Jump to content

ஆண்கள் அழுவது தவறா... என்ன சொல்கிறது உளவியல்?


Recommended Posts

காலங்காலமாக அழுகை என்ற உணர்வு பெண்களோடு மட்டுமே பொருத்திப் பார்க்கப்படுகிறது. ஓர் ஆண் அழுதால், "என்னடா! பொம்பள மாதிரி அழுவுற..." என்று சுற்றியிருப்பவர்களால் கடிந்துகொள்ளப்படுவார். அழுகை என்பது பெண்களுக்கு மட்டும்தானா, ஆண்கள் அழுவது தவறா?

தோல்வியைக் கண்டு துவளக்கூடாது என்று சொல்வது எளிது. ஆனால், தோல்வியை அனுபவிக்கும்போதுதான் அதன் வலியை நாம் உணர முடியும். அதேபோல்தான் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்குவதில் ஏற்பட்ட தோல்வியைத் தாங்க முடியாமல் கண்ணீர்விட்டார் இஸ்ரோ தலைவர் சிவன். பிரதமர் நரேந்திர மோடியின் தோள்களில் அவர் சாய்ந்து அழுத காட்சி அடுத்த நாள் பேசுபொருளானது. சில நொடிகள்தான் அவர் கண்ணீர் சிந்தினார் என்றாலும் அதன்பிறகு, பல நாள்களுக்கு அந்தச் செயல் விமர்சனத்துக்குள்ளானது. அதிலும் சிலர், 'உயர் பதவியில் இருக்கும் ஓர் ஆண் இப்படிப் பொதுவெளியில் அழலாமா?' என்று விமர்சித்தனர்.

 

காலங்காலமாக அழுகை என்ற உணர்வு பெண்களோடு மட்டுமே பொருத்திப் பார்க்கப்படுகிறது. ஓர் ஆண் அழுதால், "என்னடா! பொம்பள மாதிரி அழுவுற..." என்று சுற்றியிருப்பவர்களால் கடிந்துகொள்ளப்படுவார். அழுகை என்பது பெண்களுக்கு மட்டும்தானா, ஆண்கள் அழுவது தவறா? இதற்குப் பின்னால் இருக்கும் உளவியல் சார்ந்த விஷயங்கள் என்ன என்று மனநல மருத்துவர் சுபா சார்லஸிடம் கேட்டோம்.

"இன்றைய சமூகம் ஆண்கள் அழுதால் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், பெண்கள் அழுதால் ஏற்றுக்கொள்கிறது. அழுகை என்பது மனிதனுக்கு உரிய குணங்களில் ஒன்று. இதில் ஆண் பெண் என்று பிரித்துப் பார்க்கக் கூடாது.

அமெரிக்காவில் 20 குழந்தைகள் துப்பாக்கியால் சுடப்பட்டபோது அந்நாட்டின் அதிபராயிருந்த ஒபாமா கண்ணீர்விட்டதை உலகமே பார்த்தது. அதே போன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வடகொரிய அதிபர் கிம், ஆங் சாங் சூ இ போன்ற உலகத் தலைவர்கள் பொது இடங்களில் வெவ்வேறு தருணங்களில் கண்ணீர் சிந்தியதையும் நாம் பார்த்திருக்கிறோம். விளையாட்டு வீரர்கள் வெற்றியிலும் தோல்வியிலும் கண்ணீர்விடுவதும் எந்த மதமாயினும் முழுமனதோடு ஒன்றும்போது கண்ணீர் வருவதும் இயல்புதான். பாடகர்கள் மனம் கசிந்து உருகிப் பாடும்போது கேட்பவர்கள் தன்னை அறியாமல் அழுவது, நாம் உணர்ந்த ஒன்றுதான்.

சில சமயங்களில் உணர்ச்சிகள் மேலோங்கும்போது அழுகை வருவது இயற்கைதான். அழுகையும் ஓர் அழகே. ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அழுகையும் ஆபத்தானதுதான். நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி அழுகையையும் கட்டுக்குள் வைக்கத் தெரியவேண்டும்.

 

ஆண் என்பவன் எப்போதும் தன் உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்து உறுதியாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் அவன் ஒரு சிறந்த குடும்பத் தலைவனாக இருந்து முழு பொறுப்பையும் ஏற்க முடியும் என்று சமூகம் கருதுகிறது. அதனால்தான் பெரிய பதவியில் இருப்பவர் அழும்போது அது விமர்சிக்கப்படுகிறது.

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு ஆறுதல் கூறி மோடி அவரை அரவணைத்தபோது ஒரு தந்தையின் அரவணைப்பில் இருந்த குழந்தைபோல் அழுதார். நாம் ஒரு கஷ்டத்தில் இருக்கும்போது ஒருவரின் அரவணைப்பு, கண்டிப்பாக அழுகையைத் தூண்டக்கூடியதே. இது ஒரு வித்தியாசமான அழகான மனித இயல்பு.

