஒரு விதத்தில் கோத்தா வென்றால், அவர் மீதான சந்தேகத்தை, அதாவது அவர்களுக்கும் சீனாவிற்கும் இடையான உறவுகள் மேலும் பலப்படும். இதை, ஏற்கனவே மாலைத்தீவில் கண்ட இந்தியா அங்கிருந்து சீனாவை அகற்றியது. வேறு பல நாடுகளிலும், சீனாவின் வளர்ச்சியை இந்தியா விரும்பவில்லை. ஏற்கனவே அம்பாந்தோட்டை பற்றியும், கொழும்பு துறைமுகம் பற்றியும் கவலை கொண்டுள்ளது இந்தியா. 

எனவே, எமக்கு விருப்பமில்லாத ஒன்றாக கோத்தாவின் வெற்றி இருந்தாலும், அதுவே சில நீண்ட திறவுகோலுக்கு உதவலாம்.

அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து தான் கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். அவர்கள் நினைத்திருந்தால் இத்தேர்தலில் கோத்தாவை போட்டியிட முடியாதவாறு செய்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. அது ஏன் என உங்கள் போன்றோர் யோசிக்கப்போவதில்லை.

கோத்தா ஜனாதிபதியாக வந்தால் கோத்தாவை வைத்து SOFA, MCC உடன்படிக்கைகளில் கையெழுத்து பெற அமெரிக்கா முயற்சிக்கும். 

அமெரிக்காவை புறக்கணித்து தனி சீன ஆதரவு நிலைக்கு சென்றால் அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கு திட்டங்களை வகுக்கும். இல்லாவிட்டால் ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் போல் நடத்தி இலங்கைக்குள் புகும்.

தமிழர்களுக்கு சார்பாக எதுவும் நடக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் குத்தினாலும் அரிசியானால் சரி என்பதே ஈழத்தமிழருக்கு சரியான கொள்கை போல் தெரிகின்றது. இனியும் எமது கொள்கை எமது கொள்கை என மாரடித்தால்??????
சொல்லத்தெரியவில்லை...............

சிங்களம் தமிழர் விடயத்தில் தமக்குள் கட்சி பேதங்களை மறந்து ஒற்றுமையாக இருக்கின்றார்கள் என்பது தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

தனியும் அக்கினியும் எழுதுவதை பாருங்கள். என்னை விட தமிழ் தேசியத்தில் பற்றுக் கொண்டு எழுதியவர்கள் அவர்கள்.

கிழக்கு மக்களுக்கு எதுவும் கிடைக்க போவதுமில்லை ஆனால் வடக்கில் உள்ள அரசியல் வாதிகள் கிழக்கை அரசியலுக்காகவும் தங்கள் இருப்பை தக்க வைக்கவும் ஆரசியலுக்கு மட்டுமே பேசுகிறார்கள் உன்மையில் அக்கறையென்பது சிறு துளியும் இல்லை. 

அதை நீங்கள் கிழக்கு வந்து பார்த்த போது புரிந்திருப்பீர்கள் மக்கள் சாதரண பிரதேச செயலக தேர்தலுக்கு கொடுத்த வாக்கை கூட பார்த்திருப்பீர்கள் மட்டக்களப்பில் பிள்ளையான் கட்சியினரால் 100 அலுவலகங்கள் திறந்து அரசியல் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது  கட்சி ஒப்பந்தங்கள் மூலம் ஆனால் அது கோத்தா வென்றால் 100 வீதம் கிடைக்காமல் போனாலும் 50 வீதம் சாத்தியமாகலாம் 10வீதம் கிடைத்தாலும் சந்தோசம் இப்ப 0 வீதம் கூட தமிழர் கைகளில் எதுவும் இல்லை கிழக்கில் 

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் இளைஞர்கள் நடத்தினால் முஸ்லிம் அரசியல் வாதிகளால் பொலிசாரை தூண்டி விட்டு அடித்து விரட்ட ஆறுதல் சொல்லவும் ஆட்கள் இல்லை , மக்களின் பிரச்சினைகளை பாராழுமன்றம் கொண்டு செல்ல ஆட்களும் இல்லை  அது போக கிழக்கு அபிவிருத்தி நிதிகள் கூட பல மில்லியன்கள் திரும்பி செல்கிறது காரணம் முஸ்லீம் அரசியல் வாதிகளின் தடையும் கட்டுப்பாடும் இப்படி மட்டக்களப்பு இருக்க அம்பாறை திருகோணமலையெல்லாம் சொல்ல தேவையில்லை 

சக்தி டீவி க்காரன் போகும் ஊருக்கு தமிழ் அரசியல் வாதிகள் செல்வதில்லை  ஏனோ பலரின் வண்டவாளங்களை சக்தி டீ வி புட்டு வைக்கிறது 

