Jump to content

மலையக மக்கள் ஊறுகாயோ, கறிவேப்பிலையோ அல்ல


Recommended Posts

இந்த அரசு தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் பெற்றுக் கொடுக்க வில்லை. எனவே மலையக மக்கள் தேவைக்காக மாத்திரம் பயன்படுத்தும் ஊறுகாயோ கறிவேப்பிலையோ அல்ல என அருனலு மக்கள் முன்னணியின் தலைவரும் அரச சேவை ஆணைக்குழுவின் உறுப்பினருமான வைத்தியர் கே.ஆர் கிசான் தெரிவித்தார். 

நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்று பகல் டிக்கோயா அருனலு மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

01col2160824647_7557812_13102019_SSK_CMY.jpg?itok=k-e0KQdV

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கினை எடுத்துக்கொண்டாலும் சரி மலையகத்தினை எடுத்துக்கொண்டாலும் சரி எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படவில்லை. மாறாக தோட்டங்கள் காடாக மாறியுள்ளன. பல தோட்டங்கள் துண்டாடப்பட்டு தோட்டத் தொழிலாளர்களை முதலாளியாக்குவோம் என தெரிவித்து மொட்டையாக்கிய வரலாறுகள் தான் உள்ளன.நுவரெலியா மாவட்டத்தில் உயர்தரம் மற்றும் சாதாரணதரம் படித்த 23 ஆயிரம் பேரும் பட்டதாரிகள் 300 பேரும் வேலையின்றி உள்ளனர். இவர்கள் எவருக்கும் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நான் ஜெனிவா சென்று தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினேன். தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் இல்லாமல் தொழிலாளர் சேமலாப நிதியம், தொழிலாளர் நலன்புரி நிதியம் ஆகியவற்றை அறவிட முடியாது என சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள்.இதனை பிரதமர் ,ஜனாதிபதிக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் வழங்க வேண்டும் என்று தெரிவித்த போதிலும் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் 52 நாள் அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்ச பிரதமராகிய போது தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.இந்நிலையில் தான் நாங்கள் ஒரு சில நிபந்தனைகளுடன் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளோம்.

அவர் வெற்றிபெற்றால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் அல்லது 1000 ரூபா சம்பளம் பெற்றுத்தருமாறும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணியுரிமை பெற்றுக்கொடுக்க , வீட்டுரிமை, மலையக இளைஞர்களது தொழில்வாய்ப்பு, தோட்ட சுகாதார மேம்படுத்தல் போன்ற பல கோரிக்கைகளை எழுத்து மூலம் தருவதற்கு இணக்கம் தெரிவித்ததனையடுத்தே நாங்கள் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளோம். எனவே நாடு பூராகவும் உள்ள எமது கட்சி அங்கத்தவர்கள் அவருக்கு ஆதரவளித்து அவரை வெற்றிபெறச் செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.  

ஹற்றன் விசேட நிருபர்    

https://www.thinakaran.lk/2019/10/14/உள்நாடு/42031/மலையக-மக்கள்-ஊறுகாயோ-கறிவேப்பிலையோ-அல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் ஊறுகாய், கறிவேப்பிலை இல்லை, மிகவும் பெறுமதி மிக்க தேயிலை கொழுந்துகள்.

அதுதான் அவர்களை லம்ப்பா ஒரு தொகை பேசி கோட்டவுக்கு விற்று விட்டோம் 😂

Link to comment
Share on other sites

"அவர் வெற்றிபெற்றால் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் அல்லது 1000 ரூபா சம்பளம் பெற்றுத்தருமாறும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணியுரிமை பெற்றுக்கொடுக்க , வீட்டுரிமை, மலையக இளைஞர்களது தொழில்வாய்ப்பு, தோட்ட சுகாதார மேம்படுத்தல் போன்ற பல கோரிக்கைகளை எழுத்து மூலம் தருவதற்கு இணக்கம் தெரிவித்ததனையடுத்தே நாங்கள் அவருக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளோம். எனவே நாடு பூராகவும் உள்ள எமது கட்சி அங்கத்தவர்கள் அவருக்கு ஆதரவளித்து அவரை வெற்றிபெறச் செய்வார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.  

 

நாட்டின் பொருளாதார முதுகெலும்பாக  உழைத்து வரும் மக்கள். -  மலையக மக்கள். 

மலையக உறவுகள் ஒரு ஐம்பது ரூபா உயர்வை கூட இரணில் அரசில் பெற முடியாத நிலை. சஜித் தரப்பு இதை விட உயர்வான சலுகைகளை எழுத்தில் தர வைக்கவேண்டியது அவரை ஆதரிக்கும் மலையை  தமிழ் தலைமைகள் கடமை. 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதைத் தான் நானும் விரும்புகிறேன். ஆனாலும் ஊழல் இல்லாமல் மக்களுக்கு சேவையாற்ற யார் இருக்கிறார்கள்? காட்டுங்க கை கோர்க்கிறேன் என்கிறார். இதுக்கு யாரிடமும் பதில் இல்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் தேவைகளை உணர்ந்து செயல்படலாம். இதுவரை நாம்தமிழர் வாக்குவங்கி கூடிக் கொண்டு தானே போகுது? எப்படி 3 வீதம் என்று கணித்தீர்கள்?
    • அவருக்கு பெரியமனசு. எப்படி அடித்தாலும் தாங்குவார்.
    • முதலில் நான் தமிழ்நாட்டில் எந்த கட்சிக்கும்,..எந்த தலைவருக்கும். எதிரானவன். இல்லை என்பதை  பணிவு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்  .....இங்கு எழுதுவது கருத்துகள் மட்டுமே  [அதாவது நடைமுறையில் சாத்தியம் எது என்று நான் கருதுவது ]. தமிழ்நாட்டில் எந்தவொரு தலைவரும் தனித்து நின்று வெல்ல முடியாது  ..இது சீமானுக்கும். பொருந்தும்    எந்த கட்சியும். வெல்ல வேணும் என்றால் கூட்டணி அவசியமாகும் ...செல்வாக்கு உள்ள கட்சிகளின் கூட்டணி அமைத்தால். மட்டுமே வெல்லலாம்.  சீமான் தலைமையில் எந்த கட்சியும். கூட்டணி அமைக்கப்போவதில்லை  ....சரியா? அல்லது பிழையா??   சீமான் வேறு கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்க முடியும்,.....ஆனால் அடுத்த அடுத்த தேர்தலில் அவரது   ஆதரவு   குறைத்து விடும்   3% கூட வரலாம்”      
    • நிச்சயம் பாதிப்பு இருக்கும். அதனால்த் தான் பெரும்தொகை பணத்தைச் செலவு செய்து இத்தனை பேரை களமிறக்கியுள்ளனர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.