ஆனால், அடுத்த சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு வந்துவிட வேண்டும். உணர்ச்சிகளை எவ்வளவு விரைவாகக் கட்டுப்படுத்தி மீண்டுவருகிறார்கள் என்பதுதான் முக்கியம். அழுகை தூண்டப்படும்போது இதயம் வேகமாகத் துடிக்கும். மூளைக்குச் செல்லும் ஆக்ஸிஜனின் அளவு குறையும். இதனால் மூளை கிளர்ச்சியடைந்து பின்னர் அழுகை வரும். இவை அனைத்தும் மூளையில் உள்ள அமைகிடலா என்ற பகுதியில் நடைபெறுகிறது.

அழுகை நமக்கு புத்துணர்வு அளிக்கும். மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைப்பதுபோல் நம்மை இலகுவாக்கிவிடும் அழுகை. அழுதபிறகு நம் மனது தேறிவிடும். அழுகையும் ஒரு மருந்துதான். பரிணாம வளர்ச்சியில் நம் மூளை பயம், கோபம், துக்கம் எனப் பல உணர்வுகளைக் கட்டமைத்துள்ளது. சிந்திக்கத் தெரிந்த மனிதனாக வளர்ந்துள்ள நமக்கு அழுகையும் சிரிப்பும் அளவோடு தேவையான ஒன்றுதான்" என்றார்.
 
சிறு வயதிலேயே ஆண் குழந்தைகளை அழுகை விஷயத்தில் பிரத்யேகமாக அணுகக்கூடாது என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். "சிறு வயது ஆண் குழந்தைகள் அழுதால், 'ஏன்டா பெண் பிள்ளை மாதிரி அழுவுற' என்றுதான் கேட்கின்றனர். இது மிகவும் தவறானது. இதுவே பிஞ்சுகளின் மனதில் விதைக்கப்பட்டு, அழுகை என்பது ஆணுக்குரிய குணம் அல்ல என்று ஒரு தவறான பிம்பம் உருவாகும்" என்கிறார் டாக்டர் சுபா சார்லஸ்.
?ref=external&v=439059980068879

 

Link to comment
Share on other sites

20 minutes ago, ampanai said:

சிறு வயதிலேயே ஆண் குழந்தைகளை அழுகை விஷயத்தில் பிரத்யேகமாக அணுகக்கூடாது என்ற கருத்தையும் அவர் முன்வைத்தார். "சிறு வயது ஆண் குழந்தைகள் அழுதால், 'ஏன்டா பெண் பிள்ளை மாதிரி அழுவுற' என்றுதான் கேட்கின்றனர். இது மிகவும் தவறானது. இதுவே பிஞ்சுகளின் மனதில் விதைக்கப்பட்டு, அழுகை என்பது ஆணுக்குரிய குணம் அல்ல என்று ஒரு தவறான பிம்பம் உருவாகும்" என்கிறார் டாக்டர் சுபா சார்லஸ்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் அழலாம், அது தப்பில்லை ஒருஅறை யில் அழலாம் ஆனால் வீட்டுக்கு வெளியில் அழக்கூடாது.....!  🤔 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில சந்தர்ப்பங்களில்.. என்னையறியாலே நான் அழுதிருக்கின்றேன்! யாருக்காகவும் அடக்கி வாசித்த நினைவில்லை!

அழுது முடிந்த பின்னர் மனதில் ஒரு இனம் புரியாத அமைதி ஏற்படுவதுண்டு..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புங்கையூரன் said:

சில சந்தர்ப்பங்களில்.. என்னையறியாலே நான் அழுதிருக்கின்றேன்! யாருக்காகவும் அடக்கி வாசித்த நினைவில்லை!

அழுது முடிந்த பின்னர் மனதில் ஒரு இனம் புரியாத அமைதி ஏற்படுவதுண்டு..!

நான்  இதுவரை  அழுததில்லை (என்  நண்பனின்  இறப்பில்  மட்டும்  ஒருமுறை  அழுதேன்)

சொந்த  வாழ்வில் ஆயிரம் அழுவதற்கான  நிலைகள்  வந்:தபோதும்  அழுததில்லை

காரணம்  அழுவது எம்மையும்  அயலையும் பலவீனப்படுத்தும்  என்று  நிபப்பதால்.