Link to comment
Share on other sites

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மக்கள் சாதரண பிரதேச செயலக தேர்தலுக்கு கொடுத்த வாக்கை கூட பார்த்திருப்பீர்கள் மட்டக்களப்பில் பிள்ளையான் கட்சியினரால் 100 அலுவலகங்கள் திறந்து அரசியல் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது  கட்சி ஒப்பந்தங்கள் மூலம் ஆனால் அது கோத்தா வென்றால் 100 வீதம் கிடைக்காமல் போனாலும் 50 வீதம் சாத்தியமாகலாம் 10வீதம் கிடைத்தாலும் சந்தோசம் இப்ப 0 வீதம் கூட தமிழர் கைகளில் எதுவும் இல்லை கிழக்கில் 

கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 44,062 வாக்குகளை பெற்றிருந்தது.

அதில் வாக்களித்த அனைவருமே ஜனாதிபதி தேர்தலில் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள் என கூற முடியாது. ஆனால் பெரும்பாலானோர் வாக்களிக்கக்கூடும்.

கோத்தா வந்தால் பிள்ளையான் விடுவிக்கப்படுவார் என (நினைப்பதாக) சிலர் சமூக வலைத்தளங்களில் எழுதுவதை பார்த்தேன். நீங்களும் அது பற்றி கூறியிருந்தீர்கள். அதற்காகவே கோத்தாவை வெல்ல வைக்க நினைத்து அவருக்கு வாக்களிப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Lara said:

அமெரிக்கா, இந்தியா கோத்தாவுக்கு ஆதரவு. கோத்தா வேட்பாளரானதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளது. 

“இலங்கை ஜனா­தி­பதித் தேர்­தலில் எந்த சர்­வ­தேச தரப்­பி­னரும் தலையிட முயற்­சிக்க மாட்­டார்கள்.

2015 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் இந்­தியா அல்­லது வேறு எந்த நாடும் அவர்­களை (எதிர்க்­கட்சி கூட்ட­ணியை) ஆத­ரித்­தன என்பதற்கு தனிப்­பட்ட முறையில் என்­னிடம் எந்த ஆதா­ரமும் இல்லை. ஆனால் என்ன தவறு நடந்­தது என்பதை இப்­போது நாங்கள் நன்றாக புரிந்து கொண்டோம். முன்ன­தாக எங்கள் அர­சாங்­கத்தை மாற்ற யாரும் செயற்­பட்­டி­ருந்தால் நாங்கள் இப்­போது நிலை­மையை சரி­செய்­துள்ளோம்.

இந்­தியா எங்கள் முத­லிட நண்பர் மற்றும் அண்டை நாடு. எனவே அரசியல் மற்றும் பாது­காப்பு விஷயங்களில் நாங்கள் எப்­போதும் இந்­தி­யா­வுடன் செல்ல வேண்டும், ஆனால் பொரு­ளா­தார மற்றும் பிற விஷ­யங்­களில் நீங்கள் சீனாவை மறக்க முடி­யாது.”

பசில் ராஜபக்ச

https://yarl.com/forum3/topic/233036-சர்வதேசம்-தலையிடாது-பசில்-நம்பிக்கை/

இந்த விடயம் நீங்களோ நாங்களோ விரும்பி வருவதில்லை 
இவற்றை காலம் சூழ்நிலை பிராந்திய அரசியல்தான் முடிவெடுக்கும்.

நீங்கள் பிரான்சில் வசிக்கிறீர்கள் பிரான்சில் 400 ற்கு மேற்பட்ட வங்கிகள் 
இருக்கிறது நீங்கள் ஏன் குறித்த வங்கிகளில் ( நீங்கள் அக்கவுண்ட் வைத்திருக்கும்)
அக்கவுண்ட் வைத்திருக்கிறீர்கள்? இந்த வங்கிகளில் அக்கவுண்ட் வைத்தருக்கும் இல்டசியத்தோடுதான் 
பிரான்ஸ் வந்தீர்களா?
நீங்கள் வசிக்கும் சூழல் 
நீங்கள் வங்கிகளிடம் இருந்து எதை எதிர்பார்க்கீறீர்கள் 
வங்கிகள் என்ன சேவையை வழங்குகின்றன
உங்களுக்கு அறிமுகம் அல்லது பரிட்ச்யமானவை  

இவைதான் உங்களை கொண்டு சென்று அந்த வங்கிளில் சேர்த்தது 
நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கிகளை விட சிறந்த சேவைகள் வழங்க கூடிய 
வேறு வங்கிகளும் இருக்கலாம் ...என்பதும் உண்மை.

