Jump to content

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

tamiul-party.jpg

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு!

தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சோ. சேனாதிரஜா, ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஆகியோரும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணிகளான வி. மணிவண்ணன், க.சுகாஸ் ஆகியோரும், புளொட் சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பா. கஜதீபன் ஆகியோரும்,

ரெலோ சார்பில் அதன் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், செயலாளரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ந. சிறீகாந்தா, வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா. குகதாஸ் ஆகியோரும்.

ஈ.பி.ஆர்.எல்.எஃவ் சார்பில் அதன் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் அதன் செயலாளரும், வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருமான சி. வி. விக்னேஸ்வரன், ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

http://athavannews.com/தமிழரின்-உரிமைகளை-வலியுற/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tamil-team.jpg

காலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்….

நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பலத்தை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் கட்சிகளை இணைக்கும் முயற்சி முதலாவது கட்ட வெற்றியை எட்டியிருக்கிறது.

காலத்தின் தேவையுணர்ந்து தங்களின் சமூக கடமையை புரிந்து இந்த முயற்சியில் ஈடுபட்ட யாழ்ப்பாணம் – கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களின் செயற்பாடு பாராட்டப்பட வேண்டியது.

ஐந்து கட்சிகளின் கையொப்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் ஆவணம், பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கையளிக்கப்பட்டு அதுதொடர்பான அவர்களின் நிலைப்பாடு அறியப்படவுள்ளது. அதன் அடிப்படையிலேயே குறித்த ஐந்து கட்சிகளும் தமது ஆதரவு யாருக்கு என்பதை தீர்மானிக்கவுள்ளன.

கையெழுத்திடப்பட்டுள்ள ஆவணத்தில் தமிழர்களின் அடிப்படை அபிலாசைகளான இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு முக்கியமானதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் காணி விடுவிப்பு – அரசியல் கைதிகளின் விடுதலை – காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் – பௌத்த ஊடுவல் – தொல்பொருள் திணைக்களத்தின் எதேச்சாதிகார செயற்பாடு – அரச நியமனங்களில் காணப்படும் குளறுபடிகள் எனப் பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை பொறுத்தவரையில் தமிழர் தரப்படன் எந்தவிதமான எழுத்து மூலமான ஒப்பந்தங்களுக்கும் தயார் இல்லை என்பதை வெளிப்படையாகவே தெரிவித்து விட்டனர்.

அவர்கள் விரும்பினாலும்கூட ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதுநிலைகள் தென்னிலங்கையில் இல்லை. அதற்காக, தமிழ் மக்களின் கோரிக்கைகளை தடாலடியாக பிரதான வேட்பாளர்களினால் புறந்தள்ளி விடவும் முடியாது. அது தமக்கான வெற்றியை அவர்களாகவே புறந்தள்ளி விடுஙகின்ற கைங்கரியமாகவே இருக்கும்.

இந்த தர்ம சங்கடமான நிலையை பிரதான வேட்பாளர்களும் அவர்களை சார்ந்தவர்களும் நன்கே உணர்ந்திருக்கிறார்கள். இந்த சூழலில்தான் தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளை தம்மிடையே பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படு்ம் தரப்புககள் இணைந்துள்ளன.

இந்த இணைவு, “எந்த ஒப்பந்தங்களையும் செய்து கொள்ள மாட்டேன். ஆனாலும் தமிழ் மக்கள் எனக்கே வாக்களிபார்கள்” என்று எகத்தாளமிட்ட தரப்புக்களையும் நிச்சயம் கொஞ்சம் யோசிக்க வைக்கும். எனவே, இந்த சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு தொடர்ந்தும் புத்திசாதுரியமாக கையாள வேண்டும்.

“தாயகக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை எழுத்து மூல ஒப்பந்தத்துக்கு தயாராக இல்லை என்று யாரும் தயாராக இல்லை” என்று சாத்தியமே இல்லாத சாராம்சத்திற்காக யாரும் தாழியை உடைத்து நாசம் பண்ணி விடக்கூடாது.

ஓப்பீட்டளவில் அதிகபட்ச கோரிக்கையை சாதகமாக பரசீலிக்கும் தரப்பு எது? – எந்தத் தரப்பு கணிசமான – அதேவேளை காத்திரமான கோரிக்கைகளை தமது விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க உடன்படுகின்றன போன்றவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, அதிகபட்ச கோரிக்கையை ஏற்றுக் கொள்பவர்களுடன் அவற்றிற்கான கால எல்லைகளை வரையறுத்துக் கொள்ள முடியும். குறிப்பாக, முடியுமானவற்றை அடுத்த ஆறு மாதங்களுக்குள் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக செயற்படுத்த வலியுறுத்த வேண்டும்.