ஆனால்  நீங்கள்  அழுதிருக்கின்றீர்கள்  என்பது

அது  பலம்  என்று  புரிகிறது

இனி அதற்கான  நிலைகள்  வருவது  அரிதாயினும்

வந்தால் அழுதுவிடவேன்

Link to comment
Share on other sites

On ‎10‎/‎14‎/‎2019 at 7:29 AM, ampanai said:

அழுகை நமக்கு புத்துணர்வு அளிக்கும். மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைப்பதுபோல் நம்மை இலகுவாக்கிவிடும் அழுகை. அழுதபிறகு நம் மனது தேறிவிடும். அழுகையும் ஒரு மருந்துதான். பரிணாம வளர்ச்சியில் நம் மூளை பயம், கோபம், துக்கம் எனப் பல உணர்வுகளைக் கட்டமைத்துள்ளது. சிந்திக்கத் தெரிந்த மனிதனாக வளர்ந்துள்ள நமக்கு அழுகையும் சிரிப்பும் அளவோடு தேவையான ஒன்றுதான்" என்றார்.

அந்த மருந்தாக யாழ் களமும் இருக்கின்றது 🙂 

Link to comment
Share on other sites

On ‎10‎/‎15‎/‎2019 at 3:59 AM, புங்கையூரன் said:

சில சந்தர்ப்பங்களில்.. என்னையறியாலே நான் அழுதிருக்கின்றேன்! யாருக்காகவும் அடக்கி வாசித்த நினைவில்லை!

அழுது முடிந்த பின்னர் மனதில் ஒரு இனம் புரியாத அமைதி ஏற்படுவதுண்டு..!

நானெல்லாம் படம் பார்க்கும் போது அழக் கூடிய சந்தர்ப்பங்கள் வந்தாலே அழுது விடும் ஆள். அழுதால் பிள்ளைகள் பார்த்து சிரிப்பினம் என்று அடக்கப் போய் அது லைட்டாக கண்ணீராக வந்து வெளியேறி காட்டிக் கொடுத்து விடும். ஆனால் மரண வீட்டில் மட்டும் அழுகையே வருவதில்லை. அப்பாவின் செத்த வீட்டில் கூட ஒரு சொட்டு அழுகை வரவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/15/2019 at 1:29 PM, புங்கையூரன் said:

சில சந்தர்ப்பங்களில்.. என்னையறியாலே நான் அழுதிருக்கின்றேன்! யாருக்காகவும் அடக்கி வாசித்த நினைவில்லை!

அழுது முடிந்த பின்னர் மனதில் ஒரு இனம் புரியாத அமைதி ஏற்படுவதுண்டு..!

நானும் இதற்குள் 

Link to comment
Share on other sites

அழுவதென்பது தவறான செயல் அல்ல, மனிதனாகப் பிறந்த அனைவரிடமும் தோன்றும் ஒரு இயல்பான  உணர்வு. இதில் ஆண், பெண் வேறுபாடு எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. இழப்பு, அதிகமான மகிழ்ச்சியின் போதும் அழுகை வருவது இயல்பு...அடிக்கடி அழுவது கோழைத்தனமாகத் தோன்றும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கைக்கு பயணிக்கும் ரிக்கற் விலை அனேகமாக இருமடங்காகிவிட்டது ஆனாலும் மேற்குலக நாட்டு துரைமார்கள் இந்த வருடம் ஓகஸ்ட்டில் சுற்றுலா பயனம் செய்து  இலங்கையை  மேலும் வெற்றியடைய திட்டமிட்டிருக்கின்றார்கள்.
    • ஓம் அண்ணா நானும் இதை முதலில் நம்பவில்லை. உண்மை தானாம். வெளிநாட்டு இலங்கை தமிழர்கள் ஈரானுக்கு அளித்துவருகின்ற மிகபெரும் ஆதரவை கவனத்தில் எடுத்து அவர்களை சந்தோசபடுத்துவதற்காக இவ்வளவு பிரச்சனைகளை மேற்குலகும் இஸ்ரேலும் தந்துகொண்டிருக்கின்ற   நேரத்திலும் இலங்கை சென்று அணைக்கட்டை திறந்துவிட வேண்டும் என்று முடிவு எடுத்திருப்பார்.
    • சன்ரைசர்ஸ் அணி ப‌ல‌ ஜ‌பிஎல்ல‌ சுத‌ப்பின‌து.................இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகின‌ம்.................வ‌ஸ்சின்ட‌ன் சுந்த‌ருக்கு ஒரு விளையாட்டில் விளையாட‌ வாய்ப்பு கிடைச்ச‌து அதுக்கு பிற‌க்கு கூப்பில‌ உக்க‌ரா வைச்சிட்டின‌ம்...................ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் ம‌ற்றும் ஒரு நாள் தொட‌ர் ரெஸ் விளையாட்டி நிலைத்து நின்று ஆட‌க் கூடிய‌ இள‌ம் வீர‌ர்🙏🥰....................................    
    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.