இதை நான் திரும்ப திரும்ப எழுதிக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் புரிகிற மாதிரி இல்லை 
இப்போ பசில் என்ன விரும்புகிறார்  பசிலிலின் ஆட்டுக்குட்டி என்ன விரும்புகிறது என்பது ஒரு பொருட்டே 
இல்லை. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை .... மகிந்த அண்ட் கோவின்  இலக்கு அல்லது தேவை அமெரிக்க  இந்தியா  சீனா வழங்க கூடிய சலுகைகள் இவைதான் அதை தீர்மானிக்க போவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தமிழ் பத்ரிக்கைகளை பிரதிபலிக்கிறீர்கள் 
மைத்த்ரி வந்தவுடன் 2005 இல் இனி சீனாவின் ஆட்டம் சரி 
இந்தியா சீனாவை அனுப்பிவிடும் என்றுதான் இங்கு எல்லோரும் அள்ளி கொட்டிக்கொண்டு 
இருந்தவர்கள். சீனாவை தனது சொந்த நிலமான அருணாச்சல பிரதேசத்தில் இருந்தே இந்தியாவால் 
வெளியேற்ற முடியவில்லை   கடனில் வாழும் இலங்கையில் இருந்து எப்படி முடியும் என்ற கேள்விகள் 
அவர்களிடம் இருக்கவில்லை. சீனாவின் முதலீடுகளின் தொகையை ரிஸ்க்கை ஆழமாக பார்க்க கூடிய 
பொருளாதார அறிவு தமிழ் பத்த்ரிக்கையில் கொப்பி பேஸ்ட் பண்ணுபவர்களுக்கு இல்லை.
அமெரிக்க முதலீடுகளுக்கும் சீனாவின் முதலீடுகளுக்கு என்ன வித்தியாசம் என்பது கூட எண்ணுவதில்லை.

Link to comment
Share on other sites

41 minutes ago, Maruthankerny said:

இதை நான் திரும்ப திரும்ப எழுதிக்கொண்டு இருக்கிறேன் நீங்கள் புரிகிற மாதிரி இல்லை 
இப்போ பசில் என்ன விரும்புகிறார்  பசிலிலின் ஆட்டுக்குட்டி என்ன விரும்புகிறது என்பது ஒரு பொருட்டே 
இல்லை. இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை .... மகிந்த அண்ட் கோவின்  இலக்கு அல்லது தேவை அமெரிக்க  இந்தியா  சீனா வழங்க கூடிய சலுகைகள் இவைதான் அதை தீர்மானிக்க போவது. 

உங்களுக்கு நான் பல திரிகளில் எழுதியதும் புரியவில்லை. பசில் என்ன விரும்புகிறார், பசிலின் ஆட்டுக்குட்டி என்ன விரும்புகிறது, கோத்தா என்ன விரும்புகிறார், மகிந்த என்ன விரும்புகிறார் என்பதல்ல என் கருத்து.

முன்னர் இன்னொரு திரியிலும் நான் கூறியது, அமெரிக்கா, இந்தியா கோத்தா ஜனாதிபதியாக வருவதை விரும்புகின்றன, ஆதரிக்கின்றன.

பசிலின் வரிகளில் அதை புரிந்து கொள்ளலாம். அதற்கு தான் அதை இணைத்தேன். 

இதையும் கொஞ்சம் பாருங்கள்.

EG6T3tLXYAMWfTE?format=png&name=medium

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Lara said:

கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் பிள்ளையானின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 44,062 வாக்குகளை பெற்றிருந்தது.

அதில் வாக்களித்த அனைவருமே ஜனாதிபதி தேர்தலில் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள் என கூற முடியாது. ஆனால் பெரும்பாலானோர் வாக்களிக்கக்கூடும்.

கோத்தா வந்தால் பிள்ளையான் விடுவிக்கப்படுவார் என (நினைப்பதாக) சிலர் சமூக வலைத்தளங்களில் எழுதுவதை பார்த்தேன். நீங்களும் அது பற்றி கூறியிருந்தீர்கள். அதற்காகவே கோத்தாவை வெல்ல வைக்க நினைத்து அவருக்கு வாக்களிப்பார்கள்.

வாக்களிப்பது அவரவர் உரிமை யாருக்கும் வாக்களிக்கலாம் வாக்களிக்காமலும் போகலாம் 

Link to comment
Share on other sites

1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

வாக்களிப்பது அவரவர் உரிமை யாருக்கும் வாக்களிக்கலாம் வாக்களிக்காமலும் போகலாம் 

வாக்களிப்பது அவரவர் உரிமை. அதனால் தான் நீங்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதை எதிர்த்து நான் எதுவும் எழுதவில்லை. எனது கருத்தை மட்டுமே கூறுகிறேன்.