குறித்த செயற்றிறன் அடிப்படையிலேயே எதிர்காலத்தில் நாடாளுமன்ற செயற்பாடுகள் அமையும் என்பதை சம்மந்தப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

மறுபுறத்தில் சிவாஜிலிங்கம் களம் இறங்கியிருக்கிறார். யார் சொல் பேச்சுக் கேட்டு இறங்கினாரோ தெரியவில்லை. இருப்பினும் ஏற்கனவே ஒரு தடவை ஒன்பதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர் அவர்.

“பிரதான வேட்பாளர்கள் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை சாதகமாக பரசீலித்தால் தேர்தலில் இருந்து விலகுவது தொடர்பாக பரிசீலிக்கலாம்” என்று ஏற்கனவே தெரிவித்து விட்டார்.

அதேவேளை, ஜே வி பி.யும் தனித்து நிற்பதால் சில ஆயிரம் வாக்குகள்கூட முடிவை மாற்றிவிடும் என்ற நிலையில் களநிலவரம் காணப்படுகின்றது.

எனவே, “நீங்கள் எமது மக்களை மகிழ்ச்சிப்படுத்தினால் சிவாஜியை களத்தில் இருந்து அப்பறப்படுத்துவோம்” என்ற செய்தியை பக்கபலமாக தெரிவிக்கலாம்.

இவ்வாறு முடிந்தவரை தமிழ் மக்கள் பயனடையும் வகையிலும் அடிப்படை அபிலாசைகளை முன்னகர்த்தும் வகையிலும், இந்த சந்தர்ப்பம் பயன்படுத்தப்பட வேண்டும் – இன்றைய இணைவு முன்னகர வேண்டும்.

இந்த இணைவு இடைவழியில் இடற விடாமல், சூழ்ச்சிகள் சூழவிடாமல் முன்னகர்த்த வேண்டிய பாரிய பொறுப்பை மாணவர்கள் தொடர்ந்தும் சுமக்க வேண்டும்

http://athavannews.com/காலத்தின்-தேவை-உணர்ந்த-இ/

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது.

நல்ல விடயமே, ஆனாலும், குறித்த ஆவணத்தை இருவருமே ஏற்றுக்கொண்டால் நிலைமை என்ன....???Bildergebnis für %e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%81

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Paanch said:

நல்ல விடயமே, ஆனாலும், குறித்த ஆவணத்தை இருவருமே ஏற்றுக்கொண்டால் நிலைமை என்ன....???Bildergebnis für %e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%81

இரண்டு பேருமே ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நம்பிக்கைதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

நல்ல விடயமே, ஆனாலும், குறித்த ஆவணத்தை இருவருமே ஏற்றுக்கொண்டால் நிலைமை என்ன....???Bildergebnis für %e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%81

நிலமை கவலைக்கிடம்தான் 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எதுவுமே நடக்கப்போவதில்லை அதாவது இக்கோரிக்கைகளில் எதையுமே அடுத்துவரும் சிரிலங்கா அதிபர் நிறைவேற்றப்போவதில்லை. 

சிங்களம் சுமந்திரன் வகையறாக்களுடன் சேர்ந்து மைத்திரி ரணிலினால் முன்வைக்கப்பட்ட திட்டம் எதையெல்லாம் உள்ளடக்கியது அதி கடந்துபோன மைத்திரியினதும் ரணிலினதும் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்ப்பட்டதா இவையெல்லாவற்றையும் நாம் இப்போது அனைவரிடமும் கேள்வியாக வைக்கவேண்டும். 

கடந்துபோன ஆட்சிகாலம் நல்லிணக்க ஆட்சிக்காலம் எனப்பெயர் சொல்லி சம்பந்தன் சுமந்திரன் தரப்பால் அழைக்கப்பட்டது அந்த நல்லிணக்க ஆட்சிக்காலத்திலேயே ஒரு சிறு துரும்பைக்கூட தமழர் தரப்பிடம் தள்ளிவைக்க முடியாதவர்கள் இனிமேல் ஆட்சிக்கு வருபவர்களிடம் எதை நாம் எதிர்பார்ப்பது.

தவிர இன அழிப்பை நூறு விகிதம் முன்னின்று செய்த ஒருவரிடம் (கொத்தபாயவிடம்) கோரிக்கை வைப்பதென்பது எந்த அளவில் நியாயம்!

தமிழர்களுக்கான பல்கலைக்கழக சமூகமும் சேர்ந்து ஒரு இன அழிப்பு நடந்ததற்கான விசாரணையை அதற்கான நீதியை வேண்டி நிற்காது  சிறிலங்கா அரசினது கைகளிலிருந்து ஏதாவது எமது வாய்க்குள் விழும் என அடிபணிந்து நிற்பது கேவலமாக இருக்கின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.