பிள்ளையானை ஆதரிப்பவர்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள். ஆனால் வியாழேந்திரனை ஆதரிப்பவர்களில் ஒருபகுதி வியாழேந்திரன் கோத்தாவை ஆதரித்ததற்காக கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள், ஒருபகுதி சஜித்துக்கு வாக்களிப்பார்கள் என்பது எனது கருத்து. சமூக வலைத்தளங்களில் அவதானித்த கருத்துகளின் அடிப்படையில்.

கிழக்கில் இம்முறை வாக்களிப்பு வீதம் குறைவாக இருக்கும் என சிலர் கூறுகிறார்கள். பார்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Lara said:

வாக்களிப்பது அவரவர் உரிமை. அதனால் தான் நீங்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பதை எதிர்த்து நான் எதுவும் எழுதவில்லை. எனது கருத்தை மட்டுமே கூறுகிறேன்.

பிள்ளையானை ஆதரிப்பவர்கள் கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள். ஆனால் வியாழேந்திரனை ஆதரிப்பவர்களில் ஒருபகுதி வியாழேந்திரன் கோத்தாவை ஆதரித்ததற்காக கோத்தாவுக்கு வாக்களிப்பார்கள், ஒருபகுதி சஜித்துக்கு வாக்களிப்பார்கள் என்பது எனது கருத்து. சமூக வலைத்தளங்களில் அவதானித்த கருத்துகளின் அடிப்படையில்.

கிழக்கில் இம்முறை வாக்களிப்பு வீதம் குறைவாக இருக்கும் என சிலர் கூறுகிறார்கள். பார்க்கலாம்.

தேர்தல் முடிந்த பிறகே தெரியும் யார் என்ன செய்ய போகிறார்கள் என மீண்டும் 5 வருடங்கள் இழுபறிக்குள் வீழத்தான் போகிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Lara said:

உங்களுக்கு நான் பல திரிகளில் எழுதியதும் புரியவில்லை. பசில் என்ன விரும்புகிறார், பசிலின் ஆட்டுக்குட்டி என்ன விரும்புகிறது, கோத்தா என்ன விரும்புகிறார், மகிந்த என்ன விரும்புகிறார் என்பதல்ல என் கருத்து.

முன்னர் இன்னொரு திரியிலும் நான் கூறியது, அமெரிக்கா, இந்தியா கோத்தா ஜனாதிபதியாக வருவதை விரும்புகின்றன, ஆதரிக்கின்றன.

பசிலின் வரிகளில் அதை புரிந்து கொள்ளலாம். அதற்கு தான் அதை இணைத்தேன். 

இதையும் கொஞ்சம் பாருங்கள்.

EG6T3tLXYAMWfTE?format=png&name=medium

 

இந்த படத்தை இனைத்ததுக்கு நன்றி 
இதை இணைக்க வேண்டும் என்று நான் யோசித்தேன் எழுதும்போது 

இதை நீங்கள் சீனாவின் மூதலீடை சீனா எடுக்கும் ரிஸ்க்கை புரிந்து கொள்ளலாம் 

International sovereign Bonds increase faster than debt to China 
என்ற வரியை புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன் 
இதைத்தான் அமெரிக்கா ஜப்பான் போன்றவை செய்யும் காரணம் இதுக்கு 
உத்தரவாதம் இருக்கும் இப்போ இல்லை என்றாலும்  50 வருடம் கழித்து இலங்கை 
இதை வட்டியுடன் கொடுக்க வேண்டும் ... மாற்றீடாக அவர்கள் மற்றைய நாடுகளின் இயற்கை கனிமங்களை 
(திருடி) எடுத்துக்கொண்டு இருப்பார்கள். நாட்டை தொடர்ந்தும் சீரழித்துக்கொண்டு இருந்தால் உலக வங்கி 
மூலமாக இவர்கள் இன்னொரு டீல் கொடுப்பார்கள் ..... நீங்கள் சில நேரங்களில் கேள்வி பட்டு இருப்பீர்கள் 
உலகவங்கி குறிப்பிட மில்லியன் கடனை ரத்து செய்கிறது என்று. அதனால் கடன் உள்ள நாட்டுக்கு ஒரு லாபமும் இல்லை இந்த பாண்டை உலக வங்கியிடம் இருந்து அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். 
இந்த அத்தனை பணமாற்றமும் அமெரிக்காவில் நியூ யோர்க்கில் ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள் இருக்கும்  வங்கிளில்  இருக்கும் கணக்குகளில் மாறிக்கொண்டு இருக்கும். 

சீனாவின் முதலீடு என்பது முதலே இல்லாமல் போகக்கூடிய முதலீடுகள் 
இதை அமெரிக்கா ஜப்பான் ஒருபோதும் செய்யாது. ரிஸ்க் லெவல் என்பது பாரிய இடைவெளி கொண்டது. 
சீனாவின் முதலீட்டில் பின்னிருப்பது சீன அரசு. மற்றது பிரைவேட் செக்டர்ஸ்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.